பிணிக்கப்பட்ட அனுமனைக்கண்ட அரக்கர்களின் நிலைமை (5889-5893)

5889.“எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின்
கொய்யுமின் குடரினைக் கூறுகூறுகள்
செய்யுமின் மண் இடைத் தேய்மின் தின்னுமின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் “ என்று ஓடுவார்.
1

உரை
   
 
5890.மைத் தடம் கண்ணியர் மைந்தர் யாவரும்
பைத் தலை அரவு எனக் கனன்று ‘பைதலை
இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ? ‘எனா
மொய்த்தனர் கொலை செய முயல்கின்றார் சிலர்.
2

உரை
   
 
5891.‘நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ?
வச்சிர உடல் மறி கடலின்வாய் மடுத்து
உச்சியின் அழுத்துமின் உருத்து; அது அன்று எனின்
கிச்சு இடை இடும் ‘எனக் கிளக்கின்றார் சிலர்.
3

உரை
   
 
5892.‘எந்தையை எம்பியை எம் முன்னோர்களைத்
தந்தனை போக ‘எனத் தடுக்கின்றார் பலர்;
‘அந்தரத்து அமரர்தம் ஆணையால் இவன்
வந்தது ‘என்று உயிர்கொள மறுகினார் பலர்.
4

உரை
   
 
5893.‘ஓங்கல் அம் பெருவலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம் இவன் சிரம் இருத்தலால் திரு
வாங்கலம் ‘என்று அழும் மாதரார் பலர்.
5

உரை
   
 
அரக்கர்களின் ஆரவாரம்

5894.கொண்டனர் எதிர்செலும் கொற்ற மாநகர்
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது;
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர்க்கு உவகை கூரவே.
6

உரை
   
 
அனுமன் இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டுகொண்டே செல்லுதல்

5895.வடி உடைக் கனல் படை வயவர் மால்கரி
கொடி உடைத் தேர் பரி கொண்டு வீசலின்
இடிபடச் சிதைந்த மால் வரையின் இல் எலாம்
பொடிபடக் கிடந்தன கண்டு போயினான்.
7

உரை
   
 
அனுமனைக்கண்ட அரக்கர்கள் நிலை (5896-5899.)

5896.முயிறு அலைத்து எழும் முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்பு உண்டது கண்டு காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்.
8

உரை
   
 
5897.ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர்
போர்ப் புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்
பார்ப்புறப் பார்ப்புறப் பயத்தினால் பதைத்து
ஊர்ப்புறத்து இரியல் உற்று ஓடுவார் பலர்.
9

உரை
   
 
5898.‘காந்து உறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு
பூந்துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம்;
தேர்ந்து உறு பொருள்பெற எண்ணிச் செய்யுமின்
வேந்து உறல் பழுது ‘என விளம்புவார் சிலர்.
10

உரை
   
 
5899.‘ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன்
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு ‘எனாக்
‘களிவரு சிந்தையால் காண்டி! நங்களைச்
சுளிகிலை ஆம் ‘எனத் தொழுகின்றார் சிலர்.
11

உரை
   
 
நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் கிங்கரர்களின் வலிமையும் தொகையும்

5900.பைங்கழல் அனுமனைப் பிணித்த பாந்தளைக்
கிங்கரர் ஒருபுடை கிளர்ந்து பற்றினார்;
ஐம்பதினாயிரர் அளவு இல் ஆற்றலர்
மொய்ம்பினின் எறுழ்வலிக் கருளன் மும்மையார்.
12

உரை
   
 
அரக்கர்கள் கூற்று

5901.‘திண் திறல் அரக்கர்தம் செருக்கு சிந்துவான்
தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான்
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உருக்
கொண்டனன் அந்தகன் கொல் ‘என்றார் பலர்.
13

உரை
   
 
அரக்கரும் அரக்கியரும் நெருங்கிநின்று காணுதல்

5902.அரமியம் தலம் தொறும் அம்பொன் மாளிகைத்
தரம் உறு நிலைதொறும் சாளரம் தொறும்
முரசு எறி கடைதொறும் இரைத்து மொய்த்தனர்;
நிரைவளை மகளிரும் நிருத மைந்தரும்.
14

உரை
   
 
அனுமனைக் கண்டு அரக்கர் சிலர் எண்ணியது

5903.‘கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்
மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியான்
எயில் உடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்
அயில் எயிற்று ஒரு குரங்காய்; ‘ என்பார் சிலர்.
15

உரை
   
 
தேவமாதர் பலர் அக்காட்சியைக் காண வந்து கூடுதல்

5904.அரம்பையர் விஞ்சைநாட்டு அளக வல்லியர்
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர்
வரம்பு அறு சும்மையர் தலைமயங்கினார்.
16

உரை
   
 
அரக்கர் பலர் கருத்து

5905.‘நீர் இடைக் கண் துயில் நெடிய நேமியும்
தார் உடைத் தனி மலர் உலகின் தாதையும்
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர்
பார் இடைப் புகுந்தனர் பகைத்து; ‘ என்பார் பலர்.
17

உரை
   
 
அரக்கரல்லா ஏனையோர் கண்கலங்குதல்

5906.அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழைக் கண்ணின் நீர் அது
விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ?
இரக்கமோ? அறத்தினது எண்மையே கொலோ?
18

உரை
   
 
அனுமன் கருத்து (5907-5912)

5907.ஆண் தொழில் அனுமனும் அவரொடு ஏகினான்
மீண்டிலன் வேறலும் விரும்பல் உற்றிலன்
‘ஈண்டு இதுவே தொடர்ந்து இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன் ‘எனக் கருத்தின் எண்ணினான்.
19

