கோதாவரியின் தோற்றம் (2829-2831)

2829.புவியினுக்கு அணியாய், ஆன்ற
    பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி,
    ஐந்திணை நெறி அளாவிச்
சவி உறத் தெளிந்து, தண் என்று
    ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
    வரியினை வீரர் கண்டார்.
1

உரை
   
 
2830.வண்டு உறை கமலச் செவ்வி
    வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண்
    ஒருங்கு உற நோக்கி ஊழின்
தணெ் திரைக் கரத்தின் வாரித்
    திரு மலர் தூவிச் செல்வர்க்
கண்டு அடி பணிவது என்னப்
    பொலிந்தது கடவுள் யாறு.
2

உரை
   
 
2831.எழுவுறு காதலால் இங்கு
    இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கிப்
பழுவ நாள் குவளைச் செவ்விக்
    கண் பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர்
    வனத்து உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ்
    அலங்கு நீர் ஆறு மன்னோ.
3

உரை
   
 
இராமனும் சீதையும் இயற்கை எழிலைக் கண்டு
மகிழ்தல் (2832-2834)

2832.நாளம் கொள் நளினப் பள்ளி,
    நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கை
    தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன்; மற்றை
    நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் மனம் வைத்து அன்ன
    சுடர் மணித் தடங்கள் கண்டாள்.
4

உரை
   
 
2833.ஓதிமம் ஒதுங்கக் கண்ட
    உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்
    சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டு
    வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
    புதியது ஓர் முறுவல் பூத்தாள்.
5

உரை
   
 
2834.வில் இயல் தடக்கை வீரன்
    வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்கக் கண்டான்
    மங்கைதன் மருங்குல் நோக்க,
எல்லி அம் குவளைக் கானத்து
    இடை இடை மலர்ந்து நின்ற
அல்லி அம் கமலம் கண்டாள்,
    அண்ணல்தன் வடிவு கண்டாள்.
6

உரை
   
 
பன்னசாலையில் தங்குதல்

2835.அனையது ஓர் தன்மையால் அவ்
    அருவி நீர் ஆற்றின் பாங்கர்ப்
பனி தரு படிவப் பஞ்சவடி
    எனும் பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணித்
    தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ்சாலை எய்தி
    இருந்தனன் இராமன்; இப்பால்.
7

உரை
   
 
சூர்ப்பணகை வருகை (2836-2839)

2836.நீல மா மணி நிற
    நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற
    முடிக்கும் மொய்ம்பினாள்,
மேலை நாள் உயிரொடும்
    பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன்
    உறை கடிய நோய் அனாள்.
8

உரை
   
 
2837.செம்பு அராகம் படச்
    செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி
    விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும் ஒண்
    தவர்க்கும் ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும் ஓர்
    இறுதி ஈட்டுவாள்.
9

உரை
   
 
2838.வெய்யதோர் காரணம்
    உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ்
    வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம்
    நுழையும் நோன்மையாள்,
எய்தினள், இராகவன்
    இருந்த சூழல்வாய்.
10

உரை
   
 
2839.எண் தகும் இமையவர் ‘அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் விலக்குதி ‘என்ன மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்.
11

உரை
   
 
இராமன் அழகை வியத்தல் (2840-2855)

2840.‘சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று; நான்கு தோள்
உந்தியின் உலகு அளித்தாற்கு ‘என்று உன்னுவாள்.
12

உரை
   
 
2841.‘கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
இற்றவன் அன்றுதொட்டு இன்றுகாறும் தான்
நல் தவம் இயற்றி அவ் அநங்கன் நல் உருப்
பெற்றனன் ஆம் ‘எனப் பெயர்த்தும் எண்ணுவாள்.
13

உரை
   
 
2842.‘தரங்களின் அமைந்து தாழ்ந்து
    அழகின் சார்பின;
மரங்களும் நிகர்க்கல;
    மலையும் புல்லிய;
உரங்களின் உயர் திசை
    ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணிக் கரம் ‘
    என்று உன்னுவாள்.
14

உரை
   
 
2843.‘வில் மலை வல்லவன்
    வீரத் தோெளாடும்
கல் மலை நிகர்க்கல;
    கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது,
    நாம மேருவும்
பொன் மலை ஆதலால்,
    பொருவலாது ‘என்பாள்.
15

உரை
   
 
2844.‘தாள் உயர் தாமரைத்
    தளங்கள் தம்மொடும்
கேள் உயர் நாட்டத்துக்
    கிரியின் தோற்றத்தான்
தோெளாடு தோள் செலத்
    தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண்;
    நெடிய மார்பு ‘என்பாள்.
16

உரை
   
 
2845.‘அதிகம் நின்று ஒளிரும் இவ்
    அழகன் வாள் முகம்
பொதி அவிழ் தாமரைப்
    பூவை ஒப்பதோ?
கதிர் மதி ஆம் எனில்
    கலைகள் தேயும்; அம்
மதியெனின், மதிக்கும் ஓர்
    மறு உண்டு ‘என்னுமால்.
17

உரை
   
 
2846.‘எவன் செய, இனிய இவ்
    அழகை எய்தினோன்,
அவம் செயத் திரு உடம்பு
    அலச நோற்கின்றான்?
நவம் செயத் தகைய இந்
    நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த
    தவன் என்? ‘என்கின்றாள்.
18

உரை
   
 
2847.‘உடுத்த நீர் ஆடையள்,
    உருவச் செவ்வியள்,
பிடித்தரு நடையினள்
    பெண்மை நன்று! இவன்
அடித்தலம் தீண்டலின்
    அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இப் புல் ‘
    என்று உன்னுவாள்
19

உரை
   
 
2848.‘வாள் நிலா முறுவலான்
    வயங்கு சோதியைக்
காணலனே கொலோ
    கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி
    செலுத்திச் சிந்தையின்
நாணலன் மீமிசை
    நடக்கின்றான் ‘என்றாள்.
20

உரை
   
 
2849.‘குப்புறற்கு அரிய மாக்
    குன்றை வென்று உயர்
இப் பெருந் தோளவன்
    இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என உலகமேல்
    உரைக்க ஒண்ணுமோ?
துப்பினில் துப்புடை
    யாதைச் சொல்லுகேன்? ‘
21

