அநுமன் நினைத்தல்

5176.மாடு நின்ற அம் மணிமலர்ச்
    சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல்
    தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின்
    உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல்
    இலங்கையை வீட்டி! ‘
1

உரை
   
 
அநுமன் அசோகவனத்தை அடைதல்

5177.என்று, சோலைபுக்கு எய்தினன்
    இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை
    பொழிந்தனர் உவந்தார்,
அன்று வாள் அரக்கன் சிறை
    அவ் வழி வைத்த
துன்று அல் ஓதிதன் நிலை இனிச்
    சொல்லுவான் துணிந்தாம்.
2

உரை
   
 
பிராட்டி துயர்நிலை (5178-5204)

5178.வல் மருங்குல் வாள் அரக்கியர்
    நெருக்க, அங்கு இருந்தாள் :
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர்
    துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற
    உணங்கிய நங்கை,
மெல் மருங்குல்போல், வேறு உள
    அங்கமும் மெலிந்தாள்.
3

உரை
   
 
5179.துயில் அறக் கண்கள் இமைத்தலும்
    முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என,
    ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள்,
    மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து
    அகப்பட்டது அன்னாள்.
4

உரை
   
 
5180.விழுதல், விம்முதல், மெய் உற
    வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல்
    இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல்,
    துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும்
    செய்குவது அறியாள்.
5

உரை
   
 
5181.தழைத்த பொன் முலைத் தடம் கடந்து
    அருவிபோல் தாழப்
புழைத்த போல நீர் நிரந்தரம்
    பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள்,
    இணை நெடும் கண்கள்
மழைக்கண் என்பது காரணக்
    குறி என வகுத்தாள்.
6

உரை
   
 
5182.அரிய மஞ்சினோடு அஞ்சனம்
    முதலிய அதிகம்
கரிய காண்டலும், கண்ணின்நீர்
    கடல்புகக் கலுழ்வாள்;
உரிய காதலர் ஒருவரோடு
    ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவுகொண்டால்
    அன்ன பிணியாள்.
7

உரை
   
 
5183.துப்பினால் செய்த கையொடு
    கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும்,
    நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும்
    துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை
    உறாத மென் துகிலாள்.
8

உரை
   
 
5184.அரிது போகவோ விதிவலி
    கடக்க என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும்
    பழியையும் பாராச்
சுருதி நாயகன் வரும் வரும்
    என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும்
    அளக்கின்ற கண்ணாள்.
9

உரை
   
 
5185.கமையினாள் திருமுகத்து அயல்
    கதுப்பு உறக் கௌவிச்
சுமையுடைக் கற்றை நிலத்திடைக்
    கிடந்த, தூமதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற
    அயில் எயிற்று அரவில்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை
    ஆகிய குழலாள்.
10

உரை
   
 
5186.ஆவி அம் துகில் புனைவது ஒன்று
    அன்றி வேறு அறியாள்,
தூவி அன்னம் மென் புனல் இடைத்
    தோய்கிலா மெய்யாள்,
தேவு தணெ்கடல் அமிழ்துகொண்டு
    அநங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே
    ஒக்கின்ற உருவாள்.
11

உரை
   
 
5187.‘கண்டிலன்கொலாம் இளவலும்?
    கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர்,
    உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்? ‘
    எனக் குழையாப்
புண் திறந்ததில் எரி நுழைந்தால்
    எனப் புகைவாள்.
12

உரை
   
 
5188.‘மாண்டுபோயினன் எருவைகட்கு
    அரசன், மற்று அவரோடு
ஆண்டை என் நிலை உரைப்பவர்
    இல்லை : இப் பிறப்பில்
காண்டலோ அரிது! ‘என்று என்று
    விம்முறும், கலங்கும்;
மீண்டும் மீண்டும் புக்கு எரி நுழைந்தால்
    என மெலிவாள்.
13

உரை
   
 
5189.‘என்னை நாயகன் இளவலை
    எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள்,
    எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? ‘
    என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து,
    ஆருயிர் பதைப்பாள்.
14

உரை
   
 
5190.‘அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.
15

உரை
   
 
5191.‘வன்கண் வஞ்சனை அரக்கர்
    இத்துணைப் பகல் வையார்,
தின்பர், என் இனிச் செயத்தக்கது?
    என்று தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன்பொறை
    எனத் தவிர்ந்தானோ?
என்கொல் எண்ணுவது? ‘என்னும், அங்கு
    இராப்பகல் இல்லாள்.
16

உரை
   
 
5192.‘பெற்ற தாயரும் தம்பியும்
    பெயர்த்தும் வந்து எய்திக்
கொற்ற மா நகர்க் கொண்டு
    இறந்தார்கொலோ? குறித்துச்
சொற்ற யாண்டு எலாம் உறைந்து அன்றி
    அந்நகர்த் துன்னான்.
உற்றது உண்டு ‘எனாப் படர் உழந்து
    உறாதன உறுவாள்.
17

உரை
   
 
5193.‘முரன் எனத்தகும் மொய்ம்பினோர்
    முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும்,
    வரம்பில வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்? ‘
    எனப் பொருமாக்
கரன் நெரித்து, அது கண்டனளாம்
    எனக் கவல்வாள்.
18