உரை
   
 
5908.எந்தையது அருளினும் இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர்
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும்
சிந்துவென் அயர்வு உறு சிந்தை சீரிதால்.
20

உரை
   
 
5909.வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து
அளவு உறு முதியரும் அறிய ஆணையால்
விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை
இளகினன் என்வயின் ஈதல் ஏயுமால்.
21

உரை
   
 
5910.அல்லதூஉம் அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தரெிவு உறும்; எண்ணும் தேறல் ஆம்;
வல்லவன் நிலைமையும் மனமும் தேறல் ஆம்;
சொல் உக முகம் எனும் தூது சொல்லவே.
22

உரை
   
 
5911.வாலி தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும்
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும்
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையால்
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால்
23

உரை
   
 
5912.‘ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும்
நீதியும் மனம் கொள நிறுவி நின்றவும்
பாதியின் மேல் செல நூறி பைப் பையப்
போதலே கருமம் ‘என்று அனுமன் போயினான்.
24

உரை
   
 
இந்திரசித்து அனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல்

5913.கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்
புடைவரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ
விடை பிணிப்பு உண்டது போலும் வீரனைக்
குடைகெழு மன்னன் இல் கொண்டு போயினான்.
25

உரை
   
 
அச்செய்தியைத் தூதுவர் சென்று இராவணன்பால் கூறுதல்

5914.தூதுவர் ஓடினர் தொழுது தொல்லைநாள்
மாதிரம் கடந்தவற் குறுகி “மன்ன! நின்
காதலன் மரை மலர் கடவுள் வாளியால்
ஏதில் வானரம் பிணிப்பு உண்டது ஆம் “ என்றார்.
26

உரை
   
 
நற்செய்தி கூறிய தூதுவர்க்கு இராவணன் பரிசளித்தல்

5915.கேட்டலும் கிளர்சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர்
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.
27

உரை
   
 
அனுமனைக் கொல்லாமல் கொணரும்படி இராவணன் பணித்தல்

5916.‘எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்
புல் உற மலர்ந்த கண் குமுதப் பூவினன்
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து “என் ஆணையால்
கொல்லலை தருக “ எனக் கூறுவீர் ‘என்றான்.
28

உரை
   
 
தூதுவர் இராவணன் ஆணையை இந்திரசித்துக்குக் கூறுதலும் சீதாதேவியின் நிலைமையும்

5917.அவ் உரை தூதரும் ஆணையால் வரும்
தவெ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரை நிகழ் உழி இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்.
29

உரை
   
 
அனுமன் பிணிப்புண்ட செய்தியைத் திரிசடை சீதைக்குக் கூறுதல்

5918.“இறுத்தனன் கடிபொழில் எண்ணிலோர் பட
ஒறுத்தனன் “ என்று கொண்டு உவக்கின்றாள் உயிர்
வெறுத்தனள் சோர்வு உற வீரற்கு உற்றதைக்
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள்.
30

உரை
   
 
அதுகேட்டு வருந்திய சீதை அனுமனைக் குறித்துப் பலகூறிப் புலம்புதல் (5919-5923)

5919.ஓவியம் புகை உண்டது போல் ஒளிர்
பூவின் மெல் இயல் மேனி பொடி உறப்
பாவி வேடன் கைப் பார்ப்பு உறப் பேது உறும்
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள்.
31

உரை
   
 
5920.உற்று உண்டாய விசும்பை உருவினாய்
முற்று உண்டாய் கலை யாவையும் முற்றுறக்
கற்று உண்டாய் ஒரு கள்ள அரக்கனால்
பற்று உண்டாய் இதுவோ அறம் பான்மையே.
32

உரை
   
 
5921.கடர் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடர் கடந்தும் நின் ஊழி கடந்திலை
அடர் கடந்த திரள் புயத்து ஐய! நீ
இடர்கள் தந்தனை; வந்து இடர் மேலுமே.
33

உரை
   
 
5922.ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு
ஊழி காட்டுவென் என்று உரைத்தேன் அது
வாழி காட்டும் என்று உண்டு உன் வரைப்புயப்
பாழி காட்டி அரும் பழி காட்டினாய்.
34

உரை
   
 
5923.கண்டு போயினை ‘நீள்நெறி காட்டிட
மண்டு போரின் அரக்கனை மாய்த்து எனைக்
கொண்டு மன்னவன் போம் ‘எனும் கொள்கையைத்
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ.
35

உரை
   
 
சீதை தளர்ந்து மூர்ச்சித்தல்

5924.ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
தேயக் கன்று பிடி உறத் தீங்கு உறு
தாயைப் போலத் தளர்ந்து மயர்ந்தனள்;
தீயைச் சுட்டது ஒர் கற்பு எனும் தீயினாள்.
36

உரை
   
 
இந்திரசித்து அனுமனை இராவணன் அரண்மனையுள் கொண்டு சேர்தல்

5925.பெரும் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும்
அரும் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த அப் பெருங் கோயில் சென்று எய்தினான்.
37

உரை
   
 
இராவணன் அரசுவீற்றிருக்கும் சிறப்பு (5926-5942)

5926.தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு
    மதி தழைத்து என்ன,
அலங்கல் வெண்குடைத் தண் நிழல்
    அவிர் ஒளி பரப்ப,
வலம் கொள் தோளினான், மண்ணின்று
    வானுற எடுத்த,
பொலம் கொள் மாமணி வெள்ளி அம்
    குன்று எனப் பொலிய.
38

