இராமன் முதலியோர் மலைச்சாரல் வழியே செல்லுதல்

4038.வெங்கண் ஆளி ஏறும், மீளி
    மாவும், வேக நாகமும்,
சிங்க ஏறு இரண்டொடும்
    திரண்ட அன்ன செய்கையார்,
தங்கு சாலம், மூலம் ஆர்
    தமாலம், ஏலம், மாலை போல்
பொங்கு நாகமும் துவன்று
    சாரல் ஊடு போயினார்.
1

உரை
   
 
அவர்கள் சென்ற மலை வழியிலுள்ள காட்சிகள்
(4039-4045)

4039.உழை உலாம் நெடுங்கண் மாதர்
    ஊசல்; ஊசல் அல்லவேல்,
தழை உலாவு சந்து அலர்ந்த
    சாரல்; சாரல் அல்லவேல்,
மழை உலாவு முன்றில்; அல்ல,
    மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை; சோலை
    அல்ல, பொன்செய் குன்றமே.
2

உரை
   
 
4040.அறங்கள் நாறும் மேனியார்,
    அரிக் கணங்கேளாடும் அங்கு
இறங்கு போதும், ஏறுபோதும்.
    ஈறு இலாத ஓதையால்,
கறங்கு வார் கழல் கலன்
    கலிப்ப, முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து
    மாகம் மீது உலாவுமே.
3

உரை
   
 
4041.நீடு நாகம் ஊடு மேகம் ஓட,
    நீரும் ஓட, நேர்
ஆடும் நாகம் ஓட, மான
    யானை ஓட, ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல்,
    வாளை ஓடும் வாவி ஊடு
ஓடு நாகம் ஓட, வேங்கை
    ஓடும்; யூகம் ஓடுமே.
4

உரை
   
 
4042.மருண்ட மா மலைத் தடங்கள்
    செல்லல் ஆவ அல்ல; மால்
தரெுண்டு இலா மதத்த யானை
    சீறி நின்று சிந்தலால்,
இருண்ட காழ் அகில் தடத்தொடு
    இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது, அழிந்த தேன்
    ஒழுக்கு பேர் இழுக்கினே.
5

உரை
   
 
4043.மினல் மணிக் குலம் துவன்றி,
    வில் அலர்ந்து, விண்குலாய்,
அனல் பரப்பல் ஒப்ப மீது
    இமைப்ப, வந்து அவிப்ப போல்,
புனல் பரப்பல் ஒப்ப இருந்த
    பொன் பரப்பும் என்பவால்;
இனைய வில் தடக்கை வீரர்
    ஏகுகின்ற குன்றமே.
6

உரை
   
 
4044.மருவி ஆடும் வாவி தோறும்
    வானயாறு பாயும், வந்து;
இருவி ஆர் தடங்கள் தோறும்
    ஏறு பாயும்; ஆறுபோல்
அருவி பாயும் முன்றில் ஒன்றி
    யானை பாயும்; ஏனலில்
குருவி பாயும்; ஓடி, மந்தி
    கோடு பாயும், மாடு எலாம்.
7

உரை
   
 
4045.தேன் இழுக்கு சாரல் வாரி
    செல்ல, மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும்; அன்றி, வானம்
    வில் இழுக்கும்; வெண் மதி
கூன் இழுக்கும்; மற்று உலாவு
    கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏல வாசம்
    மன்றல் நாறு குன்றமே.
8

உரை
   
 
இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்

4046.அன்னது ஆய குன்றின் ஆறு
    சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து
உன்னல் ஆய யோசனைக்கும்
    உம்பர் ஏறி, இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன
    வாலி வாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள்; ‘செய்வது என்னை? ‘
    என்று நின்று சொல்லுவார்.
9

உரை
   
 
வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்

4047.அவ்விடத்து, இராமன், ‘நீ
    அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து
    போர்விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ் விடத் துணிந்து அமைந்தது,
    என்கருத்து இது ‘என்றனன்;
தவெ் அடக்கும் வென்றியானும்,
    ‘நன்று இது ‘என்று சிந்தியா.
10

உரை
   
 
இராமனது கருத்துக்குச் சுக்கிரீவன் இசைதல்

4048.வார்த்தை அன்னது ஆக,
    வான் இயங்கு தேரினான் மகன்,
நீர்த் தரங்க வேலை அஞ்ச,
    நீல மேகம் நாணவே,
வேர்த்து மண்ணுேளார் இரிந்து,
    விண் உேளார்கள் விம்ம, மேல்
ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட
    அண்டம் முற்றும் உண்டதே.
11

உரை
   
 
சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்

4049.இடித்து, உரப்பி, ‘வந்து போர்
    எதிர்த்தியேல் அடர்ப்பன் ‘என்று
அடித் தலங்கள் கொட்டி, வாய்
    மடித்து, அடுத்து, அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல்
    புக்கது என்ப; மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி
    திண் செவி தொளைக்கணே.
12

உரை
   
 
அப்பேரொலியினைக் கேட்ட வாலி, உலகமெலாம் நடுங்கும்படி அடங்காச் சினமுடையவனாய்ச் சுக்கிரீவனொடு போர்
செய்தற்கு விரைந்து எழுதல் (4050-4058)

4050.மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி
ஓர்ப்பது செவித்தலத்து என்ன ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன்; அமளி மேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான்.
13

உரை
   
 
4051.உருத்தனன் பொர எதிர்ந்து
    இளவல் உற்றமை,
வரைத் தடந் தோளினான்,
    மனத்தின் எண்ணினான்;
சிரித்தனன்; அவ் ஒலி,
    திசையின் அப் புறத்து
இரித்தது, அவ் உலகம் ஒர்
    ஏழொடு ஏழையே.
14

உரை
   
 
4052.எழுந்தனன், வல்விரைந்து,
    இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல் கிளர்ந்து
    அனைய கொள்கையான்;
அழுந்தியது அக் கிரி;
    அருகில் மால் வரை
விழுந்தன, தோள்புடை
    விசைத்த காற்றினே.
15

உரை
   
 
4053.போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த வெம் பொறி;
காய்ப்பொடு உற்று எழு வட அனலும் கண் கெடத்
தீப் பொடித்தன விழி; தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே.
16

உரை
   
 
4054.கைக் கொடு கைத் தலம் புடைப்பக் காவலின்
திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;
உக்கன உரும் இனம்; உலைந்த உம்பரும்;
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே.
17

உரை
   
 
4055.‘வந்தனென் வந்தனென் ‘என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன;
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின மணிமுடிச் சிகரம் தீண்டவே.
18

உரை
   
 
4056.வீசின கரத்தின் வேர் பறிந்த வெற்பு இனம்
ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே.
19

உரை
   
 
4057.கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின;
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ.
20

உரை
   
 
4058.ஞாலமும் நால் திசைப் புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே.
21

உரை
   
 
போர்க்குச் செல்லுதல் வேண்டாம் என வாலியைத் தாரை விலக்குதல்

4059.ஆ இடைத் தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேய் இடைத் தோளினாள் இடை விலக்கினாள்;
வாய் இடைப் புகை வர வாலி கண் வரும்
தீ இடைத் தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.
22

