சதவலி வானர சேனையுடன் வந்து சேர்தல்

4514.ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த
வானர அதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ இரண்டு ஆயிர கோடித்
தானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான்.
1

உரை
   
 
சுடேணனன் வருகை

4515.ஊன்றி மேருவை எடுக்குறும்
    மிடுக்கினுக்கு உரிய
தேன் தரெிந்து உண்டு தெளிவுறு
    வானரச் சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர
    கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுடேணனன்
    எனும் பெயர்த் தோன்றல்.
2

உரை
   
 
உருமையின் தந்தை தாரன் வருகை

4516.ஈறு இல் வேலையை இமைப்புறும்
    அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு
    வானரச் சேனை
ஆறு எண் ஆயிர கோடியது
    உடன் வர, அமுதம்
மாறு இலா மொழி உருமையைப்
    பயந்தவன் வந்தான்.
3

உரை
   
 
கேசரி வருகை

4517.ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
மொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான்.
4

உரை
   
 
தூமிரன் வருகை

4518.மண்கொள் வாள் எயிற்று ஏனத்தின்
    வலியன, வயிரத்
திண் கொள் மால்வரை மயிர்ப் புறத்தன
    எனத் திரண்ட
கண்கொள் ஆயிர கோடியின்
    இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, எறுழ்வலித்
    தூமிரன் இறுத்தான்.
5

உரை
   
 
கவாட்சன் வருகை

4519.முனியும் ஆம் எனின் அருக்கனை
    முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும்
    சலம்வரின் குமைக்கும்,
இனிய மாக்குரங்கு ஈர் இரண்டு
    ஆயிர கோடி
அனிகம் முன்வர ஆன்பெயர்க்
    கண்ணன் வந்து அடைந்தான்.
6

உரை
   
 
பனசன் வருகை

4520.தனிவரும் தடங்கிரி எனப்
    பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என
    உறுக்குறு நிலையன்,
பனசன் என்பவன், பன்னிரண்டு
    ஆயிர கோடிப்
புனித வெஞ்சின வானரப்
    படைகொடு புகுந்தான்.
7

உரை
   
 
நீலன் வருகை

4521.இடியும், மாக்கடல் முழக்கமும்
    வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் முழக்கு உடையன,
    விசையன, முரண,
கொடிய, கூற்றையும் ஒப்பன,
    பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படைகொண்டு
    புகுந்தனன் நீலன்.
8

உரை
   
 
தரீமுகன் வருகை

4522.மா கரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடி
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்.
9

உரை
   
 
கயன் வருகை

4523.இளைத்து வேறு ஒரு மாநிலம்
    வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர
    கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ்சினத்து அரி இனம்
    வெருவுற விழிக்கும்
அளக்கரோடும் அக்கயன் எனும்
    பெயரன் வந்து அடைந்தான்.
10

உரை
   
 
சாம்பவான் வருகை

4524.ஆயிரத்து அறுநூறு கோடியின்
    கடை அமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு
    பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர
    தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன்
    என்பவனும் வந்து இறுத்தான்.
11

உரை
   
 
துன்முகன் வருகை

4525.வகுத்த தாமரை மலர் அயன்
    நிசிசரர் வாழ்நாள்
உகுத்தி நீயெனப் பொரு அரும்
    பெருவலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப்
    பத்தியின் இரட்டி
தொகுத்த கோடி வெம்படை கொண்டு
    துன்முகன் தொடர்ந்தான்.
12

உரை
   
 
துமிந்தன் வருகை

4526.கோடி கோடி நூறாயிர
    எண் எனக் குவிந்த
நீடு வெஞ்சினத்து அரி இனம்
    இருபுடை நெருங்க
மூடும் உம்பரும், இம்பரும்,
    பூழியில் மூழ்க
தோடு இவர்ந்த தார்க் கிரிபுரை
    துமிந்தனும் தொடர்ந்தான்.
13

உரை
   
 
மயிந்தன் வருகை

4527.இயைந்த பத்து நூறாயிரப்
    பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ்சின வானரப்
    படையொடும் ஒருங்கே
சயம் தனக்கு ஒரு வடிவு எனத்
    திறல்கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன்
    தன்னொடும் வந்தான்.
14

உரை
   
 
குமுதன் வருகை

4528.கறங்கு போல்வன காற்றினும்
    கூற்றினும் கடிய,
பிறங்கு தணெ் திரை கடல்புடை
    பெயர்ந்து எனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது
    கோடி எண் வகுத்த
திறம் கொள், வெஞ்சினப் படைகொடு
    குமுதனும் சேர்ந்தான்.
15

