அனுமன் மகிழ்ச்சி புலப்படச் சுக்கிரீவனை அணுகுதல்

3888.போனவன் திரள் மணிப்
    புய நெடும் புகழினான்
ஆன, தன், பொருசினத்து
    அரசன்மாடு அணுகினான்;
‘யானும் உன்குலமும் இவ்
    உலகும் உய்ந்தனம் ‘எனா,
மானவன் குணம் எலாம்
    நினையும் மா மகிழ்வினான்.
1

உரை
   
 
வாலிக்குக் காலன் வந்தான் எனல்

3889.மேலவன் திரு மகற்கு
    உரை செய்தான், ‘விரை செய்தார்
வாலி என்று அளவு இலா
    வலியினான் உயிர் தறெக்
காலன் வந்தனன்; இடர்க்கடல்
    கடந்தனம் ‘எனா
ஆலம் உண்டவனின் நின்று
    அருநடம் புரிகுவான்.
2

உரை
   
 
அனுமன், இராம இலக்குவர் இயல்பை விளக்குதல்

3890.‘மண் உளார், விண்ணுளார்,
    மாறு உளார், வேறு உளார்,
எண் உளார், இயலுளார்,
    இசை உளார், திசை உளார்
கண் உளார் ஆயினார்;
    பகை உளார், கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு
    அமிழ்தமே போல் உளார்.
3

உரை
   
 
அனுமன், இராமன் வரலாறு கூறல் (3891-3901)

3891.‘சூழி மால் யானையார்
    தொழுகழல் தயரதன்
பாழியால் உலகு எலாம்
    ஒருவழிப் படர வாழ்
ஆழியான், மைந்தர்; பேர்
    அறிவினார்; அழகினார்;
ஊழியார் எளிது உனக்கு
    அரசு தந்து உதவுவார்.
4

உரை
   
 
3892.‘நீதியார்; கருணையின் நெறியினார்;
    நெறிவயின்
பேதியா நிலைமையார்; எவரினும்
    பெருமையார்;
போதியாது அளவு இலா உணர்வினார்;
    புகழினார் ;
காதி சேய் தருகடல் கடவுள் வெம்
    படையினார்.
5

உரை
   
 
3893.வேல் இகல் சினவு தாடகை
    விளிந்து உருள வில்
கோலி அக் கொடுமையாள்
    புதல்வனைக் கொன்று தன்
கால் இயல் பொடியினால்,
    நெடிய கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர்
    உருவு அளித்து அருளினான்.
6

உரை
   
 
3894.‘நல் உறுப்பு அமையும் நம்பியரில்
    முன்னவன் நயந்து,
எல் உறுப்பு அரிய பேர்
    எழுசுடர்க் கடவுள் தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை
    தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் மிதிலை
    புக்கனைய நாள்.
7

உரை
   
 
3895.‘உளை வயப் புரவியான்
    உதவ உற்று, ஒரு சொலால்,
அளவு இல் கற்புடைய
    சிற்றவை பணித்து அருளலால்,
வளை உடை புணரிசூழ்
    மகிதலத் திரு எலாம்
இளையவற்கு உதவி, இத்
    தலை எழுந்தருளினான்.
8

உரை
   
 
3896.தவெ் இரா வகை நெடுஞ் சிகை விரா மழுவினான்
அவ் இராமனையும் மா வலி தொலைத் தருளினான்
இவ் இராகவன்; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அவ் விராதனை இராவகை துடைத்தருளினான்.
9

உரை
   
 
3897.‘கரன் முதல் கருணை அற்றவர் கடல் படையொடும்
சிரம் உகச் சிலை குனித்து உதவுவான்; திசை உளார்
பரம் உகப் பகை துமித்து அருளுவான்; பரமர் ஆம்
அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்.
10

உரை
   
 
3898.ஆயம் மால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயம் மான் ஆயினான் யாவனே? காவலா!
நீ அ(ம்)மால் நேர்தியால் நேரில் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மாய மான் ஆயினான்.
11