உரை
   
 
5194.தமெ்மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியதாம் என
மும்மடங்கு பொலிந்த முகத்தின் அவ்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.
19

உரை
   
 
5195.‘மெய்த் திருப்பதம் மேவு ‘என்ற போதினும்
‘இத்திரு துறந்து ஏகு ‘என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.
20

உரை
   
 
5196.தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார்சிலை
ஏங்கும் மாத்திரத்து இற்று இரண்டாய்விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள்.
21

உரை
   
 
5197.இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாலாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்.
22

உரை
   
 
5198.ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு ‘எம்பி நின் தம்பி : நீ
தோழன் : மங்கை கொழுந்தி! ‘எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
23

உரை
   
 
5199.மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கை தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்தபோது தருப்பையில் ஒண்பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக்கொள்வாள்.
24

உரை
   
 
5200.உரம் கொள் தேம் மலர்ச் சென்னி உரிமைசால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்.
25

உரை
   
 
5201.பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள்.
26

உரை
   
 
5202.மழுவின் வாய் இன மன்னரை மூவெழு
பொழுது நூறிப் புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவில்
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள்.
27

உரை
   
 
5203.ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்தநாள்
காகம் முற்றும் ஓர் கண்ணில வாகிய
வேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள்.
28

உரை
   
 
5204.வெவ் விராதனை மேவு அரும் தீவினை
வவ்வி மாற்று அரும் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னித் தன் ஆர் உயிர்
செவ் இராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள்.
29

உரை
   
 
காவல் அரக்கியர் துயிலுதல்

5205.இருந்தனள்; திரிசடை என்னும் இன்சொலில்
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அருந்திறல் அரக்கியர் அல்லும் நள் உறப்
பொருந்தலும் துயில் நறைக் களிபொருந்தினார்.
30

உரை
   
 
பிராட்டி திரிசடையிடம் கூறல் (5206-5210)

5206.ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
‘தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! ‘எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்.
31

உரை
   
 
5207.‘நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்
வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்!
32

உரை
   
 
5208.‘முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்!
33

உரை
   
 
5209.‘மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்!
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்
துறந்து கான் புகுந்தநாள் வலம் துடித்ததே!
34

உரை
   
 
5210.‘நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;
அஞ்சல் என்று இரங்குவாய்! அடுப்பது யாது என்றாள்?
35

உரை
   
 
திரிசடை பிராட்டிபால் நற்குறிப்பயன் கூறுதல்

5211.என்றலும் திரிசடை ‘இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று! ‘எனா நயந்த சிந்தையாள்
‘உன்துணைக் கணவனை உறுதல் உண்மையால்!
அன்றியும் கேட்டி! ‘என்று அறைதல் மேயினாள்.
36

உரை
   
 
திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)

5212.‘உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிறத் தனெ் இசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய்! செவியில் மெல்ல ஓர்
பொன் நிறத் தும்பி வந்து ஊதிப் போயதால்!
37

உரை
   
 
5213.‘ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்! என்
வாயது கேள்! ‘என மறித்தும் கூறுவாள்.
38

உரை
   
 
5214.துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!
39

உரை
   
 
5215.‘எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தனெ் புலம்; நவை இல் கற்பினாய்!
40

உரை
   
 
5216.‘மக்களும் சுற்றமும் மற்று உேளார்களும்
புக்கனர் அப்புலம் போந்தது இல்லையால்!
சிக்கு அற நோக்கினன்! தீய இன்னமும்
மிக்கன கேட்க! ‘என விளம்பல் மேயினாள்.
41

உரை
   
 
5217.‘ஆண்தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில பிறந்தவால்; இனம் கொள் செம் சிதல்
தூண்டரு மணிவிளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள்!
42

உரை
   
 
5218.‘பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
இடிபட முழங்கின இரட்டல் இன்றியே;
தடி உடை முகில் குலம் இன்றித் தாவு இல் வான்
வெடிபட அதிருமால் : உதிரும் மீன் எலாம்!
43

உரை
   
 
5219.‘வில் பகல் இன்றியே இரவு விண்டு அற
எல் பகல் எறித்து உளது என்னத் தோன்றுமால்!
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால்!
44

உரை
   
 
5220.‘திரியுமால் இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தரெியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால் இருள்!
45

உரை
   
 
5221.‘தோரணம் முறியுமால் துளங்கிச் சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வால் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறவில் பொங்குமால்!
46

உரை
   
 
5222.‘விண் தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்;
புண் தொடர் குருதியில் பொழியுமால் மழை;
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற!
47

உரை
   
 
5223.‘மங்கையர் மங்கலத் தாலி மற்று அவர்
அம் கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்!
48

உரை
   
 
5224.‘மன்னவன் தேவி அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன் அரும் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறின
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது ஈது எனா!
49

உரை
   
 
5225.என்று அன இயம்பி ‘வேறு இன்னும் கேட்டியால்!
இன்று இவண் இப்பொழுது எழுந்தது ஓர் கனா!
வன் துணைக் கோளரி இரண்டு மாறு இலாக்
குன்று இடை உழுவை அம் குழுக்கொண்டு ஈண்டியே!
50

