அநுமன் விஞ்சையால் காவலரக்கியர் உறங்குதல்

5335.‘காண்டற்கு ஒத்த காலமும்
    ஈதே : தறெு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும்
    துயில்கில்லார் :
வேண்டத் துஞ்சார் ‘என்று, ஒரு
    விஞ்சை வினை செய்தான்;
மாண்டு அற்றார் ஆம் என்றிட
    அன்னார் மயர்வு உற்றார்.
1

உரை
   
 
பிராட்டி துயர்நிலைக் கிளவி (5336-5343)

5336.துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.
2

உரை
   
 
5337.கருமேகம் நெடும் கடல் கா அனையான்
தருமே தமியேன் தனது ஆர் உயிர்தான்?
உரும் ஏறு உறழ் வெம் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய்! வலி ஆர் விதியே!
3

உரை
   
 
5338.கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யாதும் விளித்திலிரோ?
4

உரை
   
 
5339.தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் : எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனான் உடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ?
5

உரை
   
 
5340.வாராது ஒழியான் எனும் வன்மையினால்
ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :
தீரா ஒரு நாள் வலி; சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே!
6

உரை
   
 
5341.தரு ஒன்றிய கான் அடைவாய் ‘தவிர்நீ :
வருவென் சில நாளினில் : மாநகர்வாய்
இரு! ‘என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ?
7

உரை
   
 
5342.பேணும் உணர்வே! உயிரே! பெருநாள்
நாண் இன்று உழல்வீர் தனிநாயகனைக்
காணும் துணையும் கழிவீரலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ?
8

உரை
   
 
5343.முடியா முடி மன்னன் முடிந்திடவும்
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியான் உடன் வந்து வனம் புகுதும்
கொடியான் வரும் என்று குலாவுவதோ?
9

உரை
   
 
பிராட்டி இறக்கத் துணிதல் (5344-5354)

5344.என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்
‘ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் : யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் ‘எனா.
10

உரை
   
 
5345.பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் :
நிறை இரும் பல்பகல் நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனையும் புனிதன் தீண்டுமோ?
11

உரை
   
 
5346.உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் :
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ?
12

உரை
   
 
5347.சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்!
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று அரோ!
கற்புடை மடந்தையர் கதை உேளார்கள் தாம்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால்?
13

உரை
   
 
5348.பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உறப் பொழுது போக்கி யான்
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன்?
14

உரை
   
 
5349.எப்பொழுது இப் பெரும் பழியின் எய்தினேன்
அப்பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் :
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான்
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ?
15

உரை
   
 
5350.அன்பு அழி சிந்தையர் ஆய ஆடவர்
வன்பழி சுமக்கினும் சுமக்க : வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே?
16

உரை
   
 
5351.வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி என்
மஞ்சனை வைது பின் வழிக்கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ?
17

உரை
   
 
5352.வல் இயல் மறவர் தம் வருக்கம் மாசு அற
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக :
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ?
18

உரை
   
 
5353.வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவ மடந்தையர் முன்பு பேதையேன்
‘கரும் தனி முகிலினைப் பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள்! ‘என ஏச நிற்பெனோ?
19

உரை
   
 
5354.அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
‘இல் புகத் தக்கலை! ‘என்னின் யான் உடைக்
கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்?
20

உரை
   
 
பிராட்டி மாதவிச் சூழலடைதல்

5355.‘ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறு! ‘எனாச்
‘சாதல் காப்பவரும் என் தவத்தில் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை ‘என்று ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள்.
21

உரை
   
 
பிராட்டி உயிரைவிட முயலுதல்

5356.எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ‘ஈங்கு
உய்திறம் இல்லை! ‘என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.
22

உரை
   
 
அநுமன் தன்னை இராமதூதன் என்று தரெிவித்தல் (5357-5358)

5357.கண்டனன் அநுமனும் : கருத்தும் எண்ணினான் :
கொண்டனன் துணுக்கம் : மெய்தீண்டக் கூசுவான் :
‘அண்டர் நாயகன் அருள்தூதன் யான்! ‘எனாத்
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்.
23