உரை
   
 
3899.உக்க அந்தமும் உடல் பகை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ
திக்க அந்தர நெடுந் திரள் கரம் சினவு தோள்
அக் கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரிபோல்.
12

உரை
   
 
3900.‘முனைவரும் பிறரும் மேல்,
    முடிவு அரும் பகல் எலாம்,
இனையர் வந்துறுவர் என்று :
    இயல்தவம் புரிகுவார்,
வினை எனும் சிறை துறந்து
    உயர்பதம் விரவினார்
எனையர் என்று உரை செய்கேன்?
    இரவிதன் சிறுவனே!
13

உரை
   
 
3901.‘மாயையால் மதி இலா
    நிருதர்கோன், மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன்;
    அவள் தேடுவார்.
நீ ஐயா, தவம் இழைத்து
    உடைமையால் நெடுமனம்,
தூயையா உடைமையால்,
    உறவினைத் துணிகுவார்.
14

உரை
   
 
3902.‘தந்திருந்தனர் அருள்;
    தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு
    இறுதி இன்று இசைதரும்;
புந்தியின் பெருமையாய்!
    போதர் ‘என்று உரை செய்தான்
மந்திரம் கெழுமும் நூல்
    மரபு உணர்ந்து உதவுவான்.
15

உரை
   
 
அனுமனோடு சுக்கிரீவன் இராமனை யடைதல்

3903.அன்ன ஆம் உரை எலாம்
    அறிவினால் உணர்குவான்,
‘உன்னையே உடைய எற்கு
    அரியது எப்பொருள் அரோ?
பொன்னையே பொருவுவாய்!
    போது ‘எனப் போதுவான்
தன்னையே அனையவன்
    சரணம் வந்து அணுகினான்.
16

உரை
   
 
3904.கண்டனன் என்ப மன்னோ
    கதிரவன் சிறுவன், காமர்க்
குண்டலம் துறந்த கோல
    வதனமும், குளிர்க்கும் கண்ணும்
புண்டரிகங்கள் பூத்துப்
    புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த
    மரகதக் கிரி அனானை.
17

உரை
   
 
3905.நோக்கினான்; நெடிது நின்றான்;
    ‘நெடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
    அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
    குவிந்து இரு படிவ மாகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
    வீரர் ஆய் விளைந்த ‘என்பான்.
18

உரை
   
 
3906.தேறினன் அமரர்க்கு எல்லாம்
    தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார்
    மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும்,
    அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம்,
    மானுடம் வென்றது ‘என்றே.
19

உரை
   
 
வந்த சுக்கிரீவனை இராமன் வரவேற்றல்

3907.என நினைந்து இனைய எண்ணி,
    இவர்கின்ற காதல் ஓதக்
கனைகடல் கரை நின்று ஏறாக்
    கண் இணை களிப்ப நோக்கி,
அனகனைக் குறுகினான்; அவ்
    அண்ணலும், அருத்தி கூர,
புனை மலர்த் தடக்கை நீட்டிப்,
    ‘போந்து இனிது இருத்தி ‘என்றான்.
20

உரை
   
 
இருவரும் ஒருங்கிருந்த காட்சி (3908-3909)

3908.தவா வலி அரக்கர் என்னும்
    தகா இருள் பகையைத் தள்ளிக்,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
    காலத்தின் கூட்டம் ஒத்தார்;
அவா முதல் அறுத்த சிந்தை
    அனகனும், அரியின் வேந்தும்,
உவா உற வந்து கூடும்
    உடுபதி இரவி, ஒத்தார்.
21

உரை
   
 
3909.கூட்டம் உற்று இருந்த வீரர்,
    குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும், பின்னர்
    முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
வீட்டு வாள் அரக்கர் என்னும்
    தீவினை வேரின் வாங்கக்,
கேட்டு உணர் கல்வியோடு
    ஞானமும் கிடைத்தது ஒத்தார்.
22

