இலங்கை நகர மாடவருணனை (4942-4949)

4942.பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தரெிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்!
1

உரை
   
 
4943.நாக ஆலயங்கெளாடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கும் இல என்ன உயர் பண்ப!
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு தனெ்றல் என நின்ற!
2

உரை
   
 
4944.மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்
பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்!
3

உரை
   
 
4945.பஞ்சி ஊட்டிய பரட்டு இசை
    கிண்கிணிப் பதுமச்
செம் செவிச் செழும் பவளத்தின்
    கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சன நிறம் மறைத்து
    அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய
    ஆக்குற அமைவ!
4

உரை
   
 
4946.நான நாள் மலர்க் கற்பக நறுவிரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில் செய்ய
வான யாறு தம் அரமியத் தலம் தொறும் மடுப்ப!
5

உரை
   
 
4947.குழலும், வீணையும், யாழும், என்று
    இனையன குழைய,
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து
    அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடும் தடமணிச்
    சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை
    தரெிவரு நிலைய!
6

உரை
   
 
4948.இனைய மாடங்கள், இந்திரற்கு
    அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச்
    சொல்லும் மாசு உண்ணும் :
அனையவாம் எனின், அரக்கர்தம்
    திருவுக்கும் அளவை,
நினையலாம்? அன்றி உவகையும்
    அன்னதாய் நிற்கும்!
7

உரை
   
 
4949.மணிகள் எத்துணை பெரியவும்,
    மால் திரு மார்பின்
அணியும் காசினும் அகன்றன
    உள எனல் அரிதால்;
திணியும் நல் நகர்த் திருமனை,
    தயெ்வமாத் தச்சன்
துணிவின் வந்தனன் தொட்டு அழகு
    இழைத்த அத் தொழில்கள்!
8

உரை
   
 
அரக்கர்பெருமை

4950.மரம் அடங்கலும் கற்பகம் :
    மனை எலாம் கனகம் :
அர மடந்தையர் சிலதியர்
    அரக்கியர்க்கு; அமரர்
உரம் அடங்கி வந்து உழையராய்
    உழல்குவர் : ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது!
    தவம் செய்த தவமால்!
9

உரை
   
 
இராவணன் பெருமை

4951.தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர்? என்னின்
மூவர் தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தாவில் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ?
10

உரை
   
 
படைமிகுதி (4952-4953)

4952.போர் இயன்றன தோற்ற என்று
    இகழ்தலில், புறம்போய்
நேர் இயன்ற வன் திசைதொறும்
    நின்ற மா நிற்க,
ஆரியன் தனித் தயெ்வ மாக்
    களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே,
    இந்நகர்த் தொகாத!
11

உரை
   
 
4953.வாழும் மன் உயிர் யாவையும்
    ஒருவழி வாழும்
ஊழி நாயகன் திருவயிறு
    ஒத்துளது இவ் ஊர்!
ஆழி அண்டத்தின், அருக்கன்தன்
    அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள
    குதிரைகள் எல்லாம்!
12

உரை
   
 
பலவகையொலி

4954.தழங்கு பேரியின் அரவமும்,
    தகை நெடும் களிறு
முழங்கும் ஓதையும், மூரிநீர்
    முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர்
    நூபுரக் குரலின்,
வழங்கும் மேகலைக் கிண்கிணி
    வயின்தொறும் மறையும்!
13

உரை
   
 
இலங்கைநகரின் பெருமை (4955-4959)

4955.மரகதத்தினும், மற்று உள
    மணியினும், வனைந்த
குரகதத் தனித் தேர் எலாம்
    இமைப்பு இல் பல் கோடி
இரவி வெட்க நின்று இமைக்கின்ற
    இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடும்
    துறக்கம் இந்நகர்க்கு!
14

உரை
   
 
4956.திருகு வெம் சினத்து அரக்கரும்
    கருநிறம் தீர்ந்தார்,
அருகு போகின்ற திங்களும்
    மறு அற்றது, அழகைப்
பருகும் இந்நகர்த் துன் ஒளி
    பரத்தலில், பசும்பொன்
உருகுகின்றது போன்று உளது
    உலகு சூழ் உவரி!
15

உரை
   
 
4957.அண்டம் முற்றவும் விழுங்கு இருள்
    அகற்றும் நின்று, அகல்வான்
கண்ட அத் தனிக் கடிநகர்
    நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ் ஆற்றல் என்று உரைப்பு
    அரிது! ஒப்பிடில், தம்முன்
விண்டவாய்ச் சிறு மின்மினி
    என்னவும் விளங்கா!
16

உரை
   
 
4958.தேனும், சாந்தமும், மான்மதச்
    செறி நறும் சேறும்,
வான நாள் மலர் கற்பக
    மலர்களும், வய மாத்
தான வாரியும் நீரொடு
    மடுத்தலில் தழீஇய
மீனும், தானும், ஓர் வெறிமணம்
    கமழுமால் வேலை!
17

உரை
   
 
4959.தயெ்வத் தச்சனை புகழ்துமோ?
    செங்கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே
    வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே
    மதித்துமோ? அறியாத்
தொய்யல் சிந்தையேம் யாவரை
    யாது என்று துதிப்பேம்?
18

உரை
   
 
பொழில் சிறப்பு

4960.வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ?
கானும் பொழிலும் இவை செங் கனகத்தினாலும்
ஏனை மணியாலும் இயற்றிய வேனும் யாவும்
தேனும் மலரும் கனியும் தரச் செய்த செய்கை.
19

உரை
   
 
கோபுரவருணனை

4961.நீரும், வையமும், நெருப்பும், மேல்
    நிமிர் நெடும் காலும்
மாரி வானமும், வழங்கல
    வாகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடும் கோபுரத்து
    உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ
    உடல் முற்றும் வெள்கி?
20

உரை
   
 
மதில் வருணனை (4962-4965)

4962.முன்னம் யாவரும், ‘இராவணன்
    முனியும் என்று எண்ணிப்
பொன்னின் மாநகர் மீச்செலான்
    கதிர் ‘எனப் புகல்வார்;
கன்னி ஆரையின் ஒளியினில்
    கண்வழுக் குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன்
    போதலை உணரார்!
21

உரை
   
 
4963.‘தீய செய்குநர் தேவரால்,
    அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு
    அமைக்குவன் ‘என மதியாக்
காயம் என்னும் அக் கணக்கு அறு
    பதத்தையும் கடக்க
ஏயும் நல் மதில் இட்டனன்,
    கயிலை அன்று எடுத்தான்!
22

உரை
   
 
4964.கறங்கு கால் புகா, கதிரவன்
    ஒளி புகா, மறலி
மறம் புகாது, இனி, வானவர்
    புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள், யாவையும்
    சிதையினும் சிதையா
அறம் புகாது, இந்த அணிமதிள்
    கிடக்கைநின்று அகத்தின்!
23

உரை
   
 
4965.கொண்ட வான் திரைக் குரைகடல்
    இடையதாய்க் குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று
    இமைக்கின்ற இயல்பால்,
பண்டு அரா அணைப் பள்ளியான்
    உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது இவ்
    அணி நகர் அமைதி!
24

உரை
   
 
இலங்கைநகர் வாழ்வோர் செயல் (4966-4981)

4966.பாடுவார் பலர், எண் இல் மற்று
    அவரினும் பலரால்
ஆடுவார்கள், மற்று அவரினும்
    பலருளர் அமைதி
கூடு வாரிடை இன்னியம்
    கொட்டுவார், முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால்
    விழு நடம் காண்பார்!
25

உரை
   
 
4967.வானம் மாதரோடு இகலுவர்
    விஞ்சையர் மகளிர்,
ஆன மாதரோடு ஆடுவர்
    இயக்கியர், அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர்
    தொடர்குவர், தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக்
    கிரியை ஆய்ந்திருப்பார்!
26

உரை
   
 
செல்வ வளம்

4968.இழையும், ஆடையும், மாலையும்,
    சாந்தமும், ஏந்தி
உழையர் என்ன நின்று உதவுவ
    நிதியங்கள்! ஒருவர்
விழையும் போகமே இங்கு இது?
    வாய்கொடு விளம்பின்,
குழையும்! நெஞ்சினால் நினையினும்
    மாசு என்று கொள்ளும்!
27

உரை
   
 
நகர் அமைத்த திறம்

4969.பொன்னின் மால்வரைமேல் மணி
    பொழிந்தன பொருவ,
உன்னி, நான்முகத்து ஒருவன் நின்று
    ஊழ்முறை உரைப்பப்
பன்னி நாள் பல பணி உழந்து,
    அரிதினில் படைத்தான்,
சொன்ன வானவர் தச்சனாம்,
    இந்நகர் துதிப்பான்!
28

உரை
   
 
4970.மகர வீணையின் மந்தர
    கீதத்து மறைந்த
சகர வேலையின் ஆர்கலி!
    திசைமுகம் தழுவும்
சிகர மாளிகைத் தலம் தொறும்
    தரெிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின
    முகில் குலம் அனைத்தும்!
29

உரை
   
 
4971.பளிக்கு மாளிகைத் தலம் தொறும்,
    இடம் தொறும், பசுந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறும்
    சோலைகள் தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர்
    பாடுநர் ஆகிக்,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார்
    ஒருவரைக் காணேன்!
30

