இராம இலக்குவர் அந்திப்பொழுதில் ஒரு மலையிற் சென்று தங்குதலும் இருள் பரவுதலும்

3642.அந்தி வந்து அணுகும் வேலை,
    அவ்வழி, அவரும், நீங்கிச்
சிந்துரச் சென்னித்து ஆண்டு ஓர்
    மைவரைச் சேக்கை கொண்டார்;
இந்திரற்கு அடங்கல் செல்லா
    இராக்கதர் எழுந்தது என்ன,
வெந்துயர்க்கு ஊற்றம் ஆய
    விரி இருள் வீங்கிற்று அன்றே.
1

உரை
   
 
இரவுப் பொழுது வர இராம இலக்குவர் மனம் கவலுதல் (3643-3644)

3643.தேன் உக அருவி சிந்தித்
    தரெுமரல் உறுவ போலக்
கானமும் மலையும் எல்லாம்,
    கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்,
மானமும் சினமும் தாதை
    மரணமும், மைந்தர் சிந்தை,
ஞானமும் துயரும், தம்முள்
    மலைந்து என, நலிந்தது அன்றே.
2

உரை
   
 
3644.மெய் உற உணர்வு செல்லா
    அறிவினை வினையின் நூக்கும்
பொய் உறு பிறவிபோலப்
    போக்க அரும் பொங்கு கங்குல்,
நெய் உறு நெருப்பின் வீங்கி
    நிமிர்தர, உயிர்ப்பு நீளக்
கையறவு உறுகின்றாரால்
    காணல் ஆம் கரையிற்று அன்றே.
3

உரை
   
 
இராமன் கண்துயிலப்பெறாமை

3645.யாம் அது தரெிதல் தேற்றாம்;
    இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ?
    முகம் மதி காண்கிலாதோ?
தேமரு தரெியல் வீரன்
    கண் எனத் தரெிந்த செய்ய
தாமரை, கங்குல் போதும்,
    குவிந்து இலாத் தன்மை என்னோ?
4

உரை
   
 
3646.பெண் இயல் தீபம் அன்ன
    பேர் எழிலாட்டி மாட்டு
நண்ணிய பிரிவு செய்த
    நவையினால், நவை இல் உள்ளத்து
எண்ணியது அறிதல் தேற்றாம்;
    இமைத்தில, இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள்
    தம்பிகண் போன்ற அன்றே.
5

உரை
   
 
வெண்மதி தோன்றுதல்

3647.‘வண்டு உளர் கோதைச் சீதை
    வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் ‘என்று வீரற்கு
    ஆண்டு ஒரு காதல் காட்டத்
தண் தமிழ்த் தனெ்றல் என்னும்
    கோள் அராத் தவழும் சாரல்,
விண் தலம் விளக்கும் செவ்வி
    வெண் மதி விரிந்தது அன்றே.
6

உரை
   
 
நிலவு இராமனை வருத்துதல்

3648.களியுடை அனங்கக் கள்வன்
    கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து, உலகம் எங்கும்
    விளக்கிய நிலவின் வெள்ளம்,
நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு,
    நஞ்சொடு கலந்த நாகத்
துளை ஏயிற்று ஊறல் உற்ற
    தாம் எனச் சுட்டது அன்றே.
7

உரை
   
 
இராமன் சீதையை நினைந்து வருந்துதல் (3649-3665)

3649.இடம்படு மானத் துன்பம்
    இருள்தர எண்ணின் தீர்ந்தான்;
விடம் பரந்து அனையது ஆய
    வெண்நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்து அனைய அல்குல்,
    பால் பரந்து அனைய இன் சொல்,
தடம்பெரும் கண்ணினாள்தன்
    தனிமையை நினையல் உற்றான்.
8

உரை
   
 
3650.மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்;
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால்கரி
ஒடித்த கொம்பு அனையாள் திறத்து உன்னுவான்.
9

உரை
   
 
3651.“‘வாங்கு வில்லன் வரும் வரும் ‘என்று இரு
பாங்கும் நீள்நெறி பார்த்தனேளா? “ எனும்;
வீங்கு வேலை விரி திரை ஆம் என
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான்.
10

