4818.‘பொய் உரை செய்யான் புள் அரசு ‘
    என்றே புகலுற்றார்,
‘கை உறை நெல்லித் தன்மையின்
    எல்லாம் கரை கண்டாம்,
உய் உரை பெற்றாம், நல்லவை
    எல்லாம் உற எண்ணிச்
செய்யுமின் ஒன்றோ, செய்வதை
    நொய்தின் செயவல்லீர். ‘
1

உரை
   
 
4819.‘மாள வலித்தேம்; என்றும் இம்
    மாளா வசையோடும்
மீளவும் உற்றேம்; அன்னவை
    தீரும் வெளி பெற்றேம்;
காள நிறத்தோடு ஒப்பவர்
    மாயக் கடல் தாவுற்று
ஆளும் நலத்தீர்! ஆளுமின்
    எம் ஆர் உயிர் அம்மா! ‘
2

உரை
   
 
4820.‘சூரியன் வெற்றிக் காதலனோடும்
    சுடர் வில் கை
ஆரியனைச் சென்றே தொழுது;
    உற்றது அறைகிற்பின்
சீரியது அன்று; தேருதல்
    கொற்றச் செயல் அம்மா!
வாரி கடப்போர் யாவர்? ‘எனத்
    தம் வலி சொல்வார்.
3

உரை
   
 
4821.‘வேதம் அனைத்தும் தேர்தர
    எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஓர் அடி
    வைத்துப் பொலிபோழ்து, யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை
    வைத்தே வர, மேரு
மோத இளைத்தே தாள் உலைவு
    உற்றேன் விறல் மொய்ம்பீர்! ‘
4

உரை
   
 
4822.‘ஆதலின், இப்பேர் ஆர்கலி
    குப்புற்று, அகழ் இஞ்சி
மீது கடந்து, அத் தீயவர்
    உட்கும் வினையோடும்
சீதை தனைத் தேர்ந்து, இங்கு
    உடன் மீளும் திறன் இன்று ‘என்று
ஓதி இறுத்தான், நாலு
    முகத்தான் உதவுற்றான்.
5

உரை
   
 
4823.நீலன் முதல் பேர் போர்கெழு
    கொற்ற நெடுவீரர்
சால உரைத்தார், வாரி
    கடக்கும் தகவு இன்மை;
‘வேலை கடப்பென், மீளமிடுக்கு
    இன்று ‘என விட்டான்,
வாலி அளிக்கும் வீர
    வயப்போர் வசை இல்லான்.
6

உரை
   
 
4824.‘யாம் இனி இப்போது ஆர் இடர்
    துய்த்து, இங்கு இனி யாரைப்
போம் என வைப்போம் என்பது
    புன்மை; புகழ் அன்றே;
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய
    கொற்றக் குமரா! நம்
நாமம் நிறுத்திப் பேர் இசை
    தைக்கும் நவை இல்லோன். ‘‘
7

உரை
   
 
4825.‘ஆரியன் முன்னர்ப் போதுற
    உற்ற அதனானும்,
காரியம் எண்ணிச் சோர்வு அற
    முற்றும் கடனானும்
மாருதி ஒப்பார் வேறு இலை ‘
    என்னா, அயன் மைந்தன்,
சீரியன் மல் தோள் ஆண்மை
    விரிப்பான், இவை செப்பும்.
8

உரை
   
 
4826.‘மேலை விரிஞ்சன் வீயினும்
    வீயா மிகைநாளீர்
நூலை நயந்து நுண்ணிது
    உணர்ந்தீர்; நுவல்தக்கீர்;
காலனும் அஞ்சும் காய்சின
    மொய்ம்பீர்; கடன் நின்றீர்;
ஆலம் நுகர்ந்தான் ஆம் என
    வெம்போர் அடர்கிற்பீர். ‘
9

