சூரியோதய வருணனை

4219.புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான்
உதவும் பூமகள் சேர ஒள் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்.
1

உரை
   
 
சுக்கிரீவனுக்கு முடிசூட்டும்படி இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிடுதல்

4220.அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
‘கதிரோன் மைந்தனை ஐய! கைகளால்
விதியால் மௌலி மிலைச்சுவாய் ‘எனா.
2

உரை
   
 
முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணர்க என இலக்குவன் அனுமனுக்குக் கூறுதல்

4221.அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய்ப்போர் மாருதி தன்னை ‘வீர! நீ
இப்போதே கொணர் இன்ன செய்வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும் ‘என்று உணர்த்தலும்.
3

உரை
   
 
அவ்வாறே அனுமன் கொணர்தல்

4222.மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை.
4

உரை
   
 
இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடிசூட்டுதல்

4223.மறையோர் ஆசி வழங்க வான் உேளார்
நறை தோய் நாள் மலர் தூவ நல்நெறிக்கு
இறையோன்தன் இளையோன் அவ் ஏந்தலைத்
துறையோர் நூல்முறை மௌலி சூட்டினான்.
5

உரை
   
 
முடிசூடிய சுக்கிரீவன் இராமனை வணங்கிய நிலையில் இராமன், அவனுக்கு உறுதிபயக்கும் அறிவுரைகளைப் பகர்தல் (4224-4234)

4224.பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.
6

உரை
   
 
4225.‘ஈண்டு நின்று ஏகி, நீ நின்
    இயல்பு அமை இருக்கை எய்தி,
வேண்டுவ மரபின் எண்ணி,
    விதிமுறை இயற்றி, வீர!
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற
    யாவையும் புரிந்து, போரில்
மாண்டவன் மைந்தனோடும்
    வாழ்தி! நல்திருவின் வைகி. ‘
7

உரை
   
 
4226.‘வாய்மை சால் அறிவின் வாய்த்த
    மந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்த
    திறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணித்
    துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்
    தேவரின் தரெிய நிற்றி. ‘
8

உரை
   
 
4227.‘புகை உடைத்து என்னின், உண்டு
    பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்
    வினையமும் வேண்டற் பாற்றே;
பகையுடைச் சிந்தை யார்க்கும்,
    பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி,
    இன் உரை நல்கு, நாவால். ‘
9

உரை
   
 
4228.‘தேவரும் மருள்தற்கு ஒத்த
    செயிர் அறு செல்வம், அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,
    அன்னது கருதிக் காண்டி;
ஏவரும், இனிய நண்பர்,
    அயலவர், விரவார் என்று
மூவகை இயலோர் ஆவர்,
    முனைவர்க்கும், உலகம் மூன்றின். ‘
10

உரை
   
 
4229.‘செய்வன செய்தல், யாண்டும்,
    தீயன சிந்தியாமல்;
வைவன வந்த போதும்
    வசை இல இனிய கூறல்,
மெய் சொலல், வழங்கல் யாவும்,
    மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடு
    உயர்வன உவந்து செய்வாய். ‘
11

உரை
   
 
4230.‘சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.
12

உரை
   
 
4231.‘மங்கையர் பொருட்டால் எய்தும்
    மாந்தர்க்கு மரணம், என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி
    செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே,
    அல்லலும் பழியும் ஆதல்
எங்களில் காண்டி அன்றே;
    இதற்கு வேறு உவமை உண்டோ? ‘
13

உரை
   
 
4232.“‘நாயகன் அல்லன், நம்மை
    நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் ‘‘ என, இனிது பேணத்
    தாங்குதி தாங்கு வாரை;
ஆயது தன்மை யேனும்,
    அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்த போது,
    சுடுதியால் தீமையோரை. ‘
14

உரை
   
 
4233.‘இறத்தலும் பிறத்தல் தானும்
    என்பன இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்த
    வினைதரத் தரெிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது என்னே?
    “பூவின்மேல் புனிதற் கேனும்,
அறத்தினிது இறுதி வாழ் நாட்கு
    இறுதி; அஃது உறுதி‘‘ என்ப. ‘
15

