சூர்ப்பணகை கரன் முன் விழுந்து புரளுதல்
(2972-2973)

2972.இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசைச்
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு எனத்
தரெிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள்; அரோ.
1

உரை
   
 
2973.‘அழுங்கும் நாள் இது ‘என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்
முழங்கும் மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கும் நாகம் எனப் புரண்டாள் அரோ!
2

உரை
   
 
கரன் வினவுதல்

2974.வாக்கின் கோபப் புகை முந்து வாயினான்
நோக்கிக் ‘கூசலர் நுன்னை இத்தன்மையை
ஆக்கிப் போனவர் ஆர்கொல்? ‘என்றான்; அவள்
மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான்.
3

உரை
   
 
சூர்ப்பணகை கூறுதல் (2975-2978)

2975.இருவர் மானிடர் தாபதர் ஏந்திய
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார்.
4

உரை
   
 
2976.ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறம்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார்
‘வென்றி வேல் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும் ‘என்று உணர் கொள்கையார்.
5

உரை
   
 
2977.மண்ணில் நோக்கரு வானினில் மற்றினின்
எண்ணில் நோக்கு உறின் யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்கு உடையாள் ஒரு பேதை என்
கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள்.
6

உரை
   
 
2978.‘கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு ‘எனச் சொல்லினாள்.
7

உரை
   
 
கரன் வெகுண்டெழுதல் (2979-2980)

2979.கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால்
தோட்ட நுங்கில் தொளை உறும் மூக்கினை;
‘காட்டு ‘எனா எழுந்தான்; எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான்.
8

உரை
   
 
2980.எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உகப் பொங்குவான்
“‘கழிந்துபோயினர் மானிடர் ” என்னுங்கால்
அழிந்ததோ? இவ் அரும்பழி ‘என்னுமால்.
9

உரை
   
 
கரன் போர்க்கு எழ, அடுத்திருந்த வீரர் பதினால்வர் போர்ப்பணி தமக்குத் தருமாறு வேண்டல் (2981-2983)

2981.‘வருக தேர் ‘எனும் மாத்திரை மாடு உேளார்
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்
‘தருக இப்பணி எம் வயின் ‘தான் என்றார்.
10

உரை
   
 
2982.சூலம் வாள் மழுத் தோமரம் சக்கரம்
காலபாசம் கதை பொரு கையினார்;
வேலை ஞாலம் வெரு உறும் ஆர்ப்பினார்;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார்.
11

உரை
   
 
2983.வெம்பு கோபக் கனலர் விலக்கினார்;
‘நம்பி! எம் அடிமைத்தொழில் நன்று! ‘எனா
‘உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ? ‘என்றார்.
12

உரை
   
 
கரன், வீரர் வேண்டுகோட்கு இசைதல்

2984.‘நன்று சொல்லினிர்! நான் இச் சிறார்கள் மேல்
சென்று போர் செயின் தேவர் சிரிப்பரால்;
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்லியலோடு ‘என்றான்.
13

உரை
   
 
கரன் வீரர் பதினால்வரும் இராமனிருக்குமிடம்
அடைதல்

2985.என்னலோடும் விரும்பி இறைஞ்சினார்
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என
அன்னள் பின் படர்வார் என ஆயினார்
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார்.
14

உரை
   
 
சூர்ப்பணகை வீரர்க்கு இராமனைக் காட்டுதல்

2986.துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள்
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாதம் நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள்.
15

உரை
   
 
கரன்வீரர் இராமனை வளைதல்

2987.‘எற்றுவாம் பிடித்து ஏந்தினம் ‘என்குநர்
‘பற்றுவாம் நெடும் பாசத்தின் ‘என்குநர்
‘முற்றுவாம் இறை சொல் முறையால் ‘எனாச்
சுற்றினார் வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார்.
16

உரை
   
 
்இராமன் போர்க்கு எழுதல்

2988.ஏத்து வாய்மை இராமன் இளவலைக்
‘காத்தி தையலை ‘என்று தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக்கையால்
ஆத்த நாணின் அருவரை வாங்கினான்.
17

உரை
   
 
்இராமன் கரன் வீரரொடு பொருதல் (2989-2990)

2989.வாங்கி வாெளாடு வாளி பெய் புட்டிலும்
தாங்கித் தாமரைக் கண்ணன் அச் சாலையை
நீங்கி ‘இவ்வழி நேர்மின் அடா ‘எனா
வீங்கு தோளன் மலைதலை மேயினான்.
18

உரை
   
 
2990.மழுவும் வாளும் வயங்கு ஒளி முச்சிகைக்
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும்
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான்.
19

உரை
   
 
வீரர் இறந்துபடச் சூர்ப்பணகை கரனிடம் செல்லுதல்

2991.மரங்கள்போல் நெடு வாெளாடு தோள் விழ
உரங்களான் அடர்ந்தார்; உரவோன் விடு
சரங்கள் ஓடின தைக்க அரக்கர்தம்
சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள்.
20

உரை
   
 
வீரர் இறந்தமை சூர்ப்பணகை கரன்பாற் கூறல்

2992.ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள்;
குளிறு கோப வெம் கோள் அரிமா அடக்
களிறு எலாம் படக் கை தலைமேல் உறப்
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள்.
21

உரை
   
 
கரன் வெகுளுதல்

2993.‘அங்கு அரக்கர் அவிந்து ஒழிந்தார் ‘எனப்
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கரப் பெயரோன் வெகுண்டான்; விடைச்
சங்கரற்கும் தடுப்பருந் தன்மையான்.
22

உரை
   
 
கரன் கட்டளை

2994.‘அழை என் தேர் ‘; ‘எனக்கு ஆக்கு வன் போர்ப் படை ‘;
‘உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல்
மழையின் மா முரசு எற்றுதிர் வல்; ‘ என்றான்
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான்.
23

உரை
   
 
தேர்ப்படை திரளுதல்

2995.பேரி ஓசை பிறத்தலும் பெட்பு உறும்
மாரி மேகம் வரம்பு இல வந்தனெத்
தேரின் சேனை திரண்டது; தேவர்தம்
ஊரும் நாகர் உலகும் உலைந்தவே.
24

உரை
   
 
காலாட்படை திரளுதல் (2996-3000)

2996.போர்ப் பெரும் படை பொம்மென் முழக்கமா
நீர்த் தரங்கம் நெடுந்தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது; இறுதியின் ஆர்கலிக்
கார்க் கருங்கடல் கால் கிளர்ந்து என்னவே.
25

உரை
   
 
2997.காடு துன்றி விசும்பு கரந்தனெ
நீடி எங்கும் நிரந்த நெடுங்கொடி
‘ஓடும் எங்கள் பசி ‘என்று உவந்து எழுந்து
ஆடுகின்ற அலகையின் ஆடவே.
26

உரை
   
 
2998.தறியின் நீங்கிய தாழ் தடக் கைத் துணைக்
குறி கொளா மத வேழக் குழு அனார்
செறிவின் வாெளாடு வாள் இடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே.
27

உரை
   
 
2999.முருடு இரண்டும் முழங்குறத் தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே.
28

உரை
   
 
3000.தலையில் மாசுணம் தாங்கிய தாரணி
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம் ஒரு மாடு தொக்க என்னவே.
29

உரை
   
 
வீரர் தோற்றமும் தொகையும்

3001.வல்லியக் குழாங்கேளா? மழையின் ஈட்டமோ?
ஒல் இபத் தொகுதியோ? ஓங்கும் ஓங்கலோ?
அல்ல மற்று அரிகளின் அனிகமே எனப்
பல் பதினாயிரம் படைக் கை வீரரே.
30

உரை
   
 
தேர்களின் அமைதி (3002-3003)

3002.ஆளிகள் பூண்டன அரிகள் பூண்டன
மீளிகள் பூண்டன வேங்கை பூண்டன
ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன
கூளிகள் பூண்டன குதிரை பூண்டன.
31

உரை
   
 
3003.ஏற்றினம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன
காற்று இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றினம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன.
32

