இராமன் முதலியோர் அத்திரி முனிவரின்
உறையுளை அணுகுதல்

2606.முத்து இருத்திய திருத்தி அன
    மொய்ந் நகையொடும்
சித்திரக் குனி சிலைக் குமரர்
    சென்று அணுகினார்,
அத்திரிப் பெயர் அருந்தவன்
    இருந்த அமைதிப்
பத்திரப் பழுமரப் பொழில்
    துவன்று பழுவம்.
1

உரை
   
 
அத்திரி முனிவன் இராமன் முதலியோரை எதிர்கொள்ளல்

2607.திக்கு உறும் செறி பரம் தரெிய
    நின்ற திரள் பொன்
கைக் குறுங்கண் மலை போல்
    குமரர், காமம் முதலாம்
முக்குறும்பு அற எறிந்த
    வினை வால் முனிவனைப்
புக்கு இறைஞ்சினர்; அருந்தவனும்
    வந்து புகலும்.
2

உரை
   
 
அத்திரி முனிவனுடையஉவகையுரை

2608.“குமரர்! நீர் இவண் அடைந்து
    உதவு கொள்கை எளிதோ?
அமரர் யாவரொடும் எவ் உலகும்
    வந்த அளவோ?
எமரின் யார் தவம் முயன்றனர்கள்? ‘‘
    என்று உருகினன்,
தமர் எலாம் வர உவந்தனைய
    தன்மை முனிவன்.
3

உரை
   
 
இராமன் முதலியோர் தண்டகவனத்திற் புகுதல்

2609.அன்ன மா முனியொடு அன்று
    அவண் உறைந்து, அவன் அரும்
பன்னி, கற்பின் அனசூயை
    பணியால், அணிகலன்,
துன்னு தூசினொடு, சந்து,
    இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி, அவர்
    தண்டகவனம் புகுதலும்.
4

உரை
   
 
விராதன் இராமலக்குவரை எதிர்தல் (2610-2623)

2610.எட்டொடு எட்டு மத மா கரி,
    இரட்டி அரிமா,
வட்ட வெம் கண் வரை ஆளி
    பதினாறு, வலியின்
கிட்டவிட்டு இடை கிடந்தன,
    செறிந்த ஒருகைத்
தொட்ட முத்தலை அயில்
    தொழில் மிடல் கழுவொடே.
5

உரை
   
 
2611.செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள்
    செறிந்த செனியன்,
நஞ்சு வெற்பு உருவு பெற்று
    இடை நடந்தது என, மா
மஞ்சு சுற்றிய வயங்கு
    கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது படப்
    படியின்மேல் முடுகியே.
6

உரை
   
 
2612.புண் துளங்கியன கண்கள்
    கனல் பொங்க, மழை சூழ்
விண் துளங்கிட, விலங்கல்கள்
    குலுங்க, வெயிலும்
கண்டு உளம் கதி குறைந்திட,
    நெடுங்கடல் சுலாம்
மண் துளங்க, வய அந்தகன்
    மனம் தளரவே.
7

உரை
   
 
2613.புக்க வாள் அரி முழங்கு
    செவியின் பொறி உறப்
பக்கம் மின்னும் மணி மேரு
    சிகரம் குழை படச்
செக்கர் வான் மழை நிகர்க்க,
    எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின்
    ஒளிர் செச்சையினொடே.
8

உரை
   
 
2614.படையொடு ஆடவர்கள்,
    பாய் புரவி, மால் களிறு, தேர்,
நடைய வாள் அரிகள்,
    கோள் உழுவை, நண்ணிய எலாம்
அடைய வாரி, அரவால் அசை
    அனேக வித வன்
தொடையல் மாலை துயல்வந்து
    உலவு தோள் பொலியவே.
9

உரை
   
 
2615.குன்று துன்றின எனக்
    குமுறு கோப மத மா
ஒன்றொடு ஒன்று இடை
    அடுக்கின தடக்கை உதவப்
பின்று கின்ற பிலனின்
    பெரிய வாயின் ஒருபால்
மென்று தின்று விளியாது
    விரியும் பசியொடே.
10