உரை
   
 
4827.‘வெப்புறு செந்தீ நீர் வளியாலும்
    விளியாதீர்;
செப்புறு தயெ்வப் பல் படையாலும்
    சிதையாதீர்;
ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது
    இல்லீர்; ஒருகாலே
குப்புறின், அண்டத்து அப்புறமேயும்
    குதிகொள்வீர். ‘
10

உரை
   
 
4828.‘நல்லவும் ஒன்றோ, தீயவும்
    நாடி, நவைதீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம்
    நீரே துணிகிற்பீர்;
வெல்லவும் வல்லீர், மீளவும்
    வல்லீர்; மிடல் உண்டேல்
கொல்லவும் வல்லீர்; தோள்வலி
    என்றும் குறையாதீர். ‘
11

உரை
   
 
4829.‘மேரு கிரிக்கும் மீது உற
    நிற்கும் பெரு மெய்யீர்;
மாரி துளிக்கும் தாரை
    இடுக்கும் வர வல்லீர்;
பாரை எடுக்கும் நோன்மை
    வலத்தீர்; பழி அற்றீர்;
சூரியனைச் சென்று ஒண் கை
    அகத்தும் தொடவல்லீர். ‘
12

உரை
   
 
4830.‘அறிந்து, திறத்து ஆறு எண்ணி,
    அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை
    வெல்லும் மதிவல்லீர்;
பொறிந்து இமையாக்கோன் வச்சிர
    பாணம் புகமூழ்க
எறிந்துழி, இற்று ஓர் புன்மயிரேனும்
    இழவாதீர். ‘
13

உரை
   
 
4831.‘போர் முன் எதிர்ந்தால் மூ உல
    கேனும் பொருள் ஆகா;
ஓர்வு இல் வலம் கொண்டு
    ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்;
பார் உலகு எங்கும் பேர் இருள்
    சீக்கும் பகலோன் முன்,
தேர் முன் நடந்தே, ஆரிய
    நூலும் தரெிவுற்றீர். ‘
14

உரை
   
 
4832.‘நீதியின் நின்றீர்; வாய்மை
    அமைந்தீர்; நினைவானும்
மாதர் நலம் பேணாது
    வளர்ந்தீர்; மறை எல்லாம்
ஓதி உணர்ந்தீர்; ஊழி
    கடந்தீர்; உலகு ஈனும்
ஆதி அயன் தானே என
    யாதும் அறைகின்றீர். ‘
15

உரை
   
 
4833.‘அண்ணல் அமைந்தாற்கு அன்பு
    சிறந்தீர்; அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்;
    நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர்; செய்து
    முடிப்பீர்; சிதைவு இன்றால்;
புண்ணியம் ஒன்றே என்றும்
    நிலைக்கும் பொருள் கொண்டீர். ‘
16

உரை
   
 
4834.‘அடங்கவும் வல்லீர் காலம் அது
    அன்றேல்; அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன
    வலத்தீர்; மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ, முற்றும்
    முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ்வாய் ஊறு
    கிடைத்தால் இடையாதீர். ‘
17

உரை
   
 
4835.‘ஈண்டிய கொற்றத்து இந்திரன்
    என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும்
    பொறை யாலும்
பாண்டிதர் நீரே; பார்த்து இனிது
    உய்க்கும்படி வல்லீர்;
வேண்டிய போதே வேண்டுவ
    எய்தும் வினை வல்லீர். ‘
18

உரை
   
 
4836.‘ஏகுமின்; ஏகி, எம் உயிர்
    நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும்
    உய்யும்படி செய்யீர்;
சாகரம் முற்றும தாவிடும்
    நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர் ‘என்று
    விரிஞ்சன் மகன் விட்டான்.
19

உரை
   
 
4837.சாம்பன் இயம்பத் தாழ் வதனத்
    தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன
    சிரிப்பான், அறிவாளன்,
கூம்பலொடும் சேர் கைக்கமலத்தன்,
    குலம் எல்லாம்
ஏம்பல் வரத் தன் சிந்தை
    தரெிப்பான், இவை சொன்னான்.
20

