சூரியன் தனெ் திசையில் ஒதுங்கியது

4253.மா இயல் வட திசை நின்று மானவன்
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய முந்தித் தனெ் திசைக்கு
ஏவிய தூது என இரவி ஏகினான்.
1

உரை
   
 
கருமுகில் பரவிய தோற்றம்

4254.பை அணைப் பல தலை பாந்தள் ஏந்திய
மொய்ந் நிலத் தகளியில் முழங்கு நீர்நெயின்
வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி
மை அடுத் தொத்தது மழைத்த வானமே.
2

உரை
   
 
வானம் இருண்டு சூரிய ஒளி மறைதல்

4255.நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
கண் நுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண் அகம் இருண்டது; வெயிலின் வெம் கதிர்
தண்ணிய மெலிந்தன; தழைத்த மேகமே.
3

உரை
   
 
வானமிருண்டமைக்கு உவமை

4256.நஞ்சினின் நளிர் நெடுங்கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே.
4

உரை
   
 
மின்னல்

4257.நாட்களின் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ
வாள் கைகள் மயங்கிய செருவின் வார்மதப்
பூட்கைகள் நிறைந்தபுண் திறப்ப போன்றவே.
5

உரை
   
 
4258.நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல்நிற முகில் குலம் துவன்றி சூழ்திரை
மால்நிற நெடுங்கடல் வாரி மூரிவான்
மேல் நிறைந்துளது என முழக்க மிக்கதே.
6

உரை
   
 
4259.அரிப்பெரும் பெயரவன் முதலினோர் அணி
விரிப்பவும் ஒத்தன; வெற்புமீது தீ
எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன; தரெிந்த மின் எலாம்.
7

உரை
   
 
4260.மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.
8

உரை
   
 
4261.சூடின மணிமுடித் துகளில் விஞ்சையர்
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடுவ பெயர்தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்தவே.
9

உரை
   
 
4262.பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசைதொறும் மிசையின் மின் எலாம்.
10

உரை
   
 
4263.எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்பு
உள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின.
11

உரை
   
 
4264.தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்
விலை நினைந்து உளவழி விலங்கும் வேசையர்
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே.
12

உரை
   
 
4265.அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர்
புழுங்குறு புணர்முலை கொதிப்பப் புக்கு உலாய்
கொழுங்குறைத் தசை என ஈர்ந்து கொண்டு அது
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே.
13

உரை
   
 
4266.ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு தாவினும்
போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது உம்பரே.
14

உரை
   
 
மழை பொழிதல்

4267.இன் நகைச் சனகியைப்
    பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணை
    வழங்கினான் எனப்
பொன்நெடுங் குன்றின்மேல்
    பொழிந்த தாரைகள்
மின்னொடுந் துவன்றின
    மேக ராசியே.
15

உரை
   
 
4268.கல் இடைப்படும் துளி திவலை கார் இடு
வில் இடைச்சரம் என விசையின் வீழ்ந்தன;
செல் இடைப்பிறந்த செங்கனல்கள் சிந்தின
அல் இடை மணி சிறந்து அழல் இயற்றல் போல்.
16

உரை
   
 
4269.மள்ளர்கள் மறுபடை மான யானைமேல்
வெள்ளிவேல் எறிவன போன்ற மேகங்கள்;
தள்ளரும் துளிபடத் தகர்ந்து சாய்கிரி
புள்ளி வெங் கடகரி புரள்வ போன்றவே.
17

உரை
   
 
4270.வானிடு தனு நெடுங் கருப்பு வில்; மழை
மீன் இடு கொடியவன்; பகழி வீழ்துளி;
தான் நெடுஞ் சார்துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம் உகுத்தது ஒத்ததே.
18

உரை
   
 
4271.தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை
பேர்த்தனர் இனி எனப் பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய்மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே.
19

உரை
   
 
4272.வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை
கண் எனப் பொழிந்தது கால மாரியே.
20