உரை
   
 
4972.தேறல் மாந்தினர், தேன் இசை
    மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை
    மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த்
    தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு
    உயிர் அன்ன அரக்கர்!
31

உரை
   
 
4973.எறித்த குங்குமத்து இளமுலை
    எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன!
    ஊடலில் கனன்று
மறித்த நேக்கியர் மலர் அடி
    மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள், பொலிந்தில,
    அரக்கர்தம் குஞ்சி!
32

உரை
   
 
4974.விளரிச் சொல்லியர் ஓதியால்,
    வேலையுள் மிடைந்த
பவளக் கோடு எனப் பொலிந்தது!
    படைநெடும் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது!
    குளிர்முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது,
    முழங்குநீர் இலங்கை!
33

உரை
   
 
4975.எழுந்தனர் திரிந்து வைகும்
    இடத்ததாய், இன்று காறும்
கிழிந்திலது அண்டம், என்னும்
    இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே?
    அலர் உேளான் ஆதி ஆக, ஒழிந்த
வேறு உயிர்கள் எல்லாம்,
    அரக்கருக்கு உறையும் போதா!
34

உரை
   
 
4976.காயத்தால் பெரியர், வீரம்
    கணக்கு இலர், உலகம் கல்லும்
ஆயத்தார், வரத்தின் தன்மை
    அளவு அற்றார், அறிதல் தேற்றா
மாயத்தார், அவர்க்கு எங்கேனும்
    வரம்பும் உண்டாமே? மற்றோர்
தேயத்தார் தேயம் சேர்ந்தால்,
    தேர்விலார் செருவிற் சேறல்!
35

உரை
   
 
4977.கழல் உலாம் காலும், கால
    வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா
    ஆடவர் இல்லை! அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும்
    குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய்
    மாதரும் இல்லை மாதோ!
36

உரை
   
 
4978.கள் உறக் கனிந்த பங்கி
    அரக்கரைக் கடுத்த! காதல்
புள் உறத் தொடர்வ, மேனி
    புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய
    தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின்
    உயர்ச்சிய, ஓடை யானை!
37

உரை
   
 
4979.வள்ளிநுண் மருங்குல் என்ன,
    வானவர் மருளின் உள்ளம்
தள்ளுறப் பாணி தள்ளா
    நடம் புரி தடம் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும்
    நகையர் தாம், வெள்குகின்றார்,
கள் இசை அரக்கர் மாதர்
    களித்திடும் குரவை காண்பார்!
38

உரை
   
 
4980.ஒறுத்தலோ நிற்க, மற்றோர்
    உயர்படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மற்றும்,
    யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கி மாரும்,
    அரக்கரும், களித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கை யாலே
    தூரும் இவ் வீதியெல்லாம்!
39

உரை
   
 
4981.வடங்களும், குழையும், பூணும்,
    மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலினமா
    விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள் தோறும்,
    யாறொடும் அடுத்த எல்லாம்,
அடங்கியது என்னின், என்னே,
    ஆழியின் ஆழ்ந்தது உண்டோ?
40

உரை
   
 
படைப் பெருமை

4982.வில் படை பெரிது என்கேனோ?
    வேல் படை மிகும் என்கேனோ?
மல் படை உடைத்து என்கேனோ?
    வாள் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம்
    என்று இனைய, காந்தும்
நல் படை பெரிது என்கேனோ?
    நாயகற்கு உரைக்கும் நாளில்.
41

உரை
   
 
சூரியன் மேலைக்கடலில் மறைதல்

4983.என்றனன், இலங்கை நோக்கி,
    இனையன பலவும் எண்ணி,
நின்றனன், அரக்கர் வந்து
    நேரினும் நேர்வர் என்னாத்
தன் தகை அனைய மேனி
    சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன்
    குடகடல் குளிப்ப தானான்.
42

உரை
   
 
இருள் பரவுதல் (4984-4987)

4984.ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே!
43

உரை
   
 
4985.கரித்த மூன்று எயில் உடைக் கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனன் நான்முகன் என்னும் பொற்பதே!
44

உரை
   
 
4986.அணங்கு அரா அரசர்கோன் அளவில் ஆண்டெலாம்
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய்விடம்
உணங்கல் இல் உலகெலாம் முறையின் உண்டுவந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே!
45

உரை
   
 
4987.வண்மை நீங்கா நெடு மரபின் வந்த அப்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
திண்மை நீங்காதவன் சிறைவைத்தான் என
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே!
46

உரை
   
 
இருளில் அரக்கர் இயங்குதல் (4988-4989)

4988.அவ்வழி அவ் இருள் பரந்த ஆயிடை
எவ்வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
தவெ் வழி அந்தரத் திசையர் ஆகையால்
வெவ்வழி இருள்தர மதித்து மீச்செல்வார்.
47

உரை
   
 
4989.இந்திரன் வளநகர்க்கு ஏகுவார் எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார் சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில்
வெம்தொழில் அரக்கனது ஏவல் மேயினார்.
48

உரை
   
 
தேவமாதர் முதலியோர் பணிநீங்கிச் செல்லுதல்

4990.பொன் நகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணிமுறை மாறி முந்துவார்
மின்னினம் மிடைந்தனெ விசும்பின் மீ செல்வார்.
49

உரை
   
 
தேவர் முதலியோர் பணிசெய வருதல் (145-146)

4991.தேவரும் அவுணரும் செங்கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
ஏவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார்
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார்.
50

உரை
   
 
4992.சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
‘இத்துணை தாழ்த்தனம் முனியும்! ‘என்று தம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார்.
51

உரை
   
 
சந்திரோதய வருணனை (4993-4995)

4993.தீண்டரும் தீவினை தீக்கத் தீந்துபோய்
மாண்டு அற உலர்ந்தது மாருதிப் பெயர்
ஆண் தகை மாரி வந்து அளிக்க ஆயிடை
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே!
52

உரை
   
 
4994.‘வந்தனன் இராகவன் தூதன்! வாழ்ந்தனன்
எந்தையே இந்திரனாம்! ‘என்று ஏமுறும்
அந்தம் இல் கீழ்த்திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே!
53

உரை
   
 
4995.கற்றை வெண்கவரி போல் கடலின் வெண்திரை
சுற்றும் நின்று அலமரப் பொலிந்து தோன்றிற்றால்!
‘இற்றது என் பகை ‘என எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே.
54

உரை
   
 
நிலவு பரவுதல் (4996-4997)

4996.தரெிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பால் கடல் முகந்து மூரிவான்
சொரிந்ததேயாம் எனத் துள்ளும் மீனொடும்
விரிந்தது தண்நிலா மேலும் கீழுமே!
55

உரை
   
 
4997.அரும் தவன் சுரபியே அந்தி வான்மிசை
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் பசும் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே!
56

உரை
   
 
விண்மீன் தோற்றம்

4998.எண் உடை அநுமன்மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகல
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய்கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்!
57

உரை
   
 
4999.எல்லியின் நிமிர் இருள் குறையும் இவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும் கௌவின
புல்லிய பகை எனப் பொருவ போன்றன
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம்!
58

உரை
   
 
5000.வீசு உறு பசும் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசு உற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றால்!
59

உரை
   
 
5001.இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என அநுமன் பற்றினால்
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை ஆங்கு அவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே!
60

உரை
   
 
அநுமன் இலங்கையுள்ளே புக எண்ணுதல்

5002.அவ்வழி அநுமனும் அணுகலாம் வகை
எவ்வழி என்பதை உணர்வின் எண்ணினான்
செவ்வழி ஒதுங்கினன் தேவர் ஏத்தப் போய்
வெவ்வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான்.
61

உரை
   
 
அநுமன் இலங்கையின் மதிலை அணுகுதல்

5003.ஆழி அகழாக அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளி காறும் முகடு ஏறிக்
கேழ் அரிய பொன்கொடு சமைந்து கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான்.
62

உரை
   
 
மதிலை வியத்தல் (5004-5005)

5004.‘கலங்கல் இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் :
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து! ‘என வியந்தான்.
63

உரை
   
 
5005.‘தவெ் அளவு இலாத இடை சேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடையாக;
எவ்வளவின் உண்டு வெளி ஈறும் அது! ‘என்னா
வெவ் வள அரக்கனை மனம் கொள வியந்தான்.
64

உரை
   
 
அநுமன் இலங்கை நகர வாயிலைக் காண்டல்

5006.மடங்கல் அரி ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர்
அடங்கரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந்திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான்.
65

உரை
   
 
வாயிலை வியத்தல் (5007-5008)

5007.‘மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு விட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ? ‘என நினைந்தான்.
66

உரை
   
 
5008.‘ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின்முறை அன்றி உடனே புகும்! இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை! ‘என்றான்.
67

உரை
   
 
வாயில் காவலர் நிலை (5009-5012)

5009.வெள்ளம் ஒருநூறொடு இருநூறும் மிடைவீரர்
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இருகையும்
முள் எயிறும் வாளும் உற மின்ன முறை நின்றார்
எள்ளரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான்.
68

உரை
   
 
5010.சூலம் மழு வாெளாடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி
கோல கணை நேமி குலிசம் சுரிகை குந்தம்
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார்.
69

உரை
   
 
5011.அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர்
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார்.
70

உரை
   
 
5012.அளக்க அரிதாகிய கணத்தொடு அயல்நிற்கும்
விளக்கினம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான்.
71

