தொடக்கம்
இராமனிடம் சுக்கிரீவன் சீதை அணிகலன்களை முடிந்திட்டமை கூறுதல் (4004-4006)
4004.
ஆ இடை அரிக் குலம் அசனி அஞ்சுற
வாய் திறந்து ஆர்த்தது; வள்ளல் ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய்
நாயக! உணர்த்துவது உண்டு நான் எனா.
1
உரை
4005.
இவ் வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை
வெவ் வழி இராவணன் கொணர மேலைநாள்
செவ் வழி நோக்கி நின் தேவியே கொல் ஆம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள்.
2
உரை
4006.
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ?
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்;
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள்; யாங்கள் ஏற்றனம்.
3
உரை
சுக்கிரீவன் சீதையின் அணிகளைக் கொணர்ந்து இராமனுக்குக் காட்டுதல்
4007.
வைத்தனம்! இவ் வழி; வள்ளல்! நின்வயின்
உய்த்தனம் தந்த போது உணர்தியால் எனாக்
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்;
நெய்த்தலை பால் கலந்து அனைய நேயத்தான்.
4
உரை
சீதையின் அணிகலம் நோக்கிய இராமன் நிலை
(4008-4012)
4008.
தரெிவுற நோக்கினன் தரெிவை மெய் அணி;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம்?
5
உரை
4009.
நல்குவது என்? இனி; நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும் அக் கொங்கை போன்றன;
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின;
பல கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.
6
உரை
4010.
விட்ட பேர் உணர்வினை விளித்த என்கெனோ?
அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ!
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ!
சுட்டன என்கெனோ! யாது சொல்லுகேன்?
7
உரை
4011.
மோந்திட நறுமலர் ஆன; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன;
சாந்தமும் ஆய் ஒளி தழுவப் போர்த்தலால்
பூந்துகில் ஆய; அப் பூவை பூண்களே.
8
உரை
4012.
ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும்;
போர்த்தன மயிர்ப்புறம் புளகம்; பொங்குதோள்
வேர்த்தனன் என்கெனோ? வெதும்பினான் என்கோ?
தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன்?
9
உரை
சோர்ந்து சாய்ந்த இராமனைச் சுக்கிரீவன் தாங்குதல்
4013.
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீக்கொள
நெடும்பொழுது உணர்வினோடு உயிர்ப்பும் நீங்கிய
தடம்பெருங் கண்ணனைத் தாங்கினான்; தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கொண்டு ஏறவே.
10
உரை
இராமனைச் சுக்கிரீவன் தேற்றுதல் (4014-4021)
4014.
தாங்கினன் இருத்தி அ துயரம் தாங்கலாது
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான்
வீங்கிய தோளினாய்! வினையினேன் உயிர்
வாங்கினென் இவ் அணி வருவித்தே எனா.
11
உரை
4015.
அயன் உடை அண்டத்தின் அப் புறத்தையும்
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்
உயர் புகழ்த் தேவியை உதவற் பாலனால்;
துயர் உழந்து அயர்தியோ? சுருதி நூல் வலாய் .
12
உரை
4016.
திருமகள் அனைய அத் தயெ்வக் கற்பினாள்
வெருவரச் செய்துள வெய்யவன் புயம்
இருபதும் ஈரைந்து தலையும் நிற்க; உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ? உலகம் ஏழுமே.
13
உரை
4017.
ஈண்டு நீ இருந்து அருள்; ஏழொடு ஏழ் எனப்
பூண்ட பேர் உலகங்கள் வலியில் புக்கு இடைத்
தேண்டி அவ் அரக்கனைத் திருகித் தேவியைக்
காண்டி யான் இவ் வழிக் கொணர்வல் காவலோய்.
14
உரை
4018.
ஏவல் செய் துணைவரேம் யாங்கள்; ஈங்கு இவன்
தா அரும் பெரு வலித் தம்பி; நம்பி! நின்
சேவகம் இது எனில் சிறுக நோக்கல் என்?
மூவகை உலகும் நின் மொழியின் முந்துமோ.
15
உரை
4019.
பெருமையோர் ஆயினார் பெருமை பேசலார்;
கருமமே அல்லது பிறிது என் கண்டது?
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ?
அருமை ஏது உனக்கு? நின்று அவலம் கூர்தியோ?
16
உரை
4020.
