இராவணன் இலங்கை நோக்கி மீளுதல் (7399-7400)

7399.வாரணம் பொருத மார்பும்,
    வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
    நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
    சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
    வெறும் கையோடு இலங்கை புக்கான்
1

உரை
   
 
7400.கிடந்த போர் வலி யார்மாட்டே?
    கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய், உலகம் மூன்றும்
    காக்கின்ற காவலாளன்,
தொடர்ந்து போம் பழியினோடும்,
    தூக்கிய கரங்கேளாடும்,
நடந்து போய், நகரம் புக்கான்;
    அருக்கனும் நாகம் சேர்ந்தான்.
2

உரை
   
 
இராவணனது நாண நிலை

7401.மாதிரம் எவையும் நோக்கான்,
    வளநகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான்,
    கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர்
    தனித்தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கை
    தன்னையே நோக்கிப் புக்கான்.
3

உரை
   
 
அரண்மனையை அடைந்த இராவணன் தன்மை

7402.நாள் ஒத்த நளினம் அன்ன
    முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை
    இராகவன் வாளி ஒத்த;
கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட
    கொற்றவற்கு, அற்றைநாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை
    நோக்கு அங்குத் தொடர்கிலாமை.
4

உரை
   
 
தனிமையாக அரண்மனையை யடைந்த இராவணன் தூதரை அழைத்து வருமாறு கஞ்சுகியை ஏவுதல் (7403-7404)

7403.மந்திரச் சுற்றத்தாரும்,
    வாணுதல் சுற்றத்தாரும்
தந்திரச் சுற்றத்தாரும்,
    தன்கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப,
    யாவரும் இன்றி, தானே
சிந்துரக் களிறு கூடம்
    புக்கென, கோயில் சேர்ந்தான்.
5

உரை
   
 
7404.ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து
    இருந்து, தன் வருத்தம் ஆறி,
நீண்டு உயர் நினைப்பன் ஆகி,
    கஞ்சுகி அயல் நின்றானை,
‘ஈண்டு நம் தூதர்தம்மை
    இவ்வழித் தருதி ‘என்றான்
பூண்டது ஓர் பணியன், வல்லை
    நால்வரைக் கொண்டு புக்கான்.
6

உரை
   
 
வந்த தூதரிடம் எட்டுத் திக்கிலுமுள்ள அரக்கர் சேனையைக் கொணருமாறு பணித்தல் (7405-7406)

7405.மனகதி, வாயுவேகன்,
    மருத்தன், மாமேகன், என்று இவ்
வினை அறிதொழிலர் முன்னா,
    வாயிலர் விரவினாரை,
‘நினைவதன் முன்னம் நீர் போய்
    நெடுந்திசை எட்டும் நீந்தி,
கனைகழல் அரக்கர் தானை
    கொணருதிர், கடிதின் ‘என்றான்.
7

உரை
   
 
7406.‘ஏழ் பெருங்கடலும், சூழ்ந்த
    ஏழ் பெருந்தீவும், எண் இல்
பாழி அம்பொருப்பும், கீழ்பால்
    அடுத்த பாதாளத் துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும்,
    அரக்கர் ஆனவரை எல்லாம்
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான்;
    அவர் அது தலைமேற் கொண்டார்.
8

உரை
   
 
இராவணன் மலர்ப் படுக்கையில் சேர்ந்து வருந்தியிருத்தல் (7407-7409)

7407.மூவகை உலகு உேளாரும் முறையில்
    நின்று ஏவல் செய்வார்,
பாவகம் இன்னது என்று
    தரெிகிலர், பதைத்து விம்ம,
தூ அகலாத வை வாய்
    எஃகு உறத் தொளைக்கை யானை
சேவகம் அமைந்தது என்னச்
    செறிமலர் அமளி சேர்ந்தான்.
9

உரை
   
 
7408.பண் நிறை பவளச் செவ்வாய்ப்
    பைந்தொடிச் சீதை என்னும்
பெண் இறைகொண்ட நெஞ்சின்
    நாண் நிறைகொண்ட பின்னர்,
கண் இறைகோடல் செய்யான்,
    கையறு கவலை சுற்ற,
உள் நிறை மானம் தன்னை
    உமிழ்ந்து, எரி உயிர்ப்பது ஆனான
10

உரை
   
 
7409.‘வான் நகும்; மண்ணும் எல்லாம்
    நகும்; ‘ நெடு வயிரத் தோளான்
‘நான் நகு பகைஞர் எல்லாம்
    நகுவர் ‘என்று, அதற்கு நாணான்;
‘வேல் நகு நெடுங்கண்
    செவ்வாய் மெல்லியல், மிதிலை வந்த
சானகி நகுவள்‘ என்றே
    நாணத்தால் சாம்புகின்றான்
11

உரை
   
 
மாலியவான் வந்து ‘உற்றது என்? ‘என இராவணனை வினவுதல் (7410-7411)

7410.‘ஆங்கு, அவன்தன் மூதாதை
    ஆகிய, மூப்பின யாக்கை
வாங்கிய வரிவில் அன்ன,
    மாலியவான் என்று ஓதும்
பூங்கழல் அரக்கன் வந்து
    பொலம் கழல் இலங்கை வேந்தைத்
தாங்கிய அமளி மாட்டு,
    ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான்.
12

உரை
   
 
7411.இருந்தவன், இலங்கை வேந்தன்
    இயற்கையை எய்த நோக்கி,
‘பொருந்த வந்துற்ற போரில்
    தோற்றனன் போலும் ‘என்னா,
‘வருந்தினை மனமும்; தோளும்
    வாடினை; நாளும் வாடாப்
பெருந்தவம் உடைய ஐய!
    என், உற்ற பெற்றி? ‘என்றான்.
13

உரை
   
 
இராவணன் மாலியவானிடம் நிகழ்ந்தவற்றை உரைத்தல் (7412-7429)

7412.கவை உறு நெஞ்சன், காந்திக்
    கனல்கின்ற கண்ணன், பத்துச்
சிவையின் வாய் என்னச்
    செந்தீ உயிர்ப்பு உறச் சிவந்த மூக்கன்,
நவை அறு பாகை அன்றி
    அமுதினை நக்கினாலும்
சுவை அறப் புலர்ந்த நாவான்,
    இனையன சொல்லல் உற்றான்
14

உரை
   
 
7413.‘சங்கம் வந்து உற்ற கொற்றத்
    தாபதர் தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக,
    அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்ய
    களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்து உற்றது அன்றி,
    பழியும் வந்து உற்றது என்றான்.
15

உரை
   
 
7414.‘முளை அமை திங்கள் சூடும்
    முக்கணான் முதல்வன் ஆக,
கிளை அமை புவனம் மூன்றும்
    வந்து உடன் கிடைத்தவேனும்,
வளை அமை வரிவில் வாளி
    மெய் உற வழங்கும் ஆயின்,
இளையவன் தனக்கும் ஆற்றாது,
    என் பெருஞ்சேனை நம்ப!
16

உரை
   
 
7415.‘எறித்த போர் அரக்கர் ஆவி
    எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப்
    பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அந்நாள் அந்தக்
    கூனி கூன்போக உண்டை
தறெித்த போது ஒத்தது அன்றி,
    சினம் உண்மை தரெிந்தது இல்லை.
17

உரை
   
 
7416.‘மலை உறப் பெரியர் ஆய
    வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம்
    நூற்று இரண்டு எனினும், நேரே
குலை உறக் குளித்த வாளி,
    குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால்,
    உடல்களில் தங்கிற்று உண்டோ?
18

உரை
   
 
7417.‘போய பின், அவன் கைவாளி,
    உலகு எலாம் புகுவது அல்லால்,
ஓயும் என்று உரைக்கல் ஆமோ,
    ஊழி சென்றாலும்? ஊழித்
தீயையும் தீய்க்கும்; செல்லும்
    திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
வாயையும் தீய்க்கும்; முன்னின்,
    மனத்தையும் தீய்க்கும் மன்னோ.
19

உரை
   
 
7418.‘மேருவைப் பிளக்கும் என்றால்,
    விண் கடந்து ஏகும் என்றால்,
பாரினை உருவும் என்றால்,
    கடல்களைப் பருகும் என்றால்,
ஆருமே அவற்றின் ஆற்றல்;
    ஆற்றுமேல் அனந்தகோடி
மேருவும் விண்ணும் மண்ணும்
    கடல்களும், வேண்டும் அன்றே.
20

உரை
   
 
7419.‘வரிசிலை நாணில் கோத்து
    வாங்குதல் விடுதல் ஒன்றும்
தரெிகிலர், அமரரேயும்; ஆர்
    அவன் செய்கை தேர்வார்?
“பொருசினத்து அரக்கர் ஆவி,
    போகிய போக “ என்று
கருதவே உலகம் எங்கும்
    சரங்களாய்க் காட்டும் அன்றே.
21

உரை
   
 
7420.‘நல் இயல் கவிஞர் நாவில்
    பொருள் குறித்து அமைந்த ஞானச்
சொல் என, செய்யுள் கொண்ட
    தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் செல்வம் தீரா
    இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே
    காகுத்தன் பகழி மாதோ.
22

உரை
   
 
7421.‘இந்திரன் குலிச வேலும்,
    ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன்
    வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா!
    தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார்
    யார் அவை நோற்ககிற்பார்?
23

உரை
   
 
7422.‘பேய் இரும் கணங்கேளாடு
    சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும்,
    இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும்
    வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும், அன்னான்
    விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா
24

உரை
   
 
7423.‘சீர்த்த வீரியராய் உள்ளார்,
    செங்கண் மால் எனினும், யான் அக்
கார்த்த வீரியனை நேர்வார்
    உளர் எனக் கருதல் ஆற்றேன்;
பார்த்தபோது அவனும், மற்று
    அத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்;
    ஆர் அவற்கு ஆற்றகிற்பார்?
25

உரை
   
 
7424.‘முப்புரம் முருங்கச் சுட்ட
    மூரி வெஞ்சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐயா!
    அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது
    ஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான்
    தனு உமிழ் சரங்கள் தப்பா.
26

உரை
   
 
7425.‘உற்பத்தி அயனே ஒக்கும்;
    ஓடும் போது அரியே ஒக்கும்;
கற்பத்தில் அரனே ஒக்கும்,
    பகைஞரைக் கலந்த காலை;
சிற்பத்தின் நம்மால் பேசச்
    சிறியவோ? என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால்,
    பிறிது ஒரு சான்றும் உண்டோ?
27

உரை
   
 
7426.‘குடக்கதோ? குணக்கதேயோ?
    கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ?
    விசும்பதோ? எங்கும் தானோ?
வடக்கதோ? தறெ்கதோ? என்று
    உணர்ந்திலென் மனிதன் வல்வில்
இடத்ததோ? வலத்ததோ? என்று
    உணர்ந்திலென், யானும் இன்னும்
28

உரை
   
 
7427.‘ஏற்றம் ஒன்று இல்லை என்பது
    ஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான்
    ஆற்றுமே அமரின் ஆற்றல்!
காற்றையே மேற்கொண்டானோ?
    கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ?
    குரங்கின்மேல் கொண்டு நின்றான்.
29

உரை
   
 
7428.‘போய் இனித்தரெிவது என்னே?
    பொறையினால் உலகம் போலும்
வேய் எனத்தகைய தோளி
    இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச்
    சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே
    காமனும் நாமும் எல்லாம்.
30

உரை
   
 
7429.‘வாசவன், மாயன், மற்றை
    மலர் உேளான், மழுவாள் அங்கை
ஈசன், என்று இனைய தன்மை
    இளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்றபோதும்,
    நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;
பூசல் வண்டு உறையும் தாராய்!
    இது இங்குப் புகுந்தது ‘என்றான்
31

உரை
   
 
மாலியவானின் அறிவுரை (7430-7431)

7430.‘முன் உரைத்தேனை வாளா
    முனிந்தனை; முனியா உம்பி
இன் உரைப் பொருளும் கேளாய்;
    ஏது உண்டு எனினும் ஓராய்;
நின் உரைக்கு உரை வேறு உண்டோ?
    நெருப்பு உரைத்தாலும், நீண்ட
மின் உரைத்தாலும், ஒவ்வா
    விளங்கு ஒளி அலங்கல் வேலோய்
32

உரை
   
 
7431.‘உளைவன எனினும், மெய்ம்மை
    உற்றவர், முற்றும் ஓர்ந்து
விளைவன சொன்ன போதும்
    கொள்கிலை; விடுதி கண்டாய்;
கிளைதரு சுற்றம், வெற்றி,
    கேண்மை, நம் கல்வி, செல்வம்,
களைவு அருந்தானையோடும்
    கழிவது காண்டி ‘என்றான்.
33

உரை
   
 
அப்போது மகோதரன் வந்து இராவணனுக்குச் சொல்லிய உறுதிமொழிகள்

7432.ஆயவன் உரைத்தலோடும்
    அப்புறத்து இருந்தான், ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல
    மகோதரன், கடிதின் வந்து,
தீ எழ நோக்கி, ‘என் இச்
    சிறுமை நீ செப்பிற்று? ‘என்னா,
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத
    பேர் உறுதி சொன்னான்.
34

உரை
   
 
7433.“நன்றி ஈது “ என்று கொண்ட
    நயத்தினை நயந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத்
    தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம்,
    உத்தமற்கு உரியது? ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ,
    பழியொடு நரகம் பின்னை?
35

உரை
   
 
7434.‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர்
    தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப்புவனம் மூன்றும்
    ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது உனக்கு உடைந்து
    போனார்; மானுடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மானக்
    கயிலையை வெருவல் கண்டாய்!
36

உரை
   
 
7435.“வென்றவர் தோற்பர்; தோற்றோர்
    வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்
    உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘
என்றனர் அறிஞர் அன்றே!
    ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன்தவர் இருவர் போரைப்
    புகழ்தியோ? புகழ்க்கு மேலோய்!
37

