மானத்தால் வருந்திய இராவணன் அரண்மனையில் புகுந்து படுத்தல்

7073.மானத்தால் ஊன்றப் பட்ட
    மருமத்தான், வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற,
    வான் தொடும் கோயில் புக்கான்;
பானத்தான் அல்லன்; தயெ்வப்
    பாடலான் அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென்
    சயனத்தான்; உரையும் தாரான்.
1

உரை
   
 
இராவணனது வெய்துயிர்க்கும் தோற்றம்

7074.வை எயிற்றாலும், நேரா
    மணி இழந்து இரங்கலாலும்,
பை உயிர்த்து அயரும் பேழ் வாய்ப்
    பல்தலைப் பரப்பினாலும்
மெய்யனை, திரையின் வேலை
    மென்மலர்ப் பள்ளி ஆன
ஐயனை, பிரிந்து வைகும்
    அநந்தனே அரக்கர் வேந்தன்.
2

உரை
   
 
சார்த்தூலன் என்னும் ஒற்றனது வரவினை வாயில் காவலன் இராவணனுக்குத் தரெிவித்தல்

7075.தாயினும் பழகினார்க்கும்
    தன் நிலை தரெிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன்
    வருதலும், வாயில் காப்பான்,
“‘சேயவர் சேனை நண்ணி,
    செய் திறம் தரெித்தி நீ “ என்று
ஏயவன் எய்தினான் ‘என்று
    அரசனை இறைஞ்சிச் சொன்னான்.
3

உரை
   
 
இராவணனது கட்டளையால் உள்ளே சென்ற சார்த்தூலன் பகைவர் திறத்துத்தானறிந்தவற்றை அவனுக்கு எடுத்துரைத்தல்(7076-7079)

7076.‘அழை ‘என, எய்தி, பாதம்
    வணங்கிய அறிஞன்தன்னை,
‘பிழை அற அறிந்த எல்லாம்
    உரைத்தி ‘என்று அரக்கன் பேச,
முழை உறு சீயம் அன்னான்
    முகத்தினால் அகத்தை நோக்கி,
குழையுறு மெய்யன், பைய,
    வரன்முறை கூறலுற்றான்.
4

உரை
   
 
7077.‘வீரிய! வீரன் ஏவ,
    பதினெழு வெள்ளத் தோடும்,
மாருதி, மேலை வாயில்
    உழிஞைமேல் வருவதானான்;
ஆரியன், அமைந்த வெள்ளம்
    அத்தனையோடும், நெற்றிச்
சூரியன் மைந்தன் தன்னைப்
    பிரியலன் நிற்கச் சொன்னான்.
5

உரை
   
 
7078.‘அன்றியும், பதினேழ் வெள்ளத்து
    அரியொடும் அரசன் மைந்தன்,
தனெ் திசை வாயில் செய்யும்
    செரு எலாம் செய்வதானான்;
ஒன்று பத்து ஏழு வெள்ளம்
    கவியொடும் துணைவரோடும்
நின்றனன், நீலன் என்பான்,
    குணதிசை வாயில் நெற்றி.
6

உரை
   
 
7079.‘இம்பரின் இயைந்த காயும்
    கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்
வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம்
    உணவு தந்து உழலவிட்டான்;
உம்பியை, வாயில் தோறும்
    நிலை தரெிந்து உணரச் சொன்னான்;
தம்பியும் தானும் நிற்பதாயினான்;
    சமைவு இது ‘என்றான்.
7

உரை
   
 
இராவணன் நாளையே பகையினை ஒழிப்பேன் என வெகுண்டுரைத்தல்

7080.சார்த்தூலன் இதனைச் சொல்ல,
    தழல் சொரி தறுகணானும்
‘பார்த்து ஊழி வடவை பொங்க,
    படுவது படுமா பார்த்தி;
போர்த் தூளி துடைப்பென், நாளை
    அவர் உடல் பொறையின் நின்றும்
தேர்த்து ஊறு குருதிதன்னால் ‘
    என்றனன், எயிறு தின்னா.
8

உரை
   
 
இராவணன் மலரணையை விட்டெழுந்து மந்திராலோசனை மண்டபத்தில் அமர்தல்

7081.மா அணை நீலக் குன்றத்து
    இளவெயில் வளர்ந்தது என்ன,
தூ அணை குருதிச் செக்கர்ச்
    சுவடு உறப் பொலிந்த தோளான்,
ஏ அணை வரிவில் காமன்
    கணைபட எரியா நின்ற
பூ அணை ஆற, வேறு ஓர்
    புனை மணி இருக்கை புக்கான்
9