உரை
   
 
நால்வகைப் படையும் பெயர்தல்

3004.தேரினம் துவன்றின சிறுகண் செம்முகக்
காரினம் நெருங்கின காலின் கால் வரு
தாரினம் குழுமின தடை இல் கூற்று அன்ன
பேர் இனம் கடல் எனப் பெயருங் காலையே.
33

உரை
   
 
படைக்கலங்கள் செறிதல் (3005-3007)

3005.மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமரத் தொகையும் ஈட்டியும்
முழுக் கலும் முசுண்டியும் தண்டும் முத்தலைக்
கழுக்களும் உலக்கையும் காலபாசமும்.
34

உரை
   
 
3006.குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம் இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும் பாசமும்.
35

உரை
   
 
3007.ஆதிய அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய சோரியும் தூவும் துன்னிய
ஏதிகள் மிடைந்தன; இமையவர்க்கெலாம்
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன.
36

உரை
   
 
சேனைத்தலைவர் திறலும் தொகையும்

3008.ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்
மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
தீ எரி விழியினர் நிருதர் சேனையின்
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே.
37

உரை
   
 
திரண்ட சேனையின் அளவு

3009.‘ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை; குறித்த அப்படை
ஏறினது ஏழினது இரட்டி ‘என்பரால்
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார்.
38

உரை
   
 
சேனை வீரர் திறம் (3010-3017)

3010.உரத்தினர் உருமென உரறும் வாயினர்
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும்
வரத்தினர் மலை என மழை துயின்று எழு
சிரத்தினர் தருக்கினர் செருக்கும் சிந்தையார்.
39

உரை
   
 
3011.விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்
கண் அளவிடல் அரு மார்பர் காலினால்
மண் அளவிடும் நெடுவலத்தர் வானிடை
எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார்.
40

உரை
   
 
3012.இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை
சிந்தின தறெித்து உகச் செறிந்த தோளினார்;
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார்;
வெம் தழல் உருவுகொண்டனைய மேனியார்.
41

உரை
   
 
3013.சூலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார்
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கும் காட்சியார்.
42

உரை
   
 
3014.கழலினர் தாரினர் கவச மார்பினர்
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர்
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து
எழல் உறும் மனத்தினர் ஒருமை எய்தினார்.
43

உரை
   
 
3015.மருப்பு இறா மதக் களிற்று
    அமரர் மன்னனும்,
விருப்பு உறா முகத்து எதிர்
    விழிக்கின், வெந்நிடும்;
உருப் பொறாது உலைவுறும்
    உலகம்; ஊன் தினும்
செருப் பெறாத் தினவு உறு
    சிகரத் தோளினார்.
44

உரை
   
 
3016.குஞ்சரம் குதிரை பேய்
    குரங்கு கோள் அரி
வெம் சினக் கரடி நாய்
    வேங்கை யாளி என்று
அஞ்சுறக் கனல் புரை முகத்தர்,
    ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை
    நயனத்தார்களும்.
45

உரை
   
 
3017.எண் கையர், எழு கையர்,
    ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரிதரும்
    முகத்தர், காலினர்,
வண் கையின் வளைத்து,
    உயிர் வாரி, வாயின் இட்டு
உண் கையின் உவகையர்,
    உலப்பு இலார்களும்.
46

உரை
   
 
கொடி முதலியவை செறிந்தமை (3018-3019)

3018.இயக்கரில் பறித்தன அவுணர் இட்டன
மயக்கு உறுத்து அமரரை வலியின் வாங்கின
துயக்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின
நயப்பு உறு சித்தரை நலிந்து வவ்வின.
47

உரை
   
 
3019.கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம்
படியுறு பதாகை மீ விதானம் பல்வகை
இடை இலாது எங்கணும் இசைய மீமிசை
மிடைதலின் உலகு எலாம் வெயில் இழக்கவே.
48

உரை
   
 
சேனைத் தலைவர் திறம் (3020-3021)

3020.எழுவரொடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர் தலைவர் தானையர்
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர்
உழுவையொடு அரியென உடற்றும் சீற்றத்தார்.
49

உரை
   
 
3021.வில்லினர் வாளினர் இதழின்மீது இடு
பல்லினர் மேருவைப் பறிக்கும் ஆற்றலர்
புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார்.
50

உரை
   
 
கரனைத் தூடணன் முதலியோர் சூழ்தல்

3022.தூடணன் திரிசிராத் தோன்றல் ஆதியர்
கோடு அணை முரசினம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர்.
51

உரை
   
 
படை சூழநின்ற கரனுடைய தோற்றம்

3023.ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி
வான் தொடர் மேருவை வளைத்தது ஆம் என
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன்
தோன்றினன்; யாவரும் துணுக்கம் எய்தவே.
52

உரை
   
 
கரன் படை இராமனிருக்கும் இடம் நோக்கிச் செல்லுதல் (3024-3028)

3024.அசும்பு உறு மத கரி புரவி ஆடகத்
தசும்பு உறு சயந்தனம் அரக்கர் தாள் தர
விசும்பு உறு தூளியான் வெண்மை மேயின
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர் அரோ.
53

உரை
   
 
3025.வனம் துகள் பட்டன;
    மலையின் வான் உயர்
கனம் துகள் பட்டன;
    கடல்கள் தூர்ந்தன;
இனம் தொகு தூளியால்,
    இசைப்பது என்? இனிச்
சினம் தொகு நெடுங் கடல்
    சேனை செல்லவே.
54

உரை
   
 
3026.நிலை மிசை விசும்பிடை
    நெருக்கலால், நெடு
மலைமிசை, மலையினம்
    வருவ போல், மலைத்
தலைமிசைத் தலைமிசைத்
    தாவிச் சென்றனர்;
கொலை மிசை நஞ்சு எனக்
    கொதிக்கும் நெஞ்சினார்.
55

உரை
   
 
3027.வந்தது சேனை வெள்ளம்
    வள்ளியோன் மருங்கு; மாயா
பந்த மா வினையம் மாளப்
    பற்று அறு பெற்றியோர்க்கும்
உந்தரு நிலையது ஆகி,
    உடன் உறைந்து, உயிர்கள் தம்மை
அந்தகற்கு அளிக்கும் நோய் போல்
    அரக்கி முன் ஆக, அம்மா!
56

உரை
   
 
3028.தூரியக் குரலின் வானின்
    முகில் குலம் துணுக்கம் கொள்ள,
வார் சிலை ஒலியின் அஞ்சி,
    உருமெலாம் மறுக்கம் கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி,
    அசைவு உற, அரக்கர் சேனை,
போர் வனத்து இருந்த வீரர்
    உறைவிடம் புக்கது அன்றே.
57

உரை
   
 
கரன் படைவரவு கண்ட புள் விலங்கு
முதலியவற்றின் தோற்றம்

3029.வாய் புலர்ந்து அழிந்த, மெய்யின்
    வருத்தத்த, வழியின் யாண்டும்
ஓய்வு இல, நிமிர்ந்து வீங்கும்
    உயிர்ப்பின, உலைந்த கண்ண,
தீயவர் சேனை வந்து
    சேர்ந்தமை, தரெியச் சென்று,
வேய் தரெிந்து உரைப்ப போன்ற
    புள்ெளாடு விலங்கும் அம்மா!
58

உரை
   
 
கரன் சேனையின் வரவறிந்து இலக்குவன் போர்க்கு எழ இராமன் அவனைத் தடுத்துத் தானே போர்க்கு எழுதல் (3030-3036)

3030.தூளியின் படலை வந்து
    தொடர்வுற, மரமும் தூறும்
தாளிடை ஒடியும் ஓசை,
    சடசட ஒலிப்பக் கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி,
    இரிதரும் அமலை நோக்கி,
மீளி மொய்ம்பின் அருஞ்சேனை
    மேல்வந்தது உளது என்று உன்னா.
59

உரை
   
 
3031.மின் நின்ற சிலையன் வீரக்
    கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளிப்
    புட்டிலன் புகையும் நெஞ்சன்,
‘நில்; நின்று காண்டி; யான் செய்
    நிலை; ‘ என விரும்பி நேரா
முன் நின்ற பின் வந்தோனை
    நோக்கினன், மொழியல் உற்றான்.
60