உரை
   
 
5226.வரம்பு இலா மதகரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
குரம்பு அறு பிணம் படக் கொன்று மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால்!
51

உரை
   
 
5227.‘ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேய் ஒளி விளக்கம் ஒன்று ஏந்திச் செய்யவள்
நாயகன் தனி மனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென் சொலாய்!
52

உரை
   
 
5228.‘பொன்மனை புக்க அப் பொருவில் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல்! ‘என
‘அன்னையே! அதன்குறை காண்! என்று ஆயிழை
இன்னமும் துயில்க! என இருகை கூப்பினாள்.
53

உரை
   
 
அநுமன் பிராட்டி இருக்கை காணுதல்

5229.இவ்விடை அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்
அவ்விடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான்.
52

உரை
   
 
துயிலுணர்ந்த அரக்கியர் நிலை (5230-5235)

5230.அவ்வயின் அரக்கியர் அறிவு உற்று ‘அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செய்தது ஈது! ‘எனா
எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ் அயில் மழு எழுச் சூல வெங்கையார்.
55

உரை
   
 
5231.வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடையிடை யானை யாளி பேய்
துயில்கொள் வெம் பிலன் எனத் தொட்ட வாயினார்.
56

உரை
   
 
5232.ஒருபது கையினர் ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர் இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்;
பருவரை எனமுலை பலவும் நாற்றினார்.
57

உரை
   
 
5233.சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
கால வேல் கப்பணம் கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் :
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார்.
58

உரை
   
 
5234.கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்
அரி நரி நாய் என அணி முகத்தினர் :
வெரிந் உறு முகத்தினர் : விழிகண் மூன்றினர் :
புரிதரு கொடுமையர் : புகையும் வாயினார்.
59

உரை
   
 
5235.எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் எனப் பெயர்கொடு திரியும் பெற்றியர்
துண் எனத் துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார்.
60

உரை
   
 
பிராட்டி வருந்தலும் அநுமன் அணுகலும்

5236.ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
தீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள் :
நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான்
ஓய்விலன் உயர்மரப் பணையின் உம்பரான்.
61

உரை
   
 
அநுமன் சிந்தனை

5237.‘அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் : மற்று இதற்கு ஏது என்? ‘எனப்
பொருக்கென அவர் இடை பொருந்த நோக்கினான்.
62

உரை
   
 
அநுமன் பிராட்டியைக் காண்டல்

5238.விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை!
63

உரை
   
 
பிராட்டியே என்று அநுமன் துணிதல் (5239-5241)

5239.‘கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளார்!
மடக்கொடி சீதையாம் மாதரே கொலாம்?
கடல்துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள்!
64

உரை
   
 
5240.‘எள்ளரும் உருவின் நல் இலக்கணங்களும்
வள்ளல்தன் உரையொடும் மாறு கொண்டில!
கள்ள வாள் அரக்கன் அக் கமலக்கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்துவைத்தவா!
65

உரை
   
 
5241.‘மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்!
ஆவதே? அரவு அணை துயிலின் நீங்கிய
தேவனே அவன்! இவள் கமலச் செல்வியே!
66

உரை
   
 
அநுமன் மகிழ்தல்

5242.‘வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! ‘எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்.
67

உரை
   
 
பிராட்டியின் தூய்மை கண்டு அநுமன் வியந்து பேசுதல் (5243-5251)

5243.‘மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்
தேசு உண்ட திங்களும் என்னத் தேய்ந்து உளாள்!
காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்ட இல்லையால்! அறத்துக்கு ஈறு உண்டோ?
68

உரை
   
 
5244.‘புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்?
69

உரை
   
 
5245.‘தேவரும் பிழைத்திலர்! தயெ்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால்?
யாவது இங்கு இனிச் செயல் அரியது எம்பிராற்கு?
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம் அரோ!
70

உரை
   
 
5246.‘கேழிலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள
ஊழியின் இறுதி வந்து உறும்! என்று உன்னினேன் :
வாழிய! உலகு இனி வரம்பில் நாள் எலாம்!
71

உரை
   
 
5247.‘வெங்கனல் முழுகியும் புலன்கள் வீக்கியும்
நுஙகுவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர்; குலத்தில் வந்து இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ?
72

உரை
   
 
5248.‘பேண நோற்றது மனைப் பிறவி! பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது! நங்கை தோன்றலால்!
மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு எலாம்
காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால்!
73

உரை
   
 
5249.‘முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்!
இனி அவள் தான் அலாது யாரும் இல்லையால்!
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே!
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம்!
74

உரை
   
 
5250.‘தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ?
75

உரை
   
 
5251.செல்வமோ அது! அவர் தீமையோ இது!
அல்லும் நன்பகலும் நின்று அமரர் ஆட்செய்வார்!
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்?
76

உரை
   
 
அசோக வனத்துள் இராவணன் தோன்றுதல்

5252.என்று இவை இனையன எண்ணி வண்ணவான்
பொன் திணி நெடுமரப் பொதும்பர் புக்கவன்
நின்றனன் : அவ் வழி நிகழ்ந்தது என் எனில்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான்.
77