உரை
   
 
வாலி, அவள் தடையை மீறுதல்

4060.‘விலக்கலை விடு விடு; விளித்துளான் உரம்
கலக்கி அக் கடல் கடைந்து அமுது கண்டு என
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவன்
மலைக் குல மயில் ‘என மடந்தை கூறுவாள்.
23

உரை
   
 
சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைக்கின்றான் ‘எனத் தாரை கூறுதல்

4061.‘கொற்றவ, நின்பெருங்
    குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள்,
    ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்;
    பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது, நெடுந் துணை
    உடைமையால் ‘என்றாள்.
24

உரை
   
 
வாலி, தன் பேராற்றலை எடுத்துக் கூறித் தேற்றுதல் (4062-4066)

4062.‘மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘
25

உரை
   
 
4063.‘மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம் இல் கடை கயிறு அடை கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்.
26

உரை
   
 
4064.‘பெயர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி ‘யான் அது
‘தயிர் ‘எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது
மயில் இயல் குயில் மொழி மறக்கல் ஆவதோ?
27

உரை
   
 
4065.‘ஆற்றலின் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர்; ஏனையர் சொல்லற் பாலரோ?
கூற்றும் என்பெயர் சொலக் குலையும் யார் இனி
மாற்றலற்கு ஆகிவந்து எதிரும் மாண்பினார்?
28

உரை
   
 
4066.‘பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்
பாதியும் என்னதால்; பகைப்பது எங்ஙனம்?
நீ துயர் ஒழிக ‘என நின்று கூறினான்.
29

உரை
   
 
சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துளான் ‘எனத் தாரை கூறுதல்

4067.அன்னது கேட்டவள் ‘அரச “ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் “ எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார் ‘என்றாள்.
30

உரை
   
 
வாலி, இராமனுடைய நற்பண்புகளை யெடுத்துரைத்துத் தாரையின் கூற்றினை மறுத்தல் (4068-4073)

4068.‘உழைத்த வல் இரு வினைக்கு
    ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
    அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல
    இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை, பாவி! உன்
    பெண்மையால் ‘என்றான்.
31

உரை
   
 
4069.‘இருமையும் நோக்குறும்
    இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில்
    பெறுவது என் கொலோ?
அருமையின் நின்று உயிர்
    அளிக்கும் ஆறுடைத்
தருமமே தவிர்குமோ
    தன்னைத் தான் அரோ?
32

உரை
   
 
4070.‘ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள்
மாற்றவள் ஏவ மற்று அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை; இன்னன புகல்தற் பாலையோ?
33

உரை
   
 
4071.‘நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ?
தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ?
34

உரை
   
 
4072.‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது ‘என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான்?
35

உரை
   
 
4073.‘இருத்தி, நீ, இறை, இவண்;
    இமைப்பு இல் காலையில்
உருத்தவன் உயிர்குடித்து,
    உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென்;
    கலங்கல் ‘என்றனன்;
விரைக் குழல், பின்,
    உரைவிளம்ப அஞ்சினாள்.
36

உரை
   
 
போர் வேட்டெழுந்த வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்

4074.ஒல்லைச் செரு வேட்டு உயர் வெல் புய
    ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற
    இரண்டினோடும்
மல்லல் கிரியின்தலை வந்தனன்
    வாலி, கீழ்பால்
தொல்லைக் கிரியின்தலை தோற்றிய
    ஞாயிறு என்ன.
37

உரை
   
 
வாலியின் வீரத் தோற்றம்

4075.நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு
    நடுங்கி அஞ்சத்
தன் தோள் வலியால் தனி மால் வரை
    சாலும் வாலி,
குன்றூடு வந்து உற்றனன்; கோள்
    அவுணன் குறித்த
வன் தூண் இடைத் தோன்றிய மா
    நரசிங்கம் என்ன.
38

உரை
   
 
வாலி, சுக்கிரீவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்

4076.ஆர்க்கின்ற பின்னேன்தனை நோக்கினன்;
    தானும் ஆர்த்தான்;
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு
    வெறித்து வீழ்ந்த;
போர்க்கின்றது எல்லா உலகும்,
    பொதிர்வுற்ற பூசல்
கார்க் குன்றம் அன்னான் நிலம் தாவிய
    கால் இது என்ன.
39

உரை
   
 
வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், அதனை இலக்குவனுக்குக் காட்டிக் கூறுதல்

4077.அவ்வேலை, இராமனும், அன்புடைத்
    தம்பிக்கு ‘ஐய,
செவ்வே செல நோக்குதி; தானவர்
    தேவர் நிற்க,
எவ் வேலை, எம் மேகம், எக்காலொடு
    எக்கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை
    மானும்? ‘என்றான்.
40

உரை
   
 
சுக்கிரீவனது ஒவ்வாச்செயல் நினைந்து உணர்விழந்தேன் ‘என இலக்குவன் கூறுதல் (4078-4079)

4078.வள்ளற்கு இளையான் பகர்வான் : ‘இவன்
    தம்முன் வாழ்நாள்
கொள்ளக் கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான்;
    குரங்கின்
எள்ளற்கு உறு போர் செய எண்ணினன்,
    என்னும் என்னல்
உள்ளத்தின் ஊன்ற, உணர்வு உற்றிலன்
    ஒன்றும் ‘என்றான்.
41

உரை
   
 
4079.ஆற்றாது பின்னும் பகர்வான்,
    ‘அறத்தாறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல்
    செவ்விது அன்றால்;
மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய
    வந்து நின்றான்,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்?
    வீர! ‘என்றான்.
42

உரை
   
 
இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்
(4080-4081)

4080.‘அத்தா! இது கேள் ‘என ஆரியன்
    கூறுவான் : ‘இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப்
    பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள்
    எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது உத்தமன்
    ஆவது உண்டோ? ‘
43

உரை
   
 
4081.‘வில் தாங்கு வெற்பு அன்ன, இலங்கு எழில்
    தோள! “மெய்ம்மை
உற்றார் சிலர், அல்லவரே பலர் ‘‘
    என்பது உண்மை;
பெற்றார் உழைப் பெற்ற பயன் பெறும்
    பெற்றி அல்லால்,
“அற்றார் நவை “ என்றலுக்கு ஆகுநர்
    ஆர் கொல்? ‘என்றான்.
44

உரை
   
 
வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்

4082.வீரத் திறலோர், இவை இன்ன
    விளம்பும் வேலை,
தேரில் திரிவான் மகன், இந்திரன் செம்மல்,
    என்று இப்
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன
    பண்பார்,
மூரித் திசை யானை இரண்டு என,
    முட்டினாரே.
45

உரை
   
 
இருவரும் சாரிதிரிதல்

4083.குன்றோடு குன்று ஒத்தனர்; கோள் அரிக்
    கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று ஒன்று எதிர்
    உற்றனவேயும் ஒத்தார்;
நின்றார், திரிந்தார் நெடுஞ்சாரி;
    நிலம் திரிந்த,
வன் தோள் குயவன் திரி மண் கலத்து
    ஆழி என்ன.
46

