அட்சகுமாரன் குரங்கைப் பற்றித்தரத் தன்னை அனுப்ப வேண்டல் (5776-5778)

5776.கேட்டலும், வெகுளி வெம் தீ
    கிளர்ந்து எழ, விலங்கல் மார்பில்
தோடு அலர் தரெியல் மாலை
    வண்டொடும் சுறு கொண்டு ஏற,
ஊட்டு அரக்கு உண்ட போலும்
    நயனத்தான், ஒருப்பட்டானைத்
தாள் துணை தொழுது, மைந்தன்,
    தடுத்து இடை தருதி என்றான்.
1

உரை
   
 
5777.முக்கணான் ஊர்தி அன்றேல்,
    மூவுலகு அடியில் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல்,
    அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்ல, ஆகில்,
    குரங்கின் மேல் சேறி போலாம்!
இக் கடன் அடியேற்கு ஈதி;
    இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய
2

உரை
   
 
5778.‘அண்டர் கோன் தன்னைப் பற்றித்
    தருக ‘எனா, அடியேன் நிற்க,
கொண்டனை எம்முன் தன்னைப்
    பணி, என நெஞ்சம் கோடி
உண்டது; தீரும் அன்றே!
    உரன் இலாக் குரங்கு ஒன்று ஏனும்,
எண் திசை வென்ற நீயே,
    ஏவுதி என்னை என்றான்.
3

உரை
   
 
அட்சகுமாரன் உறுதிகூறல் (5779-5780)

5779.கொய் தளிர் கோதும் வாழ்க்கைக்
    கோடரத்து உருவு கொண்டு,
கைதவம் கண்ணி, ஈண்டு ஓர்
    சிறு பழி இழைக்கும் கற்பான்,
எய்தினன், இமையா முக்கண்
    ஈசனே என்றபோதும்,
நொய்தினில் வென்று, பற்றித்
    தருகுவென் நொடியின் உன்பால்
4

உரை
   
 
5780.துண்டத் தூண் அதனில் தோன்றும்
    கோள் அரி, சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி,
    ஆயினும், மலைதல் ஆற்றாது;
அண்டத்தைக் கடந்து போகி,
    அப்புறத்து அகலில், என்பால்
தண்டத்தை இடுதி அன்றே;
    நின்வயின் தந்திலேனேல்.
5

உரை
   
 
அட்சகுமாரன் விடைபெற்றுப் பெரும்படையுடன் செல்லல் (5781-5791)

5781.என இவை இயம்பி, “ஈதி விடை “
    என, இறைஞ்சி நின்ற
வனைகழல் வயிரத் திண் தோள்
    மைந்தனை, மகிழ்ந்து நோக்கித்
“துனைபரித் தேர் மேல் ஏறிச்
    சேறி “ என்று, இனைய சொன்னான்;
புனை மணித் தாரினானும்
    போர் அணி அணிந்து போனான்.
6

உரை
   
 
5782.ஏறினன் என்ப, மன்னோ,
    இந்திரன் இகலில் இட்ட,
நூறொடு நூறு பூண்ட,
    நொறில் வயப் புரவி நோன் தேர்;
கூறினர் அரக்கர் ஆசி;
    குமுறின முரசக் கொண்மூ;
ஊறின உரவுத் தானை
    ஊழி பேர் கடலை ஒப்ப.
7

உரை
   
 
5783.பொரு கடல் மகரம் எண்ணில்
    எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில்
    எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
உரு உறு மணலை எண்ணில்
    எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை மரபில் எண்ணில்
    எண்ணலாம் வாவும் வாசி.
8

உரை
   
 
5784.ஆறு இரண்டு அடுத்த எண்ணின்
    ஆயிரம் குமரர்; ஆவி
வேறு இலாத் தோழர், வென்றி
    அரக்கர்தம் வேந்தர் மைந்தர்,
ஏறிய தேரர் சூழ்ந்தார்,
    இறுதியின் யாவும் உண்பான்
சீறிய காலத்தீயின்
    செறி சுடர்ச் சிகைகள் அன்னார்.
9

உரை
   
 
5785.மந்திரக் கிழவர் மைந்தர்,
    மதி நெறி அமைச்சர் மக்கள்,
தந்திரத் தலைவர் ஈன்ற
    தனயர்கள் பிறரும், தாதைக்கு
அந்தரத்து அரம்பை மாரில்
    தோன்றினர் ஆதி ஆனோர்,
எந்திரத் தேரர், சூழ்ந்தார்
    ஈர் இரண்டு இலக்கம் வீரர்.
10

