சேனையைக் காணுமாறு கோபுரத்தின்மீதுள்ள அரக்கர்களை இன்னின்னாரென்று தரெிவி ‘என்று இராமன் வீடணனைக் கேட்டல்

7022.என்னும் வேலையின், இராவணற்கு
    இளவலை, இராமன்
‘கன்னி மாமதில் நகர் நின்று
    நம் வலி காண்பான்
முன்னி, வானகம் மூடி நின்றார்களை,
    முறையால்
இன்ன நாமத்தர், இனையர் என்று
    இயம்புதி ‘என்றான்.
1

உரை
   
 
வீடணன் இராவணனைக் காட்டுதல்

7023.‘நாறு தன் குலக் கிளை எலாம்
    நரகத்து நடுவான்
சேறு செய்து வைத்தான், உம்பர்
    திலோத்தமை முதலாக்
கூறு மங்கையர் குழாத்திடைக்
    கோபுரக் குன்றத்து
ஏறி நின்றவன், புன்தொழில்
    இராவணன் ‘என்றான்.
2

உரை
   
 
இராவணன்மேல் சுக்கிரீவன் பாய்தல்

7024.கருதி மற்றொன்று கழறுதல்
    முனம் விழிக் கனல்கள்
பொருது புக்கன முந்துற,
    சூரியன் புதல்வன்
சுருதி அன்னவன், ‘சிவந்த
    நல்கனி ‘என்று சொல்ல,
பருதி மேல் பண்டு பாய்ந்தவன்
    ஆமென, பாய்ந்தான்.
3

உரை
   
 
இராவணன்மேல் பாய்ந்த சுக்கிரீவனது தோற்றம்
(7025-7026)

7025.சுதையத்து ஓங்கிய சுவேலத்தின்
    உச்சியைத் துறந்து,
சிதையத் திண்திறல் இராவணக்
    குன்றிடைச் சென்றான்,
ததையச் செங்கரம் பரப்பிய
    தன் பெருந்தாதை
உதயக் குன்றின் நின்று உகு குன்றில்
    பாய்ந்தவன் ஒத்தான்.
4

உரை
   
 
7026.பள்ளம் போய்ப் புகும் புனல் எனப்
    படியிடைப் படிந்து
தள்ளும் பொன் கிரி சலிப்புறக்
    கோபுரம் சார்ந்தான்,
வெள்ளம் போல் கண்ணி அழுதலும்,
    இராவணன் மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு
    அரசனும் ஒத்தான்.
5

உரை
   
 
அரம்பையரும் பிறரும் நிலைகெட்டு ஓடுதல்

7027.கரிய கொண்டலை, கருணை அம்
    கடலினைக் காணப்
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற
    அரம்பையர், பிறரும்,
உரிய குன்றிடை உரும் இடி
    வீழ்தலும், உலைவுற்று
இரியல் போயின மயில் பெருங்
    குலம் என இரிந்தார்.
6

உரை
   
 
சுக்கிரீவன் இராவணன் முன்னே சென்று நிற்றல்

7028.கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று
ஏல எதிர்சென்று அடல் இராவணனை எய்தி
நீலமலை முன் கயிலை நின்றது என நின்றான்;
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான்.
7

உரை
   
 
வந்த காரியம் யாது ‘என வினவிய இராவணனது மார்பிற் சுக்கிரீவன் குத்துதல்

7029.‘இத்திசையின் வந்த பொருள்
    என்? ‘என, இயம்பான்,
தத்தி எதிர் சென்று, திசை
    வென்று உயர் தடந்தோள்
பத்தினொடு பத்துடையவன்
    உடல் பதைப்ப,
குத்தினன் உரத்தில், நிமிர்
    கைத் துணை குளிப்ப.
8

உரை
   
 
இராவணன் இருபது கைகளாலும் சுக்கிரீவனைத்
தாக்குதல்

7030.திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான்
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப
தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக்கை
இருபதும் எடுத்து உரும் இடித்தனெ அடித்தான்.
9

உரை
   
 
இராவணனைச் சுக்கிரீவன் உதைத்தல்

7031.அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருந்தி
கடித்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான்.
10