உரை
   
 
இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்

4084.தோேளாடு தோள் தேய்த்தலின், தொல் நிலம்
    தாங்கல் ஆற்றாத்
தாேளாடு தாள் தேய்த்தலின், தந்த
    தழல் பிறங்கல்,
வாேளாடு மின் ஓடுவபோல் நெடு
    வானின் ஓடும்;
கோேளாடு கோள் உற்றென ஒத்து, அடர்ந்தார்,
    கொதித்தார்.
47

உரை
   
 
அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்

4085.தம் தோள் வலி மிக்கவர், தம்
    ஒருதாய் வயிற்றின்
வந்தோர், மட மங்கை பொருட்டு
    மலைக்கலுற்றார்;
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை
    காதல் செற்ற
சுந்தோப சுந்தப் பெயர்த்
    தொல்லையினோரும் ஒத்தார்.
48

உரை
   
 
இருவரும் செய்த பெரும் போர்

4086.கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும்,
    காவல் மேருத்
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும்,
    சீற்றம் என்பது
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும்,
    கண்டிலாதேம்;
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்பு உரை
    வேறு காணேம்.
49

உரை
   
 
இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள்
ஓடி மறைதல்

4087.ஊகங்களின் நாயகர் வெங்கண்
    உமிழ்ந்த தீயால்,
மேகங்கள் எரிந்தன; வெற்பும்
    எரிந்த; திக்கின்
நாகங்கள் நடுங்கின; நால்
    நிலமும் குலைந்த;
மாகங்களை நண்ணிய விண்ணவர்
    போய் மறைந்தார்.
50

உரை
   
 
இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து
ஓடிப் பொருதல்

4088.‘விண் மேலினரோ? நெடுவெற்பின்
    முகட்டினாரோ?
மண் மேலினரோ? புற மாதிர
    வீதியாரோ?
கண் மேலினரோ? ‘என யாவரும்
    காண நின்றார்,
புண் மேல் இரத்தம் பொடிப்பக்
    கடிப்பார், புடைப்பார்.
51

உரை
   
 
அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்

4089.ஏழ் ஒத்து உடன் ஆம், திசை எட்டொடு
    இரண்டும் முட்டும்
ஆழிக் கிளர் ஆர்கலிக்கு ஐம்மடங்கு,
    ஆர்ப்பின் ஓசை;
பாழித் தடம் தோளினும் மார்பினும்
    கைகள் பாய,
ஊழிக் கிளர் கார் உரும் ஒத்தது,
    குத்தும் ஓதை.
52

உரை
   
 
ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் மேகத்திலும் படிந்த தோற்றம்

4090.வெவ்வாய் எயிற்றால் மிடல் வீரர்
    கடிப்ப மீச்சென்று
அவ்வாய் எழு சோரி அது, ஆசைகள்
    தோறும் வீச,
எவ்வாயும் எழுந்த கொழுஞ்சுடர்
    மீன்கள் யாவும்,
செவ்வாயை நிகர்த்தன; செக்கரை
    ஒத்த, மேகம்.
53

உரை
   
 
வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்

4091.வெந்த வல் இரும்பு இடை நெடுங்
    கூடங்கள் வீழ்ப்பச்
சிந்தி எங்கணும் சிதறுவ
    போல், பொறி தறெிப்ப,
இந்திரன் மகன் புயங்களும்,
    இரவி சேய் உரனும்,
சந்த வல் நெடுந் தடக் கைகள்
    தாக்கலின் தகர்வ.
54

உரை
   
 
இருவரும் செய்த போர்ச் செயல்கள் (4092-4096)

4092.உரத்தினால் மடுத்து உந்துவர்,
    பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்;
    கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்;
    பொருப்பு இனம் வாங்கிக்
சிரத்தின் மேல் எறிந்து உறுக்குவர்;
    தழெிப்பர்; தீ விழிப்பர்.
55

உரை
   
 
4093.எடுப்பர் பற்றி உற்று ஒருவரை
    ஒருவர் விட்டு எறிவர்;
கொடுப்பர் வந்து உரம்; குத்துவர்
    கைத் தலம் குளிப்ப;
கடுப்பினில் பெருங் கறங்கு எனச்
    சாரிகை பிறங்கத்
தடுப்பர்; பின்றுவர், ஒன்றுவர்,
    தழுவுவர், விழுவர்.
56

உரை
   
 
4094.வாலினால் உரம் வரிந்தனர்,
    நெரிந்து உக வலிப்பர்;
காலினால் நெடும் கால் பிணித்து
    உடற்றுவர்; கழல்வர்;
வேலினால் அற எறிந்து என,
    விறல் வலி உகிரால்,
தோலின் ஆர் உடல், நெடுவரை
    முழை எனத் தொளைப்பர்.
57

உரை
   
 
4095.மண் அகத்தன மலைகளும்,
    மரங்களும், மற்றும்
கண் அகத்தினில் தோன்றிய
    யாவையும், கையால்,
எண் நக பறித்து எறிதலின்,
    எற்றலின், இற்ற;
விண் அகத்தினை மறைத்தன;
    மறிகடல் வீழ்ந்த.
58

உரை
   
 
4096.வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்;
    வேறு என்னை விளம்பல்?
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும்
    தோற்றிலர்; உடன்று
செருவில் தேய்த்தலின், செங்கனல்
    வெண்மயிர் செல்ல,
முரிபுல் கான் இடை எரிபரந்தன
    என முனைவார்.
59

உரை
   
 
வாலி, சுக்கிரீவனைத் தாக்கி வருத்துதல்

4097.அன்ன தன்மையர் ஆற்றலின்
    அமர் புரி பொழுதின்,
வல் நெடும் தடம் திரள் புயத்து
    அடுதிறல் வாலி,
சொன்ன தம்பியைத் தும்பியை
    அரி தொலைத்து என்னக்
கொன் நகங்களின், கரங்களின்
    குலைந்து உக மலைந்தான்.
60

உரை
   
 
வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன், இராமனை அடைந்து அவன் பணித்தவாறு அடையாள மாலை மிலைந்து சென்று பொருதல்

4098.மலைந்தபோது இனைந்து, இரவி சேய்,
    ஐயன்மாட்டு அணுகி,
உலைந்த சிந்தையோடு உணங்கினன்,
    வணங்கிட, ‘உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை
    தரெிந்திலம்; கொடிப் பூ
மிலைந்து செல்க ‘என விடுத்தனன்;
    எதிர்த்தனன் மீட்டும்.
61

உரை
   
 
சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்

4099.தயங்கு தாரகை நிரை தொடுத்து
    அணிந்தன போல,
வயங்கு சென்னியன், வயப் புலி
    வானவல் ஏற்றோடு
உயங்கும் ஆர்ப்பினன், ஒல்லை வந்து,
    அடு திறல் வாலி
பயம் கொளப் புடைத்து, எற்றினன்;
    குத்தினன், பல கால்.
62

உரை
   
 
வாலி சுக்கிரீவனை உயிர்த்தலத்தில் புடைத்து உதைத்தல்

4100.அயிர்த்த சிந்தையன், அந்தகன
    குலைகுலைந்து அஞ்சச்
செயிர்த்து நோக்கினன்; சினத்தொடு
    சிறுநகை செய்யா,
வயிர்த்த கையினும், காலினும்,
    கதிர்மகன் மயங்க,
உயிர்த் தலந்தொறும் புடைத்தனன்;
    அடித்தனன்; உதைத்தான்.
63