உரை
   
 
2850.‘நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற
வற்கலை நோற்றன மாசு இலா மணிப்
பொன் கலை நோற்றில போலுமால் ‘என்பாள்.
22

உரை
   
 
2851.‘தொடை அமை நெடு மழைத்
    தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று இடை நெறி
    கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன்
    என்னில், தையலார்
உடை உயிர் யாவையும்
    உடையுமால் ‘என்றாள்.
23

உரை
   
 
2852.‘நாறிய நகை அணி
    நல்ல புல்லினால்
ஏறிய செவ்வியின்
    இயற்றுமோ? ‘எனா,
‘மாறு அகல் முழு மணிக்கு
    அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால்
    விளங்குமோ? ‘என்பாள்.
24

உரை
   
 
2853.‘கரந்திலன் இலக்கணம்
    எடுத்துக் காட்டிய
பரம்தரு நான் முகன்
    பழிப்பு உற்றான் அரோ!
இரந்து இவன் இணை அடிப்
    பொடியும் ஏற்கலாப்
புரந்தரன் உலகு எலாம்
    புரக்கின்றான் ‘என்பாள்.
25

உரை
   
 
2854.நீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்.
26

உரை
   
 
2855.வான் தனில் வரைந்தது ஓர்
    மாதர் ஓவியம்
போன்றனள், நின்றனள்,
    புழுங்கும் நெஞ்சினள்,
தோன்றல்தன் சுடர் மணித்
    தோளில் நாட்டங்கள்
ஊன்றினள், பறிக்க ஓர்
    ஊற்றம் பெற்றிலள்.
27

உரை
   
 
இராமன்மேல் காதல் கொள்ளல்

2856.நின்றனள், “இருந்தவன்
    நெடிய மார்பகம்
ஒன்றுவென்; அன்று எனின்,
    அமுதம் உண்கினும்
பொன்றுவென்; போக்கு இனி
    அரிது போன்ம் ‘‘ எனாச்
சென்று, எதிர் நிற்பது ஓர்
    செய்கை தேடுவாள்.
28

உரை
   
 
உருமாறிச் செல்ல எண்ணுதல்

2857.“‘எயிறு உடை அரக்கி,
    எவ் உயிரும் இட்டது ஓர்
வயிறு உடையாள் ‘என
    மறுக்கும், ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர்
    கொவ்வைச் செவ்வி வாய்
மயில் தொடர் இயலி ஆய்
    மருவல் நன்று ‘‘ எனா.
29

உரை
   
 
திருமகள் அருளால் உருமாறி வருதல் (2858-2861)

2858.பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள்.
30

உரை
   
 
2859.பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர்
    பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர்
    சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என,
    அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என
    வஞ்ச மகள் வந்தாள்.
31

உரை
   
 
2860.பொன் ஒழுகு பூவில் உறை
    பூவை எழில் பூவை
பின்னு எழில் கொள் வாள் இணை
    பிறழ்ந்து ஒளிர் முகத்து ஓர்
கன்னி எழில் கொண்டது
    கலைத் தட மணித் தேர்
மின் அழிவு இல் தன்மையது
    விண் இழிவது என்ன.
32

உரை
   
 
2861.கானின் உயர் கற்பகம் உயிர்த்த
    கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம்
    நிறை வாசத்
தேனின் மொழி உற்று, இனிய செவ்வி
    நனி பெற்று, ஓர்
மானின் விழி பெற்று, மயில் வந்தது
    என வந்தாள்.
33

உரை
   
 
அவள் வரும் வழியை இராமன் நோக்குதல்

2862.“நூபுரமும், மேகலையும்,
    நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை,
    பூசலிடும் ஓசை
தாம், உரை செய்கின்றது; ‘ஒரு
    தையல் வரும் “ என்னாக்
கோமகனும், அத்திசை
    குறித்து எதிர் விழித்தான்.
34

உரை
   
 
சூர்ப்பணகையின் அழகை இராமன் வியந்து
காண்டல் (2863-2864)

2863.விண் அருள வந்தது ஒரு
    மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு, இடை
    வணங்க வரு போழ்தத்து,
எண் அருளி, ஏழைமை துடைத்து,
    எழும் மெய்ஞ்ஞானக்
கண் அருள்செய் கண்ணன் இரு
    கண்ணின் எதிர் கண்டான்.
35

உரை
   
 
2864.பேர் உழைய நாகர் உலகின்,
    பிறிது வானின்
பார் உழையின் இல்லது ஒரு
    மெல் உருவு பாரா,
ஆர் உழை அடங்கும்?
    அழகிற்கு அவதி உண்டோ?
நேர் இழையர் யாவர் இவர்
    நேர்? என நினைந்தான்.
36

உரை
   
 
சூர்ப்பணகை இராமனை வணங்கி நிற்றல்

2865.அவ்வயின் அவ் ஆசை தன்
    அகத்து உடைய அன்னாள்,
செவ்வி முகம் முன்னி, அடி
    செங்கையின் இறைஞ்சா,
வெவ்விய நெடுங்கண் அயில்
    வீசி, அயல் பாரா,
நவ்வியின் ஒதுங்கி, இறை
    நாணி, அயல் நின்றாள்.
37

உரை
   
 
இராமன் சூர்ப்பணகை உரையாடல் (2866-2884)

2866.தீது இல் வரவு ஆக திரு!
    நின் வரவு சேயோய்!
போத உளது எம் உழை ஓர்
    புண்ணியமது அன்றோ
ஏது பதி? ஏது பெயர்?
    யாவர் உறவு என்றான்
வேதமுதல்; பேதை அவள்
    தன் நிலை விரிப்பாள்.
38

உரை
   
 
2867.‘பூவிலோன் புதல்வன் மைந்தன்
    புதல்வி; முப் புரங்கள் செற்ற
சே வலோன் துணைவன் ஆன
    செங்கையோன் தங்கை; திக்கின் மா
எலாம் தொலைத்து, வெள்ளி மலை
    எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காம
    வல்லியாம் கன்னி ‘என்றாள்.
39

