4627.போயினார்; போயபின் புறந் நெடும் திசைகள்தோறு
ஏயினான் இரவி காதலனும்; ஏயின பொருட்கு
ஆயினார் அவரும்; அங்கு அன்னநாள் அவதியில்
தாயினார் உலகினைத் தகைநெடுந் தானையார்.
1

உரை
   
 
4628.குன்று இசைத்தன எனக்
    குலவுதோள் வலியினார்
மின் திசைத்திடும் இடைக்
    கொடியை நாடினர் விராய்
வன்திசைப் படரும் ஆறு
    ஒழிய, வண் தமிழ் உடைத்
தனெ் திசைச் சென்றுளார்
    திறன் எடுத்து உரை செய்வாம்.
2

உரை
   
 
விந்திய மலையில் தேடுதல் (4629-4632)

4629.சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு
இந்து யாறு எய்தலான் இறைவன் மா மௌலி நேர்
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால்.
3

உரை
   
 
4630.அந் நெடுங் குன்றமோடு அவிர் மணிச் சிகரமும்
பொன்நெடுங் கொடுமுடிப் புரைகளும் புக்குமுன்
நல்நெடுந் தோகையை நாடினார் நவை இலார்
பல் நெடுங் காலம் ஆம் என்னா ஓர் பகல் இடை.
4

உரை
   
 
4631.மல்லல் மாஞாலம் ஓர் மறு உறா வகையின் அச்
சில் அல் ஓதியை இருந் துறைவிடம் தேடினார்
புல்லினார் உலகினைப் பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆடுமாறு ஏகினார்.
5

உரை
   
 
4632.விண்டு போய் இழிவ மேல் நிமிர்வ விண்படர்வ வேர்
உண்ட மாமரனின் அம்மலையின்வாய் உறையுநீர்
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினோர்
கண்டிலாதன அயன் கண்டிலாதன கொலாம்.
6

உரை
   
 
நருமதையாற்றை அடைந்து தேடுதல் (4633-4636)

4633.ஏகினார் ஓசனை ஏழ் ஒடு ஏழு; பார்
சேகரத் தனெ்திசைக் கடிது செல்கின்றார்
மேக மாலையினொடும் விரவி மேதியின்
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார்.
7

உரை
   
 
4634.அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர்
முன்னி ஆடு இடங்களும் சுரும்பு மூசுதேன்
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார்.
8

உரை
   
 
4635.பெறல் அருந் தரெிவையை நாடும் பெற்றியார்
அறல் நறுங் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறைநறுந் தாமரை முகமும் நித்தில
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார்.
9

உரை
   
 
4636.செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்
தரும தயாவினைத் தழுவும் தன்மையர்
பொரு மதயானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆகிய நதியும் நீங்கினார்.
10

உரை
   
 
ஏமகூட மலை அடைதலும் அம்மலையின் சிறப்பும் (4637-4641)

4637.தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம
நாம கூடப் பெருந்திசையை நல்கிய
வாம கூடச் சுடர்மணி வயங்குறும்
ஏமகூடத் தடம் கிரியை எய்தினார்.
11

உரை
   
 
4638.மாடு உறு கிரிகளும் மறனும் மற்றவும்
சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப்
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது;
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது.
12

உரை
   
 
4639.பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனகம் நுண் தூளி ஒட்டலால்
நிறைநெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய்ப்
புறம்நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது.
13

உரை
   
 
4640.பரவிய கனகநுண் பராகம் பாடு உற
எரிசுடர்ச் செம்மணி ஈட்டத்து ஊடு வீழ்
அருவியும் நதிகளும் அலங்கு தீ இடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது.
14

உரை
   
 
4641.விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள்வளைப்
பஞ்சின்மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது.
15

உரை
   
 
அம்மலையை வானரர் இராவணன் இடம் என அயிர்த்தல் (4642-4644)

4642.அனையது நோக்கினார் ‘ஆம்; இது ஆம் அயில்
வினையினன் இராவணன் இருக்கும் வெற்பு ‘எனும்
நினைவினர் உவந்து உவந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார்.
16

உரை
   
 
4643.‘இம்மலை காணுதும் ஏழை மானை அச்
செம்மலை நீக்குதும் சிந்தைத் தீது ‘என
விம்மல் உற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அம்மலை ஏறினார் அச்சம் நீங்கினார்.
17