உரை
   
 
இராவணன் அசோகவனத்துட் புகும்நிலை (5253-5271)

5253.சிகர வண் குடுமி நெடுவரை எவையும்
    ஒருவழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பு
    திண் திறல் தோள் புடை வயங்கச்
சகரன் நீர் வேலை தழுவிய கதிரில்,
    தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பல் மகுடம் இளவெயில் எறிப்பக்
    கங்குலும் பகல்பட வந்தான்.
78

உரை
   
 
5254.உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர,
    மேனகை வெள்ளடை உதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல,
    அரம்பையர் குழாம் புடை சுற்றக்
கருப்புரச் சாந்தும் கலவையும் மலரும்
    கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின்
    வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப.
79

உரை
   
 
5255.நான நெய் விளக்கு நால் இரு கோடி
    நங்கையர் அங்கையால் எடுப்ப,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின்
    விரி கதிர் இருள் எலாம் விழுங்கக்
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்பக்
    கிண்கிணி கலையொடும் கலிப்பப்
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தனெ்னப்
    பற்பல மங்கையர் படர.
80

உரை
   
 
5256.‘அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று
    அரும் துயில் நீங்கினான் ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த
    தண் நறும் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ? ‘
    என்று தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர் இமைப்பு இலா நாட்டத்து
    எனைவரும் உயிர்ப்பு அவிந்து இருப்ப.
81

உரை
   
 
5257.நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த
    நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம்
    பண்பு உறப் பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து
    வருகதிர் இளவெயில் பொருவச்
சூல்நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும்
    மின் என மார்பின் நூல் துளங்க.
82

உரை
   
 
5258.தோள்தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக்
    கிம்புரி வலயமாச் சுடர்கள்
நாள்தொறும் தொடரும் கலி கெழு விசும்பின்
    நாெளாடு கோளினை நக்கத்
தாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின்
    தகை ஒளி நெடு நிலம் தடவக்,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின்
    முக மலர் இரவினும் கிளர.
83

உரை
   
 
5259.தன்நிறத்தோடு மாறுகொண்டு இமைக்கும்
    நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கருவரை மருங்கில்
    தழுவிய புதுவெயில் பொருவ,
மின் நிறக் கதிரில் செற்றிய பசும்பொன்
    விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடுநிழல் பூத்த
    கற்பக முழுவனம் கவின.
84

உரை
   
 
5260.சன்னவீரத்த கோவை வெண் தரளம்
    ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடு வரையில் தொத்திய கோளும்
    நாளும் ஒத்து இடையிடை பொலிய,
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின்
    ம்ீப் படர் வெம் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும் இருவரும் தவிர
    உதித்தது ஓர்படி ஒளிபரப்ப.
85

உரை
   
 
5261.பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடியப்
    படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த
    மாதிரக் காவல் மால் யானை
கயிலையில் திரண்ட முரண் தொடர் தடம் தோள்
    கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால்
    அளைந்த மாக் கரியின் நின்று அஞ்ச.
86

உரை
   
 
5262.அம் கயல் கரும் கண் இயக்கியர், துயக்கு இல்
    அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த
    நாரியர், அரக்கியர் முதலாம்
குங்குமக் கொம்மைக் குவிமுலைக் கனிவாய்க்
    கோகிலம் துயர்ந்த மென் குதலை
மங்கையர் ஈட்டம் மால்வரை தழீஇய
    மஞ்ஞை அம் குழு என வயங்க.
87

உரை
   
 
5263.தொளை உறு புழை வேய் தூங்கு இசைக் கானம்
    துயல் உறாது ஒருநிலை தொடர,
இளையவர் மிடறும் இன் நிலை இயக்கக்
    கின்னரம் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில் அரிப் பாண்டில்
    தழுவிய முழவொடும் கெழுமி
அளை உறை அரவும் அமுது வாய் உகுப்ப,
    அண்டமும் வையமும் அளப்ப.
88

உரை
   
 
5264.அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம்,
    ஆதியாம் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த
    இழைக்குலம் மழைக் கரும் கடைக்கண்
மின் இடைச் செவ்வாய்க் குவி முலைப்
    பணைத்தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும்
    நாடக மயில் என, நடப்ப.
89

உரை
   
 
5265.தந்திரி நெறியில் தாக்குறு கருவி
    தூக்கினர் எழுவிய சதியின்
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில்
    சில்லரிப் பாண்டிலின் முறையின்,
மந்தர கீதத்து இசைப்பதம் தொடர்ந்த
    வகையுறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின்
    பாடலார், அருகு வந்து அகவ
90

உரை
   
 
5266.அந்தியின் அனங்கன் அழல்படத் துரந்த
    அலர் மலர்ப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின், வேல் நுழைந்து என்ன
    வெண்மதிப் பசும் கதிர் விரவ,
மந்தமாருதம் போய் மலர்தொறும் வாரி
    வயங்கு நீர் மாரியின் வருதேன்
சிந்து நுண் துளிகள் சீகரத் திவலை
    உருக்கிய செம்பு எனத் தறெிப்ப.
91