உரை
   
 
2868.அவ்வுரை கேட்ட வீரன்.
    ஐயுறு மனத்தான், ‘செய்கை
செவ்விது அன்று; அறிதல் ஆகும்
    சிறிதின் ‘என்று உணரச் ‘‘செங்கண்
வெவ்வுரு அமைந்தோன் தங்கை ‘‘
    என்றது மெய்ம்மை ஆயின்,
இவ்வுரு இயைந்த தன்மை
    இயம்புதி இயல்பின் என்றான்.
40

உரை
   
 
2869.தூயவன் பணியாமுன்னம் சொல்லுவாள்,
    சோர்வு இலாள்; ‘அம்
மாய வல் அரக்கரோடு
    வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வுறு மனத்தேன் ஆகி,
    அறம் தலைநிற்பது ஆனேன்.
தீவினை தீய நோற்றுத்
    தேவரில் பெற்றது ‘என்றாள்.
41

உரை
   
 
2870.‘இமையவர் தலைவனேயும்
    எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும்
    ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமை உறு செல்வத்தோடும்
    தோன்றலை; துணையும் இன்றித்
தமியை நீ வருதற்கு ஒத்த
    தன்மை என்? தையல்! ‘என்றான்.
42

உரை
   
 
2871.வீரன் அஃது உரைத்தலோடும்
    மெய் இலாள், ‘விமல! யான் அச்
சீரியர் அல்லார் மாட்டுச்
    சேர்கிலென்; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்;
    இறைவ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை நின்னைக்
    காணிய வந்தேன் ‘என்றாள்.
43

உரை
   
 
2872.அன்னவள் உரைத்தலோடும், ஐயனும்,
    ‘அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை
    நல் நெறிப் பால அல்ல;
பின் இது தரெியும் ‘என்னாப்,
    ‘பெய் வளைத் தோளி! என்பால்
என்ன காரியத்தை? சொல்; அஃது
    இயையுமேல் இழைப்பல் ‘என்றான்.
44

உரை
   
 
2873.‘தாம் உறு காமத் தன்மை
    தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால்,
    அருங்குல மகளிர்க்கு அம்மா!
ஏம் உறும் உயிர்க்கு நோவேன்;
    என் செய்கேன்? யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும்
    வன்மையைக் காத்தி ‘என்றாள்.
45

உரை
   
 
2874.சேண் உற நீண்டு, மீண்டு,
    செவ்வரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானா விதம்
    புரண்டு, இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
    அம்மொழி புகறலோடும்,
‘நாண் இலள்; ஐயன், நொய்யள்;
    நல்லளும் அல்லள் ‘என்றான்.
46

உரை
   
 
2875.பேசலன் இருந்த வள்ளல்
    உள்ளத்தின் பெற்றி ஓராள்,
பூசல் வண்டு அரற்றும் கூந்தல்
    பொய்ம் மகள், “புகன்ற என்கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ?
    அன்று எனல் உண்டோ? ‘‘ என்னும்
ஊசலின் உலாவுகின்றாள், மீட்டும் ஓர்
    உரையைச் சொல்வாள்.
47

உரை
   
 
2876.‘எழுதரு மேனியாய்! ஈண்டு
    எய்தியது அறிந்திலாதேன்,
முழுது உணர்முனிவர் ஏவல்
    செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும்
    இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா
    கழிந்தன போலும் ‘என்றாள்.
48

உரை
   
 
2877.‘நிந்தனை அரக்கி நீதி
    நிலை இலாள் : வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் ‘என்றே
    வள்ளலும் மனத்துள் கொண்டான்;
‘சுந்தரி! மரபிற்கு ஒத்த
    தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான்
    அரசரில் வந்தேன் ‘என்றான்.
49

உரை
   
 
2878.‘ஆரண மறையோன் எந்தை;
    அருந்ததிக் கற்பின் எம்மோய்,
தாரணி புரந்த சால கடங்கடர்
    மரபின் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்!
    பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர்
    காண்பென் ‘என்றாள்.
50

உரை
   
 
2879.அருத்தியள் அனைய கூற,
    அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல்
    உண்டாட்டம் கொண்டான்,
“‘வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில்
    மானுடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று ‘‘ என்று சாலப்
    புலமையோர் புகல்வர் ‘என்றான்.
51

உரை
   
 
2880.‘பராவருஞ் சிரத்தை ஆரும்
    பத்தியின் பயத்தை ஓராது
“இராவணன் தங்கை “ என்றது
    ஏழைமைப்பாலது ‘என்னா,
‘அராவணை அமலன் அன்னாய்!
    அறிவித்தேன் முன்னம்; தேவர்ப்
பராவினில் நீங்கினேன் அப்
    பழிபடு பிறவி ‘என்றாள்.
52

உரை
   
 
2881.‘ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு
    ஒரு தலைவன்; ஊங்கின்
ஒருவனோ குபேரன்; நின்னோடு
    உடன் பிறந்தவர்கள்; அன்னார்
தருவரேல், கொள்வென்; அன்றேல்,
    தமியை வேறு இடத்துச் சார்தி;
வெருவுவன்; நங்கை! ‘என்றான்,
    வேதத்தின் அறிவை வென்றான்.
53

உரை
   
 
2882.‘காந்தர்ப்பம் என்பது உண்டால் :
    காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும்
    மறைகளே வகுத்த கூட்டம்,
ஏந்தல் பொன் தோளினாய்! இஃது
    இயைந்தபின், எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்றாகும்;
    வேறும் ஓர் உரை உண்டு ‘என்றாள்.
54

உரை
   
 
2883.‘முனிவரோடு உடையர் முன்னே
    முதிர்பகை, முறைமை நோக்கார்,
தனியை நீ; ஆதலால், மற்று
    அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை;
    விண்ணும் நின் ஆட்சி ஆக்கி,
இனியராய் அன்னர் வந்து உன்
    ஏவலின் நிற்பர் ‘என்றாள்.
55

உரை
   
 
இராமன் இகழ்ச்சிக் குறிப்பால் சிரித்தல்

2884.‘நிருதர்தம் அருளும் பெற்றேன்;
    நின் நலம் பெற்றேன்; நின்னோடு
ஒருவருஞ் செல்வத்து யாண்டும்
    உறையவும் பெற்றேன்; ஒன்றோ?
திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்
    தவம் பயந்தது ‘என்னா,
வரி சிலை வடித்த தோளான்
    வாள் எயிறு இலங்க நக்கான்.
56

