அநுமன் மகேந்திரத்துப் பேருருவோடு நின்ற நிலையில் துறக்க நாடு காண்டலும் கருதலும்

4848.ஆண் தகை ஆண்டு அவ் வானோர்
    துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை
    இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும்
    மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
‘காண் தகு கொள்கை உம்பர்
    இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.
1

உரை
   
 
இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல்

4849.‘கண்டனென் இலங்கைமூதூர்!
    கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற
    வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட
    வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும்
    அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.
2

உரை
   
 
அநுமன் தாளால் அழுந்திய மகேந்திரத்து நிகழ்ந்தவை (4850-4859)

4850.வன் தந்த வரிகொள் நாகம்
    வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும்
    புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற,
    நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப்
    பிதுங்கின குடர்கள் மான.
3

உரை
   
 
4851.புகல் அரும் முழையுள் துஞ்சும்
    பொங்கு உளைச் சிங்கம் பொங்கி,
உகல் அரும் குருதி கக்கி,
    உள் உற நெரிந்த; ஊழின்
அகல் அரும் பரவை நாண
    அரற்றுறு குரல ஆகிப்
பகல் ஒளி கரப்ப வானை
    மறைத்தன பறவை எல்லாம்.
4

உரை
   
 
4852.மொய் உறு செவிகள் தாழ்ந்து
    முதுகு உற, முறை கால் தள்ள,
மை உறு விசும்பின் ஊடு
    நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய மெல் என்
    பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் சுற்றிப்
    பிளிறின களிநல் யானை!
5

உரை
   
 
4853.பொன்பிறழ் சிமையக் கோடு
    பொடி உறப், பொறியும் சிந்த,
மின்பிறழ் குடுமிக் குன்றம்
    வெரிந் உற நெரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா,
    கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கௌவி,
    வல்லியம் இரிந்த மாதோ!
6

உரை
   
 
4854.தேக்கு உறு சிகரக் குன்றம்
    திரிந்து மெய் நெரிந்து சிந்தத்,
தூக்கு உறு தோலர், வாளர்,
    துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்கு உறு செருவில் நேர்ந்தார்
    தாளற வீசத் தாவி,
மேக்கு உற விசைத்தார் என்னப்
    பொலிந்தனர் விஞ்சை வேந்தர்!
7

உரை
   
 
4855.தாரகை, சுடர்கள், மேகம்,
    என்று இவை தவிரத் தாழ்ந்து,
பார் இடை அழுந்துகின்ற
    படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர்க் குவவுத் தோளான்
    கூம்பு எனக், குமிழி பொங்க,
ஆர்கலி அழுவத்து ஆழும்
    கலம் எனல் ஆயிற்று அன்றே!
8

உரை
   
 
4856.தாது உகு நறு மென் சாந்தம்,
    குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலம் தாது, என்று இத்
    தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி,
    அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீறிக்
    குருதி நீர் சொரிவது ஒத்த!
9

உரை
   
 
4857.கடல் உறும் மத்து இது என்னக்
    கன வரை திரியும் காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற
    மெய்த் தவர் விசும்பின் உற்றார்,
திடல் உறு கிரியில் தத்தம்
    செய்வினை முற்றி முற்றா
உடல் உறு பாசம் வீசா,
    உம்பர்ச் செல்வாரை ஒத்தார்.
10

உரை
   
 
4858.வெயில் இயல் குன்றம் கீறி
    வெடித்தலும், நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர்க்கை மாதர்
    தழீஇக் கொளப், பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத்
    திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத்
    தனித்தனிக் கடுத்தல் செய்தார்!
11

உரை
   
 
4859.ஊறிய நறவும், உற்ற
    குற்றமும், உணர்வை உண்ணச்,
சீறிய மனத்தர், தயெ்வ
    மடந்தையர், ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார்,
    அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த
    பைங் கிளிக்கு இரங்குகின்றார்!
12

