இராமன் முதலியோர் சடாயுவைக் கண்டது

2781.நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே.
1

உரை
   
 
சடாயுவின் இயல்பு (2782-2789)

2782.உருக்கிய சுவணம் ஒத்து,
    உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து
    அலங்கு திக்கு எலாம்
தரெிப்புறு செறி சுடர்ச்
    சிகையினால் திசை
விரித்து இருந்தனன் என,
    விளங்குவான் தனை.
2

உரை
   
 
2783.முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய
மந்தர கிரி என வயங்குவான் தனை.
3

உரை
   
 
2784.மால் நிற விசும்பு எழில்
    மறையத் தன் மணிக்
கால் நிறச் சேயொளி
    கதுவக் கண் அகல்
நீல் நிற வரையினில்
    பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்திடப்
    பொலிகின்றான் தனை.
4

உரை
   
 
2785.தூய்மையன் இருங்கலை துணிந்த கேள்வியன்
வாய்மையன் மறு இலன் மதியின் கூர்மையன்
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை.
5

உரை
   
 
2786.வீட்டி வாள் அவுணரை,
    விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில்
    தான் உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன்
    சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர்
    துண்டத்தான் தனை.
6

உரை
   
 
2787.கோள் இருநான்கினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியில் பொலி மௌலியான் தனை
7

உரை
   
 
2788.சொல் பங்கம் உற நிமிர்
    இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும்
    அருணன் செம்மலைச்
சிற்பம் கொள் பகல் எனக்
    கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப்பல
    கண்டுளான் தனை.
8

உரை
   
 
2789.ஓங்கு உயர் நெடுவரை
    ஒன்றில் நின்று, அது
தாங்கலது இருநிலம்
    தாழ்ந்து தாழ்வுற,
வீங்கிய வலியினில்
    இருந்த வீரனை,
ஆங்கு அவர் அணுகினர்,
    அயிர்க்குஞ் சிந்தையார்.
9

உரை
   
 
இராம இலக்குவர் சடாயுவை ஐயுற்று நோக்குதல்

2790.‘இறுதியைத் தன்வயின்
    இயற்ற எய்தினான்,
அறிவு இலி அரக்கன் ஆம்;
    அல்லன் ஆம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே ‘
    என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும்
    செயிர்த்து நோக்கினார்.
10

உரை
   
 
சடாயுவின் ஐயம் (2791-2795)

2791.வனை கழல் வரி சிலை
    மதுகை மைந்தரை
அனையவன் தானும் கண்டு
    அயிர்த்து நோக்கினான்
‘வினை அறு நோன்பினர்
    அல்லர்; வில்லினர்
புனை சடை முடியினர்
    புலவரோ? ‘எனா,
11

உரை
   
 
2792.‘புரந்தரன் முதலிய
    புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென்;
    நேமியானும், அவ்
வரம் தரும் இறைவனும்,
    மழு வலாளனும்,
கரந்திலர் என்னை; யான்
    என்றும் காண்பெனால்.
12

உரை
   
 
2793.‘காமன் என்பவனையும்,
    கண்ணின் நோக்கினேன்;
தாமரைச் செங்கண் இத்
    தடக்கை வீரர்கள்
பூமரு பொலங் கழல்
    பொடியினோடும் ஒப்பு
ஆம் என அறிகிலென்;
    ஆர்கொலாம் இவர்?
13

உரை
   
 
2794.‘உலகு ஒருமூன்றும் தம்
    உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம்
    அமைந்த மெய்யினர்;
மலர்மகட்கு உவமையாேளாடும்
    வந்த இச்
சிலை வலி வீரரைத்
    தரெிகிலேன் ‘எனா,
14

உரை
   
 
2795.‘கருமலை செம்மலை அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங்கண் வீரர்தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ.
15

உரை
   
 
சடாயுவின் வினா

2796.எனப் பல நினைப்பினன்
    மனத்துள் எண்ணுவான்,
சினப் படை வீரர்மேல்
    செல்லும் அன்பினான்,
‘கனப் படை வரி சிலைக்
    காளை நீர்கள் யார்?
மனப்பட எனக்கு உரை
    வழங்குவீர் ‘என்றான்.
16

உரை
   
 
இராம இலக்குவர் விடை

2797.வினவிய காலையில் மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால்
‘கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான்
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் ‘என்றார்.
17

உரை
   
 
சடாயு தயரதன் நலம் வினாதல்

2798.உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன்
தரைத்தலை இழிந்து அவர்த் தழுவும் காதலன்
‘விரைத் தடம் தாரினிர்! வேந்தர் வேந்தன் தன்
வரைத்தடம் தோள் இணை வலியவோ? ‘என்றான்.
18

உரை
   
 
தயரதன் துறக்கமுற்றது அறிந்து சடாயு
வருந்துதல் (2799-2800)