உரை
   
 
5786.தோமரம், உலக்கை, சூலம்,
    சுடர், மழு, குலிசம், தோட்டி,
ஏ மரு வரிவில், வேல், கோல்,
    ஈட்டி, வாள், எழு, விட்டேறு,
மா மரம், வீசு பாசம்,
    வயிர், வளை, வயிரத் தண்டு,
காமரு கணையம், குந்தம்,
    கப்பணம், காலநேமி.
11

உரை
   
 
5787.என்று இவை முதல ஆய
    எழில் திகழ் படைகள் ஈண்டி,
மின் திரண்ட அனைய ஆகி
    வெயிலொடு நிலவு வீச,
துன்று இரும் தூளி பொங்கித்
    துறுதலால் இறுதி செல்லாப்
பொன் திணி உலகம் ஆன
    பூதலம் ஆன மாதோ.
12

உரை
   
 
அட்சகுமாரன் படையின் தீய நிமித்தங்களும் ஆரவாரமும் (5788-5791)

5788.காகமும், கழுகும், பேயும்,
    காலனும், கணக்கு இல் காலம்
சேகு உற வினையின் செய்த
    தீமையும், தொடர்ந்து செல்ல;
பாகு உள கிளவி செவ்வாய்
    படைவிழி பணைத்த வேய்த் தோள்
தோகையர் மனமும் தொக்க
    தும்பியும் தொடர்ந்து சுற்ற.
13

உரை
   
 
5789.உழைக் குலம் நோக்கினார்கள்
    உலந்தவர்க்கு உரிய மாதர்
அழைத்து அழு குரலின் வேலை
    அமலையின், அரவச் சேனை
தழைத்து எழும் ஒலியின் ஓசை
    பல்லியம் துவைக்கத் தாவி
மழைக் குரல் இடியில் சொன்ன
    மாற்றங்கள் உரைப்ப மன்னோ.
14

உரை
   
 
5790.வெயில் கர மணிகள் வீசும்
    விரி கதிர் விழுங்க, வெய்ய
அயில் கர மணிகளாலும்
    அவிர் ஒளி பருக, அஃதும்
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற
    இலங்கு ஒளி ஒதுங்க, யாணர்
உயிர்க் குலவு இரவும் அன்று, பகல்
    அன்று, என்று உணர்வு தோன்ற.
15

உரை
   
 
5791.ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட
    உளை வயப் புரவி ஒல்கித்
தூங்கின வீழ, தோளும்
    கண்களும் இடத்துத் துள்ள,
வீங்கின மேகம் எங்கும்
    குருதி நீர்த் துளிகள் வீழ்ப்ப
ஏங்கின காகம் ஆர்ப்ப,
    இருளில் விண் இடிப்ப மாதோ.
16

உரை
   
 
அனுமன் அட்சகுமாரனைக் காணலும் ஐயுறலும் (5792-5795)

5792.வெள்ள வெம் சேனை சூழ,
    விண் உேளார் வெருவி விம்ம,
உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய
    கூற்றமும் உறுவது உன்ன,
துள்ளின சுழல் கண் பல் பேய்
    தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும்
கள் அவிழ் மாலையானைக்
    காற்றின் சேய் வரவு கண்டான்.
17

உரை
   
 
5793.“இந்திரசித்தோ? மற்று அவ்
    இராவணனேயோ? “ என்னாச்
சிந்தையின் உவகை தோன்ற,
    முனிவு உற்ற குரக்குச் சீயம்,
“வந்தனன்; முடிந்தது அன்றோ?
    மனக் கருத்து “ என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளை நோக்கி,
    இராமனைத் தொழுது சொன்னான்.
18

உரை
   
 
5794.“எண்ணிய இருவர் தம்முள்
    ஒருவனால், யானும் நோற்ற
புண்ணியம் உளதாய், எம் கோன்
    தவத்தொடும் பொருந்தினானேல்,
நண்ணினன் நானும் நின்றேன்;
    காலனும் நணுகி நின்றான்;
கண்ணிய கருமம் இன்றே
    முடிக்குவென் கடிதின் ‘‘ என்றான்.
19

உரை
   
 
5795.“பழி இலது உரு என்றாலும்,
    பல தலை அரக்கன் அல்லன்;
விழி இடை இமைக்கும் மேல்நாள்
    வேந்தை வென்றானும் அல்லன்;
மொழியின் மற்றவர்க்கு மேலான்;
    முரண் தொழில் முருகன் அல்லன்;
அழிவில் ஒண் குமரன் யாரோ?
    அஞ்சனக் குன்றம் அன்னான்.
20