உரை
   
 
4273.பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண்தொடர்
புரம்சுட விடுசரம் புரையும் மின் இனம்
அரம் சுடப் பொறிநிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துேளார் எலாம்.
21

உரை
   
 
4274.பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர் மிசை உயிர்கொண்டு உய்த்தலால்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெடக்
கருடனைப் பொருவின கால மாரியே.
22

உரை
   
 
4275.முழங்கின முறை முறை மூரிமேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள்.
தழங்கின பொழிமதத் திவலை தாழ்தரப்
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே.
23

உரை
   
 
4276.விசைகொடு மாருதம் மறித்து வீசலால்
அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின்
இசையுற எய்வன இயைவவாய் இருந்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே.
24

உரை
   
 
மரங்கள் பூத்தல்

4277.விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம்.
25

உரை
   
 
4278.பாடலம் வறுமை கூரப்,
    பகலவன் பசுமை கூரக்,
கோடல்கள் பெருமை கூரக்,
    குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள்; பேசாது
    அடங்கின குயில்கள்
கேடுறத் தளர்ந்தார் போன்றும்,
    திரு உறக் கிளர்ந்தார் போன்றும்.
26

உரை
   
 
செங்காந்தளின் மலர்ச்சி

4279.நால் நிறச் சுரும்பும் வண்டும்
    நவமணி அணியின் சாரத்,
தேன் உற மலர்ந்து அசைந்த
    சேயிதழ்க் காந்தள் செ ம்பூ,
‘வேனிலை வென்றது அம்மா,
    கார் ‘என வியந்து நோக்கி,
மா நிலக் கிழத்தி கைகள்
    மறித்தன போன்ற மன்னோ.
27

உரை
   
 
வெண் காந்தள்

4280.வாள் எயிற்று அரவம், தம்போல்
    வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடைக் கோடல் தம்மைத்
    தழீஇயன, காதல் தங்க
மீளல; அவையும் அன்ன
    விழைவின உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னி
    அவற்றொடும் குழைந்து சாய்ந்த.
28

உரை
   
 
இந்திர கோபம்

4281.எள் இட இடனும் இன்றி
    எழுந்தன இலங்கு கோபம்
தள்ளுறத், தலைவர், தம்மைப்
    பிரிந்தவர் தழுவத் தூமக்
கள் உடை ஓதியார்தம்
    கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
    சிதர்ந்து என, விரிந்த மாதோ.
29

உரை
   
 
பொன்மலர் கொணரும் நல் மலை அருவி

4282.தீங்கனி நாவல் ஓங்கும்
    சேண் உயர் குன்றின், செம்பொன்
வாங்கின கொண்டு, பாரில்
    மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றை
    விரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்று
    தலைமயக் குறுவ தம்மில்.
30

உரை
   
 
காந்தளில் கொன்றையும் கோபமும்

4283.நல்நெடுங் காந்தள் போதில்,
    நறை விரி கடுக்கை மென் பூ,
துன்னிய கோபத் தோடும்
    தோன்றிய தோற்றம் தும்பி
இன் இசை முரல்வ நோக்கி,
    இருநில மகள் கை ஏந்திப்,
பொன்னொடும் காசை நீட்டிக்
    கொடுப்பதே போன்றது அம்மா.
31

உரை
   
 
மலையில் நாடக அரங்கு

4284.கிளைத்துளை மழலை வண்டு
    கின்னரம் நிகர்த்த, மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த்
    தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற, மஞ்ஞை;
    தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கு இனம் ஒத்த; காண்போர்
    விழி ஒத்த, விளையின் மென்பூ.
32

உரை
   
 
கூதாளம் மலர்தல்

4285.பேடையும் ஞிமிறும் பாயப்
    பெயர்வுறப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும் தோறும்
    ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்
    அரிய அவ் அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல்
    மலர்ந்த கூதாளம் ஒத்த.
33

உரை
   
 
கானயாறும் கொன்றையும்

4286.வழைதுறு கான யாறு,
    மாநிலக் கிழத்தி மக்கட்கு
உழைதுறு மலைமாக் கொங்கை
    சுரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையோடும்
    வேண்டுநர்க்கு உதவ வேண்டிக்,
குழைதொறும் கனகம் தூங்கும்
    கற்பகம் நிகர்த்த, கொன்றை.
34