உரை
   
 
சீதை வருதல்

2885.விண் இடை, இம்பர், நாகர்,
    விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர்க்
    கடி கமழ் சாலை நின்றும்
பெண்ணிடை அரசி, தேவர்
    பெற்ற நல் வரத்தால், பின்னர்
மண்ணிடை மணியின் வந்த
    வஞ்சியே போல்வாள் வந்தாள்.
57

உரை
   
 
சூர்ப்பணகை சீதையைக் கண்டு வியத்தல் (2886-2890)

2886.ஊன் சுட உணங்கு பேழ் வாய்
    உணர்வு இலி, உருவம் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம்
    வந்து இடை வயங்கல், நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும்
    விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின்
    கனலியைக் கண்ணின் கண்டாள்.
58

உரை
   
 
2887.‘மரு ஒன்று கூந்தலாளை வனத்து
    இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக
    மற்றையோர் யாரும் இல்லை;
அரவிந்த மலருள் நீங்கி,
    அடி இணை படியில் தோயத்
திரு இங்கு வருவாள் கொல்லோ? ‘
    என்று அகம் திகைத்து நின்றாள்.
59

உரை
   
 
2888.பண்பு உற நெடிது நோக்கிப்,
    “படைக்குநர் சிறுமை அல்லால்,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை
    இல்லை ஆம் ‘‘ என்று நின்றாள்;
“கண் பிற பொருளில் செல்லா;
    கருத்து எனின், அஃதே; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால்,
    என்படும் பிறருக்கு? ‘‘ என்றாள்.
60

உரை
   
 
2889.‘பொரு திறத்தானை நோக்கிப்
    பூவையை நோக்கி, நின்றாள்;
கருத மற்று இனி வேறு இல்லை;
    கமலத்துக் கடவுள் தானே,
ஒரு திறத்து உணர நோக்கி,
    உருவினுக்கு, உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும், செய்த
    வரம்பு இவர் இருவர் ‘என்றாள்.
61

உரை
   
 
2890.‘பொன்னைப் போல் பொரு இல் மேனிப்
    பூவைப்பூ வண்ணத்தான், இம்
மின்னைப் போல் இடையாேளாடும்
    மேவும் மெய் உடையன் அல்லன்;
தன்னைப் போல் தகையோர் இல்லாத்
    தளிரைப் போல் அடியினாளும்,
என்னைப் போல் இடையே வந்தாள்;
    இகழ்விப்பென் இவளை ‘என்னா.
62

உரை
   
 
சீதையை அரக்கியெனல்

2891.வரும் இவள், மாயம் வல்லள்;
    வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தரெிவு இலம்; தேறும் தன்மை,
    சீரியோய்! செயல் இது அன்றால்,
உரு இது மெய்யது அன்றால்;
    ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல்
    விலக்குதி, வீர! என்றாள்.
63

உரை
   
 
சூர்ப்பணகையின் பொய்யுரை கேட்டு இராமன் சிரித்தல்

2892.‘ஒள்ளிது உன் உணர்வும் மின்னே!
    உன்னை ஆர் ஒளிக்கும் மீட்டார்?
தெள்ளிய நலத்தினால் உன்
    சிந்தனை தரெிந்தது; அம்மா!
கள்ள வல் அரக்கி போலாம்
    இவளும் நீ காண்டி ‘என்னா,
வெள்ளிய முறுவல் முத்தம்
    வெளிப்பட வீரன் நக்கான்.
64

உரை
   
 
சீதைமேல் அரக்கி வெகுளல்

2893.ஆயிடை, அமுதின் வந்த,
    அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும்,
    வீரனைச் சேரும் வேலை,
‘நீ இடை வந்தது என்னை?
    நிருதர்தம் பாவை ‘என்னாக்
காய் எரி அனைய கள்ள
    உள்ளத்தான் கதித்தலோடும்.
65

உரை
   
 
சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்

2894.அஞ்சினள்; அஞ்சி அன்னம்,
    மின் இடை அலச ஓடிப்
பஞ்சின் மெல் அடிகள் நோவப்
    பதைத்தனள்; பருவக் கால
மஞ்சு இடை வயங்கித் தோன்றும்
    பவளத்தின் வல்லி என்னக்
குஞ்சரம் அனைய வீரன்
    குவவுத் தோள் தழுவிக்கொண்டாள்.
66

உரை
   
 
இராமன் சூர்ப்பணகையைக் கடிதல்

2895.‘வளை எயிற்றவர்கேளாடு வரும்
    விளையாட்டு என்றாலும்,
விளைவன தீமையே ஆம் ‘
    என்பதை உணர்ந்து, வீரன்,
‘உளைவன இயற்றல்; ஒல்லை
    உன் நிலை உணருமாயின்,
இளையவன் முனியும்; நங்கை!
    ஏகுதி விரைவின் ‘என்றான்.
67

உரை
   
 
சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி

2896.பொற்பு உடை அரக்கி, ‘பூவில்,
    புனலினில், பொருப்பில், வாழும்
அற்பு உடை உள்ளத்தாரும்
    அநங்கனும், அமரர் மற்றும்
எற்பெறத் தவம் செய்கின்றார்;
    என்னை நீ இகழ்வது என்னே?
நல் பொறை நெஞ்சின் இல்லாக்
    கள்வியை நச்சி ‘என்றாள்.
68

உரை
   
 
சீதையோடு இராமன் பன்னசாலை புகுதல்

2897.‘தன்னொடும் தொடர்வு இலாதேம்
    என்னவும் தவிராள்; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும்
    கள்ள வாசகங்கள் ‘என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும்
    மேகம் போல், மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப்
    பூம் பொழிற் சாலை புக்கான்.
69

உரை
   
 
சூர்ப்பணகையின் காதல் நோய் (2898-2912)

2898.புக்க பின் போயது என்னும்
    உணர்வினள்; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும்
    உயிர்த்திலள்; ஒடுங்கிநின்றாள்;
‘தக்கிலன்; மனத்துள் யாதும்
    தழுவிலன்; சலமும் கொண்டான்;
மைக் கருங்குழலினாள் மாட்டு
    அன்பினில் வலியன் ‘என்பாள்.
70