உரை
   
 
5358.அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.
24

உரை
   
 
இராமன் வராமைக்குக் காரணம் கூறல்

5359.ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ?
25

உரை
   
 
அநுமன் தான் இராமதூதனே, ஐயுறவேண்டா எனல்

5360.‘ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்
மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;
கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!
நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! ‘என்றான்.
26

உரை
   
 
பிராட்டி அநுமனைத் தெளிதல்

5361.என்று அவன் இறைஞ்ச நோக்கி,
    இரக்கமும் முனிவும் எய்தி,
‘நின்றவன் நிருதன் அல்லன் :
    நெறி நின்று பொறிகள் ஐந்தும்
வென்றவன் : அல்லன் ஆகில்,
    விண்ணவன் ஆதல் வேண்டும் :
நன்று உணர்வு : உரையும் தூயன் :
    நவை இலன்போலும்! ‘என்னா.
27

உரை
   
 
பிராட்டி மகிழ்தல்

5362.அரக்கனே ஆக : வேறு ஓர்
    அமரனே ஆக : அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான்
    ஆகுக : கொடுமை ஆக :
இரக்கமே ஆக : வந்து இங்கு
    எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத், தந்தான்
    உயிர்; இதின் உதவி உண்டோ?
28

உரை
   
 
பிராட்டி அநுமனை வினவுதல்

5363.என நினைத்து எய்த நோக்கி,
    ‘இரங்கும் என் உள்ளம் : கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய
    வஞ்சகர் மாற்றம் அல்லன் :
நினைவு உடைச் சொற்கள் கண்ணீர்
    நிலம்புகப் புலம்பா நின்றான் :
வினவுதற்கு உரியன் என்னா,
    ‘வீர! நீ யாவன்? என்றாள்.
29

உரை
   
 
அநுமன் தன்வரலாறு விரித்தல் (5364-5371)

5364.ஆயசொல் தலைமேல் கொண்ட
    அம் கையன், ‘அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு, தேடிய
    துணைவன், தொல்லைக்
காய்கதிர்ச் செல்வன் மைந்தன்,
    கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன்
    என்று உளன், நவையில் தீர்ந்தான். ‘
30

உரை
   
 
5365.மற்றவன் முன்னோன் வாலி,
    இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத்
    திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன், தேவர் வேண்ட,
    வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய
    அமுது எழக் கடைந்த தோளான்.
31

உரை
   
 
5366.அன்னவன் தன்னை உம்கோன்
    அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித்
    துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன்
    மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன்,
    நாமமும் அநுமன் என்பேன்.
32

உரை
   
 
5367.எழுபது வெள்ளம் கொண்ட
    எண்ணன, உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப, வேலை
    தனித்தனி கடக்கும் தாள,
குழுவின, உம் கோன் செய்யக்
    குறித்தது குறிப்பின் உன்னி
வழு இல செய்தற்கு ஒத்த
    வானரம், வானின் நீண்ட.
33

உரை
   
 
5368.துப்பு உறு பரவை ஏழும்,
    சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும்,
    உம்பர்நின்று இம்பர்காறும்,
இப்புறம் தேடி நின்னை
    எதிர்ந்தில என்னின், அண்டத்து
அப்புறம் போயும் தேட
    அவதியின் அமைந்து போன.
34

உரை
   
 
5369.புன்தொழில் அரக்கன் கொண்டு
    போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட
    அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன் தன்னை
    வேறு கொண்டு இருந்து கூறித்
‘தனெ்திசைச் சேறி! ‘என்றான் :
    அவன் அருள் சிதைவது ஆமோ?
35

உரை
   
 
5370.கொற்றவற்கு ஆண்டுக் காட்டிக்
    கொடுத்தபோது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தற் பாற்றோ?
    உயிர்நிலை பிறிதும் உண்டோ
இற்றைநாள் அளவும்? அன்னா!
    அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன்
    மங்கலம் காத்த மன்னோ!
36

உரை
   
 
5371.‘ஆயவன் தன்மை நிற்க
    அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தனெ்பால், வெள்ளம்
    இரண்டினோடு எழுந்து சேனை
மேயினன் படர்ந்து, தீர
    வினையவன் விடுத்தான் என்னைப்
பாய்திரை இலங்கை மூதூர்க்கு ‘
    என்றனன் பழியை வென்றான்.
37