உரை
   
 
சுக்கிரீவனை இராவணன் தலத்திலிட்டுத் துகைத்தல்

7032.உதைத்தவன் அடித்துணை பிடித்து ஒரு கணத்தில்
பதைத்து உலைவு உற பலதிறத்து இகல் பரப்பி
மதக் கரியை உற்று அரி நெரித்து என மயக்கி
சுதைத் தலன் இடை கடிது அடிக்கொடு துகைத்தான்.
11

உரை
   
 
சுக்கிரீவன் இராவணனை அமுக்கி அவன்
இரத்தத்தைக் குடித்தல்

7033.துகைத்தவன் உடல் பொறை
    சுறுக்கொள இறுக்கி,
தகைப்(ப)அரு வலத்தொடு
    தலத்திடை அமுக்கி,
வகைப் பிறை நிறத்து எயிறுடைப்
    பொறி வழக்கின்
குகைப் பொழி புதுக் குருதி
    கைக்கொடு குடித்தான்.
12

உரை
   
 
இராவணன் சுக்கிரீவனைப் பற்றி எடுத்துச் சுழற்றுதல்

7034.கைக் கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை
பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி
மைக் கடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில்
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரித்தான்.
13

உரை
   
 
இராவணனைச் சுக்கிரீவன் அகழியில் தள்ளுதல்

7035.திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி
பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை பிடித்து
கருத்து அழிவுறத் திரி திறத்து எயில் கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான்.
14

உரை
   
 
இராவணன் சுக்கிரீவனை அகழியில் தள்ள அவ்விருவரும் ஒருசேர அகழியில் வீழ்தல்

7036.இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்
தட்ட உயரத்தின் நிமிரும் தச முகத்தான்;
ஒட்ட உடனே அவனும் வந்து அவனை உற்றான்;
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார்.
15

உரை
   
 
சுக்கிரீவன் இராவணன் இருவரும் மற்போர் புரிதல்
(7037-7046)

7037.விழுந்தனர், சுழன்றனர்;
    வெகுண்டனர், திரிந்தார்;
அழுந்தினர், அழுந்திலர்;
    அகன்றிலர். அகன்றார்;
எழுந்தனர், எழுத்திலா;
    எதிர்ந்தனர், முதிர்ந்தார்;
ஒழிந்தனர், ஒழிந்திலர்;
    உணர்ந்திலர்கள், ஒன்றும்.
16

உரை
   
 
7038.அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடைக் கரம் வலிப்ப ஒர் சுழி பட்டு
எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான்.
17

உரை
   
 
7039.ஊறுபடு செம்புனல் உடைந்து அகழை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர அன்னார்
பாறு பொருகின்றன பரந்தவை எனப் போய்
ஏறினர் விசும்பிடை; இரிந்த உலகு எல்லாம்.
18

உரை
   
 
7040.தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்;
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான்.
19

உரை
   
 
7041.பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்
செங் கதிரவன் சிறுவனைத் திரள் புயத்தால்
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்
வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான்.
20

உரை
   
 
7042.நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார்
மாபுரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள்
மீபுர மடங்கல் என வெங் கதிரவன் சேய்
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான்.
21

உரை
   
 
7043.ஒன்று உற விழுந்த உருமைத் தொடர ஓடா
மின்தரெி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
‘தின்றிடுவன் ‘என்று எழு சினத் திறல் அரக்கன்
பின் தொடர வந்து இரு கரத் துணை பிடித்தான்.
22

உரை
   
 
7044.வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான்;
எந்திரம் எனக் கடிது எடுத்து அவன் எறிந்தான்;
கந்துகம் எனக் கடிது எழுந்து எதிர் கலந்தான்.
23

உரை
   
 
7045.படிந்தனர் பரந்தனர் பரந்தது ஒர் நெருப்பின்
கொடுஞ் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த
நெடுஞ் சுவர் பிளந்தன; நெரிந்த நிமிர் குன்றம்;
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும்.
24

உரை
   
 
7046.செறிந்து உயர் கறங்கு அனையர்
    மேனிநிலை தேரார்,
பிறிந்தனர் பொருந்தினர் எனத்
    தரெிதல் பேணார்,
எறிந்தனர்கள், எய்தினர்கள்
    இன்னர் என, முன் நின்று
அறிந்திலர் அரக்கரும்;
    அமர்த்தொழில் அயர்ந்தார்.
25