உரை
   
 
வாயிற்காவல் கண்டு அநுமன் வியத்தல் (5013-5015)

5013.‘எவ் அமரர் எவ் அவுணர் ஏவர் உளர் என்னே!
கவ்வை முது வாயிலின் நெடுங்கடை கடப்பார்?
தவெ்வர் இவர்! சேமம் இது! சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும்? ‘என்றான்.
72

உரை
   
 
5014.‘கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
பெருங்கடல் கடப்பது அரிது! எண்ணம் இறை பேரின்
அருங்கடன் முடிப்பது அரிதாம்! அமர் கிடைப்பின்
நெருங்கு அடல் விளைப்பர் நெடுநாள்! ‘என நினைந்தான்.
73

உரை
   
 
5015.‘வாயில்வழி சேறல் அரிது! அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்தவழி ஏகல் அழகு அன்றால்.
காய்கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய் இ நகர் புக்கிடுவென் ‘என்று ஒர் அயல் போனான்.
74

உரை
   
 
இலங்காதேவி எதிர்தல்

5016.நாள்நாளும் தான்நல்கிய
    காவல், நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள், போவதின்,
    மேலே வழிநின்றாள்,
தூணாம் என்னும் தோளுடையானைச்,
    சுடரோனைக்
காணா வந்த கட் செவி
    என்னக் கனல் கண்ணாள்.
75

உரை
   
 
இலங்காதேவியின் இயல்பு (5017-5021)

5017.எட்டுத் தோளாள், நாலு
    முகத்தாள், உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி
    நிறத்தாள், சுழல் கண்ணாள்,
முட்டிப் போரின் மூவுலகத்தை
    முதலோடும்
கட்டிச் சீறும் காலன்
    வலத்தாள், கமை இல்லாள்.
76

உரை
   
 
5018.பாரா நின்றாள் எண்திசை
    தோறும் பலர் அப்பால்
வாரா நின்றாரோ என,
    மாரி மழையே போல்
ஆரா நின்றாள், நூபுரம்
    அச்சம் தரு தாளாள்,
வேரா நின்றாள், மின்னின்
    இமைக்கும் மிளிர்பூணாள்.
77

உரை
   
 
5019.வேல், வாள், சூலம், வெம்கதை,
    பாசம், மிளிர்சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட
    கரத்தாள், வடகுன்றம்
போல்வாள், திங்கட் போழின்
    எயிற்றாள், புகை வாயில்
கால்வாள், காணில் காலனும்
    உட்கும் கதம் மிக்காள்.
78

உரை
   
 
5020.அஞ்சு வணத்தின் ஆடை
    உடுத்தாள், அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம்
    மிகுத்தாள், அருள் இல்லாள்,
அம் சுவணத்தின் உத்தரியத்தாள்,
    அலை ஆரும்
அம் சு வள் நத்தின் முத்து ஒளிர்
    ஆரத்து அணிகொண்டாள்.
79

உரை
   
 
5021.சிந்து ஆரத்தின் செச்சை
    அணிந்தாள், தெளிநூல் யாழ்
அம் தாரத்தின் நேர்வரு
    சொல்லாள், அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை
    பன்னிக் களிகூரும்
மந்தாரத்தின் மாலை
    அலம்பு மகுடத்தாள்.
80

உரை
   
 
இலங்கா தேவியை அநுமன் எதிர்தல்

5022.எல்லாம் உட்கும் ஆழி
    இலங்கை இகல் மூதூர்
நல்லாள், அவ் ஊர் வைகு உறை
    ஒக்கும் நயனத்தாள்,
‘நில்லாய்! நில்லாய்! ‘என்று உரை
    நேரா, நினையாமுன்,
வல்லே சென்றாள்; மாருதி
    கண்டான், ‘வருக! ‘என்றான்.
81

உரை
   
 
அநுமனை நோக்கி இலங்காதேவி கூறுவது

5023.‘ஆகா செய்தாய்! அஞ்சலை
    போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல்
    சலம் என்னாம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன்மதில்
    தாவிப் பகையாதே!
போகாய்! ‘என்றாள், பொங்கு அழல்
    என்னப் புகை கண்ணாள்.
82

உரை
   
 
அநுமன் மறுமொழி

5024.களியா உள்ளத்து அண்ணல்,
    மனத்தில் கதம் மூள
விளியாநின்றே, நீதி
    நலத்தின் வினை ஓர்வான்,
‘அளியான் இவ் ஊர் காணும்
    நலத்தால் அணைகின்றேன் :
எளியேன் உற்றால், யாவது
    உனக்கு இங்கு இழவு? ‘என்றான்.
83

உரை
   
 
இலங்காதேவி சினத்தல்

5025.என்னா முன்னம், ‘ஏகு! என
    ஏகாது, எதிர்மாற்றம்
சொன்னாயே? நீ யாவன்?
    அடா! தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர்
    எய்தற்கு : அளியுற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல்
    இவ் ஊர்? ‘என்று உற நக்காள்.
84

உரை
   
 
இலங்காதேவிகூற்றும்-அநுமன்மாற்றமும்

5026.நக்காளைக் கண்டு, ஐயன்
    மனத்து ஓர் நகை கொண்டான்;
‘நக்காய்? நீ யார்? யார்சொல
    வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏதாம்? ஓடலை? ‘
    என்றாள்; ‘இனி, இவ்வூர்
புக்கால் அன்றிப் போகலன்! ‘
    என்றான், புகழ்கொண்டான்.
85

உரை
   
 
இலங்காதேவி சிந்தித்தல்

5027.‘வஞ்சம் கொண்டான்! வானரம்
    அல்லன்! வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை;
    இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்டு ஆர் கண்
    நுதலைப் போல் நகுகின்றான்! ‘
நெஞ்சம் கொண்டே, கல் என
    நின்றே, நினைகின்றாள்.
86

உரை
   
 
இலங்காதேவி சூலத்தை யேவல்

5028.‘கொல்வாம்! அன்றேல், கோள் உறும்
    இவ் ஊர்! ‘எனல் கொண்டாள்;
‘வெல்வாய் நீயேல், வேறி! ‘
    எனத் தன் விழிதோறும்,
வல்வாய் தோறும், வெம் கனல்
    பொங்க, ‘மதிவானில்
செல்வாய்! ‘என்னா, மூவிலை
    வேலைச் செலவிட்டாள்.
87

உரை
   
 
அநுமன் சூலத்தை முறித்தல்

5029.தடித்தாம் என்னத் தன் எதிர்
    செல்லும் தழல்வேலைக்
கடித்தான், நாகம் விண்ணின்
    முரிக்கும் கலுழன் போல்,
ஒடித்தான் கையால், உம்பர்
    உவப்ப, உயர்காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண் என,
    எண்ணம் பிழையாதான்.
88

உரை
   
 
இலங்காதேவியும் அநுமனும் பொருதல் (5030-5031)

5030.இற்றுச் சூலம் நீறு எழல்
    காணா, எரி ஒப்பாள்,
மற்றுத் தயெ்வப் பல்படை
    கொண்டே மலைவாளை
உற்றுக் கையால் ஆயுதம்
    ஒன்றும் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில்
    எறிந்தான் பழி ஓர்வான்.
89

உரை
   
 
5031.வழங்கும் தயெ்வப் பல்படை
    காணாள், மலைவான் மேல்
முழங்கும் மேகம் என்ன
    முரற்றி முனிகின்றாள்,
கழங்கும், பந்தும், குன்றுகொடு
    ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும் செந்தீச் சிந்த
    அடித்தாள், தகைவு இல்லாள்.
90

உரை
   
 
இலங்காதேவி தோல்வியுற்று வீழ்தல்

5032.அடியா முன்னம், அங்கை
    அனைத்தும் ஒரு கையால்
பிடியா, ‘என்னே? பெண் இவள்!
    கொல்லில் பிழை! ‘என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடி
    கொண்டான்; உயிரோடும்,
இடியேறு உண்ட மால்வரை
    போல், மண்ணிடை வீழ்ந்தாள்.
91

உரை
   
 
இலங்காதேவி தன் வரலாறு கூறுதல் (5033-5036)

5033.விழுந்தாள்; நொந்தாள்; வெம் குருதிச்
    செம் புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார்
    தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாவையும்,
    எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன்
    முன் நின்று, இவை சொன்னாள்.
92

உரை
   
 
5034.‘ஐய! கேள்! வையம் நல்கும்
    அயன் அருள் அமைதியாக
எய்தி, இம் மூதூர் காப்பென்,
    இலங்கைமாதேவி என்பேன்;
செய்தொழில் இழுக்கினாலே
    திகைத்து இந்தச் சிறுமை செய்தேன்.
உய்தி என்று அளித்தியாயின்
    உணர்த்துவல் உண்மை ‘என்றாள்.
93

உரை
   
 
5035.“எத்தனை காலம் காப்பல்
    யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, ‘
    முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம் அதனால் தீண்டில்,
    கழிவது; அன்று என்னைக் காண்டி!
சித்திர நகரம் பின்னைச்
    சிதைவது திண்ணம்! ‘என்றாள். ‘‘
94

உரை
   
 
5036.‘அன்னதே முடிந்தது, ஐய!
    அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
என்னும் ஈது இயம்ப வேண்டும்
    தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்!
    உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி! ‘என்று
    புகழ்ந்தனள், இறைஞ்சிப் போனாள்.
95

