இராம இலக்குவர் வருவதைக் கண்டு சுக்கிரீவன்
ஓடி ஒளிதல்

3853.எய்தினார், சவரி, நெடிது
    ஏய மால்வரை எளிதின்;
நொய்தின் ஏறினர் அதனின்;
    நோன்மை சால் கவி அரசு,
செய்வது ஓர்கிலன், ‘இவர்கள்
தெவ்வராம் ‘என வெருவி,
‘உய்தும் நாம் ‘என, விரைவின்
    ஓடினான், மலை முழையின்.
1

உரை
   
 
அமைச்சர் அனுமனை ஏவி ஒளிதல்

3854.காலின் மா மதலை! இவர்
    காண்மினோ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்;
    வரிசிலையர்;
நீல மால் வரை அனையர்;
    நீதியா நினைமின் என,
மூலம் ஓர்கிலர், மறுகி ஓடினார்,
    முழை அதனின்.
2

உரை
   
 
அனுமன் அவரை அஞ்சல் என்றல்

3855.அவ் இடத்து, அவர் மறுகி,
    அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு
    தேவர், தானவர், வெருவல்
தவ்விடத், தனி அருளு
    தாழ்சடைக் கடவுள் என,
‘இவ் இடத்து இனிது இருமின்;
    அஞ்சல் ‘என்று இடை உதவி.
3

உரை
   
 
அனுமன் இராம இலக்குவரைக் கண்டுணர்தல்

3856.அஞ்சனைக்கு ஒரு சிறுவன்,
    அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு
    மாணவப் படிவமொடு,
‘வெஞ்சமத் தொழிலர், தவம்
    மெய்யர், கைச் சிலையர் ‘என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய
    நின்று, கற்பினின் நினையும்.
4

உரை
   
 
அனுமன் உய்த்துணர்ச்சி (3857-3860)

3857.‘தேவருக்கு ஒருதலைவர்
    ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்;
    மூரிவில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகின்?
    யாது இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை
    தேர்வது எக் கிழமை கொடு? ‘
5

உரை
   
 
3858.சிந்தையில் சிறிது துயர்
    சேர்வுறத், தரெுமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்;
    நோவுறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்;
    மானிடப் படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள்
    தேடுதற்கு உறும் நிலையர்.
6

உரை
   
 
3859.‘தருமமும், தகவும், இவர்
    தனம் எனும் தகையர்; இவர்,
கருமமும் பிறிது ஒர்பொருள்
    கருதி அன்று; அது கருதின்,
அருமருந்து அனையது, இடை
    அழிவு வந்து உளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது
    துருவுகின்றனர், இவர்கள் ‘.
7

உரை
   
 
3860.‘கதம் எனும் பொருண்மை இலர்;
    கருணையின் கடல் அனையர்;
இதம் எனும் பொருள் அலது, ஒர்
    இயல்பு உணர்ந்திலர் இவர்கள்;
சதமன் அஞ்சுறும் நிலையர்;
    தருமன் அஞ்சுறு சரிதர்;
மதனன் அஞ்சுறு வடிவர்;
    மறலி அஞ்சுறு விறலர
8

உரை
   
 
அனுமனின் அன்புணர்ச்சி

3861.என்பன பலவும் எண்ணி
    இருவரை எய்த நோக்கி,
அன்பினின், உருகுகின்ற
    உள்ளத்தன், ஆர்வத்தோரை
முன் பிரிந்து அனையர் தம்மை
    முன்னினான் என்ன நின்றான்
தன் பெருங் குணத்தால்
    தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான்.
9

உரை
   
 
அனுமான், விலங்கின் அன்பைக் கண்டு வியத்தல்

3862.‘தன் கன்று கண்ட அன்ன
    தன்மைய, தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா,
    வேங்கை என்று இனையவேயும்,
பின் சென்று, காதல் கூரப்
    பேழ்கணித்து இரங்குகின்ற;
என் கன்றுகின்றது எண்ணிப்
    பற்பல இவரை? அம்மா! ‘
10

உரை
   
 
பறவை, மேகம் பணிபுரிதல்

3863.‘மயில் முதல் பறவை எல்லாம்,
    மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி மீதா,
    விரி சிறைப் பந்தர் வீசி
எயில் வகுத்து எய்துகின்ற;
    விண் முகில் கணங்கள் எங்கும்
பயில்வுறத், திவலை சிந்திப்
    பயப் பயத் தழுவும், பாங்கர் ‘.
11