உரை
   
 
மான்கள்

4287.பூ இயல் புறவம் எங்கும்
    பொறி வரி வண்டு போர்ப்பத்,
தீவிய களிய வாகிச்
    செருக்கிய, காமச் செவ்வி,
ஓவலில் மரங்கள் தோறும்
    உரைத்து அற உரிஞ்சி ஒண்கேழ்
நாவிய செவ்வி நாறக்,
    கலையொடும் புலந்த நவ்வி.
35

உரை
   
 
குவளை குவிய முல்லை அரும்பல்

4288.தேரில் நல் நெடுந் திசை செலச்
    செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் எயிற்றியர் கண் எனக்
    குவிந்தன குவளை,
மாரன் அன்னவர் வரவு கண்டு
    உவக்கின்ற மகளிர்
மூரல் மென்குறு முறுவல் ஒத்து
    அரும்பின, முல்லை.
36

உரை
   
 
அருவி பெருகலும் தாமரை மலர்தலும

4289.களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்
    இனமெனக் கண்ணுற்று
அளிக்கு மன்னரின் பொன்மழை
    வழங்கின அருவி;
வெளிக்கண் வந்த கார் விருந்து என,
    விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் எனப்
    பொலிந்தன, கமலம்.
37

உரை
   
 
தேனீக்கள் தேனைச் சேர்த்தல்

4290.சரத நாள் மலர் யாவையும்
    குடைந்தன, தடவிச்,
சுரத நூல் தரெி விடர் எனத்
    தேன் கொண்டு, தொகுப்பப்,
பரத நூல் முறை நாடகம்
    பயன் உறப் பகுப்பான்,
இரதம் ஈட்டுறும் கவிஞரைப்
    பொருவின தேனீ .
38

உரை
   
 
மான்களின் களிப்பு

4291.“நோக்கினால் நமை நோக்கு
    அழிகண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அருஞ் சீதைக்குத்
    தாங்கருந் துன்பம்
ஆக்கினாம் உருவால் ‘‘ எனும்
    அரும்பெறல் உவகை
வாக்கினால் உரையாம் எனக்
    களித்தன, மான்கள்.
39

உரை
   
 
அன்னங்கள்

4292.நீடு நெஞ்சு உறு நேயத்தால்
    நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன, மருள் உறு
    காதலின் மயங்கிக்,
கூடு நல் நதித் தடம்தொறும்
    குடைந்தன, படிவுற்று
ஆடுகின்றன கொழுநரைப்
    பொருவின அன்னம்.
40

உரை
   
 
கொக்குகள்

4293.கார் எனும் பெயர்க் கரியவன்
    மார்பினில் கதிர்முத்து
ஆரம் ஆம் எனப் பொலிந்தன
    அளக்கரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின்
    அருகு உற நிரைத்துக்
கூரும் வெண் நிறத் திரையெனப்
    பறப்பன குரண்டம்.
41

உரை
   
 
நாரைகள்

4294.மருவி நீங்கல் செல்லா நெடு
    மாலைய, வானில்
பருவ மேகத்தின் அருகு உறக்
    குருகினம் பறப்ப,
‘திருவின் நாயகன் இவன் ‘எனத்
    தேமறை தரெிக்கும்
ஒருவன் மார்பினின்
    உத்தரியத்தினை ஒத்த.
42

உரை
   
 
பசும் புல்

4295.உற வெதுப்புறும் கொடுந் தொழில்
    வேனிலான் ஒழிய,
திறம் நினைப்பருங் கார் எனும்
    செவ்வியோன் சேர,
நிறை மனத்து உறு குளிர்ப்பினின்
    நெடுநில மடந்தை
புற மயிர்த்தலம் பொடித்தன
    போன்றன பசும்புல்.
43