முளரி மேல் வைகுவான் முருகன் தந்த அத்
தளிர் இயல் பாகத்தான் தடக்கை ஆழியான்
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல்
கிளவியாய்! தனித்தனி கிடைப்பரோ? துணை.
17
உரை
4021.
என் உடைச் சிறு குறை
முடித்தல், ஈண்டு ஒரீஇப்
பின் உடைத்தாயினும்
ஆக; பேதுறும்
மின் இடைச் சனகியை
மீட்டு மீள்துமால்
பொன் உடைச் சிலையினாய்!
விரைந்து போய், என்றான்.
18
உரை
சுக்கிரீவனிடம் இராமன் கூறுதல் (4022-4028)
4022.
எரி கதிர்க் காதலன் இனைய கூறலும்
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான்
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட
ஒரு வகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான்.
19
உரை
4023.
விலங்கு எழில் தோளினாய்!
வினையினேனும், இவ்
இலங்கு வில் கரத்தினன்
இருக்கவே, அவள்
கலன் கழித்தனள்; இது
கற்பு மேவிய
பொலன் குழைத் தரெிவையர்
புரிந்துேளார்கள் யார்?
20
உரை
4024.
தாள் நெடும் கிரியொடும் தடங்கள் தம்மொடும்
பூணொடும் புலம்பினன் பொழுது போக்கினேன்;
நாண் நெடும் சிலை சுமந்து உழல நாணலேன்.
21
உரை
4025.
ஆறு உடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து
ஊறு உறத் தம் உயிர் உகுப்பர்; என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்.
22
உரை
4026.
கருங்கடல் தொட்டனர்; கங்கை தந்தனர்;
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்;
பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு
திருந்து இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்.
23
உரை
4027.
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன்;
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர்க் கொடும் பழி வில்லின் தாங்கினேன்.
24
உரை
4028.
விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன்;
கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக் கொளப்
பெரும் பழி சூடினேன்; பிழைத்தது என்? அரோ.
25
உரை
சுக்கிரீவன் மீட்டும் ஆறுதல் கூறி இராமன் துயர்நீக்கல்
4029.
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே
துன்ன அரும் துயரத்து சோர்கின்றான் தனைப்
பன்ன அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான்.
26
உரை
இராமன் சுக்கிரீவனிடம் மீட்டும் கூறுதல்
4030.
ஐய! நீ ஆற்றலின் ஆறினேன் அலது
உய்வனே? எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ?
வையகத்து இப்பழி தீர மாய்வது
செய்வன்; நின் குறை முடித்து அன்றிச் செய்கலேன்.
27
உரை
அனுமன் இராமனிடம் கூறுதல் (4031-4036)
4031.
என்றனன் இராகவன்; இனைய காலையில்
வன் திறல் மாருதி வணங்கினான்; நெடுங்
குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது
ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள் எனா.
28
உரை
4032.
கொடுந் தொழில் வாலியைக் கொன்று கோமகன்
கடுங் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர்
நெடும் படை கூட்டினாலன்றி நேடரிது
அடும் படை அரக்கர்தம் இருக்கை ஆணையாய்!
29
உரை
4033.
வானதோ? மண்ணதோ? மற்று வெற்பதோ?
ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ?
தேன் உலாம் தரெியலாய்! தெளிவது அன்று நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால்.
30
உரை
4034.
எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்;
வவ்வுவர் அவ் வழி மகிழ்ந்த யாவையும்;
வெம் வினை வந்தனெ வருவர் மீள்வரால்;
அவ் அவர் உறைவிடம் அறியற் பாலதோ?
40
உரை
4035.
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும்
திரு உறை வேறு இடம் தேர வேண்டுமால்;
வரன் முறை நாடிட வரம்பு இன்றால்; உலகு
அருமை உண்டு; அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால்.
41
உரை
4036.
ஏழு பத்து ஆகிய வெள்ளத்து எம் படை
ஊழியிற் கடல் என உலகம் போர்க்குமால்;
ஆழியைக் குடிப்பினும் அயன் செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால்.
42
உரை
இராமன் முதலியோர் வாலிபாற் போதல்
4037.
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என
நீதியாய்! நினைந்தனென் என நிகழ்த்தினான்;
சாது ஆம் என்ற அத் தனுவின் செல்வனும்
போதும் நாம் வாலிபால் என்னப் போயினார்.
43
உரை