உரை
   
 
3032.“நெறிக் கொள் மாதவர்க்கு முன்னே
    நேர்ந்தனென் ‘நிருதர் ஆவி
பறிக்குவென் யானே ‘என்ற
    பழமொழி பழுது உறாமே,
வெறிக் கொள் பூங்குழலினாளை,
    வீர! நீ வேண்டினேன் யான்;
குறிக்கொடு காத்தி; இன்னே
    கொல்வென் இக்குழுவை‘‘ என்னா.
61

உரை
   
 
3033.மரம் படர் கானம் எங்கும்
    அதர் பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணிக்
    கரு நிறக் கமலக் கண்ணன்,
சரம் படர் புட்டில் கட்டிச்
    சாபமும் தரித்தான், தள்ளா
உரம் படர் தோளின் மீளாக்
    கவசம் இட்டு, உடைவாள் ஆர்த்தான்.
62

உரை
   
 
3034.‘மீளருஞ் செருவில் விண்ணும்
    மண்ணும் என்மேல் வந்தாலும்,
நாள் உலந்து அழியுமன்றே!
    நான் உனக்கு உரைப்பது என்னே?
ஆளியின் துப்பினாய்! இவ்
    அமர் எனக்கு அருளிநின்று, என்
தோளினைத் தின்னுகின்ற
    சோம்பினைத் துடைத்தி ‘என்றான்.
63

உரை
   
 
3035.என்றலும், இளைய வீரன்
    இசைந்தனன்; இராமன் ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல்
    உள்ளத்தின் உணரக் கொண்டான்,
அன்றியும், அண்ணல் ஆணை
    மறுக்கிலன், அம் கை கூப்பி
நின்றனன்; இருந்து கண்ணீர்
    நிலன் உறப் புலர்கின்றாள்பால்.
64

உரை
   
 
3036.குழை உறு மதியம் பூத்த
    கொம்பு அனாள் குழைந்து சோரத்
தழை உறு சாலை நின்றும்
    தனிச் சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற
    வாள் எயிற்று அரக்கர் காண
முழையில் நின்று எழுந்து செல்லும்
    மடங்கலின் முனிந்து சென்றான
65

உரை
   
 
சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல்

3037.தோன்றிய தோன்றல் தன்னைச்
    சுட்டினள் காட்டிச் சொன்னாள்;
வான்தொடர் மூங்கில் தந்த
    வயங்கு வெம் தீ இது என்னத்
தான் தொடர் குலத்தை எல்லாம்
    தொலைக்குமா சமைந்துநின்றாள்,
“ஏன்று வந்து எதிர்ந்த வீரன்
    இவன் இகல் இராமன் “ என்றே.
66

உரை
   
 
படையினரை நோக்கிக் கரன் கூறல் (3038-3039)

3038.கண்டனன் கனகத் தேர்மேல்,
    கதிரவன் கலங்கி நீங்க,
விண்தனில் நின்ற வென்றிக்
    கரனெனும் விலங்கல் தோளான்,
‘மண்டு அமர் யானே செய்து,
    இம் மானிடன் வலியை நீக்கிக்
கொண்டனன் வாகை ‘என்று
    படைஞரைக் குறித்துச் சொன்னான்.
67

உரை
   
 
3039.“‘மானிடன்; ஒருவன்; வந்த
    வலி கெழு சேனைக்கு, அம்மா!
கான் இடம் இல்லை ‘‘ என்னும்
    கட்டுரை கலந்த காலை
யான் உடை வென்றி என்னாம்?
    யாவரும் கண்டு நிற்றிர்;
ஊன் உடை இவனை யானே,
    உண்குவென் உயிரை ‘என்றான்.
68

உரை
   
 
தீய குறிகளைக் கண்ட அகம்பன் அறிவுரை கூறுதல்
(3040-3044)

3040.அவ் உரை கேட்டு வந்தான்,
    அகம்பன், என்று அமைந்த கல்விச்,
செவ்வியோன் ஒருவன், ‘ஐய!
    செப்புவென்; செருவில் சால
வெவ்வியராதல் நன்றே!
    வீரருள் ஆண்மை வீர!
இவ்வயின் உளவாம் தீய
    நிமித்தம் ‘என்று இயம்பலுற்றான்.
69

உரை
   
 
3041.குருதி மா மழை சொரிந்தன
    மேகங்கள் குமுறிப்
பருதி வானவன் ஊர்
    வளைப்புண்டது பாராய்!
கருது வீர! நின் கொடி மிசைக்
    காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன புலம்புவ
    நிலம்படப் புரள்வ.
70

உரை
   
 
3042.வாளின் வாய்களை ஈ
    வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம்
    துடிக்கின்றன; தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி
    வீழ்கின்றன; விரவி
ஞாளியோடு நின்று உளைக்கின்ற
    நரிக் குலம் பலவால்.
71

உரை
   
 
3043.பிடி எலாம் மதம் பெய்திடப்
    பெருங்கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு; உலகமும்
    கம்பிக்கும்; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும்
    பெருந்திசை; எவர்க்கும்
முடியின் மாலைகள்
    புலாலொடு முழுமுடை நாறும்.
72

உரை
   
 
3044.“இனைய ஆகலின், மானிடன்
    ஒருவன் என்று இவனை
நினையல்; ஆவதொன்று அன்று
    அது; நீதியாநின்ற
வினை எலாம் செய்தும்
    வெல்லலாம் தன்மையன் அல்லன்;
புனையும் வாகையாய்! பொறுத்தி என்
    உரை‘‘ எனப் புகன்றான்.
73

உரை
   
 
நிமித்திகன் கூறியதுகேட்ட கரன் கூறுதல்

3045.உரைத்த வாசகம் கேட்டலும்,
    உலகு எலாம் உலையச்
சிரித்து, ‘நன்று நம் சேவகம்,
    தவெ்வரைத் தேய
அரைத்த அம்மியாம் அலங்கு எழில்
    தோள், அமர்வேண்டி
இரைத்து வீங்குவ, மானிடற்கு
    எளியவோ? ‘என்றான்.
74

உரை
   
 
கரன் கூறியது கேட்ட படையினர் இராமனை வளைதல்

3046.என்னும் மாத்திரத்தே
    ‘எறி பிடி ‘என இடியா,
மன்னர் மன்னவன் மதலையை
    வளைந்தன; வனத்து,
மின்னும் வால் உளை
    மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் எனச் சுடு சினத்து
    அரக்கர்தம் தொகுதி
75

உரை
   
 
இராமன் பொருதமையால் கரன்படை அழிதல் (3047-3066)

3047.வளைந்த காலையில் வளைந்தது
    அவ் இராமன் கை வரிவில்;
விளைந்த போரையும் ஆவதும்
    விளம்புதும்; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன;
    புகர்முகப் பூட்கை
உளைந்த மால் வரை உரும்
    இடி பட ஒடிந்தனெ்ன.
76

உரை
   
 
3048.சூலம் அற்றன; அற்றன
    சுடர் மழுத் தொகை; வாள்
மூலம் அற்றன; அற்றன
    முரண் தண்டு; பிண்டி
பாலம் அற்றன; அற்றன
    பகழி, வெம் பகுவாய்
வேலும் அற்றன; அற்றன
    வில்லொடு பல்லம்.
77

உரை
   
 
3049.தொடி துணிந்தன தோெளாடு;
    தோமரம் துணிந்த;
அடி துணிந்தன கட களிறு;
    அச்சொடு நெடுந் தேர்,
கொடி துணிந்தன; குரகதம்
    துணிந்தன; குல மா
முடி துணிந்தன; முளையொடு
    துணிந்தன முசலம்.
78

உரை
   
 
3050.கருவி மாவொடு கார் மதக்
    கைம்மலைக் கணத்தூடு
உருவி மாதிரத்து ஓடின
    சுடு சரம்; உதிரம்
அருவி மாலையில் பிறங்கினது
    அவனியில்; அரக்கர்
திரு இல் மார்பகம்
    திறந்தன துறந்தன சிரங்கள்.
79

