பொய்கையை அடைந்த வானரர் கனியும் காயும் தேனும் உண்டு உறங்கத் துமிரன் என்னும் அசுரன் அங்கே வருதல்

4700.கண்டார் பொய்கைக் கண் அகல்
    நல் நீர்க்கரை; காமுற்று
உண்டார் தேனும் ஒண் கனி
    காயும், ஒரு சூழல்
கொண்டார் அன்றே இன் துயில்;
    கொண்ட குறி உன்னித்
தண்டா வென்றித் தானவன்
    வந்தான் தகவு இல்லான்.
1

உரை
   
 
துமிரன் உருவத் தோற்றமும் ஆற்றலும் (4701-4703)

4701.மலையே போல்வான்; மா கடல்
    ஒப்பான்; மறம் முற்றக்
கொலையே செய்வான்; கூற்றை
    நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான், நீர்மை
    இலாதான்; நிமிர் திங்கள்
கலையே போலும் கால
    எயிற்றான் கனல் கண்ணான்.
2

உரை
   
 
4702.கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்
அருவி பாய்தரும் குன்றமே அனான்.
3

உரை
   
 
4703.வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ?
4

உரை
   
 
துமிரன் உறங்குகின்ற வானரரை அடைதல்

4704.பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான்
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான்.
5

உரை
   
 
துமிரன் அங்கதன் மார்பில் அடித்தல்

4705.‘பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது எனோ? ‘எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான்; காலனே அனான்.
6

உரை
   
 
அங்கதன் மோதத் துமிரன் இறத்தல்

4706.மற்று அம் மைந்தனும் உறக்கம் மாறினான்
‘இற்று இவன் கொல் ஆம் இலங்கை வேந்து ‘எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர்க்கு அந்தம் முற்றினான்.
7

உரை
   
 
துமிரன் அலறி விழுதலும் வானரர் துயில் நீங்கி எழுதலும்

4707.இடி உண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து
அடி உண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார்
பிடி உண்டார் எனத் துயிலும் பெற்றியார்.
8

உரை
   
 
அனுமன் வினாவும் அங்கதன் விடையும்

4708.‘யார்? கொல் ஆம் இவன்; இழைத்தது என்? ‘எனாத்
தாரை சேயினைத் தனி வினாயினான்
மாருதேயன்; மற்று அவனும் ‘வாய்மை சால்
ஆரியா! தரெிந்து அறிகிலேன் ‘என்றான்.
9

உரை
   
 
சாம்பவான் துமிரன் வரலாறு கூறல்

4709.‘யான் இவன் தனைத் தரெிய எண்ணினேன்
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே
ரான்; இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன் ‘எனச் சாம்பன் சாற்றினான்.
10

உரை
   
 
சூரியனுதித்தலும் வானரர் சீதையைத் தேடிச் செல்லுதலும்

4710.‘வேறும் எய்துவார் உளர்கொல்? ஆம் எனாத்
தேறி இன்துயில் செலவு தீர்ந்து உளார்
வீறு செஞ்சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற நாள் மலர்ப் பெண்ணை நாடுவார்.
11

உரை
   
 
வானரர் பெண்ணையாற்றை அடைதல்

4711.புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடம் அத்து
உண்ண ஆம்பல் இன் அமுதம் ஊறு வாய்
வண்ண வெள் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்.
12

உரை
   
 
பெண்ணையாற்றைச் சார்ந்த இடங்களில் வானரர் சீதையைத் தேடுதல்

4712.துறையும் தோகை நின்று ஆடு சூழலும்
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும் தெள்ளு பூந்தடமும் தணெ் பளிக்கு
அறையும் தேடினார் அறிவின் நீடினார்.
13

உரை
   
 
வானர வீரர் பெண்ணையாற்றின் கரையில் தங்குதல்

4713.அணி கொழித்து வந்து எவரும் ஆடினார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்தோறும் நன்
மணி கொழிப்பதன் கரையின் வைகினார்.
14