உரை
   
 
வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசைநோக்கி விழித்தல்

4101.கக்கினான் உயிர், உயிர்ப்பொடும்;
    செவிகளின், கண்ணின்
உக்கது, ஆங்கு எரிப் படலையோடு
    உதிரத்தின் ஓதம்;
திக்கு நோக்கினன், செங்
    கதிரோன் மகன்; செருக்கிப்
புக்கு, மீக்கொடு நெருக்கினன்,
    இந்திரன் புதல்வன்.
64

உரை
   
 
வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுதற்குப்பற்றி மேலே தூக்கியபொழுது இராமன் வாலியின்மேல் அம்பு செலுத்தல்

4102.‘எடுத்துப் பார் இடை எற்றுவன்,
    பற்றி ‘என்று இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும்,
    தன் இருகரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல்,
    கோல் ஒன்று வாங்கித்
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து,
    இராகவன் துரந்தான்.
65

உரை
   
 
இராமபாணம் வாலியின் மார்பை எளிதில் துளைத்தல்

4103.காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.
66

உரை
   
 
வாலி கலங்கி விழுதல்

4104.அலங்கு தோள் வலி அழிந்த தன்
    தம்பியை அருளான்,
வலம்கொள் பார் இடை எற்றுவான்
    உற்ற போர் வாலி,
கலங்கி, வல்விசைக் கால் கிளர்ந்து
    எறிவுறக் கடைக் கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால்
    என, வீழ்ந்தான்.
67

உரை
   
 
வாலி, சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து, தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல

4105.சையம் வேரொடும் உரும் உறச்
    சாய்ந்தனெச் சாய்ந்தான்,
வையம் மீதிடைக் கிடந்த, போர்
    அடுதிறல் வாலி,
வெய்யவன் தரு மதலையை
    மிடல்கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன்,
    கடுங்கணை கவர்தல்.
68

உரை
   
 
4106.வெற்றி வீரனது அடுகணை,
    அவன்மிடல் உரத்து ஊடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
    உறு வலி கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
    பறித்து அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு மறலியும்
    சிரதலம் குலைந்தான்.
69

உரை
   
 
வாலியின் சீற்றமும் ஐயமும்

4107.எழுந்து, ‘வான் முகடு இடித்து உகப்
    படுப்பல் ‘என்று, இவரும்;
‘உழுந்து பேரு முன், திசை திரிந்து
    இறுப்பல் ‘என்று உறுக்கும்,
விழுந்து ‘பாரினை வேரொடும்
    பறிப்பல் ‘என்று ஓரும்;
‘அழுந்தும் இச்சரம் எய்தவன்
    ஆர்கொல்? ‘என்று அயிர்க்கும்.
70

உரை
   
 
வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வாராமையின் வருந்துதல்

4108.எற்றும், கையினை நிலத்தொடும்;
    எரிப் பொறி பறப்பச்
சுற்றும் நோக்குறும்; சுடு சரத்தினைத்
    துணைக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
    வலி உறப் பறிப்பான்
உற்று, உறாமையின் உலைவுறும்;
    மலை என உருளும்.
71

உரை
   
 
வாலி, தன்மேல் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்

4109.‘தேவரோ? ‘என அயிர்க்கும்;
    ‘அத்தேவர் இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ? ‘
    எனும்; ‘அயலோர்
யாவரோ? ‘என நகைசெயும்;
    ‘ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயலாம் ‘
    என மொழியும்.
72

உரை
   
 
வாலி, தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்

4110.‘நேமி தான் கொலோ? நீலகண்டன்
    நெடுஞ் சூலம்
ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின்,
    குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப்
    படையும், என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ?
    யாது? ‘எனப் புழுங்கும்.
73

உரை
   
 
வாலி, தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் ஆற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்

4111.‘வில்லினால் துரப்ப அரிது, இவ் வெம்
    சரம்! ‘என வியக்கும்;
‘சொல்லினால் நெடு முனிவரோ
    தூண்டினார்? ‘என்னும்;
பல்லினால் கடிப்புறும் பல
    காலும்; தன் உரத்தைக்
கல்லி, ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
    பகழியைக் கண்டான்.
74

உரை
   
 
அம்பினை எய்தவன் பெயர் யாதனெ அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தடெுத்தல் (4112-4113)

4112.‘சரம் எனும்படி தரெிந்தது;
    பலபடச் சலித்து என்?
உரம் எனும் பதம் உயிரொடும்
    உருவிய ஒன்றைக்
கரம் இரண்டினும் காலினும்
    வாலினும் கழற்றிப்
பரமன் அன்னவன் பெயர் அறிவேன் ‘
    எனப் பறிப்பான்.
75

உரை
   
 
4113.ஓங்கு அரும் பெருந் திறல் உடை
    மனத்தன், உள்ளத்தன்,
வாங்கினான் மற்று அவ் வாளியை,
    ஆளி போல் வாலி;
ஆங்கு நோக்கினர் அமரரும்
    அவுணரும் பிறரும்,
வீங்கினார்கள் தோள்; வீரரை
    யார் வியவாதார்?
76

உரை
   
 
வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமெனப் பெருகுதல்

4114.மூடு தணெ் திரை முரிதரு
    கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது
    ஆம் எனற்கு எளிதோ?
காடும் மா நெடு விலங்கலும்
    கடந்தது; அக் கடலின்
ஊடு போதல் உற்று அதனை ஒத்து
    உயர்ந்து உளது உதிரம்.
77

உரை
   
 
வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கைக் கண்ட சுக்கிரீவன் உடன்பிறப்பென்னும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல் தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தடெுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணுதல் (4116-4117)

4115.வாசத் தாரவன் மார்பு எனும்
    மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன்;
    உடன் பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத்
    தம்பியும், பசுங் கண்
நேசத் தாரைகள் சொரிதர,
    நெடுநிலம் சேர்ந்தான்.
78

உரை
   
 
தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தடெுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணுதல் (4116-4117)

4116.பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.
79

உரை
   
 
4117.மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தரெியக் கண்டான்.
80

உரை
   
 
இராமனது செயல் நினைந்து, வாலி நாணி வருந்துதல்
(4118-4119)

4118.‘இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது ‘என்னா,
    நகை வர, நாண் உள் கொண்டான்.
81

உரை
   
 
4119.வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்;
    வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்; ‘இதுவும் தான் ஓர்
    ஓங்கு அறமோ? ‘என்று உன்னும்;
முள்கிடும் குழியில் புக்க
    மூரிவெம் களி நல் யானை
தொள் கொடும் கிடந்தது என்னத்,
    துயர் உழந்து அழிந்து சோர்வான்.
82

உரை
   
 
இராமன் முறை திறம்பினான் ‘என்று கூறி வருந்தும் வாலியின் முன்னே இராமன் வந்து தோன்றுதல்

4120.‘இறை திறம்பினனால்; என்னே
    இழிந்துேளார் இயற்கை? என்னில்
முறை திறம்பினனால் ‘என்று
    மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
    மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
    தோன்றினான், வந்து தோன்ற.
83