உரை
   
 
3051.ஒன்று பத்து நூறாயிரம் கோடி
    என்று உணராத்
துன்று பத்திய, இராகவன்
    சுடுசரம் துரப்பச்
சென்று பத்திரத் தலை என
    மலை திரண்டு என்னக்
கொன்று பத்தியில் குவித்தன
    பிணப் பெருங்குன்றம்.
80

உரை
   
 
3052.காடு கொண்ட கார் உலவைகள்
    கதழ் எரி கதுவச்
சூடு கொண்டன எனத்
    தொடர் குருதி மீத் தோன்ற,
ஆடுகின்றன, அறுகுறை;
    அயில் அம்பு விண் மேல்
ஓடுகின்றன, உயிரையும்
    தொடர்வன ஒத்த.
81

உரை
   
 
3053.கைகள் வாெளாடு களம் படக்
    கழுதது அறக் கவச
மெய்கள் போழ்படத் தாள் விழ
    மிக நெடு நிருதர்
செய்ய மாத் தலை சிந்திடத்
    திசை உறச் சென்ற
தையலார் நெடு விழி எனக்
    கொடியன சரங்கள்.
82

உரை
   
 
3054.மாரி ஆக்கிய வடிக் கணை,
    வரை புரை நிருதர்
பேர் யாக்கையின் பெருங்கரை
    வயின் தொறும் பிறங்க,
ஏரி ஆக்கின; ஆறுகள்
    இயற்றின; நிறையச்
சோரி ஆக்கின; போக்கின
    வனம் எனும் தொன்மை.
83

உரை
   
 
3055.அலை மிதந்தன
    குருதியின் பெருங்கடல், அரக்கர்
தலை மிதந்தன;
    நெடுந்தடி மிதந்தன; தடக்கை
மலை மிதந்தன;
    வாம் பரி மிதந்தன; வயப் போர்ச்
சிலை மிதந்தன;
    மிதந்தன, கொடி நெடுந்தேர்கள்.
84

உரை
   
 
3056.ஆய காலையின் அனல் விழித்து,
    ஆர்த்து இகல் அரக்கர்
தீய வார் கணை முதலிய
    தறெு சினப் படைகள்,
மேய மால் வரை ஒன்றினை
    வளைத்தன, மேகம்
தூய தாரைகள் சொரிவனவாம்
    எனச் சொரிந்தார்.
85

உரை
   
 
3057.சொரிந்த பல் படை துணி படத்
    துணி படச் சரத்தால்
அரிந்து, போந்தன சிந்திடத்
    திசைதிசை அகற்றி,
நெரிந்து பார்மகள் நெளிவுற,
    வனம் முற்றும் நிறைய,
விரிந்த செம் மயிர்க் கருந்தலை
    மலை என வீழ்த்தான்.
86

உரை
   
 
3058.கவந்த பந்தங்கள் களித்தன,
    குளித்த கைம் மலைகள்
சிவந்து பாய்ந்த வெம்
    குருதியில்; திருகிய சினத்தால்
நிவந்த வெம் தொழில்
    நிருதர்தம் நெடு நிணம் தவெிட்டி,
உவந்த, வன் கழுது;
    உயிர் சுமந்து உளுக்கியது உம்பர்.
87

உரை
   
 
3059.மருள் தரும் களி வஞ்சனை
    வளை எயிற்று அரக்கர்,
கருடன் அஞ்சுறு கண்மணி
    காகமும் கவர்ந்த;
இருள் தரும் புரத்து இழுதையர்
    பழுது உரைக்கு எளிதோ,
அருள் தரும் திறத்து அறன் அன்றி,
    வலியது உண்டாமோ?
88

உரை
   
 
3060.பல்லாயிரம் இருள் கீறிய
    பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா, வெயில்
    அயில் ஆம் என விழியாக்
கல் ஆர் மழை, கண மா முகில்
    கடைநாள், விழுவன போல்
எல்லாம் ஒரு தொடையா
    உடன் எய்தார்; வினை செய்தார்.
89

உரை
   
 
3061.எறிந்தார் என, எய்தார் என,
    நினைந்தார் என, எறிய
அறிந்தார் என அறியாவகை
    அயில் வாளியின் அறுத்தான்;
செறிந்தாரையும், பிறிந்தாரையும்,
    செறுத்தாரையும், சினத்தால்
மறிந்தாரையும், வலித்தாரையும்,
    மடித்தான் சிலை பிடித்தான்.
90

உரை
   
 
3062.வானத்தன, கடலின் புற
    வலயத்தன, மதி சூழ்
மீனத்தன, மிளிர் குண்டல
    மிதுனத்தன, மிடல் வெம்
கானத்தன, மலையத்தன,
    திசை சுற்றிய கரியின்
தானத்தன, காகுத்தன
    சரம் உந்திய சிரமே
91

உரை
   
 
3063.மண் மேலன, மலை மேலன,
    மழை மேலன, மதி தோய்
விண் மேலன, நெடு வேலையின்
    மேல் கீழன, மிடலோர்
புண் மேலன, குருதிப் பொரு
    திரை யாறுகள் பொங்கத்
திண் மேருவை நகும் மார்பினை
    உருவித் திரி சரமே.
92

உரை
   
 
3064.பொலம் தாரினர் அனலின் சிகை
    பொதி கண்ணினர் எவரும்,
வலம் தாங்கிய வடி வெம் படை
    விடுவார், சர மழையால்
உலந்தார்; உடல் கடலோடு உற
    உலவா உடல் உற்றார்;
அலந்தார் நிசிசரர் ஆம் என
    இமையோரொடும் ஆர்த்தார்.
93

உரை
   
 
3065.ஈரல் செறி கமலத்தன,
    இரதத் திரள் புளினம்,
வீரக் கரி முதலைக் குலம்
    மிதக்கின்றன, உதிக்கும்
பாரக் குடர் மிடை பாசடை
    படர்கின்றன, பல வால்
மூரித் திரை உதிரக் கடல்
    முழுகிக் கழுது எழுமே.
94

உரை
   
 
3066.அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர்,
    அழிந்தார் சிலர், கழிந்தார்,
உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர்,
    உருண்டார் சிலர், புரண்டார்
குழைத்து ஆழ் திரைக் குருதிக் கடல்
    குளித்தார் சிலர், கொலைவாய்
மழைத்தாரைகள் படப் பாரிடை
    மடிந்தார் சிலர் உடைந்தார்.
95

உரை
   
 
கரன் படைத்தலைவர் பதினால்வரும் இராமனோடு பொருதல் (3067-3079)

3067.உடைந்தார்களை நகை செய்தனர்,
    உருள் தேரினர், உடன் ஆய்
அடைந்தார், படைத் தலைவீரர்கள்
    பதினால்வரும்; அயில் வாள்
மிடைந்து ஆர் நெடுங்கடல் தானையர்,
    மிடல் வில்லினர், விரி நீர்
கடைந்தார் வெரு உற மீது எழு
    கடு ஆம் எனக் கொடியார்.
96

உரை
   
 
3068.நாகத் தனி ஒரு வில்லியை,
    நளிர் முப்புரர், முன்னாள்,
மாகத்திடை வளைவுற்றனர் என,
    வள்ளலை மதியார்,
ஆகத்து எழு கனல் கண்வழி
    உக, உற்று எதிர் அழன்றார்;
மேகத்தினை நிகர் வில்லியை
    வளைத்தார், செரு விளைத்தார்.
97

உரை
   
 
3069.எய்தார் பலர், எறிந்தார் பலர்,
    மழு ஓச்சினர், எழுவால்
பொய்தார் பலர், புடைத்தார் பலர்,
    கிடைத்தார் பலர், பொருப்பால்
பெய்தார் மழை, பிதிர்த்தார் எரி,
    பிறை வாள் எயிற்று அரக்கர்
வைதார் பலர், தழெித்தார் பலர்,
    மலையாம் என வளைத்தார்.
98

உரை
   
 
3070.தேர் பூண்டன விலங்கு யாவையும்,
    சிலை பூண்டு எழு கொலையால்,
பார் பூண்டன; மத மா கரி
    பலி பூண்டன; பரி மாத்
தார் பூண்டன, உடல் பூண்டில
    தலை; வெம் கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தாலென,
    இரிந்தார் உயிர் உலைந்தார்.
99