உரை
   
 
வானரர் பெண்ணையாறு கடந்து காடும் மலையும் தேடித் தசார்ண நாடடைதல்

4714.ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார்; நவையின் நண்ணலார்.
15

உரை
   
 
வானரர் விதர்ப்ப நாடடைந்து சீதையைத் தேடுதல் (4715-4716)

4715.தச நவப் பெயர்ச் சரள சண்பகத்து
அசந அப்புலத்து அகணி நாடு ஒரீஇ
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்பநாடு எளிதின் எய்தினார்.
16

உரை
   
 
4716.வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
பெய் தருப்பம் நூல் பிறழும் மேனியார்
செய் தவத்துளார் வடிவின் தேடினார்.
17

உரை
   
 
வானரர் தண்டகவனம் புகுதல்

4717.அன்ன தன்மையால் அறிஞர் நாடி; அச்
செந்நெல் வேலி சூழ் திரு நல்நாடு ஒரீஇத்
தன்னை எண்ணும் அத்தகை புகுந்துளார்
துன்னு தண்டகம் கடிது துன்னினார்.
18

உரை
   
 
வானரர் தண்டக வனத்தில் தேடி முண்டகத்துறை யடைதல்

4718.உண்டு அகத்துள் ஆய் உறையும் ஐம்பொறிக்
கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்
தண்டகத்தையும் தடவி ஏகினார்
முண்டகத் துறை கடிது முற்றினார்.
19

உரை
   
 
முண்டகத்துறைப் பெருமை (4719-4721)

4719.அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளைமா முலைக் கலவை கோதையில்
கள்ளும் நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா; புலவு தீர்தலால்.
20

உரை
   
 
4720.குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால்
விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலால்
அஞ்சுவார் கண்நீர் அருவி ஆறு அரோ.
21

உரை
   
 
4721.கமுக வார் நெடுங் கனக ஊசலில்
குமுத வாயினார் குயிலை ஏசுவார்
சமுக வாளியும் தனுவும வாழ் முகத்து
அமுத பாடலார் மருவி யாடுவார்.
22

உரை
   
 
வானர வீரர் முண்டகத்துறையில் சீதையைத் தேடி நீங்குதல்

4722.இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்
வினைய வார்குழல் திருவை மேவலார்
புனையும் நோயினார் கடிது போயினார்.
23

உரை
   
 
வானர வீரர் பாண்டு மலையினை அடைதல்

4723.நீண்ட மேனியான் நெடிய தாளின் நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்
பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார்.
24

உரை
   
 
பாண்டு மலையின் தோற்றம்

4724.இருள் உறுத்து மீது எழுந்த தெள்நிலா
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
உருள் உறுத்து திண் கயிலை ஒத்ததால்.
25

உரை
   
 
பாண்டு மலையில் தேடிச் சீதையைக் காணாது வானர வீரர் வருந்துதல்

4725.விண் உற நிவந்த சோதி
    வெள்ளி அம் குன்றம் மேவிக்
கண் உற நோக்கல் உற்றார்,
    களி உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ்வாய்ப்
    படை உறு நோக்கினாளை,
எண் உறு திறத்தும் காணார்,
    இடர் உறும் மனத்தர் எய்த்தார்.
26

உரை
   
 
வானர வீரர் கோதாவரியாற்றை அடைதல்

4726.ஊதை போல் விசையின் வெம் கண்
    உழுவைபோல் வயவர், ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார்,
    அரக்கனால் வஞ்சிப்பு உண்ட
சீதை போகின்றாள் கூந்தல்
    வழீ இவந்து, புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினைக்
    குறுகிச் சென்றார்.
27

உரை
   
 
கோதாவரியாற்றின் தோற்றம் (4727-4728)

