| |
இராம இலக்குவர் அந்திப்பொழுதில் ஒரு மலையிற் சென்று தங்குதலும் இருள் பரவுதலும்
| |
| 3642. | அந்தி வந்து அணுகும் வேலை, |
| சிந்துரச் சென்னித்து ஆண்டு ஓர் |
| இந்திரற்கு அடங்கல் செல்லா |
| விரி இருள் வீங்கிற்று அன்றே. |
|
| |
இரவுப் பொழுது வர இராம இலக்குவர் மனம் கவலுதல் (3643-3644)
| |
| 3643. | தேன் உக அருவி சிந்தித் |
| கண்ணின் நீர் உகுக்கும் கங்குல், |
| மலைந்து என, நலிந்தது அன்றே. |
|
| |
| 3644. | மெய் உற உணர்வு செல்லா |
| அறிவினை வினையின் நூக்கும் |
| போக்க அரும் பொங்கு கங்குல், |
| நெய் உறு நெருப்பின் வீங்கி |
| நிமிர்தர, உயிர்ப்பு நீளக் |
| காணல் ஆம் கரையிற்று அன்றே. |
|
| |
| 3645. | யாம் அது தரெிதல் தேற்றாம்; |
| குவிந்து இலாத் தன்மை என்னோ? |
|
| |
| 3646. | பெண் இயல் தீபம் அன்ன |
| நவையினால், நவை இல் உள்ளத்து |
| எண்ணியது அறிதல் தேற்றாம்; |
| புண்ணியன் கண்ணும் வன் தோள் |
|
| |
| 3647. | வண்டு உளர் கோதைச் சீதை |
| தண் தமிழ்த் தனெ்றல் என்னும் |
| விண் தலம் விளக்கும் செவ்வி |
| வெண் மதி விரிந்தது அன்றே. |
|
| |
| 3648. | களியுடை அனங்கக் கள்வன் |
| வெளிபடுத்து, உலகம் எங்கும் |
| விளக்கிய நிலவின் வெள்ளம், |
| நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, |
|
| |
இராமன் சீதையை நினைந்து வருந்துதல் (3649-3665)
| |
| 3649. | இடம்படு மானத் துன்பம் |
| இருள்தர எண்ணின் தீர்ந்தான்; |
| படம் பரந்து அனைய அல்குல், |
| பால் பரந்து அனைய இன் சொல், |
|
| |
| 3650. | மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்; |
| துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் |
| பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால்கரி |
| ஒடித்த கொம்பு அனையாள் திறத்து உன்னுவான். |
|
| |
| 3651. | வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு |
| பாங்கும் நீள்நெறி பார்த்தனேளா? எனும்; |
| வீங்கு வேலை விரி திரை ஆம் என |
| ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். |
|
| |
| 3652. | என் நினைந்திலள் என்பது சாலுமோ |
| மின் இனைந்த எயிற்றின் விலங்கு அனான் |
| நில் நில் என்று நெருங்கியபோது அவள் |
| என் நினைந்தனேளா? என ஏங்குமால். |
|
| |
| 3653. | நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் |
| வஞ்ச வாயின் மதி என மட்குவாள் |
| வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை |
| அஞ்சினான் கொல்? என்று ஐயுறுமால் என்பான். |
|
| |
| 3654. | பூண்ட மானமும் போக்க அருங் காதலும் |
| தூண்ட நின்று இடை தோம் உறும் ஆர் உயிர் |
| மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான்; |
| வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்? என்பான். |
|
| |
| 3655. | வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோள் |
| கல்லை நோக்கி நகும்; கடை கால் வரு |
| சொல்லை நோக்கித் துணுக்கு எனும்; தொல் மறை |
| எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான். |
|
| |
| 3656. | கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் |
| வேத வேள்வி விதி முறை மேவிய |
| சீதை என்வயின் தீர்ந்தனேளா? எனும்; |
| போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான். |
|
| |
| 3657. | நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் |
| என் துணைக் குலமங்கை ஒர் ஏந்து இழை |
| தன் துயர்க்கும் தகவு இலென் ஆயினேன்; |
| நன்று நன்று என் வலி! என நாணுமால். |
|
| |
| 3658. | சாயும்; தம்பி திருத்திய தண் தளிர் |
| தீயும்; அங்கு அவை தீய்தலும் செவ் இருந்து |