உரை
   
 
அநுமன் கடல் கடக்க விரைதல்

4860.இத் திறம் நிகழும் வேலை,
    இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும்,
    முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும்,
    சுண்ணமும், மணியும், தூவி,
‘வித்தக! சேறி ‘என்றார்;
    வீரனும் விரைவது ஆனான்.
13

உரை
   
 
துணைவர் கூற்றும் தூயவன் இசைவும்

4861.‘குறு முனி குடித்த வேலை
    குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும்
    விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை
    அல்லை; நீ சேறி! ‘என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்;
    ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.
14

உரை
   
 
அநுமன் தன் உறுப்புக்களைத் தொழிற்படுத்து மேலெழுதல் (4862-4863)

4862.‘இலங்கையின் அளவிற்று அன்றால்,
    இவ் உரு எடுத்த தோற்றம்!
விலங்கவும் உளதன்று! ‘என்று,
    விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து,
    அடித்துணை அழுத்தலோடும்,
பொலம் கெழு மலையும், தாளும்,
    பூதலம் புக்க மாதோ!
15

உரை
   
 
4863.வால் விசைத்து எடுத்து, வன் தாள்
    மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோல் விசைத் தோள்கள் பொங்கக்
    கழுத்தினைச் சுருக்கித் தூண்டும்
கால் விசைத் தடக்கை நீட்டி,
    கண்புலம் கதுவா வண்ணம்,
மேல் விசைத்து எழுந்தான், உச்சி
    விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்.
16

உரை
   
 
அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4864-4869)

4864.ஆயவன் எழுதலோடும்,
    அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி
    வேழமும், பிறவும், எல்லாம்
‘நாயகன் பணி இது! ‘என்னா,
    நளி கடல் இலங்கை தாமும்
பாய்வன என்ன, வானம்
    படர்ந்தன, பழுவம் மான!
17

உரை
   
 
4865.இசை உடை அண்ணல் சென்ற
    வேகத்தால், எழுந்த குன்றும்
பசை உடை மரமும், மாவும்,
    பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று,
    செறிகடல் இலங்கை சேரும்
விசை இல ஆகித் தாழ்ந்து
    வீழ்வன என்ன வீழ்ந்த!
18

உரை
   
 
4866.மாவொடு, மரமும், மண்ணும்,
    வல்லியும், மற்றும், எல்லாம்,
போவது புரிந்த வீரன்
    விசையினால், புணரி போர்க்கத்
தூவின, கீழும் மேலும்
    தூர்த்தன, சுருதி அன்ன
சேவகன் சேரா முன்னம்
    சேதுவும் இயன்ற மாதோ!
19

உரை
   
 
4867.கீண்டது வேலை நல் நீர்,
    கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம்
    வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி,
    ‘அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தன் ஆனேன்
    யான் ‘எனக் களிப்புக் கொண்டான்.
20

உரை
   
 
4868.வெய்து, வான் சிறையினால்
    நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட
    நோன்மையே நுவலும் நாகர்,
‘உய்தும் நாம் என்பது என்னே?
    உறுவலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் ‘என்று எண்ணி,
    அலக்கண் உற்று, இரியல் போனார்!
21

உரை
   
 
4869.துள்ளிய மகர மீன்கள்
    துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத்,
    திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும்
    விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று,
    இலங்கை மேல் தவழ்ந்த மாதோ!
22

உரை
   
 
விசும்பில் விரைந்து செல்லும் அநுமன் தோற்றம் (4870-4878)

4870.இடுக்கு உறு பொருள்கள் என்னாம்?
    எண்திசை சுமந்த யானை
நடுக்கு உற, விசும்பில் செல்லும்
    நாயகன் தூதன், நாகம்
ஒடுக்கு உறு காலை, வன் காற்று
    அடியொடும் ஒடித்த அந்நாள்,
முடுக்கு உறக் கடலில் செல்லும்
    முத்தலைக் கிரியை ஒத்தான்!
23

உரை
   
 
4871.கொட்பு உறு புரவித் தயெ்வக்
    கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண் புலம் கதுவல் ஆகா
    வேகத்தான், கடலும், மண்ணும்
உள்படக் கூடி அண்டம்
    உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம் தான் அவ்
    இலங்கை மேல் போவது ஒத்தான்!
24