உரை
   
 
4644.இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
விரிந்த கோளரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவைக் காண்கிலார்
பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என.
18

உரை
   
 
சீதையைக் காணாராய் இறங்குதல்

4645.ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரைத் தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய
செம்பொன் நல்கிரியை ஓர் பகலில் தேடினார்;
கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார்.
19

உரை
   
 
அங்கதன் முதலியோர், சீதையைத் தேடுமாறு சேனையைத் தனியே அனுப்புதல்

4646.வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையைத்
‘தெள்ளுநீர் உலகு எலாம் திரிந்து தேடி நீர்
எள் அரும் மகேந்திரத்து எம்மில் கூடும் ‘என்று
உள்ளினார் உயர்நெடும் ஓங்கல் நீங்கினார்.
20

உரை
   
 
அனுமன் முதலியோர் ஒரு சுரத்தை அடைதல்

4647.மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
போர்கெழு வீரரே குழுமிப் போகின்றார்;
நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தைத் துன்னினார்.
21

உரை
   
 
சுரத்தின் வெம்மை

4648.புள் அடையா; விலங்கு அரிது; புல்லொடும்
கள் உடை மரன் இல; கல்லும் தீந்து உகும்;
உள்ளிடை யாவும் நுண் பொடியொடு ஓடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது
22

உரை
   
 
சுரத்தில் வானரர் படும் அல்லல் (4649-4650)

4649.நல் புலன் நடுக்குற உணர்வு நாம் உறப்
பொன்பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார்
தனெ்புலம் தங்கு எரி நரகில் சிந்திய
என்பு இல்பல் உயிர் என வெம்மை எய்தினார்.
23

உரை
   
 
4650.நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டு தோறு
ஊட்டிய வெம்மையால் உலையுங் காலினர்;
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார்.
24

உரை
   
 
வானரர் பிலத்தில் புகுதல் (4651-4653)

4651.ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவில் பீழையார்
பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார் பல
விதங்களால் நெடும்பில வழியின் மேவினார்.
25

உரை
   
 
4652.‘மீச் செலவு அரிது : இனி விளியின் அல்லது;
தீச் செலவு ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய்ச் செலல் நன்று ‘என மனத்தின் எண்ணினார்;
‘போய்ச் சில அறிதும் ‘என்று அதனில் புக்கனர்.
26

உரை
   
 
4653.அக்கணத்து அப் பிலத்து அகணி எய்தினார்
திக்கினோடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள்
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏம் உறப்
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார்.
27

உரை
   
 
வானரர் இருளில் வருந்துதல்

4654.எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள்
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார்.
28

உரை
   
 
வானரர் தம்மைக் காக்குமாறு அனுமனை வேண்டல்

4655.நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
பொன்றினம் யாம் எனப் பொருமு புந்தியார்
‘வன்திறல் மாருதி! வல்லையோ எமை
இன்று இது காக்க? ‘என்று இரந்து கூறினார்.
29

உரை
   
 
4656.‘உய்வுறுத்துவென் மனம் உலையிர்; ஊழின் வால்
மெய் உறப் பற்றுதிர்; விடுகிலீர் ‘ஏன
ஐயன் அக்கணத்தினில் அகலும் நீள்நெறி
கையினில் தடவி வெங்காலின் ஏகினான்.
30

உரை
   
 
4657.பன்னிரண்டு யோசனை
    படர்ந்த மெய்யினன்,
மின் இரண்டு அனைய
    குண்டலங்கள் வில் இடத்,
துன் இருள் தொலைந்திடத்
    துரிதத்து ஏகினான்
பொன் நெடுங் கிரிகள் போல்
    பொலிந்த தோளினான்.
31

உரை
   
 
வானரர் அங்கு ஒரு நகரைக் காணுதல்

4658.கண்டனர் கடிநகர் கமலத்து ஒண்கதிர்
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது;
விண்தலம் நாணுற விளங்குகின்றது;
புண்டரிகத்தவள் வதனம் போன்றது.
32

உரை
   
 
அந் நகரின் சிறப்பு (4659-68)

4659.கற்பகக் கானது; கமலக் காடது;
பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது;
அற்புதம் அமரரும் எய்தலாவது;
சிற்பியாம் மயன் மனம் வருந்திச் செய்தது.
33

உரை
   
 
4660.இந்திர நகரமும் இணை இலாதது;
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து எழுசுடர் அவை இன்று ஆயினும்
உந்தரும் இருள் துரந்து ஒளிர நிற்பது.
34