உரை
   
 
அநுமன் இலங்கையுள் புகுதல்

5037.வீரனும், விரும்பி நோக்கி,
    ‘மெய்ம்மையே! விளையும் அஃது! ‘என்று,
ஆரியன் கமல பாதம்
    அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப்
    பொன்மதில் தாவிப் புக்கான்,
சீரிய பாலின் வேலைச்
    சிறுபிரை தறெித்தது அன்னான்!
96

உரை
   
 
மணிமாடங்களின் ஒளிகண்டு துணுக்குறல்

5038.வான்தொடர் மணியில் செய்த
    மை அறு மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப்
    பகல் செய்த அமைவு நோக்கி,
‘ஊன்றிய உதயத்து உச்சி
    ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ? ‘என்னா,
    அறிவனும் துணுக்கம் கொண்டான்.
97

உரை
   
 
இலங்கையின் ஒளியை வியத்தல் (5039-5040)

5039.மொய்ம்மணி மாட மூதூர்
    முழுது இருள் அகற்றா நின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா,
    மிகை என விலங்கிப் போனான்!
இம்மதில் இலங்கை நாப்பண்
    எய்துமேல், தன்முன் எய்தும்,
மிம்மினி அல்லனோ, அவ்
    வெயில்கதிர் வேந்தன் அம்மா!
98

உரை
   
 
5040.‘பொசிவு உறு பசும்பொன் குன்றில்
    பொன்மதில் நடுவண் பூத்த
வசை அற விளங்கும் சோதி
    மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர்
    ஆர் இருள் இன்மையாலோ
நிசிசரர் ஆயிற்று, அம்மா!
    நீள் நகர் நிருதர் எல்லாம்! ‘
99

உரை
   
 
அநுமன் மாளிகை நிழலில் மறைந்து செல்லல்

5041.என்று அன இயம்பி, வீதி
    ஏகுவது இழுக்கம் என்னாத்
தன் தகை அனைய மேனி
    சுருக்கி, மாளிகையில் சாரச்
சென்றனன் என்ப மன்னோ,
    தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன்
    புகழ் எனக், குலவு தோளான்!
100

உரை
   
 
பசுக்கொட்டில் முதலிய பல இடங்களிலும் அநுமன் தேடிச் செல்லுதல்

5042.ஆத் துறு சாலை தோறும்,
    ஆனையின் கூடம் தோறும்,
மாத் துறு மாடம் தோறும்,
    வாசியின் பந்தி தோறும்,
காத் துறு சோலை தோறும்,
    கரும் கடல் கடந்த தாளான்,
பூத்தொறும் வாவிச் செல்லும்
    பொறிவரி வண்டில், போனான்.
101

உரை
   
 
இலங்கைநகர் வீதியில் செல்லும் அநுமன் தோற்றம்

5043.பெரிய நாள் ஒளிகொள் நானாவித
    மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கு அங்கே
    சுற்றலால், காலின் தோன்றல்,
கரியனாய் வெளியன் ஆகிச்
    செய்யனாய்க் காட்டும், காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன்
    அகத்து உறை அழகனே போல்!
102

உரை
   
 
கவிக்கூற்று

5044.ஈட்டுவார் தவம் அலால், மற்று
    ஈட்டினால் இயைவது இன்மை
காட்டுவார் விதியார், அஃது
    காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டு வார் முலை பொறாத
    பொய் இடை நையப் பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்,
    ஆடுவார் அரக்கர் மாதர்!
103

உரை
   
 
அநுமன் கண்ட அரக்கர்நிலை (5045-5061)

5045.கானக மயில்கள் என்னக்,
    களி மட அன்னம் என்ன,
ஆனன கமலப் போது
    பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலைத்
    தயெ்வநீர் ஆற்றுத் தெள் நீர்
வானவர் மகளிர் ஆட்ட,
    மஞ்சனம் ஆடுவாரை.
104

உரை
   
 
5046.இலக்கண மரபிற்கு ஏற்ற
    எழுவகை நரம்பின் நல்யாழ்
அலத்தகத் தளிர்க்கை நோவ
    அளந்து எடுத்து அமைத்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று,
    சேடியர் கன்னிமார் தம்
மலர்க் கையால் மாடத்து உம்பர்
    மழையின்வாய் பொத்துவாரை.
105

உரை
   
 
5047.சந்தப் பூம் பந்தர் வேய்ந்த
    தமனிய அரங்கில், தத்தம்
சிந்தித்தது உதவும் தயெ்வ
    மணிவிளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்து, நிருத மாக்கள்,
    விளம்பின நெறி வழாமல்
கந்தர்ப்ப மகளிர் ஆடும்
    நாடகம் காண்கின்றாரை.
106

உரை
   
 
5048.திருத்திய பளிக்கு வேதித்,
    தெள்ளிய வேல்கள் என்னக்,
கருத்து இயல்பு உரைக்கும் உண்கண்
    கரும் கயல் செம்மை காட்ட,
வருத்திய கொழுநர் தம்பால்
    வரம்பின்றி வளர்ந்த காமம்
அருத்திய பயிர்க்கு நீர்போல்,
    அருநறவு அருந்துவாரை.
107

உரை
   
 
5049.கோதறும் குவளை நாட்டம்
    கொழுநர் கண் வண்ணம் கொள்ளத்
தூதுளம் கனியை வென்று
    துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும்,
    ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல்,
    முறைமுறை களிக்கின்றாரை.
108

உரை
   
 
5050.வில் படர் பவளப் பாதத்து
    அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப்
    புனை நறும் கலவை பூசி,
அற்புத வடிக்கண் வாளிக்கு
    அஞ்சனம் எழுதி, அம் பொன்
கற்பகம் கொடுக்க, வாங்கிக்,
    கலன் தரெிந்து அணிகின்றாரை.
109

உரை
   
 
5051.புலிபடு மதுகை மைந்தர்
    புதுப்பிழை உயிரைப் புக்கு
நலிவு இடை, அமுத வாயால்
    நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவு உடை மருங்குல் மின்னின்
    அலமரச், சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும் தோறும்,
    மயிர் புளகு உதிக்கின்றாரை.
110

உரை
   
 
5052.உள்ளுடை மயக்கால் உண்கண்
    சிவந்து, வாய் வெண்மை ஊறித்
துள்ளிடைப் புருவம் கோணித்
    துடிப்ப, வேர் பொடிப்பத் தூங்கும்
வெள்ளிடை மருங்குலார், தம்
    மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற, நோக்கிக்
    கணவரைக் கனல்கின்றாரை.
111

உரை
   
 
5053.ஆலையில், மலையில், சாலி
    முளையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில்,
    சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத,
    வேல்கணார் குமுதச் செவ்வாய்
வாழ் எயிறு ஊறு தீம்தேன்,
    மாந்தினர் மயங்குவாரை.
112

உரை
   
 
5054.நலனுறு கணவர் தம்மை
    நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய,
    முள் நிலா முளரிச் செங்கேழ்
மலர்மிசை மலர் பூத்து என்ன,
    வளைக் கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும்,
    நெடிது உயிர்த்து அயர்கின்றாரை.
113

உரை
   
 
5055.ஏதி அம் கொழுநர் தம்பால்
    எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை
    உயிர் இலா உடலில் சாய்வார்,
மாதுயர் காதல் தூண்ட,
    வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி,
    உயிர்வந்து துடிக்கின்றாரை.
114

உரை
   
 
5056.சங்கொடு, சிலம்பும், நூலும்,
    பாதசாலகமும், தாழப்
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப,
    இல் உறை தயெ்வம் போற்றிக்
கொங்கு அலர் கூந்தல் செவ்வாய்
    அரம்பையர், பாணி கொட்டி,
மங்கல கீதம் பாட,
    மலர்ப்பலி வகுக்கின்றாரை.
115

உரை
   
 
5057.இழைதொடர் வில்லும், வாளும்,
    இருெளாடு மலைய, யாணர்க்
குழைதொடர் நயனக் கூர்வேல்
    குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழைதொடர் சங்கு, பேரி,
    முகில் என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன
    விழாவொடு வருகின்றாரை.
116

உரை
   
 
5058.பள்ளியின் மைந்தரோடும்,
    ஊடிய பண்பு நீங்கி,
உள்ளிய கலவிப் பூசல்
    உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இழையை நீக்கி,
    அஞ்சனம் எழுதி ஏய்ந்த
கள்ளவாள் நயனம் என்னும்
    வாள் உறை கழிக்கின்றாரை.
117

உரை
   
 
5059.ஓவியம் அனைய மாதர்
    ஊடினர், உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம் முற்றும்
    கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன,
    மின் இடை துவள ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு,
    அரும் கதவு அடைக்கின்றாரை.
118

உரை
   
 
5060.கின்னர மிதுனம் பாடக்,
    கிளர்மழை கிழித்துத் தோன்றும்
மின் எனத், தரளம் வேய்ந்த
    வெண்ணிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப்
    பல ஆண்டு இசை பரவப் பண்ணைப்
பொன்னகர் வீதி தோறும்,
    புதுமனை புகுகின்றாரை.
119

உரை
   
 
5061.கோவையும் குழையும் மின்னக்
    கொண்டலின் முரசம் ஆர்ப்பத்
தேவர்நின்று ஆசி கூற,
    முனிவர் சோபனங்கள் செப்பப்
பாவையர் குழாங்கள் சூழப்
    பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூறப்
    புதுமணம் புணர்கின்றாரை.
120