உரை
   
 
4872.விண்ணவர் ஏத்த, வேத
    முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும்
    மாருதி, மறம் உள் கூர,
‘அண்ணல் வாள் அரக்கன் தன்னை
    அமுக்குவென் இன்னும்! ‘என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும்
    கயிலையங் கிரியை ஒத்தான்!
25

உரை
   
 
4873.மாணியாம் வேடம் தாங்கி, மலர் அயற்கு
    அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய், உலகுக்கு எல்லாம்
    அறப்பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடுநாள் தீர்ந்த
    திரிதலைச் சிறுவன் தன்னைக்
காணிய விரைவில் செல்லும்
    கனக மால் வரையும் ஒத்தான்!
26

உரை
   
 
4874.மழை கிழித்து உதிர மீன்கள்,
    மறி கடல் பாய, வானம்
குழைவு உறத், திசைகள் கீற,
    மேருவும் குலுங்கக், கோட்டின்
முழை உடைக் கிரிகள் முற்ற,
    முடுகுவான், முடிவு காலத்து
அழிவு உறக் கடுகும் வேகத்
    தாதையும் அனையன் ஆனான்!
27

உரை
   
 
4875.தடக்கை நால் ஐந்து பத்துத்
    தலையொடும் உடையான் தானே,
அடக்கி ஐம்புலன்கள் வென்ற
    தவம் பயன் அறுதலாலே,
கெடக் குறியாகி, மாகம்
    கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும்
    பருதி வானவனும் ஒத்தான்!
28

உரை
   
 
4876.புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர்
    அரணம் புக்கு உறைதல் போக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும்
    மாநகர் மனுவின் வந்த
திறத்தகை இராமன் என்னும்
    சேவகற் பற்றிச் செல்லும்
அறத்தகை அரசன் திண் போர்
    ஆழியும் அனையன் ஆனான்!
29

உரை
   
 
4877.கேழ் உலாம் முழு நிலாவில்,
    கிளர் ஒளி இருளைக் கீறப்,
பாழி மா மேரு நாண,
    விசும்பு இடைப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம்
    அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழிநாள், வடபால் தோன்றும்
    உவா முழு மதியும் ஒத்தான்!
30

உரை
   
 
4878.அடல் எல் ஆம் திகிரி மாயற்கு
    அமைந்த தன் ஆற்றல் காட்டக்,
குடல் எலாம் அவுணர் சிந்தக்,
    குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்லச்,
    சேண் விசும்பு ஒதுங்கு அத்தயெ்வக்
கடல் எலாம் கடக்கத் தாவும்,
    கலுழனும் அனையன் ஆனான்!
31

உரை
   
 
அநுமன் வேகம் கண்டு வானவர் வியத்தல்

4879.நாலினோடு உலகம் மூன்றும்
    நடுக்கு உற, அடுக்கும் நாகர்
மேல் இல் மேல் நின்ற காறும்
    சென்ற கூலத்தன், ‘விண்டு
காலினால் அளந்த வான
    முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்! ‘என்று,
    வானவர் மருளச், சென்றான்!
32

உரை
   
 
அநுமன் வாலின் தோற்றம் (4880-4881)

4880.விளித்துப் பின் வேலை தாவும்
    வீரன் வால், வேதம் எய்க்கும்
அளித் துப்பின் அநுமன் என்னும்
    அருந் துணை பெற்றதாயும்,
களித்துப் புன் தொழில் மேல் நின்ற
    அரக்கர் கண்ணுறுவர் என்ன
ஒளித்துப் பின்செல்லும் காலன்
    பாசத்தை ஒத்தது அன்றே!
33

உரை
   
 
4881.மேருவை முழுதும் சூழ்ந்து,
    மீது உற்ற வேக நாகம்,
கார்நிறத்து அண்ணல் ஏவக்
    கலுழன் வந்து உற்ற காலைச்
சோர்வு உறும் மனத்த தாகிச்,
    சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும்
    ஒத்தது, அப் பிறங்கு பேழ்வால்!
34