உரை
   
 
7436.‘தேவியை விடுதி ஆயின்,
    திறல் அது தீரும் அன்றே;
ஆவியை விடுவது அல்லால்
    அல்லது ஒன்று ஆவது உண்டோ?
தா அரும் பெருமை அம்மா
    நீ இனித் தாழ்த்தது என்னே?
காவல! விடுதி, இன்று இக்
    கையறு கவலை நொய்தின்
38

உரை
   
 
7437.‘இனி இறை தாழ்த்தி ஆயின்
    இலங்கையும் யாமும் எல்லாம்
கனியுடை மரங்கள் ஆக,
    கவிக்குலம் கடக்கும் காண்டி;
பனியுடை வேலை, “சில்நீர்
    பருகினன் இரவி “ என்னத்
துனி உழந்து அயர்வது என்னே?
    துறத்தி இத் துன்பம் தன்னை.
39

உரை
   
 
7438.‘முன், உனக்கு, இறைவர் ஆன
    மூவரும் தோற்றார்; தேவர்
பின் உனக்கு ஏவல் செய்ய
    உலகு ஒரு மூன்றும் பெற்றாய்;
புல் நுனைப் பனிநீர் அன்ன
    மனிதரைப் பொருள் என்று உன்னி,
என், உனக்கு இளைய கும்பகருணனை
    இகழ்ந்தது? எந்தாய்!
40

உரை
   
 
7439.‘ஆங்கு அவன் தன்னைக் கூவி,
    ஏவுதி என்னின், ஐய!
ஓங்கலே போல்வான் மேனி
    காணவே ஒளிப்பர் அன்றே;
தாங்குவர் செரு முன் என்னின்,
    தாபதர் உயிரைத் தானே
வாங்கும் ‘என்று இனைய சொன்னான்;
    அவன் அது மனத்துக் கொண்டான்.
41

உரை
   
 
மகோதரன் கூறியதை இராவணன் புகழ்ந்து
மனம் வேறுபடுதல்

7440.‘பெறுதியே, எவையும் செல்வம்;
    பேர் அறிவாள! சீரிது
அறிதியே; என்பால் வைத்த
    அன்பினுக்கு அவதி இல்லை;
உறுதியே சொன்னாய் ‘என்னா,
    உள்ளமும் வேறுபட்டான்;
இறுதியே விளைவது ஆனால்,
    இடை, ஒன்றால் தடையும் உண்டோ?
42

உரை
   
 
இராவணன் கும்பகருணனை அழைத்து வருமாறு பணியாளரை ஏவ, அவர் கும்பகருணனது அரண்மனையை அடைதல்

7441.‘நன்று இது கருமம் ‘என்னா,
    ‘நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர் ‘என்றான்;
    என்றலும், நால்வர் சென்றார்;
தனெ்திசைக் கிழவன் தூதர்
    தேடினர் திரிவர் என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான்
    கொற்ற மாக் கோயில் புக்கார்.
43

உரை
   
 
பணியாளர் கையாலும் தூணாலும் தாக்கவும் கும்பகருணன் எழுந்திராமை

7442.கிங்கரர் நால்வர் சென்று, அக்
    கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து,
    ‘மன்ன நீ உணர்தி ‘என்ன,
தம் கையின் எழுவினாலே
    தலை செவி தாக்கி, பின்னும்
வெம் கணான் துயில்கின்றானை
    வெகுளியால் இனைய சொன்னார்.
44

உரை
   
 
எழுப்பச் சென்ற கிங்கரர் வெகுளியால் கூறுவன
(7443-7444)

7443.‘உறங்குகின்ற கும்பகன்ன!
    உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது, இன்று காண்;
    எழுந்திராய்! எழுந்திராய்
கறங்கு போல வில் பிடித்த
    கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்!
    இனிக் கிடந்து உறங்குவாய்!
45

உரை
   
 
7444.‘என்றும் ஈறு இலா அரக்கர்
    இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன்
    தரெிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக,
    இன்னும் உன் உறக்கமே?
அன்று அலைத்த செங்கையால்
    அலைத்து அலைத்து, உணர்த்தினார்.
46

   
 
கிங்கரர் கும்பகருணனை எழுப்ப முடியாமையைத் தரெிவிக்க, குதிரை யாளி முதலியவற்றை மிதிக்கவிட்டு எழுப்புங்கள் என்று இராவணன் ஏவுதல்

7445.என்று சொல்ல, அன்னவன்
    எழுந்திராமை கண்டு போய்,
‘மன்றல் தங்கு மாலை மார்ப!
    வன் துயில் எழுப்பலம், ‘
அன்று, ‘கொள்கை கேண்மின் ‘என்று,
    மாவொடு ஆளி ஏவினான்,
‘ஒன்றின் மேல் ஒர் ஆயிரம்
    உழக்கி விட்டு எழுப்புவீர். ‘
47

உரை
   
 
யானையும் யாளியும் எழுப்ப முடியாமல் திரும்பியதைத் தரெிவிக்க, இராவணன் மல்லரைச் சேனையோடு செல்லுமாறு ஏவுதல்

7446.‘அனைய தானை அன்று செல்ல,
    ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை மீண்டது ‘என்று
    இராவணற்கு இயம்பலும்,
‘வினையம் வல்ல நீங்கள் உங்கள்
    தானையோடு சென்மின் ‘என்று,
இனைய மல்லர் ஆயிராரை
    ஏவி நின்று இயம்பினான்.
48

உரை
   
 
ஆயிரம் மல்லர்கள் கும்பகருணனை எழுப்புமாறு அவன் அரண்மனையை அடைதல்

7447.சென்றனர், பத்து நூற்றுச்
    சீரிய வீரர் ஓடி,
‘மன்றல் அம் தொங்கலான்தன்
    மனம்தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் ‘என்னா,
    எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்றினும் உயர்ந்த தோளான்
    கொற்ற மாக் கோயில் புக்கார்.
49

உரை
   
 
மல்லர்கள் தம் வலியால் அரண்மனை வாயிலுள் புகுதல்

7448.திண்திறல் வீரர் வாயில்
    திறத்தலும், சுவாச வாதம்
மண்டுற, வீரர் எல்லாம்
    வருவது போவது ஆக,
கொண்டு உறுதடக்கை பற்றி,
    குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி,
    கடிது ஒரு வாயில் புக்கார்.
50

உரை
   
 
வீரர்கள் கும்பகருணனைத் துயிலெழுப்பச் சங்கு தாரை முதலியவற்றால் ஒலி எழுப்புதல்

7449.‘இங்கு இவன் தன்னை யாம் இன்று
    எழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு,
    மெய் துணுக்கம் உற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி,
    ஆழ் செவி அதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம்,
    சமைவுறச் சாற்றலுற்றார்.
51

உரை
   
 
ஓசை முதலியவற்றால் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு உரைப்ப, அவன் குதிரைகளை மேலே செலுத்துமாறு கூறுதல்

7450.கோடு, இகல் தண்டு, கூடம்,
    குந்தம், வல்லோர்கள் கூடி,
தாடைகள், சந்து, மார்பு,
    தலை எனும் அவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு
    உரைப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும்
    விரைவின் ‘என்றான்.
52

உரை
   
 
குதிரைகளால் துகைக்க, அதனால் கும்பகருணன் இனிது உறங்குதல்

7451.கட்டுறு கவன மா ஓர்
    ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன்
    மார்பு இடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி,
    விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத்
    தடம் துயில் கொள்வது ஆனான்.
53

உரை
   
 
பணியாளர் கும்பகருணனை எழுப்ப இயலாமையை இராவணனுக்கு அறிவித்தல்

7452.கொய் மலர்த் தொங்கலான் தன்
    குரைகழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, இங்கு
    எழுப்பல் ஆம் வகையே செய்தும்,
கய் எலாம் வலியும் ஓய்ந்த;
    கவனமா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ?
    செப்புதி, தரெிய ‘என்றார்.
54

உரை
   
 
இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல்

7453.‘இடை பேரா இளையானை,
    இணை ஆழி மணி நெடுந்தேர்
படை பேரா வரும்போதும்,
    பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால்,
    மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
புடை பேராத் துயிலானைத்
    துயில் எழுப்பிக் கொணர்க ‘என்றான்.
55

உரை
   
 
ஆயிரம் வீரர் முசலம் கொண்டு கன்னத்தில் அடிக்கக் கும்பகருணன் துயிலெழுதல் (7454-7455)

7454.என்றலுமே அடிவணங்கி, ஈர்
    ஐஞ்ஞூறு இராக்கதர்கள்,
வன்தொழிலால் துயில்கின்ற
    மன்னவன்தன் மாடு அணுகி,
நின்று இரண்டு கதுப்பும் உற
    நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற் போல்,
    புடை பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான்.
56

உரை
   
 
7455.மூவகை உலகும் உட்க,
    முரண் திசைப் பனைக்கை யானை
தாவரும் திசையின் நின்று
    சலித்திட, கதிரும், உட்க,
பூ உளான், புணரி மேலான்,
    பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க,
    எளிதினின் எழுந்தான் வீரன்.
57

உரை
   
 
கும்பகருணனது உருவின் தன்மை

7456.விண்ணினை இடறும் மோலி;
    விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும்
    கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர்
    வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற
    மால் என வளர்ந்து நின்றான்.
58

உரை
   
 
எழுந்த கும்பகருணன் உணவு முதலியன
உட்கொள்ளுதல் (7457-7467)

7457.உறக்கம் அவ் வழி நீங்கி உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறைக் குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்.
59

உரை
   
 
7458.ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் க(ள்)ளும் நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்;
சீறுகின்ற முகத்து இரு செங்கணான்.
60

உரை
   
 
7459.எருமை ஏற்றை ஓர் ஈர் அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான்.
61

உரை
   
 
7460.இருந்த போதும் இராவணன் நின்றெனத்
தரெிந்த மேனியன்; திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்;
62

உரை
   
 
7461.உதிர வாரியோடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஓர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழல் காலினான்;
63

உரை
   
 
7462.இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அரும் க(ள்)ளில் திரிகின்றது ஓர் ஆசையான்;
64

உரை
   
 
7463.சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர்மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்;
65

உரை
   
 
7464.எயில் தலைத் தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கர தலத்து எற்றினான்;
அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான்;
66

உரை
   
 
7465.உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
வட கடுங்கனல் போல் மயிர்ப் பங்கியான்;
67

உரை
   
 
7466.திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெங்கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்;
68

உரை
   
 
7467.காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு இறங்கும் மதத்தின துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினன்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்;
69

உரை
   
 
தமையன் அழைத்த செய்திகேட்டு, இராவணன் முன்சென்று கும்பகருணன் வணங்குதல் (7468-7469)

7468.‘கூயினன் நும்முன் ‘என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து மதிதொடும்
கோயில் எய்தினன் குன்று அ(ன்)ன கொள்கையான்.
70

உரை
   
 
7469.நிலை கிடந்த நெடுமதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர்
மலை கிடந்தது போல வணங்கினான்
71

உரை
   
 
இராவணன் தம்பியைத் தழுவி, அவனுக்கு உணவு முதலியன அளித்துப் போர்க்கோலம் செய்தல் (7470-7474)

7470.வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்.
72

உரை
   
 
7471.உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி தசைக் கொளீஇ
கடல் நுரைத் துகில் சுற்றி கதிர்க் குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்.
73

உரை
   
 
7472.பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடுநாள்
சோர விட்ட சுடர்மணி ஓடையை
வீரபட்டம் என நுதல் வீக்கினான்.
74

உரை
   
 
7473.மெய் எலாம் மிளிர் மின்வெயில் வீசிட
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கய்யின் நாகம் என கடல் மேனியில்
தயெ்வம் நாறு செம் சாந்தம் உம் சேர்த்தினான்.
75

உரை
   
 
7474.விடம் எழுந்தது போல் நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பு இடைச் சுற்றினான்
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்.
76

உரை
   
 
கும்பகருணன் போர்க்கோலம் செய்ததற்குக்
காரணம் வினாவுதல்

7475.அன்ன காலையில் ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? ‘என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத்
துன்னு தோளும் இடம் துடியா நின்றான்.
77

உரை
   
 
இராவணன் கும்பகருணனைப் போர் செய்ய ஏவுதல்

7476.‘வானரப் பெருந் தானையர் மானிடர்
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் ‘என்றான்.
78

உரை
   
 
கும்பகருணன் போர் நேர்ந்தமைக்கு வருந்தி இராவணனுக்கு அறிவுரை கூறுதல் (7477-7487)

7477.‘ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?
79

உரை
   
 
7478.‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!
80

உரை
   
 
7479.‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால் ஐயா!
81

உரை
   
 
7480.‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்
82

உரை
   
 
7481.‘கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பலவகை அமரர் தங்களை
விடுத்தனை; வேறு இனி வீடும் இல்லையால்.
83

உரை
   
 
7482.‘அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார்.
84

உரை
   
 
7483.‘தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ?
85

உரை
   
 
7484.என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்.
86

உரை
   
 
7485.‘காலினின் கருங்கடல் கடந்த காற்றது
போல வன் குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?
87

உரை
   
 
7486.‘தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐ அறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது வேறும் ஓர்
செய்திறம்; அன்னது தரெியக் கேட்டியால்;
88

உரை
   
 
7487.‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.
89

உரை
   
 
இராவணன் கும்பகருணனைச் சினந்து
மொழிதல் (7488-7491)

7488.‘உறுவது தரெிய அன்று; உன்னைக் கூயது
சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை;
வெறிவிது உன் வீரம் ‘என்று இவை விளம்பினான்.
90

உரை
   
 
7489.‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் ‘என உளையக் கூறினான்.
91

உரை
   
 
7490.‘மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக! ‘என்றான்.
92

உரை
   
 
7491.‘தருக என்தேர் படை சாற்று என் கூற்றையும்;
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இருகை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம்போர் ‘எனப் போதல் மேயினான்.
93

உரை
   
 
போருக்கு எழுந்த இராவணனை வணங்கி ‘பொறுத்தி ‘என்று கூறி, கும்பகருணன் போருக்குச் செல்ல விடைபெறுதல் (7492-7496)

7492.அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி ‘நீ பொறுத்தியால் ‘என
வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்
‘இன்னம் ஒன்று உரை உளது ‘என்னக் கூறினான்.
94

