அரக்கியர் அழுவதுணர்ந்து இந்திரசித்து எழுதல்

8133.‘குழுமி, கொலை வாள் கண் அரக்கியர்
    கூந்தல் தாழ,
தழுவித் தழுவித் தம்
    கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத்தொழில் யாது கொல்? ‘என்று,
    ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என
    இந்திரசித்து எழுந்தான்
1

உரை
   
 
இந்திரசித்தின் ஐயப்பாடு

8134.‘எட்டு ஆகிய திக்கையும் வென்றவன்
    இன்றும் ஈடு
பட்டான் கொல்? அது அன்று எனின்,
    பட்டு அழிந்தான் கொல்? பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு
    வேலையோடும்
கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம்
    என் கொல்? ‘என்றான்.
2

உரை
   
 
இந்திரசித்து இராவணனைக் காணுதல்

8135.கேட்டான், ‘இடை உற்றது என்? ‘என்று
    கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர்; மாற்றம்
    மறந்து நின்றார்,
‘ஓட்டா நெடுந்தேர் கடிது ‘ஓட்டி
    இமைப்பின் உற்றான்,
காட்டாதன காட்டிய தாதையைச்
    சென்று கண்டான்
3

உரை
   
 
இந்திரசித்தின் வினாவும் இராவணன் விடையும்

8136.கண்டான், இறை ஆறிய நெஞ்சினன்,
    கைகள் கூப்பி,
‘உண்டாயது என், இவ் உழி? ‘என்றலும்
    ‘உம்பி மாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப
    நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான்,
    அதிகாயனும் வீர! ‘என்றான்.
4

உரை
   
 
இந்திரசித்து ஏங்கி நைதல்

8137.சொல்லாத முன்னம், சுடரைச்
    சுடர்தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி,
    விண்மீது பார்த்தான்;
எல்லாரும் இறந்தனரோ! ‘என
    ஏங்கி நைந்தான்;
வில்லாளரை எண்ணில் விரற்குமுன்
    நிற்கும் வீரன்
5

உரை
   
 
உம்பியரைக் கொன்றோர் இவர் என
இராவணன் உரைத்தல்

8138.‘ஆர் கொன்றவர் ‘என்றலும் பேர்
    அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்;
    பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால் என
    உற்ற எல்லாம்,
தார் கொன்றையினான் கிரி
    சாய்த்தவன்தான் உரைத்தான்.
6

உரை
   
 
இந்திரசித்து இராவணனைச் சினத்தல் (8139-8140)

8139.‘கொன்றார் அவரோ! “கொலை சூழ்க “ என
    நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை
    அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை;
    இற்றது ‘என்னா
நின்றான், நெடிது உன்னி, முனிந்து,
    நெருப்பு உயிர்ப்பான்.
7

உரை
   
 
8140.‘அக்கப் பெயரோனை நிலத்தொடு
    அரைத்துளானை,
விக்கற்கு ஒரு வெவ் உரைத் தூதுவன்
    என்று விட்டாய்;
புக்கு அத் தலை எய்த நினைந்திலை;
    புந்தி இல்லாய்!
மக்கள் துணை அற்றனை; இற்றது உன்
    வாழ்க்கை மன்னோ!
8

உரை
   
 
இந்திரசித்தின் வஞ்சினம் (8141-8145)

8141.‘என், இன்று நினைந்தும், இயம்பியும்,
    எண்ணியும் தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக்
    கொன்றுளானை,
அந்நின்ற நிலத்து அவன் ஆக்கையை
    நீக்கி அல்லால்,
மன்நின்ற நகர்க்கு இனி வாரலென்;
    வாழ்வும் வேண்டேன்.
9

உரை
   
 
8142.‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய
    மானிடன்தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள்
    உண்டிலாளேல்,
ஏற்றான் இகல் இந்திரன் ஈர் இரு
    கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம்
    தோற்க என்றான்.
10