உரை
   
 
3652.“என் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் இனைந்த எயிற்றின் விலங்கு அனான்
‘நில் நில் ‘என்று நெருங்கியபோது அவள்
என் நினைந்தனேளா? “ என ஏங்குமால்.
11

உரை
   
 
3653.“நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயின் மதி என மட்குவாள்
‘வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை
அஞ்சினான் கொல்? ‘என்று ஐயுறுமால் “ என்பான்.
12

உரை
   
 
3654.பூண்ட மானமும் போக்க அருங் காதலும்
தூண்ட நின்று இடை தோம் உறும் ஆர் உயிர்
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான்;
“வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்? ” என்பான்.
13

உரை
   
 
3655.வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும்; கடை கால் வரு
சொல்லை நோக்கித் துணுக்கு எனும்; தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான்.
14

உரை
   
 
3656.கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன்
“வேத வேள்வி விதி முறை மேவிய
சீதை என்வயின் தீர்ந்தனேளா? “ எனும்;
போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான்.
15

உரை
   
 
3657.“நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்
என் துணைக் குலமங்கை ஒர் ஏந்து இழை
தன் துயர்க்கும் தகவு இலென் ஆயினேன்;
நன்று நன்று என் வலி! “ என நாணுமால்.
16

உரை
   
 
3658.சாயும்; தம்பி திருத்திய தண் தளிர்
தீயும்; அங்கு அவை தீய்தலும் செவ் இருந்து
ஆயும்; ஆவி புழுங்க அழுங்குமால்;
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான்.
17

உரை
   
 
3659.பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம் கொல்?
தரெிந்தது இல்லை; திருமலர்க் கண் இமை
பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான்
இருந்து கண்டிலன் கங்குலின் ஈறு அரோ.
18

உரை
   
 
3660.“வென்றி வேற்கை இளவலை! மேல் எலாம்
ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல் தான்
இன்று நீள்வதற்கு ஏது என்? “ என்னுமால்.
19

உரை
   
 
3661.நீண்ட மாலை மதியினை “நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய்;
பூண்ட பூணவள் வாள்முகம் போதலால்
ஈண்டு சால விளங்கினை “ என்னுமால்.
20

உரை
   
 
3662.“நீள் நிலாவின் இசைநிறை தன் குலத்து
ஆணி ஆய பழி வர அன்னது
நாணி நாடு கடந்தனனாம் கொலோ
சேண் உலாம் தனித் தேரவன்? “ என்னுமால்.
21

உரை
   
 
3663.“சுட்ட கங்குல் நெடிது ” எனச் சோர்கின்றான்
“முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும்
இட்டனன்கொல் இரும் சிறை? “ என்னுமால்.
22

உரை
   
 
3664.“துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும்; ஆகின் முடியும் இம் மூரி நீர்
நெடிய மாநிலம் “ என்ன நினைக்குமால்.
23

உரை
   
 
3665.“திறத்து இ(ன்)னாதன செய்தவத்தோர் உற
ஒறுத்து ஞாலத்து உயிர்தமை உண்டு உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்
அறத்தினால் இனி ஆவது என்? “ என்னுமால்.
24

உரை
   
 
காமனது கலக்கம் (3666-3667)

3666.தேனின் தயெ்வத் திரு நெடு நாண் சிலைப்
பூ நின்று எய்யும் பொருகணை வீரனும்
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்;
தான் நின்று எய்யகிலான் தடுமாறினான்.
25

உரை
   
 
3667.உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
இழைந்த மேனியும் எண்ணி இரங்கினான்;
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ
பழந் துயர்க்குப் பரிவு உறும் பான்மையால்?
26

உரை
   
 
கங்குல் பொழுது கழிதல்

3668.நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில்
மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே.
27

உரை
   
 
இராமனது ஆற்றாமை (3669-3670)