உரை
   
 
7493.‘வென்று இவண் வருவென் என்று
    உரைக்கிலேன்; விதி
நின்றது, பிடர் பிடித்து
    உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால்,
    பொலன்கொள் தோளியை,
“நன்று “ என, நாயக,
    விடுதல் நன்று அரோ.
95

உரை
   
 
7494.‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்.
96

உரை
   
 
7495.‘என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்று அரோ.
97

உரை
   
 
7496.‘இற்றை நாள் வரை, முதல்,
    யான் முன் செய்தன
குற்றமும் உள எனின்
    பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில்
    விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை ‘என,
    பெயர்ந்து போயினான்.
98

உரை
   
 
கும்பகருணன் புறப்பட்டபோது இராவணனும் மற்றையோரும் வருந்துதல்

7497.அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ்வழி நீரொடும் குருதி தேக்கினான்;
எவ்வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
இவ்வழி அவனும் போய் வாயில் எய்தினான்.
99

உரை
   
 
இராவணன் கும்பகருணனுக்குத் துணைப்படை அனுப்புதல்

7498.‘இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
பெரும் படை இளவலோடு ‘என்ற பேச்சினால்
வரும் படை வந்தது வான் உேளார்கள் தம்
சுரும்பு அடை மலர்முடி தூளி தூர்க்கவே.
100

உரை
   
 
படைகளின் பெருக்கம் (7499-7501)

7499.தேர்க்கொடி யானையின் பதாகை சேண் உறு
தார்க்கொடி என்று இவை ததைந்து வீங்குவ
போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் புக்கிட
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ.
101

உரை
   
 
7500.எண் உறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண் உறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண் உறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால்.
102

உரை
   
 
7501.தேர்செல கரிசெல நெருக்கிச் செம்முகக்
கார்செல தேர்செல புரவிக் கால் செல
தார்செலக் கடைசெலச் சென்ற தானையும்
‘பார் செலற்கு அரிது ‘என விசும்பில் பாய்ந்ததால்.
103

உரை
   
 
கும்பகருணன் தேரில் ஏறுதல் (7502-7504)

7502.ஆயிரம் கோளரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மதகரி பூதம் ஆயிரம்
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இருஞ் சுடர்மணித் தேர் ஒன்று ஏறினான்.
104

உரை
   
 
7503.தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால்.
105

உரை
   
 
7504.நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு
பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்
முறை முறை கை கொடு முடுகி நீட்டுவார்.
106

உரை
   
 
கும்பகருணன் ஊனையும் கள்ளையும்
உண்டவண்ணம் செல்லுதல்

7505.ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்று அரு பிலன் இடைப் பெய்யுமாறு போல்
வன்திறல் இரு கரம் வழங்க மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே.
107

உரை
   
 
கும்பகருணனது செயலைக் கண்டு
அமரர் அஞ்சியோடுதல்

7506.‘கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது;
நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
பிணம் தலைப்பட்டது; பெயர்வது எங்கு இனி;
உணர்ந்தது கூற்றம் ‘என்று உம்பர் ஓடினார்.
108

உரை
   
 
தேரில் வந்த கும்பகருணனை இராமன் நோக்கி, ‘இவனை இன்னார் என்று தரெிவி ‘என்று வீடணனைக் கேட்டல் (7507-7511)

7507.பாந்தளின் நெடுந்தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால்வரை
போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான்.
109

உரை
   
 
7508.‘வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்
சேண் உயர் கொடியது வய வெஞ் சீயமால்;
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்?
110

உரை
   
 
7509.‘தோெளாடு தோள் செலத்
    தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்;
    நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலை கொலாம்;
    சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்;
    ஆர் கொலாம் இவன்?
111

உரை
   
 
7510.‘எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
விழுங்கியது இருள் இவன் மெய்யினால்; வெரீஇ
புழுங்கும் நம் பெரும்படை இரியல் போகின்றது;
அழுங்கல் இல் சிந்தையாய்! யார் கொலாம் இவன்?
112

உரை
   
 
7511.‘அரக்கன் அவ் உரு ஒழித்து,
    அரியின் சேனையை
வெருக் கொள தோன்றுவான்
    கொண்ட வேடமோ?
தரெிக்கிலேன் இவ் உரு;
    தரெியும் வண்ணம், நீ
பொருக்கென, வீடண!
    புகறியால் ‘என்றான்.
113

உரை
   
 
வீடணன் கும்பகருணனுடைய தன்மையை எடுத்துரைத்தல்

7512.ஆரியன் அனைய கூற,
    அடி இணை இறைஞ்சி, ‘ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன்
    பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன
    கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் ‘என்று,
    அவன் நிலை கூறல் உற்றான்
114

உரை
   
 
7513.‘தவன் நுணங்கியரும் வேதத்
    தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத்
    திசைமுகன் உணரும் தேவன்
அவன் உணர்ந்து எழுந்த காலத்து
    அசுரர்கள் படுவது எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலத்து
    இமையவர் படுவர், எந்தாய்!
115

உரை
   
 
7514.‘ஆழியாய்! இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம் முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான்;
116

உரை
   
 
7515.காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான்.
117

உரை
   
 
7516.‘தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர் கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க நின்று சுழற்றினான்.
118

உரை
   
 
7517.‘கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறுகொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக ஆழிநீர்
இழிந்து காலினின் எற்றுவான்.
119

உரை
   
 
7518.‘ஊன் உயர்ந்த உரத்தினான்;
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்;
வான் உயர்ந்த வரத்தினான்;
120

உரை
   
 
7519.‘திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்றுகாறு
உறங்கலால் உலகு உய்ந்ததால்.
121

உரை
   
 
7520.‘சூலம் உண்டு; அது சூர் உேளார்
காலம் உண்டது; கைக்கொள்வான்
ஆலம் உண்டவன் ஆழிவாய்
ஞாலம் உண்டவ! நல்கினான்;
122

உரை
   
 
7521.‘மின்னின் ஒன்றிய விண் உேளார் ‘
‘முன் நில் ‘என்று அமர் முற்றினார்
என்னில் என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி விழித்திலான்.
123

உரை
   
 
7522.“‘தருமம் அன்று இதுதான்; இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு “ எனா.
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான்.
124

உரை
   
 
7523.‘மறுத்த தம் முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்;
வெறுத்து ‘மாள்வது மெய் ‘எனா
இறுத்து நின் எதிர் எய்தினான் ‘
125

உரை
   
 
7524.“‘நன்று இது அன்று நமக்கு ” எனா
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான்.
126

உரை
   
 
வீடணன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் இவனை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நலம் என இராமனுக்குச் சொல்லுதல்

7525.என்று அவன் உரைத்தலோடும்,
    இரவி சேய், ‘இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை;
    கூடுமேல், கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந்
    நிருதர் கோன் இடரும் நீங்கும்;
“நன்று “ என நினைந்தேன் ‘என்றான்;
    நாதனும், ‘நலன் ஈது ‘என்றான்.
127

உரை
   
 
கும்பகருணனை அழைத்தற்குச் செல்வார் யாவர்? ‘என்று இராமன் கேட்க, வீடணன் உடன்பட்டு விடைபெற்றுச் செல்லுதல்

7526.‘ஏகுதற்கு உரியார் யாரே? ‘
    என்றலும், இலங்கை வேந்தன்,
‘ஆகின் மற்று அடியேன் சென்று
    அங்கு அறிவினால் அவனை உள்ளம்
சேகு அறத் தரெுட்டி, ஈண்டுச்
    சேருமேல், சேர்ப்பன் ‘என்றான்;
மேகம் ஒப்பானும், ‘நன்று, போக! ‘
    என விடையும் ஈந்தான்.
128

உரை
   
 
வீடணன் கும்பகருணனை அடைந்து வணங்குதல்

7527.தந்திரக் கடலை நீந்தி,
    தன் பெரும் படையைச் சார்ந்தான்;
வெந்திறலவனுக்கு, ‘ஐய!
    வீடணன் விரைவின் உன்பால்
வந்தனன் ‘என்னச் சொன்னார்;
    வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான்தன்
    செறிகழல் சென்னி சேர்த்தான்
129

உரை
   
 
தன்னை வந்து வணங்கிய வீடணனுக்குக் கும்பகருணன் ‘வந்தது தகுதி அன்று ‘என்று கூறுதல் (7528-7536)

7528.முந்தி வந்து இறைஞ்சினானை,
    முகந்து, உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய் ‘
    என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த,
    தெளிவு இலார் போல மீள
வந்தது என், தனியே? ‘என்றான்,
    மழையின் நீர் வழங்கு கண்ணான்
130

உரை
   
 
7529.‘அவயம் நீ பெற்றவாறும்,
    அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்திலுள்ள சிறப்பும்,
    கேட்டு உவந்தேன், உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்காய்!
    காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
நவை உற வந்தது என், நீ?
    அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ?
131

உரை
   
 
7530.“‘குலத்து இயல்பு அழிந்ததேனும்,
    குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு, மாயாப்
    புண்ணியம் பொருந்திற்று ‘‘ என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி
    மகிழ்கின்றேன்; மன்ன வாயை
உலத்தினை, திரிய வந்தாய்;
    உளைகின்றது உள்ளம், அந்தோ.
132

உரை
   
 
7531.‘அறப் பெருந் துணைவர், தம்மை
    அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள்
    ஆர் உயிர் துறந்தபோதும்
இறப்பு எனும் பயத்தை விட்டாய்;
    இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை :
    நினைந்து என்கொல் பெயர்ந்த வண்ணம்?
133

உரை
   
 
7532.‘அறம் என நின்ற நம்பற்கு
    அடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும்
    மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை
    இம்மையே, தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை
    உறவு எனப் பெறுதி போலாம்?
134

உரை
   
 
7533.‘நீதியும், தருமம் நின்ற
    நிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலே
    அருந்தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால்,
    விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும்
    தவிர்ந்திலை போலும், தக்கோய்?
135

உரை
   
 
7534.‘ஏற்றிய வில்லோன், யார்க்கும்
    இறையவன் இராமன், நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்;
    மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
    கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய!
    வெவ்வலி தொலைய வந்தாய்.
136

உரை
   
 
7535.‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு
    அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இவ்
    அரக்கராய் உள்ேளார் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து,
    பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி,
    கடன் கழிப்பாரைக் காட்டாய்.
137

உரை
   
 
7536.‘வருவதும், இலங்கை மூதூர்ப்
    புலை எலாம் மாண்ட பின்னை
திரு உறை மார்பனோடும்;
    புகுந்து பின் என்றும் தீராப்
பொருவ அருஞ் செல்வம்
    துய்க்கப் போதுதி, விரைவின் ‘என்றான்.
‘கருமம் உண்டு உரைப்பது ‘என்றான்;
    ‘உரை ‘என, கழறலுற்றான்.
138

உரை
   
 
இராமனைச் சரண்புகுமாறு வீடணன் கும்பகருணனுக்கு உரைத்தல் (7537-7551)

7537.‘இருள் உறு சிந்தையேற்கும்
    இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ,
    அவயவமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு
    மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை
    ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.
139

உரை
   
 
7538.‘எனக்கு அவன் தந்த செல்வத்து
    இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து,
    உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை;
    உத்தம! உன்பின் வந்தேன்;
மனக்கு நோய் துடைத்து,
    வந்த மரபையும் விளக்கு வாழி!
140

உரை
   
 
7539.‘போதலோ அரிது; போனால்,
    புகல் இடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதி
    அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவி
    அநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்ற
    ஒழுக்கமே பிடிக்க வேண்டும்.
141

உரை
   
 
7540.‘தீயவை செய்வர் ஆகின்,
    சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார், என்று
    உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே?
    நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்த போது
    பழி வந்து தொடர்வது உண்டோ?
142

உரை
   
 
7541.‘மக்களை, குரவர் தம்மை
    மாதரை, மற்று உேளாரை
ஒக்கும் இன் உயிர் அன்னாரை,
    உதவி செய்தாரோடு ஒன்ற,
“துக்கம், இத் தொடர்ச்சி “ என்று,
    துறப்பரால் துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆகி,
    வீடுபேறு அளிக்கும் அன்றே!
143

உரை
   
 
7542.‘தீவினை ஒருவன் செய்ய,
    அவனொடும் தீங்கு இலாதோர்
வீ வினை உறுதல், ஐய,
    மேன்மையோ கீழ்மை தானோ?
ஆய்வினை உடையை அன்றே?
    அறத்தினை நோக்கி ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ,
    கொன்றனன், தவத்தின் மிக்கான்?
144

உரை
   
 
7543.‘கண்ணுதல், தீமை செய்ய,
    கமலத்து முளைத்த தாதை
அண்ணல்தன் தலையின் ஒன்றை
    அறுக்க என்று அமைந்தான் அன்றே?
புண்ணுறு புலவு வேலோய்!
    பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வது
    அறிஞரும் இயற்றுவாரோ?
145

உரை
   
 
7544.‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
    அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர்
    மருந்தினால் துயரம் தீர்வர்;
கடல் இடை கோட்டம் தேய்த்துக்
    கழிவது கருமம் அன்றால்,
மடல் உடை அலங்கல் மார்ப!
    மதி உடையவர்க்கு மன்னோ.
146

உரை
   
 
7545.‘காக்கலாம் நும்முன் தன்னை
    எனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறே
    என்னினும், ஆவது இல்லை;
தீக்கலாம் கொண்ட தேவர்
    சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னை
    நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ?
147

உரை
   
 
7546.‘மறம் கிளர் செருவில் வென்று
    வாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்று காறும்
    இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால்,
    உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்து
    மேற்கொள்வான் அமைந்தது? ஐயா.
148

உரை
   
 
7547.‘திரு மறு மார்பன் நல்க,
    அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி;
    ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்;
    உரிமையே உளதே; ஒன்றும்
அருமையே இவற்றின் இல்லை;
    காலமும் அடுத்தது, ஐயா!
149