உரை
   
 
அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4882-4884)

4882.குன்றொடு குணிக்கும் கொற்றக்
    குவவுத்தோள் குரக்குச் சீயம்,
சென்று உறு வேகத் திண்கால்
    எறிதரத், தேவர் வைகும்
மின்தொடர் வானத்து ஆன
    விமானங்கள், விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி,
    மாக்கடல் உற்ற மாதோ!
35

உரை
   
 
4883.வலங்கையின் வயிர ஏதி
    வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது! ‘ஏகுவான்தன்
    கருத்து என் கொல்? ‘என்னும் கற்பால்;
‘விலங்கு அயில் எயிற்று வீரன்
    முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று! ‘என்னா,
    இம்பர் நாடு இரிந்தது இப்பால்!
36

உரை
   
 
4884.‘ஓசனை உலப்பு இலாத
    உடம்பு அமைந்து உடைய! ‘என்னத்,
தேசமும், நூலும், சொல்லும்
    திமிங்கில கிலங்கேளாடும்,
ஆசையை உற்ற வேலை
    கலங்க, அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின், வீந்து
    மிதந்தன மீன்கள் எல்லாம்!
37

உரை
   
 
முன்னே நீட்டிய அநுமன் கைகளின் தோற்றம மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

4885.பொரு அரும் உருவத்து அன்னான்
    போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக்கை, தள்ளா
    நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப,
ஒருவு அரும் குணத்து வள்ளல்,
    ஓர் உயிர்த் தம்பி, என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால்
    ஒத்தன, இரண்டு பாலும்!
38

உரை
   
 
மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

4886.இந் நாகம் அன்னான், எறி கால் என
    ஏகும் வேலைத்,
திந்நாகம் மா வில் செறி கீழ்த்திசை
    காவல் செய்யும்
கைந் நாகம், அந்நாள் கடல் வந்தது ஒர்
    காட்சி தோன்ற
மைந்நாகம் என்னும் மலை வான் உற
    வந்தது அன்றே!
39

உரை
   
 
4887.மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம்
    மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள்
    உத்தரியத்தை ஒப்பத்,
தீயோர் உளராகியகால் அவர்
    தீமை தீர்ப்பான்,
மாயோன், மகரக் கடல்நின்று எழும்
    மாண்பது ஆகி!
40

உரை
   
 
4888.நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன்
    நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனி ஆண்மை
    பொறாது நீங்கக்,
கால் ஆழ்ந்து அழுந்திக், கடல் புக்குழி,
    கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கும் நெடு மந்தர
    வெற்பு மானா!
41

உரை
   
 
4889.தள்ளற்கு அரும் நல் சிறை மாடு
    தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரும் நல் நிறம் எல்லை
    இலாது பொங்க,
வள்ளல் கடலைக் கெடநீக்கி,
    மருந்து வௌவி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசு
    ஏயும் ஒப்ப!
42

உரை
   
 
4890.ஆன்று ஆழ் நெடு நீர் இடை ஆதியொடு
    அந்தம் ஆகித்
தோன்றாதுநின்றான் அருள் தோன்றிட
    முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும் முற்று
    உயிராய மற்றும்
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி
    அண்டம் என்ன!
43

உரை
   
 
4891.‘இந்நீரில் என்னைத் தரும் எந்தையை
    எய்தி அன்றி
செய்ந்நீர்மை செய்யேன்! ‘எனச் சிந்தனை
    செய்து, நொய்தின்,
அந்நீரில் வந்த முதல் அந்தணன்,
    ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கித், தவம் முற்றி,
    முளைத்தவா போல்!
44

உரை
   
 
4892.பூவால் இடையூறு புகுந்து,
    பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட,
    வேலை குளித்த எல்லாம்,
மூவா முதல் நாயகன்
    மீள முயன்ற அந்நாள்,
தேவ ஆசுரர் வேலையில்
    வந்து எழு திங்கள் என்ன!
45