உரை
   
 
சுக்கிரீவன் இராமனைப் பாராட்டுதல்

3910.ஆயது ஓர் அவதியின்கண்,
    அருக்கன் சேய், அரசை நோக்கி,
‘தீவினை தீய நோற்றார்
    என்னின் யார்? செல்வ! நின்னை
நாயகன் உலகுக்கு எல்லாம்
    என்னலாம் நலம் மிக்கோயை
மேயினன்; விதியே நல்கின்
    மேவல் ஆகாது என்? என்றான்.
23

உரை
   
 
இராமன் வந்த வரலாற்றைக் கூறுதல்

3911.‘மை அறு தவத்தின் வந்த
    சவரி, இம்மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை,
    இயம்பினள்; யாங்கள் உற்ற
கை அறு துயரம் நின்னால்
    கடப்பது கருதி வந்தேம்;
ஐய! நின்தீரும் ‘என்ன,
    அரிக் குலத்து அரசன் சொல்வான்.
24

உரை
   
 
சுக்கிரீவன் தன் வரலாறு கூறிச் சரண்புகல்

3912.‘முரண் உடைத் தடக்கை ஓச்சி,
    முன்னவன், பின் வந்தேனை,
இருள் நிலைப் புறத்தின் காறும்,
    உலகு எங்கும் தொடர, இக் குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்;
    ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
    தாங்குதல் தருமம் ‘என்றான்.
25

உரை
   
 
இராமன் சுக்கிரீவனை நண்பனாகக் கொள்ளுதல் (3913-3914)

3913.என்ற அக்குரக்கு வேந்தை,
    இராமனும் இரங்கி நோக்கி,
‘உன் தனக்கு உரிய இன்ப
    துன்பங்கள் உள்ள, முன் நாள்
சென்றன போக, மேல் வந்து
    உறுவன தீர்ப்பல்; அன்ன
நின்றன எனக்கும் நிற்கும்
    நேர் ‘என மொழியும் நேரா.
26

உரை
   
 
3914.‘மற்று, இனி உரைப்பது என்னே?
    வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
    தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;
    உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என்
    இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.
27

உரை
   
 
இராமன் சுக்கிரீவனோடு நட்பு பூண்டமை யறிந்த வானரங்களின் மகிழ்ச்சி

3915.ஆர்த்தது குரக்குச் சேனை;
    அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்த ரோமப்
    புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர்; மேகம்
    சொரிந்தன; அனகன் சொன்ன
வார்த்தை எக் குலத்து உேளார்க்கும்,
    மறையினும் மெய் என்று உன்னா.
28

உரை
   
 
அனுமன் சுக்கிரீவனது மாளிகைக்கு அழைக்க இராமன் இசைதல்

3916.ஆண்டு எழுந்து, அடியில் தாழ்ந்த
    அஞ்சனை சிங்கம், வாழி!
தூண் திரள் தடந்தோள் மைந்த!
    தோழனும் நீயும் வாழி!
ஈண்டு நும் கோயில் எய்தி,
    இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என்? என்றான்,
    வீரனும் ‘விழுமிது ‘என்றான்.
29

உரை
   
 
சோலைக்குப் போதல்

3917.ஏகினர் இரவி சேயும்
    இருவரும் அரிகள் ஏறும்
ஊக வெம் சேனை சூழ,
    அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த,
நாகமும் நரந்தக் காவும்,
    நளின வாவிகளும் நண்ணி,
போக பூமியையும் ஏசும்
    புதுமலர்ச் சோலை புக்கார
30

உரை
   
 
சோலையின் சிறப்பு (3918-3919)

3918.ஆரமும் அகிலும் துன்றி,
    அவிர் பளிக்கு அறை அளாவி,
நாரம் நின்றன போல் தோன்றி,
    நவமணித் தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தயெ்வத்
    தருவு நீர்ப் பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல்
    துவன்றிய கம்மைத்து; அன்றே.
31