உரை
   
 
4661.புவிபுகழ் சென்னி பேர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனை எனக் கனக ராசியும்
சவி உடைத் தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழைக் குப்பையும் அளவு இலாதது.
35

உரை
   
 
4662.பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்பு உடை மைந்தர்கள் இயக்கு இலாமையால்
துயிலவும் நோக்கவும் துணையது அன்றியே
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது.
36

உரை
   
 
4663.அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ்நிகர் நறவமும் தனித்தண் தேறலும்
இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வு உற துவன்றிய கணக்கு இல் கொட்பது.
37

உரை
   
 
வானரர் அந்நகரத்துப் புகுதல்

4664.கன்னிநெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்;
‘இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் ‘என்று
உன்னி உரை ஆடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதன் ஊடு இனிது புக்கார்.
38

உரை
   
 
அந்நகரத்தின் தன்மை (4665-4666)

4665.புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்;
மக்கள்கடை தேவர்தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எக்குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார்.
39

உரை
   
 
4666.வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்
காவும் உள; காவி விழியார்கள்மொழி என்னக்
கூவும் இளமென் குயில்கள் பூவை கிளி கோலத்
தூவிமட அன்னம் இவை உள்ள சுவடு இல்லை.
40

உரை
   
 
அந்நகரைப் பற்றி வானரர் பல எண்ணித் திகைத்தல் (4667-4668)

4667.ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
‘மாயை கொல் ‘எனக் கருதி மற்றும் நினைவு உற்றார்
‘தீய பிலனுள் பிறவி சென்ற இது அன்றோ
தூயது துறக்கம்? ‘என நெஞ்சு துணிவு உற்றார்.
41

உரை
   
 
4668.“இறந்திலம்; இதற்குரியது
    எண்ணியிலம், ஏதும்
மறந்திலம்; அயிர்ப்பினொடு
    இமைப்பு உளம்; மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய
    செய்த பிழை இன்றால்;
திறம் தரெிவது என்? ‘‘ என
    இசைத்தனர் திகைத்தார்.
42

உரை
   
 
சாம்பன் கலங்கிக் கூறுதல்

4669.சாம்பன் அவன் ஒன்று உரை
    செய்வான், ‘எழுசலத்தால்,
காம்பு அனைய தோளியை
    ஒளித்த படு கள்வன்,
நாம் புக அமைத்த பொறி
    நன்று; முடிவு இன்றால்;
ஏம்பல் இனி மேலை விதியால்
    முடியும் ‘என்றான்.
43

உரை
   
 
அனுமன் கூறும் ஆறுதல் மொழி

4670.‘இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்;
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்கக்
கொன்று எழுதும்; அஞ்சல் ‘என மாருதி கொதித்தான்.
44

உரை
   
 
நகர நடுவில் சுயம்பிரபையைக் காணுதல்

4671.மற்றவரும் மற்று அது மனக்கொள வலித்தார்;
உற்றனர் புரத்தின் இடை; ஒள் சுடரின் உள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றைவிரி பொன் சடையினாளை எதிர் கண்டார்.
45

உரை
   
 
சுயம்பிரபையின் தோற்றம் (4672-4676)

4672.மருங்கு அலச வற்கலை வரிந்து வரிவாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசப்
பெருங் கலை மதித்திரு முகத்த பிறழ் செங்கேழ்
கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண.
46

உரை
   
 
4673.தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்
ஊருவின் ஒடுங்கு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்கு உற உயிர்ப்பு இடை பரிப்ப.
47

உரை
   
 
4674.தாமரை மலர்க்கு உவமை சால்வுறு தளிர்க்கை
பூமருவு பொன் செறி குறங்கு இடை பொருந்த
காமம் முதல் உற்ற பகை கால்தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல.
48

உரை
   
 
4675.நெறிந்துநிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றது தலத்தின் நெறி செல்லப்
பறிந்து வினை பற்று அற மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயரக் கருணை கண்வழி பிறங்க.
49

உரை
   
 
சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறல்

4676.இருந்தனள் இருந்தவளை
    எய்தினர் இறைஞ்சா
அருந்ததி எனத்தகைய
    சீதை அவள் ஆகப்
பரிந்தனர்; பதைத்தனர்;
    பணித்த குறி, பண்பின்
தரெிந்து உணர்தி; மற்று இவள் கொல்
    தேவி? ‘எனலோடும்.
50