உரை
   
 
7548.‘தேவர்க்கும் தேவன் நல்க;
    இலங்கையின் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை!
    யார், உனை நலியும் ஈட்டார்?
மூவர்க்கும் தலைவர் ஆன
    மூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புரிந்து நின்றார்,
    காகுத்த வேடம் காட்டி.
150

உரை
   
 
7549.‘உன் மக்கள் ஆகி உள்ளார்,
    உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார்,
    இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான்
தன் மக்கள் ஆகி உள்ளார்,
    தலையொடும் திரிவர் அன்றே
புன்மக்கள் தருமம் பூணாப்
    புலமக்கள் தருமம் பூண்டால்.
151

உரை
   
 
7550.‘முனிவரும் கருணை வைப்பர்;
    மூன்று உலகத்தும் தோன்றி
இனிவரும் பகையும் இல்லை;
    “ஈறு உண்டு “ என்று இரங்கல்வேண்டா;
துனிவரும் செறுநர் ஆன
    தேவரே துணைவர் ஆவர்;
கனி வரும் காலத்து, ஐய!
    பூக் கொய்யக் கருதலாமோ?
152

உரை
   
 
7551.‘வேத நாயகனே உன்னைக்
    கருணையால், வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்த
    கருணையால், கருமம் ஈதே;
ஆதலால் அவனைக் காண,
    அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே ‘என்னப்
    பொன் அடி இரண்டும் பூண்டான்.
153

உரை
   
 
வீடணன் உரையைக் கேட்ட கும்பகருணன்
கூறுதல் (7552-7564)

7552.தும்பி அம் தொடையல் மாலைச்
    சுடர்முடி படியில் தோய,
பம்பு பொன் கழல்கள் கையால்
    பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில்
    தழுவி, தன் தறுகண் ஊடு
வெம் புண் நீர் சொரிய நின்றான்,
    இனையன விளம்பலுற்றான்;
154

உரை
   
 
7553.‘நீர் கோல வாழ்வை நச்சி,
    நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு
    உயிர்கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த!
    என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார் கோல மேனியானைக்
    கூடுதி கடிதின் ஏகி.
155

உரை
   
 
7554.‘மலரின்மேல் இருந்த வள்ளல்
    வழு இலா வரத்தினால், நீ
உலைவு இலாத் தருமம் பூண்டாய்;
    உலகு உளதனையும் உள்ளாய்;
தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்;
    உனக்கு அது தக்கதேயால்;
புலையுறு மரணம் எய்தல்
    எனக்கு இது புகழதேயால்.
156

உரை
   
 
7555.‘கருத்து இலா இறைவன் தீமை
    கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகில் அன்றோ
    திருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ?
    பொருதொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
    உண்டவர்க்கு உரியது அம்மா.
157

உரை
   
 
7556.‘தும்பி அம் தொடையல் வீரன்
    சுடுகணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும்,
    வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற
    ஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியர் இன்றி மாண்டு
    கிடப்பனோ தமையன் மண்மேல்.
158

உரை
   
 
7557.‘அணை இன்றி அயர்ந்த வென்றி
    அஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன்
    பெருங்கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள்தோள் கால
    பாசத்தால் பிணிப்பக் கூசித்
துணை இன்றிச் சேறல் நன்றோ,
    தோற்றுள கூற்றின் சூழல்.
159

உரை
   
 
7558.‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித்
    திருநகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தரெியல் எம்முன்
    உயிர்கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட
    புண் உடை நெஞ்சோடு ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்!
160

உரை
   
 
7559.‘அனுமனை, வாலி சேயை,
    அருக்கன் சேய் தன்னை, அம்பொன்
தனு உடையவரை, வேறு ஓர்
    நீலனை, சாம்பன் தன்னை,
கனி தொடர் குரங்கின் சேனைக்
    கடலையும், கடந்து, மூடும்
பனி துடைத்து உலகம் சுற்றும்
    பருதியின் திரிவென்; பார்த்தி;
161

உரை
   
 
7560.‘ஆலம் கண்டு அஞ்சி ஓடும்
    அமரர்போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலை
    தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட,
    நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட,
    கறங்கு எனத் திரிவன்; காண்டி!
162

உரை
   
 
7561.‘செரு விடை அஞ்சார் வந்து, என்
    கண் எதிர் சேர்வர் ஆகின்,
கருவரை, கனகக் குன்றம்,
    என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்கு
    ஆர் உளார், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன்,
    உயிர் சுமந்து உலகில் ‘என்றான்.
163

உரை
   
 
7562.‘தாழ்க்கிற்பாய் அல்லை, என் சொல்
    தலைக் கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆயின், எய்தி,
    அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; “இனி ஓர் மாற்றம்
    விளம்பினால் விளைவு உண்டு “ என்று
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும்
    தொழ நிற்பாய், ‘ என்னச் சொன்னான்.
164

உரை
   
 
7563.‘போதி நீ, ஐய! பின்னைப்
    பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை
    வேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே,
    கடன்களும் ஆற்றி, ஏற்ற
மாதுயர் நரகம் நண்ணா
    வண்ணமும் காத்தி மன்னோ.
165

உரை
   
 
7564.‘ஆகுவது, ஆகும் காலத்து;
    அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று
    போற்றினும் போதல் திண்ணம்;
சேகு அற உணர்ந்தோர் நின்னின்
    யார் உளர்? வருத்தம் செய்யாது
ஏகுதி; எம்மை நோக்கி
    இரங்கலை; என்றும் உள்ளாய்!
166

உரை
   
 
கும்பகருணன் வீடணனைத் தழுவி விடை கொடுக்க, வீடணனும் அவனைப் பணிந்து மீளுதல் (7565-7566)

7565.என்று, அவன் தன்னை மீட்டும்
    எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி,
    நிறைகணால் நெடிது நோக்கி,
‘இன்றொடும் தவிர்ந்தது அன்றே,
    உடன் பிறப்பு ‘என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும்,
    அவன் அடித் தலத்து வீழ்ந்தான்.
167

உரை
   
 
7566.வணங்கினான்; வணங்கி, கண்ணும்
    வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை
    ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை;
    பெயர்வது ‘என்று உணர்ந்து பேர்ந்தான்,
குணங்களால் உயர்ந்தான், சேனைக்
    கடல் எலாம் கரங்கள் கூப்ப.
168

உரை
   
 
வீடணன் செல்லக் கண்ட கும்பகருணன் கண்ணில் உதிரநீர் பெருக நிற்றல்

7567.‘கள்ள நீர் வாழ்க்கையேமைக்
    கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான் ‘என்னாப்
    பேது உறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலை தன்னில்
    வீழ்ந்த நீர் வீழ, வெங்கண்
உள்ள நீர் எல்லாம் மாறி,
    உதிர நீர் ஒழுக, நின்றான்.
169

உரை
   
 
வீடணன் இராமனிடம் கும்பகருணனுடைய மனநிலையைக் கூறுதல்

7568.எய்திய நிருதர் கோனும்
    இராமனை இறைஞ்சி, ‘ எந்தாய்!
உய்திறன் உடையார்க்கு அன்றோ
    அற நெறி ஒழுக்கம் உண்மை?
பெய்திறன் எல்லாம் பெய்து
    பேசினன்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம்
    தீர்ந்திலன் சிறிதும் என்றான
170

உரை
   
 
வீடணனுடைய உரையைக் கேட்டு இராமன் கூறுதல்

7569.கொய் திறச் சடையின் கற்றை
    கொந்தளக் கோலக் கொண்டல்,
நொய்தினில் துளக்கி, ‘ஐய!
    “நுன் எதிர், நும் முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல்
    இனிது அன்று ‘‘ என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ?
    விதியை யார் தீர்க்ககிற்பார்? ‘
171

உரை
   
 
அரக்கர் சேனை குரக்குச் சேனையை
வளைத்துக் கொள்ளுதல்

7570.என இனிது உரைக்கும் வேலை,
    இராக்கதர் சேனை என்னும்
கனைகடல், கவியின் தானைக்
    கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக,
    மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்தது
    ஆர்த்தில, பரவை தள்ளி.
172

உரை
   
 
போர்க்கள இயல்பு

7571.ஓடின புரவி; வேழம்
    ஓடின; உருளைத் திண்தேர்
ஓடின; மலைகள் ஓட,
    ஓடின உதிரப் பேர் ஆறு;
ஆடின கவந்த பந்தம்;
    ஆடின அலகை மேல்மேல்;
ஆடின பதாகை; ஓங்கி
    ஆடின, பறவை அம்மா!
173

உரை
   
 
அரக்கர் சேனையும் குரக்குச் சேனையும்
அடைந்த நிலை

7572.மூளையும், தசையும், என்பும்,
    குருதியும், நிணமும், மூரி
வாெளாடும் குழம்பு பட்டார்,
    வாள் எயிற்று அரக்கர்; மற்று அவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து
    அழுந்தின கவிகள்; அம்பொன்
தோெளாடு மரனும் கல்லும்
    சூலமும் வேலும் தாக்க.
174

உரை
   
 
அரக்கப் படையும் குரக்குப் படையும்
செய்யும் போர்

7573.எய்தனர், நிருதர்; கல்லால்
    எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப்
    பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்;
    வலித்தனர், வானர ஈசர்;
செய்தனர், பிறவும் வெம்போர்;
    திகைத்தனர், தேவர் எல்லாம்
175

உரை
   
 
கும்பகருணன் வருகை

7574.நீரினை ஓட்டும் காற்றும்,
    காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணையாக ஏன்று
    பொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான்
    திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்கா வண்ணம்,
    உதிர வேல் நோக்கி உள்ளான்.
176

உரை
   
 
கும்பகருணன் வானரரைப் படுத்திய பாடு
(7575-7577)

7575.ஊழியில் பட்ட காலின்
    உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப்
    புணரியில் பட்டு, பொங்கும்
சூழியின் பட்ட நெற்றிக்
    களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே
    அவனியில் பட்ட எல்லாம்
177

உரை
   
 
7576.குன்று கொண்டு எறியும்; பாரில்
    குதிக்கும்; வெங்கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்;
    உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச்
    சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்;
    விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும்
178

உரை
   
 
7577.வாரியின் அமுக்கும் கையால்
    மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால்
    நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத்
    திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்;
    மலைகளில் புடைக்கும், சுற்றி.
179

உரை
   
 
அப்பொழுது போர்க்களத் தன்மை

7578.பறந்தனர் அமரர் அஞ்சி;
    பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன பறவை எல்லாம்;
    நெடுந்திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த,
    மலைக்குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்;
    கொன்றனன், கூற்றும் கூச.
180

உரை
   
 
கும்பகருணனிடத்து வானரர் ஒன்றும் செய்ய
இயலாமை (7579-7581)

7579.‘மற்று இனி ஒருவன்மேல்
    ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே;
    இன்றொடும் பெறுவது ஆமேல்
அற்றன தீங்கும் ‘என்னா
    அரிக்குலத் தலைவர் பற்றி,
எற்றின எறிந்த, எல்லாம்
    இணை நெடுந்தோளில் ஏற்றான்.
181

உரை
   
 
7580.கல்லொடு மரனும், வேரும்,
    கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் என்ன,
    பொடிப் பொடி ஆகிப் போன,
‘இல்லை, மற்று எறியத் தக்க,
    எற்றுவ, சுற்றும் என்ன,
பல்லொடு பல்லுமென்று
    பட்டன குரங்கு முட்டி.
182

உரை
   
 
7581.குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின்
    குழாம் கொளக் குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி,
    கைத்தலம் தேயக் குத்தி,
வன்திறல் எயிற்றால் கவ்வி.
    வள் உகிர் மடியக் கீளா,
ஒன்றும் ஆகின்றது இல்லை
    என்று இழிந்து ஓடிப் போன.
183

உரை
   
 
நீலன் பொருதல் (7582-7584)

7582.மூலமே மண்ணில் மூழ்கிக்
    கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல்,
    கையினால் கடிதின் வாங்கி,
நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்கு
    ஓர் நெருப்பு எனத் திரித்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி,
    முறுவலும் தோன்ற நின்றான்.
184

உரை
   
 
7583.‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின்,
    அச்சம் ஆம் பிறர்க்கும் ‘என்னாப்
புயங்களே படைகள் ஆகத்
    தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்து
    இடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொளக் கரங்கள் ஓச்சிக்
    குத்தினான், உதைத்தான் பல்கால்.
185

உரை
   
 
7584.கைத்தலம் சலித்து, காலும்
    குலைந்து, தன் கருத்து முற்றான்,
நெய்த்தலை அழலின் காந்தி
    எரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் பதைத்து வீழ,
    எற்றினான் இடது கையால்;
முத்தலைச் சூலம் ஓச்சான்,
    வெறுங்கையான் என்ன வெள்கி.
186

உரை
   
 
அங்கதன் போர் (7585-7588)

7585.ஆண்டு, அது நோக்கி நின்ற
    அங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம்
    நில முதுகு ஆற்ற வாங்கி,
‘மாண்டனன் அரக்கன் தம்பி ‘
    என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான்
    ஒரு தனித் தோளின் ஏற்றான்.
187

உரை
   
 
7586.ஏற்றபோது அனைய குன்றம்
    எண்ணருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடி
    விழுதலும், கவியின் வெள்ளம்,
‘ஊற்றம் ஏது, எமக்கு! ‘என்று
    எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்;
    பெயர்த்திலன் சிறிதும் பாதம்.
188

உரை
   
 
7587.இடக்கையால் அரக்கன் ஆங்கு
    ஓர் எழு முனை வயிரத் தண்டு
தடுக்கலாம் தரத்தது அல்லா
    வலியது, தடுக்கின் வாங்கி
‘மடக்குவாய் உயிரை ‘என்னா,
    வீசினான்; அதனை மைந்தன்
தடக்கையால் பிடித்துக் கொண்டான்,
    வானவர் தன்னை வாழ்த்த.
189

உரை
   
 
7588.பிடித்த அது சுழற்றி, ‘மற்று
    அப் பெருவலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்து
    எரி மடுத்து, இயங்குமா போல்,
‘அடித்து, உயிர் குடிப்பென் ‘என்னா,
    அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க்
    குதித்து, எதிர் குறுகி, நின்றான்
190