உரை
   
 
இராமபிரான் திருமேனிநிலை கூறுக எனப் பிராட்டி அநுமனை வேண்டுதல்

5372.எய்தின உரைத்தலோடும்,
    எழுந்து பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி
    வான் உற விம்மி ஓங்க,
‘உய்தல் வந்து உற்றதோ? ‘என்று
    அருவிநீர் ஒழுகு கண்ணாள்,
‘அய்ய! சொல்! அனையன் மேனி
    எப்படித்து? அறிவி! ‘என்றாள்.
38

உரை
   
 
இராமபிரான் திருமேனியழகை அடிமுதல் முடியீறாக அநுமன் கூறல் (5373-5393)

5373.‘படி எடுத்து உரைத்துக் காட்டும்
    படித்து அன்று : படிவம், பண்பின்
முடிவு உள உவமைக்கு எல்லாம் :
    இலக்கணம், உரைக்கின் முந்தா :
துடி இடை! அடையாளத்தின்
    தொடர்வையே தொடர்தி! ‘என்னா,
அடிமுதல் முடி ஈறாக
    அறிவுற அநுமன் சொல்வான்.
39

உரை
   
 
திருவடிச் செவ்வி

5374.சேயிதழ்த் தாமரை என்று சேண் உேளார்
ஏயினர்; அதன்துணை எளியது இல்லையால்
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய்திரைப் பவழமும் குவளைப் பண்பிற்றால்.
40

உரை
   
 
திருவடி விரல் செவ்வி

5375.தளம்கெழு கற்பக முகிழும் தண்துறை
இளம்கொடிப் பவழமும் கிடக்க : என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன்
இளம்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய்!
41

உரை
   
 
திருவடி விரல்களின் நகச் செவ்வி

5376.சிறியவும் பெரியவும் ஆகித் திங்கேளா
மறு இல பத்து உள அல்ல மற்று இனி
எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்கு யான் உவமை ஆவன.
42

உரை
   
 
மீட்டும் திருவடிச் செவ்வி

5377.பொருந்தின நிலனொடு போந்து கான் இடை
வருந்தின எனின் அது நூலை மாறுகொண்டு
இருந்தது; நின்றது புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர்வன; உணர்த்தற் பாலதோ?
43

உரை
   
 
கணைக்கால் செவ்வி

5378.தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கும் நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங்கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது? அன்னையே!
44

உரை
   
 
தொடைகளின் செவ்வி

5379.அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மதகரிக் கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இவ் உலகில் கூடுமோ?
45

உரை
   
 
திருவுந்தியின் செவ்வி

5380.வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழும் மணி உந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு அரோ.
46

உரை
   
 
திருமார்பின் செவ்வி

5381.பொரு அரு மரகதப் பொலம் கொள் மால்வரை
வெரு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னில் பின்னை அத்
திருவினில் திரு உளார் யாவர்? தயெ்வமே!
47

உரை
   
 
கைத்தலங்களின் செவ்வி

5382.நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோள்துறு கரம் எனச் சிறிது கூறலாம்
தோடு உறும் மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள்துறு தடக்கை வேறு உவமை சாலுமோ?
48

உரை
   
 
கைந் நகங்களின் செவ்வி

5383.பச்சிலைத் தாமரை பகல் கண்டால் அன
கைச்செறி முகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே.
49

உரை
   
 
திருப் புயங்களின் செவ்வி

5384.திரண்டில ஒளியில திருவின் சேர்வில
முரண்தரு மேருவின் சிலையின் மூரிநாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்றுபோன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமை ஏற்குமோ?
50

உரை
   
 
திருமிடற்றின் செவ்வி

5385.கடல்படு பணிலமும்,
    கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை என்று
    உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ?
    உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று
    இருக்க, எங்களால்.
51

உரை
   
 
திருமுகச் செவ்வி

5386.அண்ணல்தன் திருமுகம் கமலம் ஆமெனில்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண்மதி ஆம் என உரைக்கத் தக்கதோ
வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.
52