உரை
   
 
3071.மால் பொத்தின மறவோர் உடல்
    மழை பொத்தின; வழி செம்
பால் பொத்தின நதியில் கிளர்
    படி பொத்தின; படர் வான்
மேல் பொத்தின குழு விண்ணவர்
    விழி பொத்தினர்; விரை வெம்
கால் பொத்தினர் நமன் தூதுவர்
    கடிது உற்று உயிர் கவர்வார்.
100

உரை
   
 
3072.பேய் ஏறின செரு வேட்டு எழு
    பித்து ஏறினர், பில வாய்
நாய் ஏறின; தலை மேல் நெடு
    நரி ஏறின; எரி கால்
வாய் ஏறின வடி வாளியின்
    வான் ஏறினர்; வந்தார்
தீ ஏறு இகல் அரியேறு என,
    முகிலேறு எனச் செறிந்தார
101

உரை
   
 
3073.தலை சிந்தின, விழி சிந்தின,
    தழல் சிந்தின, தரை மேல்,
மலை சிந்தினபடி சிந்தின
    வரு சிந்துரம்; மழை போல்
சிலை சிந்தின கணை சிந்தின;
    திசை சிந்தின. திசையூடு
உலை சிந்தின பொறி சிந்தின
    உயிர் சிந்தின உடலம்.
102

உரை
   
 
3074.படைப் பெருந்தலைவரும்
    படைத்த தேர்களும்
உடைத் தடம் படைகளும்
    ஒழிய, உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்த்தவர்,
    வீரன் வாளியால்
முடைத் தடங் குருதியின்
    கடலின் மூழ்கினார்.
103

உரை
   
 
கரன் படைத்தலைவர் இராமனை வளைதல்

3075.சுற்று உற நோக்கினர் தொடர்ந்த சேனையில்
அற்றில தலை எனும் ஆக்கை கண்டிலர்;
தறெ்றினர் எயிறுகள் திருகினார் சினம்
முற்றினர் இராமனை முடுகு தேரினார்.
104

உரை
   
 
படைத்தலைவர் தேர் பதினான்கும் அழிதல்

3076.ஏழிரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடைச்
சூழ வன் கணைகளால் துணிய நூறினான்;
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே.
105

உரை
   
 
படைத்தலைவர் தரையினின்று விற்போர் புரிதல்

3077.அழிந்தன தேர், அவர்,
    அவனி கீண்டு உக
இழிந்தனர், வரி சிலை
    எடுத்த கையினர்,
ஒழிந்திலர், சரங்களை
    உருமின் ஏறு எனப்
பொழிந்தனர் பொழி கனல்
    பொடிக்கும் கண்ணினார்.
106

உரை
   
 
படைத்தலைவர் விற்களை இராமன் துண்டித்தல்

3078.நூறிய சரம் எலாம்
    நுறுங்க வாளியால்
ஈறு செய்து, அவர் சிலை
    ஏழொடு ஏழையும்,
ஆறினொடு ஆறும் ஓர்
    இரண்டும் அம்பினால்
கூறுசெய்து, அமர்த் தொழில்
    கொதிப்பை நீக்கினான்.
107

உரை
   
 
படைத்தலைவர் மலைகொண்டு பொருதல்

3079.வில் இழந்து, அனைவரும்
    வெகுளி மீக்கொளக்
கல் உயர் நெடு வரை
    கடிதின் ஏந்தினார்,
ஒல்லையின் உருத்து, உயர்
    விசும்பின் ஓங்கி நின்று,
எல் உயர் பொறி உக,
    எறிதல் மேயினார்.
108

உரை
   
 
படைத்தலைவர் பதினால்வரும் இறத்தல்

3080.கலைகளின் பெருங்கடல்
    கடந்த கல்வியான்,
இலை கொள் வெம் பகழி
    ஏழிரண்டு வாங்கினான்,
கொலை கொள் வெம் சிலையொடு
    புருவம் கோட்டினான்,
மலைகளும் தலைகளும்
    விழுந்த, மண்ணினே.
109

உரை
   
 
திரிசிரன்படை இராமனோடு பொருதல் (3081-3083)

3081.படைத் தலைத் தலைவர்கள்
    படலும், பல் படை
புடைத்து, அடர்ந்து, எதிர் அழல்
    புரையும் கண்ணினார்,
கிடைத்தனர், அரக்கர்கள்,
    கீழும் மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை,
    அமரர் அஞ்சினார்.
110

உரை
   
 
3082.முழங்கின பெரும் பணை,
    மூரி மால் கரி;
முழங்கின வரி சிலை
    முடுகும் நாண் ஒலி;
முழங்கின சங்கொடு
    புரவி; மொய்த்து உற
முழங்கின அரக்கர்தம்
    முகிலின் ஆர்ப்பு அரோ.
111

உரை
   
 
3083.‘வெம் படை நிருதர் வீச,
    விண்ணிடை மிடைந்த, வீரன்
அம்பு இடை அறுக்கச் சிந்தி
    அற்றன படும், என்று அஞ்சி
உம்பரும் இரியல் போனார்;
    உலகு எலாம் உலைந்து சாய்ந்த;
கம்பம் இல் திசையில் நின்ற
    களிறும் கண் இமைத்த அன்றே.
112

உரை
   
 
திரிசிரா வருதல்

3084.அத்தலைத் தானையின் அளவு இல் ஆற்றலன்
முத்தலைக் குரிசில் பொன் முடியன் முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான்
வைத் தலைப் பகழியால் மழைசெய் வில்லினான்.
113

உரை
   
 
அரக்கர் படையிடை இராமன் தோற்றம்

3085.அன்னவன் நடு உற ஊழி ஆழி ஈது
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள்
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன்
துன் இருள் இடையது ஓர் விளக்கில் தோன்றினான்.
114

உரை
   
 
இராமன் திரிசிரன் படையை எதிர்த்துநிற்றல்

3086.ஓங்கிய வாளினன் உருமின் ஆர்ப்பினன்
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன்
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக நேர்
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால்.
115

உரை
   
 
இராமன் சரத்தால் அரக்கர்படை அழிதல் (3087-3090)

3087.தாள் இடை அற்றன; தலையும் அற்றன;
தோள் இடை அற்றன; தொடையும் அற்றன;
வாள் இடை அற்றன; மழுவும் அற்றன;
கோள் இடை அற்றன; குடையும் அற்றன.
116

உரை
   
 
3088.கொடியொடு கொடிஞ்சு அறப்
    புரவிக் கூட்டு அறப்
படியொடு படிந்தன
    பருதித் தேர்ப்பணை;
நெடிய வன் கட கரி
    புரண்ட, நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ்
    சிகரம் என்னவே.
117

உரை
   
 
3089.அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்
கொற்ற வெம் சிலைச் சரம் கோத்து வாங்குவார்
இற்றவர்; இறாதவர் எழுந்து விண்ணினைப்
பற்றின மழை எனப் படை வழங்குவார்.
118

உரை
   
 
3090.கேடகத் தடக்கைய கிரியின் தோற்றத்த
ஆடகக் கவசத்த கவந்தம் ஆடுவ
பாடகத்து அரம்பையர் மருளப் பல் வித
நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே.
119

உரை
   
 
குருதியாறு பெருகுதல்

3091.கவரி வெண் குடை எனும்
    நுரைய, கைம்மலைச்
சுவரின, கவந்தம் ஆழ்
    சுழிய, தண் துறைப்
பவர் இனப் படு மணி
    குவிக்கும் பண்ணைய,
உவரியைப் புதுக்கின
    உதிர ஆறு அரோ.
120

உரை
   
 
போர்க்களக் காட்சி (3092-3097)

3092.சண்ட வெம் கடுங்கணை
    தடியத் தாம் சில
திண் திறல் வளை எயிற்று
    அரக்கர், தேவர் ஆய்,
வண்டு உழல் புரிகுழல்
    மடந்தை மாரொடும்
கண்டனர் தம் உடல்
    கவந்த நாடகம்.
121

உரை
   
 
3093.ஆய் வளை மகளிரொடு
    அமரர் ஈட்டத்தர்,
தூய வெம் கடுங்கணை
    துணித்த தங்கள் தோள்,
பேய் ஒருதலை கொளப்
    பிணங்கி வாய் விடா
நாய் ஒரு தலைகொள
    நகை உற்றார் சிலர்.
122