உரை
   
 
பதுமுகன் வருகை

4529.ஏழின் ஏழு நூறாயிர
    கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள்கிளர்
    படைகொண்டு பரவை
ஊழி பேரினும் உலைவு இல
    உலகினில் உயர்ந்த
பூழி விண்புகப் பதுமுகன்
    என்பவன் புகுந்தான்.
16

உரை
   
 
இடபன் வருகை

4530.ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற
    உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்வு இலாத்
    தடவரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலிகொள்
    தொள்ளாயிர கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும்
    இடபனும் படர்ந்தான்.
17

உரை
   
 
தீர்க்கபாதன் முதலியோர் வருகை

4531.தீர்க்கபாதனும், வினதனும்,
    சரபனும் திரைக்கும்
மால் கருங்கடற்கு உயர்ந்துள
    மைம்முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ணருங் கோடி கொண்டு,
    அண்டமும் புறமும்,
போர்க்கும் பூழியில் மறைதர,
    முறையினின் புகுந்தார்.
18

உரை
   
 
அனுமன் வருகை

4532.கை அஞ்சு ஆயுதம் உடைய அக்
    கடவுளைக் காண
மெய் அஞ்சாதன மாதிரம்
    சிறிது என விரிந்த,
வையம் சார்வரத் திரிதரு
    வானர சேனை
ஐ அஞ்சு ஆயிர கோடி கொண்டு
    அனுமன் வந்து அடைந்தான்.
19

உரை
   
 
நளன் வருகை

4533.நொய்தின் கூடிய சேனை,
    நூறாயிர கோடி
எய்த, தேவரும், ‘என்கொலோ
    முடிவு? ‘என்பது என்ன
மையல் சிந்தையால் அந்தகன்
    மறுக்கு உற்று மயங்க,
தயெ்வத் தச்சன் மெய்த்திரு நெடுங்
    காதலன் சேர்ந்தான்.
20

உரை
   
 
கும்பன் சங்கன் முதலியோர் வருகை

4534.கும்பனும் குலச் சங்கனும்
    முதலினர், குரங்கின்
தம் பெரும்படைத் தலைவர்கள்
    தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண் அரிது;
    இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று
    உரைப்ப அரிது அளவே
21

உரை
   
 
வானரப் படையின் சிறப்பு (4535-4537)

4535.தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும்.
22

உரை
   
 
4536.எண்ணின், நான்முகர்
    எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி
    உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின்
    கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர
    சேனையின் வரம்பே.
23

உரை
   
 
4537.ஒடிக்குமேல், வடமேருவை
    வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக
    முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும்
    கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும்
    குடங்கையின் குடிக்கும்.
24

உரை
   
 
படைத் தலைவர் வருகை

4538.ஆறு பத்து எழு கோடியாம்,
    வானரர்க்கு அதிபர்,
கூறு திக்கினுக்கு அப்புறம்
    குப்புறற்கு உரியார்,
மாறு இல் கொற்றவன் நினைத்தன
    முடிக்குறும் வலியர்,
ஊறும் இப்பெரும் சேனைகொண்டு
    எளிதின் வந்துற்றார்.
25

உரை
   
 
வந்த படைத் தலைவர் சுக்கிரீவனை வணங்குதல்

4539.ஏழு மாகடல் பரப்பினும்
    பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு, அவ்
    வீரரும் துவன்றி,
‘ஆழி மாபரித் தேரவன்
    காதலன் அடிகள்
வாழி! வாழி! ‘என்று உரைத்து அலர்
    தூவினர், வணங்கி.
26

உரை
   
 
சுக்கிரீவன் சேனையைக் காணுமாறு இராமனை வேண்டுதல்

4540.அனையது ஆகிய சேனை வந்து
    இறுத்தலும் அருக்கன்
தனையன் நொய்தினின் தயரதன்
    புதல்வனைச் சார்ந்தான்;
‘நினையும் முன்னம் வந்து அடைந்தது,
    நின்பெருஞ் சேனை;
வினையின் கூற்றுவ! கண்டருள்
    நீ ‘என விளம்ப.
27