உரை
   
 
திருவாயின் செவ்வி

5387.‘ஆரமும் அகிலும் நீவி
    அகன்ற தோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டு அலர்ந்த செங்கேழ்
    நளினம் ‘என்று உரைக்க நாணும்;
ஈரமுண்டு அமுதம் ஊறும் இன்னுரை
    இயம்பாதேனும்,
மூரல் வெண்முறுவல் பூவாப்
    பவழமோ மொழியற்பாற்றே?
53

உரை
   
 
பற்களின் செவ்வி

5388.முத்தம் கொல்லோ? முழுநிலவின்
    முறியின் திறனோ? முறை அமுதத்
தொத்தின் துள்ளி வெள்ளி இனம்
    தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்தின் முளைத்த அங்குரம்கொல்?
    வேறே சிலகொல்? மெய்ம்முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று
    பல்லுக்கு உவமை சொல்லுகேன்!
54

உரை
   
 
திருமூக்கின் செவ்வி

5389.எள்ளா நிலத்து இந்திரநீலத்து
    எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழுமா நிழல்பிழம்பும்
    வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக்
    கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திருமூக்கிற்கு
    உவமை பின்னும் குணிப்பு ஆமோ?
55

உரை
   
 
திருப்புருவச் சிறப்பு

5390.பனிக் கல் சுரத்துக் கரன் முதலோர்
    கவந்தப் படையும், பல்பேயும்,
தனிக் கைச்சிலையும், வானவரும்,
    முனிவர் குழுவும், தனி அறமும்,
‘இனிக் கட்டு அழிந்தது அரக்கர்குலம்! ‘
    என்று சுருதி ஈர் இரண்டும்
குனிக்கக் குனித்த புருவத்துக்கு
    உவமை நீயே கோடியால்!
56

உரை
   
 
திருநெற்றியின் பெற்றி

5391.வரும் நாள் தோன்றும் தனி மறுவும்
    வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒருநாள் கவ்வும் உறுகோளும்
    இறப்பும் பிறப்பும் ஒழிவு உற்ற
இருநால் பகலின் இலங்குமதி
    அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்ப்
பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப்
    பெற்றித்தாகப் பெறும் மன்னோ!
57

உரை
   
 
திருக்குழலின் செவ்வி

5392.நீண்டு குழன்று நெய்த்து இருண்டு
    நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை
    சுருண்டு புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல எனத் தயெ்வ
    வெறியே கமழும் நறும்குஞ்சி
ஈண்டு சடை ஆயினது என்றால்,
    மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ?
58

உரை
   
 
நடையின் செவ்வி

5393.புல்லல் ஏற்ற திருமகளும்
    பூவும் பொருந்தப் புவி ஏழின்
எல்லை ஏற்ற நெடுஞ்செல்வம்
    எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி,
அல்லல் ஏற்ற கானகத்தும்
    அழியா நடையை இழிவு ஆன
மல்லல் ஏற்றின் உளது என்றால்,
    மத்தயானை வருந்தாதோ?
59

உரை
   
 
இராமபிரான் கூறிய அடையாளங்களை அநுமன் உரைக்கத் தொடங்குதல்

5394.என்ன மொழிய, அம் மொழி கேட்டு
    எரியின் இட்ட மெழுகு என்னத்
தன்னை அறியாது அழிவாளைத்
    தரையின் வணங்கி, ‘நாயகனார்
சொன்ன குறி உண்டு : அடையாளச்
    சொல்லும் உளவால் : தொழுதகைய
அன்னநடையாய்! கேட்க! ‘என
    அறிவன் அறைவான் ஆயினான்.
60

உரை
   
 
அநுமன் கூறிய அடையாள உரைகள் (5395-5397)

5395.‘நடத்தல் அரிது ஆகும் நெறி :
    நாள்கள் சில : தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண்
    இருத்தி! ‘என, அச்சுற்று,
உடுத்த துகிலோடும்,
    உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும்,
    அயல் நின்றதும் இசைப்பாய்!
61

உரை
   
 
5396.நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
‘யாண்டையது கான்? ‘என இசைத்ததும் இசைப்பாய்.
62