உரை
   
 
மைந்நாகம் எழுந்தகாலத்து நிகழ்ந்தவை (4893-4897)

4893.நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம்
    வாய்ந்த, நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின,
    செம்பொன் ஏய்ந்த,
பிறங்கும் சிகரப் படர் முன்றில்
    தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு
    உணர்ந்து பேர!
46

உரை
   
 
4894.கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில்
தான் சூலநாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன்சூழ்வரும் அம் முழு வெண்மதி வீறு சீற!
47

உரை
   
 
4895.பல்லாயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும்
கல்லார் சிமயத் தடம் கைத்தலம் நீண்டு காட்டித்
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன!
48

உரை
   
 
4896.மனையில் பொலி மாக நெடுங்கொடி மாலை ஏய்ப்ப
வினையில் திரள் வெள் அருவித்திரள் தூங்கி வீழ
நினைவில் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்காச்
சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள!
49

உரை
   
 
4897.கொடு நாலொடு இரண்டு குலப்பகை,
    குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த
    துயக்கு இலார்போல்,
விடம் நாகம் முழைத்தலை விம்மல்
    உழந்து, வீங்கி,
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு
    நிமிர்ந்து நிற்ப!
50

உரை
   
 
அநுமன் மைந்நாகத்தைக் கண்டு அயிர்த்தல்

4898.எழுந்து ஓங்கி, விண்ணோடு மண் நோக்க,
    இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின்
    உம்பர் எங்கும்
கொழுந்து ஓடி நின்ற கொழுங்குன்றை
    வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என்கொல்? ‘
    எனா அயிர்த்தான்.
51

உரை
   
 
அநுமன் மைந்நாகத்தைத் தலை கீழுறத் தள்ளி மேலெழுதல்

4899.‘நீர்மேல் படரா, நெடுங்குன்று
    நிமிர்ந்து நிற்றல்
சீர்மேல் படராது ‘எனச் சிந்தை
    உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன்தலை கீழ்ப்பட,
    நூக்கி, விண்ணோர்
ஊர்மேல் படரக் கடிது உம்பரின்
    மீது உயர்ந்தான்!
52

உரை
   
 
மைந்நாகம் மீண்டும் எழுந்து அநுமனொடு கூறல் (4900-4904)

4900.உந்தாமுன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வில் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானுட வேடம் ஆகி
‘எந்தாய்! இது கேள்! ‘என இன்ன இசைத்தது அன்றே.
53

உரை
   
 
4901.‘வேற்றுப் புலத்தோன் அலன், ஐய!
    விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம்
    மாண ஓச்ச,
வீற்றுப்பட நூறிய வேலையின்,
    வேலை உய்த்துக்
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன்,
    அன்பு காந்த. ‘
54

உரை
   
 
4902.‘அன்னான் அருங்காதலன் ஆதலின் அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்தாயது இன்மை
பொன்னார் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய்!
55

உரை
   
 
4903.‘கார் மேக வண்ணன் பணி பூண்டனன்,
    காலின் மைந்தன்
தேர்வான் வருகின்றனன் சீதையைத்,
    தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி, இதில்
    பெரும்பேறு இல்! ‘என்ன
நீர்வேலையும் என்னை உரைத்தது,
    நீதிநின்றாய்!
56

உரை
   
 
4904.‘நல் தாயினும் நல்லன் எனக்கு
    இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது
    கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை
    வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? ‘என
    உற்று உரைத்தான்.
57

உரை
   
 
அநுமன் மைந்நாகத்தை நோக்கல்

4905.உரைத்தான் உரையால், இவன் ஊறு இலன்
    என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு
    விளங்க, வீரன்
சிரித்தான் அளவே சிறிது அத்திசைச்
    செல்ல நோக்கி,
வரைத்தாழ் நெடும் பொன் குடுமித் தலை
    மாடு கண்டான்.
58

உரை
   
 
அநுமன் மைந்நாகத்தொடு கூறல் (4906-4907)