உரை
   
 
5927.புள் உயர்த்தவன் திகிரியும்,
    புரந்தரன் அயிலும்,
தள்ளின் முக்கணான் கணிச்சியும்,
    தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர்
    முகிழ் விரல் கதிர்வாள்,
வள் உகிர்ப் பெருங் குறிகளும்
    புயங்களின் வயங்க.
39

உரை
   
 
5928.துன்று செம்மயிர்ச் சுடர்நெடும்
    கற்றைகள் சுற்றி,
நின்று திக்கு உற, நிரல்படக்
    கதிர்க் குழாம் நிமிர,
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும்
    பெரும் புகை உயிர்ப்பத்
தனெ் திசைக்கும் ஓர் வட
    அனல் திருத்தியது என்ன.
40

உரை
   
 
5929.மரகதக் கொழும் கதிரொடு
    மாணிக்க நெடுவாள்,
நரக தேயத்துள் நடுக்கு உறா
    இருளையும் நக்கச்
சிரம் அனைத்தையும், திசைதொறும்
    திசைதொறும் செலுத்தி,
உரகர்கோன், இனிது அரசு
    வீற்றிருந்தனன் ஒப்ப.
41

உரை
   
 
5930.குவித்த பல மணி குப்பைகள்,
    கலையொடும் கொழிப்பச்
சுவிச் சுடர்க் கலன் அணிந்த பொன்
    தோெளாடு தயங்கப்
புவித் தடம் படர் மேருவைப்
    பொன்முடி என்னக்
கவித்து மால் இரும் கரும் கடல்
    இருந்தது கடுப்ப.
42

உரை
   
 
5931.சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறியப்
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்தது ஆம் என்ன.
43

உரை
   
 
5932.வண்மைக்கும் திரு மறைகட்கும்
    வானினும் பெரிய,
திண்மைக்கும் தனி உறையுள் ஆம்
    முழுமுகம் திசையில்,
கண்வைக்கும் தொறும் களிற்றொடு
    மாதிரம் காக்கும்,
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும்
    பெரும்பயம் இயற்ற.
44

உரை
   
 
5933.ஏக நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாகம் மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.
45

உரை
   
 
5934.வானரங்களும் வானவர் இருவரும் மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும்
தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற.
46

உரை
   
 
5935.நரம்பு கண் அகத்து உள் உறை
    நறை நிறப் பாண்டில்,
நிரம்பு சில்லரிப் பாணியும்
    குறடும் நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால்
    அன்ன பாடல்,
வரம்பு இல் இன்னிசை செவிதொறும்
    செவிதொறும் வழங்க.
47

உரை
   
 
5936.கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூடத்
தோடு சீறு அடி விழி மனம் கையொடும் தொடரும்
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகை மேல்நகை விளங்க.
48

உரை
   
 
5937.ஊடினார் முகத்து உறும் நறை ஒரு முகம் உண்ணக்
கூடினார் முகக் களிநறை ஒரு முகம் குடிப்பப்
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த.
49

உரை
   
 
5938.தேவரோடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரோடு மா மந்திரம் ஒருமுகம் முயலப்
பாவகாரிதன் பாவகம் ஒருமுகம் பயிலப்
பூவை சானகி உரு ஒடு உம் ஒருமுகம் பொருந்த.
50

உரை
   
 
5939.‘காந்தள் மெல் விரல் சனகி தன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவது எங்ஙன்? ‘என்று ஒருமுகம் நினையச்
சாந்து அளாவிய வனமுலை மகளிர் தற் சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒருமுகம் எழிலினை நோக்க.
51

உரை
   
 
5940.பொதும்பர் வைகு தேன் புக்கு
    அருந்துதற்கு அகம் புலரும்
மதம்பெய் வண்டு எனச் சனகி மேல்
    மனம் செல மறுகி,
வெதும்புவார், அகம் வெந்து அழிவார்,
    நகில் விழிநீர்
ததும்புவார் விழித் தாரைவேல்
    தோள் தொறும் தாக்க.
52

உரை
   
 
5941.மாறு அளாவிய மகரந்த நறை உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறும் சீகரத் தனெ்றல்
ஊறு அளாவிய கடு என உடல் இடை நுழைய.
53

உரை
   
 
5942.திங்கள் வாள்நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயல் தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று.
54

உரை
   
 
இராவணனைக் கண்டதும் அனுமன் சினங்கொள்ளுதல்

5943.இருந்த எண்திசைக் கிழவனை
    மாருதி எதிர்ந்தான்;
கரும் திண் நாகத்தை நோக்கிய
    கலுழனில் கனன்றான்;
திருந்து தோள் இடை வீக்கிய
    ‘பாசத்தைச் சிந்தி,
உருந்தும் நஞ்சு போல் பவன்வயின்
    பாய்வென் ‘என்று உருத்தான்.
55

உரை
   
 
இராவணனைக் கொல்வதற்கு அனுமன் புரிந்த ஆலோசனை (5944-5947)

5944.“உறங்குகின்ற போது உயிர் உண்டல்
    குற்றம் ‘என்று ஒழிந்தேன்,
பிறங்கு பொன் மணி ஆசனத்து
    இருக்கவும் பெற்றேன்,
திறங்கள் என் பல சிந்திப்பது?
    இவன் தலை சிதறி,
அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன்
    அகல்வென் ‘‘ என்று அமைந்தான்.
56

உரை
   
 
5945.‘தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர் கண் புலன் கதுவப்
பாவகாரிதன் முடி தலை பறித்திலென் என்றால்
ஏவதாம் இனிமேல் செயும் ஆள்வினை? ‘என்றான்.
57