உரை
   
 
5397.எள் அரிய தேர்தரு சுமந்திரன் ‘இசைப்பாய்
வள்ளல் மொழி! வாசகம் ‘எனத் துயர் மறந்தாள்
‘கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள! ‘என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்.
63

உரை
   
 
அநுமன் திருவாழி காட்டுதல்

5398.‘மீட்டும் உரை வேண்டுவன இல்லை ‘என மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
‘நீட்டு இது! ‘என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.
64

உரை
   
 
ஆழிகண்ட பிராட்டிநிலை (5399-5400)

5399.இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தரெிவது என்னைகொல்? இந் நல் நுதலி செய்கை!
65

உரை
   
 
5400.இழந்த மணி புற்று அரவு
    எதிர்ந்தது எனல் ஆனாள்,
பழம் தனம் இழந்தன
    படைத்தவரும் ஒத்தாள்,
குழந்தையை உயிர்த்த மலடிக்கு
    உவமை கொண்டாள்,
உழந்து விழி பெற்றது ஒர்
    உயிர்ப் பொறையும் ஒத்தாள்.
66

உரை
   
 
திருவாழி பெற்ற பிராட்டிநிலை (5401-5404)

5401.வாங்கினள் : முலைக்குவையில்
    வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை
    ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் :
    குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் :
    இது இன்னது எனல் ஆமே?
67

உரை
   
 
5402.மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீள
நோக்கும் நுவலக் கருதும் ஒன்றும் நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்.
68

உரை
   
 
5403.நீண்ட விழி நேரிழை தன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் அம்மா!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகைசெய் தயெ்வமணி கொல்லோ?
69

உரை
   
 
5404.இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது : அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது : வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி.
70

உரை
   
 
பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5405-5406)

5405.இத்தகையள் ஆகி உயிர் ஏம் உற விளங்கும்
முத்த நகையாள் விழியின் ஆலி முலைமுன்றில்
தத்தி உக மென்குதலை தள்ள ‘உயிர் தந்தாய்!
உத்தம! ‘எனா இனைய வாசகம் உரைத்தாள்.
71

உரை
   
 
5406.‘மும்மை ஆம் உலகம் தந்த
    முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச்
    செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய
    அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும்
    நல்கினை இசையோடு ‘என்றாள்.
72

உரை
   
 
பிராட்டி அநுமனை வாழ்த்தல்

5407.‘பாழிய பணைத்தோள் வீர!
    துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான்
    மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
    யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும்,
    இன்று என இருத்தி! ‘என்றாள்.
73

உரை
   
 
பிராட்டி அநுமனிடம் இராமபிரானைப் பற்றி வினவுதல்

5408.மீண்டு உரை விளம்பல் உற்றாள்,
    ‘விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான் இளவலோடும்?
    எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை
    யார் சொல அறிந்தது? ‘என்றாள்;
தூண் திரண்டு அனைய தோளான்
    உற்றது சொல்லல் உற்றான்.
74

உரை
   
 
அநுமன் இராமனது வரலாறு விரித்தல் (5409-5429)

5409.உழைக் குலத்து இயையும் மாய
    உருவுகொண்டு உறுவல் செய்தான்,
மழைக் கருநிறத்து மாய
    அரக்கன், மாரீசன் என்பான்,
இழைத் தட மார்பத்து அண்ணல்
    எய்யப் போய், வையம் சேர்வான்,
அழைத்த வல் ஓசை உன்னை
    மயக்கியது; அரக்கன் சொல்லால்.
75

உரை
   
 
5410.‘இக்குரல் இளவல் கேளாது
    ஒழிக! ‘என இறைவன் இட்டான்
மெய்க்குரல் சாபம் : பின்னை,
    விளைந்தது விதியின் வெம்மை :
‘பொய்க்குரல் இன்று! பொல்லாப்
    பொருள் பின்பு பயக்கும்! ‘என்பான்,
கை குரல் வரிவில்லானும்,
    இளையவன் வரவு கண்டான்.
76