உரை
   
 
8143.வெங்கண் நெடு வானரத் தானையை
    வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனைப்
    படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை
    கடக்கிலாத
செங்கண் நெடு மால் முதல் தேவர்
    சிரிக்க, என்னை!
11

உரை
   
 
8144.‘பாம்பின் தரு வெம்படை, பாசு
    பதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு
    தயெ்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று
    உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென் உயிர்; சோறும்
    உகந்து வாழேன்
12

உரை
   
 
8145.‘மருந்தே நிகர் எம்பிதன்
    ஆருயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு
    ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகை
    செய்திடப் போந்து, பாரின்
இருந்தேன் எனின், நான் அவ்
    இராவணி அல்லென் ‘என்றான்.
13

உரை
   
 
இராவணன் இந்திரசித்தைப் பாராட்டுதல்

8146.‘ஏகா, இது செய்து, எனது இன்னலை
    நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு
    ஆற்றலார் மேல்
மாகால் வரி வெஞ்சிலையோடும்
    வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி
    இவ் இன்னலில் சிந்தை செய்தேன்.
14

உரை
   
 
இந்திரசித்தின் போர்க்கோலம்

8147.என்றானை வணங்கி, இலங்கு அயில்
    வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் ஆறா, உருவா,
    உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில்
    புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச்சிலை வாங்கினன்
    வானை வென்றான்.
15

உரை
   
 
வில்லின் பெருமை

8148.வயிரந் நெடு மால்வரை கொண்டு,
    மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறாவகை, இந்திரற்கு
    என்று செய்த
உயர் வெஞ்சிலை; அச்சிலை பண்டு அவன்
    தன்னை ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது;
    தோற்றம் ஈதால்.
16

உரை
   
 
அம்புறாத்தூணியின் பெருமை

8149.தோளில் கணைப் புட்டிலும், இந்திரன்
    தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன;
    ஆழி ஏழும்
மாளப் புனல் வற்றினும் வாளி
    அறாத; வன்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர்
    கூடு போல்வ.
17

உரை
   
 
இந்திரசித்து ஆயுதங்களை ஆய்ந்து கொள்ளுதல்

8150.பல்லாயிர கோடி படைக்கலம்,
    பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும்
    ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன்
    அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும்
    ஆய்ந்து, கொண்டான்.
18

உரை
   
 
இந்திரசித்து ஏறிய தேரின் பெருமை

8151.நூறாயிரம் யாளியின் நோன்மை
    தரெிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம்
    பூண்டது என்ப;
மாறாய் ஒர் இலங்கை நிகர்ப்பது;
    வானுேளாரும்
தேறாதது மற்று அவன் ஏறிய
    தயெ்வ மாத்தேர்.
19

உரை
   
 
அத்தேரின் விரைவும் வலிமையும்

8152.பொன் சென்று அறியா உவணத் தனிப்
    புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன்
    விடைக்கும், மேல் நாள்
பின் சென்றது அல்லால் ஒர் பெருஞ்சிறப்பு
    உற்ற போதும்
முன் சென்று அறியாதது, மூன்று
    உலகத்தினுள்ளும்.
20

உரை
   
 
பேய்க் கொடி

8153.‘ஏயாத் தனிப் போர் வலி
    காட்டிய இந்திரன் தன்
சாயாப் பெரும் சாய் கெட,
    தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன்
    வந்தனன், என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு
    நெடுங்கொடி பெற்றது அம்மா!
21

உரை
   
 
தேர்ச் சக்கரமும் மொட்டும்

8154.செதுகைப் பெருந் தானவர் ஊனொடும்
    தேய்த்த நேமி
யது; ‘கைத்திசை யானையை ஓட்டியது ‘
    என்னலாமே?
மதுகைத் தடந்தோள்வலி காட்டிய
    வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி
    மொட்டது அம்மா!
22