உரை
   
 
5946.‘மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட முடித்தலை திசைதொறும் உருட்டி
ஆடல் கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
தேடி வந்தது ஓர் குரங்கு; ‘ எனும் வாசகம் சிறிதோ?
58

உரை
   
 
5947.நீண்ட வாள் எயிற்று அரக்கனைக்
    கண்களின் நேரே
காண்டல் வேண்டி இவ் உயிர் சுமந்து,
    எதிர் சில கழறி,
மீண்ட போது உண்டு வசைப் பொருள்;
    வென்றிலேன் எனினும்
மாண்ட போதினும் புகழ் அன்றி
    மற்றும் ஒன்று உண்டோ?
59

உரை
   
 
அனுமன் தன் எண்ணம் தகுதியன்றென நினைந்து மேலும் சிந்தித்தல் (5948-5952)

5948.என்று தோளிடை இறுக்கிய
    பாசம் இற்று ஏகக்
குன்றின்மேல் எழு கோள் அரியேறு
    எனக் குதியில்
சென்று கூடுவன் என்பது
    சிந்தனை செய்யா
நின்று, காரியம் அன்று என
    நீதியின் நினைந்தான்.
60

உரை
   
 
5949.கொல்லம் ஆம் வரத்தனும் அல்லன் கொற்றமும்
வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் மேலை நாள்
அல் எலாம் திரண்டு அன நிறத்தன் ஆற்றலை
வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?
61

உரை
   
 
5950.என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலால்
துன் அரும் செருத் தொழில் தொடங்கல் தூயதோ?
62

உரை
   
 
5951.‘ஏழு பேர் உலகங்கள் யாவும் இன்பு உறப்
பாழி வன் புயங்கேளாடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பாம் ‘என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.
63

உரை
   
 
5952.‘இங்கு ஒரு திங்களே இருப்பல் யான் ‘என
அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்;
பொங்கு வெம் செருவிடைப் பொழுது போக்கினால்.
64

உரை
   
 
இவ்வாறு ஆலோசித்து அடங்கி இராவணனருகிற் சார்தல்

5953.ஆதலான் அமர்த்தொழில் அழகிற்று அன்று; அரும்
தூதனாம் தன்மையே தூய்து; என்று உன்னினான்
வேத நாயகன் தனி துணைவன் வென்றிசால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான்.
65

உரை
   
 
இந்திரசித்து அனுமானை இராவணற்குக் காட்டுதல்

5954.தீட்டிய வாள் எனத் தறெு கண் தேவியர்
ஈட்டிய குழு இடை இருந்த வேந்தற்குக்
காட்டினன் அனுமனைக் கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான்.
66

உரை
   
 
இந்திரசித்து அனுமனைப் பற்றி இராவணனிடம் கூறுதல்

5955.புவனம் எத்தனை? அவை அனைத்தும் போர் கடந்
தவனை ‘உற்று அரி உரு ஆன ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் என்னச் செய்தவன்
இவன் ‘எனக் கூறி நின்று இருகை கூப்பினான்.
67

உரை
   
 
இராவணன் அனுமனை வெகுண்டு நோக்குதல்

5956.நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொளத்
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம்புகை
வீக்கின அவ் உடல் விசித்த பாம்பினே.
68

உரை
   
 
அனுமனை வினாவுதல் (5957-5961.)

5957.அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற
‘என் இவண் வரவு? நீ யாரை? ‘என்று அவன்
தன்மையை வினாயினான். கூற்றின் தன்மையான்.
69

உரை
   
 
5958.நேமியோ? குலிசியோ? நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ? பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!
70

உரை
   
 
5959.நின்று இசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
தனெ்திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன்? நீ.
71

உரை
   
 
5960.அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின்
வந்து உற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
முந்து ஒரு மலர் உேளான் ‘இலங்கை முற்று உற
சிந்து ‘எனத் திருத்திய தறுகண் தயெ்வமோ?
72

உரை
   
 
5961.‘யாரை நீ? என்னை இங்கு எய்து காரணம்?
ஆர் உனை விடுத்தவர்? அறிய ஆணையால்
சோர்வு இலை சொல்லுதி! ‘என்னச் சொல்லினான்.
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்.
73

உரை
   
 
அனுமன் விடை கூறல் (5962-5970)

5962.சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்;
அல்லி அம் கமலமே அனைய செங்கண் ஓர்
வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன்.
74

உரை
   
 
5963.‘அனையவன் யார்? ‘என அறிதி ஆதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும்
எனையவர் எனையவர் யாவர் யாவையும்
நினைவு அரும் அருவினை முடிக்க நின்றுேளான்.
75

உரை
   
 
5964.ஈட்டிய வலியும் மேல் நாள்
    இயற்றிய தவமும் யாணர்க்
கூட்டிய படையும் தேவர்
    கொடுத்த நல் வரமும் கொட்பும்
தீட்டிய அறிவும் எய்தத்
    திருத்திய பிறவும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால்
    முதலொடும் நீக்க நின்றான்.
76

உரை
   
 
5965.தேவரும் பிறரும் அல்லன்;
    திசை களிறு அல்லன்; திக்கில்
காவலர் அல்லன்; ஈசன்
    கயிலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை
    முனிவரும் அல்லன்; எல்லைப்
பூ வலயத்தை ஆண்ட
    புரவலன் புதல்வன் போல் ஆம்.
77

உரை
   
 
5966.போதமும் பொருந்து கேள்விப்
    புரை அறு பயனும் பொய் தீர்
மாதவம் சார்ந்த தீரா
    வரங்களும் மற்றும் முற்றும்
யாது அவன் நினைந்தான் அன்ன
    பயத்தன ஏது வேண்டின்
வேதமும் அறனும் சொல்லும்
    மெய் அற மூர்த்தி வில்லோன்.
78