உரை
   
 
கும்பகருணன் அங்கதன் உரையாடல் (7589-7592)

7589.நின்றவன் தன்னை அன்னான்
    நெருப்பு எழ நிமிர நோக்கி,
‘பொன்ற வந்து அடைந்த தானைப்
    புரவலன் ஒருவன் தானோ?
அன்று அவன் மகனோ? எம் ஊர்
    அனல் மடுத்து அரக்கர் தம்மை
வென்றவன் தானோ? யாரோ?
    விளம்புதி, விரைவின் ‘என்றான்.
191

உரை
   
 
7590.‘நும்முனை வாலில் சுற்றி,
    நோன் திசை நான்கும் தாவி,
மும்முனை நெடுவேல் அண்ணல்
    முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம்முனை வீரன் மைந்தன்
    நின்னை என் வாலின் வீக்கித்
தமெ்முனை இராமன் பாதம்
    வணங்கிடச் செல்வென் ‘என்றான்.
192

உரை
   
 
7591.‘உந்தையை, மறைந்து, ஓர்
    அம்பால் உயிர் உண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக்
    காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்;
    நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே,
    வீரராய் வசையில் தீர்ந்தார்.
193

உரை
   
 
7592.‘இத்தலை வந்தது, என்னை
    இராமன்பால் வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று;
    வானவர் மார்பில் தைத்த
முத்தலை அயிலின் உச்சி
    முதுகு உற, மூரி வால் போல்
கைத்தலம் காலும் தூங்கக்
    கிடத்தலைக் கருதி ‘என்றான்.
194

உரை
   
 
அங்கதன் வீசிய எழுமுனைத் தண்டு கும்பகருணன் மேற்பட்டுச் சிதைதல்

7593.அற்று அவன் உரைத்தலோடும்,
    அனல் விழித்து அசனி குன்றத்து
உற்றது போலும் என்னும்
    ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப்
    புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய்,
    எழுமுனை வயிரம் தண்டு.
195

உரை
   
 
அங்கதன் வீழ அனுமன் வந்து எதிர்த்தல்

7594.தண்டு இறத் தடக்கை ஓச்சித்
    தழுவி, ‘அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவன் ‘என்னாத்
    தலையுறக் குதிக்குங் காலைப்
புண்திறப்புற வலாளன்
    கையினால் புகைந்து குத்த,
மண்திறப்பு எய்த வீழ்ந்தான்;
    மாருதி இமைப்பின் வந்தான்.
196

உரை
   
 
அனுமன் கும்பகருணன்மேல் குன்றினை வீசுவது

7595.மறித்தவன் அவனைத் தன்கை வயிர
    வாள் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற
    காலையில், குன்றம் ஒன்று
பறித்து அவன் நெற்றி முற்றப்
    பரப்பிடைப் பாகம் உள்ளே
செறித்தனெச் சுரிக்க வீசித்
    தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான்.
197

உரை
   
 
கும்பகருணன் தன் தலையில் பட்ட மலையையே அனுமன் மேல் வீசுதல்

7596.தலையினில் தைத்து வேறு
    ஓர்தலை என நின்ற அந்த
மலையினைக் கையின் வாங்கி,
    மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன்செய்
    கம்மியர் கூடம் ஒப்பக்,
குலை உறு பொறிகள் சிந்த,
    வீசி, தோள் கொட்டி ஆர்த்தான்.
198

உரை
   
 
அங்கதனை வானரம் எடுத்துச் செல்லுதல்

7597.அவ்வழி வாலி சேயை
    அரிக்குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்;
    மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு
    ஓர் நெடுவரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி
    நின்று, இனைய சொன்னான்.
199

உரை
   
 
அனுமனது வஞ்சினம்

7598.எறிகுவென் இதனை நின்மேல்;
    இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது; அன்றி, வல்லே
    மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான்
    உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்!
    பெரும்புகழ் பெறுதி என்றான்.
200

உரை
   
 
கும்பகருணன் வஞ்சினம்

7599.மாற்றம் அஃது உரைப்பக் கேளா,
    மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள
    நகைத்து, ‘நீ கொணர்ந்த குன்றை
ஏற்றனென்; ஏற்ற காலத்து,
    இறை அதற்கு ஒற்கம் எய்தின்,
தோற்றனென், உனக்கு; என் வன்மை
    சுருங்கும் ‘என்று அரக்கன் சொன்னான்
201

உரை
   
 
கும்பகருணன் தோள்மேல் ஏற்க மலை துகளாதல்

7600.மாருதி, ‘வல்லை ஆகின்,
    நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு ‘என்று
    பெருங்கையால் நெருங்க விட்ட
கார் உதிர் வயிரக் குன்றைக்
    காத்திலன், தோள்மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய்
    உக்கது, எவ் உலகும் உட்க.
202

உரை
   
 
தான் எறிந்த மலை துகளானது கண்டு அனுமன் பெயர்தல்

7601.இளக்கம் ஒன்று இன்றி நின்ற
    இயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
அளக்குறற் பாலும் ஆகா;
    குல வரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்;
    சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும் ‘என்னா,
    மாருதி பெயர்ந்து போனான்.
203

உரை
   
 
கும்பகருணன் ஆற்றலைக் கண்டு தேவர்கள் கலங்குதலும் நடுங்குதலும்

7602.‘எழுபது வெள்ளத் துள்ளார்
    இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றே
    இவன் வலத்து அமைந்த முச்சூல்
கழுவினில் ‘என்று வானோர்
    கலங்கினார், நடுங்கினார் ஓர்
பொழுதினில் உலகம் மூன்றும்
    திரியும் ‘என்று உள்ளம் பொங்கி.
204

உரை
   
 
குரங்குகளின் அழிவும் கும்பகருணன் ஆண்மையும்

7603.தாக்கினார், தாக்கினார் தம்
    கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் ஒருவர் இல்லை;
    நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான்; களத்தின் ஆங்கு
    ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான், ஆண்மையாலே;
    புதுக்கினான் புகழை அம்மா.
205

உரை
   
 
கும்பகருணன் ஆரவாரம்

7604.‘சங்கத்து ஆர் குரங்கு சாய,
    தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்?
    வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்கு உற்றார் எங்கு உற்றார்? ‘என்று
    எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள்கொட்டி, ஆர்த்தான்
    கூற்றையும் துணுக்கம் கொண்டான்
206

உரை
   
 
போர்க்களத்து இரத்தம் பெருகுதல்

7605.பறந்தலை தன்னில் வந்த
    பல பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்ற
    இரிதலின் யாரும் இன்றி
வறந்தது; சோரி பாய
    வளர்ந்தது, மகர வேலை
குறைந்தது, உவாவுற்று ஓதம்
    கிளர்ந்து மீக்கொண்டது என்ன.
207

உரை
   
 
இலக்குவன் வந்து தாக்குதல்

7606.‘குன்றும் கற்களும் மரங்களும்
    குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ்சேனை ஓர்
    பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது ‘என்று உரைத்தலும்
    அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒருதனிச்
    சுமித்திரை சிங்கம்.
208

உரை
   
 
இலக்குவன் நாணொலி செய்தல்

7607.நாண் எறிந்தனன், சிலையினை;
    அரக்கியர் நகுபொன்
பூண் எறிந்தனர் படியிடை;
    இடி பொடித்து என்ன
சேண் எறிந்தன; திசை செவிடு
    எறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து,
    ஆடின துணங்கை.
209

உரை
   
 
இலக்குவனது அம்புகளின் செயல் (7608-7612)

7608.இலக்குவன் கடிது ஏவின,
    இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங்கணை நெடுங்கணம்
    சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிட
    வாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன;
    குடித்தன, குருதி
210

உரை
   
 
7609.அலை படைத்த வாள் அரக்கரைச்
    சில கழுத்து அரிவ;
சில சிரத்தினைத் துணித்து,
    அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடை
    விழாக் கொண்டு போவ;
தலை படைத்தன போன்றன
    வாள், நெடுஞ் சரங்கள்
211

உரை
   
 
7610.உருப் பதங்கனை ஒப்பன
    சில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்று
    அப்புறம் போவ;
செருப்பதம் பெறா அரக்கர்தம்
    தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன
    முழைபுகு பாம்பின்.
212

உரை
   
 
7611.மின் புகுந்தன பல்குழுவாம்
    என மிளிர்வ,
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின
    கடுங்கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும்,
    கடைக்குழை முதுகின்
பின்பு நின்றவர் மிடற்றிற்கும்,
    விசை ஒக்கும், பிறழா.
213

உரை
   
 
7612.போர்த்த பேரியின் கண்ணன,
    காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன,
    ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின்
    தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தன
    இலக்குவன் பகழி.
214

உரை
   
 
யானைகள்

7613.மருப்பு இழந்தன; களிறு எலாம்
    வால் செவி இழந்த;
நெருப்பு உகும் கண்கள்
    இழந்தன; நெடுங்கரம் இழந்த;
செருப் புகும் கடுங்காத்திரம்
    இழந்தன; சிகரப்
பொருப்பு உருண்டன ஆம்
    எனத் தலத்திடைப் புரண்ட.
215

உரை
   
 
குதிரைகள்

7614.நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின்,
    திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலைப் படப்பட
    மயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்;
    பிழைத்தது ஒன்று இல்லை;
குரம் தலத்தினும் விசும்பினும்
    மிதித்திலாக் குதிரை.
216

உரை
   
 
7615.பல்லவப் படை பட, படு
    புரவிய, பல்கால்
வில்லுடைத் தலையாெளாடு
    சூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங்குருதியின்
    ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றில
    கொடி நெடுந் தேர்கள்.
217

உரை
   
 
7616.பேழை ஒத்து அகல் வாயன
    பேய்க்கணம் முகக்கும்
மூழை ஒத்தன கழுத்து அற
    வீழ்ந்தன, முறைசால்
ஊழை ஒத்தன ஒருகணை
    தைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங்குருதியில்
    மிதப்பன, தலைகள்.
218

உரை
   
 
7617.ஒட்டி நாயகன் வென்றி நாள்
    குறித்து ஒளிர்முளைகள்
அட்டி வைத்தன பாலிகை
    நிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன,
    துடிகளின் நவைதீர்
வட்ட வான் கணில், வதிந்தன
    வருண சாமரைகள்
219

உரை
   
 
7618.எரிந்த வெங்கணை நெற்றியில்
    படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின்
    கல்வியின் அமையா,
திரிந்த வேகத்த, பாகர்கள்
    தீர்ந்தன, செருநேர்
புரிந்த வானரத் தானையில்
    புக்கன, புயலின்.
220

உரை
   
 
7619.வேனிலான் அன்ன இலக்குவன்
    விடுகணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர்தம்
    படைக்கல வாரி
போன போன வன்திசைதொறும்
    பொறிக்குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின் நின்று
    உதிர்ந்தனெ வீழ்ந்த.
221

உரை
   
 
7620.கரம் குடைந்தன, தொடர்ந்து
    போய்க் கொய் உளைக் கடுமாக்
குரம் குடைந்தன, வெரிந்
    உறக் கொடி நெடுங் கொற்றத்
திரம் குடைந்தன, அணி நெடுந்
    தேர்க்குலம் குடைந்த,
அரம் குடைந்தன அயில்
    நெடு வாளிகள் அம்மா!
222

உரை
   
 
அரக்கர் துறக்கம் புகுதல்

7621.‘துரக்கும், மெய்யுணர்வு இருவினைகளை
    எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை ‘
    எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும்
    திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர்
    தழுவினர், விரும்பி.
223

உரை
   
 
துறக்கமே பெரியது

7622.மறக் கொடுந் தொழில் அரக்கர்கள்,
    மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங்கணை நெருப்பொடு
    நிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும்,
    எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியது
    ஒன்று உளது எனச் சொல்லேம்.
224

உரை
   
 
இலக்குவன் பகழி (7623-7625)

7623.ஒருவரைக் கரம், ஒருவரைச்
    சிரம், மற்று அங்கு ஒருவர்
குரை கழல்துணை, தோளிணை,
    பிற மற்றும் கொளலால்,
விரவலர்ப் பெறா வெறுமைய
    ஆயின; வெவ்வேறு
இரவு கற்றன போன்றன
    இலக்குவன் பகழி.
225

உரை
   
 
7624.சிலவரைக் கரம், சிலவரைச்
    செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக்
    கண், கொளும் செயலால்
நிலவரைத் தரு பொருள்வழித்
    தண்தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும்
    போன்றன புங்கம்.
226

உரை
   
 
7625.அறத்தின் இன் உயிர் அனையவன்
    கணைபட, அரக்கர்
‘இறத்தும், இங்கு இறை நிற்பின் ‘என்று
    இரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசை தொறும்
    திசைதொறும் சிந்திப்
புறத்தின் ஓடினர், ஓடின
    குருதியே போல.
227

உரை
   
 
இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்

7626.செருவில் மாண்டவர் பெருமையும்,
    இலக்குவன் செய்த
வரிவில் ஆண்மையும், நோக்கிய
    புலத்தியன் மருமான்,
‘திரிபுரம் செற்ற தேவனும்
    இவனுமே செருவின்
ஒருவிலாளர் ‘என்று ஆயிரம்கால்
    எடுத்து உரைத்தான்.
228

உரை
   
 
கும்பகருணன் இலக்குவனொடு பொர வருதல்

7627..படர் நெடுந் தடந் தட்டு இடைத்
    திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும்
    மனத்தினும் கடியது,
அடல் வயங்கொள் வெஞ்சீயம்
    நின்று ஆர்க்கின்றது, அம்பொன்
வட பெருங்கிரி பொருவு
    தேர் ஓட்டினன் வந்தான்.
229