உரை
   
 
2616.பன்ன காதிபர் பணாமணி
    பறித்து அவை பகுத்து,
அன்ன வானவர் விமானம்
    இடையிட்டு, அரவிடைத்
துன்னு கோளினொடு
    தாரகை தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு
    தடமார்பினொடுமே.
11

உரை
   
 
2617.பம்பு செக்கர் எரி ஒக்கும்
    மயிர் பக்கம் எரியக்
கும்பம் உற்ற உயர் நெற்றியின்
    விசித்து, ஒளி குலா
உம்பருக்கு அரசன் மால்
    கரியின் ஓடை, எயிறு உண்
கிம்புரிப் பெரிய தோள்
    வளையொடும் கிளரவே.
12

உரை
   
 
2618.தங்கு திண் கரிய காளிமை
    தழைந்து தவழப்
பொங்கு வெம் கொடுமை என்பது
    புழுங்கி எழ, மா
மங்கு பாதகம் விடம் கனல்
    வயங்கி நிமிரக்
கங்குல் பூசி வருகின்ற
    கலிகாலம் எனவே.
13

உரை
   
 
2619.செற்ற வாள் உழுவை வன்
    செறி அதள் திருகுறச்
சுற்றி, வாரண உரித் தொகுதி
    நீவி தொடரக்
கொற்றம் மேவு திசை யானையின்
    மணிக்குலம் உடைக்
கற்றை மாசுணம் உரித்த
    உரி கச்சு ஒளிரவே.
14

உரை
   
 
2620.செங்கண் அங்க அரவின் பொரு இல
    செம்மணி விராய்,
வெங்கண் அங்க வலயங்களும்
    விலங்க, விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம்
    அலம்பு தவளக்
கங்கணங்களும் இலங்கிய
    கரம், பிறழவே.
15

உரை
   
 
2621.முந்து வெள்ளி மலை பொன்னின்
    மலையோடும் முரணப்
பந்தம் உந்து கழல் பாடுபட
    ஊடு படர்வோன்,
வந்து மண்ணின் இடையோன் எனினும்,
    வானின் இடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன்
    என்ற திறலோன்.
16

உரை
   
 
2622.‘பூதம் அத்தனையும் ஓர் வடிவு
    கொண்ட புதிது! ‘என்று
ஓத ஒத்த உருவத்தன்,
    உரும் ஒத்த குரலன்,
காதலித்து அயன் அளித்த
    கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு
    அவை படைத்த வலியான்.
17

உரை
   
 
2623.சார வந்து, அயல் விலங்கினன்;
    மரங்கள் தரையில்
பேர, வன் கிரி பிளந்து உக,
    வளர்ந்து, இகல் பெறா
வீர வெம் சிலையினோர் எதிர்
    விராதன் எனும் அக்
கோர வெம் கண் உருமேறு அன
    கொடுந்தொழிலினான்.
18

உரை
   
 
விராதன் சீதாபிராட்டியைக் கைக்கொண்டு செல்லுதல்

2624.“நில்லும், நில்லும் “ என வந்து,
    நிணம் உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும் மின்னு
    பகு வாய் முழை திறந்து,
அல்லி புல்லும் மலர் அன்னம்
    அனையாளை ஒரு கைச்
சொல்லும் எல்லையின் முகந்து,
    உயர் விசும்பு தொடர.
19

உரை
   
 
விராதனை நோக்கி இராமலக்குவர் கூறுதல்

2625.காளை மைந்தர் அது கண்டு,
    கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு
    தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர்,
    வஞ்சனை, “அடா!
மீள்தி; எங்கு அகல்தி? ‘‘ என்பது
    விளம்ப, அவனும்.
20

உரை
   
 
இராமலக்குவரை நோக்கி விராதன் கூறுதல்

2626.“ஆதி நான்முகன் வரத்தின்
    எனது ஆவி அகலேன்;
ஏதி யாவதுவும் இன்றி உலகு
    யாவும் இகலில்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
    தந்தனென், அடா!
போதிர், மாது இவளை உந்தி,
    இனிது ‘‘ என்று புகல.
21