உரை
   
 
5411.கண்டபின், இளைய வீரன்
    முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும்
    உற்றது புகலக் கேட்டான் :
வண்டு உறை சாலை வந்தான்,
    நின் திருவடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான் : இன்னல்
    உழத்தற்கே ஏது அன்றோ?
77

உரை
   
 
5412.தேண்டி நேர் கண்டேன் வாழி!
    தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே நீ! அப்
    பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும்
    அகன்றிலை : அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய், ஆண்டு அங்கு
    எவ் உயிர் விடும் இராமன்?
78

உரை
   
 
5413.அந்நிலை ஆய அண்ணல்,
    ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன்னரும் கானும் யாறும்
    மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும்
    இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற
    சடாயுவை வந்து சார்ந்தான்.
79

உரை
   
 
5414.வந்து அவன்மேனி நோக்கி,
    வான் உயர் துயரின் வைகி,
‘எந்தை! நீ உற்ற தன்மை
    இயம்பு! ‘என, இலங்கைவேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த
    வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன,
    நிமிர்ந்தது சீற்ற வெம் தீ.
80

உரை
   
 
5415.சீறி, ‘இவ் உலகம் மூன்றும்
    தீந்து உகச் சின வாய் அம்பால்
நூறுவென்! ‘என்று கைவில்
    நோக்கிய காலை, ‘வெய்தின்,
ஊறு ஒரு சிறியோன் செய்ய
    முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி! ‘என்று தாதை
    ஆற்றலில், சீற்றம் ஆறி.
81

உரை
   
 
5416.‘எவ்வழி ஏகிற்று அன்னான்?
    யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய்! கூறுக! ‘என்னச்,
    செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால்,
    வீடினன் கழுகின் வேந்தன்;
எவ்விய வரி வில் செங்கை
    இருவரும் இடரின் வீழ்ந்தார்.
82

உரை
   
 
5417.அயர்த்தவர் அரிதில் தேறி,
    ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்
செயத்தகு கடன்கள் யாவும்
    தேவரும் மருளச் செய்தார் :
‘கயத்தொழில் அரக்கன்தன்னை
    நாடி நாம் காண்டும் ‘என்னாப்
புயல் தொடு குடுமிக் குன்றும்
    கானமும் கடிது போனார்.
83

உரை
   
 
5418.அவ்வழி நின்னைக் காணாது
    அயர்பவன், அரிதில் தேறிச்
செவ்வழி நயனம் செல்லும்
    நெடுவழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல் என்
    மெழுகு என அழியும் மெய்யன்,
இவ்வழி இனைய பன்னி,
    அறிவு அழிந்து, இரங்கல் உற்றான்.
84

உரை
   
 
5419.கன்மத்தை ஞாலத்தவர்
    யார் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான்,
    மயல்கொண்டு, புலன்கள் வேறு ஆய்,
நல் மத்தம் நாகம்
    தலைசூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான்,
    தனை ஒன்றும் உணர்ந்திலாதான
85

உரை
   
 
5420.‘போது ஆயின போது உன தண்புனல்
    ஆடல் பொய்யோ?
சீதா, பவழக்கொடி அன்னவள்
    தேடி என்கண்
நீ தா! தருகிற்றிலையேல் நெருப்பு
    ஆதி! ‘என்னாக்
கோதாவரியைச் சினம் கொண்டனன்
    கொண்டல் ஒப்பான்.
86

உரை
   
 
5421.‘குன்றே! கடிது ஓடினை
    கோமளக்கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி! காட்டலை
    என்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உன் உடைக் குலம்
    உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியாக் கரி
    ஆக்க ‘என்றான்.
87

உரை
   
 
5422.‘பொன்மான் உருவால் சில மாயை
    புணர்க்க அன்றோ,
என்மான் அகல்வுற்றனள் இப்பொழுது
    என்கண்? ‘என்னா,
நல் மான்களை நோக்கி, ‘நும் நாமமும்
    மாய்ப்பென் இன்றே,
வில் மான் கொலை வாளியின் ‘என்று
    வெகுண்டு நின்றான்.
88

உரை
   
 
5423.வேறு உற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறு உற்ற நெஞ்சில் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர்பெற்று இயல்வும் சில தேறல் உற்றான்.
89