4727.எழுகின்ற திரையிற்றாகி
    இழிகின்ற மணி நீர் யாறு,
தொழுகின்ற சனகன், வேள்வி
    தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின் ஈன்ற
    ஒரு மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி
    ஆம் எனப் பொலிந்தது அன்றே.
28

உரை
   
 
4728.ஆசு இல் பேர் உலகில், காண்போர்
    அளவை நூல் எனலும் ஆகிக்
காசொடு கனகம் தூவிக்
    கவின் உறக் கிடந்த கான் யாறு,
ஏசு போர் அரக்கன் மார்பின்
    இடைபறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக்கோள்
    ஈது என விளங்கிற்று அன்றே.
29

உரை
   
 
கோதாவரிச் சூழலில் சீதாபிராட்டியைக் காணாமையால் வானர வீரர் சுவணகத் துறையில் புகுதல்

4729.அந் நதி முழுதும் நாடி,
    ஆய் வளை மயிலை யாண்டும்
சந்நிதி உற்றிலாதார்,
    நெடிது பின்தவிரச் சென்றார்
இன்னது ஈது, இலாதது ஈது என்று
    யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும்
    சுவணகத் துறையில் புக்கார்.
30

உரை
   
 
சுவணகத் துறையிலும் குலிந்த தேசத்திலும் தேடி நீங்குதல்

4730.சுரும்பொடு தேனும் வண்டும்
    அன்னமும் துவன்று புள்ளும்
கரும்பொடு செந்நெல் காடும்
    கமல வாவிகளும் மல்கிப்
பெரும் புனல் மருதம் சூழ்ந்த
    கிடக்கை பின் கிடக்கச் சென்றார்,
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக்
    குலிந்தமும் புறத்துக் கொண்டார்.
31

உரை
   
 
கொங்கணம் முதலியவற்றைக் கடந்து அருந்ததி மலையினை அடைதல்

4731.கொங்கணம் ஏழும் நீங்கிக்
    குடகடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல்
    தண்புனல் தவிர ஏகித்
திங்களின் கொழுந்து சுற்றும்
    சிமய நீள் கோட்டுத் தேவர்
அம் கைகள் கூப்ப நின்ற
    அருந்ததிக்கு அருகர் ஆனார்.
32

உரை
   
 
அருந்ததி மலையையும் மரகத மலையையும் தேடிக் கடந்து வேங்கட மலை யடைதல்

4732.அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு
    அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார்,
    ஏகினார், இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந்தேன் மாறும்
    மரகதப் பெருங்குன்று எய்தி
இருந்து அதில் தீர்ந்து சென்றார்
    வேங்கடத்து இறுத்த எல்லை.
33

உரை
   
 
திருவேங்கட மலையின் பெருமை (4733-4735)

4733.முனைவரும் மறை வ(ல்)லோரும்
    முந்நைநாட் சிந்தை மூண்ட
வினைவரும் நெறியை மாற்றும்
    மெய் உணர்வோரும் விண்ணோர்
எனைவரும் அமரர் மாதர்
    யாவரும் சித்தர் என்போர்
அனைவரும் அருவி நல்நீர்
    நாளும் வந்து ஆடுகின்றார்.
34

உரை
   
 
4734.பெய்த ஐம்பொறியும் பெருங் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள்கணின்
எய்த வஞ்சக வாளியும் எண் அறச்
செய்தவம் பல செய்குநர் தேவரால்.
35

உரை
   
 
4735.வலம் கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன; மெய் நெறி
புலம் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ?
36

உரை
   
 
வானர வீரர் வேங்கட மலையில் முனிவரை வணங்குதல்

4736.ஆய குன்றினை எய்தி அருந்தவம்
மேய செல்வரை மேயினர் மெய்ந்நெறி
நாயகன்தனை நாளும் வணங்கிய
தூயர் நல் மலர்ப் பாதங்கள் சூடினார்.
37