2799.‘மறக்க முற்றாத தன்
    வாய்மை காத்து, அவன்
துறக்கம் உற்றான் ‘என,
    இராமன் சொல்லலும்,
இறக்கம் உற்றான் என
    ஏக்கம் எய்தினான்;
உறக்கம் உற்றான் என
    உணர்வு நீங்கினான்.
19

உரை
   
 
2800.தழுவினர் எடுத்தனர் தடக்கையால்; முகம்
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான் அரோ.
20

உரை
   
 
சடாயு அரற்றல் (2801-2804)

2801.பரவல் அருங் கொடைக்கும் நின்தன் பனிக்குடைக்கும்
    பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,
    கடல் இடமும், களித்து வாழப்
புரவலர்தம் புரவலனே! பொய்ப்பகையே!
    மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!
இரவலரும், நல் அறமும், யானும் இனி
    என்பட நீத்து ஏகினாயே
21

உரை
   
 
2802.அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்
    தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க, நிலையாத
    நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண நடந்தனையோ? நாயகனே!
    தீவினையேன், நண்பின் நின்றும்
விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;
    இன்னும் உயிர் விட்டிலேனால்.
22

உரை
   
 
2803.தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி
    சம்பரனைத் தடிந்த அந்நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய,
    ‘நீ உடல் நான் ஆவி ‘என்று
செயிர் கிடத்தல் செய்யாத திருமனத்தாய்!
    செப்பினாய்; திறம்பா, நின்சொல்;
உயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார்,
    உணர்வு இறந்த கூற்றினாரே.
23

உரை
   
 
2804.‘எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே,
    ஒப்பு அரிய எரியும் தீயின்
விழுவதே நிற்க, மட மெல்லியலார்
    தம்மைப்போல் நிலத்தின் மேல் வீழ்ந்து
அழுவதே யான்? ‘என்னா, அறிவுற்றான்
    என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி,
‘முழுவது ஏழ் உலகு உடையான் மைந்தன்மீர்!
    கேண்மின் ‘என முறையில் சொல்வான்.
24

உரை
   
 
உயிர்களின் தோற்ற வரலாறு (2805-2809)

2805.தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர்
    தடங் கொங்கைத் தையலாருள்
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
    புணர்ந்தனன்; அத் தோகைமாருள்
மிக்க அதிதிப் பெயராள், முப்பத்து
    முக்கோடி விண்ணோர் ஈந்தாள்;
மைக் கருங் கண் திதி என்பாள், அதின்
    இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.
25

உரை
   
 
2806.தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள்;
    மதி என்பாள், மனிதர்தம் ஊடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
    பயந்தனளால்; சுரபி என்பாள்,
தேனுவுடன் கந்தருவம் மற்றுள்ள பிற
    பயந்தாள்; தரெிக்கும் காலை
மானமுடைக் குரோதவசை, கழுதை, மரை,
    ஒட்டை பிற வயிறு வாய்த்தாள்.
26

உரை
   
 
2807.மழை புரையும் குழல் விநதை வான்,
    இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
    பெரும் பறவை தம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி,
    சிவல், காடையுடன் பிறவும் ஈன்றாள்;
கழை எனும் அக் கொடி பயந்தாள் கொடி உடனே
    செடி முதலாக் கண்ட எல்லாம்.
27

உரை
   
 
2808.வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம்
    கத்துருவாம் மின்னும் ஈன்றாள்;
மருட்டி எழும் ஒரு தலைய புயங்கம் எலாம்
    சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை எனும் அவள் பயந்தாள்
    ஓந்தி உடும்பு அணில்கள் முதலாய எல்லாம்;
தரெுட்டிடும் மாது இளை ஈந்தாள்
    செலசரம் ஆகிய பலவும் தரெிக்கும் காலை.
28

உரை
   
 
2809.அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே,
    சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே குரோதவசை,
    தாம்பிரை, ஆம் மடநலார்கள்,
விதிமுறையே இவை அனைத்தும் பயந்தனர்கள்;
    விநதை சுதன் அருணன் மென் தோள்
புது மதி சேர் நுதல் அரம்பைதனைப் புணர
    உதித்தனம் யாம் புவனி மீதே.
29

உரை
   
 
சடாயு, தன் வரலாறு கூறியது

2810.“அருணன்தன் புதல்வன் யான்; அவன் படரும்
    உலகு எல்லாம் படர்வேன்; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன்
    உயிர்த் துணைவன்; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே
    வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;
தருணங்கொள் பேர் ஒளியீர்! சம்பாதி
    பின்னர் வரு சடாயு ‘‘ என்றான்.
30

உரை
   
 
இராம இலக்குவர் மகிழ்ச்சி

2811.ஆண்டு அவன் ஈது உரை செய்ய, அஞ்சலித்த
    மலர்க் கையார், அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறைமுறையின்
    நிறை மலர்க் கண் மொய்த்த நீரார்,
பூண்ட பெரும் புகழ் நிறுவித் தம்பொருட்டால்
    மேல் உலகம் புக்க தாதை
மீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரே
    ஒத்தனர், அவ் விலங்கல் தோளார்.
31