4906.‘வருந்தேல்! இது என்? துணை வானவன்
    வைத்த காதல்!
அருந்தேன் இனி யாதும் ஒன்று, ஆசை
    நிரப்பி அல்லால்;
பெருந் தேன்மொழி சார நின் அன்பு
    பிணித்த போதே
இருந்தேன், நுகர்ந்தேன் : இதன்மேல் இனி
    ஈவது என்னோ? ‘
59

உரை
   
 
4907.‘முன்பின் சிறந்தார் இடை உள்ளவர்
    காதல், முற்றப்
பின்பின் சிறந்தார்; குணம் நன்று இது!
    பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்து ஆயது ஒர் ஊற்றம் உண்டு
    என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஒர் பூசனை
    யார்கண் உண்டே? ‘
60

உரை
   
 
அநுமன் மைந்நாகத்தைப் பாராட்டி மேலும் செல்லுதல்

4908.‘ஈண்டே கடிது ஏகி, இலங்கை
    விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின்
    ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வேன் நின் விருந்து ‘என
    வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பிற்பட,
    முன்பு போனான்.
61

உரை
   
 
அநுமன் விரைவு

4909.செவ்வான் கதிரும், குளிர் திங்களும்,
    தேவர் வைகும்
வெவ்வேறு அரணங்களும், மீனொடு,
    மேகம், மற்றும்,
எவ்வாய் உலகத்தவும், ஈண்டி
    இருந்த தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெம்
    காலும் ஒத்தான்!
62

உரை
   
 
அநுமன் விரைவால் நிகழ்ந்தவை (4910-4911)

4910.நீர்மேல் கடல்மேல் நிமிர்கின்ற
    நிமிர்ச்சி நோக்காப்,
பார்மேல் தவழ் சேவடி பாய்
    நடவாப் பதத்து என்
தேர்மேல் குதிகொண்டவன், இத்திறம்
    சிந்தைசெய்தான்!
ஆர்மேல்கொல்? என்று எண்ணி, அருக்கனும்
    ஐயம் உற்றான்!
63

உரை
   
 
4911.வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு
    ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் தோளின்
    விசும்பு நிரம்பு மெய்யின்,
கோள் ஒத்தவன் மேனி,
    விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது : மேல் ஒளி
    கீழ் இருள் உற்ற ஞாலம்!
64

உரை
   
 
சுரசை தோன்றுதல்

4912.‘மூன்று உற்ற தலத்திடை முற்றிய
    துன்பம் வீப்பான்
ஏன்று உற்று வந்தான் வலி எம்மை
    உணர்த்து நீ! ‘என்று
ஆன்று உற்ற வானோர் குறைநேர,
    அரக்கி ஆகித்,
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச்
    சிந்தை தூயாள்.
65

உரை
   
 
சுரசைகூற்று (4913-4914)

4913.பேழ்வாய் ஒர் அரக்கி உருக்கொடு
    பெட்பின் ஓங்கிக்,
‘கோள்வாய் அரியின் குலத்தாய்! கொடுங்
    கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆம் இடமாய்
    வருவாய் கொல்? ‘என்னா,
நீள்வாய் விசும்பும் தனது உச்சி
    நெருக்க நின்றாள்!
66

உரை
   
 
4914.‘தீயே எனல் ஆய பசி பிணி
    தீர்த்தல் செய்வான்
ஆயே விரைவு உற்று எனை அண்மினை,
    வண்மையாள!
நீயே இனி வந்து, நிணங்கொள்
    பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்! வழி மற்று இலை
    வானின்! ‘என்றாள்.
67

உரை
   
 
அநுமன்கூற்று

4915.‘பெண்பால் ஒரு நீ பசிப் பீழை
    ஒறுக்க நொந்தாய் :
உண்பாய் எனது ஆக்கையை : யான்
    உதவற்கு நேர்வல்,
விண்பாலவர் நாயகன் ஏவல்
    இழைத்து மீண்டால்,
நண்பால் ‘எனச் சொல்லினன், நல்
    அறிவாளன்; நக்காள்.
68