3669.வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும்
    துயிலை வெறுத்து, அளியும்
கள்ளும் சிலம்பு பூங்கோதை
    கற்பின் கடலில் படிவாற்குப்
புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்;
    புனலும் சிலம்பும்; புனைகோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல்,
    உயிர் உண்டாகும் வகை உண்டோ?
28

உரை
   
 
3670.மயிலும் பெடையும் உடன் திரிய,
    மானும் கலையும் மருவி வரப்
பயிலும் பிடியும் கடகரியும்
    வருவ, திரிவ, பார்க்கின்றான்;
குயிலும், கரும்பும் செழுந் தேனும்,
    குழலும், யாழும், கொழும் பாகும்,
அயிலும் அமுதும் சுவை தீர்த்த
    மொழியைப் பிரிந்தான், அழியானோ?
29

உரை
   
 
கதிரவன் தோன்றுதல்

3671.முடி நாட்டிய கோட்டு உதயத்து
    முற்றம் உற்றான்; முதுகங்குல்
விடிநாள் கண்டும் கிளி மிழற்றும்
    மென்சொல் கேளா வீரற்கு, ஆண்டு,
“அடிநாள் செந்தாமரை ஒதுங்கும்
    அன்னம் இலளால், யான் அடைத்த
கடி நாள் கமலத்து ‘‘ என, அவிழ்த்துக்
    காட்டுவான்போல், கதிர்வெய்யோன்.
30

உரை
   
 
சீதையின் பிரிவுத் துயரால் இராமன் வருந்துதல்

3672.பொழிலை நோக்கும்; பொழில் உறையும்
    புள்ளை நோக்கும்; பூங்கொம்பின்
எழிலை நோக்கும்; இளமயிலின்
    இயலைநோக்கும்; இயல்பு ஆனாள்
குழலை நோக்கிக் கொங்கை இணைக்
    குவட்டை நோக்கி, அக்குவட்டின்
தொழிலை நோக்கித் தன்னுடைய
    தோளை நோக்கி, நாள் கழிப்பான்.
31

உரை
   
 
இராம இலக்குவர் இருவரும் இராவணன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுதல்

3673.அன்ன காலை, இளவீரன்,
    அடியின் வணங்கி, “நெடியோய்! அப்
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல்
    புகழோ? ‘‘ என்னப் புகழோனும்
“சொன்ன அரக்கன் இருக்கும் இடம்
    துருவி அறிதும் தொடர்ந்து “ என்ன,
மின்னு சிலையார் மலைதொடர்ந்த
    வெயில் வெம் கானம் போயினரால்.
32

உரை
   
 
3674.ஆசை சுமந்த நெடும் கரி அன்னார்
பாசிழை துன்று வனம்பல பின்னாக்
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்;
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார்.
33

உரை
   
 
அவ்விருவரும் சோலையை அடைதல்

3675.மண் படி செய்த தவத்தினின் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார்;
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்கப்
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார்.
34

உரை
   
 
கதிரவன் மறைதல்

3676.ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்
நாரியை எங்கணும் நாடினன் நாடிப்
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா
மேருவின் வெங்கதிர் மீள மறைந்தான்.
35

உரை
   
 
எங்கும் இருள் செறிதல்

3677.அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த
தரெுண்ட அறிவு இல்லவர் சிந்தையின் முந்தி
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும்.
36

உரை
   
 
அவ்விருவரும் ஓர் பளிக்கறையில் தங்குதல்

3678.இளிக்கு அறை இன்சொல் இயைந்தன பூவை
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி
ஒளி கறை மண்டிலம் ஒத்து உளது ஆங்கு ஓர்
பளிங்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார்.
37

உரை
   
 
இராமன் பணித்தவாறு இலக்குவன் தண்ணீர்
கொணரச் செல்லுதல்

3679.அவ் இடை எய்திய அண்ணல் இராமன்
வெவ் விடைபோல் இள வீரனை ‘வீர!
இவ் இடை நாடினை நீர் கொணர்க ‘என்றான்;
தவெ் இடை வில்லவனும் தனி சென்றான்.
38

உரை
   
 
அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டு காமுறுதல் (3680-3683)