உரை
   
 
5424.வந்தான் இளையானொடும் வான் உயர் தேரின் வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம் குலநாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில்; தன் உயிர் காதலோனும்
செந்தாமரைக் கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய.
90

உரை
   
 
5425.உண்டாயதும் உற்றதும் முற்றும்
    உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற
    போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை
    யாங்கள் காட்டக்
கண்டான், உயர் போதமும் வேதமும்
    காண்கிலாதான்.
91

உரை
   
 
5426.தணிகின்ற நம் சொல் தொடர்
    தன்மையது அன்று தன்மை,
துணிகொண்டு இலங்கும் சுடர்
    வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே,
    அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணிகண்டது : பண்டு அது
    உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால்.
92

உரை
   
 
5427.அயர்வு உற்று, அரிதில் தெளிந்து,
    அம்மலைக்கு அப்புறத்து ஓர்
உயர் பொன்கிரி உற்றுளன் வாலி என்று
    ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்ற அவ் இராவணன்
    வால் இடை பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு
    மால் கடல் தாவி வந்தான்.
93

உரை
   
 
5428.ஆயானை ஒர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பில்
தூயான்வயின் அவ் அரசு ஈந்தவன் ‘சுற்று சேனை
மேயான் வருவாய்! ‘என விட்டனன் மேவுகாறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு இரண்டும்.
94

உரை
   
 
5429.‘பின் கூடிய சேனை
    பெரும் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு!
    நின்னிடை மேவ ஏவித்,
தறெ்கு ஊடுருவக் கடிது
    ஏவினன் என்னை ‘என்னா,
முன் கூடின கூறினன்,
    காலம் ஒர் மூன்றும் வல்லான்.
95

உரை
   
 
இராமனது துயர் நினைந்த பிராட்டிநிலை

5430.அன்பினன் இவ் உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்புற உருகினள் இரங்கி ஏங்கினள்
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள்.
96

உரை
   
 
சீதை அநுமனைக் கடல் கடந்தவாறு வினவுதல்

5431.நையுறு சிந்தையள் நயன வாரியின்
தொய்யல் வெம் சுழி இடை சுரிக்கும் மேனியள்
‘ஐய! நீ அளப்பு அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு? இயம்புவாய்! ‘என்றாள்.
97

உரை
   
 
அநுமன் கடல் கடந்தவாறு கூறுதல்

5432.‘சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூயதாள்
ஒருங்கு இடை உணர்வினோர் ஓய்வு இல் மாயையின்
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனென் காலினால் ‘என்றான்.
98

உரை
   
 
பிராட்டி அநுமனை மீண்டும் வினவுதல்

5433.‘இத்துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்! ‘என்றாள்
முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள்.
99

உரை
   
 
பிராட்டிக்கு அநுமன் தன் பேருருக் காட்டுதல்

5434.சுட்டினன்; நின்றனன்; தொழுத கையினன்
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரும் நெடுமுகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான்.
100

உரை
   
 
அநுமன் காட்டிய பேருருவின் நிலை (5435-5440)

5435.செவ்வழிப் பெருமை என்று
    உரைக்கும் செம்மைதான்,
வெவ்வழிப் பூதம் ஓர்
    ஐந்தின் மேலதோ?
அவ்வழித்து அன்று எனின்,
    அநுமன்பாலதோ?
எவ்வழித்து ஆகும்? என்று
    எண்ணும் ஈட்டதே.
101

உரை
   
 
5436.ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம் தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம்.
102

உரை
   
 
5437.கண் தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண் தலம் இருபுடை விளங்கும் மெய்ம்மைய
குண்டலம் இரண்டும் அக் கோளில் மாச்சுடர்
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே.
103

உரை
   
 
5438.ஏண் இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை அநுமனை அமைய நோக்குவான்
‘சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று! ‘எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்.
104

உரை
   
 
5439.எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல் இல் உயிரெலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன் தானும் தன் கமலக் கண்களால்.
105

உரை
   
 
5440.எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ்கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம் தாம் எலாம்.
104