உரை
   
 
3094.தரெி கணை மூழ்கலின்
    திறந்த மார்பினர்
இருவினை கடந்துபோய்
    உம்பர் எய்தினார்,
‘நிருதர்தம் பெரும் படை
    நெடிது நின்றவன்
ஒருவன் ‘என்று உள்ளத்தின்
    உலைவுற்றார் சிலர
123

உரை
   
 
3095.கைக் கரி அன்னவன்
    பகழி, கண்டகர்
மெய்க் குலம் வேரொடுந்
    துணித்து வீழ்த்தின;
மைக் கரு மனத்து ஒரு
    வஞ்சன் மாண்பு இலன்
பொய்க் கரி கூறிய
    கொடுஞ்சொல் போலவே.
124

உரை
   
 
3096.அம் சிறை அறுபதம்
    அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன்மயம்
    ஆக்கும் தன்மைபோல்,
வஞ்சகத்து அரக்கரை
    வளைத்து, வள்ளல்தான்,
செஞ்சரத் தூய்மையால்
    தேவர் ஆக்கினான்.
125

உரை
   
 
3097.வலம் கொள் போர் மானிடன்,
    வலிந்து கொன்றமை,
அலங்கல் வேல் இராவணற்கு
    அறிவிப்பாம் எனச்
சலம் கொள் போர் அரக்கர்தம்
    உருக்கள் தாங்கின
இலங்கையின் உற்ற அக்
    குருதியாறு அரோ.
126

உரை
   
 
திரிசிரா இராமனொடு பொருதல் (3098-3099)

3098.சூழ்ந்த தார் நெடும்
    படை பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின்,
    புரளப் பொங்கினான்,
தாழ்ந்திலன், முத்தலைத்
    தலைவன், சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து
    ஓட்டி ஆர்க்கின்றான்.
127

உரை
   
 
3099.ஊன்றிய தேரினன்,
    உருமின் வெம் கணை,
வான் தொடர் மழை என,
    வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத்
    தருமம் அன்னவன்
தோன்றல்தன் திரு உரு
    மறையத் தூவினான்.
128

உரை
   
 
திரிசரன் தேரும் பாகனும் அழிதல்

3100.தூவிய சரம் எலாம்
    துணிய, வெம் கணை
ஏவினன் இராமனும்,
    ஏவி, ஏழிரு
பூ இயல் வாளியால்
    பொலம் கொள் தேர் அழித்து,
ஆவி வெம் பாகனை
    அழித்து மாற்றினான்.
129

உரை
   
 
திரிசிரன் தலைகளுள் இரண்டு அறுபடல்

3101.அன்றியும், அக்கணத்து
    அமரர் ஆர்த்து எழப்
பொன் தரெி வடிம்பு உடைப்
    பொரு இல் வாளியால்,
வன் தொழில் தீயவன்
    மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து, இரண்டையும்
    உருட்டினான் அரோ.
130

உரை
   
 
்திரிசிரன் ஒருதலையொடு பொருதல்

3102.தேர் அழிந்து அவ் வழித் திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்
வார் அழிந்து இமிழ் சிலை வளைய நாட்டுழிக்
கார் அழிந்தால் எனக் கணை வழங்கினான்.
131

உரை
   
 
திரிசிரன் வில் துண்டமாதல்

3103.ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர மீமிசைக்
காற்று இடை அழித்தனெக் கார்முகத்தையும்
மாற்றரும் பகழியால் அறுத்து மாற்றினான்.
132

உரை
   
 
வில் இழந்த நிலையினும் திரிசரன் போர்புரிதல்

3104.வில் இழந்தனன் என்னினும்,
    விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன்; இழந்திலன்
    வெம் கதம்; இடிக்கும்
சொல் இழந்திலன்; தோள் வலி
    இழந்திலன்; சொரியும்
கல் இழந்திலன்; இழந்திலன்
    கறங்கு எனத் திரிதல்.
133

உரை
   
 
திரிசிரன் தாளும் தோளும் அறுதல்

3105.ஆள் இரண்டு நூறு உள என,
    அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெம்
    செரு முயல்வானைத்
தாள் இரண்டையும் இரண்டு வெம்
    கணைகளால் தடிந்து,
தோள் இரண்டையும் இரண்டு வெம்
    கணைகளால் துணித்தான்.
134

உரை
   
 
திரிசிரன் ஒருதலையும் இழந்து இறந்துபடல்

3106.அற்ற தாெளாடு தோளினன்,
    அயில் எயிறு இலங்கப்
பொற்றை மா முழைப்
    புலால் உடை வாயினின் புகுந்து,
பற்ற ஆதரிப்பான்தனை
    நோக்கினன், பரியான்,
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர்
    தலையையும் குறைத்தான்.
135

உரை
   
 
திரிசிரன்படை சிதறியோடுதல் (3107-3111)

3107.திரிசிரா எனும் சிகரம்
    மண் சேர்தலும், சிந்தி,
நிருதர் ஓடினர், தூடணன்
    விலக்கவும் நில்லார்,
பரிதி வாளினர், கேடகத்
    தடக் கையர், பரந்த
குருதி நீரிடை, வார் கழல்
    கொழுங் குடர் தொடக்க.
136

உரை
   
 
3108.கணத்தின் மேல் நின்ற வானவர்
    கை புடைத் தார்ப்பப்
பணத்தின் மேல் நிலம் குழி உறக்
    கால்கொடு பதைப்பார்,
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர்
    சிலர்; சிலர், நிவந்த
பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர்
    உயிர்கொடு பிழைப்பார்.
137

உரை
   
 
3109.வேய்ந்த வாெளாடு வேல் இடை
    மிடைதலின் ஓட்டம்
ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர்
    உதிரநீர் ஆற்றில்
பாய்ந்து, கால் பறிந்து ஒழுகினர்
    சிலர்; சிலர் பயத்தால்
நீந்தினார், நெடுங் குருதிஅம்
    கடல் புக்கு நிலையார்.
138

உரை
   
 
3110.கச்சும் வாளும் தம்
    கால் தொடர்ந்து ஈர்வன காணார்,
அச்சம் என்பது ஒன்று
    உருவுகொண்டால் என, அழிவார்;
உச்ச வீரன் கைச் சுடுசரம்
    நிருதர் நெஞ்சு உருவத்
தச்சு நின்றன கண்டனர்,
    அவ் வழித் தவிர்ந்தார்.
139

உரை
   
 
3111.மண்டி ஓடினர் சிலர்,
    நெடுங் கட கரி வயிற்றுப்
புண் திறந்த மா முழையிடை
    வாெளாடும் புகுவார்,
தொண்டை நீங்கிய கவந்தத்தைத்
    “துணைவ! நீ எம்மைக்
‘கண்டிலேன் ‘எனப் புகல்“ எனக்
    கை தலைக் கொள்வார்.
140

உரை
   
 
அஞ்சி ஓடிய படையினரை நோக்கித் தூடணன் கூறுதல்
(3112-3118)

3112.அனையர் ஆகிய அரக்கரை
    ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை
    ‘வெருவன்மின் ‘என்னா,
நினையும் ‘யான் உமக்கு உரைப்பதும்
    உண்டு ‘என்று நின்றான்,
துனையும் வாம் பரித் தேரினன்
    தூடணன் சொன்னான்.
141

உரை
   
 
3113.பச்சை ஆம் எனப் பயம்
    மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை
    மகளிரும் கூடார்;
நிச்சயம் எனும் கவசம் தான்
    நிலைநிற்பதன்றி,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு
    அருந் துணை ஆமோ?
142

உரை
   
 
3114.பூ அராவு வேல் புரந்தரனோடுதான்,
    பொன்றா
மூவரோடுதான், முன்னின்று
    முட்டிய முனையில்
ஏவர் ஓடினார் இராக்கதர்?
    நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்று அறிந்துளிரோ?
    மனம் திகைத்தீர்.
143