உரை
   
 
4234.‘ஆக்கமும், கேடும், தாம் செய்
    அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார்,
    பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்று
    தருக்கு உறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும்,
    பாவத்தைப் பற்றல் ஆமோ? ‘
16

உரை
   
 
4235.‘இன்னது தகைமை என்ப;
    இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண்
    வருவுழி, மாரிக் காலம்
பின்னுற, முறையின், உன்தன்
    பெருங்கடற் சேனையோடும்
துன்னுதி, போதி ‘என்றான்
    சுந்தரன்; அவனும் சொல்வான்.
17

உரை
   
 
கிட்கிந்தை நகரத்தில் தம்முடன் வந்து சிலநாள் தங்கும்படி சுக்கிரீவன் இராமனை இறைஞ்சி வேண்டுதல் (4236-4237)

4236.‘குரங்கு உறை இருக்கை என்னும்
    குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு உறு துறக்க நாட்டுக்கு
    அரசு எனல் ஆயது அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்?
    வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய,
    இருத்தியால் சில நாள், எம்பால். ‘
18

உரை
   
 
4237.‘அரிந்தம! நின்னை அண்மி,
    அருளுக்கும் உரியேம் ஆகிப்
பிரிந்து வேறு எய்தும் செல்வம்
    வெறுமையின் பிறிது ஒன்றாமோ?
கருந்தடங் கண்ணினாளை
    நாடல் ஆம் காலம் காறும்
இருந்து, அருள் தருதி எம்மோடு ‘
    என்று அடி இணையின் வீழ்ந்தான். ‘
19

உரை
   
 
இராமன் தான் கிட்கிந்தை நகரில் தங்கியிருக்க ஒண்ணாமையைத் தரெிவித்தல் (4238-4242)

4238.ஏந்தலும் இதனைக் கேளா,
    இன் இள முறுவல் நாற,
வேந்து அமை இருக்கை, எம்போல்
    விரதியர் விழைதற்கு ஒவ்வா;
போந்து அவண் இருப்பின், எம்மைப்
    போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து இனிது இயற்றும் உன்தன்
    அரசியல் தருமம் தீர்தி.
20

உரை
   
 
4239.‘ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்து
    எரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும்
    வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடம் தோள் வீர!
    பார்த்திலை போலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,
    யான் உறும் இன்பம் என்னோ? ‘
21

உரை
   
 
4240.“‘தேவி வேறு அரக்கன் வைத்த
    சேமத்துள் இருப்பத் தான் தன்
ஆவி போல் துணைவரோடும்
    அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான் இராமன் ‘‘ என்றால்,
    ஐய! இவ் வெய்ய மாற்றம்
மூவகை உலகம் முற்றும்
    காலத்தும் முற்ற வற்றோ? ‘
22

உரை
   
 
4241.‘இல் அறம் துறந்திலாதோர்
    இயற்கையை இழந்தும், போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு,
    இன்னன மேன்மை இல்லாச்
சில் அறம்; புரிந்து நின்ற
    தீமைகள் தீருமாறு,
நல் அறம் தொடர்ந்த நோன்பின்,
    நவை அற நோற்பல் நாளும். ‘
23

உரை
   
 
4242.‘அரசியற்கு உரிய யாவும்
    ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
திரைசெயற்கு உரிய சேனைக்
    கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக, என்பால்; நின்னை
    வேண்டினென், வீர! ‘என்றான்,
உரைசெயற்கு எளிதும் ஆகி,
    அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்.
24

உரை
   
 
சுக்கிரீவன் இராமனது சொல்லுக்கு உடன்பட்டுச் செல்லுதல்

4243.மறித்து ஒரு மாற்றம் கூறான்,
    ‘வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ
    கோது இலர் ஆதல் ‘என்னா,
நெறிப் படர் கண்கள் பொங்கி
    நீர்வர, நெடிது தாழ்ந்து
பொறிப்ப அருந் துன்பம் உன்னாக்
    கவிக் குலத்து அரசன் போனான்.
25