உரை
   
 
இராமனைக் கண்ணுற்ற வாலி ‘நின்செயல் முறையற்றது ‘எனக் கூறி இகழ்தல் (4121-4136)

4121.கண்ணுற்றான் வாலி, நீலக்
    கார்முகில், கமலம் பூத்து,
மண் உற்று வரிவில் ஏந்தி,
    வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனைய சோரி
    பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
‘எண் உற்றாய் என் செய்தாய்? ‘என்று,
    ஏசுவான் இயம்பல் உற்றான்.
84

உரை
   
 
4122.‘வாய்மையும் மரபும் காத்து
    மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ
    பரதன் முன் தோன்றினாயே;
தீமைதான் பிறரைக் காத்துத்
    தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி நட்பும்
    தருமமும் தழுவி நின்றாய்.
85

உரை
   
 
4123.குலம் இது; கல்வி ஈது;
    கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றும்
    நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும்
    வண்மை ஈது; என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ,
    அறிந்திருந்து அயர்ந்துளார் போல்.
86

உரை
   
 
4124.‘கோ இயல் தருமம் உங்கள்
    குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
    உருவத்தாய்; உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
    அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை,
    திகைத்தனை போலும், செய்கை. ‘
87

உரை
   
 
4125.‘அரக்கர் ஓர் அழிவு செய்து
    கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
    மனுநெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
    எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால்,
    புகழை யார் பரிக்கற் பாலார்? ‘
88

உரை
   
 
4126.‘ஒலி கடல் உலகம் தன்னில்
    ஊர்தரு குரங்கின் மாடே
கலியது காலம் வந்து
    பரந்ததோ? கருணை வள்ளால்!
மெலியவர் பாலதேயோ,
    ஒழுக்கமும், விழுப்பம் தானும்?
வலியவர் மெலிவு செய்தால்
    புகழ் அன்றி வசை இன்று ஆமோ? ‘
89

உரை
   
 
4127.‘கூட்டு ஒருவரையும் வேண்டாக்
    கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே
    தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்;
    எம்பிக்கு இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்;
    கருமம்தான் இதன்மேல் உண்டோ? ‘
90

உரை
   
 
4128.‘அறை கழல் அலங்கல் வீரர்
    ஆயவர் புரிவது, ஆண்மைத்
துறை ‘எனல் ஆயிற்று அன்றே?
    தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவன் நீ, என்னைச் செய்தது,
    ஈது எனில், ‘இலங்கை வேந்தன்
முறை அ(ல்)ல செய்தான் ‘என்று
    முனிதியோ? முனிவு இலாதாய் ‘
91

உரை
   
 
4129.‘இருவர் போர் எதிரும் காலை,
    இருவரும் நல் உற்றாரே;
ஒருவர் மேல் கருணை தூண்டி,
    ஒருவர் மேல் ஒளித்து நின்று,
வரி சிலை குழைய வாங்கி,
    வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ?
    தக்கிலது என்னும் பக்கம். ‘
92

உரை
   
 
4130.‘வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது; என் செய்தவாறு நீ?
93

உரை
   
 
4131.‘இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காப்பது?
பெருமை என்பது இது என்? பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ?
94

உரை
   
 
4132.‘செயலைச் செற்ற பகை தறெுவான் தரெிந்து
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ?
95

உரை
   
 
4133.‘கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளது ஆம் என
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு
ஆரியன்! பிறந்து ஆக்கினை ஆம் அரோ!
96

உரை
   
 
4134.‘மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ
இற்றையில் பிறர்க்கும் ‘இகல் ஏறு ‘என
நிற்றி போலும்? கிடந்த நிலத்து அரோ.
97

உரை
   
 
4135.‘நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை;
வாலியைப் படுத்தாய் அ(ல்)லை; மன் அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே!
98

உரை
   
 
4136.‘தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில்
பார வெம் சிலை வீரம் பழிப்பதே!
நேரும் அன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே?
99

உரை
   
 
வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல்
(4137-4148)

4137.என்று தானும் எயிறு பொடி படத்
தின்று காந்தி விழி வழித் தீ உக
அன்று அ(வ்)வாலி அனையன கூறினான்;
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான்.
100

உரை
   
 
4138.“பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் ” எனாப்
புலம்பு உற்று உன் வழிப் போதல் உற்றான் தனை
குலம் புக்கு ஆன்ற முதியர் “குறிக்கொள் நீ
அலம் பொன் தாரவனே! அரசு “ என்றலும்.
101

உரை
   
 
4139.“வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையின் இறத் தடிந்து
யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலென்;
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் “ என
102

உரை
   
 
4140.‘பற்றி ஆன்ற படைத் தலை வீரரும்
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும்
‘இற்றது உம் அரசு எய்தலையேல் ‘என
கொற்ற நன் முடி கொண்டது இக் கோதிலான்.
103

உரை
   
 
4141.‘வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்;
“எந்தை! என் கண் இனத்தவர் ஆற்றலால்
தந்தது உன் அரசு “ என்று தரிக்கலான்
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ.
104

உரை
   
 
4142.‘கொல்லல் உற்றனை உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை;
“அல்லல் செய்யேல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல் “ என்னவும் புல்லலை பொங்கினாய்.
105

உரை
   
 
4143.‘ஊற்றம் முற்று உடையான் “உனக்கு ஆர் அமர்
தோற்றும் “ என்று தொழுது உயர் கையனைக்
“கூற்றம் உண்ணக் கொடுப்பன் ” என்று எண்ணினாய்;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான்.
106

உரை
   
 
4144.‘அன்ன தன்மை அறிந்தும் அருளலை;
பின்னவன் இவன் என்பதும் பேணலை;
வன்னிதான் இடு சாப வரம்புடைப்
பொன் மலைக்கு இவன் நண்ணலின் போகலை;‘
107

உரை
   
 
4145.‘ஈரம் ஆவதும் இற் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந் நெறி
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவது தாங்கும் தருக்கு அரோ.
108

உரை
   
 
4146.‘மறம் திறம்பல் “வலியம் ” எனா மனம்
புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்;
அறம் திறம்பல் அருங் கடி மங்கையர்
திறம் திறம்பல்; தெளிவு உடையோர்க்கு எல்லாம்.‘
109

உரை
   
 
4147.‘தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தரெிந்து எண்ணலை; எண்ணினால்
அருமை உம்பிதன் ஆர் உயிர் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?
110

உரை
   
 
4148.‘ஆதலானும் அவன் எனக்கு ஆருயிர்க்
காதலான் எனலானும் நின் கட்டனென்;
ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ.
111

உரை
   
 
இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி
பகர்தல் (4149-4152)

4149.‘பிழைத்த தன்மை இது ‘எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரை செய தக்கிலாது
இழைத்த வாலி ‘இயல்பு அல இத்துணை;
விழைத் திறம் தொழில் ‘என்று விளம்புவான்.
112

உரை
   
 
4150.‘ஐய! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் எமைத் தேமலர் மேலவன்;
எய்தின் எய்தியது ஆக இயற்றினான்.
113

உரை
   
 
4151.‘மணமும் இல்லை மறை நெறி வந்தன;
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன;
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!
114