உரை
   
 
இராமன் நாணொலி எழுப்பல் (2627-2628)

2627.வீரனும் சிறிது மெல் முறுவல்
    வெண் நிலவு உகப்
“போர் அறிந்திலன் இவன்; தனது
    பொற்பும், முரணும்
தீரும், எஞ்சி ‘‘ என, நெஞ்சின் உறு
    சிந்தை தரெியப்
பார வெம் சிலையின் நாண் ஒலி
    படைத்த பொழுதே.
22

உரை
   
 
2628.இலை கொள் வேல் அடல்
    இராமன், எழு மேக உருவன்,
சிலை கொள் நாண் நெடிய
    கோதை ஒலியேறு, திரைநீர்
மலைகள் நீடு தலம், நாகர் பிலம்,
    வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உருமேறு என
    ஒலித்து உரறவே.
23

உரை
   
 
சீதாபிராட்டியை விட்டு இராமனை நோக்கி
விராதன் வெகுளல்

2629.வஞ்சகக் கொடிய பூசை
    நெடு வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக்
    கதறு பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் எனச்
    சிறிது நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான்
    எதிர் அரக்கன் அழலா.
24

உரை
   
 
விராதன் இராமன் மேல் சூலப்படையை எறிதல்

2630.பேய் முகப் பிணி அறப்
    பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது, கனத்தது,
    சுடர்க் குதிரையின்
வாய் முகத்திடை நிமிர்ந்து
    வட வேலை பருகும்
தீ முகத் திரிசிகைப் படை
    திரித்து எறியவே.
25

உரை
   
 
இராமனும் விராதனும் பொருதல் (2631-2641)

2631.திசையும், வானவரும், நின்ற
    திசை மாவும், உலகும்
அசையும் ஆலம் என, அன்ன
    அயில் மின்னி வரலும்,
வசை இல் மேரு முதல் மால்
    வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன்
    ஒரு வாளி விடவே.
26

உரை
   
 
2632.‘இற்றது இன்றொடு இவ்
    அரக்கர் குலம் ‘என்று, பகலே
வெற்ற விண்ணினிடை நின்று
    நெடுமீன் விழுவ போல்,
சுற்று அமைந்த சுடர் எஃகம்
    அது இரண்டு துணியா
அற்ற கண்டம் அவை
    ஆசையினது அந்தம் உறவே.
27

உரை
   
 
2633.சூர் ஒடுங்கு அயில் துணிந்து
    இறுதல் கண்டு, சிறிதும்
போர் ஒடுங்கிலன், மறம்கொடு
    புழுங்கி, நிருதன்,
பார் ஒடுங்குறு கரங்கொடு
    பருப்பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து
    எதிர்விசைத்து விடலும்.
28

உரை
   
 
2634.வட்டம் இட்ட கிரி அற்று உக,
    வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர்வாளி
    எதிரே கடவலான்,
விட்ட விட்ட மலை மீள, அவன்
    மெய்யின், விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும்
    உடல் ஊறு படலும்.
29

உரை
   
 
2635.ஓம் அராமரை,
    ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை,
    நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து
    தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து,
    அதுகொடு எற்ற வரலும்.
30

உரை
   
 
2636.ஏறு சேவகன் இரண்டினொடு
    இரண்டு கணையால்
வேறு வேறு துணி செய்து,
    அது விழுத்தி, விசையால்
மாறு மாறு நிமிர் தோளிடையும்
    மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெம் கணை
    அழுத்த, அவனும்.
31

உரை
   
 
2637.மொய்த்த முள் தனது உடல் தலை
    முளைத்த, முடுகிக்
கைத்தவற்றின் நிமிரக் கடிது
    கன்றி விசிறும்
எய்த்த மெய்ப் பெரிய கேழல் என
    எங்கும் விசையின்
தைத்த அக்கணை தறெிப்ப
    மெய் சிலிர்த்து உதறவே.
32