உரை
   
 
அனுமன் கூறுகின்றான்

4677.‘எக்குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்?
இக் குறியுடைக் கொடி இராமன் மனையாேளா?
அக்கு வடம் முத்தம் மணி ஆரம் அதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும் ‘என மாருதி உரைத்தான்.
51

உரை
   
 
சுயம்பிரபை வானரரை யார் என வினவுதல்

4678.அன்ன பொழுதின்கண் அவ்
    அணங்கும் அறிவுற்றாள்;
முன் அனையர் சேறல் முறை
    அன்று, என முனிந்தாள்;
‘துன் அரிய பொன் நகரியின்
    உறைவிர் அல்லீர்;
என்ன வரவு? யாவர்? உரைசெய்க ‘
    என இசைத்தாள்.
52

உரை
   
 
வானரர் கூறுகின்றனர்

4679.‘வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்;
சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று
ஏதம் இல் அறத்துறை நிறுத்திய இராமன்
தூதர் உலகில் திரிதும் ‘என்னும் உரை சொன்னார்.
53

உரை
   
 
சுயம்பிரபையின் மகிழ்ச்சி

4680.என்றலும்; இருந்தவள் எழுந்தனள் இரங்கிக்
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்;
‘நன்று வரவு ஆக! நடனம்புரிவல் ‘என்னா
நின்றனள்; நெடுங்கண் இணை நீர் கலுழி கொள்ள.
54

உரை
   
 
சுயம்பிரபை வினாவும் அனுமன் விடையும்

4681.‘எவ் உழை இருந்தனன் இராமன்? ‘
    என, யாணர்ச்
செவ் உழை நெடுங் கண் அவள்
    செப்பிடுதலோடும்,
அவ் உழை நிகழ்ந்ததனை
    ஆதியினோடு அந்தம்,
வெவ் விழைவு இல் சிந்தை நெடு
    மாருதி விரித்தான்.
55

உரை
   
 
சுயம்பிரபை வானரர்க்கு விருந்தளித்தல்

4682.கேட்டு அவளும், ‘என்னுடைய
    கேடு இல் தவம் இன்னே
காட்டியது வீடு! ‘என
    விரும்பி நனி கால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன்
    அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர
    இன் உரை உரைத்தாள்.
56

உரை
   
 
அனுமன் வினவச் சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல் (4683-4690)

4683.மாருதியும் மற்று அவள் மலர்ச் சரண் வணங்கி
யார் இ(ந்) நகருக்கு இறைவர்? யாதுநின் இயல் பேர்?
‘பார்புகழ் தவத்தினை! பணித்து அருளுக ‘என்றான்;
சோர்குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள்.
57

உரை
   
 
4684.‘நூல் முகம் நுனித்த நெறி நூறுவர நொய்தா
மேல் முகம் நிமிர்த்து வெயில் காலொடு விழுங்கா
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ(ம்) மாநகரம் நல்லோய்.
58

உரை
   
 
4685.‘அன்னது இது; தானவன்
    அரம்பையருள், ஆங்கு ஓர்,
நல் நுதலினாள் முலை
    நயந்தனன்; அ(ந்)நல்லாள்
என் உயிர் அனாள்; அவளை
    யான், அவன் இரப்ப,
பொன் உலகில் நின்று, ஒளிர்
    பிலத்திடை புணர்த்தேன். ‘
59

உரை
   
 
4686.‘புணர்ந்து, அவளும் அன்னவனும்,
    அன்றில் விழைபோகத்து
உணர்ந்திலர், நெடும்பகல் இம்
    மாநகர் உறைந்தார்;
கணம் குழையினாெளாடு உயர்காதல்
    ஒருவாது உற்று,
இணங்கிவரு பாசம் உடையேன்
    உடன் இருந்தேன். ‘
60

உரை
   
 
4687.‘இருந்து, பல நாள் கழியும்
    எல்லையினில், வல்லோய்!
திருந்து இழையை நாடிவரு
    தேவர் இறை சீறிப்,
பெருந் திறலினானை உயிர்
    உண்டு, “பிழை “ என்று, அம்
முருந்து நிகர் மூரல் நகையாளையும்,
    முனிந்தான். ‘
61