உரை
   
 
5267.இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும்
    இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த
    உத்தரீயத்தினர், ஒல்கிக்
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும்,
    குறுநகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண்கண் செங்கடை ஈட்டம்,
    மார்பினும் தோளினும் வயங்க.
92

உரை
   
 
5268.மாலையும், சாந்தும், கலவையும், பூணும்
    வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும்,
    நிதிகளும், கொண்டு பின்தொடரப்
பாலின் வெண் பரவைத் திரை கரும் கிரிமேல்
    பரந்து என சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயலில் வெண்மதியின்,
    வெண்குடை மீது உற விளங்க.
93

உரை
   
 
5269.ஆர்கலி அகழி அருவரை இலங்கை
    அடி பெயர்த்து இடு தொறும் அழுந்த,
நேர் பொரும் பரவைப் பிறழ் திரை தவழ்ந்து
    நெடும் தடம் திசைதொறும் நிமிரச்
சார்வு அரும் கடுவின் எயிறு உடைப் பகுவாய்
    அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இருநில மடந்தை
    முதுகு உளுக்குற்றனள் முரல.
94

உரை
   
 
5270.கேடகத்தோடு, மழு, எழுச் சூலம்,
    அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர்வாள், அயில், சிலை, குலிசம்,
    முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ்வலி தழைத்த
    தகைமையர், தடவரை பொறுக்கும்
சூடகத் தடக்கைச் சுடுசினத்து, அடுபோர்
    அரக்கியர் தலைதொறும் சுமப்ப.
95

உரை
   
 
5271.விரிதளிர், முகை, பூக் கொம்பு, அடை, முதல், வேர்,
    பழம், இவை, மணி பொனால் வேய்ந்த
தரு உயர் சோலை திசை தொறும் கரியத்
    தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும்,
    திகைப்பு உறு சிந்தையால், கெடுத்தது
ஒருமணி நேடும் பல்தலை அரவின்,
    உழைதொறும் உழைதொறும் உலாவி.
96

உரை
   
 
அநுமன் இராவணனை நோக்குதல்

5272.இனையது ஓர் தன்மை எறுழ்வலி அரக்கர்
    ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன்
    கண்டனன், அமைவுற நோக்கி,
‘வினையமும், செயலும், மேல்விளை பொருளும்,
    இவ் வழி விளங்கும்! ‘என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி,
    இருந்தனன் வந்து அயல் மறைந்தே.
97

உரை
   
 
இராவணன் அணுகலும் பிராட்டி அஞ்சுதலும்

5273.ஆயிடை, அரக்கன், அரம்பையர் குழுவும்
    அல்லவும் வேறு அயல் அகல,
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள்
    இருந்துழி; ஆண்டு அவள் வெருவிப்
போயின உயிரளாம் என நடுங்கிப்
    பொறி வரி எறுழ் வலிப் புகைக் கண்
காய் சின உழுவை தின்னிய வந்த
    கலையிளம் பிணை எனக் கரைந்தாள்.
98

உரை
   
 
இருவர் நிலையினையும் அநுமன் காண்டல்

5274.கூசி ஆவி குலைவுறு வாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்
ஊசல் ஆடல் ஒழிந்த உளத்தினான்.
99

உரை
   
 
அநுமன் பிராட்டியை வாழ்த்தல்

5275.வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான்.
100

உரை
   
 
இராவணன் பிராட்டியை இரத்தல் (5276-5289)

5276.அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்
‘எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் விடக் குயிலே! நுவல்க ‘என்றனன்
வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.
101

உரை
   
 
5277.ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.
102

உரை
   
 
5278.இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!
103

உரை
   
 
5279.உலகம் மூன்றும் ஒருங்கு உடன் ஓம்பும் என்
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ.
104

உரை
   
 
5280.பூந்தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை! இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானிடர் வாழ்வு அன்றோ?
105

உரை
   
 
5281.நோற்கின்றார்களும் நுண்பொருள் நுண்ணிதில்
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார்க் குன்றாம் முலை! என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால்.
106

உரை
   
 
5282.பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருளும் நாளும் மழலை வழங்குவாய்!
தரெுளும் நான்முகன் செய்தது உன் சிந்தையில்
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ?
107

உரை
   
 
5283.ஈண்டு நாளும் இளமையும் என்று இவை
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டும் நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ?
108

உரை
   
 
5284.இழவு எனக்கு உயிர் எய்தினும் எய்துக
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்
பழகி நிற்புறு பண்பு இயை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரோ?
109

உரை
   
 
5285.பெண்மையும் அழகும் பிறழா மனத்
திண்மையும் முதல் யாவையும் செய்யவாய்க்
கண்மையும் பொருந்திக் கருணைப்படா
வண்மை என்கொல்? சனகன் மடந்தையே!
110

உரை
   
 
5286.வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டற்கு இருத்திகொல்? கிள்ளை நீ
நாட்டுங்கால் நெடு நல்லறத்தின் பயன்
ஊட்டுங் காலத்து இகழ்வது உறும் கொலோ?
111

உரை
   
 
5287.தக்கது என் உயிர் வீடு உறத் தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ.
112

உரை
   
 
5288.தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தாவு இல் மூவுலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின்? இலங்கு இழாய்!
113