உரை
   
 
3115.இங்கு ஒர் மானிடற்கு
    இத்தனை வீரர்கள் இடைந்தீர்,
உம் கை வாெளாடு புகழ் இழந்து
    ஊர் புகல் உற்றீர்,
கொங்கை மார்பிடைக் குளிப்புறக்
    களிப்பு உறு கொழுங்கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ?
    நலம் நுகர்வீர்.
144

உரை
   
 
3116.செம்பு காட்டிய கண் இணை
    பால் எனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும்,
    வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ? தட
    மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ? குல
    மங்கையர்க்கு அம்மா!
145

உரை
   
 
3117.ஏக்கம் இங்கு இதன் மேலும்
    உண்டே? இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து, ஆண்மை
    அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்கரும் புயத்து உம் குலத்
    தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி, உம் முதுகொடும்
    போம் பழி முயன்றீர்.
146

உரை
   
 
3118.ஆர் அ வாழ்க்கையில் வணிகராய்
    அமைதிரோ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து
    உழுதிரோ? வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தவெ்வரைச்
    செருவிடைப் பறித்த
வீர வாள் கையீர்! எங்ஙனம்
    வாழ்திரோ? விளம்பீர்.
147

உரை
   
 
தூடணனும் இராமனும் போர்புரிதல் (3119-3131)

3119.என்று, தானும், தன்
    எறி கடற் சேனையும், ‘இறை, நீர்
நின்று காண்டிர் என்
    நெடுஞ்சிலை வலி ‘என நேராச்
சென்று தாக்கினன்;
    தேவரும் மருள்கொண்டு திகைத்தார்;
‘நன்று காத்தி ‘என்று,
    இராமனும் எதிர்செல நடந்தான்.
148

உரை
   
 
தூடணன் படை அழிதல் (3120-3125)

3120.ஊடு அறுப்புண்ட மொய்படை;
    கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம்;
    கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட கால் இயல் தேர்;
    கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக்
    கழுத்து அறுப்புண்ட துரகம்.
149

உரை
   
 
3121.துருவி ஓடின உயிர்நிலை சுடுசரம்; துரந்த
கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல
அருவி ஓடின என அழி குருதியாறு ஒழுக
உருவி ஓடின கேடகத் தட்டொடும் உடலம்.
150

உரை
   
 
3122.ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு,
    அரக்கரது ஆவி
தோய்ந்த; தோய்வு இலாப்
    பிறைமுகச் சரம் சிரம் துமித்த;
காய்ந்த வெம் சரம் நிருதர்தம்
    கவச மார்பு உருவப்
பாய்ந்த; வஞ்சகர் இதயமும்
    பிளந்தன, பல்லம்.
151

உரை
   
 
3123.தூடணன் விடு சுடுசரம்
    யாவையும் துணியா,
மாடு நின்றவர் வழங்கிய
    படைகளும் மாற்றா,
ஆடல் கொண்டனன், அளப்பரும்
    பெருவலி அரக்கர்
கூடிநின்ற அக் குரை கடல்
    வறள்படக் குறைத்தான்.
152

உரை
   
 
3124.ஆர்த்து எழுந்தனர் வானவர்;
    அருவரை மரத்தோடு
ஈர்த்து எழுந்தன குருதியின்
    பெரு நதி; இராமன்
தூர்த்த செஞ்சரம் திசைதொறும்
    திசைதொறும் தொடர்ந்து,
போர்த்த வெஞ்சினத்து அரக்கரைப்
    புரட்டின, புவியில்.
153

உரை
   
 
3125.தோன்றும் மால்வரைத் தொகை எனத்
    துவன்றிய நிணச்சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையைப்
    புகல்வது என்? அமர்வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர்,
    ஒல்லையில் ஒழிந்தார்;
கான்ற இன்னுயிர் காலனும்
    கவர்ந்து, மெய் மறந்தான்.
154

உரை
   
 
தூடணன் கொதித்தழெுதல்

3126.களிறு, தேர், பரி, கடுத்தவர்
    முடித்தலை, கவந்தம்,
ஒளிறு பல் படை, தம் குலத்து
    அரக்கர்தம் உடலம்,
வெளிறு சேர் நிணம், பிறங்கிய
    அடுக்கலின் மீதாக்
குளிறு தேர் கடிது ஓட்டினன்,
    தூடணன், கொதித்தான்.
155

உரை
   
 
தூடணன் தேரின் செலவு

3127.அறம் கொளாதவர் ஆக்கைகள்
    அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன, கணிப்பில;
    பெருங்கடு விசையால்
கறங்கு போன்று உளது ஆயினும்,
    பிணப் பெருங்காட்டில்
இறங்கும், ஏறும்; அத்தேர் பட்டது
    யாது என இசைப்பாம
156

உரை
   
 
தூடணன் இராமனை எதிர்தல்

3128.அரிதின் எய்தினன் ஐயைந்து
    கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித்
    தேரினன், மேகத்து
இருளின் நீங்கிய இந்துவின்
    பொலிகின்ற இராமன்
தரெுளும் வார் கணைக் கூற்று எதிர்,
    ஆவி சென்றென்ன.
157

உரை
   
 
தூடணன் அம்பு இராமன் வீரபட்டத்தில்
தாக்குதல் (3129-3130)

3129.சென்ற தேரையும், சிலை உடை
    மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும்
    நேருற நோக்கி
‘நன்று நன்று நின் நிலை ‘என
    அருள் இறை நயந்தான்;
என்ற காலத்து, அவ் வெய்யவன்
    பகழி மூன்று எய்தான்.
158

உரை
   
 
3130.தூர வட்ட எண் திசைகளைத்
    தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று,
    பார் புரக்கப்
பேர விட்டவன் நுதல் அணி
    ஓடையில் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன,
    விண்ணவர் வெருவ.
159

உரை
   
 
தூடணன் தேரும் வில்லும் கவசமும் அழிதல்

3131.‘எய்த காலமும் வலியும் நன்று ‘
    என நினைத்து, இராமன்,
செய்த சேயொளி முறுவலன்,
    கடுங்கணை தரெிந்தான்;
நொய்தில் அங்கு அவன்
    நொறில் பரித் தேர் பட நூறிக்
கையில் வெம் சிலை அறுத்து,
    ஒளிர் கவசமும் கடிந்தான்.
160

உரை
   
 
தூடணன் தலையறுபட்டு மாய்தல்

3132.தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள்
    திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்தொலி கார்க்கடல்
    முழக்கு என ஓங்கக்
‘கா அடா! இது, வல்லையேல் நீ ‘
    எனக் கணை ஒன்று
ஏவினான்; அவன், எயிறு உடை
    நெடுந்தலை இழந்தான்.
161

உரை
   
 
கரன் இராமனொடு பொருதல் (3133-3135)

3133.தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய்
அம்பு படையைத் துணிபடுத்ததும் அறிந்தான்;
வெம்பு படை விற்கை விசயக் கரன் வெகுண்டான்;
கொம்புதலை கட்டிய கொலைக்கரி கடுப்பான்.
162

உரை
   
 
3134.அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும்
சிந்துரம் வயப் புரவி தேர்திசை பரப்பி
இந்துவை வளைக்கும் எழிலிக்குலம் எனத் தான்
வந்து வரி வில் கை மதயானையை வளைத்தான்.
163

உரை
   
 
3135.அடங்கல் இல் கொடுந்தொழில்
    அரக்கர், அவ் அனந்தன்
படம் கிழிதரப் படிதனில்
    பலவிதப் போர்,
கடம் கலுழ் தடங்களிறு
    தேர் பரி கடாவித்
தொடங்கினர், நெடுந்தகையும்
    வெம் கணை துரந்தான்.
164

உரை
   
 
இராமன் கரன்படையைக் கொன்றொழித்தல் (3136-3139)

3136.துடித்தன கடக் கரி,
    துடித்தன பரித் தேர்,
துடித்தன முடித் தலை,
    துடித்தன தொடித் தோள்,
துடித்தன மணிக் குடர்,
    துடித்தன தசைத் தோல்
துடித்தன கழல் துணை,
    துடித்தன இடத்தோள்.
165