உரை
   
 
நிலைத்திணைப் பொருள்களின் நெகிழ்ச்சி

3864.‘காய் எரி கனலும் கற்கள்,
    கள் உடை மலர்களே போல்,
தூய செங்கமல பாதம்
    தோய் தொறும் குழைந்து தோன்றும்;
போயின திசைகள் தோறும்,
    மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும், தொழுவபோல்; இங்கு,
    இவர்கேளா தருமம் ஆவார்? ‘
12

உரை
   
 
அனுமான் தன் அன்பிற்குக் காரணம் ஆராய்தல்

3865.துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.
13

உரை
   
 
அனுமன் எதிர் சென்று வரவேற்றல்

3866.இவ்வழி எண்ணி, ஆண்டு, அவ்
    இருவரும் எய்தலோடும்,
செவ்வழி உள்ளத்தானும்,
    தரெிவு உற எதிர்சென்று எய்திக்
‘கவ்வை இன்றாக, நுங்கள்
    வரவு! ‘எனக், கருணையோனும்,
எவ்வழி நீங்கியோய்? நீ
    யார்? என, விளம்பல் உற்றான்.
14

உரை
   
 
அனுமன் விடை (3867-3868)

3867.‘மஞ்சு எனத் திரண்ட கோல
    மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி,
    நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய
    கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்;
    நாமமும் அனுமன் என்பேன்; ‘
15

உரை
   
 
3868.‘இம் மலை இருந்து வாழும்
    எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்;
    தேவ! நும்வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ,
    வினவிய வந்தேன் ‘என்றான்
எம்மலைக் குலமும் தாழ,
    இசை சுமந்து, எழுந்த தோளான்.
16

உரை
   
 
இராமன் அனுமனைத் தனக்குள் பாராட்டுதல்

3869.மாற்றம் அஃது உரைத்தலோடும்,
    வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்ற, இவனின் ஊங்குச்
    செவ்வியோர் இன்மை தேறி,
‘ஆற்றலும், நிறையும், கல்வி
    அமைதியும், அறிவும், என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் ‘
    என, விளம்பலுற்றான்.
17

உரை
   
 
இராமன் இலக்குவனிடம் அனுமனைப் புகழ்தல் (3870-3871)

3870.“இல்லாத உலகத்து எங்கும்
    ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக்
    கடலுமே ‘‘ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே?
    யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர!
    விரிஞ்சனோ? விடை வலானோ?
18

உரை
   
 
3871.மாணி ஆம் படிவம் அன்று,
    மற்று இவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம்
    என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமை தன்னைச்
    சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று,
    தம்பிக்குக் கழறிக், கண்ணன்.
19

உரை
   
 
இராமன் சுக்கிரீவனைக் காட்டுமாறு கூறல்

3872.‘எவ்வழி இருந்தான், சொன்ன
    கவி குலம் அத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும்
    அருத்தியால் அணுக வந்தேம்;
இவ்வழி நின்னை உற்ற
    எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக்
    காட்டுதி, தரெிய ‘என்றான்.
20

உரை
   
 
அனுமன் பாராட்டு

3873.‘மாதிரப் பொருப்பொடு ஓங்கு
    வரம்பு இலா உலகின், மற்றுப்
பூதரப் புயத்து வீரர்
    நும் ஒக்கும் புனிதர் யாரே?
ஆதரித்து அவனைக் காண்டற்கு
    அணுகினிர் என்னின், அன்னான்,
தீது அவித்து அமையச் செய்த,
    செய்தவச் செல்வம் நன்றே! ‘
21

உரை
   
 
அனுமன் சுக்கிரீவனுடைய வரலாறு கூறுதல்

3874.‘இரவிதன் புதல்வன் தன்னை,
    இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு இலன் சீறப், போந்து,
    பருவரற்கு ஒருவன் ஆகி,
அருவி அம் குன்றின், என்னோடு
    இருந்தனன்; அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்
    வரையினும் வளர்ந்த தோளீர்! ‘
22

உரை
   
 
அஞ்சினர்க்கு அடைக்கலம் கொடுத்தலின் சிறப்புக்
கூறியது (3875-3876)

3875.‘ஒடுங்கல் இல் உலகம் யாவும்
    உவந்தன உதவி, வேள்வி
தொடங்கின, மற்றும், முற்றத்
    தொல் அறம் துணிவர் அன்றே,
கொடுங் குலப் பகைஞன் ஆகிக்
    கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும்
    அதனினும், நல்லது உண்டோ? ‘
23

உரை
   
 
3876.“எம்மையே காத்திர் “ என்றல்
    எளிது அரோ! இமைப்பு இலாதோர்
தம்மையே முதலிட்டு, ஆன்ற
    சராசரம் சமைத்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும்
    முதல்வர் நீர்; முருகற் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு,
    இதின் வரும் உறுதி உண்டோ?
24