உரை
   
 
5289.‘குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால் ‘எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்
படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான்.
114

உரை
   
 
பிராட்டியின் மறுமாற்றம் (5290-5311)

5290.காய்ந்தன சலாகை அன்ன
    உரை வந்து கதுவா முன்னம்
தீந்தன செவிகள்; உள்ளம்
    திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள்; ஒன்றும்
    பரிந்திலள் உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன வல்ல வெய்ய
    மாற்றங்கள் இனைய சொன்னாள்.
115

உரை
   
 
5291.மல்லொடு திரள்தோள் வஞ்சன்
    மனம் பிறிது ஆகும் வண்ணம்
‘கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம்
    கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு
    ஏய்வன அல்ல வெய்ய
சொல் இது தரெியக் கேட்டி!
    துரும்பு! ‘எனக் கனன்று சொன்னாள்.
116

உரை
   
 
5292.மேருவை உருவ வேண்டின்,
    விண் பிளந்து ஏகவேண்டின்
ஈர் எழு புவனம் யாவும்
    முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது;
    அறிந்திருந்து அறிவு இலாதாய்!
சீரிய அல்ல சொல்லித்
    தலை பத்தும் சிந்துவாயோ?
117

உரை
   
 
5293.அஞ்சினை ஆதலால் அன்று
    ஆண்தகை அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி,
    மாயையால் மறைத்து வைத்தாய்;
உஞ்சனை போதி ஆயின்,
    விடுதி! உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது
    நோக்குமோ நினது நாட்டம்?
118

உரை
   
 
5294.பத்து உள தலையும் தோளும்
    பல உள பகழி தூவும்
வித்தக வில்லினாற்குத்
    திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்;
    அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும்? மேல் நாள்
    சடாயுவால் தரையின் வீழ்ந்தாய்.
119

உரை
   
 
5295.தோற்றனை பறவைக்கு அன்று;
    துள்ளும் நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய்,
    இன்று எனின் இறத்தி அன்றே!
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள்,
    வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன்
    சரத்துக்கும் குறித்தது உண்டோ?
120

உரை
   
 
5296.பெற்று உடை வாளும், நாளும்,
    பிறந்து உடை உரனும், பின்னும்
மற்று உடை எவையும் தந்த
    மலரவன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து
    விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று உடைந்து இறுதல் மெய்யே!
    விளக்கின் முன் இருள் உண்டாமோ?
121

உரை
   
 
5297.குன்றுநீ எடுத்தநாள் தன்
    சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத்
    தனிச் சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு
    உரன் இலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை
    கேட்டிலை போலும் அம்மா!
122

உரை
   
 
5298.மலை எடுத்து எண்திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர்த் தாழ்தியோ?
123

உரை
   
 
5299.ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
ஆழி எம் கோம் மகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ?
124

உரை
   
 
5300.வெம் சின அரக்கரை விளித்து வீயுமோ?
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தான்
எஞ்சல் இல் உலகெலாம் எஞ்சும்! எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறமும் சான்று அரோ!
125

உரை
   
 
5301.அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய்! புன்தொழில் விலக்க மேற்கொளாய்!
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலோ
எங்கள் நாயகனையும் நினைந்தது? ஏழை நீ!
126

உரை
   
 
5302.மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்
தான் ஒரு மனிதனால்; தவத்துளார் எனில்
தேன் உயர் கொன்றையான் தன்மை தேர்தியால்!
127

உரை
   
 
5303.இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்!
செரு வருங்கால் அவர் மேன்மை தேர்தியால்!
பொரு அரும் திரு இழந்து ஆயுள் பொன்றுவாய்!
128

உரை
   
 
5304.பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்
வில் கண் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நல் கணார் நல்லறம் துறந்த நாளினும்
இல் கணார் இறந்திலர் இறந்து நீங்கினார்.
129

உரை
   
 
5305.பூ இலோன் ஆதியாகப்
    புலன்கள் பாம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர் தாமோ,
    நிலைநின்று வினையில் தீர்ந்தார்?
ஏவர் மூவுலகின் செல்வம்
    எய்தினர்? இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த
    தருமமோ? தரெியப் பாராய்!
130

உரை
   
 
5306.இப் பெரும் செல்வம் நின் கண்
    ஈந்தது, ஓர் ஈசன், யாண்டும்
அ பெரும் செல்வம் துய்ப்பான்
    நின்று மாதவத்தின் அன்றே?
ஒப்பு அரும் திருவும் நீங்கி,
    உறவொடும் உலக்க உன்னித்
தப்புதி அறத்தை, ஏழாய்!
    தருமத்தைக் காமியாயோ?
131

உரை
   
 
5307.மறம் திறம்பாத தோலா
    வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு
    அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப்
    பிணக்கு உடைப் பிணியில் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும்
    துடைத்தவர் பிறர் யார்? சொல்லாய்!
132

உரை
   
 
5308.தனெ் தமிழ் உரைத்தோன் முன்னாத்
    தீது தீர் முனிவர் யாரும்,
‘புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்!
    நோற்கிலம்! புகுந்த போதே
கொன்று அருள்! உன்னால் அன்னார்
    குறைவது சரதம்! கோவே! ‘
என்றனர், யானே கேட்டேன்,
    நீ அதற்கு இயைவ செய்தாய்.
133