உரை
   
 
4152.‘பெற்றி மற்று இது; பெற்றது ஒர் பெற்றியின்
குற்றம் உற்றிலென்; நீ அது கோடியால்
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய்! ‘எனச்
சொற்ற சொல் தகைக்கு உற்றது சொல்லுவான் :
115

உரை
   
 
குற்றமுற்றிலேன் ‘என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து, அவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல் (4153-4166)

4153.நலம் கொள் தேவரின் தோன்றி நவை அற
கலங்கலாது அற நல் நெறி காண்டலின்
விலங்கு அலாமை விளங்கியது; ஆதலான்
அலங்கலார்க்கு இது அடுப்பது அன்று ஆம் அரோ.
116

உரை
   
 
4154.‘பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்தாறு தான்?
நெறியின் நோன்மையை நேர் நின்று உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றிதான்?
117

உரை
   
 
4155.‘மாடு பற்றி இடங்கர் வலித்திட
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ?
118

உரை
   
 
4156.‘சிந்தை நல் அறத்தின் வழிச் சேர்தலால்
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ?
119

உரை
   
 
4157.‘நன்று தீது என்று இயல் தரெி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்?
நின்ற நல் நெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்.
120

உரை
   
 
4158.‘தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே.
121

உரை
   
 
4159.‘காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய்.
122

உரை
   
 
4160.மே வரும் தருமத் துறை மேவினார்
ஏவரும் பவத்தால் இழிந்தோர்களும்;
தா வரும் தவரும் பல தன்மை சால்
தேவரும் உளர் தீமை திருத்தினார்.
123

உரை
   
 
4161.‘இனையது ஆதலின் எக் குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி ‘என்றான் மனு நீதியான்.
124

உரை
   
 
நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி ‘என வாலி இராமனை வினாதல்

4162.அவ் உரை அமையக் கேட்ட
    அரி குலத்து அரசு, ‘மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக;
    செருக் களத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன,
    விலங்கியே மறைந்து, வில்லால்
எவ்வியது என்னை? ‘என்றான்;
    இலக்குவன் இயம்பல் உற்றான்.
125

உரை
   
 
வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்

4163.‘முன்பு, நின் தம்பி வந்து
    சரண்புக, முறை இ(ல்)லோயைத்
“தனெ் புலத்து உய்ப்பன் “ என்று
    செப்பினன்; செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி,
    “அடைக்கலம் யானும் “ என்றி
என்பது கருதி, அண்ணல்
    மறைந்து நின்று எய்தது ‘என்றான்.
126

உரை
   
 
தன் குற்றம் உணர்ந்த வாலி இராமனைப் பணிந்து தான் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருளுமாறு வேண்டுதல் (4164-4165)

4164.கவி குலத்து அரசும் அன்ன
    கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி,
    ‘அறத் திறன் அழியச் செய்யான்
புவி உடை அண்ணல் ‘என்பது
    எண்ணினன்; பொருந்தி முன்னே
செவி உறு கேள்விச் செல்வன்
    சென்னியின் இறைஞ்சிச் சொன்னான்.
127

உரை
   
 
4165.‘தாய் என உயிர்க்கு நல்கி,
    தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
    நெறியினின் நோக்கும் நேர்மை,
நாய் என நின்ற எம்பால்,
    நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி ‘என்றான்
    சிறியன சிந்தி யாதான்.
128

உரை
   
 
வாலி, தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம் வேண்டுதல் (4166-4172)

4166.இரந்தனன் பின்னும்; ‘எந்தை!
    யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி, நாயேன்
    கூறிய மனத்துக் கொள்ளேல்;
அரந்தை வெம் பிறவி என் நோய்க்கு
    அரு மருந்து அனைய ஐயா!
வரம் தரும் வள்ளால்! ஒன்று
    கேள் ‘என மறித்தும் சொல்வான் :
129

உரை
   
 
4167.‘ஏவு கூர் வாளியால்
    எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய்,
    அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘
130

உரை
   
 
4168.‘புரம் எலாம் எரி செய்தோன்
    முதலினோர் பொருவு இலா
வரம் எலாம் உருவி, என்
    வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என்
    உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது வேறு
    உளது அரோ தருமமே? ‘
131

உரை
   
 
4169.“யாவரும் எவையும் ஆய்,
    இருதுவும் பயனும் ஆய்,
பூவும் நல் வெறியும் ஒத்து
    ஒருவ அரும் பொதுமையாய்!
‘யாவன் நீ யாவது ‘என்று
    அறிவினார் அருளினார்;
தாவு அரும் பதம் எனக்கு
    அருமையோ? தனிமையோய்! ‘
132

உரை
   
 
4170.‘உண்டு எனும் தருமமே
    உருவமாய் உடைய நிற்
கண்டு கொண்டேன்; இனிக்
    காண என் கடவெனோ?
பண்டொடு இன்று அளவுமே
    என் பெரும் பழவினைத்
தண்டமே, அடியனேற்கு
    உறு பதம் தருவதே. ‘
133

உரை
   
 
4171.‘மற்று இனி உதவி உண்டோ?
    வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ! நின்னை, என்னைக்
    கொல்லிய கொணர்ந்து, தொல்லைச்
சிற்றினக் குரங்கினோடும்
    தரெிவு உறச் செய்த செய்கை,
வெற்று அரசு எய்தி, எம்பி,
    வீட்டு அரசு எனக்கு விட்டான். ‘
134

உரை
   
 
4172.‘ஓவிய உருவ! நாயேன்
    உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி,
    புந்தி வேறு உற்ற போழ்தில்,
தீவினை இயற்று மேனும்,
    எம்பி மேல் சீறி, என் மேல்
ஏவிய பகழி என்னும்
    கூற்றினை ஏவல் ‘என்றான்.
135

உரை
   
 
வாலி மற்றும் ஒருவரம் வேண்டுதல்

4173.‘இன்னும் ஒன்று இரப்பது உண்டால்;
    எம்பியை உம்பிமார்கள்
“தன்முனைக் கொல்வித்தான் “ என்று
    இகழ்வரேல், தடுத்தி, தக்கோய்!
முன் முனே மொழிந்தாய் அன்றே,
    இவன் குறை முடிப்பது? ஐயா!
பின் இவன் வினையின் செய்கை
    அதனையும் பிழைக்கல் ஆமோ? ‘
136

உரை
   
 
வாலி இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி, இராமனுக்கு அநுமனைப் பற்றித் தகவுரை பகர்தல் (4174-4175)

4174.‘மற்று இலென் எனினும், மாய
    அரக்கனை வாலின் பற்றி,
கொற்றவ! நின்கண் தந்து,
    குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலென்; கடந்த சொல்லின்,
    பயன் இலை; பிறிது ஒன்றேனும்,
‘உற்றது செய்க ‘என்றாலும்,
    உரியன் இவ் அனுமன் ‘என்றான்.
137

உரை
   
 
4175.‘அனுமன் என்பவனை ஆழி
    ஐய! நின் செய்ய செங்கைத்
தனு என நினைதி; மற்று, என்
    தம்பி நின் தம்பி ஆக
நினைதி; ஓர் துணைவர் இன்னோர்
    அனையவர் இலை; நீ, ஈண்டு, அவ்
வனிதையை நாடிக் கோடி
    வானினும் உயர்ந்த தோளாய்!‘
138