உரை
   
 
3919.அயர்வு இல் கேள்விசால்
    அறிஞர் வேலை முன்,
பயில்வு இல் கல்வியார்
    பொலிவு இல் பான்மைபோல்,
குயிலும் மா மணிக்
    குழுவு சோதியால்,
வெயிலும், வெள்ளி
    வெண் மதியும், மேம்படா.
32

உரை
   
 
பூவணையிலிருந்து உரையாடல்

3920.ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும்
தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார்
ஆய அன்பினோடு அளவளாவுவார்.
33

உரை
   
 
இராமன் நீராடி விருந்துண்ணல்

3921.கனியும் கந்தமும் காயும் தூயநன்கு
இனிய யாவையும் கொணர யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து பின்
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான்.
34

உரை
   
 
இராமன் சுக்கிரீவனை வினாவுதல்

3922.விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
பொருந்தும் நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரித்துளாய் கொலோ நீயும்? பின்! என்றான்.
35

உரை
   
 
சுக்கிரீவன் நிலையை அனுமன் விளக்குதல்

3923.என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்று போல நின்று இருகை கூப்பினான்
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்!
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு ‘எனா.
36

உரை
   
 
வாலியின் பெருமை கூறல்

3924.நாலு வேதம் ஆம் நவையில் ஆர்கலி
வேலி அன்ன தொல் மலையின்மேல் உளான்
சூலி தன் அருள் துறையில் முற்றினான்
வாலி என்று உளான் வரம்பு இல் ஆற்றலான்.
37

உரை
   
 
3925.கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.
38

உரை
   
 
3926.நிலனும் நீரும் மா நெருப்பும் காற்றும் என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்.
39

உரை
   
 
3927.‘கிட்டுவார் பொராக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்
40

உரை
   
 
3928.கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.
41

உரை
   
 
3929.மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல்; நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால்.
42

உரை
   
 
3930.பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்;
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ.
43

உரை
   
 
3931.படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும்; இக் கிரியை மேயினான்
நடந்து தாங்கும்; இப் புவனம் நாள் எலாம்.
44

உரை
   
 
3932.கடல் ஒலிப்பதும் கால் சலிப்பதும்
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய்! அயலின் ஆபவோ?
45

உரை
   
 
3933.‘வெள்ளம் ஏழுபத்து உள்ள மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.
46

உரை
   
 
3934.‘மழை இடிப்பு உறா; வய வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா; முரண் வெங் காலும் மென்
தழை துடிப்புறச் சார்வுறாது ‘; அவன்
விழைவிடத்தின் மேல் விளிவை அஞ்சலால்.
47

உரை
   
 
3935.‘மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர் படுத்த நாள்
புக்கு இலாத வெம் பொழி அரத்த நீர்
உக்கு இலாத வேறு உலகம் யாவதோ.
48

உரை
   
 
3936.இந்திரன் தனிப் புதல்வன் இன் அளிச்
சந்திரன் தழைத்தனைய தன்மையான்
அந்தகன் தனக்கு அரிய ஆணையான்
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய்!
49

உரை
   
 
3937.‘அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குலப் பகைஞன் முட்டினான்
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான்.
50

உரை
   
 
3938.‘முட்டி நின்றவன் முரண் உரத்தினோடு
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான்;
“வட்ட மண் தலத்து அரிது வாழ்வு ” எனா
எட்டரும் பெரும் பிலனுள் எய்தினான்.
51

உரை
   
 
3939.‘எய்து காலை, “அப் பிலனுள்
    எய்தி, யான்
நொய்தின் அங்கு அவன்
    கொணர்வென்; நோன்மையவாய்!
செய்தி, காவல், நீ,
    சிறிது போழ்து ‘‘ எனா,
வெய்தின் எய்தினான்,
    வெகுளி மேயினான். ‘
52

உரை
   
 
3940.“ஏகி வாலியும் இருது ஓர் ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிடச்
சோகம் எய்தினன் துணை துளங்கினான். “
53