உரை
   
 
அநுமன் கும்பகன்னனைக் காண்டல்

5062.இயக்கியர், அரக்கி மார்கள்,
    நாகியர், இன்சொல் விஞ்சை
முயல்கறை இலாத திங்கள்
    முகத்தியர், முதலினோரை
மயக்கற நாடி ஏகு
    மாருதி, மலையின் வைகும்
கயக்கம் இல் துயிற்சிக் கும்ப
    கருணனைக் கண்ணிற் கண்டான்.
121

உரை
   
 
கும்பகன்னன் பள்ளியறைச் சிறப்பு

5063.ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணிமுடி கவித்த மண்டபம்
ஏசு உற விளங்குவது இருளை எண்வகை
ஆசையின் நிலைகெட அகற்றி ஆன்றது.
122

உரை
   
 
கும்பகன்னன் துயிலுநிலை (5064-5070)

5064.அன்னதன் நடுவண் ஓர் அமளி மீ மிசைப்
பன்னக அரசு எனப் பரவைதான் எனத்
துன்னிருள் ஒருவழித் தொக்கதாம் என
உன்னரும் தீவினை உருக்கொண் டென்னவே.
123

உரை
   
 
5065.முன்னிய கனைகடல் முழுகி மூவகைத்
தன் இயல் கதியொடும் தழுவித் தாது உகு
மன்நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தனெ்றல் வந்து இழுகி ஏகவே.
124

உரை
   
 
5066.வானவர் மகளிர் தாள் வருட மாமதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு காந்தம் மீக் கான்ற காமர்நீர்த்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றவே.
125

உரை
   
 
5067.மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்தக் கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான்.
126

உரை
   
 
5068.பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழில் வெம் கொடியவன் உயிர்ப்புக் கேடிலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் இறுதி பார்த்து உழல்வது ஒக்கவே.
127

உரை
   
 
5069.பகை என மதியினைப் பகுத்துப் பாடுற
அகை இல் பேழ் வாய்மடுத்து அருந்துவான் எனப்
புகையொடு முழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழுமுகத்து எயிறு நாறவே.
128

உரை
   
 
5070.தடையுறு மந்திரம் தகைந்த நாகம்போல்
இடையுறவு அரியது ஓர் உறக்கம் எய்தினான்
கடையுக முடிவெனும் காலம் ஓர்ந்து அயல்
புடைபெயரா நெடும் கடலும் போலவே.
129

உரை
   
 
கும்பகன்னனை இராவணனென்று நினைத்து அநுமன் சினத்தல்

5071.ஆவது ஆகிய தன்மைய
    அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்ற குணம் இலி
    இவன் எனக் கொண்டான்;
காவல் நாட்டங்கள் பொறி உகக்
    கனல் எழக் கனன்றான்;
‘ஏவனோ இவன்? மூவரின்
    ஒருவனாம் ஈட்டான்! ‘
130

உரை
   
 
இராவணன் அல்லன் என்று சினந்தணிதல்

5072.குறுகி நோக்கி, மற்று அவன்தலை
    ஒருபதும், குன்று ஒத்து
இறுகு திண்புயம் இருபதும்
    இவற்கு இலை! என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும்
    வடவை வெம் கனலை,
அறிவு எனும் பெரும் பரவை அம்
    புனலினால் அவித்தான்.
131

உரை
   
 
அநுமன் கும்பகன்னன் பள்ளியறையைக் கடந்து செல்லல்

5073.அவித்து நின்று, ‘எவன் ஆயினும்
    ஆக! ‘என்று அங்கை
கவித்து, ‘நீ கிட சிலபகல்! ‘
    என்பது கருதாச்
செவிக்குத் தேன் அன்ன இராகவன்
    புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன்
    உறையுளைக் கடந்தான்.
132

உரை
   
 
அநுமன் மேலும் பல இடங்களிலும் தேடல்

5074.மாட கூடங்கள், மாளிகை
    ஓளிகள், மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம்,
    தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம்,
    முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன்
    புகழெனும் நலத்தான்.
133

உரை
   
 
தேடுங்கால் அநுமன் நிலை

5075.மணிகொள் வாயிலில், சாளரத்
    தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் எனப்
    புகை எனக் கலக்கும்,
நுணுகும், வீங்கும், மற்று அவன் நிலை
    யாவரே நுவல்வார்?
அணுவின் மேருவின் ஆழியான்
    எனச் செலும் அறிவோன்.
134

உரை
   
 
அநுமன் வீடணன் இல்லில் புகல்

5076.ஏந்தல் இவ் வகை எவ் வழி
    மருங்கினும் எய்திக்
காந்தள் மெல்விரல் மடந்தையர்
    யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேலுேளார்,
    கீழுேளார், விரும்பப்
போந்த புண்ணியன் கண்ணகன்
    கோயிலுள் புக்கான்.
135

உரை
   
 
வீடணனை நெருங்கல்

5077.பளிக்கு வேதிகைப் பவழத்தின்
    கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில்,
    கரு நிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என,
    அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம்
    அன்னான்தனை உற்றான்.
136

உரை
   
 
வீடணனை நல்லவன் என்று தரெிந்து அநுமன் மேல் செல்லல்

5078.உற்று நின்று அவன் உணர்வைத் தன்
    உணர்வினால் உணர்ந்தான்,
குற்றம் இல்லதோர் குணத்தினன்
    இவன், எனக் கொண்டான்,
செற்றம் நீங்கிய மனத்தினன்,
    ஒருசிறை சென்றான்.
பொற்ற மாடங்கள் கோடி ஓர்
    நொடி இடைப் புக்கான்.
137

உரை
   
 
அநுமன் இந்திரசித்தின் மாளிகையை அடைதல் (5079-5080)

5079.முந்து அரம்பையர் முதலினர்,
    முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர்,
    பலரையும் தரெிந்து,
மந்திரம் பல கடந்து, தன்
    மனத்தின்முன் செல்வான்,
இந்திரன் சிறையிருந்த
    வாயிலின்கடை எதிர்ந்தான்.
138

உரை
   
 
5080.ஏதி ஏந்திய தடக்கையர்,
    பிறை எயிறு இலங்க,
மூதுரைப் பெருங் கதைகளும்,
    பிதிர்களும், மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம்
    உறுவலி அரக்கர்,
காது வெஞ்சினக் களியினர்
    காவலைக் கடந்தான்.
139

உரை
   
 
அநுமன் இந்திரசித்தைக் காண்டல்

5081.முக்கண் நோக்கினன் முறைமகன்,
    அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும்,
    சில கரந் தனையான்,
ஒக்க நோக்கியர் குழாத்திடை
    உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன், புகைபுகா
    வாயினும் புகுவான்.
140

உரை
   
 
இந்திரசித்தைக் கண்ட அநுமன் நினைதல் (5082-5083)

5082.வளையும் வாள் எயிற்று அரக்கனோ?
    கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன்
    யாவனோ? அறியேன்!
இளைய வீரனாம் ஏந்தலும்
    இவனுடன் நெடுநாள்
உளைய உள்ளபோர் உளது! என,
    உள்ளத்தின் உணர்ந்தான்.
141

உரை
   
 
5083.‘இவனை இன் துணை உடைய பேர்
    இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது? ஓர்
    பொருள் எனப் புகலேன்!
சிவனை, நால் முகத்து ஒருவனைத்
    திருநெடுமாலாம்
அவனை அல்லது, நிகர் பிறர்,
    என்பதும் அறிவோ? ‘
142

உரை
   
 
அநுமன் பிற இடங்களில் தேடல்

5084.என்று கை மறித்து ‘இடைநின்று காலத்தை இழப்பது
அன்று பேர்வது! ‘என்று ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஓளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன் இந்திர சித்தினைத் தீர்ந்தான்.
143

உரை
   
 
அநுமன் அக்கன் முதலியோரில்லங்களில் தேடிக் கடத்தல்

5085.அக்கன் மாளிகை கடந்துபோய்,
    மேல் அதிகாயன்
தொக்க கோயிலும், தம்பியர்
    இல்லமும், துருவித்
தக்க மந்திரத் தலைவர்மா
    மனைகளும் தடவிப்
புக்கு நீங்கினன், இராகவன்
    சரம் எனப் புகழோன்.
144

உரை
   
 
அநுமன் இடைநகர் அகழியை அடைதல்

5086.இன்னர் ஆகிய இரும் படைத்
    தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர
    கோடியும் புக்கான்,
கன்னி மாநகர்ப் புறத்து அவன்
    கரந்து உறை காண்பான்,
சொன்ன மூன்றினுள், நடுவணது
    அகழியைத் தொடர்ந்தான். ‘
145

உரை
   
 
அநுமன் அகழியைக் காண்டல்

5087.தனிக் கடக் களிறு என ஒரு
    துணையிலான், ‘தாய
பனிக் கடல் பெருங் கடவுள்தன்
    பரிபவம் துடைப்பான்,
இனிக் கடப்பு அரிது! ஏழ் கடல்
    கிடந்தது! ‘என்று இசைத்தான்
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன்
    அகழியைக் கண்டான்.
146

உரை
   
 
அநுமன் இடைநகர் அகழியை வியத்தல் (5088-5089)