உரை
   
 
வாலி, தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து அவனுக்கு உறுதியுரை பகர்தல் (4176-4182)

4176.என்று அவற்கு இயம்பி, பின்னர்,
    இருந்தனன் இளவல் தன்னை
வன் துணைத் தடக்கை நீட்டி
    வாங்கினன் தழுவி, ‘மைந்த!
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்
    உறுதி; அஃது உணர்ந்து கோடி;
குன்றினும் உயர்ந்த தோளாய்!
    வருந்தலை ‘என்று கூறும் :
139

உரை
   
 
4177.‘மறைகளும், முனிவர் யாரும்,
    மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும்
    துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி,
    அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி
    எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! ‘
140

உரை
   
 
4178.‘நிற்கின்ற செல்வம் வேண்டி
    நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது, இவன்தன் நாமம்;
    கருதுவது, இவனைக் கண்டாய்;
பொற் குன்றம் அனைய தோளாய்!
    பொது நின்ற தலைமை நோக்கின்,
எற் கொன்ற வலியே சாலும்;
    இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. ‘
141

உரை
   
 
4179.‘கைதவம் இயற்றி, யாண்டும்
    கழிப்ப அரும் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும்,
    வான் உயர் நிலையை, வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால்,
    இணை அடி இறைஞ்சி, ஏவல்
செய்தவர் பெறுவது, ஐயா!
    செப்பலாம் தன்மைத்து ஆமோ? ‘
142

உரை
   
 
4180.‘அருமை என்? விதியினாரே
    உதவுவான் அமைந்த காலை;
இருமையும் எய்தினாய்; மற்று
    இனிச் செயல் பாலது எண்ணின்,
திருமறு மார்பன் ஏவல்
    சென்னியில் சேர்த்தி, சிந்தை
ஒருமையின் நிறுவி, மும்மை
    உலகினும் உயர்தி அன்றே. ‘
143

உரை
   
 
4181.‘மத இயல் குரக்குச் செய்கை
    மயர்வொடு மாற்றி, வள்ளல்
உதவியை உன்னி, ஆவி
    உற்றிடத்து உதவுகிற்றி;
பதவியை எவர்க்கும் நல்கும்
    பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து, நொய்தின்,
    தீர்வு அரும் பிறவி தீர்தி. ‘
144

உரை
   
 
4182.‘அரசியல் பாரம் பூரித்து,
    அயர்ந்தனை இகழாது, ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா
    வாழுதி; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியர் என்றே
    எண்ணுதி; எண்ணம் யாவும்
புரிதி; சிற்றடிமை குற்றம்
    பொறுப்பர் என்று எண்ண வேண்டா ‘.
145

உரை
   
 
வாலி, சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக
ஒப்புவித்தல்

4183.என்ன, இத் தகைய ஆய
    உறுதிகள் யாவும், ஏங்கும்
பின்னவற்கு இயம்பி, நின்ற
    பேர் எழிலானை நோக்கி,
‘மன்னவர்க்கு அரசன் மைந்த!
    மற்று இவன், சுற்றத்தோடும்
உன் அடைக்கலம் ‘என்று உய்த்தே,
    உயர் கரம் உச்சி வைத்தான்.
146

உரை
   
 
வாலி, சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை
அழைத்து வரச் செய்தல்

4184.வைத்தபின், உரிமைத் தம்பி
    மா முகம் நோக்கி, ‘வல்லை
உய்த்தனை கொணர்தி, உன் தன்
    ஓங்கு அரு மகனை ‘என்ன,
அ தலை அவனை ஏவி
    அழைத்தலின், அணைந்தான் என்ப;
கைத்தலத்து உவரி நீரைக்
    கலக்கினான் பயந்த காளை.
147

உரை
   
 
அங்கதன் வாலியைக் காணுதல்

4185.சுடர் உடை மதியம் என்னத்
    தோன்றிய தோன்றல், யாண்டும்
இடர் உடை உள்ளத்தோரை
    எண்ணினும் உணர்ந்திலாதான்,
மடல் உடை நறுமென் சேக்கை
    மலை அன்றி, உதிர வாரிக்
கடல் இடைக் கிடந்த காதல்
    தாதையைக் கண்ணின் கண்டான்.
148

உரை
   
 
அங்கதன், வாலியின்மீது வீழ்ந்து புலம்புதல் (4186-4190)

4186.கண்ட கண், கனலும் நீரும்
    குருதியும் கால, மாலைக்
குண்டலம் அலம்பு கின்ற
    குவவுத் தோள் குரிசில், திங்கள்
மண்டலம், உலகின் வந்து
    கிடந்தது; அம் மதியின் மீதா
விண் தலம் அதனின் நின்று ஓர்
    மீன் விழுந்து என்ன, வீழ்ந்தான்.
149

உரை
   
 
4187.‘எந்தையே! எந்தையே! இவ்
    எழு திரை வளாகத்து, யார்க்கும்
சிந்தையால், செய்கையால், ஓர்
    தீவினை செய்திலாதாய்!
நொந்தனை; அதுதான் நிற்க,
    நின்முகம் நோக்கிக் கூற்றும்
வந்ததே அன்றோ அஞ்சாது?
    ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்? ‘
150

உரை
   
 
4188.‘தறை அடித்தது போல் தீராத்
    தகைய, இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு, அழிவு செய்த
    கண்டகன் நெஞ்சம், உன்தன்
நிறை அடிக் கோல வாலின்
    நிலைமையை நினையுந் தோறும்
பறை அடிக்கின்றது; அந்தப்
    பயம் அறப் பறந்தது அன்றே? ‘
151

உரை
   
 
4189.‘குல வரை, நேமிக் குன்றம்
    என்ற வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும், நின் பொன் தாளின்
    தழும்பு, இனி, தவிர்ந்த அன்றே?
மலைகொளும் அரவும் மற்றும்
    மதியமும் பலவும் தாங்கி,
அலைகடல் கடைய வேண்டின்,
    ஆர் இனிக் கடைவர்? ஐயா! ‘
152

உரை
   
 
4190.‘பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
    பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங்கை
    ஆணையாய்! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால்;
    இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை; வள்ளியோர்கள்
    நின்னின் யார் சொல்லற் பாலார்? ‘
153

உரை
   
 
வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்

4191.ஆயன பலவும் பன்னி,
    அழுங்கினன் புழுங்கி, நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை
    உருகினன்; செங்கண் வாலி,
‘நீ இனி அயர்வாய் அல்லை ‘
    என்று, தன் நெஞ்சில் புல்லி,
‘நாயகன் இராமன் செய்த,
    நல்வினைப் பயன், இது‘ என்றான்.
154

உரை
   
 
வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல் (4192-4194)

4192.‘தோன்றலும், இறத்தல் தானும்,
    துகள் அறத் துணிந்து நோக்கின்,
மூன்று உலகத்தினோர்க்கும்
    மூலத்தே முடிந்த அன்றே?
யான் தவம் உடைமையால் இவ்
    இறுதி வந்து இசைந்தது; யார்க்கும்
சான்று என நின்ற வீரன்,
    தான் வந்து வீடு தந்தான். ‘
155