உரை
   
 
சேமத்தேர் பின்வர இந்திரசித்து தேரேறிச் செல்லுதல்

8155.அத் தேரினை ஏறியது ஒப்பன
    ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர,
    ‘உள்ளம் வெம்போர்ப்
பித்து ஏறினன் ‘என்ன நடந்தனன்
    பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு
    அறியாத ஈட்டான்
23

உரை
   
 
இந்திரசித்துடன் சென்ற சேனையின் அளவு

8156.அன்னானொடு போயின தானை
    அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு
    வான்மீகன் என்னும்
நல் நான்மறையான், ‘அது
    நாற்பது வெள்ளம் ‘என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து
    தொகுக்க வல்லார்?
24

உரை
   
 
பல்லியம் ஆர்த்தல்

8157.தூமக்கண் அரக்கனும், தொல் அமர்
    யார்க்கும் தோலா
மா பக்கனும், அந்நெடுந் தேர் மணி
    ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர பெருஞ்
    சங்கம் விம்ம,
நாமக் கடல் பல் இயம் நால் கடல்
    மேலும் ஆர்ப்ப.
25

உரை
   
 
நால்வகைச் சேனையும் உடன்வர இந்திரசித்துச்
செல்லுதல்

8158.தேர் ஆயிரம் ஆயிர கோடி தன்
    மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின்
    இரட்டி போத,
தார் ஆர் புரவிக் கடல் பின் செல,
    தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன்
    பேர்ச்சி இல்லான்.
26

உரை
   
 
இலக்குவன் போரை விரும்பி நிற்றல்

8159.நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
‘பொன்றினன் இராவணன் புதல்வன்; போர்க்கு இனி
அன்றவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் ‘என விரும்பும் சிந்தையான்.
27

உரை
   
 
யாரிவன் என்ற இலக்குவனுக்கு வீடணன்,
இந்திரசித்து எனல்

8160.‘யார் இவன் வருபவன்? இயம்புவாய்! ‘என
வீர வெந் தொழிலினான் வினவ வீடணன்
‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர் ‘என்றான்.
28

உரை
   
 
வீடணன் இலக்குவனுக்குச் சில சொல்லுதல்

8161.‘எண்ணினது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான்!
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால்.
29

உரை
   
 
உடன் வரத்தக்க வீரர் இவர் எனல்

8162.‘மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும்
போர் செயத் தகுதியால் புகழின் பூணினாய்.
30

உரை
   
 
வீடணன் கூறும் இந்திரசித்தன் வீரச் சிறப்புகள்
(8163-8164)

8163.‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர்கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய்! அமிழ்தின் வன்மையால்.
31

உரை
   
 
8164.‘இனி அவை மறையுமோ இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது இவன்
தனுமறை வித்தகம் தடுக்கற் பாலதோ?
32

உரை
   
 
அனுமன் இலக்குவனை அடைதல்

8165.என்று அவன் இறைஞ்சலும்; இளைய வள்ளலும்
‘நன்று ‘என மொழிதலும் நணுகினான் அரோ
வன் திறல் மாருதி ‘இலங்கைக் கோமகன்
சென்றனன் இளவல்மேல் ‘என்னும் சிந்தையான்.
33

உரை
   
 
அனுமன் வருவதற்குக் காரணம்

8166.கூற்றமும் கண் புலம் புதைப்ப கோத்து எழு
தோற்றமும் இராவணி துணிவும் நோக்கு உறா
மேல் திசை வாயிலை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினான் கடிதின் வந்து அரோ.
34

உரை
   
 
சுக்கிரீவன் சேனையொடு இலக்குவனை அடைதல்

8167.அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்கவன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையான்.
35

உரை
   
 
இரு சேனைகளும் சினமிக்கு எதிர்தல்

8168.இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போன்றன மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.
36

உரை
   
 
விண்ணவர் போரைக்காண விரும்பி வருதல்

8169.‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தரெிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று ‘எனா
நண்ணினார் இமையவர் நங்கை மாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே.
37

உரை
   
 
போர் ஆரவாரம் (8170-8172)