உரை
   
 
2899.நின்றிலள்; அவனைச் சேரும்
    நெறியினை நினைந்து போனாள்;
‘இன்று இவன் ஆகம் புல்லேன் எனின்,
    உயிர் இழப்பென் ‘என்னாப்
பொன் திணி சரளச் சோலைப்
    பளிக்கறைப் பொதும்பர் புக்காள்;
சென்றது, பரிதி மேல்பால்;
    செக்கர் வந்து இறுத்தது அன்றே.
71

உரை
   
 
2900.அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின்
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே.
72

உரை
   
 
2901.தாடகைக் கொடியாள் தட மார்பிடை
ஆடவர்க்கு அரசன் அயில் அம்புபோல்
பாடவத் தொழில் மன்மதன் பாய் கணை
ஓட உட்கி உயிர் உளைந்தாள் அரோ!
73

உரை
   
 
2902.கலை உவாமதியே கறி ஆக வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள்
மலைய மாருதம் ஆம் நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால்
74

உரை
   
 
2903.அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையான்
மலைக் குலங்களின் தூர்க்கும் மனத்தினாள்
நிலைக்கும் வானில் நெடுமதி நீள் நிலா
மலைக்க நீங்கும் மிடுக்கினள் மாந்துவாள்.
75

உரை
   
 
2904.‘பூ எலாம் பொடி ஆக இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென் ‘எனக் காந்துவாள்
சேவலோடு உறை செந்தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள்.
76

உரை
   
 
2905.‘அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் ஓடி ‘எனக் கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குவாள்.
77

உரை
   
 
2906.கைகளால் தன் கதிர் இளங் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்.
78

உரை
   
 
2907.அளிக்கும் மெய், உயிர்,
    காந்து அழல் அஞ்சினள்,
குளிக்கும் நீரும்
    கொதித்து எழக் கூசுமால்;
விளிக்கும் வேலையை,
    வெங்கண் அநங்கனை,
ஒளிக்கல் ஆம் இடம்
    யாது? என, உன்னுமால்.
79

உரை
   
 
2908.வந்து கார் மழை தோன்றினும் மா மணிக்
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங்கலும்
வெந்து காந்த வெதுப்புறு மேனியாள்.
80

உரை
   
 
2909.வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனைக் கண்டு உணராவகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால்.
81

உரை
   
 
2910.அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்
முன்னின் மும்மடியாய் முலை வெந்து உக
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ.
82

உரை
   
 
2911.வீரன் மேனி வெளிப்பட வெய்யவள்
கார் கொள் மேனியைக் கண்டனளாம் எனச்
சோரும்; வெள்கும்; துணுக்கெனும்; அவ் உருப்
பேருங்கால் வெம் பிணியிடைப் பேருமால்.
83

உரை
   
 
2912.ஆகக் கொங்கையின் ஐயன் என்று அஞ்சன
மேகத்தைத் தழுவும்; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும்; அப்புன்மையாள்
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம் கொலோ?
84

உரை
   
 
கவிக்கூற்று

2913.‘ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அவ்
ஏழை ஆவி இறந்திலள் ‘என்பரால்;
‘ஆழியானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே.
85

உரை
   
 
சூர்ப்பணகையின் காமமிக்க கழிபடர்கிளவி (2914-2916)

2914.‘வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கென தாவத்தை நீக்கு ‘எனும்;
‘அஞ்சனக் கிரியே! அருளாய் ‘எனும்;
நஞ்சு நக்கினள் போல நடுங்குவாள்.
86

உரை
   
 
2915.‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.
87

உரை
   
 
2916.‘மாண்ட கற்பு உடையாள் மலர் மார்பகம்
ஆண்டு இருக்கும் நல்லாள் மகள் ‘என்னுமால்;
வேண்டகிற்பின் அல்லால் அவர் மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ? தறெும் காமமே.
88

உரை
   
 
சூரியன் உதித்தல்

2917.ஆன்ற காதல் அஃது உற எய்துழி
மூன்று உலோகமும் மூடும் அரக்கராம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான்.
89

உரை
   
 
சூர்ப்பணகையின் எண்ணம் (2918-2920)

2918.விடியல் காண்டலின், ஈண்டு
    தன் உயிர் கண்ட வெய்யாள்,
‘படி இலாள் மருங்கு உள்ளளவு,
    எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து,
    ஒல்லைக் கரந்து, அவள் காதல்
வடிவில் நான் உடன் வாழ்வதே
    மதி ‘என மதியா
90

உரை
   
 
2919.வந்து நோக்கினள்; வள்ளல் போய்
    ஒரு மணித் தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது
    கண்டனள்; தம்பி
இந்து நோக்கிய நுதலியைக்
    காத்து, அயல் இருண்ட
கந்தம் நோக்கிய சோலையில்
    இருந்தது காணாள்.
91

உரை
   
 
2920.தனி இருந்தனள்; சமைந்தது
    என் சிந்தனை; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது
    இல் ‘என, எண்ணாத்
துனி இருந்த வல் மனத்தினள்
    தோகையைத் தொடர்ந்தாள்;
கனி இரும் பொழில், காத்து
    அயல் இருந்தவன் கண்டான்.
92

உரை
   
 
இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்புக்களை
அறுத்தல் (2921-2922)

2921.‘நில் அடீஇ ‘எனக் கடுகினன்,
    பெண் என நினைந்தான்;
வில் எடாது, அவள் வயங்கு
    எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச்
    செங்கையில் திருகுறப் பற்றி,
ஒல்லை ஈர்த்து, உதைத்து,
    ஒளி கிளர் சுற்று வாள் உருவி.
93

உரை
   
 
2922.ஊக்கித் தாங்கி, ‘விண் படர்வென்‘ என்று
    உருத்து எழுவாளை
நூக்கி, நொய்தினின், ‘வெய்து
    இழையேல் ‘என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண்
    முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும்,
    புரி குழல் விட்டான்.
94

உரை
   
 
உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகையின் நிலை
(2923-2925)

2923.அக் கணத்து அவள் வாய் திறந்து
    அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது;
    தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
    மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
    உருகியது உலகம்.
95