உரை
   
 
3941.‘அழுது அழுங்குறும் இவனை அன்பினில்
தொழுது இரந்து “நின் தொழில் இது; ஆகலால்
எழுது வென்றியாய்! அரசு செய்க “ எனப்
‘பழுது இது ‘என்றனன் பரியும் நெஞ்சினான்.
54

உரை
   
 
3942.‘என்று தானும் “அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல்வென்; அன்று எனின்
பொன்றுவேன் “ எனாப் புகுதல் மேயினான்.
55

உரை
   
 
3943.தடுத்து வல்லவா தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்?
56

உரை
   
 
3944.‘அன்ன நாளில் மாயாவி அப் பிலத்து
இன்ன வாயில் ஊடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம்.
57

உரை
   
 
3945.‘சேமம் அவ் வழிச் செய்து செங்கதிர்க்
கோமகன் தனைக் கொண்டு வந்து யாம்
மேவு குன்றின் மேல் வைகும் வேலை வாய்
ஆவி உண்டனன் அவனை அன்னவன்.
58

உரை
   
 
3946.‘ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு ஊம்
களித்த வாலியும் கடிதின் எய்தினான்;
விளித்து நின்று வேறு உரை பெறான்; “இருந்து
அளித்தவாறு நன்று இளவலார்! “ எனா.
59

உரை
   
 
3947.‘வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும்
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம்.
60

உரை
   
 
3948.‘ஏறினான் அவன்; எவரும் அஞ்சுறச்
சீறினான் நெடுஞ் சிகரம் எய்தினான்;
வேறு இலாத அன்பு உதவ மெய்ம்மையால்
ஆறினானும் வந்து அடி வணங்கினான்.
61

உரை
   
 
3949.‘வணங்கி. “அண்ண! நின் வரவு இலாமையால்
உணங்கி உன்வழிப் படர உன்னுவேற்கு
இணங்கர் இன்மையால் இறைவ! நும் உடைக்
கணங்கள் ‘காவல் உன் கடன்மை ” என்றனர்.
62

உரை
   
 
3950.“‘ஆணை அஞ்சி இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை நல்குவாய்
பூண் உலாவு தோள் இறை! பொறாய்! “ எனக்
கோணினான் நெடுங் கொடுமை கூறினான்.
63

உரை
   
 
3951.‘அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெங்
குடல் கலங்கி எம் குலம் ஒடுங்க முன்
கடல் கடைந்த அக் கர தலங்களால்
உடல் கடைந்தனன்; இவன் உலைந்தனன்.
64

உரை
   
 
3952.‘பற்றி அஞ்சலன் பழியை வெஞ்சினம்
முற்றி நின்ற தன் முரண் வலிக் கையால்
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன்.
65

உரை
   
 
3953.எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல்
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்;
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன்
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால்.
66

உரை
   
 
3954.‘உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான்;
இருமையும் துறந்து இவன் இருந்தனன்;
கருமம் இங்கு இது; எம் கடவுள்! ‘என்றனன்.
67

உரை
   
 
இராமன் சினம்

3955.பொய் இலாதவன் வரன்முறை இம் மொழி புகல
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன்
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது; மலர்க் கண்
செய்ய தாமரை ஆம்பல் அம் போது எனச் சிவந்த.
68

உரை
   
 
கவிக்கூற்று

3956.ஈரம் நீங்கிய சிற்றவை
    சொற்றனள் என்ன,
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத்
    தன் அரசு உரிமை
பாரம் ஈந்தவன், ‘பரிவு இலன்
    ஒருவன், தன் இளையோன்
தாரம் வௌவினன் ‘என்ற சொல்
    தரிக்கும் ஆறு உளதோ?
69

உரை
   
 
3957.‘உலகம் ஏழினோடு ஏழும் வந்து
    அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும், வில் இடை
    வாளியின் வீட்டித்,
தலைமையோடு, நின் தாரமும்,
    உனக்கு இன்று தருவேன்;
புலமையோய்! அவன் உறைவிடம்
    காட்டு ‘என்று புகன்றான்.
70