உரை
   
 
மயில்கள் ஆடலும் அகவலும்

4296.தேன் அவாம் மலர்த் திசைமுகன்
    முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவை உற,
    நோக்கின நல்கக்
கானம் யாவையும் பரப்பிய
    கண்ணின் அச் சனகன்
மானை நாடி நின்று அழைப்பன
    போன்றன மஞ்ஞை .
44

உரை
   
 
செந்தாமரையின் பொலிவும், கொடிகளின் அசைவும்

4297.செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்
    குரிசிலர், இருண்ட
குஞ்சி சேயொளி கதுவுறப்
    புதுநிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி எனப்
    பொலிந்தன பதுமம்;
வஞ்சி போலியர் மருங்கு என
    நுடங்கின, வல்லி.
45

உரை
   
 
குயில்கள் குரல் காட்டாமை

4298.‘நீயிர் அன்னவள் குதலையிர்
    ஆதலின் நேடிப்
போய தையலைத் தருதிர் ‘என்று,
    இராகவன் புகலத்
தேயம் எங்கணும் திரிந்தன
    போந்து இடைத் தேடிக்,
கூய ஆய், குரல் குறைந்த
    குறைந்தன - குயில்கள். 
46

உரை
   
 
ஆம்பியும் பிடவமும்

4299.பொழிந்த மாநிலம் புல்தரக்
    குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின,
    செறிதயிர் ஏய்ந்த;
மொழிந்த தேன் உடை முகிழ்முலை
    ஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால்வழி நுரையினைப்
    பொருவின பிடவம்.
47

உரை
   
 
நானிலத்து மலர்களும் மலர்தல்

4300.வேங்கை நாறின, கொடிச்சியர்
    வடிக் குழல், விரை வண்டு
ஏங்க; நாகமும் நாறின,
    நுளைச்சியர் ஐம்பால்;
ஆங்கு நாள் முல்லை நாறின
    ஆய்ச்சியர் ஓதி;
ஞாங்கர் உற்பலம் உழத்தியர்
    பித்திகை நாற.
48

உரை
   
 
இராமன் கார்காலம் கண்டு கவலுதல் (4301-4303)

4301.தேரைக் கொண்ட பேர் அல்குலாள்
    திரு முகம் காணான்
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
    நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல் ஆயிரம்
    மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
    ஒருகரை காணான்.
49

உரை
   
 
4302.அளவு இல் கார் எனும் அப்பெரும்
    பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
    தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
    குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
    அது வருத்தோ?
50

உரை
   
 
4303.காவியும், கருங்குவளையும்,
    நெய்தலும், காயாம்
பூவையும் பொருவான் அவன்,
    புலம்பினன் தளர்வான்,
‘ஆவியும் சிறிது உண்டு கொலாம் ‘
    என அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்து
    இவை இவை சொல்லும்.
51

உரை
   
 
இராமன் காரொடு கூறுதல் (4304-4305)

4304.வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய்? அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?
52

உரை
   
 
4305.‘வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு
எப் பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர்கொண்டு அலது ஓவலையோ?
53

உரை
   
 
மயிலொடு மொழிதல்

4306.‘அயில் ஏய் விழியார் விளை ஆர் அமிழ்தின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
மயிலே! எனைநீ வலி ஆடுதியோ?
54

உரை
   
 
கொடியொடு கூறியது

4307.‘மழை வாடையொடு ஆடி வலிந்து உயிர் மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் கொடியே!
இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?
55

உரை
   
 
உழையொடு உரைத்தல்

4308.‘விழையேன்; விழை வானருள் மெய்ம்மையின் நின்று
இழையேன்; உணர்வேன்; நவை இன்மையினால்
பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்
உழையே அவர் எவ் உழையார்? உரையாய்!
56

உரை
   
 
உயிரொடு கிளத்தல்

4309.‘பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
அயிராது உடனே அகல்வாய் அலையோ?
உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையே!
57

உரை
   
 
கொன்றையொடு கூறல்

4310.‘ஒன்றைப் பகராய்! குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத் தினையோ?
கொன்றைக் கொடியாய்! கொணர்கிற்றிலையோ?
என்றைக்கு உறவாக இருந்தனையே?
58