உரை
   
 
சுரசை கூற்றும் அநுமன் கூற்றும்

4916.‘காய்ந்து ஏழ் உலகங்களும் காண நின்
    யாக்கை தன்னை
ஆர்ந்தே பசிதீர்வன்! இது ஆணை! ‘என்று
    அன்னள் சொன்னாள்.
ஓர்ந்தானும், ‘இகந்து ஒருவேன்! நினது
    ஊழில் பேழ்வாய்ச்
சேர்ந்து ஏகுகின்றேன், வலையாம் எனில்
    தின்றிடு! ‘என்றான்.
69

உரை
   
 
அநுமன் பேருருக் கொள்ளுதல்

4917.அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெருவாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள்; அதுநோக்கி வீரன்
திக்கு ஆர் அவள்வாய் சிறிதாம்வகை சேணில் நீண்டான்.
70

உரை
   
 
அநுமன் சுரசை வாயுள் புக்கு மீளல்

4918.நீண்டான், உடனே சுருங்கா, நிமிர்
    வாய் இடத்தின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு
    உயிராத முன்னம்
மீண்டான்! அது கண்டனர் விண்
    உறைவோர்கள் : ‘எம்மை
ஆண்டான் வலன்! ‘என்று அலர்தூய், நெடிது
    ஆசி சொன்னார்.
71

உரை
   
 
சுரசை ஏத்தொடு தூதன் சென்றமை (4919-4921)

4919.மின் மேல் படர் நோன்மையின் ஆம் உடல்
    வீக்கம் நீங்கித்,
தன்மேனியளாய், அவள், தாயினும்
    அன்பு தாழ,
‘என் மேல் முடியாதன? ‘என்று இனிது
    ஏத்தி நின்றாள்.
பொன் மேனியனும், நெடிது ஆசி
    புனைந்து, போனான்.
72

உரை
   
 
4920.கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர் தனெ்றல் விருந்து செய்ய!
73

உரை
   
 
4921.மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்துச் செறி வேர் சிதைப்பத்
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தாழாக்
கந்தார வீணைக்களி செஞ்செவி தாழ்ந்து நுங்க.
74

உரை
   
 
அங்காரதாரை தோற்றம் (4922-4924)

4922.வெம் கார்நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்
‘இங்கு ஆர் கடத்திர் எனை? ‘என்னா எழுந்தாள்
அங்காரதாரை பிறிது ஆலாலம் அன்னாள்!
75

உரை
   
 
4923.காதக் கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப
வேதக் கொழுஞ்சுடரை நாடி நெடு மேல்நாள்
ஓதத்து இன் ஊடு வரு கைடவனை ஒத்தாள்!
76

உரை
   
 
4924.துண்டப் பிறைத்துணை எனச் சுடர் எயிற்றாள்;
கண்டத் திடைக் கறை உடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்!
77

உரை
   
 
அங்காரதாரையைக் கண்ட அநுமன் கருதியது (4925-4926)

4925.நின்றாள் நிமிர்ந்து அலை நெடுங்கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வௌவ;
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருேளாடும்
தின்றாள் ஒருத்தி இவள்! என்பது தரெிந்தான்.
78

உரை
   
 
4926.பேழ் வாய் அகத்து அலது பேர் உலகம் மூடும்
நீள் வான் அகத்தின் இடை ஏகும் நெறி காணான்
வாழ் வான் அனுக்க வளர்வாள் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான்.
79

உரை
   
 
அநுமன் வினவுதல்

4927.‘சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்!
வாயால் அளந்து நெடு வான்வழி அடைத்தாய்!
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை? ‘என்றான்.
80

உரை
   
 
அங்காரதாரை மறுமொழி

4928.‘பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி! உற்றால்
விண் பாலவர்க்கும் உயிர் வீடுவது மெய்யே!
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பால் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது! ‘என்றாள்.
81

உரை
   
 
அநுமன் அங்காரதாரையின் வாயுள் புக்கு வயிற்றினைக் கிழித்து வெளிப்படல்

4929.திறந்தாள் எயிற்றை அவள்! அண்ணல் இடை சென்றான்!
அறந்தான் அரற்றியது! அயர்த்து அமரர் எய்த்தார்!
இறந்தான் எனக்கொடு; ஒர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்! எனப் பெரிய கோளரி பெயர்ந்தான்!
82