5088.‘பாழி நல் நெடும் கிடங்கு எனப்
    பகர்வரேல், பல் பேர்
ஊழிகாலம் நின்று, உலகு எலாம்
    கல்லினும், முடியா!
ஆழி வெம்சினத்து அரக்கனை
    அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும் இந்நகர்ச் சுலாய கொல்
    ஆம்! ‘என இசைத்தான்.
147

உரை
   
 
5089.ஆய தாகிய அகன் புனல்
    அகழியை அடைந்தான்,
‘தாய வேலையின் இருமடி
    விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது! ‘
    என்பது புகன்றான்,
நாயகன் புகழ் நடந்த பேர்
    உலகு எலாம் நடந்தான்.
148

உரை
   
 
இடைநகர் அகழின் இயல்பு (5090-5096)

5090.மேக்கு நால்வகை மேகமும் கீழ்விழத்
தூக்கினால் அன்ன தோயத்ததாய்த் துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரை வைக்கலும் ஆகுமோ?
149

உரை
   
 
5091.ஆனை மும்மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறைக்குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால்!
150

உரை
   
 
5092.உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே!
151

உரை
   
 
5093.நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடின
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலம் பிடிக்கும் ஒர் ஊடல் கொடுக்குமால்!
152

உரை
   
 
5094.நறவு நாறிய நாள் நறும் தாமரை
துறைகள் தோறும் முகிழ்த்தன தோன்றுமால்!
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்கேளா?
153

உரை
   
 
5095.பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும் வெள்ளமும் மெய் தரெியாது மேல்
தெளிந்த சிந்தையரும் சிறியார்கேளாடு
அளிந்த போது அறிதற்கு எளிதாவரோ?
154

உரை
   
 
5096.நீலமேமுதல் நன்மணி நித்திலம்
மேல கீழ பல்வேறு ஒளி வீசலால்
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ எனக் காட்டுமே!
155

உரை
   
 
அநுமன் இடைநகருள் புகுந்து தேடல் (5097-5098)

5097.அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பின்பட
துன்னரும் கடி மாநகர் துன்னினான்
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம்.
156

உரை
   
 
5098.கருவி நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரண்டு ஓசனைத்
தரெுவு மும்மை நூறாயிரம் தேடினான்!
157

உரை
   
 
இரவில் அரக்கர் நிகழ்ச்சிகள் (5099-5106)

5099.வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கினது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியம் அடங்கின தொடங்கினது உறக்கம்!
158

உரை
   
 
5100.இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினவர் அல்லார்.
159

உரை
   
 
5101.வடம் தரு தடம் கொள்புய மைந்தர் கலவிப் போர்
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில்போலும்
மடந்தையர் தடம் தன முகட்டு இடை மயங்கிக்
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம்.
160

உரை
   
 
5102.வாம நறையின் திறம் நுகர்ந்தவர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தவர் களித்தார்;
பூமன் அறை வண்டு உறை இலங்கு அமளி புக்கார்
தூம நறை இன் துறை அயின்றிலர் துயின்றார்.
161

உரை
   
 
5103.பண் இமை அடைத்த பல கண் பொருநர் பாடல்
விண் இமை அடைத்தன விளைந்தது இருள் வீணை
தண்ணுமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்.
162

உரை
   
 
5104.விரிந்தன நரந்தம் முதல் மெல் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தனெ்றல் உணர்வு உண்டு அயல் உலாவச்
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம்
எரிந்தன பிரிந்தவர்தம் எஞ்சுதனி நெஞ்சம்.
163

உரை
   
 
5105.இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தனெ்றல் பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்கரிய ஆசை உற வீயா
விளக்கு என விளங்கும் மணி மெய் உறு விளக்கம்.
164

உரை
   
 
5106.நித்த நியமத் தொழில் முடித்து நெடு வானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகிகள் துயின்றார்;
மத்தமத வெம் களிறு உறங்கின; உறங்காப்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரது என்னோ?
165

உரை
   
 
அநுமன் அகநகரடைதல்

5107.ஆயபொழுது அம்மதில் அகத்து அரசர் வைகும்
தூய தரெு ஒன்றொடு ஒருகோடி துருவிப் போய்த்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப் பகையை வென்றான்.
166

உரை
   
 
இராவணன் காதல் கிழத்தியர் இல்லங்களில் அநுமன் தேடுதல்

5108.போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களாத்
தாரகைக் குழுவில் தழைத்து ஓங்கிய
நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினான்.
167

உரை
   
 
5109.முயல் கரும் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினர்
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான்.
168

உரை
   
 
5110.தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூலினும் இன் இளம் காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெம் வினை வேர் அற வீசினான்.
169

உரை
   
 
இராவணன் உரிமை மகளிருள் இயக்கியர் நிலை (5111-5120)

5111.அத்திரம் புரை யானை அரக்கன் மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பு இலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அறச்
சித்திரங்கள் என இருந்தார் சிலர்
170

உரை
   
 
5112.அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் கண் முகிழ்த்து
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர்.
171

உரை
   
 
5113.பழுதில் மன்மதன் எய்கணை பல் முறை
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
‘அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம் கொல்? ‘என்று எண்ணுகின்றார் சிலர்.
172

உரை
   
 
5114.‘ஆவது ஒன்று அருளாய்! எனது ஆவியைக்
கூவுகின்றிலை! கூறலை சென்று! ‘எனப்
பாவை பேசுவ போல் கண் பனிப்பு உறப்
பூவையோடு புலம்புகின்றார் சிலர்.
173

உரை
   
 
5115.ஈரத் தனெ்றல் இழுக மெலிந்து தம்
பாரக் கொங்கையைப் பார்த்து அந்தப் பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் எண்ணா உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர்.
174

உரை
   
 
5116.நக்க செம்மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல்பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர்.
175

உரை
   
 
5117.வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால் செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர்.
176

உரை
   
 
5118.கவ்வு தீக்கணை மேருவைக் கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மாமுலை வௌவிய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர்.
177

உரை
   
 
5119.கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆடினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர்.
178

உரை
   
 
5120.இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஒராயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் வளையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான்.
179

உரை
   
 
இராவணன் உரிமைமகளிருள் அரக்கியர்நிலை (5121-5132)

5121.எரிசுடர் மணியின் செம் கேழ்
    இளவெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும்
    விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவின் நீங்கி,
    ஆசையும் தாமுமே புக்கு,
ஒருசிறை இருந்து, போன
    உள்ளத்தொடு ஊடுவாரும்.
180

உரை
   
 
5122.நகை எரிக் கற்றை தறெ்றி
    நாவி தோய்த்து அனைய ஓதி
புகை எனத் தும்பி சுற்றப்,
    புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப்
    பளிங்கு உடைச் சீதப் பள்ளி
மிகை உயிரோடும் காம
    விம்மலின் வெதும்புவாரும்.
181

உரை
   
 
5123.சவிபடு தகைசால் வானம்
    தான் ஒரு மேனி ஆகக்
குவியும் மீன் ஆரம் ஆக, மின்கொடி
    மருங்குல் ஆகக்
கவிர் ஒளிச் செக்கர் கற்றை
    ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர்மதி நெற்றி ஆக,
    அந்திவான் ஒக்கின்றாரும்.
182

உரை
   
 
5124.பானல் உண் கண்ணும் வண்ணப்
    படிமுறை மாறப் பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும்
    சுரிகுழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட
    வெள்நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி,
    மணிக் கழங்கு ஆடுவாரும்.
183

உரை
   
 
5125.உழை உழைப் பரந்த வான
    யாற்று நின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம் தந்த
    புனல் குளிர்ப்பில என்று ஊடி
இழை தொடுத்து இலங்கும் மாடத்து
    இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகும் நீரால்
    மஞ்சனம் ஆடுவாரும்.
184

உரை
   
 
5126.பன்னக அரசர் செம் கேழ்ப்
    பணா மணி வலியில் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான்
    ஆம் என இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும்,
    மாலையும், பணையம் ஆகப்
பொன்னின் நன் பலகைச் சூது,
    துயில்கிலர் பொருகின்றாரும்.
185

உரை
   
 
5127.தனெ் நகு குடம் உள் பாடல்
    சித்தியர் இசைப்பத் தீஞ்சொல்
பன்னக மகளிர் வள் வார்த்
    தண்ணுமைப் பாணி பேணப்
பொன் நகு தரளப் பந்தர்க்
    கற்பகப் பொதும்பர்ப் பொன் தோள்
இன் நகை அரம்பைமாரை
    ஆடல் கண்டு இருக்கின்றாரும்.
186

உரை
   
 
5128.ஆணியில் கிடந்த காதல்
    அகம் சுட, அருவி உண்கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த
    சிந்தையர், செய்வ தோரார்,
வீணையும், குழலும், தத்தம்
    மிடறும், வேற்றுமையில் தீர்ந்த
பாணி தள்ளாடப் பாடல்
    அமுது உகப் பாடுவாரும்.
187

உரை
   
 
5129.தண்டலை வாழை அன்ன
    குறங்கு இடை அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக்
    கலைகளும், சோரக் கூர்ங்கள்
உண்டு அலமந்த கண்ணார்,
    ஊசல் இட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீசக்
    குரவையில் குழறு வாரும்.
188