உரை
   
 
முல்லையையும் இந்திர கோபத்தையுங் கண்டு மொழிதல்

4311.குரா அரும்பு அனைய கூர்வாள்
    எயிற்று வெங் குருளை நாகம்,
விராவு வெங் கடுவின் கொல்லும்;
    மெல் இணர் முல்லை, வெய்தின்
உரா அருந் துயரம் ஊட்டி
    உலைவு உற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க,
    இந்திர கோபம் ஒன்றோ?
59

உரை
   
 
வாடைக்கு மெலிந்து கூறியது

4312.‘ஓடை வாள் நுதலினாளை
    ஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர்
    ஆடகம் நவ்வி ஆனார்;
வாடையாய்க், கூற்றினாரும்,
    உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கும் வேண்டும்
    உருக்கொளக் கிடைத்த அன்றே. ‘
60

உரை
   
 
மேகத்தோடு மொழிதல்

4313.‘அருவினை அரக்கர் என்ன,
    அந்தரம் அதனில் யாரும்
வெருவர, முழங்குகின்ற
    மேகமே! மின்னுகின்றாய்;
‘தருவல் ‘என்று இரங்கினாயோ?
    தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக் காட்டி
    ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்! ‘
61

உரை
   
 
மன்மதனோடு கூறியது (4314-4315)

4314.உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை
    உயிர் சுட உலைவேன் உள்ளம்
புண் உற வாளி தூர்த்தல்
    பழுது இனிப், போதி; மார!
எண் உறு கல்வி உள்ளத்து
    இளையவன், இன்னே, உன்னைக்
கண்ணுறும் ஆயின், பின்னை,
    யார், அவன் சீற்றம் காப்பார்?
62

உரை
   
 
4315.‘வில்லும், வெங்கணையும், வீரர்,
    வெஞ்சமத்து அஞ்சினார் மேல்
புல்லுந அல்ல; ஆற்றல்
    போற்றலர்க் குறித்தல் போலாம்;
அல்லும் நன் பகலும் நீங்காய்
    அனங்க! நீ அருளில் தீர்ந்தாய்
‘செல்லும் ‘என்று எளிவந்தோர் மேல்
    செலுத்தலும் சீர்மைத்து ஆமோ?
63

உரை
   
 
இலக்குவன் தேறுதல் கூறல் (4316-4321)

4316.என்ன இத்தகைய பன்னி,
    ஈடு அழிந்து, இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கித்,
    தகை அழிந்து அயர்ந்த தம்பி,
‘நின்னை எத்தகையை ஆக
    நினைந்தனை? நெடியோய்! என்னாச்
சென்னியில் சுமந்த கையன்
    தேற்றுவான், செப்பல் உற்றான்.
64

உரை
   
 
4317.“காலம் நீளிது காரும்; மாரியும்
    வந்தது; “ என்ற கவற்சியோ?
நீல மேனி அரக்கர் வீரம்
    நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்
    நாட வாரல் இலாமையோ?
சால நூல் உணர் கேள்வி வீர!
    தளர்ந்தது என்னை? தவத்தினோய்!
65

உரை
   
 
4318.‘மறை துளங்கினும், மதி துளங்கினும்;
    வானும், ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும், நிலை துளங்குறு
    நிலைமை நின் வயின் நிற்குமோ?
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு
    உடைய பேதையர் பெருமை, நின்
இறை துளங்குறு புருவ மென்சிலை
    இடை துளங்குற இசையுமோ? ‘
66

உரை
   
 
4319.‘அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்;
    அறிஞ! அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஓர் இறுதி கண்டிலம்;
    எழுபது என்று எணும் இயல்பினார்,
வினையின் வெந்துயர் விரவு திங்களும்,
    விரைவு சென்றன, எளிதின், நின்
தனு எனும் திரு நுதலி வந்தனள்;
    சரதம்; வன் துயர் தவிர்தியே.
67