உரை
   
 
அனுமன் இலக்குவனைத் தோள்மேல் ஏறுக எனல்

7628.தொளைகொள் வாள் நுகச் சுடர்
    நெடுந் தேர்மிசைத் தோன்றி,
வளைகொள் வெள் எயிற்று
    அரக்கன் வெஞ்செருத் தொழில் மலைய,
‘கிளைகொளாது, இகல் ‘என்று
    எண்ணி, மாருதி கிடைத்தான்,
‘இளைய வள்ளலே! ஏறுதி
    தோள்மிசை ‘என்றான்.
230

உரை
   
 
இலக்குவன் அனுமன் தோள்மேல் ஏறுதல்

7629.ஏறினான், இளங் கோளரி;
    இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்தது
    வானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின்
    நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது,
    அனுமன்தன் தடந் தோள்.
231

உரை
   
 
இலக்குவன் அனுமன்மேல் அமர்ந்த தோற்றம்

7630.தன்னின் நேர் பிறர் தான்
    அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன்
    தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால்வரை வெள்ளி
    மால்வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிது
    எடுத்து இயம்புவது யாதோ?
232

உரை
   
 
கும்பகருணன் அம்பறாத்தூணி கட்டிக்கொண்டு வில்லை வளைத்தல்

7631.ஆங்கு, வீரனோடு அமர் செய்வான்
    அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல்கணைப் புட்டிலும்
    தகைபெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது,
    விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரை
    புரைவது ஓர் வரிவில்.
233

உரை
   
 
கும்பகருணன் கூறுவது (7632-7633)

7632.இராமன் தம்பி நீ; இராவணன்
    தம்பி நான்; இருவேம்
பொராநின்றேம்; இது காணிய
    வந்தனர், புலவோர்;
பராவும் தொல் செருமுறை வலிக்கு
    உரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும்,
    யாம் ‘என விளம்பா.
234

உரை
   
 
7633.‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,
    எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள்,
    நாசி வெஞ்சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள்
    கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்;
    காக்குதி ‘என்றான்.
235

உரை
   
 
இலக்குவன் மறுமொழி

7634.அல்லினால் செய்த நிறத்தவன்
    அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன்,
    ‘மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது,
    வெந்திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம்,
    யாம் ‘எனச் சொன்னான்.
236

உரை
   
 
இருவரும் பொருதல் (7635-7644)

7635.விண் இரண்டு கூறு ஆயது;
    பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது
    என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உகக்,
    கதிர்முகப் பகழி
எண் இரண்டினோடு இரண்டு ஒரு
    தொடை தொடுத்து எய்தான்.
237

உரை
   
 
7636.கொம்பு நாலுடைக் குலக் கரி
    கும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய,
    உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ்சினத்து இராவணற்கு
    இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும்
    நான்கினால் அறுத்தான்.
238

உரை
   
 
7637.அறுத்த காலையின், அரக்கனும்
    அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது,
    திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர்
    முகக் கடுங்கணைப் புத்தேள்
‘இறுத்து மாற்றிது வல்லையேல் ‘
    என்று கோத்து எய்தான்.
239

உரை
   
 
7638.புரிந்து நோக்கிய திசைதொறும்
    பகழியின் புயலாய்,
எரிந்து செல்வதை நோக்கிய
    இராமனுக்கு இளையான்,
தரெிந்து, மற்று அது தன்னை ஓர்
    தயெ்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிர
    உருச்சரம் அற்ற.
240

உரை
   
 
7639.ஆறு இரண்டு வெங்கடுங்கணை
    அனுமன் மேல் அழுத்தி,
ஏறு வெஞ்சரம் இரண்டு
    இளங்குமரன் மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடை
    தொடுத்து ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும்
    மறைத்தனன், கொடியோன்.
241

உரை
   
 
7640.மறைத்த வாளிகள் எவற்றையும்
    அவற்றினான் மாற்றி,
துறைத் தலந்தொறும் தலந்தொறும்
    நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங்கரி, பரி,
    ஆளி, மாப் பூதம்,
திறத்திறம்படத் துணித்து, அவன்
    தேரையும் சிதைத்தான்.
242

உரை
   
 
7641.தேர் அழிந்தது, செங்கதிர்ச்
    செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்து
    ஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடுமழைக்
    குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ்சிலை அழிந்தனெத்
    துமிந்தது, அப்பருவில்.
243

உரை
   
 
7642.செய்த போரினை நோக்கி,
    ‘இத்தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோளரி
    முதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடு
    மந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ ‘என,
    வானவர் மயர்ந்தார்.
244

உரை
   
 
கும்பகருணன் கொதித்து, சூலப்படை எடுத்தல்

7643.ஊன்று தேரொடு சிலை இலன்,
    கடல் கிளர்ந் தொப்பான்,
‘ஏன்று, மற்று இவன் இன் உயிர்
    குடிப்பல் ‘என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடுகுறி
    என்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ்சுடர்ச் சூல
    வெங்கூற்றினைத் தொட்டான்.
245

உரை
   
 
கும்பகருணன் தரையில் நிற்பது கண்டு
இலக்குவனும் தரையில் நிற்றல்

7644.இழியப் பாய்ந்தனன், இருநிலம்
    பிளந்து இரு கூறா,
கிழியப் பாய்புனல் கிளர்ந்தனெக்
    கிளர்சினத்து அரக்கன்;
‘பழி, அப்பால்; இவன் பதாதி ‘
    என்று, அனுமன்தன் படர்தோள்
ஒழியப் பார்மிசை இழிந்து
    சென்று, இளவலும் உற்றான்.
246

உரை
   
 
இராவணன் தம்பிக்கு உதவ அனுப்பிய சேனை இலக்குவனை வளைத்தல் (7645-7646)

7645.உற்ற காலையின், இராவணன்,
    தம்பிமாடு உதவ
இற்ற தானையின் இருமடி
    இகல்படை ஏவ,
முற்றி அன்னது, முழங்கு
    முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரை
    சிங்கத்தைத் தொடர்ந்து.
247

உரை
   
 
7646.இருந்த வானரர் இரியல் போய்
    மயங்கினர்; எவரும்
சொரிந்த வெம்படை துணித்திடைத்
    தடுப்பருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவு இலன்
    ஒருபுடை படரப்
புரிந்த அந்நெடுஞ் சேனை அம்
    கருங்கடல் புக்கான்.
248

உரை
   
 
களத்தில் காணப்பட்ட அழிவுகள் (7647-7651)

7647.முருக்கின் நாள்மலர் முகை விரிந்தால்
    அன்ன முரண்கண்
அரக்கர் செம்மயிர்க் கருந்தலை
    அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெரும் கனல் இடைப்
    பெய்து பெய்து, எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர்
    ஆறுகள் ஒதுங்க.
249

உரை
   
 
7648.கரியின் கைகளும், புரவியின்
    கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும்,
    அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும்
    துறைதொறும் சுழிப்ப,
நெரியும் பல்பிணப் பெருங்கரை
    கடந்தில, நீத்தம்.
250

உரை
   
 
7649.கொற்ற வாள், எழு, தண்டு, வேல்,
    கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம்,
    இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை
    துணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப்பட,
    துணிந்தன அனந்தம்.
251

உரை
   
 
7650.குண்டலங்களும், மோலியும்
    ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம், என்று
    இனையன, தறுகண்
கண்ட கண்டங்கெளாடும் கணை
    துரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு
    இமைத்தன, வானில்.
252

உரை
   
 
7651.பரந்த வெண்குடை சாமரை,
    நெடுங்கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம்,
    பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர்
    ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும்
    குவித்தன நீந்தி.
253

உரை
   
 
கும்பகருணன் வேறொரு திசையில் சுக்கிரீவனோடு பொருதல் (7652-7656)

7652.ஈண்டு வெஞ்செரு இனையன
    நிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன்,
    மற்று ஒருதிசை நின்றான்,
பூண்ட வெஞ்செரு இரவி கான்
    முளையொடும் பொருதான்;
‘காண்தகும் ‘என இமையவர்
    குழுக்கொண்டு, கண்டார்.
254

உரை
   
 
7653.பொறிந்து எழு கண்ணினன்,
    புகையும் வாயினன்,
செறிந்து எழு கதிரவன்
    சிறுவன் சீறினான்
‘முறிந்தன அரக்கன் மா
    முரண் திண் தோள் ‘என,
எறிந்தனன், விசும்பில்,
    மாமலை ஒன்று ஏந்தியே.
255

உரை
   
 
7654.அம்மலை நின்று வந்து அவனி எய்திய
செம்மலை அனைய வெங்களிறும் சேனையின்
வெம்மலை வேழமும் பொருத; வேறு இனி
எம்மலை உள அவற்கு எடுக் கொணாதன?
256

உரை
   
 
7655.இவ்வகை நெடுமலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ்வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார்.
257

உரை
   
 
7656.ஏற்று ஒரு கையினால் ‘இது கொல் நீ அடா!
ஆற்றிய குன்றம்? ‘என்று அளவு இல் ஆற்றலான்
நீற்றினும் நுணுகுறப் பிசைந்து ‘நீங்கு ‘என
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார்.
258

உரை
   
 
கும்பகருணன் சுக்கிரீவன்மேல் சூலத்தை எறிதல்

7657.‘செல்வெனோ, நெடுங்கிரி
    இன்னும் தேர்ந்து? ‘எனா,
எல்லவன் கான்முளை
    உணரும் ஏல்வையில்,
‘கொல்! ‘என எறிந்தனன்,
    குறைவு இல் நோன்பினோர்
சொல் எனப் பிழைப்பு இலாச்
    சூலம், சோர்வு இலான்.
259

உரை
   
 
அச் சூலத்தை அனுமன் ஒடித்தல்

7658.‘பட்டனன் பட்டனன் ‘என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்;
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான்?
260

உரை
   
 
சூலம் ஒடிந்த பேரொலி

7659.சித்திர வனமுலைச் சீதை கேள்வனார்
அத்திரு மிதிலையில் அறிவு முற்றிய
பித்தன் வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே.
261

உரை
   
 
அனுமனைக் கும்பகருணன் புகழ்தல்

7660.நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
‘கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி;
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒருதனி உளை; இதற்கு உவமை யாது? ‘என்றான்.
262

உரை
   
 
கும்பகருணன் போர் செய்ய அழைக்கவும் அது பழுது என அனுமன் அகலுதல்

7661.‘என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர்
சொன்னன புரிவல் ‘என்று அரக்கன் சொல்லலும்
‘முன் “இனி எதிர்க்கிலேன் ” என்று முற்றிய
பின் இகல் பழுது ‘எனாப் பெயர்ந்து போயினான்.
263

உரை
   
 
சுக்கிரீவன் கும்பகருணனைக் குத்துதல்

7662.அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
பெற்றிலன் பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ்வெங் கைகளால்.
264

உரை
   
 
கும்பகருணன் சுக்கிரீவனை நெருக்கிப் பற்றுதல்

7663.அரக்கனும் ‘நன்று நின் ஆண்மை; ஆயினும்
தருக்கு இனி இன்றொடும் சமையும்தான் ‘எனா
நெருக்கினன் பற்றினன் நீங்க ஒணா வகை;
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான்.
265

உரை
   
 
கும்பகருணனும் சுக்கிரீவனும் போர் செய்தல்
(7664-7665)

7664.திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
புரிந்தனர் நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
எரிந்தன உரும் எலாம்; இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி; தாம் இறையும் சோர்ந்திலர்
266

உரை
   
 
7665.உறுக்கினர் ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர் முறைமுறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினன்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான்.
267

உரை
   
 
சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச் செல்லுதல்

7666.‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும்படை சிந்தும்; தக்கது ஓர்
எண்தரு கருமம் மற்று இதனின் இல் ‘என
கொண்டனன் போயினன் நிருதர் கோ நகர்.
268

உரை
   
 
வானரப்படை அதுகண்டு அரற்றுதல்

7667.உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட
விரல்துறு கைத்தலத்து அடித்து வெய்துயிர்த்து
அரற்றின கவிக்குலம்; அரக்கர் ஆர்த்தனர்.
269

உரை
   
 
சுக்கிரீவனைப் பிரிந்த வானரர் நிலை

7668.நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானரத் தலைவர் உள் முகிழ்த்து
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர்
‘மடங்கின ஆம் உயிர்ப்பு ‘என்னும் மாண்பினர்.
270

உரை
   
 
சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லும் தோற்றம் (7669-7670)

7669.புழுங்கிய வெஞ்சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
எழும் கதிர் இரவிதன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான்.
271

உரை
   
 
7670.திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்துப்
புக்கது புறத்தது ஆம் மதியும் போன்றனன்.
272

உரை
   
 
அனுமன் கைபிசைந்துகொண்டு கும்பகருணன்பின்
போதல்

7671.‘ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் ‘என
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்
கருங்கடல் கடந்த அக்காலன் காலன் வாழ்
பெருங்கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன்.
273

உரை
   
 
சுக்கிரீவனை அரக்கன் எடுத்துச் சென்றதைச் சிலர் இராமனுக்குச் சொல்லுதல்

7672.ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
‘நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்?
காய்கதிர்ச் செல்வனைப் பிணித்த கையினன்
போயினன் அரக்கன் ‘என்று இசைத்த பூசலார்.
274

உரை
   
 
இராமன் சினமிக்கு விரைந்து இலங்கை நகர் வாயிலை அடைதல்

7673.தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான்
காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான்
‘ஏ ‘எனும் அளவினில் இலங்கை மாநகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான்.
275

உரை
   
 
இராமன் அம்பு மாரியால் வாயிலை அடைத்தல்

7674.‘உடைப் பெருந் துணைவனை
    உயிரின் கொண்டுபோய்
கிடைப்பருங் கொடிநகர்
    அடையின், கேடு ‘என,
‘தொடைப் பெரும் பகழியின்
    மாரி தூர்த்து உற
அடைப்பென் ‘என்று, அடைத்தனன்,
    விசும்பின் ஆறு எலாம்.
276

உரை
   
 
இராமன் பெய்த சரமாரியின் விளைவு

7675.மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர்நிலை தொடர்தல் ஓவின;
யாதும் விண்படர்கில; இயங்கு கார்மழை
மீது நின்று அகன்றன; விசும்பு தூர்ந்ததால்.
277