உரை
   
 
பேருருவை ஒடுக்கிக் கொள்ளும்படி அநுமனைப் பிராட்டி வேண்டுதல் (5441-5442)

5441.வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்
‘அஞ்சினென்! இவ் உரு அடக்குவாய்! ‘என்றாள்.
107

உரை
   
 
5442.‘முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழுவினது உலகு : இனிக் குறுகுவாய்! ‘என்றாள்;
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினள் ஆமெனத் தளிர்க்கும் சிந்தையாள்.
108

உரை
   
 
அநுமன் பேருரு ஒடுங்குதல்

5443.ஆண்தகை அநுமனும் ‘அருளதாம்! ‘எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக்கு உரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டு அரு விளக்கு அனாள் இனைய சொல்லினாள்.
உரை
   
 
பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5444-5448)

5444.இடந்தாய் உலகை மலையோடும்,
    இடித்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படந்தாழ் அரவை ஒருகரத்தால்
    பறித்தாய் எனினும் பயன் இன்றால் :
நடந்தாய் இடையே என்றாலும்
    நாணாம் நினக்கு : நளி கடலைக்
கடந்தாய் என்றால் என்னாகும்?
    காற்றாம் அன்ன கடுமையாய்!
110

உரை
   
 
5445.ஆழி நெடும் கை ஆண்தகைதன்
    அருளும் புகழும் அழிவு இன்றி
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு
    ஒருவன் நீயே உளையானாய்
பாழி நெடும் தோள் வீரா! நின்
    பெருமைக்கு ஏற்பப் பகை இலங்கை
ஏழு கடற்கும் அப்புறத்தது
    ஆகாது இருந்தது இழிவு அன்றோ?
111

உரை
   
 
5446.அறிவும் ஈதே, உரு ஈதே,
    ஆற்றல் ஈதே, ஐம்புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே,
    தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே,
    நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ? குணங்களால்,
    விரிஞ்சன் முதலாம் மேலானோர்.
112

உரை
   
 
5447.மின் நேர் எயிற்று வல் அரக்கர்
    வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர்
    துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன்;
    ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே! நிருதர் என் ஆவர்?
    நீயே எங்கோன் துணை ஆனால்.
113

உரை
   
 
5448.‘மாண்டேன் எனினும் பழுது அன்றே;
    இன்றே மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக்
    குலங்கேளாடும் வேர் அறுத்தேன்;
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும்;
    புகழே அன்றிப் புன்பழியும்
தீண்டேன்! ‘என்று மனம் மகிழ்ந்தாள்,
    திருவின் முகத்துத் திரு ஆனாள்.
114

உரை
   
 
அநுமன் பணிமொழி

5449.அண்ணல் பெரியோன், அடி வணங்கி,
    அறிய உரைப்பான் : ‘அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த
    மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர்,
    இராமற்கு அடியார் : யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன் :
    ஏவக்கடவ பணிசெய்வேன். ‘
115

உரை
   
 
வானரர் பெருமையினை அநுமன் கூறுதல்

5450.வெள்ளம் எழுபது உளது அன்றோ
    வீரன் சேனை! இவ் வேலைப்
பள்ளம் ஒருகை நீர் அள்ளிக்
    குடிக்கப் போதும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை
    காணாது ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளதாவது;
    அறிந்த பின்னும் உளது ஆமோ?
116

உரை
   
 
வானரப் படைத்தலைவர் பெயர்

5451.வாலி இளவல், அவன்மைந்தன்,
    வசந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன்,
    பனசன், சரபன், நெடும் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன்,
    கனகன், கவயன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன்,
    விந்தன், துவிந்தன், மதன் என்போன்.
117

உரை
   
 
வானரப் படைத்தலைவர் பெருமை

5452.தம்பன், தூமத் தனிப்பேரோன்,
    ததியின்வதனன், சதவலி என்று
இம்பர் உலகோடு எவ் உலகும்
    எடுக்கும் மிடுக்கர், இராமன்கை
அம்பின் உதவும் படைத்தலைவர்,
    அவரை நோக்கின் இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறையிடவும்
    போதார் : கணக்கு வரம்பு உண்டோ?
118

உரை