உரை
   
 
வணங்கிய அங்கதனுக்கு இராமன் அறிவு உரை பகர்தல்

4244.வாலி காதலனும், ஆண்டு,
    மலர் அடி வணங்கினானை,
நீல மா மேகம் அன்ன
    நெடியவன் அருளின் நோக்கி,
‘சீலம் நீ உடையை ஆதல்,
    இவன் சிறு தாதை என்னா,
மூலமே தந்த நுந்தை ஆம் என,
    முறையின் நிற்றி. ‘
26

உரை
   
 
அங்கதன் சென்றபின் அனுமனையும் சுக்கிரீவனுடன் செல்லும்படி இராமன் பணித்தல்

4245.என்ன, மற்று இனைய கூறி,
    ‘ஏகு அவன் தொடர ‘என்றான்;
பொன் அடி வணங்கி, மற்று அப்
    புகழ் உடைக் குரிசில் போனான்;
பின்னர், மாருதியை நோக்கிப்
    ‘பேர் எழில் வீர! நீயும்,
அன்னவன் அரசுக்கு ஏற்றது
    ஆற்றுதி, அறிவின் ‘என்றான்.
27

உரை
   
 
இங்கிருந்து நின்பணி செய்வேன் ‘என
அனுமன் கூறுதல்

4246.பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு
    பொழிகின்ற புணர்ச்சியானும்
‘இத்தலை இருந்து நாயேன்,
    ஏயின, எனக்குத் தக்க
கைத்தொழில் செய்வென் ‘என்று,
    கழல் இணை வணங்கும் காலை,
மெய்த்தலை நின்ற வீரன்
    இவ் உரை விளம்பி விட்டான்.
28

உரை
   
 
இராமன் அதனை மறுத்துரைத்தல் (4247-4248)

4247.‘நிரம்பினான் ஒருவன் காத்த
    நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாது அதனை, மற்று ஓர்
    தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ நலனும் தீங்கும்;
    ஆகலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்
    நிலையினைப் பெறுவது அம்மா!
29

உரை
   
 
4248.‘ஆன்றவற்கு உரியது ஆய
    அரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆய
    கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை;
    ஆகலால், தருமம் தானே
போன்ற நீ, யானே வேண்ட,
    அத்தலை போதி ‘என்றான்.
30

உரை
   
 
அனுமன் கிட்கிந்தைக்குச் செல்ல, இராம இலக்குவர் வேறொரு மலையை அடைதல்

4249.ஆழியான் அனைய கூற,
    ‘ஆணை ஈது ஆகின், அஃதே,
வாழி! யான் புரிவேன் ‘என்று,
    வணங்கி மாருதியும் போனான்;
சூழிமால் யானை அன்ன
    தம்பியும் தானும், தொல்லை
ஊழி நாயகனும், வேறு ஓர்
    உயர்தடங் குன்றம் உற்றான்.
31

உரை
   
 
இராமனது அருள் பெற்றுச் சுக்கிரீவன் கிட்கிந்தையில் இருந்து அரசு புரிதல் (4250-4251)

4250.ஆரியன் அருளின் போய் அவ்
    அகல்மலை அகத்தன் ஆய
சூரியன் மகனும், மானத்
    துணைவரும், கிளையும் சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள்
    தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,
    செவ்விதின் அரசு செய்தான்.
32

உரை
   
 
4251.வள அரசு எய்தி, மற்றை
    வானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ, ஆணை
    கிளர் திசை அளப்ப, கேேளாடு,
அளவு இல ஆற்றல் ஆண்மை
    அங்கதன், அறம் கொள் செல்வம் அத்து
இளவரசு இயற்ற ஏவி,
    இனிதினின் இருந்தான், இப்பால்.
33

உரை
   
 
இராமன் இலக்குவன் அமைத்த தவச்
சாலையில் தங்கியிருத்தல்

4252.வள்ளலும் அவண் நின்று ஏகி,
    மதங்கனது இருக்கை ஆய
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
    ஒரு சிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி
    அன்பினால் அமைக்கப் பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி
    இனிதினின் இருந்த காலை.
34

உரை