உரை
   
 
2924.கொலை துமித்து உயர் கொடுங்
    கதிர் வாளின் அக் கொடியாள்
முலை துமித்து, உயர்
    மூக்கினை நீக்கிய முறைமை,
மலை துமித்தனெ, இராவணன்
    மணி உடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது,
    ஒத்தது ஓர் தன்மை.
96

உரை
   
 
2925.அதிர, மா நிலத்து, அடி பதைத்து
    அரற்றிய அரக்கி,
கதிர் கொள் கால வேல் கரன் முதல்
    நிருதர், வெம் கதப் போர்
எதிர் இலாதவர் இறுதியின்
    நிமித்தமா எழுந்து, ஆண்டு,
உதிர மாரி பெய் கார் நிற
    மேகம் ஒத்து உயர்ந்தாள்.
97

உரை
   
 
சூர்ப்பணகையின் துன்பநிலை (2926-2928)

2926.உயரும் விண்ணிடை; மண்ணிடை
    விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
    ஆர் உயிர் சோரும்;
பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட
    பிழை ‘எனப் பிதற்றும்;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
    தொல் குடிப் பிறந்தாள்.
98

உரை
   
 
2927.ஒற்றும் மூக்கினை; உலை உறு
    தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை நிலத்தினில்;
    இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்;
    தன் பரு வலிக் காலால்
சுற்றும் ஓடும்; போய்ச் சோரி
    நீர் சொரிதரச் சோரும்.
99

உரை
   
 
2928.ஊற்று மிக்க நீர் அருவியின்
    ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள்,
    தேவரும் இரியக்
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர்
    பெயர் எலாம் கூறி,
ஆற்றுகிற்கிலள், பற்பல
    பன்னி நின்று, அழைத்தாள்.
100

உரை
   
 
சூர்ப்பணகை தன் உறவினரை அழைத்தல் (2929-2941)

2929.நிலை எடுத்து, நெடு நிலத்து
    நீ இருக்கத் தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது
    சிறிது அன்றோ? தேவர் எதிர்
தலை எடுத்து விழியாமைச்
    சமைப்பதே? தழல் எடுத்தான்!
மலை எடுத்த தனி மலையே!
    இவை காண வாராயோ?
101

உரை
   
 
2930.“புலிதானே புறத்து ஆகக்
    குட்டி கோட்படாது “ என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும்
    உரை பொய்யோ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும்,
    வானவர்க்கும், தானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட
    வலி காண வாராயோ?
102

உரை
   
 
2931.ஆர்த்து, ஆனைக்கு அரசு உந்தி,
    அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
    அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
    மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
    பழி வந்து பாராயோ?
103

உரை
   
 
2932.காற்றினையும், புனலினையும்,
    கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும்,
    கோளினையும், பணி கோடற்கு
ஆற்றினை நீ, ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ? உன் வலத்தைச்
    சிவன் தடக்கை வாள் கொண்டாய்!
104

உரை
   
 
2933.உருப் படிவம் மன்மதனை
    ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியில் பொடி ஒவ்வா
    மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற
    நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடியப் பொருப்பு இடியத்
    தோள் நிமிர்த்த வலியோனே!
105

உரை
   
 
2934.தேன் உடைய நறுந்தரெியல்
    தேவரையும் தறெும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும்,
    தம்பியர்க்கும், தவிர்ந்ததோ?
ஊன் உடைய உடம்பினராய்,
    எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடவர் மருங்கே புக்கு
    ஒடுங்கினதோ வலி? அம்மா!
106

உரை
   
 
2935.மரன் ஏயும் நெடுங்கானின்
    மறைந்து உறையும் தாபதர்கள்
உரனேயோ? அடல் அரக்கர்
    ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார்
அரனேயோ? அயனேயோ?
    அரியேயோ? எனும் ஆற்றல்
கரனேயோ! யான் பட்ட
    கையறவு காணாயோ?
107

உரை
   
 
2936.இந்திரனும், மலர் அயனும்,
    இமையவரும், பணி கேட்பச்
சுந்தரி பல்லாண்டு இசைப்ப,
    உலகு ஏழும் தொழுது ஏத்தச்
சந்திரன் போல் தனிக் குடைக் கீழ்
    நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது
    முகம் காட்ட வல்லேனோ?
108

உரை
   
 
2937.உரன் நெரிந்து விழ என்னை
    உதைத்து உருட்டி, மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க,
    நான் இருந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ?
    இவை படவும் கடவேனோ?
அரன் இருந்த மலை எடுத்த
    அண்ணாவோ! அண்ணாவோ!
109

உரை
   
 
2938.‘நசையாலே மூக்கு இழந்து,
    நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ்
    மாசுண்டது ஆகாதோ?
திசையானை விசை கலங்கச்
    செருச் செய்து, மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து
    இராவணவோ! இராவணவோ!
110

உரை
   
 
2939.‘கானம் அதின் இடை இருவர்,
    காதொடு மூக்கு உடன் அரிய,
ஈனமதால் பாவியேன்,
    இவண் மடியக் கடவேனோ?
தானவரைக் கரு அறுத்துச்
    சதமகனைத் தளையிட்டு
வானவரைப் பணி கொண்ட
    மருகாவோ! மருகாவோ!! ‘
111

உரை
   
 
2940.‘ஒரு காலத்து, உலகு ஏழும்
    உருத்து எதிரத் தனு ஒன்றால்,
திருகாத சினம் திருகித்
    திசை அனைத்தும் செல நூறி,
இரு காலில், புரந்தரனை
    இருஞ் சிறையின் இடுவித்த
மருகாவோ! மானிடவர்
    வலி காண வாராயோ? ‘
112

உரை
   
 
2941.‘கல் ஈரும் படைத் தடக்கை அடல்,
    கர தூடணர் முதலா,
அல் ஈரும் சுடர் மணிப் பூண்,
    அரக்கர் குலத்து அவதரித்தீர்!
கொல் ஈரும் படைக்
    கும்பகருணனைப்போல், குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ?
    யான் அழைத்தல் கேளீரோ? ‘
113

உரை
   
 
அப்பொழுது இராமன் வருதல்

2942.என்று, இன்ன பல பன்னி,
    இகல் அரக்கி அழுது இரங்கிப்
பொன் துன்னும் படியகத்துப்
    புரள்கின்ற பொழுதகத்து,
நின்று, அந்த நதியகத்து,
    நிறை தவத்தின் குறை முடித்து,
வன் திண் கைச் சிலை நெடுந்தோள்
    மரகதத்தின் மலை வந்தான்.
114