உரை
   
 
4320.‘மறை அறிந்தவர் வரவு கண்டு, “உமை
    வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று, இடர்களைவென் ‘‘ என்றனை,
    குறை முடிந்தது; விதியினால்,
இறைவ! அங்கு அவர் இறுதி கண்டு, இனிது
    இசை புனைந்து, இமையவர்கள்தாம்,
உறையும் உம்பரும் உதவி நின்று அருள்;
    உணர்வு அழிந்திடல் உறுதியோ? ‘
68

உரை
   
 
4321.‘காது கொற்றம் நினக்கு அலாது
    பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை
    அன்று; பேதைமை ஆம் அரோ;
போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள்
    அன்று; நின்று புணர்த்தியேல்
யாது உனக்கு இயலாதது? எந்தை!
    வருந்தல் ‘என்ன இயம்பினான்.
69

உரை
   
 
கூதிர் காலம் தொடங்குதல

4322.சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்
    சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்,
இற்ற இன்னல் இயக்கம் எய்திட,
    வைகல் பற்பல ஏக, மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணி
    ஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
மற்று வெம் பிணி பற்றினாலென,
    வந்து எதிர்ந்தது மாரியே.
70

உரை
   
 
்கூதிர்ப்பருவ வருணனை (4323-4325)

4323.நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி.
71

உரை
   
 
4324.பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என ஆசை புரிவார்மேல்.
72

உரை
   
 
4325.வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ!
73

உரை
   
 
மருதம் நெய்தல்களில் கூதிர்

4326.நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச்
சொற்கு இழிய நல்கிளிகள்; தோகையவர் தூய்மென்
பற்கு இழி மணிப்படர் திரைப் பரதர் முன்றில்
பொன் கிழி விரித்தன சினைப் பொதுளு புன்னை.
74

உரை
   
 
குறிஞ்சி நிலத்தில் கூதிர் (4327-4329)

4327.நிறம் கருகு கங்குல், பகல்,
    நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனி
    அந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளிபடப்,
    பெயர்வில் குன்றின்,
உறங்கல பிறங்கல் அயல்
    நின்ற உயர் வேழம்.
75

உரை
   
 
4328.சந்தின் அடையின் படலை வேதிகை தடந்தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற முழை; வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த.
76

உரை
   
 
4329.ஆசு இல் சுனை, வால் அருவி,
    ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இல
    ஆன; மணி வன் கால்
ஊசல் வறிது ஆன; இதண்
    ஒள் மணிகள் விண்மேல்
வீசல் இலவான; நெடும்
    மாரி துளி வீச.
77

உரை
   
 
நெய்தலில் கூதிர்

4330.கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல்
தருந்தகைய போது கிளையின் புடை தயங்கப்
பெருந்தகைய பொன் சிறகு ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவரக்ள் என்ன.
78

உரை
   
 
குறிஞ்சியில் கூதிர் (4331-4333)

4331.பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்ன
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த மயில்; வைகும் மர மூலத்து
ஒதுங்கின உழைக்குலம்; மழைக்குலம் உழக்க.
79

உரை
   
 
4332.விளக்கு ஒளி அகில் புகை
    விழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும்,
    மைந்தர்களும், ஏற,
தளத்தகும் மலர்த் தவிசு இகந்து,
    நகு சந்தின்
தொளைத் துயில் உவந்து,
    துயில்வுற்ற, குளிர் தும்பி.
80

உரை
   
 
4333.தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரன் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக;
தேமரன் அடுக்கு இதண் இடைச் செறி குரம்பைத்
தூமருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார்.
81

உரை
   
 
முல்லை நிலத்துக் கூதிர் (4334-4335)

4334.வள்ளி புடை சுற்றி உயர் சிறு இலை மரம் தோறு
எள்ளரு மறி்க் குருெளாடு அண்டர்கள் இருந்தார்;
கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த.
82

உரை
   
 
4335.சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த.
83

உரை
   
 
இராமன் இலக்குவனை நோக்கிக் கூறத் தொடங்கல்

4336.இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த
மத்தக மணிக் குறுநகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பு இடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும்.
84