3680.எங்கணும் நாடினன் நீர் இடை காணான்
சிங்கம் எனத் தமியன் திரிவானை
அங்கு அவ்வனத்துள் அயோமுகி ஆன
வெங்கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.
39

உரை
   
 
3681.நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் தொடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்
‘மன்மதன் ஆம் இவன் ‘என்னும் மனத்தாள்.
40

உரை
   
 
3682.அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள்;
“புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி
விழுங்கு வெனோ? “ என விம்மல் உழன்றாள்.
41

உரை
   
 
3683.“இரந்தனென் எய்தியபோது இசையாது
கரந்தனனேல் நனி கொண்டு கடந்து என்
முரஞ்சினில் மேவி முயங்குவென் “ என்று
விரைந்து எதிர் வந்தனள் தீயினும் வெய்யாள்.
42

உரை
   
 
அயோமுகியின் தோற்றம் (3684-3689)

3684.உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக்குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வலக்கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள்.
43

உரை
   
 
3685.பற்றிய கோள் அரி யாளி பணிக்கண்
தறெ்றிய பாதம் சிலம்பு தரெிந்தாள்;
இற்று உலகு யாவையும் ஈறு உறும் அந்நாள்
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள்.
44

உரை
   
 
3686.ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழையெனப் பொலி மொய் பில வாயாள்;
கூழை புறத்து விரிந்தது ஒர் கொட்பால்
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்.
45

உரை
   
 
3687.தடி தடவப் பல தலை தழுவத் தாள்
நெடிது அடையக் குடர்கெழுமு நிணத்தாள்
அடி தடவப் பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள் உருமு கறிப்பாள்.
46

உரை
   
 
3688.இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள்
அவை குளிரக் கடிது அழலும் எயிற்றாள்
குவை குலையக் கடல் குவிய அலைப்பாள்
நவை இல் புவி திரு நாண நடப்பாள்.
47

உரை
   
 
3689.நீள் அரவம் சரி தாழ்கை நிரைத்தாள்;
ஆள் அரவம் புலி ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு தாழ்குழை இட்டாள்;
48

உரை
   
 
அயோமுகியைக் கண்ட இலக்குவன் அவளது கொடுமை உணர்ந்து நீ யார்? என வினவுதல் (3690-3692)

3690.நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள்;
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்
கன்று இருளில் திரி கோளரி கண்டான்.
49

உரை
   
 
3691.“பண்டையின் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாள் ஒடு தாடகை சீராள்;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒள் தொடி ஆம் இவள் “ என்பது உணர்ந்தான்.
50

உரை
   
 
3692.“பாவியர் ஆம் இவர் பண்பு இலர்; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை “ என்பான்
“மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்!
யாவள் அடீ? உரை செய் கடிது “ என்றான்.
51

உரை
   
 
அயோமுகி தான் வந்த காரணத்தைக் கூறித் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுதல் (3693-3694)

3693.பேசினன் அங்கு அவள் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான்
“ஏசல் இல் அன்பினளாய் இனிது உன்பால்
ஆசையின் வந்த அயோமுகி “ என்றாள்.
52

உரை
   
 
3694.பின்னும் உரைப்பவள் “பேர் எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து என்
இன் உயிரைக் கடிது ஈகுதி “ என்றாள்.
53

உரை
   
 
இலக்குவன் வெகுண்டுரைத்தல்

3695.ஆறிய சிந்தையள் அஃது உரை செய்யச்
சீறிய கோளரி கண்கள் சிவந்தான்
“மாறிலி இ வார்கணை இவ் உரை வாயில்
கூறிடின் நின் உடல் கூறு இடும் “ என்றான்.
54

உரை
   
 
அயோமுகி மீண்டும் இலக்குவனை இரந்து வேண்டுதல் (3696-3697)

3696.மற்று அவன் அவ் உரை செப்ப மனத்தால்
செற்றிலள் கைத்துணை சென்னியின் வைத்தாள்
“கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின் இன்று பிறந்தனென் “ என்றாள்.
55