உரை
   
 
2638.எரியின் வார் கணை இராமன் விட,
    எங்கும் நிலையாது
உருவி ஓட, மறம் ஓடுதல் செயா
    உணர்வினான்,
அருவி பாயும் வரை போல்
    குருதி ஆறு பெருகிச்
சொரிய, வேக வலி கெட்டு,
    உணர்வு சோர்வுறுதலும்.
33

உரை
   
 
2639.“மெய் வரத்தினன் மிடல்
    படை விடப் படுகிலன்
செய்யும் மற்றும் இகல் ‘‘ என்று,
    சின வாள் உருவி, ‘‘வன்
கை துணித்தும் ‘‘ என முந்து
    கடுகிப் படர் புயத்து
எய்வில் மல் பொருவு தோள்
    இருவர் ஏற, நிருதன்.
34

உரை
   
 
2640.உண்டு எழுந்த உணர்வு
    அவ் வயின் உணர்ந்து முடுகித்
தண்டு எழுந்து அனைய
    தோள் கொடு சுமந்து தழுவிப்
பண்டு எழும் தனது
    வன்கதி பதிற்றின் முடுகிக்
கொண்டு எழுந்தனன்,
    விழுந்து அழி கொழுங் குருதியான்.
35

உரை
   
 
2641.முந்து வான் முகடு உறக் கடிது
    முட்டி முடுகிச்
சிந்து சோரியொடு சாரிகை
    திரிந்தனன் அரோ,
வந்து மேருவினை நாள் தொறும்
    வலம் செய்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து
    இருவரும் பொலியவே.
36

உரை
   
 
விராதன் இராம லக்குவருடன் விண்மிசைச் செல்லல்

2642.சுவண வண்ணனொடு கண்ணன்
    மிசைகொள்ள, இசை தோய்
அவண விண்ணிடை எழுந்து,
    படர்கின்றவன், அறம்
சிவண, அன்ன சிறைமுன்
    அவரொடு ஏகு செலவத்து
உவணன் என்னும் நெடும்
    மன்னவனும் ஒத்தனன் அரோ.
37

உரை
   
 
சீதாபிராட்டி வருந்துதல்

2643.மா தயா உடைய தன் கணவன்
    வஞ்சன் வினையின்
போதலோடும் அலமந்தனள்,
    புலர்ந்து பொடியில்
கோதையோடும் ஒசி கொம்பு என
    விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட
    சிறை அன்னம் அனையாள்.
38

உரை
   
 
சீதாபிராட்டி விராதனை நோக்கிக் கூறுதல்

2644.பின்னை ஏதும் உதவும்
    துணை பெறாள் உரை பெறாள்
மின்னை ஏய் இடை நுடங்கிட
    விரைந்து தொடர்வாள்,
‘அன்னையே அனைய அன்பின்
    அறவோர்கள் தமை விட்டு
என்னையே நுகர்தி ‘என்றனள்
    எழுந்து விழுவாள்.
39

உரை
   
 
இராமனிடம் இலக்குவன் கூறுதல்

2645.அழுது வாய் குழறி ஆர் உயிர்
    அழுங்கி உலையும்
எழுது பாவை அனையாள்
    நிலை உணர்ந்து, இளையவன்
தொழுது, ‘தேவி துயர்கூர
    விளையாடல் தொழிலோ!
பழுது; வாழி ‘என,
    ஊழிமுதல்வன் பகர்வுறும்.
40

உரை
   
 
இராமன் கழலால் உந்த விராதன் விழுதல்

2646.‘ஏக நின்ற நெறி எல்லை
    கடிது ஏறி, இனிதின்
போகல் நன்று என நினைந்தனன்; இவன்,
    பொரு இலோய்!
சாகல் இன்று பொருளன்று ‘என
    நகும் தகைமையோன்,
வேக வெம் கழலின் உந்தலும்,
    விராதன் விழவே.
41