உரை
   
 
இராமன் சொல்லியவை (4337-4347)

4337.‘மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப (அ)ருங் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின்
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும்
பிழைப்பு அரிது எனக்கும்; ஈது என்ன பெற்றியோ?
85

உரை
   
 
4338.‘தூநிறச் சுடுசரம் தூணி தூங்கிட
வான் உறப் பிறங்கிய வயிரத் தோெளாடும்
யான் உறக் கடவதே இதுவும்? இந்நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன்.
86

உரை
   
 
4339.‘தரெி கணை மலரொடு திறந்த நெஞ்சொடும்
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணிவிளக்கின் இன் துணை
குரீஇ இனம் பெடையொடும் துயிலக் கூட்டினுள்.
87

உரை
   
 
4340.‘வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும்; கீழ் நகும்; இனி என் வேண்டுமால்?
88

உரை
   
 
4341.‘மறந்து இருந்து உய்கலேன்; மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம்; இப்பழி
பிறந்து பின் தீர்வலோ? பின்னர் அன்னது
துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்!
89

உரை
   
 
4342.‘ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
காண்டலின் பற்பல காலம் காண்டுமால்;
வேண்டுவது அன்று இது; வீர! “நோய் தறெ
மாண்டனன் “ என்றது மாட்சிப் பாலது ஆம்.
90

உரை
   
 
4343.செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
வெப்பு உறப் புரம் சுட வெந்து வீவதோ
அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆய் இழை
துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்?
91

உரை
   
 
4344.நெய் அடை தீ எதிர் நிறுவி “நிற்கு இவள்
கை அடை “ என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு
மெய் அடையாது; இனி விளிதல் நன்று அரோ.
92

உரை
   
 
4345.‘தேற்றுவாய் நீ உளையாகத் தேறி நின்று
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்வளை
தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ?
93

உரை
   
 
4346.‘விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது இமையவர் முதல தொல்லையோர்
பட்டபோது உலகமும் உயிரும் பற்று அறக்
கட்டபோது அல்லது மயிலைக் காண்குமோ?
94

உரை
   
 
4347.‘தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான்
தரெுமருகின்றது; செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்;
உரும் என ஒலி படும் உர விலோய்! ‘என்றான்.
95

உரை
   
 
இலக்குவன் ஆறுதல் கூறுதல்

4348.இளவலும் உரை செய்வான் எண்ணும் நாள் இனும்
உள அல; கூதிரும் இறுதி உற்றதால்;
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது; அயர்வது என்? ஆணை ஆயியாய்!
96

உரை
   
 
4349.திரை செய் அத் திண்கடல் அமிய்தம் செங்கணான்
உரை செயத் தரினும் அத்தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன்
குரை மலர்த் தடக்கையால் கடைந்து கொண்டனன்.
97

உரை
   
 
4350.மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியான் நெடும்
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால்.
98

உரை
   
 
4351.கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண் இடைப் புரம் சுட வெகுண்ட மேலைநாள்
எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டிக் கொண்டவும்
அண்ணலே! ஒருவரால் அறியற் பாலவோ?
99

உரை
   
 
4352.ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின்
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ
சேகு உறப் பல்முறை தரெுட்டிச் செய்தபின்
வாகை என்று ஒரு பொருள் வழுவற் பாலதோ?
100

உரை
   
 
4353.அறம் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்;
‘மறத் துறை நமக்கு ‘என வலிக்கும் வன்மையோர்;
திறத் துறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும்?
101

உரை
   
 
4354.‘பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்து உளது; இனி வருத்தம் நீங்குவாய்!
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆதுமோ?
சுந்தரத் தனு வலாய்! சொல்லு நீ ‘என்றான்.
102

உரை
   
 
கூதிர்ப்பருவம் தேய்ந்து மாய்ந்து போதல்

4355.உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
‘இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு? ‘என்பது ஓர்
தறெு துயர் உழந்தனன் தேயத் தேய்வு சென்று
அறுதியை அடைந்தது அப் பருவம் ஆண்டு போய்.
103