உரை
   
 
3697.வெங்கதம் இல்லவள் பின்னரும் “மேலோய்!
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்
அங் கையினால் எனை ‘அஞ்சலை ‘என்றால்
கங்கையின் நீர் கொணர்வென் கடிது “ என்றாள்.
56

உரை
   
 
தன் வேண்டுகோளை ஏலாது வெகுண்டுரைத்த இலக்குவனைக் குறித்து அயோமுகி சிந்தித்தல்

3698.சுமித்திரை சேய் அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன் “நின் இரு காதொடு நாசி
துமிப்பதன் முன்பு அகல் “ என்பது சொல்ல
இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள்.
57

உரை
   
 
இலக்குவனைத் தூக்கிச் செல்லக் கருதிய அயோமுகி அயலே சிறிது விலகிச் செல்லுதல்

3699.“எடுத்தனென் ஏகினென் என் முழை தன்னுள்
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை
உடல் படுமால்; உடனே உறும் நன்மை;
திடத்து இதுவே நலன் “ என்று அயல் சென்றாள்.
58

உரை
   
 
அயோமுகி மோகனச் செய்கையால் இலக்குவனை எடுத்துச் செல்லுதல்

3700.மோகனை என்பது முந்தி முயன்றாள்
மாக நெடுங் கிரி போலியை வவ்வா
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள்.
59

உரை
   
 
இலக்குவனை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் செல்லும் அயோமுகியின் தோற்றம்

3701.மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
இந்திரன் ஊர்முகில் என்னலும் ஆனாள்;
வெந் திறல் வேல்கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.
60

உரை
   
 
அயோமுகியின் பிணிப்பில் பொருந்திய இலக்குவனது தோற்றம்

3702.ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கிப்
பூங்கழல் வார்சிலை மீளி பொலிந்தான்;
வீங்கிய வெஞ்சின வீழ்மத வெம்போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான்.
61

உரை
   
 
இலக்குவன் மீண்டு வாராமையை எண்ணி இராமன் பலவாறு சிந்தித்து வருந்துதல் (3703-3717)

3703.இப்படி ஏகினள் அன்னவள்; இப்பால்
“அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
துப்பு உடை மால்வரை தோன்றலன் “ என்னா
வெப்பு உடை மெய் உடை வீரன் விரைந்தான்.
62

உரை
   
 
3704.“வெய்து ஆகிய கான் இடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ? அயல் ஒன்று உளதோ?
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால்;
எய்தாது ஒழியான்; இது என்னை கொலாம்? “
63

உரை
   
 
3705.“‘நீர் கண்டனை இவ்வழி நேடினை போய்ச்
சார் கொண்டு ‘என இத்துணை சார்கிலனால்;
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்பால்
போர் கொண்டனனோ? பொருள் உண்டு இது “ எனா.
64

உரை
   
 
3706.“அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ?
நஞ்சிற் கொடியான் நடலைத் தொழிலால்
துஞ்சுற்றனனோ விதியின் துணிவால்? “
65

உரை
   
 
3707.“வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால்;
தருசொல் கருதேன் ஒரு தையலை யான்
பிரிவுற்றனென் என்பது ஒர் பீழை பெருத்து
எரிவுற்றிட ஆவி இழந்தனனோ? “
66

உரை
   
 
3708.‘உண்டாகிய கார் இருேளாடு ஒருவென்
கண்தான்; அயல் வேறொரு கண் இலெனால்;
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவேன்;
எண்தான் இலென்; எங்ஙனம் நாடுகெனோ? ‘
67

உரை
   
 
3709.“தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்
உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனையோ?
பிள்ளாய்! பெரியாய்! பிழை செய்தனையால்;
கொள்ளாது உலகு உன்னை; இது ஓ கொடிதே! “
68

உரை
   
 
3710.“பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்!
தீரா இடர் தந்தனை; தவெ்வர் தொழும்
வீரா! எனை இங்ஙன் வெறுத்தனையோ?
வாராய் புறம் இத்துணை வைகுதியோ? “
69

உரை
   
 
3711.“என்னைத் தரும் எந்தையை என்னையரைப்
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையாள்
தன்னைப் பிரிவேன் உளென் ஆவதுதான்
உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ? “
70