உரை
   
 
அனுமனை அட்சகுமாரன் எள்ளி நகைத்தல்

5796.என்றவன் உவந்து, விண் தோய்,
    இந்திர சாபம் என்ன
நின்ற, தோரணத்தின் உம்பர்
    இருந்த போர் நீதியானை,
வன் தொழில் அரக்கன் நோக்கி,
    வாள் எயிறு இலங்க நக்கான்;
‘கொன்றது இக்குரங்கு போலாம்!
    அரக்கர் தம் குழாத்தை ‘என்றான்.
21

உரை
   
 
தேர்ப்பாகன் ஏளனமாக எண்ணக் கூடாதனெல்

5797.அன்னதாம் அச்சொல் கேட்ட
    சாரதி, “ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னலாமோ
    உலகியல்? இகழல்! அம்மா!
மன்னனோடு எதிர்ந்த வாலி
    குரங்கு என்றால், மற்றும் உண்டோ?
சொன்னது துணிவில் கொண்டு
    சேறி ‘‘ என்று உணரச் சொன்னான்.
22

உரை
   
 
அட்சகுமாரன் வஞ்சினம் கூறல்

5798.விடம் திரண்டு அனைய மெய்யான்,
    அவ் உரை விளம்பக் கேளா,
“இடம் புகுந்து, இனைய செய்த
    இதனொடு, சீற்றம் எஞ்சேன்,
தொடர்ந்து சென்று, உலகம் மூன்றும்
    துருவினென், ஒழிவு உறாமல்
கடந்து, பின் குரங்கு என்று ஓதும்
    கருவையும் களைவென் ‘‘ என்றான்.
23

உரை
   
 
அனுமனும் அரக்கர் படையும் பொருதல் (5799-5805)

5799.ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை,
    அஞ்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது; பொழிந்தது, அம்மா!
    பொழிபடப் பருவ மாரி;
வேர்த்தனர் திசை காப்பாளர்;
    சலித்தது விண்ணும் மண்ணும்;
தார்த் தனி வீரன், தானும்
    தனிமையும், அவர் மேல் சார்ந்தான்.
24

உரை
   
 
5800.எறிந்தனர், நிருதர் வெய்தின்
    எய்தின படைகள் எல்லாம்,
முறிந்தன வீரன் மேனி
    முட்டின, முகர யானை
மறிந்தன, மடிந்த தேரும்
    மான மாக் குழுவும், மற்றும்
நெறிந்தன வரம்பில் யாக்கை,
    இலங்கை தன் நிலையில் பேர.
25

உரை
   
 
5801.காய் எரி, முளி புல் கானில்
    கலந்து எனக் காற்றின் செம்மல்
ஏ எனும் அளவில் கொல்லும்
    நிருதர்க்கு, ஓர் எல்லை இல்லை,
போயவர், உயிரும் போகித்
    தனெ்புலம் படர்தல், பொய்யாது,
ஆயிர கோடி தூதர்
    உளர்கொலோ! நமனுக்கு அம்மா.
26

உரை
   
 
5802.வர உற்றார் வாரா நின்றார்
    வந்தவர் வரம்பில் வெம் போர்
பொர உற்ற பொழுது வீரன்
    மும்மடங்கு ஆற்றல் பொங்க
விரவிப் போய்க் கதிரோன் ஊழி
    இறுதிமேல் என்னல் ஆனான்
உரவுத்தோள் அரக்கர் எல்லாம்
    என்பு இலா உயிர்கள் ஒத்தார்.
27

உரை
   
 
5803.பிள்ளப்பட்டன, நுதல் ஓடைக் கரி,
    பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல்,
அள்ளல் பட்டு அழி குருதிப் பொருபுனல்
    ஆறாகப் படி சேறு ஆக,
“வள்ளப்பட்டன மகரக் கடல் என
    மதில் சுற்றிய பதி “மறலிக்கு ஓர்
கொள்ளைப்பட்டன உயிர் ‘‘ என்னும்படி,
    கொன்றான் ஐம்புலன் வென்றாறேன.
28

உரை
   
 
5804.‘தேரே பட்டன ‘என்றார் சிலர்; சிலர்,
    ‘தறெு கண் செம்முக வயிரத் தோள்
பேரே பட்டன ‘என்றார்; சிலர் சிலர்,
    ‘பரியே பட்டன சில ‘என்றார்;
‘காரேபட்டு அலை நுதல் ஓடைக்
    கடகரியே பட்டன கடிது ‘என்றார்;
நேரே பட்டவர் பட, மாடே
    தனி, நில்லா உயிரொடு நின்றாரே.
29