உரை
   
 
5130.நச்சு எனக் கொடிய கண்ணார்,
    கள்ெளாடு குருதி நக்கிப்
பிச்சரில் பிதற்றி, அல்குல்
    பூந்துகில் கலாபம் பீறிக்
குச்சரித் திறத்தின் ஓசை
    களம் கொளக் குழுக் கொண்டு ஈண்டிச்
சச்சரிப் பாணி கொட்டி,
    நிறை தடுமாறுவாரும்.
189

உரை
   
 
5131.தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம்
    தள்ளத் தம் அறிவு, தள்ளப்
பயிர் உறத் ‘தயெ்வம் என்மேல்
    படிந்தது, பார்மின்! ‘என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும்
    உச்சிமேல் உயர நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி,
    வாய் விரித்து, ஒடுங்கு வாரும்.
190

உரை
   
 
5132.இத்திறத்து அரக்கர் மாதர்
    ஈரிரு கோடி ஈட்டம்,
பத்தியின் உறையும் பத்திப்
    படர் நெடும் தரெுவும் பார்த்தான் :
சித்தியர் உறையும் மாடத்
    தரெுவும் பின்னாகச் சென்றான் :
உத்திசை விஞ்சை மாதர்
    உறையுளை முறையின் உற்றான்.
191

உரை
   
 
இராவணன் உரிமை மகளிருள் விஞ்சை மகளிர் நிலை (5133-5135)

5133.வளர்ந்த காதலர், மகரிகை நெடுமுடி
    அரக்கனை வரக்காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட,
    உயிரொடு தடுமாறிக்
களம் தவா நெடும் கருவியில், கைகளில்,
    செயிரியர் கலைக்கண்ணால்,
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக,
    அலமரல் உறுகின்றார்.
192

உரை
   
 
5134.புரியும் நல்நெறி முனிவரும், புலவரும்,
    புகல்கிலர் பொறைகூர,
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல்
    இராவணற்கு, எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு
    பகையொடும், பனித்திங்கள்
சொரியும் வெம் கதிர் துணைமுலைக் குவை சுடக்
    கொடிகளில் துடிக்கின்றார்.
193

உரை
   
 
5135.சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம்வகை,
    திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர்,
    முயங்கிய முலைமுன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும்,
    இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர்,
    மயங்கினர், உயிர்க்கின்றார்.
194

உரை
   
 
அநுமன் மண்டோதரி மனையைக் காண்டல்

5136.ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம்
    ஆறு இரண்டு அமை கோடி
தூய மாளிகை நெடும் தரெுத் துருவிப்போய்த்
    தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான்,
    கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி
    மயன் மகள் மணி மாடம்.
195

உரை
   
 
மண்டோதரி மனையை அநுமன் வியத்தல்

5137.கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் :
    ‘காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு! எங்கள் நாயகற்கு
    உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்?
    குல மணி மனைக்கு எல்லாம்,
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது
    இது! ‘என வியப்பு உற்றான்.
196

உரை
   
 
மண்டோதரி துயிலும் நிலை (5138-5139)

5138.அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி
    ஆதியாயவர், மாரன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி கரம் தொடச்
    சாமரை தடுமாறக்
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர்
    காமரம் கனி யாழின்
நரம்பின் இன்னிசை செவிபுக, நாசியில்
    கற்பக விரை நாற.
197

உரை
   
 
5139.விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும்
    கீழ்மையோர் வெகுள்வு உற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது என்று ஐயுறு
    பீழையால், பெரும் தனெ்றல்,
உழையர் கூவப் புக்கு ஏகு எனப் பெயர்வது ஓர்
    ஊசலின் உளதாகும் :
பழையம் யாம் எனப் பண்பு அல செய்வரோ?
    பருணிதர் பயன் ஓர்வார்.
198

உரை
   
 
மண்டோதரியைப் பிராட்டியென்று மயங்கி அநுமன் வருந்தல் (5140-5141)

5140.இன்ன தன்மையின் எழில் மணி விளக்கங்கள்
    இயல்கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைவு உறத் துயில்கொளும்
    தையலைத் தகைவு இல்லான்,
அன்னள் ஆகிய சானகி இவள் என
    அயிர்த்து, அகத்து எழு வெம் தீத்
துன்னு தன் உயிர் உடலொடு சுடுவது ஓர்
    துயர் உழந்து, இவை சொன்னான்.
199

உரை
   
 
5141.‘எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன்
    இழந்தனள்! இது நிற்க,
அற்பு வான் தளை, இல் பிறப்பு அதனொடும்
    இழந்து, தன் அரும் தயெ்வக்
கற்பும் நீங்கிய கனம் குழை இவள் எனில்,
    காகுத்தன் புகழோடும்,
பொற்பும், யானும், இவ் இலங்கையும், அரக்கரும்,
    பொன்றுதும் இன்று! ‘என்றான்.
200

உரை
   
 
அநுமன் தெளிதல் (5142-5143)

5142.‘மானுயர்த் திருவடிவினள் அவள் : இவள்
    மாறுகொண்டனள் : கூறில்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ?
    ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய
    காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ?
    நினைந்தது மிகை ‘என்றான்.
201

உரை
   
 
5143.‘இலக்கணங்களும் சில உள! என்னினும்,
    எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று, எடுத்து
    அறைகின்றது இவள் யாக்கை!
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇச் சில
    மாற்றங்கள் பறைகின்றாள்!
உலக்கும் இங்கு இவள் கணவனும்! அழிவும் இவ்
    வியன் நகர்க்கு உளது! ‘என்றான்.
202

உரை
   
 
அநுமன் மண்டோதரி மனை விட்டு இராவணன்மனையிற் புகுதல்

5144.என்று உணர்ந்து நின்று ஏம் உறு நிலையினில்,
    ‘நிற்க இ திறன்! ‘என்னாப்
பின்று சிந்தையன், பெயர்ந்தனன், அ மனை
    பிற்படப் பெருமேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய
    கொற்றத்து மணிக் கோயில்
சென்று புக்கனன், இராவணற்கு எடுப்பரும்
    கிரி எனத் திரள் தோளான்.
203

உரை
   
 
அநுமன் இராவணன் மனையில் கண்ட தீக்குறிகள்

5145.நிலம் துடித்தன, நெடுவரை துடித்தன,
    நிருதர்தம் குலமாதர்
பொலம் துடித்தன மருங்குல் போல், கண்களும்
    புருவமும் பொன் தோளும்
வலம் துடித்தன, மாதிரம் துடித்தன,
    தடித்து இன்றி நெடுவானம்
கலந்து இடித்தன, வெடித்தன பூரண
    மங்கல கலசங்கள்.
204

உரை
   
 
அநுமன் இலங்கை அழியும் என்றெண்ணி இரங்கல்

5146.புக்கு நின்று, தன் புலன் கொடு நோக்கினன்,
    பொருவரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன், ‘நீங்கும் அந்தோ இந்த
    நெடுநகர்த் திரு! ‘என்னா,
எக்குலங்களில் யாவரே ஆயினும்,
    இருவினை எல்லோர்க்கும்
ஒக்கும் : ஊழ்முறை அல்லது வலியது ஒன்று
    இல், என உணர்வுற்றான்.
205

உரை
   
 
அநுமன் இராவணனைக் காண்டல்

5147.நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியான்,
    நோக்கினன், மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடைபரந்து ஈண்டிய
    வெள் இடை வியன் கோயில்,
பால் பெரும் கடல் பல்மணிப் பல்தலைப்
    பாப்பு இடைப் படர்வேலை
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர்
    வனப்பினன் துயில்வானை!
206

உரை
   
 
இராவணன் துயிலும் நிலை (5148-5158)

5148.குழவி ஞாயிறு குன்று இவர்ந்து அனையன
    குருமணி நெடுமோலி
இழைகேளாடு நின்று இளவெயில் எறித்திட
    இரவு எனும் பொருள் வீய,
முழைகொள் மேருவின் முகட்டு இடைக் கனகனை
    முருக்கிய முரண் சீயம்
தழைகொள் தோெளாடும் தலைபல பரப்பி முன்
    துயில்வது ஓர் தகையானை!
207

உரை
   
 
5149.ஆய பொன் தலத்து ஆய்வளை அரம்பையர்
    ஆயிரர் அணி நின்று
தூய பொன் கவரி திரள் இயக்கிடச்
    சுழிபடு பசுங்காற்றின்
மீய கற்பகத் தேன் துளி விராயன
    வீழ்தொறும், நெடுமேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும்
    உயிர்த்து, உயிர் தேய்வானை!
208

உரை
   
 
5150.குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை
    குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம்
    கடும் கணை பலபாய,
உழந்த வெம் சமத்து உயர்திசை யானையின்
    ஒளிர் மருப்பு உற்று இற்ற
பழம் தழும்பினுக்கு இடை இடையே சில
    பசும் புண்கள் அசும்பு ஊற!
209

உரை
   
 
5151.சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு
    தண் தமிழ்ப் பசும் தனெ்றல்
ஏய்ந்த காமவெம் கனல் உயிர்த்து இருமடி
    துருத்தியின் உயிர்ப்பு ஏறக்
காந்தள் மெல் விரல் சனகிபால் மனம் முதல்
    கரணங்கள் கடிது ஓடப்
பாந்தள் நீங்கிய முழை எனக் குழைவு உறு
    நெஞ்சு பாழ்பட்டானை!
210

