இராவணன் கோபுரத்தின்மேல் நின்ற நிலை

6987.கவடு உகப் பொருத காய்களிறு அன்னான்
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும்
சுவடுடைப் பொருவு இல் தோள்கொடு அனேகம்
குவடுடைத் தனி ஒர் குன்று என நின்றான்.
1

உரை
   
 
6988.பொலிந்த தாம் இனிது போர் எனலோடும்
மலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான்.
2

உரை
   
 
6989.செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க
அம்பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல் நாள்
உம்பர் மீது நிமிர் வாசுகி ஒத்தான்.
3

உரை
   
 
6990.தொக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்
பக்கமும் நிழல் பரப்பி வியப்பால்
மிக்கு நின்ற குடை மீது விளங்க.
4

உரை
   
 
6991.கைத் தரும் கவரி விசிய காலால்
நெய்த்து இருண்டு உயரும் நீள்வரை மீதில்
தத்தி வீழும் அருவித் திரள் சாலும்
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ.
5

உரை
   
 
6992.வானகத்து அமுது உருப்பசி வாசத்
தேன் அகத் திரு திலோத்தமை செவ்வாய்
மேனகைக் குயிலின் மென்மையர் யாரும்
சானகிக்கு அழகு உகுத்து அயல் சார.
6

உரை
   
 
6993.வீழியின் கனி இதழ் பணை மென் தோள்
ஆழி வந்த அர மங்கையர் ஐஞ்ஞூற்று
ஏழ் இரண்டினின் இரண்டு பயின்றோர்
சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற.
7

உரை
   
 
6994.முழை படிந்த பிறை முள் எயிறு ஒள்வாள்
இழை படிந்த இள வெண்ணிலவு ஈன
குழை படிந்தது ஒரு குன்றில் முழங்கா
மழை படிந்தனைய தொங்கல் வயங்க.
8

உரை
   
 
6995.ஓத நூல்கள் செவியின் வழி உள்ளம்
சீதை சீதை என ஆர் உயிர் தேய
நாத வீணை இசை நாரதர் பாட
வேத கீத அமிழ்து அள்ளி விழுங்க.
9

உரை
   
 
6996.வெங்கரத்தர் அயில் வாளினர் வில்லோர்
சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர்
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர்
பொங்கு அரத்த விழியோர் புடை சூழ.
10

உரை
   
 
6997.கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்
நல் இலங்கை முதலோர் நவை இல்லோர்
சொல்லில் அங்கு ஒர் சத கோடி தொடர்ந்தோர்
வில் இலங்கு படையோர் புடை விம்ம.
உரை
   
 
6998.பார் இயங்குநர் விசும்பு பரந்தோர்
வார் இயங்கு மழையின் குரல் மானும்
பேரி அம் கண் முருடு ஆகுளி பெட்கும்
தூரியம் கடலின் நின்று துவைப்ப.
உரை
   
 
6999.நஞ்சும் அஞ்சும் விழி நாகியர் நாணி
வஞ்சி அஞ்சும் இடை விஞ்சையர் வானத்து
அம்சொல் இன்சுவை அரம்பையரோடும்
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட.
13

உரை
   
 
7000.நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக்
கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர்
மஞ்சு உகக் குமுறு சொல்லினர் வல்வாய்க்
கிஞ்சுகத்தர் கிரி ஒத்தனர் சுற்ற.
14

உரை
   
 
7001.கூய் உரைப்ப குலமால் வரையேனும்
சாய் உரைப்ப அரியவாய தடந்தோள்
வாய் உரைத்த கலவைக் களி வாசம்
வேய் உரைப்பது என வந்து விளம்ப.
15

உரை
   
 
7002.வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும்
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லாக்
காத்திரத்தர் மனை காவல் விரும்பும்
சூத்திரத்தர் பதினாயிரர் சுற்ற.
16

உரை
   
 
இராவணன் இராமனைக் காணுதல்

7003.தோரணத்த மணி வாயில் மிசை சூல்
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்
ஆரணத்தை அரியை மறை தேடும்
காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான்.
உரை
   
 
இராவணன் கோபங் கொள்ளுதலும்
தீநிமித்தம் தோன்றுதலும்

7004.மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்
இடித்த வன்திசை; எரிந்தது நெஞ்சம்;
துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்.
உரை
   
 
இராமனைக்கண்ட இராவணன் வெகுளுதல்

7005.ஆக ராகவனை அவ் வழி கண்டான்;
மாக ராக நிறை வாள் ஒளியோனை
ஏக ராசியினின் எய்த எதிர்க்கும்
வேக ராகு என வெம்பி வெகுண்டான்.
19

உரை
   
 
இராவணன் வினாவும், சாரனது விடையும்
(7006-7020)

7006.‘ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
மேனியே உரை செய்கின்றது; வென்றிச்
சேனை வீரரையும் தரெிக்(க) ‘என்று
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும்.
20