உரை
   
 
5805.ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி
    அடலோர், ஆய்மகள் அடு பேழ்வாய்த்
தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி
    தனிமத்து என்பது ஒர் தகையானான்;
ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும்,
    எறி வேல் இளையவர் இனமாக,
ஊழிப் பெயர்வது ஒர் புனல் ஒத்தார்; அனல்
    ஒத்தான், மாருதம் ஒத்தானே.
30

உரை
   
 
அனுமனும் அட்சகுமாரனும் பொருதல் (5806-5812)

5806.கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர்
    குறைகின்றார் உடல் குலைகின்றார்;
பின்றா நின்றனர்; உதிரப் பெருநதி
    பெருகா நின்றன அருகு ஆரும்
நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு
    நேமித் தேரொடும் அவன் நேரே
சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள்
    தரெிகின்றான் விழி எரிகின்றான்.
31

உரை
   
 
5807.உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்;
    ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்
கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அது
    கண்டார் விண்ணவர்; கசிவு உற்றார்;
“எற்றே மாருதி நிலை “ என்றார்; இனி
    “இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம், நல்லது பெற்றாம் ‘‘ என்றனர்;
    பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.
32

உரை
   
 
5808.எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன
    ஈரேழ்; எதிர் அவை பார் சேரப்
பொய்தான் மணி எழு ஒன்றால்; அன்று, அது,
    பொடியாய் உதிர்வு உற வடி வாளி
வெய்து ஆயின பல விட்டான்; வீரனும்
    வேறு ஓர் படை இலன் மாறா வெம்
கை தானே பொரு படை ஆகத் தொடர்
    கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான்.
33

உரை
   
 
5809.தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர்
    தின்றான்; அப் பொரு செறி திண் தேர்
பாரில் சென்றது; பரிபட்டன, அவன்
    வரிவில் சிந்திய பகழிக் கோல்,
மார்பில் சென்றன சில; பொன் தோள் இடை
    மறைவு உற்றன சில; அறவோனும்,
நேரில் சென்று, அவன் வயிரக் குனிசிலை
    பற்றிக் கொண்டு, எதிர் உற நின்றான்.
34

உரை
   
 
5810.ஒரு கையால் அவன் வயிரச் சிலைதனை
    உற்றுப் பற்றலும், உரவோனும்
இரு கையால், அவன் வலியா முன்னம் அது
    இற்று ஓடியது; இவர் பொன் தோளான்
சுரிகையால் எதிர் உருவிக் குத்தலும்,
    அதனைச் சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி
    பொறி ஓடும்படி பறியாவே.
35

உரை
   
 
5811.வாளாலே பொரல் உற்றான்; இற்று அது
    மண் சேராதமுன், வயிரத் திண்
தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை
    தழுவிக் கொண்டலும், உடல் முற்றும்
நீள் ஆர் அயில் என மயிர் தைத்தன; மணி
    நெடு வால் அவன் உடல் நிமிர்வு உற்று
மீளாவகை புடை சுற்றிக்கொண்டது;
    பற்றிக்கொண்டனன் மேல் ஆனான்.
36

உரை
   
 
5812.பற்றிக் கொண்டு, அவன் வடிவாள் என
    ஒளிர் பல் இற்று உக, நிமிர் படர் கையால்
எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர்
    இன மின் இனம் விழுவன என்ன
முற்றி, குண்டலம் முதலாம் அணி உக,
    முழை நால் அரவு இவர் குடர் நாலக்
கொற்றத் திண் சுவல் வயிரக் கை கொடு
    குத்திப், புடை ஒரு குதி கொண்டான்.
37

உரை
   
 
அநுமன் அட்சகுமாரனை அழித்தல்

5813.நீத்தாய் ஓடின உதிரப் பொரு நதி
    நீராகச் சிலை பார் ஆகப்
போய்த் தாழ் தறெி தசை அரி சிந்தினபடி
    பொங்கப் போம் உயிர் போகாமல்,
மீத்தா நிமிர் சுடர் வயிரக் கை கொடு
    பிடியா, விண்ணொடு மண் காணத்
தேய்த்தான்; ஊழியொடு உலகு ஏழ் தேயினும்
    ஒரு தன் புகழ் இறை தேயாதான்.
38