உரை
   
 
அம்புகளாலாய மதிலை நெருங்கிய கும்பகருணன் அதனைக் கடக்க இயலாது திரும்பிப் பார்த்தல்

7676.மனத்தினும் கடியது ஓர்
    விசையின் வான் செல்வான்,
இனக் கொடும் பகழியின்
    மதிலை எய்தினான்;
‘நினைத்தவை நீக்குதல்
    அருமை இன்று ‘என,
சினக் கொடுந் திறலவன்
    திரிந்து நோக்கினான்.
278

உரை
   
 
இராமன் வடிவத்தைக் கும்பகருணன் காணுதல்

7677.கண்டனன் வதனம் வாய் கண் கை கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்துப் பொன்சிலை
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான்தனை.
279

உரை
   
 
கும்பகருணன் இராமனைக் கண்டதும்
வெகுண்டு அதட்டுதல்

7678.மடித்தவாய் கொழும்புகை வழங்க மாறு இதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்த தீ நயனங்கள்; பொறுக்கலாமையால்
இடித்தவன் தழெிப்பினால் இடிந்த குன்று எலாம்.
280

உரை
   
 
கும்பகருணன் வீரச் சொல் (7679-7683)

7679.“‘மாக் கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும் போலும் “ என்று எனைத்
தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை; இது காண தக்கதால்.
281

உரை
   
 
7680.‘உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன் தோற்ற வாலிதன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய்! புகழ் அன்று ஆதலால்.
282

உரை
   
 
7681.‘தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
ஓடியது உன்படை; உம்பி ஓய்ந்து ஒரு
பாடு உற நடந்தனன்; அனுமன் பாறினன்;
ஈடுறும் இவனைக் கொண்டு எளிதின் எய்தினேன்.
283

உரை
   
 
7682.‘காக்கிய வந்தனை என்னின் கண்ட என்
பாக்கியம் தந்தது நின்னை; பல்முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனைப்
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய்.
284

உரை
   
 
7683.‘ஏதி வெந்திறலினோய்! இமைப்பு இலோர் எதிர்
பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி
கோதை வெஞ் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறைநின்றாம் ‘என்றான்.
285

உரை
   
 
இராமன் வஞ்சினம்

7684.என்றலும் முறுவலித்து இராமன் ‘யானுடை
இன்துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன் ‘என்றான்.
286

உரை
   
 
இராமன் கும்பகருணன்மேல் அம்பு எய்தல்

7685.மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரையை
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாட்டம் இல் வைத் தலை வயங்கு வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்.
287

உரை
   
 
நெற்றியில் அம்புபட்ட கும்பகருணனது தோற்றம்

7686.சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன்.
288

உரை
   
 
சுக்கிரீவன் மயக்கம் தெளிந்தழெுதல்

7687.குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும்
இன் துயில் எழுந்தனெ உணர்ச்சி எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான்.
289

உரை
   
 
தெளிந்த சுக்கிரீவன் இராமனைக் கண்டு
தொழுது வாழ்த்துதல்

7688.நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
சுற்று உற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை.
290

உரை
   
 
சுக்கிரீவன் கும்பகருணனது மூக்கையும் காதையும் கவர்ந்து செல்லுதல்

7689.கண்டனன் நாயகன்தன்னை,
    கண்ணுறா,
தண்டல் இல் மானமும்
    நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும்
    செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த்
    தமரைக் கூடினான்.
291

உரை
   
 
கும்பகருணன் மூக்கையும் காதையும் இழந்தமை கண்டு ஆரவாரித்தல்

7690.வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே.
292

உரை
   
 
சுக்கிரீவன் விடுதலை பெற்றமை கண்ட
இராமன் மகிழ்தல்

7691.காந்து இகல் அரக்கன் வெங்கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெஞ்சிறைப்
போந்தனள் ஆம் எனப் பொருமல் நீங்கினான்.
293

உரை
   
 
கவிக் கூற்று

7692.மத்தகம் பிளந்து மாடு உருவ வார்சிலை
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு
அத்திசைப் போந்தனன் அல்லது ஒண்ணுமோ?
294

உரை
   
 
கும்பகருணன் உணர்வு பெறுதல்

7693.அக்கணத்து அறிவு வந்து அணுக அங்கை நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும் உணர்ந்தனன் உதிரப் போர்வையான்.
295

உரை
   
 
குருதிசோர நின்ற கும்பகருணன் தோற்றம்

7694.தாது ராகத் தடங்குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடுமழை சொரிய கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான்.
296

உரை
   
 
கும்பகருணன் தன் தன்மை நினைந்து இரத்தக் கண்ணீர் சொரிதல்

7695.எண் உடைத் தன்மையன் இனைய எண் இலாப்
பெண் உடை தன்மையன் ஆய பீடையால்
புண் உடைச் செவியொடு மூக்கும் போன்றவால்
கண்ணுடைக் குழிகளும் குருதி கால்வன.
297

உரை
   
 
கும்பகருணனது வெகுளியின் விளைவு

7696.ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும் : தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம்மண்ணைப் பார்க்குமால்
‘சீசி உற்றது! ‘எனத் தீயும் நெஞ்சினான்.
298

உரை
   
 
கும்பகருணன் போர்செய்ய வாளும் கேடகமும் எடுத்தல் (7697-7699)

7697.‘என்முகம் காண்பதன் முன்னம் யான் அவன்
தன்முகம் காண்பது சரதம்தான் ‘என
பொன்முகம் காண்பது ஓர் தோலும் போர் இடை
வன்முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான்.
299

உரை
   
 
7698.வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய்சின அரக்கனும் கனன்றபோது அவன்
நாசியும் செவியும் வெங்குருதி நான்றவே.
300

உரை
   
 
7699.ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மாயிருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டு ஆயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான்.
301

   
 
கும்பகருணனது போர் ஆரவாரம்

7700.விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன்; ஆர்த்தனன் ஆயிரம் பெருங்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான்.
302

உரை
   
 
கும்பகருணன் கேடகம் வீசுதல் (7701-7702)

7701.வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்
கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு எழுந்து
ஆசைகள் தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால்.
303

உரை
   
 
7702.போயின கேடகம் போக நோக்கினன்
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டாயிரம் பேணும் கேடகம்
‘ஏ ‘எனும் அளவினில் எய்தச் சென்றதால்.
304

   
 
கும்பகருணன் வானரப் படையை அழிப்பது (7703-7704)

7703.தோலிடைத் துரக்கவும் துகைக்கவும் சுடர்
வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்
காலுடைக் கடலெனச் சிந்தி கைகெட
வாலுடை நெடும்படை இரிந்து மாய்ந்ததால்.
305

உரை
   
 
7704.ஏறுபட்டதும் இடை எதிர்ந்துேளார் எலாம்
கூறுபட்டதும் கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால்.
306

உரை
   
 
சாம்பன் இராமனைத் தூண்டுதல்

7705.‘இடுக்கு இலை எதிர்; இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாம் எனின் குரங்கின் தானையை
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் ‘எனா
முடுக்கினன் இராமனைச் சாம்பன் முன்னியே.
307

உரை
   
 
இராமன் கும்பகருணனை எதிர்த்தல்

7706.அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும் வலியும் சிந்தியா
நண்ணினன் நடந்து எதிர் ‘நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் ‘என்னும் கற்பினான்.
308

உரை
   
 
இராமனும் கும்பகருணனும் பொருதல் (7707-7710)

7707.ஆறினோடு ஏழுகோல் அசனி ஏறு என
ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான்.
309

உரை
   
 
7708.ஆடவர்க்கு அரசனும் தொடர அவ் வழி
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங்கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக
கேடகப் புறத்தினால் கிழியச் சிந்தினான்.
310

உரை
   
 
7709.சிறுத்தது ஓர் முறுவலும் தரெிய செங்கணான்
மறித்து ஒரு வடிக்கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே.
311

உரை
   
 
7710.‘அற்றது தடக்கை வாள் அற்றது இல் ‘என
மற்று ஒரு வயிரவாள் கடிதின் வாங்கினான்
‘முற்றினன் முற்றினன் ‘என்று முந்து வந்து
உற்றனன் ஊழித் தீ அவிய ஊதுவான்.
312

உரை
   
 
இராமன் கும்பகருணனது, வாள், கேடகம் கவசம் இவற்றைத் துணித்தல்

7711.அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடுங் கேடகம் புரட்டி போர்த்தது ஓர்
நல் நெடுங் கவசத்து நாம வெங்கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்.
313

உரை
   
 
அப்போது இராவணன் அனுப்பிய படை உதவிக்கு வருதல் (7712-7713)

7712.அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட
சிந்துவும் தன்னிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மாப் படை.
314

உரை
   
 
7713.வில்வினை ஒருவனும் ‘இவனை வீட்டுதற்கு
ஒல்வினை இது ‘எனக் கருதி ஊன்றினான்;
வல்வினை தீயன வந்தபோது ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே.
315

உரை
   
 
வந்த படையை இராமன் பொர அழைத்தல் (7714-7715)

7714.கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மத மலை மிடைந்த போர்ப்படை
காத்தது கருணனை; கண்டு மாய மாக்
கூத்தனும் வருக! எனக் கடிது கூவினான்.
316

உரை
   
 
7715.சூழி வெங் கடகரி புரவி தூண்டுமால்
ஆழி அம் தேரொடு மிடைந்த ஆர்கலி
ஏழ் இருகோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான்.
317

உரை
   
 
கும்பகருணன் சூலம் படை யேந்தி வருதல்

7716.காலமும் காலனும் கணக்கு இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான்.
318

உரை
   
 
இராமன் அம்பால் அரக்கர் இறந்து கிடத்தல்

7717.‘அரங்கு இடந்தன, அறுகுறை நடிப்பன
    அல்ல ‘என்று இமையோரும்,
‘மரம் கிடந்தன, மலைக்குவை
    கிடந்தனவாம் ‘என மாறாடி,
கரம் கிடந்தன காத்திரம்
    கிடந்தன, கறைபடும்படி கவ்விச்
சிரம் கிடந்தன; கண்டனர்;
    கண்டிலர், உயிர்கொடு திரிவாரை.
319

உரை
   
 
அரக்கர் படைக்கலம் அழிவுற்றுக் கிடத்தல்

7718.இற்ற அல்லவும், ஈர்ப்பு உண்ட அல்லவும்,
    இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும்,
    சுடுபொறித் தொகை தூவி
வெற்ற வெம்பொடி ஆயின அல்லவும்,
    வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும், கண்டிலர்
    படைக்கலம் - அடுகளம் திடராக.
320

உரை
   
 
யானைகளின் அழிவு

7719.படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன
    பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
குடைந்து, வையகம் புக்குறத்
    தேக்கிய குருதியால் குடர்சோரத்
தொடர்ந்து, நோய் ஒடும் துணைமருப்பு
    இழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர்
    கிளர் மதகரி எங்கும்.
321

உரை
   
 
தேர்களின் அழிவு

7720.வீழ்ந்த ஆளன, விளிவுற்ற பதாகைய,
    வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல்நெடும் புரவிய,
    முறை முறை அச்சொடும் பொறி அற்று,
தாழ்ந்த வெள்நிணம் தயங்கு
    வெங் குழம்பு இடைத் தலைத்தலை மாறு ஆடி,
ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தன
    கண்டிலர் அதிர்குரல் மணித் தேர்கள்.
322

உரை
   
 
குதிரைப் படையின் அழிவு

7721.ஆடல் தீர்ந்தன, வளைகழுத்து அற்றன,
    அதிர் பெருங் குரல் நீத்த,
தாள் துணிந்தன, தறுகண் வெங்கரி
    நிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
கோடு அமைந்த வெங்குருதி நீர்
    ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி,
ஓடல் அன்றி, நின்று உகள்வன
    கண்டிலர் உருகெழு பரி எல்லாம்.
323

உரை
   
 
காலாட் படையின் அழிவு

7722.வேத நாயகன் வெங்கணை வழக்கத்தின்
    மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்? உம்பரும்,
    அரக்கர் வெங்களத்து வந்து உற்றாரைக்
காதல் விண்ணிடைக் கண்டனர்;
    அல்லது கணவர்தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர்;
    கண்டிலர் மலையினும் பெரியாரை.
324

உரை
   
 
இராமன் கும்பகருணனை நோக்கி இரங்கிக் கூறத் தொடங்குதல்

7723.பனிப் பட்டால் எனக் கதிர்வரப்
    படுவது பட்டது, அப்படை; பற்றார்
துனிப் பட்டார் எனத் துலங்கினர்
    இமையவர்; ‘யாவர்க்குந் தோலாதான்
இனிப் பட்டான் ‘என, வீங்கின
    அரக்கரும் ஏங்கினர்; ‘இவன் அந்தோ,
தனிப் பட்டான்! ‘என, அவன் முகன்
    நோக்கி ஒன்று உரைத்தனன், தனிநாதன்.
325

உரை
   
 
கும்பகருணனது விருப்பத்தை வினாவுதல் (7724-7725)

7724.ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;
    எதிர் ஒருதனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்,
    நின் உயிர் நினக்கு ஈவன்;
போதியோ? பின்றை வருதியோ?
    அன்று எனின் போர்புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது
    சொல்லுதி, சமைவுறத் தரெிந்து அம்மா!
326

உரை
   
 
7725.‘இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,
    யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை,
    அந்தகன் ஆணையின்வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந்திரு,
    நாெளாடு; பெருந்துயில் நெடுங்காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு
    உறுவது ஒன்று? உரை என்றான்.
327

உரை
   
 
கும்பகருணன் கூறுகின்றான் (7726-7729)

7726.‘மற்று எலாம் நிற்க; வாசியும்,
    மானமும், மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும்,
    என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து,
    தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கை போல் என்முகம் காட்டி
    நின்று ஆற்றலென் உயிர் அம்மா!
328

உரை
   
 
7727.‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்;
    அவ் வகை நிலை நோக்கி,
தாக்கணங்கு அனையவள், பிறர்மனை ‘
    எனத் தடுத்தனென் தக்கோர் முன்
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன்
    செவி தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால்,
    அது முடியுமோ? முடியாதாய்!
329