உரை
   
 
சூர்ப்பணகை தான் பட்டதை இராமனுக்கு உணர்த்தல்

2943.வந்தானை முகம் நோக்கி,
    வயிறு அலைத்து, மழைக் கண்ணீர்,
செந்தாரைக் குருதி கொடு
    செழுநிலத்தைச் சேறு ஆக்கி,
‘அந்தோ! உன் திருமேனிக்கு
    அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய்! யான் பட்டபடி
    இதுகாண் ‘என்று எதிர் விழுந்தாள்.
115

உரை
   
 
இராமன் வினா

2944.விரிந்தாய கூந்தலாள்,
    வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது, தனது
    பொரு அரிய திரு மனத்தால்
தரெிந்தான்; இன்று, இளையானே
    இவளை நெடுஞ் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான்;
    ‘அம்மனை! நீ யார்? ‘என்றான்,
116

உரை
   
 
சூர்ப்பணகையின் விடை

2945.அவ் உரை கேட்டு, அடல் அரக்கி
    ‘அறியாயோ நீ, என்னை?
தவெ் உரை என்றோர் உலகும்
    இல்லாத சீற்றத்தான்;
வெவ் இலை வேல் இராவணனாம்,
    விண் உலகம் முதலாக
எவ் உலகும் உடையானுக்கு
    உடன் பிறந்தேன் யான் ‘என்றாள்.
117

உரை
   
 
இராமன் வினாவும் சூர்ப்பணகையின் விடையும்
(2946-2947)

2946.‘தாம் இருந்த தகை அரக்கர்
    புகல் ஒழியத் தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு
    என் செய வந்தீர்? ‘எனலும்,
‘வேம் இருந்தில் எனக்
    கனலும் வெம் காம வெம் பிணிக்கு
மா மருந்தே! நெருநலினும்
    வந்திலனோ யான்? ‘என்றாள்.
118

உரை
   
 
2947.“‘செங்கயல் போல் கரு நெடுங்கண்,
    தேமரு தாமரை உறையும்
நங்கை இவர் ‘‘ என நெருநல்
    நடந்தவரோ நாம்? ‘என்னக்
‘கொங்கைகளும் குழைக் காதும்
    கொடி மூக்கும் குறைத்து அழித்தால்,
அங்கண் அரசே! ஒருவர்க்கு
    அழியாதோ அழகு? ‘என்றாள்.
119

உரை
   
 
இராமன் இலக்குவனை வினவுதல்

2948.மூரல் முறுவலன், இளைய
    மொய்ம்பினோன் முகம் நோக்கி,
‘வீர! விரைந்தனை, இவள்தன்
    விடு காதும், கொடி மூக்கும்,
ஈர, நினைந்து இவள் இழைத்த பிழை
    என்? ‘என்று இறை வினவச்
சூர நெடுந்தகை அவனை அடி
    வணங்கிச் சொல்லுவான் :
120

உரை
   
 
இலக்குவன் விடை

2949.‘தேட்டம் தான் வாள் எயிற்றில்
    தின்னவோ? தீவினையோர்
கூட்டம் தான் புறத்து உளதோ?
    குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம் தான் எரி உமிழ,
    நல்லாள் மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள்
    உடன்று எழுந்தாள் ‘என உரைத்தான்.
121

உரை
   
 
சூர்ப்பணகை இடைமறித்துக் கூறுதல்

2950.ஏற்ற வளை வரி சிலையோன்
    இயம்பாமுன், இகல் அரக்கி,
‘சேற்ற வளை தன் கணவன்
    அருகு இருப்பச் சினம் திருகிச்
சூல் தவளை, நீர் உழக்கும்
    துறை கெழு நீர் வள நாடா!
மாற்றவளைக் கண்டக்கால்
    அழலாதோ மனம்? ‘என்றாள்.
122

உரை
   
 
‘ஓடிப்போ ‘என இராமன் சினந்துரைத்தல

2951.‘பேடிப் போர் வல் அரக்கர்
    பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று,
    தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப்போகாதே; இம் மெய்
    வனத்தை விட்டு அகல
ஓடிப்போ ‘என்று உரைத்த உரை
    கடந்தாற்கு, அவள் உரைப்பாள்.
123

உரை
   
 
்சூர்ப்பணகையின் சொல் (2952-2962)

2952.‘நிரை திரை என்று இல்லாத
    நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர், இராவணற்குக்
    கரம் இறுக்கும் குடி என்றால்,
விரையும் இது நன்று அன்று;
    வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது, நுமக்கு உறுதி
    உணர்வு உளதேல் ‘என்று உரைப்பாள்.
124

உரை
   
 
2953.“‘ஆக்கரிய மூக்கு, உங்கை
    அரியுண்டாள் “ என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார்;
    நாகரிகர் அல்லாமை,
மூக்கு அரிந்து நும் குலத்தை
    முதல் அரிந்தீர்; இனி, உமக்குப்
போக்கு அரிது; இவ் அழகை
    எல்லாம் புல்லிடையே உகுத்தீரே!
125

உரை
   
 
2954.‘வான் காப்போர், மண் காப்போர்,
    மா நாகர் வாழ் உலகம்
தான் காப்போர், இனித் தங்கள்
    தலை காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்?
    என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ்
    இராவணனார் உளர்! என்றால்.
126

உரை
   
 
2955.‘காவல் திண் கற்பு அமைந்தார்
    தம் பெருமை தாம் கழறார்;
ஆவல் பேர் அன்பினால்,
    அறைகின்றேன் ஆம் அன்றோ?
“தேவர்க்கும் வலியான் தன் திருத்
    தங்கையாள் இவள்; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள் ‘‘ என்று,
    இளையானுக்கு இயம்பீரோ?
127

உரை
   
 
2956.‘மாப் போரில் புறம் காப்பேன்;
    வான் சுமந்து செல வல்லேன்;
தூப் போல்வ கனி பலவும்
    சுவை உடைய தர வல்லேன்;
காப்போரைக் கைத்து என்? நீர்
    கருதியது தருவேன்; இப்
பூப் போலும் மெல்லியலால்
    பொருள் என்னோ? புகல்வீரே.
128