8170.ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளைப் புரந்தர ஆதியர்.
38

உரை
   
 
8171.‘எற்றுமின் பற்றுமின் எறிமின் எய்ம்மின் ‘என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்
முற்றுறு கடை யுகத்து இடியின் மும்மடி
பெற்றன; பிறந்தன சிலையின் பேர் ஒலி.
39

உரை
   
 
8172.கல்பட மரம்பட கால வேல் பட
வில்படு கணைபட வீழும் வீரர்தம்
எல்படும் உடல்பட இரண்டு சேனையும்
பின் பட நெடு நிலம் பிளந்து பேருமால்.
40

உரை
   
 
அரக்கர் கவந்தம் ஆடுதல்

8173.எழுத்தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத்தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன
அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ.
41

உரை
   
 
குரங்குகளின் உடம்புகளில் குருதி சோர்தல்

8174.வெட்டிய தலையன நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய குரங்கின் மொய்யுடல்
சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ.
42

உரை
   
 
குரக்குச் சேனை அரக்கர் சேனையை அழித்தல்

8175.பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம்.
43

உரை
   
 
அரக்கர் குரங்குகளை அழித்தல்

8176.வாள்களின் கவிக்குல வீரர் வார்கழல்
தாள்களைத் துணித்தனர் தலையைத் தள்ளினர்
தோள்களைப் பிரித்தனர் உடலைத் துண்டவன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார்.
44

உரை
   
 
குரங்குகள் அரக்கரைக் கொல்லுதல்

8177.மரங்களில் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
கரங்களை கழல்களை ஒடியக் காதின
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே.
45

உரை
   
 
சில குரங்குகளின் வீரச் செயல்

8178.சுடர் தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்தலை நெடுமரம் அற்ற கையன
உடர்த்தலை வயிரம் வேல் உருவ உய்த்தவர்
மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.
46

உரை
   
 
கரடிப்படை அரக்கரின் யானைப்படையை அழித்தல்

8179.அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
தொடர்ந்தன மழைபொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசித்தழல் கரடி காதுவ.
47

உரை
   
 
வானரப்படை அரக்கர்களின் நால்வகைப் படைமேலும் தாவிச் சென்று அழித்தல்

8180.கொலை மதக் கரியன குதிரை மேலன
வல மணித் தேரன ஆளின் மேலன
சிலைகளின் குடுமிய சிரத்தின் மேலன
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ.
48

உரை
   
 
குரங்குச் சேனையில் குருதி ஆறு பெருகி ஓடுதல்

8181.தண்டு கொண்டு அரக்கர் தாக்கத்
    தகர்ந்து உகு தலைகள் தள்ளி,
துண்டங்களாக வாளில் துணித்த
    பேர் உடலைத் தூவிக்
கொண்டு எழும் அலைகேளாடும்
    குரக்கு இனப் பிணத்தின் குப்பை
மண்டு வெங் குருதியாறு அம்
    மறிகடல் மடுத்த மாதோ.
49

உரை
   
 
அனுமனால் அரைப்புண்ட அரக்கர் சேனையின் நிலை

8182.பனி வென்ற பதாகை என்றும்,
    பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும்,
    தண்டு என்றும், தனிவேல் என்றும்,
சின வென்றி மதமா என்றும்,
    தேர் என்றும், தரெிந்தது இல்லை
அனுமன் கை வயிரக் குன்றால்
    அரைப் புண்ட அரக்கர் தானை.
50

உரை
   
 
அங்கதனால் அழிந்த அரக்கர் சேனை

8183.பொங்கு தேர், புரவி, யானை,
    பொரு கழல் நிருதர், என்னும்
சங்கையும் இல்லா வண்ணம்,
    தன் உளே தழுவி, கூற்றம்,
‘எங்கு உள, உயிர்? ‘என்று எண்ணி,
    இணைக் கையால் இளைத்தது என்ப
அங்கதன் மரம் கொண்டு எற்ற,
    அளறு பட்டு அழிந்த தானை.
51