| ஆயும்; ஆவி புழுங்க அழுங்குமால்; |
| வாயும் நெஞ்சும் புலர மயங்குவான். |
|
| |
| 3659. | பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம் கொல்? |
| தரெிந்தது இல்லை; திருமலர்க் கண் இமை |
| பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான் |
| இருந்து கண்டிலன் கங்குலின் ஈறு அரோ. |
|
| |
| 3660. | வென்றி வேற்கை இளவலை! மேல் எலாம் |
| ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம் |
| நின்று காண்டி அன்றே? நெடுங் கங்குல் தான் |
| இன்று நீள்வதற்கு ஏது என்? என்னுமால். |
|
| |
| 3661. | நீண்ட மாலை மதியினை நித்தமும் |
| மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய்; |
| பூண்ட பூணவள் வாள்முகம் போதலால் |
| ஈண்டு சால விளங்கினை என்னுமால். |
|
| |
| 3662. | நீள் நிலாவின் இசைநிறை தன் குலத்து |
| நாணி நாடு கடந்தனனாம் கொலோ |
| சேண் உலாம் தனித் தேரவன்? என்னுமால். |
|
| |
| 3663. | சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான் |
| முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு |
| கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் |
| இட்டனன்கொல் இரும் சிறை? என்னுமால். |
|
| |
| 3664. | துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் |
| கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் |
| முடியும்; ஆகின் முடியும் இம் மூரி நீர் |
| நெடிய மாநிலம் என்ன நினைக்குமால். |
|
| |
| 3665. | திறத்து இ(ன்)னாதன செய்தவத்தோர் உற |
| ஒறுத்து ஞாலத்து உயிர்தமை உண்டு உழல் |
| மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் |
| அறத்தினால் இனி ஆவது என்? என்னுமால். |
|
| |
காமனது கலக்கம் (3666-3667)
| |
| 3666. | தேனின் தயெ்வத் திரு நெடு நாண் சிலைப் |
| பூ நின்று எய்யும் பொருகணை வீரனும் |
| மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்; |
| தான் நின்று எய்யகிலான் தடுமாறினான். |
|
| |
| 3667. | உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால் |
| இழைந்த மேனியும் எண்ணி இரங்கினான்; |
| கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ |
| பழந் துயர்க்குப் பரிவு உறும் பான்மையால்? |
|
| |
| 3668. | நீலமான நிறத்தன் நினைந்தவை |
| சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில் |
| மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும் |
| காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே. |
|
| |
இராமனது ஆற்றாமை (3669-3670)
| |
| 3669. | வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் |
| கற்பின் கடலில் படிவாற்குப் |
| புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்; |
| புனலும் சிலம்பும்; புனைகோலம் |
| உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல், |
| உயிர் உண்டாகும் வகை உண்டோ? |
|
| |
| 3670. | மயிலும் பெடையும் உடன் திரிய, |
| மானும் கலையும் மருவி வரப் |
| பயிலும் பிடியும் கடகரியும் |
| வருவ, திரிவ, பார்க்கின்றான்; |
| குயிலும், கரும்பும் செழுந் தேனும், |
| குழலும், யாழும், கொழும் பாகும், |
| அயிலும் அமுதும் சுவை தீர்த்த |
| மொழியைப் பிரிந்தான், அழியானோ? |
|
| |
| 3671. | முடி நாட்டிய கோட்டு உதயத்து |
| முற்றம் உற்றான்; முதுகங்குல் |
| விடிநாள் கண்டும் கிளி மிழற்றும் |
| மென்சொல் கேளா வீரற்கு, ஆண்டு, |
| அடிநாள் செந்தாமரை ஒதுங்கும் |
| அன்னம் இலளால், யான் அடைத்த |
| கடி நாள் கமலத்து என, அவிழ்த்துக் |
| காட்டுவான்போல், கதிர்வெய்யோன். |
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next