உரை
   
 
5309.உன்னையும் கேட்டு, மற்று, உன்
    ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை, இவ் அரக்கர் சேனைப்
    பெருமையும் முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும்,
    உம்பியர் தோளும், தாளும்,
சின்னபின்னங்கள் செய்த
    அதனை நீ சிந்தியாயோ?
134

உரை
   
 
5310.ஆயிரம் தடக்கையால் நின்
    ஐந்நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக்
    குத்தி, வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள்
    துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ? நீதி
    நிலை அறிந்திலாத நீசா!
135

உரை
   
 
5311.கடிக்கும் வல் அரவும் கேட்கும்
    மந்திரம்; களிக்கின்றோயை
‘அடுக்கும், ஈது அடாது! ‘என்று ஆன்ற
    ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார்
    எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது,
    முடிவு அன்றி முடிவது உண்டோ?
136

உரை
   
 
இராவணன் சினத்தல் (5312-5313)

5312.என்ற அறத்து உரை கேட்டலும்,
    இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன;
    வெயில்விடு பகுவாய்
குன்று இறத் தழெித்து உரப்பின;
    குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது
    சீற்றத்தின் தகைமை.
137

உரை
   
 
5313.வளர்ந்த தாளினன், மாதிரம்
    அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன், அனல்சொரி
    கண்ணினன், ‘இவளைப்
பிளந்து தின்பென்! ‘என்று உடன்று
    நின்றனன், அடிபெயரான்,
கிளர்ந்த சீற்றமும் காதலும்
    எதிர் எதிர் கிடைப்ப.
138

உரை
   
 
இராவணன் நிலை கண்ட அநுமன் நினைவு (5314-5315)

5314.அன்னகாலையில் அநுமனும்,
    ‘அருந்ததிக் கற்பின்
என்னை ஆளுடை நாயகன்
    தேவியை என்முன்
சொன்ன நீசன் கை தொடுவதன்முன்
    துகைத்து உழக்கிப்
பின்னை, நின்றது செய்குவென்! ‘
    என்பது பிடித்தான்.
139

உரை
   
 
5315.‘தனியன், நின்றனன் தலைபத்தும்
    கடிது உகத் தாக்கிப்
பனியின் வேலையில் இலங்கையைக்
    கீழ் உறப் பாய்ச்சிப்
புனித மா தவத்து அணங்கினைச்
    சுமந்தனன் போவென்
இனிதின் ‘என்பதும் நினைந்து தன்
    கரம் பிசைந்து இருந்தான
140

உரை
   
 
சீற்றம் தணிந்து இராவணன் பேசுதல் (5316-5324)

5316.ஆண்டு, அவ் வாள் அரக்கன் அகத்து
    அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என
    முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின்
    அவிவுறும் நிலையில்,
மீண்டு நின்று, ஒருதன்மையால்,
    இவை இவை விளம்பும்.
141

உரை
   
 
5317.கொல்வென் என்று உடன்றேன், உன்னைக்
    கொல்கிலென், குறித்துச் சொன்ன
சொல் அளவு; அவற்றுக்கு எல்லாம்
    காரணம் தரெியச் சொல்லின்,
ஒல்வது ஈது, ஒல்லாது ஈது, என்று
    எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ?
வெல்வதும் தோற்றல் தானும்
    விளையாட்டின் விளைந்த மேல்நாள்.
142

உரை
   
 
5318.ஒன்று கேள் உரைக்க! நிற்கு ஓர்
    உயிர் என உரியோன் தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின்
    உயிர் விடில் குற்றம் கூடும்,
என்றன் ஆர் உயிரும் நீங்கும் :
    என்பதை இயைய எண்ணி
அன்று நான் வஞ்சம் செய்தது;
    ஆர் எனக்கு அமரின் நேர்வார்?
143

உரை
   
 
5319.மான் என்பது அறிந்து போன
    மானிடர் ஆவார் மீண்டு
யான் என்பது அறிந்தால் வாரார்,
    ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய்!
    தேவர்தாம் யாவரே எம்
கோன் என்பது அறிந்து பின்னைத்
    திறம்புவார், குறையின் அல்லால்?
144

உரை
   
 
5320.வென்றோரும் இருப்ப, யார்க்கும்
    மேலவர் விளிவு இலாதோர்
என்றோரும் இருப்ப அன்றே
    இந்திரன் ஏவல் செய்ய
ஒன்றோ இவ் உலகம் மூன்றும்
    ஆள்கின்ற ஒருவன் யானே,
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர்
    காரணம் விரிப்பது உண்டோ?
145

உரை
   
 
5321.மூவரும் தேவர் தாமும்
    முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர்
    பழி பெறப் பயன்தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர் தம்மை
    அடுகிலேன்; அவரை ஈண்டக்
கூவிநின்று ஏவல் கொள்வென்,
    காணுதி! குதலைச் சொல்லாய்!
146