உரை
   
 
வானரப் படை காண இராமன் மலைச் சிகரத்தை யடைதல்

4541.ஐயனும் உவந்து, அகம் என
    முகம் மலர்ந்து அருளி,
தையலாள் வரக் கண்டனன்
    ஆம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஒர் நெடுவரைச்
    சிகரத்தின் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும்
    அச்சேனையின் மீண்டான்.
28

உரை
   
 
சேனை இயங்குமாறு ஒழுங்குபடுத்திச் சுக்கிரீவன் படைத் தலைவரோடு மீளுதல்

4542.அஞ்சொடு ஐ இரண்டு யோசனை
    அகலத்தது ஆகி,
செஞ்செவே வடதிசை நின்று
    தனெ்திசை செல்ல,
எஞ்சலில் பெருஞ்சேனையை
    ‘எழுக ‘என ஏவி,
வெஞ்சினப் படைவீரரை
    உடன் கொண்டு மீண்டான்.
29

உரை
   
 
சுக்கிரீவன் இராமனுக்கு வானரப் படையைக் காட்டுதல்

4543.மீண்டு இராமனை அடைந்து ‘இகல்
    வென்றிவேல் வீர!
காண்டி நீ ‘என வரன்முறை
    தரெிவு உறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து
    எழுந்ததை அன்றே,
ஈண்டு சேனை, பால் எறிகடல்
    நெறி படர்ந்து என்ன.
30

உரை
   
 
வானரப் படையின் இயக்கத்தால் புழுதி எழுதல்

4544.எட்டுத் திக்கையும் இருநிலப்
    பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறிகடல்
    அனைத்தையும், மறைப்பத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய
    தூளியின் பூழி,
இட்டுச் செம்மிய நிறைகுடம்
    ஒத்தது இவ் அண்டம்.
31

உரை
   
 
படையின் அளவின்மை

4545.அத்தி ஒப்பு எனின் அன்னவை
    உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம்
    உவமை வேறு யாதோ?
பத்து இரட்டி நன்பகல் இரவு
    ஒருவலர் பார்ப்பார்,
எத் திறத்தினும் நடுவு கண்டிலர்
    முடிவு எவனோ?
32

உரை
   
 
படையைப் பற்றி இராம இலக்குவர் உரையாடல் (4446-4452)

4546.விண்ணின், தீம் புனல் உலகத்தின்,
    நாகரின், வெற்றி
எண்ணின், தான் அலது ஒப்பு இலன்
    என நின்ற இராமன்,
கண்ணின், சிந்தையின், கல்வியின்,
    ஞானத்தின், கருதி,
அண்ணல் தம்பியை நோக்கினன்
    உரை செய்வதானான்.
33

உரை
   
 
4547.‘அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு
    நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் : இனி முடியுறக்
    காணுமாறு உளதோ?
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்!
    மண்ணிடை மாக்கள்
“கடல் கண்டோம் “ என்பர், யாவரே
    முடிவுறக் கண்டார்?
34

உரை
   
 
4548.‘ஈசன் மேனியை ஈர் ஐந்து
    திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம்பெரும்
    பூதத்தை அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள்
    பிணக்குறும் பிணக்கை,
வாசமாலையாய்! யாவரே
    முடிவு எண்ண வல்லார்?
35

உரை
   
 
4549.‘இன்ன சேனையை முடிவுற
    இருந்து இவண் நோக்கி,
பின்னைக் காரியம் புரிதுமேல்,
    நாள்பல பெயரும்;
உன்னிச் செய்கைமேல் ஒருப்படல்
    உறுவதே உறுதி ‘
என்ன வீரனைக் கைதொழுது
    இளையவன் இயம்பும்.
36

உரை
   
 
4550.யாவது எவ் உலகத்தினின்
    ஈங்கு இவர்க்கு இயலாது
ஆவது; ஆகுவது அரியது ஒன்று
    உளது எனல் ஆமே?
தேவ! தேவியைத் தேடுவது
    என்பது சிறிதால்;
பாவம் தோற்றது, தருமமே
    வென்றது, இப்படையால்.
37

உரை
   
 
4551.தரங்க நீர் எழும் தாமரை
    நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில்,
    மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால்வரை உயிர் படைத்து
    எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு, உறை இடப்
    படைத்தன கொல்லாம்?
38

உரை
   
 
4552.‘ஈண்டு தாழ்க்கின்றது என், இனி
    எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில்
    செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்! ‘என்றனன்
    இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு,
    ஒருமொழி புகலும்.
39

உரை