உரை
   
 
சடாயு இறக்கத் துணிதல்

2812.மருவினிய குணத்தவரை இரு சிறகால்
    உறத் தழுவி, ‘மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்;
    உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும்
    உடல் பொறை யான், பீழை பாராது,
எரி அதனின் இன்றே புக்கு இறவேனேல்,
    இத்துயரம் மறவேன் ‘என்றான்.
32

உரை
   
 
இராம இலக்குவரின் துன்பச் சொல் (2813-2815)

2813.என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக
நின்று மற்று இன நீர்மை நிகழ்த்தினார்.
33

உரை
   
 
2814.‘உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விடக் கருதாது விண் ஏறினான்;
இவ்விடத்தினில் எம்பெருமாஅன்! எமைக்
கைவிடில் பினை யார் களைகண் உளார்?
34

உரை
   
 
2815.“‘தாயின் நீங்கரும் தந்தையின் தண் நகர்
வாயில் நீங்கி வனம் புகுந்து எய்திய
நோயும் நீங்கினம் நுன்னின் என் “ எங்களை
நீயும் நீங்குதியோ? நெறி நீங்கலாய்!
35

உரை
   
 
சடாயு அமைதி கூறி அவர் வனம் புகுந்தமைக்குக் காரணம் வினவல் (2816-2818)

2816.என்ற சொல்லர்; இரந்து அழி நெஞ்சினர்;
நின்ற வீரரை நோக்கி நினைந்து அவன்
‘அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர்!
சென்றபின் அவற் சேர்குவென் யான் ‘என்றான்.
36

உரை
   
 
2817.“வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர்
ஏந்தும் ஞாலம் இனிது அளியாது இவண்
போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க்
காந்துகின்றது; கட்டுரையீர் “ என்றான்.
37

உரை
   
 
2818.‘தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின்
பூ அராவு பொலம் கதிர் வேலினீர்!
சாவர் ஆக்கித் தருவென் அரசு ‘என்றான்.
38

உரை
   
 
இலக்குவன், வனம்போந்த வரலாறு கூறல்

2819.தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும் தன் சிற்றவை
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான்.
39

உரை
   
 
சடாயு இராமனைப் புகழ்தல் (2820-2821)

2820.‘உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக் கொண்டு தாரணி
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்? ‘எனா.
40

உரை
   
 
2821.அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி மோந்து பொழிந்த கண் நீரினன்
வல்லை; மைந்த! ‘அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய் ‘என்றான்.
41

உரை
   
 
சடாயு சீதையைப் பற்றி வினவுதல்

2822.பின்னரும் அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;
மன்னர் மன்னவன் மைந்த! ‘இவ் வாள் நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் ‘என்றான்.
42

உரை
   
 
இலக்குவன் விடை

2823.அல் இறுத்து அன தாடகை ஆதியா
வில் இறுத்தது இடை என மேலை நாள்
புல் இறுத்தது யாவும் புகன்று தன்
சொல் இறுத்தனன்; தோன்றல் பின் தோன்றினான்.
43

உரை
   
 
இக்காட்டில் தங்குக என்றல்

2824.கேட்டு உவந்தனன் கேழ்கிளர் மௌலியான்;
“தோட்டு அலங்கலினீர்! துறந்தீர் வளம்;
நாட்டின் நீவிரும் நல் நுதல் தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்“ என்றான்.
44

உரை
   
 
இராமன் விடை

2825.‘இறைவ! எண்ணி அகத்தியன் ஈந்துளது
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு சூழல்; அச்சூழல் புக்கு
உறைதும்; ‘ என்றனன் உள்ளத்து உறைகுவான்.
45

உரை
   
 
சடாயு சிறை நிழலில் இராமன் முதலியோர்
செல்லுதல்

2826.“பெரிதும் நன்று; அப் பெருந்துறை வைகி நீர்
புரிதிர் மாதவம்; போதுமின்! யான் அது
தரெிவுறுத்துவென் “ என்று அவர் திண் சிறை
விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன்.
46

உரை
   
 
இராமன் முதலியோர் சோலையில் தங்குதல்

2827.ஆய சூழல் அறிய உணர்த்தி அத்
தூய சிந்தைய தோம் இல் குணத்தினான்
போய பின்னைப் பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார்.
47

உரை
   
 
சடாயு அவர்களைக் குறிக்கொண்டு காத்தல்

2828.வார்ப் பொன் கொங்கை மருகியை மக்களை
ஏர்ப்பச் சிந்தனை இட்டு அவ் வரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கு அறத் தேறினன் சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையில் பார்க்கின்றான்.
48

உரை