உரை
   
 
5967.காரணம் கேட்டி ஆயில்,
    கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா
    அறிவினுக்கு அறிவும் அன்னோன்;
போர் அணங்கு இடங்கர் கவ்வப்
    பொதுநின்று ‘முதலே ‘என்ற
வாரணம் காக்க வந்தான்
    அமரரைக் காக்க வந்தான்.
79

உரை
   
 
5968.மூலமும் நடுவும் ஈறும்
    இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கடந்து நின்ற
    காரணன், கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும்
    கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
    பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்.
80

உரை
   
 
5969.அறம் தலை நிறுத்தி, வேதம்
    அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தரெிந்து உலகம் பூணச்
    செம் நெறி செலுத்தித் தீயோர்
இறந்து உக நாறித் தக்கோர்
    இடர் துடைத்து ஏக, ஈண்டுப்
பிறந்தனன், தன் பொன் பாதம்
    ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.
81

உரை
   
 
5970.‘அன்னவற்கு அடிமை செய்வேன்,
    நாமமும் அனுமன் என்பேன்,
நல்நுதல் தன்னைத் தேடி
    நால் பெரும் திசையும் போந்த
மன்னரில், தனெ்பால் வந்த
    தானைக்கு மன்னன், வாலி
தன் மகன், அவன்தன் தூதன்,
    வந்தனென் தனியேன் ‘என்றான்.
82

உரை
   
 
இராவணன் வாலியின் நலங்களைப் பற்றி வினவக் கேட்டு அனுமன் நகுதல்

5971.என்றலும் இலங்கை வேந்தன்,
    எயிறு இனம் எழிலி நாப்பண்
மின் திரிந்தனெ்ன நக்கு,
    ‘வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி
    வலியன் கொல்! அரசின் வாழ்க்கை
நன்றுகொல்! ‘என்னலோடும்
    நாயகன் தூதன் நக்கான்.
83

உரை
   
 
வாலி இறந்த செய்தியை அனுமன் கூறுதல்

5972.‘அஞ்சலை, அரக்க! பார்விட்டு,
    அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி, மீளான்;
    வாலும் போய் விளிந்தது; அன்றே,
அஞ்சன மேனியான் தன் அடுகணை
    ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன், எங்கள் வேந்தன்
    சூரியன் தோன்றல் ‘என்றான்.
84

உரை
   
 
இராவணன் மற்றும் சில வினாவுதல்

5973.‘என் உடை ஈட்டினால் அவ்
    வாலியை எறுழ் வாய் அம்பால்
இன் உயிர் உண்டது? இப்போது
    யாண்டையான் இராமன் என்பான்?
அன்னவன் தேவி தன்னை
    அங்கதன் நாடல் உற்ற
தன்மையை உரைசெய்க ‘என்னச்
    சமீரணன் தனயன் சொல்வான்.
85

உரை
   
 
அனுமன் விடை பகர்தல் (5974-5975)

5974.‘தேவியை நாடி வந்த
    செங்கணாற்கு எங்கள் கோமான்
ஆவி ஒன்றாக நட்டான்;
    ‘அருந்துயர் துடைத்தி ‘என்ன,
ஓவியர்க்கு எழுத ஒண்ணா
    உருவத்தன் ‘உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே
    கொடுத்து வாலியையும் கொன்றான் ‘.
86

உரை
   
 
5975.‘ஆயவன் தன்னொடு ஆண்டுத்
    திங்கள் ஓர் நான்கும் வைகி
மேய வெம் சேனை சூழ,
    வீற்று இனிது இருந்த வீரன்,
போய் இனி நாடும் என்னப்
    போந்தனம், புகுந்தது ஈது ‘என்று
ஏயவன் தூதன் சொன்னான்,
    இராவணன் இதனைச் சொன்னான்.
87

உரை
   
 
இராவணன் இகழ்ந்துரைத்தல் (5976-5977)

5976.‘உம் குலத் தலைவன் தன்னோடு
    ஒப்பு இலா உயர்ச்சியானை
வெம் கொலை அம்பில் கொன்றாற்கு
    ஆள் தொழில் மேல் கொண்டீரேல்,
எங்கு உலப்பு உறும் நும் சீர்த்தி?
    நும்மொடும் இயைந்தது என்றால்
மங்குலில் பொலிந்த ஞாலம்
    மாதுமை உடைத்து. மாதோ ‘.
88

உரை
   
 
5977.‘தம் முனைக் கொல்வித்து, அன்னாற்
    கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இனத் தலைவன் ஏவ, யாது
    எமக்கு உணர்த்தல் உற்றது?
எம் முனைத் தூது வந்தாய்
    இகல்புரி தன்மை என்னை?
நொம் எனக் கொல்லாம்! நெஞ்சம்
    அஞ்சலை, நுவல்தி ‘என்றான்.
89

உரை
   
 
அனுமன் ஆராய்ந்து சில கூறத் தொடங்குதல்

5978.துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப்
புணர்த்து நோக்கிப் ‘பொது நின்ற நீதியை
உணர்த்தினால் அது உறும் ‘என உன்ன அரும்
குணத்தினான் உம் இனையன கூறினான்.
90

உரை
   
 
அனுமன் கூறிய அறிவுரைகள் (5979-5994)

5979.தூது வந்தது; சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன
கோது இறந்தன நின் வயின் கூறுவாம்.
91

உரை
   
 
5980.வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம்
சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்;
இறுதி உற்றுளது; ஆயினும் இன்னும் ஓர்
உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்!
92