உரை
   
 
4193.‘பாலமை தவிர் நீ; என் சொல்
    பற்றுதி ஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
    மெய்ப் பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று,
    கண் புலக்கு உற்றது அம்மா!
மால்தரும் பிறவி நோய்க்கு
    மருந்து என வணங்கு மைந்த! ‘
156

உரை
   
 
4194.‘என் உயிர்க்கு இறுதி செய்தான்
    என்பதை இறையும் எண்ணாது,
உன் உயிர்க்கு உறுதி செய்தி;
    இவற்கு அமர் உற்றது உண்டேல்,
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய்
    பொன்றுதி; தருமம் போற்றி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான்
    மலர் அடி சுமந்து வாழ்தி. ‘
157

உரை
   
 
அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கையடைப் பொருளாவான் எனக் காட்டுதல் (4195-4196)

4195.என்றனன் இனைய ஆய
    உறுதிகள் யாவும் சொல்லி,
தன் துணைத் தடக்கை ஆரத்
    தனயனைத் தழுவி, சாலக்
குன்றினும் உயர்ந்த திண்தோள்
    குரக்கு இனத்து அரசன், கொற்றப்
பொன் திணி வயிரப் பைம் பூண்
    புரவலன் தன்னை நோக்கி.
158

உரை
   
 
4196.‘நெய் அடை நெடு வேல் தானை
    நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன
    தோளினன், தொழிலும் தூயன்;
பொய் அடை உள்ளத்தார்க்குப்
    புலப்படாப் புலவ! மற்று உன்
கையடை ஆகும் ‘என்று, அவ்
    இராமற்குக் காட்டும் காலை.
159

உரை
   
 
அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள வாலி
பரமபதம் அடைதல்

4197.தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.
160

உரை
   
 
வாலி உயிரைக் கவர்ந்த இராம பாணம், தூயநீர்க்கடலில் நீராடி, இராமனது அம்பறாத் தூணியில் வந்தடைதல்

4198.கை அவண் நெகிழ்தலோடும்,
    கடுங்கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது
    உருவி, மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து,
    தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து
    ஆவம் வந்து அடைந்தது அன்றே.
161

உரை
   
 
தன் கணவன் வாலி இறந்து வானுலகடைந்தமை கேட்ட தாரை, அங்கு வந்து அவன்மேல் வீழ்ந்து புரண்டு வருந்துதல்

4199.வாலியும் ஏகினான் அவ்
    வரம்பு இலா உலகில்; இன்பம்
பாலியா, முன்னர் நின்ற
    பரிதி சேய் செங்கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும்,
    அங்கதனோடு போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்,
    வந்து அவன் மேனி வீழ்ந்தாள்.
162

உரை
   
 
4200.குங்குமம் கொட்டி அன்ன,
    குவிமுலைக் குவட்டிற்கு ஒக்கப்
பொங்கு, வெங் குருதி போர்ப்ப,
    புரிகுழல் சிவப்ப, பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில்
    புரண்டனள் அகன்ற செக்கர்
வெங்கதிர் விசும்பில் தோன்றும்
    மின் எனத் திகழும் மெய்யாள்.
163

உரை
   
 
4201.வேய்ங் குழல், விளரி நல் யாழ்,
    வீணை என்று இவையும் நாண,
ஏங்கினள் இரங்கி; விம்மி
    உருகினள்; இரு கை கூப்பி,
தாங்கிய கலைகள் சோர்ந்து
    சரிதர, குழலும் தாழ,
ஓங்கிய துயராள், பன்னி,
    இனையன உரைக்கலுற்றாள்.
164

உரை
   
 
தாரை புலம்புதல் (4202-4214)

4202.‘வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை காண்கலேன்;
உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!
அரைசே! யான் இது காண அஞ்சினேன்.
165

உரை
   
 
4203.‘துயராலே தொலையாத என்னையும்
பயிராயோ? பகையாத பண்பினாய்!
செயிர் தீரா வினை ஆன தயெ்வமே!
உயிர் போனால் உடலாரும் உய்வரோ?
166

உரை
   
 
4204.‘நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம்
அறியாரோ நமனார்? அது அன்று எனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார்?
167

உரை
   
 
4205.‘அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று
உணங்கா ஒண் மலர் கொண்டு உள் அன்பொடும்
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது இத்துணை வைக வல்லையோ?
168

உரை
   
 
4206.‘வரை ஆர் தோள் பொடி ஆடி வைகுவாய்!
தரை மேலாய்; “உறு தன்மை ஈது ” எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என் வயின் ஊனம் யாவதோ?
169

உரை
   
 
4207.‘நையா நின்றனன் நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திருநாடு மேவினாய்;
ஐயா! ‘நீ எனது ஆவி ‘என்றதும்
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!
170

உரை
   
 
4208.‘செரு ஆர் தோள! நின் சிந்தையேன் எனின்
மருவார் வெஞ் சரம் எனையும் வௌவுமால்;
ஒருவேனுள் உளை ஆகில் உய்தியால்;
இருவேம் உள் இருவேம் இருந்திலேம்.
171

உரை
   
 
4209.“‘எந்தாய்! நீ அமிழ்து ஈய யாம் எலாம்
உய்ந்தாம் “ என்று உபகாரம் உன்னுவார்
நந்தா நாள் மலர் சிந்தி நண்பொடும்
வந்தாரோ எதிர்? வான் உேளார் எலாம்.
172

உரை
   
 
4210.‘ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம்
ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்!
173

உரை
   
 
4211.‘சொற்றேன் முந்து உற; அன்ன சொல் கொளாய்
“அற்றான் அன்னது செய்கலான் ” எனா
உற்றாய் உம்பியை; ஊழி காணும் நீ
இற்றாய்; யான் உனை என்று காண்பெனோ?
174

உரை
   
 
4212.‘நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால்;
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ?
தேறேன் யான் இது தேவர் மாயமோ?
வேறு ஓர் வாலி கொல் ஆம் விளிந்துளான்?
175

உரை
   
 
4213.‘தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார்
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால்
உக நேர் சிந்தி உலந்து அழிந்தவால்;
மகனே! கண்டிலையோ நம் வாழ்வு எலாம்?
176

உரை
   
 
4214.‘அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ?
177

உரை
   
 
அனுமன், வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு, வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல் (4215-4216)

4215.என்றாள் இன்னன பன்னி இன்னலோடு
ஒன்றானாள்; உணர்வு ஏதும் உற்றிலாள்;
நின்றாள்; அந்நிலை நோக்கி நீதிசால்
வன் தாள் மால்வரை அன்ன மாருதி
178

உரை
   
 
4216.மடவாரால் அம் மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி வாலிபால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு
உடனாய் உற்றது எலாம் உணர்த்தினான்.
179

உரை
   
 
சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதை அரிதிற் கழித்தலும் (4217-4218)

4217.அகம் ஏர் அற்று உக மீது அருக்கனார்
புக மேலை கிரி புக்க போதினில்
நகமே ஒத்த குரக்கு நாயகன்
முகமே ஒத்தது மூரி மண்டிலம்.
180

உரை
   
 
4218.மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன்
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான்;
குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான்
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான்.
181

உரை