உரை
   
 
7728.உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து,
    உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான்,
    வானவர் நகை செய்ய,
செங்கை தாங்கிய சிரத்தொடும்
    கண்ணின்நீர் குருதியினொடு தேக்கி,
எங்கை போல் எடுத்து அழைத்து,
    நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா!
330

உரை
   
 
7729.‘ஒருத்தன், நீ தனி உலகு ஒரு
    மூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ?
    சேவகர் கடன் ஓராய்
செருத் திண் வாளினால் திறத்திறன்
    உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ?
    தக்கது புகன்றிலையோ? ‘என்றான்.
331

உரை
   
 
கும்பகருணன் குன்றை இராமன்மேல் எறிதல்

7730.என்று, தன் நெடுஞ் சூலத்தை
    இடக்கையின் மாற்றினன்; வலக்கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இருநிலக்
    குடர் கவர்ந்தனெக் கொண்டான்,
சென்று விண்ணொடு பொறியொடும்
    தீச்செல, சேவகன் செனி நேரே,
‘வென்று தீர்க ‘என விட்டனன்;
    அது வந்து பட்டது மேல் என்ன.
332

உரை
   
 
இராமன் அக்குன்றைத் துகளாக்குதல்

7731.அனைய குன்று எனும் அசனியை,
    யாவர்க்கும் அறிவு அரும் அரன் மேனி
புனையும் நல் நெடு நீறு என
    நூறிய புரவலன், பொர என்று
நினையும் மாத்திரை ஒருகைநின்று
    ஒருகையில் நிமிர்கின்ற நெடுவேலை,
தினையின் மாத்திரைத் துணிபட,
    வரன்முறை சிந்தினன், சரம் சிந்தி.
333

உரை
   
 
இராமன் அம்பு கும்பகருணனது கவசத்தைக் கடக்க முடியாமை

7732.அண்ணல் வில் கொடுங்கால் விசைத்து
    உகைத்தன, அலைகடல் வறள் ஆக
உண்ண கிற்பன, உருமையும் சுடுவன,
    மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இல
    வெய்யவன் மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன்
    கவசத்தைக் கடந்தில கதிர் வாளி.
334

உரை
   
 
சங்கரன் கவசத்தைச் சங்கரன் படையால் அறுத்தல்

7733.தாக்குகின்றன நுழைகில தலை;
    அது, தாமரைத் தடங்கண்ணான்
நோக்கி, இங்கு இது சங்கரன் கவசம் ‘
    என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடுபடை
    தொடுத்துவிட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது,
    வரைசுழல் விரிசுடர் வீழ்ந்து என்ன.
335

உரை
   
 
கவசமிழந்த கும்பகருணன் தண்டு கொண்டு வானரப் படையை அரைத்தல்

7734.காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்று
    உகுதலும், கண்தொறும் கனல்சிந்தி,
ஏந்து தன் நெடுந் தோள்புடைத்து ஆர்த்து,
    அங்கு ஓர் எழுமுனை வயிரப் போர்
வாய்ந்த வல்நெடுந் தண்டு
    கைப்பற்றினன்; வானரப்படை முற்றும்
சாந்து செய்குவன ஆம் ‘என
    முறைமுறை அரைத்தனன், தரையோடும்
336

உரை
   
 
அம்புகள் பல படவும் அடங்காது கும்பகருணன் சாரிகை திரிதல்

7735.பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம்,
    பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவன
    ஆயிரம், சென்றுபுக்கு உருவாது
மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம்,
    வடிக்கணை என்றாலும்,
பிறப்ப வாய் இடைத் தழெிப்பு உறத் திரிந்தனன்
    கறங்கு எனப் பெருஞ்சாரி.
337

உரை
   
 
கும்பகருணன் தண்டு அற வாளும்
கேடகமும் எடுத்தல்

7736.‘தண்டு கைத் தலத்து உளது எனின்,
    உளதன்று தானை ‘என்று, அது சாயக்
கொண்டல் ஒத்தவன், கொடுங்கணை
    பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
கண்டம் உற்றது மற்று அது; கருங்கழல்
    அரக்கனும், கனன்று ஆங்கு ஓர்
மண்தலச் சுடராம் எனக்
    கேடகம் வாங்கினன் வாேளாடும்.
338

உரை
   
 
இராமன் கும்பகருணனது தோளில் அம்பு எய்தல்

7737.வாள் எடுத்தலும், வானர வீரர்கள்
    மறுகினர், வழிதோறும்
தாள் எடுத்தனர், கழித்தனர்; வானவர்
    தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
‘கோள் எடுத்தது, மீள ‘என்று
    உரைத்தலும், கொற்றவன், ‘குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி ‘என்று,
    ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த.
339

உரை
   
 
கும்பகருணனது கை அறுதல்

7738.அலக்கண் உற்றது தீவினை; நல்வினை
    ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கம் உற்றனர், இராக்கதர்
    ‘கால வெங்கருங்கடல் திரைபோலும்
வலக் கை அற்றது, வாெளாடும்;
    கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும்
    இராவணன் தனக்கும் ‘என்று எழுந்து ஓடி.
340

உரை
   
 
கவிக்கூற்று (7739-7740)

7739.மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ,
    ‘மறத் தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் ‘எனின் நல்லது;
    பேர் எழில் தோேளாடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங்கையினால்
    எடுத்து அவன் ஆர்த்து ஓடி
எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து
    ஓடின, வானரக் குலம் எல்லாம்.
341

உரை
   
 
7740.வள்ளல் காத்து உடன் நிற்கவும்,
    வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட, பண்டையின்
    மும்மடி குமைக்கின்ற படிநோக்கி
‘வெள்ளம் இன்றொடும் வீந்து உறும் ‘
    என்பதோர் விம்மலுற்று உயிர்வெம்ப,
உள்ள கையினும் அற்ற
    வெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம்.
342

உரை
   
 
கும்பகருணன் இராமன்மேல் ஒடுதல்

7741.மாறு வானரப் பெருங்கடல் ஓட,
    தன் தோள்நின்று வார்சோரி
ஆறு விண்தொடும் பிணம் சுமந்து
    ஓட, மேல் அமரரும் இரிந்து ஓட,
கூறு கூறுபட்டு இலங்கையும்
    விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன்,
    மழைக் குலம் இரிந்து ஓட.
343

உரை
   
 
கும்பகருணனது மற்றொரு கையையும் இராமன் அம்பினால் துணித்துக் கடலிலிடுதல்

7742.‘ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி ‘
    என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன்
    நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட,
    நெடுங்கொற்றவன் கொலை அம்பால்,
வேற்றுக் கையையும் வேலையில்
    இட்டனன், வேறும் ஓர் அணை மான.
344

உரை
   
 
கடலில் கிடந்த கையின் தோற்றம் (7743-7744)

7743.சந்திரப் பெருந்தூணொடு சார்த்தியது,
    அதில் ஒன்றும் தவறு ஆகாது,
அந்தரத்தவர் அலைகடல் அமிழ்து
    எழக் கடைவுறும் அந்நாளில்,
சுந்தரத் தடந்தோள் வளை மாசுணம்
    சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது, மற்றவன்
    மணியணி வயிரத் தோள்.
345

உரை
   
 
7744.சிவண வண்ணவான் கருங்கடல்
    கொடுவந்த செயலினும், செறிதாரைச்
சுவண வண்ண வெஞ்சிறையுடைக்
    கடுவிசை முடுகிய தொழிலானும்,
அவண அண்ணலது ஏவலின்
    இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம்
    ஒத்தது, அவ் உயர் பொன்தோள்.
346

உரை
   
 
கைகளை இழந்த கும்பகருணன் ஆரவாரித்துக்கொண்டு காலால் வானர சேனையைக் கலக்குதல்

7745.பழக்க நாள் வரு மேருவை
    உள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது
    ஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
முழக்கினால் என முழங்கு பேர்
    ஆர்ப்பினான், வானர முந்நீரை
உழக்கினான், தசை தோல் எலும்பு
    எனும் இவை குருதியொடு ஒன்றாக.
347

உரை
   
 
இராமன் கும்பகருணனுடைய வலக்காலைத் தடிதல்

7746.நிலத்தகால், கனல், புனல், என
    இவை முற்றும் நிருதனது உருவு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவு
    கொண்டால் என உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்கு
    அரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங்
    கணையினால் தடிந்தனன் தனு வல்லான்.
348

உரை
   
 
வலக்காலற்றும் கும்பகருணன் குந்திவந்து பொர வருதல்

7747.பந்தி பந்தியின் பற்குலம்
    மீன்குலம் பாடுபாடு உற, பாகத்து
இந்து வெள்ளெயிறு இமைத்திட,
    குருதியாறு ஒழுக்கல் கொண்டு எழுசெக்கர்
அந்தி வந்தனெ, அகல் நெடு
    வாய் விரித்து, அடி ஒன்று கடிது ஒட்டி,
குந்தி வந்தனன், நெடுநிலம்
    குழிபட, குரைகடல் கோத்து ஏற.
349

உரை
   
 
மற்றொரு காலையும் துணித்தல் (7748-7749)

7748..மாறுகால் இன்றி வானுற நிமிர்ந்து,
    மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து,
    மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன் எரிமுகப் பகழியால்,
    இருநிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன்,
    அறத்தொடு வேதங்கள் கூத்தாட.
350

உரை
   
 
7749.கை இரண்டொடு கால்களும்
    துணிந்தன; கருவரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால்
    வெரிந் உறத் தொளை போய,
செய்ய கண்பொழி தீச் சிகை
    இருமடி சிறந்தது; தழெிப்போடு
பெய்யும் வானிடை இடியினும்
    பெருத்தது; வளர்ந்தது, பெருஞ்சீற்றம்.
351

உரை
   
 
கும்பகருணன் காலினால் குன்றினை எடுத்து வீச இராமன் கைவிதிர்த்தல்

7750.பாதம் கைகேளாடு இழந்தவன்,
    படியிடை இருந்து, தன் பகுவாயால்
காதம் நீளிய மலைகளைக் கடித்து
    இறுத்து எடுத்து, வெங்கனல் பொங்கி,
மீது மீதுதன் அகத்து எழு காற்றினால்
    விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம்
    உருமின் வீழ் உயிர் என்ன.
352

உரை
   
 
7751.தீயினால் செய்த கண் உடையான்,
    நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று
    நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம்
    இரிந்து எழ, பிலம் திரிந்தது போலும்
வாயினால் செல, வீசினன்;
    வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்
353

உரை
   
 
கும்பகருணன் இராமனாற்றலைப் புகழ்ந்து இராவணனது அழிவுக்கு அழுங்கல்

7752.‘ஐயன் வில்தொழிற்கு ஆயிரம்
    இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
கையும் கால்களும் இழந்தனன்; வேறு
    இனி உதவல் ஆம் துணை காணேன்;
மையல் நோய்கொடு முடிந்தவா தான்! ‘
    என்றும், வரம்பு இன்றி வாழ்வானுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன்
    உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான்.
354

உரை
   
 
கும்பகருணன் இராமனது முகநோக்கிச் சொல்லுதல் (7753-7758)

7753.சிந்துரச் செம் பசுங்குருதி
    திசைகள் தொறும் திரை ஆறா,
எந்திரத் தேர் கரி, பரி, ஆள்,
    ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
கந்தரப் பொன் கிரி ஆண்மைக்
    களிறு அனையான், கண்நின்ற
சுந்தரப் பொன் தோளானை
    முகம் நோக்கி, இவை சொன்னான்.
355

உரை
   
 
7754.‘புக்கு அடைந்த புறவு
    ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
மைக் கடம் கார் மதயானை வாள்
    வேந்தன் வழி வந்தீர்!
இக்கடன்கள் உடையீர் நீர்
    எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர்
    காக்கக் கடவீர், என்கடைக் கூட்டால்.
356

உரை
   
 
7755.‘நீதியால் வந்ததொரு
    நெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறு
    நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்;
    அரசர் உருக் கொண்டு அமைந்த
வேதியா! இன்னும் உனக்கு
    அடைக்கலம் யான் வேண்டினேன்.
357

உரை
   
 
7756.‘வெல்லுமா நினைக்கின்ற வேல்
    அரக்கன் ‘வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் ‘‘
    என்னும் கறு உடையான்;
ஒல்லுமாறு இயலுமேல்,
    உடன்பிறப்பின் பயன் ஒரான்;
கொல்லுமால், அவன் இவனை;
    குறிக்கோடி, கோடாதாய்!
358

உரை
   
 
7757.‘தம்பி என நினைந்து, இரங்கித்
    தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின்
    கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான்
    அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி,
    யான் வேண்டினேன்.
359

உரை
   
 
7758.“மூக்கு இலா முகம் என்று
    முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை
    நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின்,
    நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை
    வேண்டுகின்ற பொருள் ‘‘ என்றான்
360

உரை
   
 
இராமன் அவன் வேண்டுகோளின்படி செய்தல

7759.‘வரம் கொண்டான்; இனி மறுத்தல்
    வழக்கு அன்று ‘என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ்சிலையின்
    உயர் நெடுநாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத்
    திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங்கடலின்
    அழுவத்துள் அழுத்தினான்.
361

உரை
   
 
கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்

7760.மாக்கூடு படர்வேலை
    மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு,
    மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு தவிர்த்து, இருகண்
    புகையோடு புகை உயிர்க்கும்
மூக்கூடு புகப்புக்கு
    மூழ்கியது அம் முகக் குன்றம்.
362

உரை
   
 
கும்பகருணன் இறந்தமை கண்டு வானவர் முதலியோர் மகிழ்தலும் அரக்கர் இராவணனுக்கு உணர்த்த ஓடுதலும் படலத் தோற்றுவாய்

7761.ஆடினார் வானவர்கள்;
    அரமகளிர் அமுத இசை
பாடினார் மாதவரும்
    வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத் தலைவர்
    கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர்,
    இராவணனுக்கு உணர்த்துவான்.
363

உரை