உரை
   
 
5981.‘போய் இற்றீர்; நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிது ஆகிய மா தவம்
காயில் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள்
தீயில் தூயவளைத் துயர் செய்ததால்.
93

உரை
   
 
5982.‘இன்று வீந்தது; நாளைச் சிறிது இறை
நின்று வீந்தது; அல்லால் இறை நிற்குமோ?
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால்.
94

உரை
   
 
5983.“தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது ” எனும்
வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த
தூய்மை தூயவள் தன்வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்.
95

உரை
   
 
5984.‘திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்து தத்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்?
96

உரை
   
 
5985.‘நாமத்து ஆழ்கடல் ஞாலம் புரந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இளமாதர் பால்
காமத்தால் இறந்தார் களிவண்டு உறை
தாமத் தாரினர் எண்ணினும் சால்வரோ?
97

உரை
   
 
5986.‘பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்
அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஓர்
தரெுள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.
98

உரை
   
 
5987.‘இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகை உற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்து பழி படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ?
99

உரை
   
 
5988.‘ஓத நீர் உலகு ஆண்டவர் உன்துணைப்
போத நீதியர் ஆர் உளர்? போயினார்
வேத நீதி விதிவழி மேல்வரும்
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ?
100

உரை
   
 
5989.வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்பு உண்டால் அது அழகு எனல் ஆகுமே.
101

உரை
   
 
5990.பாரை ஞூறுவ பல் பல பொன் புயம்
ஈர் ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்
ஊர் ஐஞ்ஞூறும் கடும் கனல் உள் பொதி
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ.
102

உரை
   
 
5991.‘புரம் பிழைப்பு அரும் தீ புகப் பொங்கியோன்
நரம்பு இழைத்தன பாடலின் நல்கிய
வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும் ‘என்று எண்ணுதல் சாலுமோ?
103

உரை
   
 
5992.ஈறு இல் நாண் உக எஞ்சல் இல் நல் திரு
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ?
வேறும் இந் நகை ஆய வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்!
104

உரை
   
 
5993.பிறந்து உளார் பிறவாத பெரும் பதம்
சிறந்து உளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்து உளார் பிறர் யாரும் இராமனை
மறந்து உளார் உளர் ஆகிலர்; வாய்மையால்.
105

உரை
   
 
5994.“ஆதலால் தன் அரும் பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும் உயிரும் பெறச்
சீதையைத் தருக “ என்று எனச் செப்பினான்;
சோதியான் மகன் நிற்கு எனச் சொல்லினான்.
106

உரை
   
 
இராவணன் நகுதல்

5995.என்றலும் ‘இவை சொல்லியது எற்கு ஒரு
குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம்; இது
நன்று நன்று ‘என மாநகை செய்தனன்;
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்.
107

உரை
   
 
இராவணன் அனுமனை வினவுதல்

5996.‘குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும்
இருக்க; நிற்க; நீ என்கொல்; அடா! இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின்
அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய் ‘என்றான்.
108

உரை
   
 
அனுமன் விடை

5997.‘காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை
வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உன்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால்.
109

உரை
   
 
வீடணன் தூதனாய் வந்த அனுமனைக் கொல்லல் ஆகாது எனல் (5998-6004)

5998.என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக
மின்னும் வாள் எயிற்றன் சினம் வீங்கினான்;
கொன்மின் என்றனன்; கொல்லியர் சேர்தலும்
நின்மின் என்றனன்; வீடணன் நீதியான்.
110

உரை
   
 
5999.ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை
நீண்ட கையன் வணங்கினன்; ‘நீதியாய்
மூண்ட கோபம் முறையது அன்று ஆம் ‘என
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்.
111

உரை
   
 
6000.அந்தணன் உலகம் மூன்றும்
    ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற
    தவம் நெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும்
    இறைவன் நீ, இயம்பு ‘தூது
வந்தனென் ‘என்ற பின்னும்
    கோறியே? மறைகள் வல்லோய்
112

உரை
   
 
6001.பூதலப் பரப்பின், அண்டப்
    பொகுட்டினுள், புறத்துள், பொய்தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின்,
    வேறு வேறு இடத்து வேந்தர்,
மாதரைக் கொலை செய்தார்கள்
    உளர் என வரினும், வந்த
தூதரைக் கொன்றுளார்கள்
    யாவரே? தொல்லை நல்லோர்.
113

உரை
   
 
6002.பகைப்புலன் அணுகி, உய்த்தார்
    பகர்ந்தது பகர்ந்து, பற்றார்
மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை
    விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலம் கருமத்தோரைக்
    கோறலின், தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது உண்டாமோ?
    நம் குலம் நவை உண்டாமே?
114

உரை
   
 
6003.முத்தலை எஃகன் மற்றை
    முராந்தகன் முனிவன் முன்னா
அத்தலை நம்மை நோனா
    அமரர்க்கும் நகையிற்று ஆமால்;
மெய்த்தலை உலகம் காக்கும்
    வேந்த! நீ, வேற்றோர் ஏவ
இத்தலை எய்தினானைக்
    கொல்லுதல், இழுக்கம்; இன்னும்.
115

உரை
   
 
6004.‘இளையவள் தன்னைக் கொல்லாது,
    இரு செவி மூக்கொடு ஈர்ந்து,
‘விளைவு உரை ‘என்று விட்டார்
    வீரராய் மெய்ம்மை ஓர்வார்,
களைதியேல் ஆவி, நம்பால்
    இவன் வந்து கண்ணில் கண்ட
அளவு உரையாமல் செய்தி
    ஆதி; ‘ என்று அமையச் சொன்னான்.
116