உரை
   
 
சுக்கிரீவன் வரக் காணாது இராமன் தளர்ந்து சாய்தல்

7047.இன்னது ஓர் தன்மை எய்தும்
    அளவையின், எழிலி வண்ணன்,
மன்னுயிர் அனைய காதல்
    துணைவனை வரவு காணான்,
‘உன்னிய கருமம் எல்லாம்
    உன்னொடு முடிந்த ‘என்னா,
தன் உணர்வு அழிந்து, சிந்தை
    அலம்வந்து தளர்ந்து, சாய்ந்தான்.
26

உரை
   
 
இராமன் வருந்திப் புலம்புதல் (7048-7052)

7048.‘ஒன்றிய உணர்வே ஆய ஓர்
    உயிர்த் துணைவ! உன்னை
இன்றி யான் உளனாய் நின்று, ஒன்று
    இயற்றுவது இயைவது அன்றால்;
அன்றியும் துயரத்து இட்டாய்,
    அமரரை; அரக்கர்க்கு எல்லாம்
வென்றியும் கொடுத்தாய், என்னைக்
    கெடுத்தது உன் வெகுளி ‘என்றான்.
27

உரை
   
 
7049.‘தயெ்வ வெம்படையும், தீரா
    மாயமும், வல்ல தீயோன்
கையிடைப் புக்காய்; நீ வேறு
    எவ் வணம் கடத்தி, காவல்?
வையம் ஓர் ஏழும் பெற்றால்
    வாழ்வெனே? வாராய் ஆகின்,
உய்வனே? தமியனேனுக்கு
    உயிர் தந்த உதவியோனே!
28

உரை
   
 
7050.‘ஒன்றாக நினைய ஒன்றாய்
    விளைந்தது என் கருமம்; அந்தோ!
என்றானும் யானோ வாழேன்.
    ‘நீ இலை ‘எனவும் கேளேன்;
இன்று ஆய பழியும் நிற்க,
    நெடுஞ் செருக்களத்தில் என்னைக்
கொன்றாய் நீ அன்றோ? நின்னைக்
    கொல்லுமேல் குணங்கள் தீயோன்.
29

உரை
   
 
7051.‘இறந்தனை என்ற போதும்
    இருந்து யான், அரக்கர் என்பார்
திறம்தனை உலகின் நீக்கி,
    பின் உயிர் தீர்வெனேனும்,
“புறந்தரும் பண்பின் ஆய
    உயிரொடும் பொருந்தினானை
மறந்தனன், வலியன் ‘‘ என்பார்;
    ஆதலால் அதுவும் மாட்டேன்.
30

உரை
   
 
7052.‘அழிவது செய்தாய், ஐய!
    அன்பினால் அளியத் தேனுக்கு
ஒழிவு அரும் உதவி செய்த
    உன்னை யான் ஒழிய வாழேன்;
எழுபது வெள்ளம் தன்னின்
    ஈண்டு ஒர்பேர் எஞ்சாது ஏகிச்
செழுநகர் அடைந்த போதும்,
    இத் துயர் தீர்வது உண்டோ?
31

உரை
   
 
சுக்கிரீவன் இராவணன் அவமானம் அடைய அவனது முடிமணிகளைப் பறித்துக்கொண்டு இராமனையடைதல்

7053.என்று அவன் இரங்கும் காலத்து,
    இருவரும் ஒருவர் தம்மில்
வென்றிலர் தோற்றிலாராய்
    வெஞ்சமம் விளைக்கும் வேலை,
வன்திறல் அரக்கன் மௌலி
    மணிகளை வலியின் வாங்கி,
‘பொன்றினென் ஆகின் நன்று ‘என்று,
    அவன் வெள்க, இவனும் போந்தான்.
32

உரை
   
 
சுக்கிரீவன் தான் கொணர்ந்த மணிகளை இராமபிரான் திருவடியில் வைத்து வணங்குதல்

7054.கொழு மணி முடிகள் தோறும்
    கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்வுறுகின்றான்தன்
    அடித்தலம் அதனில் சூட்டி,
தொழுது, அயல் நாணி நின்றான்;
    தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு
    ஓர் உயிர் எய்திற்று அன்றே.
33