உரை
   
 
மேகம் வெளுத்தல்

4356.மள்கல் இல் பெரும் கொடை மருவி மண்ணுேளார்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே.
104

உரை
   
 
மாரிப் பேரிருள் மாய்தல்

4357.தீவினை நல்வினை என்னத் தேற்றிய
பேய் வினை பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய்வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது மாரிப் பேர் இருள்.
105

உரை
   
 
இடியும் மின்னலும் இலவாதல்

4358.மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல்
கோள் அமை கணம் முகில் குமுறல் ஓவின;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்று என மறைந்த மின்னெலாம்.
106

உரை
   
 
4359.தடுத்த தாள் நெடுந் தடம் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே.
107

உரை
   
 
ஆறு வாரியறல்

4360.மேகம் மாமலைகளின் புறத்து வீதலால்
மாக யாறு யாவையும் வாரி அற்றன;
ஆகையால் தகவு இழந்து அழிவில் நல் பொருள்
போக ஆறு ஒழுகலான் செல்வம் போலவே.
108

உரை
   
 
மேகத்தின் மறைப்பு நீங்கச் சந்திரன் ஒளிவீசுதல்

4361.கடம் திறந்து எழுகளிறு
    அனைய கார்முகில்
இடம் திறந்து ஏகலின்
    பொலிந்தது இந்துவும்;
நடம் திறன் நவில்வுறு
    நங்கைமார் முகம்
படம் திறந்து ஒருவலின்
    பொலியும் பான்மைபோல்.
109

உரை
   
 
குளிர்காற்று நறுங்காற்றாதல்

4362.பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம் புழுகு குங்குமம்
மூசின முயங்கு சேறு உலா மொண்டு உற
வீசின நறும்பொடி விண்டு வாடையே.
110

உரை
   
 
அன்னங்கள் பறக்கத் தொடங்குதல்

4363.மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
நன்னெடும் பருவமும் நணுகிற்று ஆதலால்
“பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின் வாய். “
111

உரை
   
 
மயில்கள் ஒடுங்குதல்

4364.தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிந்த மாமயில்
எஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே.
112

உரை
   
 
நீர் தெளிதலும் மீன் பிறழ்தலும்.

4365.வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
நெஞ்சு எனத் தெளிந்தன நீரம் நீர்தொறும்
‘பஞ்சு ‘எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன்.
113

உரை
   
 
தாமரை பொலிவிழத்தலும் செங்கிடை மலர்தலும்

4366.ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
தாள்தொறும் மலர்ந்தன முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை.
114

உரை
   
 
தவளை ஒலி அடங்கல்

4367.கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல்லரி
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம்.
115

உரை
   
 
கடலொடு கலக்கும் ஆறுகளில் முத்துகள் தோன்றல்

4368.செறிபுனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து
உறுதுணைக் கால்மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ்வலிக் கணவனை எய்தி ஆறு எலாம்
முறுவலிக்கின்றன போன்ற முத்தினால்.
116

உரை
   
 
முன்பனியில் கமுகு முதிர்தல்

4369.சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிறம் பசலை உற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ளரும்
பொன் நிறம் பொருந்தின பூகத் தாறு எலாம்.
117

உரை
   
 
முதலைகள் கரையில் வந்து உறங்குதல்

4370.பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின
வயின்தொறும் வயின்தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள் தோறுமே.
118

உரை
   
 
வஞ்சிக்கொடி

4371.கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின
அம் சிறை அறுபத்து அளக ஓளிய
எஞ்சல் இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே.
119

உரை
   
 
நந்துகள் சேற்றில் குளித்தல்

4372.அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால்
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் நந்து எலாம்.
120

உரை
   
 
நண்டுகள் வளைக்குள் ஒடுங்குதல்

4373.மழைபடப் பொதுளிய மருதத் தாமரை
தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ
இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள்
புழை அடைத்து ஒடுங்கின பொச்சை மாக்கள் போல்.
121

உரை