உரை
   
 
இராவணன் அனுமன் வாலில் தீக்கொளுவப் பணித்தல்

6005.“நல்லது உரைத்தாய்; நம்பி! இவன்
    நவை செய்தானே ஆனாலும்,
கொல்லல் பழுதே; போய் இடை நீ
    கூறிக் கொணர்தி கடிது ‘‘ என்னாத்
“தொல்லை வாலை மூலம் அறச்
    சுட்டு நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள் ‘‘
    என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.
117

உரை
   
 
6006.ய காலத்து, ‘அயன் படையோடு
    இருப்ப ஆகாது அனல் இடுதல்;
தூய பாசம் எனப் பலவும்
    கொணர்ந்து பிணிமின் தோள் ‘என்னா
மேய தயெ்வப் படைக்கலத்தை
    விட்டான், அமரர் போர் வென்றான்;
ஏ எனாமுன் இடை புக்குத்
    தொடைவன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார்.
118

உரை
   
 
அரக்கர்கள் கண்ட கயிறுகளையெல்லாம்
கொண்டு வருதல்

6007.நாட்டின் நகரின் நடு உள்ள
    கயிறு நவிலும் தகைமையவே!
வீட்டின் ஊசல் நெடும் பாசம்
    அற்ற; தேரும் விசி துறந்த;
மாட்டும் புரவி ஆயம் எலாம்
    மருவி வாங்கும் தொடை அழிந்த;
பூட்டும் வல்லி மூட்டோடும்
    புரசை இழந்த போர் யானை.
119

உரை
   
 
பல்வேறு பாசங்களால் அனுமனைக் கட்டுதல்

6008.மண்ணில் கண்ட, வானவரை
    வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை
    இகலின் பறித்த, தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில்
    பிணித்த கயிறே இடை பிழைத்த;
கண்ணில் கண்ட வன் பாசம்
    எல்லாம் இட்டுக் கட்டினார்.
120

உரை
   
 
அனுமன் மகிழ்தல்

6009.“கடவுள் படையைக் கடந்து, அறத்தின்
    ஆணை கடந்தேன் ஆகாமே,
விடுவித்து அளித்தார் தவெ்வரே;
    வென்றேன் அன்றோ இவர் வென்றி;
சுடுவிக்கின்றது, ‘இவ் வூரைச் சுடுக ‘
    என்று உரைத்த துணிவு “ என்று
நடு உற்று அமைய உற நோக்கி,
    முற்றும் உவந்தான் நவை அற்றான்.
121

உரை
   
 
அனுமன் அடங்கிச் செல்லுதல்

6010.நொய்ய பாசம் புரம் பிணிப்ப,
    நோன்மை இலன்போல் உடல் நுணங்கி,
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப,
    வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும்,
    அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற
    யோகி போன்றான்; போகின்றான்.
122

உரை
   
 
அரக்கர் அனுமன் வாலில் தீக்கொளுவுதல்

6011.வேந்தன் கோயில் வாயிலொடு
    விரைவில் கடந்து, வெள்ளிடையின்
போந்து, புறம் நின்று இரைக்கின்ற
    பொறைதீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடுவால் கிழி சுற்றி,
    முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய்;
காந்து கடும் தீக் கொளுத்தினார்,
    ஆர்த்தார்; அண்டம் கடிகலங்க.
123

உரை
   
 
அனுமனைக் காண அரக்கர் திரளுதல்

6012.ஒக்க ஒக்க உடன் விசித்த
    உலப்பு இலாத உர பாசம்,
பக்கம் பக்கம் இரு கூறு ஆய்
    நூறு ஆயிரவர் பற்றினார்;
புக்க படைஞர், புடை காப்போர்,
    புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்
திக்கின் அளவால்; அயல் நின்று
    காண்போர்க்கு எல்லை தரெிவு அரிதால
124

உரை
   
 
அனுமனுக்கு உற்றதைக் காண வருமாறு அரக்கர் அனைவரையும் அழைத்தல்

6013.‘அந்த நகரும் கடி காவும்
    அழிவித்து, அக்கன் முதலாயோர்
சிந்த நூறிச், சீதையொடும்
    பேசி, மனிதர் திறம் செப்ப,
வந்த குரங்கிற்கு உற்றதனை,
    வம்மின் காண வம் ‘என்று
தம் தம் தரெுவும் வாயில்தொறும்
    யாரும் அறியச் சாற்றினார்.
125

உரை
   
 
அனுமனுக்கு உற்றது கேட்ட பிராட்டி வருந்தல்

6014.ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும்
    அறிவிப்பார் போல்; அங்கோடு இங்கு
ஈர்த்தார், முரசம் எற்றினார்,
    இடித்தார், தழெித்தார், எம் மருங்கும்
பார்த்தார், ஓடிச் சானகிக்கும்
    பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்,
வேர்த்தாள், உலந்தாள், விம்மினாள்,
    விழுந்தாள், அழுதாள், வெய்து உயிர்த்தாள்
126

உரை
   
 
பிராட்டி அங்கியங் கடவுளை வேண்டல்

6015.‘தாயே அனைய கருணையான்
    துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர்
    நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
    நிற்கே தரெியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன்,
    எரியே அவனைச் சுடல் ‘என்றாள
127

உரை
   
 
அனல் குளிர்தல் (6016-6018)

6016.வெளுத்த மெல் நகையவள் விளம்பும் ஏல்வையின்
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தன; மயிர்ப் புறம் சிலிர்ப்பத் தண்மையால்
குளிர்த்தது; அக் குரிசில் வால் என்பு கூரவே.
128