உரை
   
 
எஞ்சிய படை சிதறி மறைந்து ஓடல் (5814-5816)

5814.புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர்கொடு
    புக்கார் சிலர்; சிலர், பொரு பேயின்
பண்டாரத்து இடை இட்டார் தம் உடல்;
    பட்டாரில் சிலர் பயம் உந்தத்
திண்டாடித் திசை அறியா மறுகினர்;
    செத்தார் சிலர்; சிலர், செலவு அற்றார்;
கண்டார் கண்டது ஒர் திசையே விசை கொடு
    கால்விட்டார்; படை கைவிட்டார்.
39

உரை
   
 
5815.மீனாய் வேலையில் உற்றார் சிலர்; சிலர்
    பசு ஆய் வழிவழி மேய்வு உற்றார்;
ஊனார் பறவையின் வடிவு ஆனார் சிலர்;
    சிலர் நான்மறையவர் உரு ஆனார்;
மானார் கண் இள மடவார் ஆயினர்
    முன்னே தம் குழல் வகிர்வு உற்றார்
ஆனார் சிலர்; சிலர், ஐயா நின் சரண்
    என்றார்; நின்றவர் அரி என்றார்.
40

உரை
   
 
5816.தம் தாரமும் உறுகிளையும் தமை எதிர்
    தழுவுந்தொறும், ‘நும தமர் அல்லோம்;
வந்தோம் வானவர் ‘என்று, ஏகினர் சிலர்;
    சிலர், மானுயர் என வாய் விட்டார்;
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள்
    ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்;
இந்து ஆர் எயிறுகள் அறுவித்தார் சிலர்,
    எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்.
41

உரை
   
 
அரக்கியர் அழுதரற்றல்

5817.குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார்
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருட ஆய்
விண்டு அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்
அண்டம் உற்று உளது; அவ் ஊர் அழுத பேர் அமலையே.
42

உரை
   
 
அரக்கியர் துன்ப நிகழ்ச்சி (5818-5822)

5818.கதிர் எழுந்து அனைய செம் திருமுகக் கணவன்மார்
எதிர் எழுந்து அடி விழுந்து அழுதுசோர் இள நலார்
அதிநலம் கோதைசேர் ஓதியோடு அன்று அவ் ஊர்
உதிரமும் தரெிகிலாது இடை பரந்து ஒழுகியே.
43

உரை
   
 
5819.தாவு இல் வெம் செரு நிலத்து அடி,
    உலந்தவர் தம் மேல்,
ஓவியம் புரை நலார் விழுதொறும்,
    சிலர் உயிர்த்து
ஏவுகண்களும் இமைத்தனர்கள் ஆம்;
    இது எலாம்,
ஆவி ஒன்று, உரு இரண்டு,
    ஆதலாலே கொல் ஆம்?
44

உரை
   
 
5820.ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்; உதவியால்
வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள் வாய்
நாடினார் மடம் நலார்; நவை இலா நண்பரைக்
கூடினார்; ஊடினார் உம்பர்வாழ் கொம்பு அனார்.
45

உரை
   
 
5821.தீட்டு வாள் அனைய கண் தரெிவை ஓர் திரு அனாள்
ஆட்டி நின்று அயர்வது ஓர் அறுதலைக் குறையினைக்
கூட்டி “நின் ஆர் உயிர்த் துணைவன் எம் கோனை நீ
காட்டுவாய் ஆதி “ என்று அழுது கை கூப்பினாள்.
46

உரை
   
 
5822.ஏந்தினாள் தலையை ஓர் எழுது அரும் கொம்பு அனாள்;
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை
“வேந்து நீ அலசினாய் விடுதியால் நடம் ” எனாப்
பூந் தளிர்க் கையினால் மெய் உறப் புல்லினாள்.
47

உரை
   
 
அரக்கியர் துன்புறலும் விண்ணவர் இராவணனிடம் உரைத்தலும்

5823.நாடினார்; நாடியே நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின் வெருவி விண்ணவர்கள் தாம்
ஓடினார் அரசன்மாட்டு அணுகி நின்று உரை செய்வார்.
48

உரை
   
 
மந்தோதரி புலம்பல்

5824.கயல் மகிழ் கண்மலர் கலுழி கான்றிடப்
புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற
அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்
மயன் மகள்; வயிறு அலைத்து அழுது மாழ்கினாள்.
49

உரை
   
 
அனைவரும் அழுதல்

5825.தாவு அரும் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்;
காவலன் கால்மிசை விழுந்து காவல் மாத்
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார்.
50

உரை