உரை
   
 
வானர வீரர் வேங்கடம் நீங்கித் தொண்டை நாட்டிற் புகுதல்

4737.சூடி ஆண்டு அச் சுரிகுழல் தோகையைத்
தேடி வார்புனல் தணெ் திரைத் தண்டக
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினர்; வேண்டு உரு மேவுவார்.
38

உரை
   
 
தொண்டை நாட்டின் பெருமை (4738-4745)

4738.குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும் மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும் தணெ் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம்.
39

உரை
   
 
4739.சூல் அடிப் பலவின் தலை தூங்கு தேன்
கோல் அடிப்ப வெரீஇக் குல மள்ளர் ஏர்ச்
சால் அடித்தரும் சாலியின் வெண்முளை
தோல் அடிக் கிளை அன்னம் துவைப்பன.
40

உரை
   
 
4740.செருகு உறும் கணில் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு; ஆய்ச்சியர்
இரு குறங்கும் பிறங்கின வாழையில்
குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால்.
41

உரை
   
 
4741.தரெுவின் ஆர்ப்பு உறும் பல்லியம் தேர் மயில்
கருவிமா மழை என்று களிப்பு உறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா
மருவினார்க்கு மயக்கம் உண்டாகுமே?
42

உரை
   
 
4742.தேரை வன் தலைத் தஙெ்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன்தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே.
43

உரை
   
 
4743.நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்
வெள்ளி வால் வளை வீசிய வெண்மணி
அள்ளி ‘நாரை சினை பொரியாத ‘என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால்.
44

உரை
   
 
4744.சேட்டு இளங் கடுவன் சிறு புன்கையின்
கோட்ட தேம் பலவின் கனிக் கூன்சுளை
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்குதேன்
ஈட்டம் என்னச் சென்று ஈ இனம் மொய்ப்பன.
45

உரை
   
 
4745.செல்வர் என்றும் வடக்கு கலை தறெ்கு தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுளி படக்
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அவ்
இல் வரம்பின் தகைத் தனெும் மீட்டதே.
46

உரை
   
 
வானர வீரர் தண்டகநாடு கடந்து சோழநாடு அடைதல்

4746.அன்ன தண்டகநாடு கடந்து அகன்
பொன்னிநாடு பொரு இலர் எய்தினார்
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார்.
47

உரை
   
 
சோழநாட்டு வளம்

4747.கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரைவாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்பு உடைத் தீம் கனி
இடறுவார் நறுந்தேனின் இழுக்குவார்.
48

உரை
   
 
4748.குழுவு மீன் வளர் குட்டம் எனக் கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பேந்திரத்து
ஒழுகு சாற்று அகன் கூனையில் ஊழ்முறை
முழுகி நீர்க் கருங் காக்கை முளைக்குமே.
49

உரை
   
 
4749.பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
மீன் நெருங்குறும் வெள்ளம் என வெரீஇ
வானரங்கள் மரங்களின் வைகுமால்.
50

உரை
   
 
4750.தாறு நாறுவ வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ; தூங்குறும் மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ.
51

உரை
   
 
சோழநாடும் மலைநாடுங் கடந்த வானர வீரர் பாண்டியநாடு அடைதல்

4751.அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
மனையின் மாட்சி குலாம் மலைமண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தனெ் தமிழ்நாடு சென்று எய்தினார்.
52

உரை
   
 
பாண்டிய நாட்டுச் சிறப்பு

4752.அத் திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ?
எத்திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ?
53

உரை
   
 
தனெ்றமிழ்நாட்டிற் சீதையைத் தேடிக் காணாது வருந்திய வானர வீரர் மகேந்திரமலையை அடைதல் (4753-4754)

4753.என்ற தனெ் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து திருந்தினார்
பொன்றுவாரில் பொருந்தினர் போயினார்
துன்று அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்.
54

உரை
   
 
4754.வன் திசைக் களிறு அன்ன மகேந்திரக்
குன்று இசைத்தது வல்லையிற் கூடினார்
தனெ் திசைக் கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடுநெறி நீங்கினார்.
55

உரை