உரை
   
 
இராமன் சுக்கிரீவனை மார்புறத் தழுவிக் கண்ணீர் சொரிதல்

7055.என்பு உறக் கிழிந்த புண்ணின்
    இழி பெருங் குருதியோடும்
புன்புலத்து அரக்கன்தன்னைத்
    தீண்டிய தீமை போக,
அன்பனை அமரப் புல்லி,
    மஞ்சனம் ஆட்டி விட்டான்,
தன்பெரு நயனம் என்னும்
    தாமரை சொரியும் நீரால்.
34

உரை
   
 
சுக்கிரீவனை நோக்கி இராமபிரான் கூறுதல் (7056-7059)

7056.‘ஈர்கின்றது அன்றே, என்றன்
    உள்ளத்தை; இங்கும் அங்கும்
பேர்கின்றது ஆவி; யாக்கை
    பெயர்கின்றது இல்லை; பின்னை,
தேர்கின்ற சிந்தை அன்றோ
    திகைத்தனை? ‘என்று, ‘தெள் நீர் ‘
சோர்கின்ற அருவிக் கண்ணான்
    துணைவனை நோக்கிச் சொல்லும் :
35

உரை
   
 
7057.‘கல்லினும் வலிய தோளாய்!
    நின்னை அக் கருணை இல்லோன்
கொல்லுதல் செய்தான் ஆகின்,
    கொடுமையால் குற்றம் பேணி,
பல்பெரும் பகழி மாரி
    வேரொடும் பறிய நூறி,
வெல்லினும், தோற்றேன் யானே
    அல்லனோ, விளிந்திலாதேன்?
36

உரை
   
 
7058.‘பெருமையும் வன்மை தானும்,
    பேர் எழில் ஆண்மை தானும்,
ஒருமையின் உணர நோக்கின்,
    பொறையினது ஊற்றம் அன்றே!
அருமையும் அடர்ந்து நின்ற
    பழியையும் அயர்த்தாய் போல,
இருமையும் கெடுத்தாய் அன்றே?
    என் நினைந்து என் செய்தாய் நீ?
37

உரை
   
 
7059.‘இந் நிலை விரைவின் எய்தாது,
    இத்துணை தாழ்த்தி ஆயின்,
நல் நுதல் சீதையால் என்?
    ஞாலத்தால் பயன் என்? நம்பி!
உன்னை யான் தொடர்வென்; என்னைத்
    தொடரும் இவ் உலகம்; என்றால்,
பின்னை என், இதனைக் கொண்டு?
    விளையாடி, பிழைப்ப செய்தாய்! ‘
38

உரை
   
 
சுக்கிரீவன் தான் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டு வாராததன் செயலறவு தோன்ற வருந்திக் கூறுதல் (7060-7063)

7060.‘காட்டிலே கழுகின் வேந்தன்
    செய்தன காட்ட மாட்டேன்;
நாட்டிலே குகனார் செய்த
    நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு,
    கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும்
    கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன். ‘
39

உரை
   
 
7061.‘வன்பகை நிற்க, எங்கள்
    வானரத் தொழிலுக்கு ஏற்ற
புன்பகை காட்டும் யானோ
    புகழ்ப் பகைக்கு ஒருவன் போலாம்?
என்பகை தீர்த்து என் ஆவி
    அரசொடும் எனக்குத் தந்த
உன்பகை உனக்குத் தந்தேன்;
    உயிர் சுமந்து உழலா நின்றேன். ‘
40

உரை
   
 
7062.‘செம்புக்கும் சிவந்த செங்கண்
    திசை நிலைக் களிற்றின் சீற்றக்
கொம்புக்கும் குறைந்த அன்றே,
    என்னுடைக் குரக்குப் புன்தோள்?
“அம்புக்கு முன்பு சென்று உன்
    அரும்பகை அறுப்பன் “ என்று
வெம்பு உற்ற மனமும், யானும்,
    தீது இன்றி, மீள வந்தேன்.
41

உரை
   
 
7063.நூல்வலி காட்டும் சிந்தை
    நுன் பெருந்தூதன், வன்போர்
வேல் வலி காட்டுவார்க்கும்,
    வில்வலி காட்டுவார்க்கும்,
வால்வலி காட்டிப் போந்த
    வளநகர் புக்கு, மற்று என்
கால்வலி காட்டிப் போந்தேன்;
    கைவலிக்கு அவதி உண்டோ?
42

உரை
   
 
சுக்கிரீவனது வெற்றிச் செயலை வீடணன் வியந்துரைத்தல் (7064-7068)