உரை
   
 
6017.மற்று இனிப் பல என்? வேலை
    வட அனல், புவி அளாய
கற்றை வெம் கனலி, மற்றைக்
    காயம் தீ, முனிவர் காக்கும்
முற்றுறு மும்மைச் செந்தீ,
    முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெறறிக் கண்ணின்
    வன்னியும், குளிர்ந்த அன்றே.
129

உரை
   
 
6018.அண்டமும் கடந்தான் அம் கை
    அனலியும் குளிர்ந்தது; அங்கிக்
குண்டமும் குளிர்ந்த; மேகத்து
    உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
சண்ட வெம் கதிர ஆகித்
    தழங்கு இருள் விழுங்கும் தாவு இல்
மண்டலம் குளிர்ந்த; மீளா
    நரகமும் குளிர்ந்த மாதோ.
130

உரை
   
 
அனல் குளிர்ந்தமையால் அனுமன் மகிழ்தல்

6019.வெற்பினால் இயன்றது அன்ன
    மேனியை விழுங்கி, வெம் தீ
நிற்பினும், சுடாது நின்ற
    நீர்மையை, நினைவின் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை
    அனுமனும், ‘சனகன் பாவை
கற்பினால் இயன்றது ‘என்பான்,
    பெரியது ஓர் களிப்பன் ஆனான்.
131

உரை
   
 
அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல்

6020.அற்றை அவ் இரவில், தான் தன்
    அறிவினால் முழுதும் உன்னப்
பெற்றிலன் எனினும், ஆண்டு ஒன்று
    உள்ளது பிழை உறாமே,
மற்று உறு பொறி முன் செல்ல,
    மறைந்து செல் அறிவு மானக்
கற்றிலா அரக்கர் தாமே
    காட்டலின், தரெியக் கண்டான்
132

உரை
   
 
அனுமன் மேலெழ அரக்கர் தோளற்று வீழ்தல்

6021.முழுவதும் தரெிய நோக்கி
    முற்றும் ஊர் முடிவில் சென்றான்,
‘வழுவுறு காலம் ‘ஈது என்று
    எண்ணினன், வலிதின் பற்றித்
தழுவினர் இரண்டு நூறாயிரம்
    புயத் தடக்கை, தாம்போடு
எழு என நால, விண்மேல்
    எழுந்தனன்; விழுந்த எல்லாம்.
133

உரை
   
 
அனுமனுடைய தோற்றம்

6022.இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும்,
    இழந்த தோளார்,
முற்றினார் உலந்தார்; ஐயன்,
    மொய்ம்பினோடு உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும்
    தோன்றுவான், அரவின் சுற்றம்
பற்றிய கலுழன் என்னப்
    பொலிந்தனன்; விசும்பின் பாலான்
134

உரை
   
 
அனுமன் தன்வாலை இலங்கைமீது செலுத்தல்

6023.‘துன்னலர் புரத்தை முற்றும்
    சுடுதொழில் தொல்லையோனும்,
பன்னின பொருளும், நாணப்
    பாதகர் இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்திப் பின்னை
    வயங்கு எரி மடுப்பென் ‘என்னாப்
பொன் நகர் மீதே தன்போர்
    வாலினைப் போக விட்டான்
135

உரை
   
 
வாலின் வருணனை (6024-6025)

6024.தன் இறைக்கு உறுகண் வெய்யோர்
    தாம் இயற்றலும் கேட்டு, ‘இன்னே
அன்னவர்க்கு இறுதி ஆக,
    அணி நகர் அழிப்பல்; ‘ என்னாச்
செந்நிறச் சிகைய வெம் போர்
    மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்;
அல் நிறத்து அண்ணல் தூதன்
    அனல்கெழு கொற்ற நீள் வால்
136

உரை
   
 
6025.அப்பு உறழ் வேலை காறும்
    அலங்கு பேர் இலங்கை தன்னை,
எப் புறத்தளவும் தீய
    ஒரு கணத்து எரித்த கோட்பால்,
துப்பு உறழ் மேனி அண்ணல்,
    மேருவில் குழையத் தோளால்
முப்புரத்து எய்த கோலே
    ஒத்தது; அம் மூரிப் போர் வால்
137

உரை
   
 
அனுமன் தன் வாலில் பற்றிய தீயை இலங்கை முழுதும் பரவும்படி உய்த்தல்

6026.உகக்கடை, உலகம் யாவும்
    உணங்குற, ஒரு தன் நாட்டம்
சிகைக் கொழுங் கனலை வீசும்
    செயல் முனம் பயில்வான் போல,
மிகைத்து எழு தீயர் ஆயோர்
    விரிநகர் வீயப், போர் வால்,
தகைத்தல் இல் நோன்மை சாலும்
    தனி வீரன், சேணில் உய்த்தான்
138

உரை
   
 
அனுமன் தன் வாலில் பற்றிய தீயுடன் இலங்கை நகர மாளிகைதோறும் தாவிச் செல்லுதல்

6027.வெள்ளியின் பொன்னின் நானா
    விளங்குபல் மணியின் விஞ்சை
தெள்ளிய கடவுள் தச்சன்,
    கை முயன்று அரிதின் செய்த,
தள் அறு மனைகள் தோறும்,
    முறை முறை தாவிச் சென்றான்;
ஒள் எரியோடும் குன்றத்து
    ஊழிவீழ் உருமொடு ஒப்பான்
139

உரை
   
 
இலங்கை நகரை எரி உண்டமை

6028.நீல் நிற நிருதர், யாண்டும்
    நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான்
    மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட,
    உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ
    கனலியும் கடிதின் உண்டான்.
140

உரை