உரை
   
 
4838.‘நீயிரே நினைவின் முன்னே
    நெடுந்திரைப் பரவை ஏழும்
தாய், உலகு அனைத்தும் வென்று,
    தையலைத் தருதற்கு ஒத்தீர்;
“போய் இது புரிதி “ என்று
    புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினிர் என்னின், என்னின்
    பிறந்தவர் யாவர் இன்னும்? ‘
21

உரை
   
 
4839.“‘இலங்கையை இடந்து வேரோடு
    இவ் வயின் தருக “ என்றாலும்,
“விலங்கினர் தம்மை எல்லாம்
    வேரொடும் விளிய நூறிப்
பொலங் குழை மயிலைக் கொண்டு
    போது ‘‘ எனப் புகன்றிட்டாலும்,
கலங்கலிர்! உரைத்த மாற்றம்
    முடிக்குவல் கடிது, காண்டிர். ‘
22

உரை
   
 
4840.‘ஓசனை ஒன்று நூறும்
    உள் அடி உள்ளதாக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப,
    இருங் கடல் இனிது தாவி,
வாசவன் முதலோர் வந்து
    மலையினும், இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி
    நினைத்தது முடிப்பல், பின்னும். ‘
23

உரை
   
 
4841.‘முற்றும் நீர் உலகம் முற்றும்
    விழுங்குவான் முழங்கி, முந்நீர்
உற்றதே எனினும், அண்டம்
    உடைந்துபோய் உயர்ந்த தேனும்,
இற்றை நும் அருளும், எம் கோன்
    ஏவலும், இரண்டு பாலும்
கற்றைவார் சிறைகள் ஆகக்
    கலுழனின் கடப்பல் காண்டிர். ‘
24

உரை
   
 
4842.‘ஈண்டு இனிது உறைமின், யானே
    எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல் காறும்;
    விடை தம்மின், விரைவின் ‘என்னா,
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த,
    அலர் மழை அமரர் தூவச்
சேண் தொடர் சிமயத் தயெ்வ
    மயேந்திரத்து உம்பர் சென்றான்.
25

உரை
   
 
4843.பொரு அரு வேலை தாவும்
    புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன்
    மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்,
உரு அறி வடிவின் உம்பர்
    ஓங்கினன், உவமை யாலும்
திருவடி என்னும் தன்மை
    யாவர்க்கும் தரெிய நின்றான்.
26

உரை
   
 
4844.பார்நிழல் பரப்பும் பொன் தேர்
    வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்
போர் நிழல் பரப்பும் மேலோர்
    புகழ் என உலகம் புக்குத்
தார் நிழல் பரப்பும் தோளான்,
    தடங்கடல் தாவா முன்னம்,
நீர் நிழல் உவரி தாவி
    இலங்கை மேல் செல்ல நின்றான்.
27

உரை
   
 
4845.பகு வாய மடங்கல் வைகும்
    படர் வரை முழுதும் மூழ்க
உகு வாய விடம் கொள் நாகத்து
    ஒத்த வால் சுற்றி, ஊழின்
நெகு வாய சிகர கோடி
    நெரிவன தரெிய நின்றான்,
மக ஆமை முதுகில் தோன்றும்
    மந்தரம் எனலும் ஆனான்.
28

உரை
   
 
4846.மின் நெடும் கொண்டல் தாளின்
    வீக்கிய கழலின் ஆர்ப்பத்
தன் நெடும் தோற்றம் வானோர்
    கண் புலத்து எல்லை தாவ,
வல் நெடும் சிகர கோடி
    மயேந்திரம், அண்டம் தாங்கும்
பொன் நெடும் தூணின் பாத
    சிலை எனப் பொலிந்து நின்றான்.
29

உரை