உரை
   
 
5322.சிற்றியல் சிறுமை ஆற்றல்
    சிறுதொழில் மனிதரோடே
முற்றியது ஆய வீர
    முனிவு என்கண் முளையாதேனும்,
இற்றை இப்பகலில் நொய்தின்
    இருவரை ஒருகையாலே
பற்றினென் கொணரும் தன்மை
    காணுதி! பழிப்பு இலாதாய்!
147

உரை
   
 
5323.பதவு இயல் மனிதரேனும்,
    பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின்,
    உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டிச்
    செய்தி நீ தேர்ந்தது இன்றி;
இதம் உனக்கு ஈதே ஆகில்,
    இயற்றுவல்! காண்டி இன்னும்!
148

உரை
   
 
5324.பள்ள நீர் அயோத்தி நண்ணிப்
    பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர் தம்மை எல்லாம்
    உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை
    வேர் அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென் நின் உயிரும்! என்னை
    அறிந்திலை! குறைந்த நாேளாய்!
149

உரை
   
 
இராவணன் பிராட்டியை அச்சுறுத்துதல்

5325.ஈது உரைத்து அழன்று பொங்கி,
    எரிகதிர் வாளை நோக்கித்
‘தீது உயிர்க்கு இழைக்கும் நாளும்
    திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது!
ஆதலில், பின்னை நீயே
    அறிந்தவாறு அறிதி! ‘என்னாப்
போது அரிக் கண்ணினாளை
    அகத்துவைத்து, உரப்பிப் போனான்.
150

உரை
   
 
இராவணன் காவல் அரக்கியர்க்குக் கட்டளையிட்டுச் செல்லல்

5326.‘அஞ்சுவித்தானும், ஒன்றால்
    அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை
    வசித்து, என்பால் வருவீர்! அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென்! ‘என்னா,
    நகை இலா முகத்துப் பேழ்வாய்
வெம் சினத்து அரக்கிமார்க்கு
    வேறு வேறு உரைத்துப் போனான்.
151

உரை
   
 
காவலரக்கியர் பிராட்டியைக் கனன்று கூறல் (5327-5331)

5327.போயினன் அரக்கன் பின்னைப்
    பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த
    தோகையைத் தொடர்ந்து சுற்றித்
தீய வல் அரக்கிமார்கள் தழெித்து
    இழித்து உரப்பிச் சிந்தை
மேயின வண்ணம் எல்லாம்
    விளம்புவான் உடன்று மிக்கார்.
152

உரை
   
 
5328.முன்முன் நின்றார் கண் கனல்
    சிந்த முடுகு உற்றார்,
மின்மின் என்னும் சூலமும்
    வாளும் மிசை ஓச்சிக்
‘கொல்மின்! கொல்மின்! கொன்று
    குறைத்துக் குடர் ஆரத்
தின்மின்! தின்மின்! ‘என்று
    தழெித்தார் சிலர் எல்லாம
153

உரை
   
 
5329.‘வையம் தந்த நான்முகன்
    மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம்
    வல்லான், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது
    அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்? ‘
    என்றார் சிலர் எல்லாம்.
154

உரை
   
 
5330.‘மண்ணில் தீய மானுயர்த்
    தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின்முதல்
    மாயும் பிணிசெய்தாய்!
புண்ணில் கோல் இட்டால் அன
    சொல்லிப் பொதுநோக்காது
எண்ணில், காணாய் மெய்ம்மையை! ‘
    என்றார் சிலர் எல்லாம்.
155

உரை
   
 
5331.‘புக்க வழிக்கும் போந்த
    வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை
    அன்றோ, உணர்வு இல்லாய்!
இக்கணம் இற்றாய்! உன் இனம்
    எல்லாம் இனி வாழா!
சிக்க உரைத்தேம்! ‘என்று
    தழெித்தார் சிலர் எல்லாம்.
156

உரை
   
 
பிராட்டி வருந்துதல்

5332.கொல்வான் உற்றோர் பெற்றியும்,
    ‘யாதும் குறையாதோன்
வெல்வான் நம் கோன்! தின்னுமின்!
    வம்! ‘என்பவர் மெய்யும்,
வல்வாய் வெய்யோன் ஏவலும்,
    எல்லாம் மனம் வைத்தாள்,
நல்வாய் நல்லாள், கண்கள்
    கலுழ்ந்தே நகுகின்றாள்.
157

உரை
   
 
திரிசடை சொல்லால் பிராட்டி ஆறுதலடைதல்

5333.இன்னோர் அன்ன எய்திய
    காலத்து, இடை நின்றாள்,
‘முன்னே சொன்னேன் கண்ட
    கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல்,
    பிழை! ‘என்றாள்
‘அன்னே! நன்று! ‘என்றாள், அவர்
    எல்லாம் அவிவு உற்றார்.
158

உரை
   
 
திரிசடை சொல்லால் காவலரக்கியர் அடங்குதல்

5334.அறிந்தார் அன்ன முச்சடை
    என்பாள் அது சொல்லப்
பிறிந்தார் சீற்றம், மன்னனை
    அஞ்சிப் பிறிகில்லார்,
செறிந்தார் ஆய தீவினை
    அன்னார், தறெல் எண்ணார்,
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும்
    ஆவி நிலை நின்றாள்.
159

உரை