உரை
   
 
7007.‘இங்கு இவன் “படை இலங்கையர் மன்னன்
தங்கை “ என்னலும் முதிர்ந்த சலத்தால்
அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான்.
21

உரை
   
 
7008.‘அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிறக் கருங் கடலுள் நேமியின் நின்று
துறக்கம் எய்தியவரும் துறவாத
உறக்கம் என்பதனை ஓட முனிந்தான்.
22

உரை
   
 
7009.‘கை அவன் தொட அமைந்த கரத்தான்
ஐய! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச்
செய்த வன்செருவினில் திகழ்கின்றான்
வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான்.
23

உரை
   
 
7010.‘தந்தை மற்றை அவன் சார்வு இல வலத்தோன்;’
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண
மந்தரத்தினொடும் வாசுகியோடும்
சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான்.
24

உரை
   
 
7011.‘நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு
தொடர்ந்தவன்; உலகு சுற்றும் எயிற்றின்
இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே.
25

உரை
   
 
7012.‘நீலன் நின்றவன் நெருப்பின் மகன்; திண்
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும்
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான்
காலன் என்பர் இவனைக் கருதாதார்.
26

உரை
   
 
7013.‘வேறாக நின்றான், நளன் என்னும்
    விலங்கல் அன்னான்;
ஏறா வருணன் வழி தந்திலன்
    என்று இராமன்
சீறாத உள்ளத்து எழுசீற்றம்
    உகுத்த செந்தீ
ஆறாத முன்னம், அகன் வேலையை
    ஆறு செய்தான்.
27

உரை
   
 
7014.முக் காலமும் மொய்ம் மதியால்
    முறையின் உணர்வான்,
புக்கு ஆலம் எழப் புணரிப்
    புலவோர் கலக்கும்
அக்காலம் உள்ளான், கரடிக்கு
    அரசு ஆகி நின்றான்,
இக்காலம் நின்றும் உலகு ஏழும்
    எடுக்க வல்லான்.
28

உரை
   
 
7015.‘சேனாபதிதன் அயலே,
    இருள் செய்த குன்றின்
ஆனா மருங்கே, இரண்டு
    ஆடகக் குன்றின் நின்றார்,
ஏனோரில் இராமன் இலக்குவன்
    என்னும் ஈட்டார்;
வானோர்தம் மருத்துவர் மைந்தர்,
    வலிக்கண் மிக்கார்.
29

உரை
   
 
7016.‘உவன் காண் குமுதன்; குமுதாக்கனும்
    ஊங்கு அவன் காண்;
இவன் காண் கவையன்; கவயாக்கனும்
    ஈங்கு இவன் காண்;
சிவன் காண் அயன் காண் எனும் தூதனைப்
    பெற்ற செல்வன்
அவன் காண், நெடுங்கேசரி என்பவன்,
    ஆற்றல் மிக்கான்.
30

உரை
   
 
7017.‘முரபன், நகுதோளவன், மூரி
    மடங்கல் என்னக்
கரபல் நகம் அன்னவை மின் உகக்
    காந்துகின்றான்;
வர பல் நகம் தன்னையும் வேரொடு
    வேண்டின் வாங்கும்
சரபன் அவன்; இவன் சதவலி
    ஆய தக்கோன்.
31

உரை
   
 
7018.‘மூன்று கண் இலன் ஆயினும்
    மூன்று எயில் எரித்தோன்
போன்று நின்றவன் பனசன்;
    இப் போர்க்கு எலாம் தானே
ஏன்று நின்றவன் இடபன்;
    மற்று இவன் தனக்கு எதிரே
தோன்றுகின்றவன் சுசேடணன்,
    அறிவொடு தொடர்ந்தோன்.
32

உரை
   
 
7019.‘வெதிர்கொள் குன்று எலாம் வேரொடும்
    வாங்கி, மேதினியை
முதுகு நொய்து எனச் செய்தவன்,
    கனலையும் முனிவோன்,
கதிரவன் மகற்கு இட மருங்கே
    நின்ற காளை
ததிமுகன், அவன், சங்கன் என்று
    உரைக்கின்ற சிங்கம்.
33

உரை
   
 
7020.‘அண்ணல்! கேள்; இதற்கு அவதியும்
    அளவும் ஒன்று உளதோ?
விண்ணின் மீனினைக் குணிப்பினும்,
    வேலையின் மீனை
எண்ணி நோக்கினும், இக்கடல்
    மணலினை எல்லாம்
கண்ணி நோக்கினும், கணக்கிலது ‘
    என்றனன் காட்டி.
34

உரை
   
 
இச்சேனைகள் நம்மை என் செய்யும் ‘என இராவணன் புன்னகை புரிதல்

7021.சினங்கொள் திண்திறல் அரக்கனும்,
    சிறுநகை செய்தான்,
‘புனம்கொள் புன்தலைக் குரங்கினைப்
    புகழுதி போலாம்;
வனங்களும் படர் வரைதொறும்
    திரிதரு மானின்
இனங்களும் பல என் செயும்,
    அரியினை? ‘என்றான்.
35

உரை