உரை
   
 
4688.‘முனிந்து அவளை, “உற்ற செயல்
    முற்றும் மொழிக “ என்ன,
கனிந்த துவர் வாயவளும்
    என்னை, இவள் கண்ணா
வனைந்து முடிவு உற்றது என
    மன்னனும் இது எல்லாம்
நினைந்து ‘இவண் இருத்தி நகர்
    காவல் நினது ‘என்றான். ‘
62

உரை
   
 
4689.என்றலும்; வணங்கி, ‘இருள்
    ஏகும் நெறி எந்நாள்?
ஒன்று, உரை, எனக்கு முடிவு ‘‘
    என்று உரை செயாமுன்,
“வன்திறல வானரம்
    இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர் ‘‘
    என்று, அவன் அகன்றான்.
63

உரை
   
 
4690.‘உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ?
வண்ண மணி ஆடை உள; மற்றும் உள பெற்றேன்;
அண்ணல்! அவை விட்டு உமை அடைந்திடுதல் வேண்டி
எண் அரிய பல்பகல் இருந்தவம் இழைத்தேன்.
64

உரை
   
 
4691.‘ஐ இருபது ஓசனை
    அமைந்த பிலம், ஐயா!
மெய் உளது; மேல் உலகம்
    ஏறும் நெறி காணேன்;
உய்யும் நெறி உண்டு, உதவுவீர்
    எனின்; உபாயம்
செய்யும் வகை சிந்தையில்
    நினைத்திர், சிறிது ‘என்றாள்.
65

உரை
   
 
அனுமனின் மறுமொழி

4692.அன்னது சுயம்பிரபை
    கூற, அனுமானும்
மன்னுபுலன் வென்றுவரும்
    மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி, ‘நனி
    வானவர்கள் சேரும்
பொன் உலகம் ஈகுவல்,
    நினக்கு ‘எனல் புகன்றான்.
66

உரை
   
 
அவ்வாறே செய்ய அனுமனை வானரரும் வேண்டல்

4693.‘முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப்
பிழைத்து உயிர் உயிர்க்க அருள்செய்த பெரியோனே!
இழைத்தி செயலாய வினை ‘என்றனர் இரந்தார்;
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான்.
67

உரை
   
 
அனுமன் பேருருக் கொண்டு பிலத்தைப் பிளத்தல் (4694-4696)

4694.‘நடுங்கன்மின் ‘எனும் சொலை
    நவின்று, நகை நாற
மடங்கலின் எழுந்து, மழை
    ஏறு அரிய வானத்து
ஒடுங்கலில் பிலம் தலை
    திறந்து உலகொடு ஒன்ற
நெடுங்கைகள் பெயர்த்து,
    நெடுவான் உற நிமிர்ந்தான்.
68

உரை
   
 
4695.எருத்து உயர் சுடர்ப்புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இப்படி இடந்து உற வளர்ந்தான்;
கருத்து நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க
உருத்து உலகு எடுத்த கருமாவினையும் ஒத்தான்.
69

உரை
   
 
4696.மா வடிவுடைக் கமல
    நான்முகன் வகுக்கும்
தூ வடிவுடைச் சுடர் கொள்
    விண்தலை தொளைக்கும்
மூ அடி குறித்து முறை
    ஈர் அடி முடித்தான்
பூ வடிவுடைப் பொருவு இல்
    சேவடி புரைந்தான்.
70

உரை
   
 
அனுமன், பிலத்தின் மேற்பகுதியை மேல் கடலில் எறிதல்

4697.ஏழ் இருபது ஓசனை இடந்து படியின் மேல்
ஊழ் உற எழுந்ததனை உம்பரும் ஒடுங்கப்
பாழிநெடு வன் பிலனுள் நின்று படர் மேல்பால்
ஆழியில் எறிந்து அனுமன் மேகம் என ஆர்த்தான்.
71

உரை
   
 
சுயம்பிரபை பொன்னுலகம் போதல்

4698.இன்றும் அது மேல்கடல்
    இயக்கு இல் பில தீவா
நின்று நிலை பெற்று உளது;
    நீள் நுதலியோடும்
குன்று புரை தோளவர்
    எழுந்து நெறி கொண்டார்;
பொன்திணி விசும்பின் இடை
    நல் நுதலி போனாள்.
72

உரை
   
 
வானரர் ஒரு பொய்கைக் கரையை அடைதல்

4699.மாருதி வலித்தகையை பேசி மறவோரும்
பார் இடை நடந்து பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடை நெடுந்தகையும் மேலைமலை சென்றான்.
73

உரை