உரை
   
 
சுக்கிரீவன் மகிழ்ச்சியும் எண்ணமும்

3958.எழுந்த பேர் உவகைக் கடல்
    பெரும் திரை இரைப்ப,
அழுந்து துன்பினுக்கு அக் கரை
    கண்டனன் அனையான்,
‘விழுந்ததே இனி வாலிதன்
    வலி! ‘என, விரும்பா,
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது
    உண்டு ‘என மொழிந்தான்.
71

உரை
   
 
சுக்கிரீவன் அமைச்சரோடு தனியே ஆலோசித்தல்

3959.அனைய ஆண்டு உரைத்து, அனுமனே
    முதலிய அமைச்சர்,
நினைவும், கல்வியும், நீதியும்,
    சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர், அன்னவரோடும் வேறு
    இருந்தனன், இரவி
தனையன்; அவ் வழிச் சமீரணன்
    மகன் உரை தருவான்.
72

உரை
   
 
அனுமன் இராம இலக்குவரின் ஆற்றலை விளக்குதல்

3960.‘உன்னினேன், நினது உள்ளத்தின்
    உள்ளதை, உரவோய்!
“அன்ன வாலியைக் காலனுக்கு
    அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்பால் இல்லை ‘‘ என்று
    அயிர்த்தனை; இனி, யான்
சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய் ‘
    எனச் சொன்னான்.
73

உரை
   
 
இராமன் திருமாலே என அனுமன் நிறுவுதல் (3961-3964)

3961.‘சங்கு சக்கரக் குறி உள
    தடக்கையில், தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம்
    யாவர்க்கும் இல்லை;
செங்கண் வில் கரத்து இராமன் அத்
    திரு நெடும் மாலே;
இங்கு உதித்தனன், ஈண்டு அறம்
    நிறுத்துதற்கு; இன்னும் ‘
74

உரை
   
 
3962.‘செறுக்கும் வன் திறல் திரிபுரம்
    தீ எழச் சினவிக்,
கறுக்கும் வெஞ்சினக் காலன்தன்
    காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர்
    ஆடகத் தனி வில்
இறுக்கும் தன்மை, அம் மாயவற்கு
    அன்றியும் எளிதோ? ‘
75

உரை
   
 
3963.‘என்னை ஈன்றவன், “இவ்வுலகு
    யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
    தவம் உனக்கு அதுவே;
உன்னை ஈன்ற எற்கு உறு பதம்
    உளது ‘‘ என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்; இதற்கு
    ஏது உண்டு; இ்றையோய்!
76

உரை
   
 
3964.‘துன்பு தோன்றிய பொழுது, உடன்
    தோன்றுவன்; “எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு
    முடிவு என்? ‘‘ என்று இயம்ப,
“அன்பு சான்று “ என உரைத்தனன்;
    ஐய! என் யாக்கை,
என்பு தோன்றல உருகினது
    எனின், பிறிது எவனோ? ‘
77

உரை
   
 
இராமனாற்றலைச் சோதிக்க அனுமன் கூறும் உபாயம

3965.‘பிறிதும், அன்னவன் பெருவலி
    ஆற்றலைப், பெரியோய்!
அறிதி என்னின், உண்டு உபாயமும்;
    அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில், ஒன்று
    உருவ, இந் நெடியோன்
பொறிகொள் வெஞ்சரம் போவதுகாண்!‘
    எனப் புகன்றான்.
78

உரை
   
 
சுக்கிரீவன் உடன்பட்டு இராமனை அணுகிக் கூறல்

3966.‘நன்று நன்று எனா, நல் நெடுங்
    குன்றமும் நாணும்
தன் துணைத் தனி மாருதி
    தோளிணை தழுவி,
சென்று, செம்மலைக் குறுகி, ‘யான்
    செப்புவது உளதால்,
ஒன்று உனக்கு ‘என, இராமனும்,
    ‘உரைத்தி அஃது ‘என்றான்.
79

உரை