உரை
   
 
தோள்களைத் துணித்து விராதனை மண்ணிடைப் புதைத்தல் (2647-2649)

2647.தோள் இரண்டும் வடி வாள்கொடு
    துணித்து விசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும்,
    வெகுண்டு, புருவத்
தேள் இரண்டும் நெரியச் சினவு
    செம் கண் அரவக்
கோள், இரண்டு சுடரும்
    தொடர்வதில் குறுகலும்.
42

உரை
   
 
2648.புண் இடைப் பொழி உயிர்ப்புனல்
    பொலிந்து வரவும்
விண் இடைப் படர்தல் விட்டு எழு
    விகற்பம் நினையா,
எண் உடைக் குரிசில், எண்ணி, இளையோய்!
    ‘இவனை இம்
மண் இடைக் கடிது பொத்துதல்
    வழக்கு ‘எனலுமே.
43

உரை
   
 
2649.மத நல் யானை அனையான்
    நிலம் வகிர்ந்த குழிவாய்
நதம் உலாவும் நளிநீர் வயின்
    அழுந்த நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு
    உலகில் அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால்
    அமலன் உந்துதலுமே.
44

உரை
   
 
விராதன் சாபம் நீங்கி விண்மிசைத் தோன்றல்

2650.பட்ட தன்மையும் உணர்ந்து,
    படர் சாபம் இட முன்
கட்ட வன் பிறவி தந்த
    கடை ஆன உடல்தான்
விட்டு, விண்ணிடை விளங்கினன்;
    விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்து, அதனில் வந்த
    முதல் முன்னவனினே.
45

உரை
   
 
விராதன் இராமனைத் துதித்தல் (2651-2665)

2651.பொறியின் ஒன்றி அயல் சென்று
    திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலைநின்ற
    நினைவு உண்டு அதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
    உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
    அறிந்து பகர்வான்.
46

உரை
   
 
2652.வேதங்கள் அறைகின்ற
    உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்,
    படிவங்கள் எப்படியோ!
ஓதம் கொள் கடல் அன்றி,
    ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால்
    அவை உன்னைப் பொறுக்குமோ.
47

உரை
   
 
2653.கடுத்த கராம் கதுவ, நிமிர்
    கை எடுத்து மெய் கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று
    ஒலி கொள்ள, உறு துயரால்
‘அடுத்த பெருந் தனி மூலத்து
    அரும்பரமே! பரமே! ‘என்று
எடுத்து, ஒரு வாரணம் அழைப்ப,
    நீயோ அன்று ‘ஏன்? ‘என்றாய்.
48

உரை
   
 
2654.புறம் காண அகம் காணப்
    பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண்
    எம்பெருமாஅன்! இயம்புதியால்;
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர்
    ஆரும் ஒரு துணை இன்றிக்
கறங்கு ஆகும் எனத் திரிய
    நீயேயோ கடவாய்! தான்.
49

உரை
   
 
2655.துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்
    தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை? அது அன்றாகி,
    மற்றவர்போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற
    பதம் பெறல் அரிதோ?
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!
50

உரை
   
 
2656.பனி நின்ற பெரும் பிறவிக்
    கடல் கடக்கும் படி பற்றி
நனி நின்ற சமயத்தோர்
    எல்லாரும் ‘நன்று ‘என்னத்
தனி நின்ற தத்துவத்தின்
    தகை மூர்த்தி நீ ஆகில்
இனி நின்ற முதல் தேவர்
    என்கொண்டு என்செய்வாரே?
51

உரை
   
 
2657.ஓயாத மலர் அயனே
    முதல் ஆக உளர் ஆகி,
மாயாத வானவர்க்கும்
    மற்று ஒழிந்த மன் உயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை,
    நெறி முறையால் ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?
    தருமத்தின் தனி மூர்த்தி!
52

உரை
   
 
2658.நீ ஆதி பரம்பரமும்;
    நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே;
    அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால், வெளி நின்றால்
    தீங்கு உண்டோ?
வீயாத பெரு மாய விளையாட்டும்
    வேண்டுமோ?
53