உரை
   
 
இராவணன் அமைச்சர்களை அழைத்தல்

7082.செய்வன முறையின் எண்ணி,
    திறத்திறம் உணர்வின் தேர,
மை அறு மரபின் வந்த
    அமைச்சரை, ‘வருக ‘என்றான்;
பொய் எனப் பளிங்கின் ஆய
    இருக்கையின் புறத்தைச் சுற்றி,
ஐ இரண்டு ஆய கோடி
    பேய்க்கணம் காப்பது ஆக்கி.
10

உரை
   
 
அமைச்சர்களை நோக்கி இனிச் செய்யத்தக்கது யாது என வினவுதல்

7083.அளந்து அறிவரியர் ஆய
    அமைச்சரை அடங்க நோக்கி,
‘வளைந்தது குரங்கின் சேனை,
    வாயில்கள் தோறும் வந்து;
விளைந்தது பெரும்போர் என்று
    விட்டது; விடாது, நம்மை
உளைந்தனர்; என்ன எண்ணி?
    என் செயற்கு உரிய? ‘என்றான்.
11

உரை
   
 
நிகும்பன் கூறுதல் (7084-7085)

7084.‘எழுபது வெள்ளத்து உற்ற
    குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத்
    தக்கது சமைதி போலாம்;
அழுவ நீர் வேலை அன்னது
    ஆயிர வெள்ளம் அன்றே?
உழிஞையைத் துடைக்க, நொச்சி
    உச்சியில் கொண்டது உன் ஊர். ‘
12

உரை
   
 
7085.‘எழு, மழு, தண்டு, வேல், வாள்,
    இலை நெடுஞ் சூலம், என்று இம்
முழுமுதற் படைகள் ஏந்தி,
    இராக்கதர் முனைந்த போது,
தொழுது தம் படைகள் முன் இட்டு,
    ஓடுவார் சுரர்கள் என்றால்,
விழுமிது, குரங்கு வந்து
    வெறும் கையால் கொள்ளும் வென்றி.
13

உரை
   
 
மாலி கூறுதல் (7086-7088)

7086.‘ஈது இவண் நிகழ்ச்சி ‘என்னா,
    எரி விழித்து, இடியின் நக்கு,
பூதலத்து அடித்த கையன்,
    நிகும்பன் என்று ஒருவன் பொங்க,
‘வேதனைக் காமம் அந்தோ
    வேரொடும் கெடுத்தது ‘என்னா,
மாதுலத் தலைவன் பின்னும்
    அன்பின் ஓர் மாற்றம் சொன்னான்.
14

உரை
   
 
7087.புக்கு எரிமடுத்து, இவ் ஊரைப்
    பொடி செய்து போயினாற்குச்
சக்கரம் உண்டோ, கையில்?
    தசமுகன் தலைகள் ஆன
இக் கிரி பத்தின் மௌலி
    இனமணி இடந்து கொண்ட
சுக்கிரிவற்கும் உண்டோ,
    சூலமும் வாளும் வேலும்?
15

உரை
   
 
7088.‘தொடைக் கலந்து இராமன் வாளி
    தோன்றுதல் முன்னம், தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும்
    முலையினாள் தன்னை ஈந்து,
படைக்கலம் உடைய நாம்,
    அப் படை இலாப் படையை, ஈண்ட
அடைக்கலம் புகுவது அல்லால்,
    இனிப் புகும் அரணும் உண்டோ?
16

உரை
   
 
இராவணன் மாலியைக் கடிந்துரைக்க, அவன் ஒன்றும் பேசாது அடங்குதல்

7089.என்புழி மாலிதன்னை
    எரி எழ நோக்கி, ‘என்பால்
வன்பழி தருதி போலாம்;
    வரன்முறை அறியா வார்த்தை,
அன்பு அழி சிந்தை தன்னால்
    அடாதன அறையல் ‘என்றான்,
பின்பழி எய்த நின்றான்;
    அவன் பின்னைப் பேச்சு விட்டான்.
17

உரை
   
 
இராவணன் தன் சேனைகளை அணிவகுத்து நாற்றிசை வாயில்களையும் காத்து நிற்கப் பணித்தல் (7090-7094)

7090.‘காட்டிய கால கேயர்
    கொழு நிணக் கற்றை காலத்
தீட்டிய படைக்கை வீரச்
    சேனையின் தலைவ! தெள்ளி
ஈட்டிய அரக்கர் தானை
    இருநூறு வெள்ளம் கொண்டு,
கீழ்த்திசை வாயில் நிற்றி,
    நின் பெரும் கிளையினோடும். ‘
18

உரை
   
 
7091.‘காலன் தன் களிப்புத் தீர்த்த
    மகோதரக் காளையே! போய்,
மால் ஒன்றும் மனத்து
    வீர மாபெரும் பக்கனோடுங்
கூலம் கொள் குரங்கை எல்லாம்
    கொல்லுதி வெள்ளம் ஆன
நால் ஐம்பதோடும் சென்று
    நமன் திசை வாயில் நண்ணி.
19