உரை
   
 
2957.‘குலத்தாலும், நலத்தாலும்,
    குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும், மதியாலும்,
    வடிவாலும், மடத்தாலும்,
நிலத்தாரும், விசும்பாரும்,
    நேரிழையார், என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச்
    சொல்லீரோ, வல்லீரேல்?
129

உரை
   
 
2958.‘போக்கினீர் என் நாசி; போய்த்து என்?
    நீர் பொறுக்கிலிரேல்,
ஆக்குவென் ஓர் நொடி வரையின்;
    அழகு அமைவென்; அருள்கூரும்
பாக்கியம் உண்டு எனின், அதனால்,
    பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ?
மேக்கு உயரும் நெடு மூக்கு
    மடந்தையர்க்கு மிகை அன்றோ?
130

உரை
   
 
2959.‘விண்டாரே அல்லாரோ வேண்டாதார்
    நான் வேண்டின்?
உண்டாய காதலின், என் உயிர் என்பது
    உமது அன்றோ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும்
    விடம் அன்றோ?
கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால்,
    கொள்ளீரோ?
131

உரை
   
 
2960.‘சிவனும், மலர்த் திசைமுகனும்,
    திருமாலும், தறெு குலிசத்து
அவனும், அடுத்து ஒன்றாகி
    நின்றன்ன உருவோனே!
புவனம் அனைத்தையும், ஒரு தன்
    பூங்கணையால் உயிர் வாங்கும்
அவனும், உனக்கு இளையானோ?
    இவனே போல் அருள் இலனால்.
132

உரை
   
 
2961.‘பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண,
    மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ?
“இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்தொழியும்
    நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார் ‘‘ என்றே
    அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி
    பூண்டது? நான் அறிவிலேனோ?
133

உரை
   
 
2962.‘வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர்
    ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்,
அப்பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால்
    அழிந்தனவாம்; அறத்தை
ஒப்பு அழியச் செய்கிலார் உயர் குலத்துத்
    தோன்றினோர்; உணர்ந்து நோக்கி,
இப்பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர்,
    என்னொடும் ‘என்று, இறைஞ்சி நின்றாள்.
134

உரை
   
 
இராமன் வெகுண்டு அச்சுறுத்தியது (2963-2965)

2963.‘நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி,
    நின் அன்னை தன்னை நல்கும்
தாடகையை, உயிர் கவர்ந்த சரம் இருந்தது;
    அன்றியும், நான் தவம் மேற்கொண்டு,
தோள் தகைய துறு மலர்த் தார் இகல் அரக்கர்
    குலம் தொலைப்பான், தோன்றி நின்றேன்;
போடு, அகலப் புல் ஒழுக்கை; வல் அரக்கி! ‘
    என்று இறைவன் புகலும் பின்னும்.
135

உரை
   
 
2964.‘தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
    புதல்வர் யாம்; தாய்சொல் தாங்கி,
விரை அளித்த கான் புகுந்தேம்; வேதியரும்
    மா தவரும் வேண்ட, நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர்
    குலம் தொலைத்துக் கண்டாய், பண்டை
வரை அளித்த குல மாட நகர் புகுவேம்;
    இவை தரெிய மனக்கொள் ‘என்றான்.
136

உரை
   
 
2965.“‘நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர்
    நில்லாதே, நெடிய தேவர்
மறித்தார்; ஈண்டு இவர் இருவர்; மானிடவர் ‘‘
    என்னாது, வல்லை ஆகின்,
வெறித் தாரை வேல் அரக்கர், விறல் இயக்கர்
    முதலினர், நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும், கொணருதியேல்,
    நின் எதிரே கோறும் ‘என்றான்.
137

உரை
   
 
சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்தல் (2966-2969)

2966.‘கொல்லலாம்; மாயங்கள் குறித்தனவே
    கொள்ளலாம்; கொற்றம் முற்ற
வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம்
    கடக்கலாம்; “மேல்வாய் நீங்கிப்
பல் எலாம் உறத் தோன்றும் பகுவாயள் ‘‘
    என்னாது, பார்த்தி ஆயின்,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட!
    கேள் ‘என்று, நிருதி கூறும்.
138

உரை
   
 
2967.‘காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர்
    என்னினும், யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல் அடல் அரக்கர் அவரோடே
    செருச் செய்வான் அமைந்தீராயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
    அறிந்து, அவற்றைத் தடுப்பென்
“பாம்பு அறியும் பாம்பின்கால்“ என மொழியும்
    பழமொழியும் பார்க்கிலீரோ?
139

உரை
   
 
2968.‘உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி
    என்னுதியேல், நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால்
    ஒரு மூவேம் கலந்த காலைக்
குளம் கோடும் என்றிதுவும் உறுகோளே?
    என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தின் இருகோளும்
    சிறை வைத்தாற்கு இளையேன் ‘என்றாள்.
140

உரை
   
 
2969.‘பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள்
    வேண்டும் உருப் பிடிப்பேன் நன்றே;
அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும் ஈங்கு
    இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவேளாடும் உறைவெனோ?
    என்பானேல் இறைவ! ஒன்றும்
மருங்கு இலாதவேளாடும் அன்றோ நீ
    நெடும் காலம் வாழ்ந்தது? என்பாய்.
141

உரை
   
 
இலக்குவன் அவளைக் கொல்ல எண்ணுதல்

2970.என்றவள்மேல், இளையவன்தான் இலங்கு இலைவேல்
    கடைக்கணியா, ‘இவளை ஈண்டுக்
கொன்று களையேம் என்றால், நெடிது அலைக்கும்;
    அருள் என் கொல்? கோவே! ‘என்ன,
‘நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல்
    ஆக! ‘என நாதன் கூற,
‘ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென்,
    நிற்கின் ‘என, அரக்கி உன்னா.
142

உரை
   
 
சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்திச் செல்லுதல்

2971.‘ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும்
    முலை இரண்டும், இழந்தும் வாழ
ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள
    பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானைக்
    கொடியானைக் கரனை, உங்கள்
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன் ‘
    என்று சலம் கொண்டு போனாள்.
143

உரை