உரை
   
 
அங்காரதாரை வயிற்றிலிருந்து வெளிவந்த அநுமன் தோற்றம் (4930-4931)

4930.கள்வாய் அரக்கி கதறக் குடர் கணத்தில்
கொள் வார் தடக்கையன் விசும்பின்மிசை கொண்டான்
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின்
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான்!
83

உரை
   
 
4931.சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான்
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்!
84

உரை
   
 
அநுமன் வென்றியால் நிகழ்ந்தவை

4932.ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து மலர்வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார்.
85

உரை
   
 
அநுமன் மீண்டும் ஏகுதல்

4933.மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறு காறும்
கீண்டான் இமைப்பின் இடை மேருகிரி கீழா
நீண்டான் வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான் அருக்கன் உயர் வானின்வழி போனான்!
86

உரை
   
 
அநுமன் நினைவு (4934-4935)

4934.‘சொற்றார்கள் சொற்றதுணை பல தொகையது அன்றோ?
முற்றா முடிந்த நெடு வானின் இடை முந்நீ
ரில் தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு ‘என உணர்ந்தான்.
87

உரை
   
 
4935.‘ஊறு கடிது ஊறுவன; ஊறில் அறம் உன்னாத்
தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீரா
ஏறுவகை இங்கு உளது; இராம! என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல் ‘என மதித்தான்.
88

உரை
   
 
அநுமன் பவளமலையில் பாய்தல்

4936.தசும்பு உடைக் கனகம் நாஞ்சில்
    கடிமதில் தணித்து நோக்கா,
அசும்பு உடைப் பிரசத் தயெ்வக்
    கற்பக நாட்டை அண்மி,
விசும்பு இடை செல்லும் வீரன்
    விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசும் புடைச் சோலைத்து ஆங்கோர்
    பவள மால் வரையில் பாய்ந்தான்!
89

உரை
   
 
பவளமலை சலித்தல்

4937.மேக்கு உறச் செல்வோன் பாய,
    வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்கு உறுத்து, அங்கும் இங்கும்
    தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்குறற்கு இடையூறாகப்
    புயலொடு பொதிந்த வாடை
தாக்குறத் தகர்ந்து சாயும்
    கலம் எனத் தக்கது அன்றே!
90

உரை
   
 
அநுமன் இலங்கையைக் காண்டல்

4938.மண் அடி உற்று, மீது
    வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில்
    நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை உலகம் என்னும்
    மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன,
    இலங்கையைக் கண்ணில் கண்டான்!
91

உரை
   
 
அநுமன் இலங்கையை வியத்தல் (4939-4941)

4939.நல் நகர் அதனை நோக்கி,
    நளினக் கை மறித்து, ‘நாகர்
பொன் நகர் இதனை ஒக்கும்
    என்பது புல்லிது, அம்மா!
அந்நகர், இதனின் நன்றேல்,
    அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந்நகர் இருந்து வாழான்!
    இது, அதற்கு ஏது! ‘என்றான்.
92

உரை
   
 
4940.‘மாண்டது ஓர் நிலத்திற்றாம் ‘என்று
    உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்!
வேண்டிய வேண்டின் எய்தி
    வெறுப்பு இன்றி விழைந்த துய்க்கும்
ஈண்டு அரும் போக இன்பம்
    ஈறு இலது, யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்! அஃதே
    அருமறைத் துணிவும், அம்மா!
93

உரை
   
 
4941.‘உள் புலம் எழுநூறு என்பர்
    ஓசனை; உலகம் மூன்றில்
தடெ்பு உறு பொருள்கள் எல்லாம்
    இதன் உழைச் செறிந்த என்றால்,
நுட்புலம் நுணங்கு கேள்வி
    நுழைவினர் எனினும், நோக்கும்
கண் புலம் வரம்பிற்றாமே?
    காட்சியும் கரையிற்றாமே?
94

உரை