உரை
   
 
7092.‘ஏற்றம் என், சொல்லி? வல்வில்
    இந்திரன் பகைஞ! அந்நாள்
காற்றினுக்கு அரசன் மைந்தன்
    கடுமை நீ கண்டது அன்றே?
நூற்று இரண்டு ஆய வெள்ள
    நுன் பெரும் படைஞர் சுற்ற,
மேல் திசை வாயில் சேர்தி
    விடிவதன் முன்னம் வீர!
20

உரை
   
 
7093.‘இந் நெடுங் காலம் எல்லாம்
    இமையவர்க்கு இறுதி கண்டாய்;
புன் நெடுங் குரங்கின் சேறல்
    புல்லிது; புகழும் அன்றால்;
அந் நெடு மூலத் தானை
    அதனொடும் அமைச்சரோடும்
தொல் நெடு, நகரி காக்க
    விருபாக்க! ‘என்னச் சொன்னான்.
21

உரை
   
 
7094.‘கடகரி, புரவி, ஆள், தேர்
    கமலத்தோன் உலகுக்கு இப்பால்
புடை உள பொருது கொண்டு
    போர் பெறாப் பொங்குகின்ற
இடை இடை மிடைந்த சேனை
    இருநூறு வெள்ளம் கொண்டு,
வடதிசை வாயில் காப்பேன்
    யான் ‘என வகுத்து விட்டான்.
22

உரை
   
 
கங்குல் நீங்கிப் பொழுது புலர்தல்

7095.கலங்கிய கங்குல் ஆகி
    நீங்கிய கற்பம், காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ,
    நான்மறை முனிவர்க்கேயோ,
பொலம் கெழு சீதைக்கேயோ,
    பொருவலி இராமற்கேயோ,
இலங்கையர் வேந்தற்கேயோ,
    எல்லார்க்கும் செய்தது இன்பம்.
23

உரை
   
 
கதிரவன் தோற்றம்

7096.அளித்தகவு இல்லா, ஆற்றல்
    அமைந்தவன் கொடுமை அஞ்சி,
வெளிப்படல் அரிது என்று உன்னி,
    வேதனை உழக்கும் வேலை,
களித்தவர் களிப்பு நீக்கி,
    காப்பவர் தம்மைக் கண்ணுற்று
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன,
    கதிரவன் உதயம் செய்தான்.
24

உரை
   
 
வானர சேனைகள் இலங்கையின் வாயில்களை வளைத்துக் கொள்ளுதல்

7097.உளைப்புறும் ஓத வேலை
    ஓங்கு அலை ஒடுங்கத் தூர்ப்ப,
அளப்ப அரும் தூளி சுண்ணம்,
    ஆசைகள் அலைப்ப, பூசல்
இளைப்ப அருந் தலைவர், முன்னம்
    ஏவலின், எயிலை முற்றும்
வளைத்தனர்; விடிய, தத்தம்
    வாயில்கள் தோறும் வந்து.
25

உரை
   
 
வானர சேனைகள் ஆரவாரிப்ப சுக்கிரீவனும் இலக்குவனும் முன்செல்ல இராமன் எழுந்து செல்லுதல்

7098.தந்திரம் இலங்கை மூதூர்
    மதிலினைத் தழுவித் தாவி,
அந்தரக் குலம் மீன் சிந்த,
    அண்டமும் கிழிய ஆர்ப்ப,
செந்தனிச் சுடரோன் சேயும்
    தம்பியும் முன்பு செல்ல,
இந்திரன் தொழுது வாழ்த்த;
    இராமனும் எழுந்து சென்றான்.
26

உரை
   
 
வானர சேனைகளால் வளைக்கப்பட்ட இலங்கையின் தோற்றம் (7099-7100)

7099.நூற் கடல் புலவராலும்
    நுனிப்ப அரும் வலத்தது ஆய
வேல் கடல் தானை ஆன
    விரிகடல் விழுங்கிற்றேனும்
கார்க் கடல் புறத்தது ஆக,
    கவிக்கடல் வளைந்த காட்சி,
பாற்கடல் அழுவத்து உள்ளது
    ஒத்தது, அப் பதகன் மூதூர்.
27

உரை
   
 
7100.அலகு இலா அரக்கன் சேனை
    அகப்பட, அரியின் தானை,
வலைகொலாம் என்ன, சுற்றி
    வளைத்த மாநகரம் மன்னோ
கலைகுலாம் பரவை ஏழும்
    கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி,
    ஒதுங்கினவேயும் ஒக்கும்.
28

உரை