உரை
   
 
3712.“பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்
தன் தேடி வருந்து தவம் புரிவேன்
நின் தேடி வருந்த நிரப்பினையோ?
என் தேடினை வந்த இளம் களிறே! “
71

உரை
   
 
3713.“இன்றே இறவாது ஒழியேன்; எமரோ
பொன்றாது ஒழியார் புகல்வார் உளரேல்;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ? “
72

உரை
   
 
3714.“மாந்தா முதல் மன்னவர் தம் வழியின்
வேந்து ஆகை துறந்தபின் மெய் உறவோர்
தாம்தாம் ஒழியத் தமியேன் உடனே
போந்தாய்; எனை விட்டனை போயினையோ? “
73

உரை
   
 
3715.என்னா உரையா எழும்; வீழும்; இருந்து
உன்னா உணர்வு ஓய்வு உறும்; ஒன்று அலவால்;
“மின்னாது இடியாது இருள் வாய் விளைவு ஈது
என் ஆம் “ எனும்; என் தனி நாயகனே.
74

உரை
   
 
3716.நாடும் பல சூழல்கள் தோறும் நடந்து;
ஓடும் பெயர் சொல்லி உளைந்து; உயிர்போய்
வாடும் வகைசோரும்; மயங்குறு மால்
ஆடும் களி மா மத யானை அ(ன்)னான்.
75

உரை
   
 
3717.“கமையாெளாடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன் இத்துணை தாழ்வுறுமோ?
சுமையா உலகு ஊடு உழல் தொல் வினையேற்கு
அமையாது கொல் வாழ்வு? அறியேன் “ எனுமால்.
76

உரை
   
 
3718.“அறப்பால் உளதேல் அவன் முன்னவனாய்ப்
பிறப்பான் உறின் வந்து பிறக்க “ எனா
மறப்பால் வடிவாள் கொடு மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய்.
77

உரை
   
 
3719.பேர்ந்தான் நெடு மாயையினில்; பிரியா
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தரெுளா
78

உரை
   
 
3720.“பரல்தரு கானகத்து அரக்கர் பல்கழல்
முரற்று அரு வெஞ்சமம் முயல்கின்றார் எதிர்
உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு
அரற்றிய குரல்; அவள் அரக்கி ஆம் “ எனா.
79

உரை
   
 
3721.அங்கியின் நெடும்படை வாங்கி ஆங்கு அது
செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்
பொங்கு இருள் அப்புறத்து உலகம் புக்கது;
கங்குலும் பகல் எனப் பொலிந்து காட்டிற்றே.
80

உரை
   
 
3722.நெடுவரை பொடிபட நிவந்த மா மரம்
ஒடிவு உற நிலம் மகள் உலைய ஊங்கு எலாம்
‘சடசட ‘எனும் ஒலி தழைப்பத் தாக்குமா
முடுகினன் இராமன் வெம் காலின் மும்மையான்.
81

உரை
   
 
3723.ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழிப் பேர்ச்சியுள்
கருங்கடல் வருவதே அனைய காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை நோக்கிப் பின்னவன்
“வருந்தலை வருந்தலை வள்ளியோய்! ” எனா.
82

உரை
   
 
3724.“வந்தனென் அடியனேன்; வருந்தல் வாழி! நின்
அந்தம் இல் உள்ளம் “ என்று அறியக் கூறுவான்
சந்த மென் தளிர் புரை சரணம்! சார்ந்தனன்;
சிந்தின நயனம் வந்து அனைய செய்கையான்.
83

உரை
   
 
3725.ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்
ஏற்று இளம் கன்றினைப் பிரிவுற்று ஏங்கிநின்று
ஆற்றலது அரற்றுவது அரிதின் எய்திட
பால் துறும் பனிமுலை ஆவின் பான்மையான்.
84

உரை
   
 
3726.தழுவினன் பல முறை; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை;
“வழுவினையாம் என மனம் கொடு ஏங்கினேன்;
எழு என மலை என இயைந்த தோளினாய்! “
85