உரை
   
 
3137.வாளின் வனம், வேலின் வனம்,
    வார் சிலை வனம், திண்
தோளின் வனம் என்று இவை
    துவன்றி, நிருதப் பேர்
ஆளின் வனம் நின்றதனை,
    அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினில்
    குறை படுத்தான்.
166

உரை
   
 
3138.தான் உருவு கொண்ட
    தருமம் தரெி சரம் தான்,
மீன் உருவும், மேருவை
    விலங்கு உருவும், மேலாம்
வான் உருவும், மண் உருவும்,
    வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது
    உணர்த்தவும் உரித்தோ.
167

உரை
   
 
3139.அன்று இடை வளைந்தவர் குலங்கெளாடு அடங்கச்
சென்று உலைவுறும்படி தரெிந்து கணை சிந்தா
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்
கொன்றனர் நுகர்ந்த பொருளில் கடிது கொன்றான்.
168

உரை
   
 
கரன் தமியனாய்ச் சினந்து நிற்றல்

3140.கடுங் கரன் எனப்
    பெயர் படைத்த கழல் வீரன்,
அடங்கலும் அரக்கர்
    அழிவுற்றிட அழன்றான்,
ஒடுங்கல் இல் நிணக் குருதி
    ஓதம் அதின் உள்ளான்,
நெடுங் கடலில் மந்தரம் எனத்
    தமியன் நின்றான
169

உரை
   
 
கரன் தேரூர்ந்து போர்க்கு வருதல்

3141.செம் கண் எரி சிந்த,
    வரி வில் பகழி சிந்தப்
பொங்கு குருதிப் புணரியுள்
    புகையும் நெஞ்சன்,
கங்கமொடு காகம் மிடையக்
    கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆய் அது ஒரு
    தேரின்மிசை வந்தான்.
170

உரை
   
 
இராமன் கரனை எதிர்தல்

3142.செறுத்து இறுதியில்
    புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன்
    வந்து அணுகும் முந்தைக்
கறுத்த மணிகண்டர்
    கடவுட் சிலை கரத்தால்
இறுத்தவனும், வெம் கணை
    தரெிந்தனன் எதிர்ந்தான்.
171

உரை
   
 
கரனும் இராமனும் பொருதல் (3143-3144)

3143.தீ உருவ, கால் விசைய,
    செவ்வியன, வெவ்வாய்
ஆயிரம் வடிக்கணை
    அரக்கர் பதி எய்தான்;
தீ உருவ, கால் விசைய,
    செவ்வியன, வெவ் வாய்
ஆயிரம் வடிக் கணை
    இராமனும் அறுத்தான்.
172

உரை
   
 
3144.ஊழி எரியில் கொடிய
    பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு
    நாயகனும் எய்தான்;
சூழ் சுடர் வடிக்கணை
    அவற்று எதிர் தொடுத்தே
ஆழி வரி வில் கரனும்
    அன்னவை அறுத்தான்.
173

உரை
   
 
கரன் கணைமாரியால் இராமனை மறைக்க, இராமன் வெகுளுதல்

3145.கள்ள வினை மாய அமர்
    கல்வியின் விளைத்தான்,
வள்ளல் உருவைப் பகழி
    மாரியின் மறைத்தான்;
உள்ளம் உலைவு உற்று
    அமரர் ஓடினர், ஒளித்தார்;
வெள் எயிறு இதழ்ப் பிறழ
    வீரனும் வெகுண்டான்.
174

உரை
   
 
இராமன் வில் ஒடிதல்

3146.முடிப்பென் இன்று ஒரு
    மொய் கணையால் எனத்
தொடுத்து நின்று, உயர்
    தோள் உற வாங்கினான்;
பிடித்த திண் சிலை,
    பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை படக் கடிது
    இற்றதே.
175

உரை
   
 
இராமன் நிலைகண்ட தேவர் துயருறல்

3147.வெற்றி கூறிய வானவர் வீரன் வில்
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார்
மற்று ஒர் வெம் சிலை இன்மை மனக்கொளா
‘அற்றத்தால் எம் வலி ‘என அஞ்சினார்.
176

உரை
   
 
வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல் (3148-3150)

3148.என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனி என்றும் சிந்தியான்
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான்.
177

உரை
   
 
3149.கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தடக் கையின் அத்துணை
பண்டு போர் மழு வாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன்.
178

உரை
   
 
3150.கொடுத்த வில்லை அக் கொண்டல் நிறத்தினான்
எடுத்து வாங்கி வலம் கொண்டு இடக்கையில்
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால் இடக் கண்ணொடு தோளுமே.
179

உரை
   
 
இராமன் கணைகளால் கரன் தேர் அழிதல்

3151.ஏற்றினான் இமையாமுன் எடுத்தது
கூற்றினாரும் குனிக்கக் குனித்து எதிர்
ஆற்றினான் அடல் ஆழி அம் தேர் சரம்
நூற்றினால் நுண் பொடி பட நூறினான்.
180

உரை
   
 
கரன் வானிடை நின்று பொருதல்

3152.எந்திரத் தடம் தேர் இழந்தான் இழிந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான்.
181

உரை
   
 
இராமன் வாளியால் கரன் வலக்கை அறுபடுதல்

3153.தாங்கி நின்ற தயரத ராமனும்
தூங்கு தூணி இடை சுடு செம் சரம்
வாங்குகின்ற வலக்கை ஒர் வாளியால்
வீங்கு தோெளாடு பாரிடை வீழ்த்தினான்.
182

உரை
   
 
கரன் இடக்கையால் போர் செய்தல் (3154-3155)

3154.வலக்கை வீழ்தலும் மற்றைக் கையால் வெற்றி
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான்;
இலக்குவற்கு முன் வந்த இராமனும்
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால்.
183

உரை
   
 
3155.விராவு அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
அரா அழன்றது அனையவன் ஆற்றலால்
மராமரம் கையில் வாங்கி வந்து எய்தினான்
இராமன் அங்கு ஒர் தனிக் கணை ஏவினான்.
184

உரை
   
 
கரன் இறந்துபடுதல்

3156.வரம் அரக்கன் படைத்தலின் மாயையின்
உரம் உடைத் தன்மையால் உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் வலக்
கரம் எனக் கரன் கண்டம் உற்றான் அரோ.
185

உரை
   
 
வானவர் மலர்மழை பொழிய இராமன் விளங்குதல்

3157.ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர்
தூர்த்து அமைந்தனர் வானவர் தூமலர்;
தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே.
186

உரை
   
 
இராமன் சீதையை அணுகுதல்

3158.முனிவர் வந்து முறை முறை மொய்ப்பு உற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்;
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போகத் தான்
தனி இருந்த உடல் அன்ன தையல் பால்.
187

உரை
   
 
இளவலும் சீதையும் இராமனைப் போற்றல்

3159.விண்ணில் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.
188

உரை
   
 
விண்ணவர் போற்ற வீரன் இருந்தமை

3160.மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய் புண் நீர்
நீத்தம் ஓடி நெடுந் திரை நேர் உறக்
கோத்த வேலைக் குரல் என வானவர்
ஏத்த வீரன் இனிது இருந்தான் அரோ.
189

உரை
   
 
சூர்ப்பணகை கரன் உடலைத் தழுவி அழுதல்

3161.இங்கு நின்றது உரைத்தும்; இராவணன்
தங்கை தன்கை வயிறு தகர்த்தனள்
கங்குல் அன்ன கரனைத் தழீஇ நெடும்
பொங்கு வெம் குருதிப் புரண்டாள் அரோ.
190

உரை
   
 
சூர்ப்பணகை போதல்

3162.‘ஆக்கினேன் மனத்து ஆசை; அவ் ஆசை என்
மூக்கினோடு முடிய முடிந்திலேன்;
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் ‘என்று போயினாள்.
191

உரை
   
 
சூர்ப்பணகை இலங்கையை அடைதல்

3163.அலங்கல் வேல் கை
    அரக்கரை ஆசு அறக்
குலங்கள் வேர் அறுப்பான்
    குறித்தாள், உயிர்
கலங்கு சூறை வன் போர்
    நெடுங் கால் என
இலங்கை மா நகர் நொய்தின்
    சென்று எய்தினாள்.
192

உரை