உரை
   
 
அனுமன் விரும்பியவாறு இலக்குவன் தம் வரலாறு கூறல் (3877-3880)

3877.‘யார் என விளம்புகேன் நான்,
    எம்குலத் தலைவற்கு, உம்மை?
வீரர்! நீர் பணித்திர்! ‘என்றான்,
    மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார்கழல் இளைய வீரன்,
    மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை எல்லாம்
    தரெிவுறச் சொல்லல் உற்றான். ‘
25

உரை
   
 
3878.சூரியன் மரபில் தோன்றிச்
    சுடர்நெடு நேமி ஆண்ட
ஆரியன்; அமரர்க்கு ஆகி
    அசுரரை ஆவி உண்ட
வீரியன்; வேள்வி செய்து
    விண் உலகோடும் ஆண்ட,
காரியன்; கருணை அன்ன
    கண்ணன் அக்கவிகை மன்னன்.
26

உரை
   
 
3879.‘புயல் தரும் மதத் திண் கோட்டுப்
    புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
மயல் தரும் அவுணர் யாரும்
    மடிதர, வரிவில் கொண்ட
இயல் தரும் புலமைச் செங்கோல்
    மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன், கனக மாடத்
    தட மதில் அயோத்தி வேந்தன். ‘
27

உரை
   
 
3880.‘அன்னவன் சிறுவன் ஆம், இவ்
    ஆண் தகை; அன்னை ஏவ,
தன்னுடை உரிமைச் செல்வம்
    தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்;
    நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலை வலானுக்கு
    ஏவல் செய் அடியன் யானே. ‘
28

உரை
   
 
இலக்குவன் சொல்லைக் கேட்ட அனுமன்
இராமனை வணங்குதல்

3881.என்று, அவன் தோற்றம் ஆதி
    இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆகப்,
    புகுந்து உள பொருள்கள் எல்லாம்,
ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல்,
    உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு,
நின்ற அக் காலின் மைந்தன்,
    நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான்.
29

உரை
   
 
அனுமன் தானும் வானர இனத்தினன் என்றல்

3882.தாழ்தலும், ‘தகாத செய்தது
    என்னை நீ? தருமம் அன்றால்;
கேள்வி நூல் மறை வலாளா! ‘
    என்றனன்; என்னக் கேட்ட
பாழி அம் தடந்தோள் வீர
    மாருதி, ‘பதுமச் செங்கண்
ஆழியாய்! அடியேன் தானும்
    அரிக் குலத்து ஒருவன் ‘என்றான்.
30

உரை
   
 
அனுமன் பேருருக் கொண்டு நிற்றல் (3883-3884)

3883.மின் உருக் கொண்ட வில்லோர்
    வியப்புற, வேத நன்னூல்
பின் உருக் கொண்டது என்னும்
    பெருமை ஆம் பொருளும் நாணப்,
பொன் உருக் கொண்ட மேரு,
    புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான்,
    தருமத்தின் தனிமை தீர்ப்பான்.
31

உரை
   
 
3884.கண்டிலன், உலகம் மூன்றும்
    காலினால் கடந்து கொண்ட
புண்டரிகக் கண் ஆழிப்
    புரவலன், பொலன் கொள் சோதி
குண்டல வதனம் என்றால்,
    கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்லப்
    படித்தனன் படிவம்? அம்மா.
32

உரை
   
 
இராமன் இலக்குவனுக்கு அனுமன் வடிவத்தை வியந்து கூறல் (3885-3886)

3885.தாள் படாக் கமலம் அன்ன
    தடங்கணான், தம்பிக்கு, ‘அம்ம!
கீழ்ப் படா நின்ற நீங்கி,
    கிளர்படாது ஆகி, என்றும்
நாட் படா மறைகளாலும்,
    நவை படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
    குரக்கு உருக்கொண்டது ‘என்றான்.
33

உரை
   
 
3886.நல்லன நிமித்தம் பெற்றேம்;
    நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது;
    இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம்
    கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்;
    அவன் நிலை சொல்லற் பாற்றோ?
34

உரை
   
 
3887.என்று, அகம் உவந்து, கோல
    முகம் மலர்ந்து, இமையா நின்ற
குன்று உறழ் தோளினாரை
    நோக்கி, அக்குரக்குச் சீயம்,
“சென்று அவன் தன்னை, இன்னே
    கொணர்கின்றேன்; சிறிது போது
வென்றியிர்! இருத்திர் ‘‘ என்று
    விடைபெற்று விரைவில் போனான்.
35

உரை