உரை
   
 
3727.“என்னை அங்கு எய்தியது? இயம்புவாய் ” என
அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும்
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான்;
தன் அலாது ஒருபொருள் தனக்குமேல் இலான்.
86

உரை
   
 
3728.“ஆய்வு உறு பெருங்கடல் அகத்துள் ஆயவன்
பாய் திரை வருதொறும் பரியற் பாலனோ?
தீவினைப் பிறவி வெம் சிறையில் பட்டயாம்
நோய் உறுதுயர் என நுடங்கல் நோன்மையோ? “
87

உரை
   
 
3729.“மூவகை உலகமும் அமரர் மூவரும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின்
ஏவரே கடப்பவர்? எம்பி! நீ உளை
ஆவதே வலி; இனி அரணும் வேண்டுமோ? “
88

உரை
   
 
3730.“பிரிபவர் யாவரும் பிரிக; பேர் இடர்
வருவன யாவையும் வருக; வார்கழல்
செருவலி வீர! நின் தீரும் அல்லது
பருவரல் என் வயின் பயிலல் பாலதோ? “
89

உரை
   
 
3731.“வன் தொழில் வீர! ‘போர் வலி அரக்கியை
வென்று போர் மீண்டனென் ‘என விளம்பினாய்;
புன் தொழில் அனையவள் புகன்ற சீற்றத்தால்
கொன்று இலை போலுமால்? கூறுவாய் “ என்றான்.
90

உரை
   
 
3732.“துளைபடு மூக்கொடு செவி துமித்து உகத்
தளை வயின் நகிலொடு தடிந்து நீக்கிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் “ என
இளையவன் விளம்பி நின்று இருகை கூப்பினான்.
91

உரை
   
 
3733.‘தொல் இருள், தனைக் கொ(ல்)லத்
    தொடர்கின் றாளையும்,
கொல்லலை, நாசியைக்
    கொய்து நீக்கினாய்;
வல்லை நீ; மனுமுதல்
    மரபினோய்! ‘எனப்
புல்லினன்; உவகையின்
    பொருமி விம்முவான்.
92

உரை
   
 
3734.பேர் அருந்துயர் இறை பேர்ந்துேளார் என
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார்
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார்.
93

உரை
   
 
3735.கல் அதர் வெள் இடை கானின் நுண்மணல்
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின்
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்;
மெல் அடி இளையவன் வருட வீரனே.
94

உரை
   
 
3736.மயில் இயல் பிரிந்தபின் மான நோயினால்
அயில்வு இலன் ஒருபொருள்; அவலம் எய்தலால்
துயில்வு இலன் என்பது சொல்லற் பாலதோ?
உயிர் நெடிது உயிர்ப்பு இடை ஊசல் ஆடுவான்.
95

உரை
   
 
சீதையின் பிரிவாற்றாது இராமன் வருந்துதல்

3737.‘மானவள் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ? அன்று எனின் அரக்கர் மாயமோ?
கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே!
96

உரை
   
 
3738.கருங்குழல் சேயரிக் கண்ணி கற்பினோர்
அருங்கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால்
ஒருங்கு உறத் தழுவுவென்; ஊறு காண்கிலேன்;
மருங்குல்போல் ஆனதோ வடிவும்? மெல்லவே.
97

உரை
   
 
3739.‘புண்டரிகப் புது மலரில் தேன் பொதி
தொண்டை அம் சேயொளி துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ?
98

உரை
   
 
3740.மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் நெடியதாய் ஈரும் ஈட்டத்தால்
தண் நறுங் கருங்குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ? கொடிய கங்குலே!
99

உரை
   
 
3741.‘அப்பு உடை அலங்கு மீன் அமரும் ஆர்கலி
உப்பு உடை இந்து என்று உதித்த ஊழித்தீ
வெப்பு உடை விரிகதிர் வெதுப்ப மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே?
100

உரை
   
 
3742.இன்னன இன்னன பன்னி ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
அன்னது கண்டனன் அல்கினான் எனத்
துன்னிய செங்கதிர்ச் செல்வன் தோன்றினான்.
101

உரை