உரை
   
 
5152.கொண்ட பேர் ஊக்கம் மூளத்
    திசைதொறும் குறித்து மேல் நாள்
மண்டிய செருவில், மானத்
    தோள்களால் வாரி வாரி
உண்டது தவெிட்டிப் பேழ்வாய்க்
    கடைகள் தோறு ஒழுகிப் பாயும்
அண்டர்தம் புகழில் தோன்றும்,
    வெள் எயிற்று அமைதியானை!
211

உரை
   
 
5153.வெள்ளி வெண் சேக்கை வெந்து
    பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப்
    பொடித்து வேர் கொதித்துப் பொங்கக்
கள் அவிழ் மாலை தும்பி
    வண்டொ டும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய,
    உயிர்க்கின்ற உயிர்ப்பினானை!
212

உரை
   
 
5154.தே இயல் நேமியானில்,
    சிந்தைமெய்த் திருவின் ஏகப்
பூஇயல் அமளி மேலாப்
    பொய் உறக்கு உறங்குவானைக்
காவி அம் கண்ணி தன் பால்
    கண்ணிய காதல் நீரால்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும்
    அம்மி இட்டு அரைக்கின்றானை!
213

உரை
   
 
5155.மிகும் தகை நினைப்பு முற்ற
    உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல்
    நடுக்குறும் மனத்தன், ‘வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம்
    ஒருவகை உள்ளத்து உள்ளே
புகுந்தனள் அன்றோ? ‘என்று
    மயிர் புறம் பொடிக்கின்றானை!
214

உரை
   
 
5156.மென் தொழில் கலாப மஞ்ஞை
    வேட்கை மீக்கூரும் ஏனும்,
குன்று ஒழித்து ஒருமாக் குன்றின்
    அரிதில் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன் தோள்
    மணந்திடும் மடந்தை மார்கட்கு
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக
    அரிய தோள் ஒழுக்கினானை!
215

உரை
   
 
5157.தழுவா நின்ற கருங்கடல் மீது
    உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன மின் இமைக்கும்
    ஆரம் திகழும் இயல்பிற்றாய்,
முழு வானவராய் உலகம் ஒரு
    மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள் நேமி குலிசத்தின்
    வாய்மை துடைத்த மார்பானை!
216

உரை
   
 
5158.தோடு உழுத தார் வண்டும், திசையானை
    மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறும் கலவை, வயக் களிற்றின்
    சிந்துரத்தை மாறு கொள்ளக்
கோடு உழுத மார்பே போல், கொலை உழுத
    வடிவேலின் கொற்றம் அஞ்சித்
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுது
    தழும்பு இருந்த சரணத்தானை!
217

உரை
   
 
இராவணனைக் கண்ட அநுமன் சினத்தல்

5159.கண்டனன், காண்டலோடும்,
    கருத்தின் மூள் காலச் செந்தீ
விண்டன கண்கள், கீண்டு
    வெடித்தன கீழும் மேலும்,
கொண்டது ஓர் உருவ மாயோன்
    குறளினும் குறுகி நின்றான்,
திண் தலை பத்தும் தோள்கள்
    இருபதும் தரெிய நோக்கி.
218

உரை
   
 
அநுமன் இராவணனைக் கொல்ல நினைத்தல் (5160-5161)

5160.‘தோள் ஆற்றல் என் ஆகும்?
    மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை
    வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்துத்
    தலைபத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல்
    அடியேனாய் முடியேனே! ‘
219

உரை
   
 
5161.‘நடித்துவாழ் தகைமையதோ
    அடிமைதான்? நல் நுதலைப்
பிடித்துவாழ் அரக்கனார்
    யான்கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும்,
    தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல்
    முடிவது எ(ல்)லாம் முடிந்து ஒழிக! ‘
220

உரை
   
 
இராவணனைக் கொல்ல நினைந்த அநுமன் அந்நினைவொழிதல் (5162-5164)

5162.என்று, ஊக்கி, எயிறு கடித்து,
    இரு கரமும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான்,
    நேமியோன் பணி அன்றால்!
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல்
    உணர்வு உடையோர்க்கு உரித்து அன்றால் :
பின் தூக்கின், இது சாலப்
    பிழைபயக்கும் எனப் பெயர்ந்தான்.
221

உரை
   
 
5163.ஆலம் பார்த்து உண்டவன்போல்
    ஆற்றல் அமைந்துளர் எனினும்,
சீலம் பார்க்குரியோர்கள்
    எண்ணாது செய்பவோ?
மூலம் பார்க்குறின் உலகை
    முடிவிக்கும் முறைத்து எனினும்,
காலம் பார்த்து இறை வேலை
    கடவாத கடல் ஒத்தான்.
222

உரை
   
 
5164.இற்றைப் போர்ப் பெரும் சீற்றம்
    என்னோடு முடிந்திடுக!
கற்றைப் பூங் குழலாளைச்
    சிறைவைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு
    குரங்கு, என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக்
    குறை உண்டாம் ‘எனக் குறைந்தான்.
223

உரை
   
 
அநுமன் தன்னுள் கூறுதல்

5165.அந்நிலையான், பெயர்த்து உரைப்பான்,
    ‘ஆய்வளைக்கை அணி இழையார்
இந்நிலையானுடன் துயில்வார்
    உளரல்லர்! இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால்
    புலர்கின்ற நிலை! பூவை
நல் நிலையின் உளள் என்னும்
    நலன் எனக்கு நல்குமால்! ‘
224

உரை
   
 
அநுமன் பிராட்டியைக் காணாது வருந்துதல் (5166-5174)

5166.என்று எண்ணி, ஈண்டு இனி ஓர்
    பயன் இல்லை என நினையாக்
குன்று அன்ன தோளவன்தன்
    கோ மனை பின்படப் பெயர்ந்தான்,
நின்று எண்ணி உன்னுவான்,
    ‘அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள்
    இலள்! ‘என்னப் பொருமினான்.
225

உரை
   
 
5167.‘கொன்றானோ? கற்பு அழியாக்
    குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே
    செறித்தானோ சிறை சிறியோன்?
ஒன்றானும் உணரகிலேன் :
    மீண்டு இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு இக்
    கொடும் துயரம் போகாதால் ‘
226

உரை
   
 
5168.‘கண்டு வரும்! என்று இருக்கும்
    காகுத்தன்; கவிகுலக்கோன்
கொண்டு வரும்! என்று இருக்கும்;
    யான் இழைத்த கோள் இதுவால்
புண்டரிக நயனத்தான்
    பால் இனி யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது,
    யான் வாளா விளிவேனோ? ‘
227

உரை
   
 
5169.‘கண்ணிய நாள் கழிந்துளவால்
    கண்டிலமால், கனம் குழையை!
விண் அடைதும் ‘என்றாரை
    ஆண்டு இருத்தி விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்!
    இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என்
    உழை நின்றும் போயதால்.
228

உரை
   
 
5170.‘ஏழுநூறு ஓசனை சூழ்ந்து
    எயில் கிடந்த இவ் இலங்கை
வாழும் மா மன்னுயிர் யான்
    காணாத மற்று இல்லை :
ஊழியான் பெருந் தேவி
    ஒருவரையும் யான் காணேன்!
ஆழி தாய், இடர் ஆழி
    இடையே வீழ்ந்து அழிவேனோ? ‘
229

உரை
   
 
5171.‘வல் அரக்கன்தனைப் பற்றி,
    வாய் ஆறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால்,
    ‘காட்டு ‘என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி
    வேல் இராவணனும் இவ் ஊரும்
மெல் அரக்கின் உருகி விழ,
    வெம் தழலால் வேய்கேனோ? ‘
230

உரை
   
 
5172.‘வானவரே முதலோரை
    வினவுவனேல், வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக,
    உரைசெய்யும் தருக்கு இலரால்!
ஏனையர்கள் எங்கு உரைப்பார்?
    எவ் வண்ணம் தரெிகேனோ?
ஊன் அழிய நீங்காத
    உயிர் சுமந்த உணர்வு இல்லேன்! ‘
231

உரை
   
 
5173.‘எருவைக்கு முதல் ஆய
    சம்பாதி, ‘இலங்கையில் அத்
திருவைக் கண்டனென் ‘என்றான் :
    அவன் உரையும் சிதைந்ததால்
கருவைக்கும் நெடுநகரைக்
    கடல் இடையே கரையாதே
உருவைக் கொண்டு இன்னமும்
    நான் உளென் ஆகி உழல்வேனோ?
232

உரை
   
 
5174.‘வடித் தாழ் பூங் குழலாளை,
    வான் அறிய, மண் அறியப்
பிடித்தான் இவ் அடல் அரக்கன்
    எனும் மாற்றம் பிழையாதால் :
எடுத்து ஆழி இலங்கையினை
    இரும் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல்
    முறை மன்ற! என்று உணர்வான்.
233

உரை
   
 
அநுமன் அசோக வனத்தைக் காண்டல்

5175.எள் உறையும் ஒழியாமல்,
    யாண்டையினும் உளனாய்த் தன்
உள் உறையும் ஒருவனைப் போல்,
    எம் மருங்கும் உலாவுவான்,
புள் உறையும் மானத்தை
    உற நோக்கிப் புறம் பேர்வான்,
கள் உறையும் மலர்ச்சோலை
    அயல் ஒன்று கண்ணுற்றான்.
234

உரை