உரை
   
 
2659.தாய் தன்னை அறியாத
    கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின்
    தாயாகின், ஐய!
நீ அறிதி எப்பொருளும்;
    அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ?
    வாராதே வரவல்லாய்!
54

உரை
   
 
2660.‘பன்னல் ஆம் ‘என்று உலகம்,
    பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந்தயெ்வம்
    உயர்ந்துேளார் ஒழுக்கன்றே;
அன்னவூர்தியை முதலாம்
    அந்தணர்மாட்டு அருந்தயெ்வம்
நின் அலால் இல்லாமை
    நெறி நின்றார் நினையாரோ.
55

உரை
   
 
2661.பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார்போல்
    அருந்தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணிமார்ப!
    நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால் உறங்காதாய்!
56

உரை
   
 
2662.அரவு ஆகிச் சுமத்தியால்,
    அயில் எயிற்றின் ஏந்துதியால்,
ஒரு வாயின் விழுங்குதியால்,
    ஓர் அடியால் ஒளித்தியால்,
திரு ஆன நிலமகளை;
    இஃது அறிந்தால் சீறாேளா?
மரு ஆரும் துழாய் அலங்கல்
    மணிமார்பின் வைகுவாள்.
57

உரை
   
 
2663.மெய்யைத்தான் சிறிது உணர்ந்து
    நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ?
    உனக்கு என்ன குறை உண்டோ?
வையத்தார் வானத்தார்
    மழு ஆளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம்
    தவிர்ந்தாரும் உளர். ஐயா!
58

உரை
   
 
2664.அன்னம் ஆய் அருமறைகள்
    அறைந்தாய் நீ, அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார்?
    எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்றாதல்,
    பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை
    ஏனமாய் மண் இடந்தாய்!
59

உரை
   
 
2665.ஒப்பு இறையும் பெறல் அரிய
    ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்
    அருந்தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்;
    இனிப் பிறவேன்; இரு வினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த்
    திருவடியால் துடைத்தாய் நீ.
60

உரை
   
 
‘உன் வரலாறு கூறுக ‘என இராமன் விராதனை வினாவுதல்

2666.இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும் ‘நீ இவ் ஆறு
உற்ற ஆறு உணர்த்து ‘எனா
வெற்றியான் விளம்பினான்.
61

உரை
   
 
விராதன் தன்சரிதம் கூறுதல் (2667-2675)

2667.கள்ளம் மாய வாழ்வு எலாம்
விள்ள ஞானம் வீசு தாள்
வள்ளல்! வாழி! கேள்! எனா
உள்ள ஆறு உணர்த்தினான்.
62

உரை
   
 
2668.இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு வில் கை வீர! பேர்
தும்புரு; தனதன் சூழ்
அம்பரத்து உளேன் அரோ.
63

உரை
   
 
2669.ஆடு அரம்பை நீடு அரங்கு
ஊடு நின்று பாடலால்
ஊடு உவந்து கூட இக்
கூடு வந்து கூடினேன்.
64

உரை
   
 
2670.கரக்க வந்த காமநோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்;
அரக்கன் மைந்தன் ஆயினேன்.
65

உரை
   
 
2671.அன்ன யக்கன் ஆதியாய்!
இன்னல் தீரும் ஈகையான்
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான்.
66

உரை
   
 
2672.வலம் செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன்.
67

உரை
   
 
2673.அன்று மூலம்! ஆதியா
இன்று காறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்
நின்று தீய நேடினேன்.
68

உரை
   
 
2674.தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்.
69

உரை
   
 
2675.திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்!
பொறுத்தி என்று போயினான்.
70

உரை
   
 
இராமன் முதலியோர் அப்பாற் செல்லுதல்

2676.‘தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் ‘எனாப்
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார்.
71

உரை
   
 
இராமன் முதலியோர் ஒரு சோலையில் தங்குதல்

2677.கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை முன்னினார்
வைகல் தானும் வைகினார்.
72

உரை