7064.இன்னன பலவும் பன்னி,
    இறைஞ்சிய முடியன் நாணி,
மன்னவர் மன்னன் முன்பு,
    வானர மன்னன் நிற்ப,
அன்னவன் தன்னை நோக்கி,
    அழகனை நோக்கி, ஆழி
மின் என விளங்கும் பைம்பூண்
    வீடணன் விளம்பலுற்றான்.
43

உரை
   
 
7065.‘வாங்கிய மணிகள், அன்னான்
    தலைமிசை மௌலி மேலே
ஓங்கிய அல்லவோ? மற்று,
    இனி அப்பால் உயர்ந்தது உண்டோ?
தீங்கினன் சிரத்தின் மேலும்,
    உயிரினும், சீரிது அம்மா!
வீங்கிய புகழை எல்லாம்
    வேரொடும் வாங்கி விட்டாய்!
44

உரை
   
 
7066.‘பார் அகம் சுமந்த பாம்பின்
    பணாமணி பறிக்க வேண்டின்,
வார் கழல் காலினாலே
    கல்ல வல்லவனை முன்னா,
தார்கெழு மௌலி பத்தின்
    தனிமணி வலிதின் தந்த
வீரதை, விடை வலோற்கும்
    முடியுமோ? வேறும் உண்டோ?
45

உரை
   
 
7067.‘கரு மணி கண்டத்தான்தன்
    சென்னியில் கறை வெண் திங்கள்,
பரு மணிவண்ணன் மார்பின்
    செம்மணி, பறித்திட்டாலும்
தரு மணி இமைக்கும் தோளாய்!
    தசமுகன் முடியில் தைத்த
திருமணி பறித்துத் தந்த
    வென்றியே சீரிது அன்றோ?
46

உரை
   
 
7068.‘தொடி மணி இமைக்கும் தோளாய்!
    சொல் இனி வேறும் உண்டோ?
வடி மணி வயிர ஒள் வாள்
    சிவன்வயின் வாங்கிக் கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ?
    இவன் இனி முடிக்கும் வென்றிக்கு
அடி மணி இட்டாய் அன்றே?
    அரிகுலத்து அரச! ‘என்றான்.
47

உரை
   
 
இராமனும் சுக்கிரீவனது வெற்றியை வியந்து பாராட்டுதல்

7069.‘வென்றி அன்று என்றும், வென்றி
    வீரர்க்கு விளம்பத் தக்க
நன்றி அன்று என்றும் அன்று;
    நால் நிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகில், ஈது ஆர்
    இயற்றுவார் பரிவின்? ‘என்னா,
‘இன்று இது வென்றி ‘என்று என்று
    இராமனும் இரங்கிச் சொன்னான்.
48

உரை
   
 
கதிரவன் மறைதல்

7070.‘தன் தனிப் புதல்வன், வென்றித்
    தசமுகன் முடியின் தந்த,
மின் தளிர்த்து அனைய பல்மா
    மணியினை வெளியில் கண்டான்;
‘ஒன்று ஒழித்து ஒன்று ஆம் ‘என்று, அவ்
    அரக்கனுக்கு ஒளிப்பான் போல,
வன்தனிக் குன்றுக்கு அப்பால்,
    இரவியும் மறையப் போனான்.
49

உரை
   
 
இராமன் தன் இருப்பிடத்தை அடைதல்

7071.கங்குல் வந்து இறுத்த காலை,
    கைவிளக்கு எடுப்ப, காவல்
வெங் கழலரக்கன் மௌலி
    விளக்கமே விளக்கம் செய்ய,
செங்கதிர் மைந்தன் செய்த
    வென்றியை நிறையத் தேக்கிப்
பொங்கிய தோளினானும்
    இழிந்து போய், இருக்கை புக்கான்.
50

உரை
   
 
தாழ்வுற்ற இராவணன் கோபுரத்தை
விட்டிறங்கிச் செல்லுதல்

7072.என்றானும் இனைய தன்மை
    எய்தாத இலங்கை வேந்தன்,
‘நின்றார்கள் தேவர் கண்டார் ‘
    என்பது ஓர் நாணம் நீள,
அன்று ஆயமகளிர் நோக்கம்
    ஆடவர் நோக்கம் ஆக,
பொன்றாது பொன்றினான்; தன்
    புகழ் என இழிந்து, போனான்.
51

உரை