உரை
   
 
முனிவர் போரைக் கண்டு வியத்தல்

8184.தாக்கிய திசைகள் தோறும்
    தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும்,
    புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி,
    அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர் முனிவர், ‘என்னே?
    இதற்கு அது தோற்கும் ‘என்றார்.
52

உரை
   
 
அரக்கரால் நிலைகெட்ட வானரரை வானர வீரர்
தடுத்துக் காத்தல்

8185.எடுத்தது நிருதர் தானை;
    இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர் முகங்கள் தாங்கி,
    தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர்; அரக்கர் வேலை
    பட்டது; படவும் பாரார்
கடுத்தனர்; கடுத்த பின்னும்,
    காத்தனர் கவியின் வீரர்.
53

உரை
   
 
நீலன் போர்த்திறம்

8186.சூலமும் மழுவுந் தாங்கித்
    தோள் இரு நான்கும் தோன்ற,
மூலம் வந்து உலகை உண்ணும்
    உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்;
    நிரந்தரம், கணங்கேளாடும்,
காலன் என்று ஒருவன், யாண்டும்
    பிரிந்திலன், பாசக் கையான்.
54

உரை
   
 
குமுதன் போர்த்திறன்

8187.“காற்று அலன்; புனலோ அல்லன்;
    கனல் அல்லன்; இரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்று கின்ற
    அருஞ் சமம் இதுவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி?
    என்பதம் இழந்தேன் ‘‘ என்னாக்
கூற்றமும் குலுங்கி அஞ்ச,
    வெம் கதக் குமுதன் கொன்றான்.
55

உரை
   
 
இடபன் போர்த்திறம்

8188.மறிகடல் புடைசூழ் வைப்பின்
    மானவன் வாளி போன
செறிபணை மரமே நின்ற,
    மரங்களில்; தரெியச் செப்பும்
குறி உடை மலைகள் தம்மில்
    குலவரைக் குலமே கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட,
    இடவன் அன்று இடந்து இலாத.
56

உரை
   
 
சாம்பவன் போர்த்திறம்

8189.‘வாம் பரி, மதமா, மான் தேர்,
    வாள் எயிற்று அரக்கர், மாயப்
பாம்பினும் வெய்யோர், சாலப்
    படுகுவர்; பயம் இன்று இன்றே
தூம்பு உறழ் குருதி மண்ட,
    தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும்
    என்று கொண்டு அமரர் ஆர்த்தார்
57

உரை
   
 
பனசன் படைக்கடலைக் கலக்குதல்

8190.பொருங் குலப் புரவி ஆன
    திரைகளும், கலம் பொன் தேரும்,
இருங்களி யானை ஆன
    மகரமும், இரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன
    மீன் குலம் நெரிந்து சிந்த,
கருங்கடல் கலக்கும் மத்தின்
    பனசனும் கலக்கிப் புக்கான்.
58

உரை
   
 
மயிந்தன் முதலிய வானரவீரரின் போர்

8191.மயிந்தனும் துமிந்தன் தானும்,
    மழைக் குலம் கிழித்து, வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர்
    உடன் பிறந்தவரை ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக்
    களிறு ஒத்தான், கவயன்; காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால்,
    கேசரி பெரும் போர் பெற்றான்.
59

உரை
   
 
அரக்கர் சரிய இந்திரசித்துப் போர் செய்யத் தொடங்குதல்

8192.பெரும் படைத் தலைவர் யாரும்
    பெயர்ந்திலர், பிணத்தின் குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து
    மலைகின்ற பொழுதின் வந்துற்று,
இரிந்தன கவியும் கூடி
    எடுத்தன; எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை;
    தாக்கினன் அரக்கன், தானே.
60

உரை
   
 
இந்திரசித்து நாண் தறெித்தல்

8193.பூண் எறிந்த குவடு அனைய தோள்கள்
    இருபுடை பரந்து உயர அடல்வலித்
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு
    ஒரு தொழில்பட சுவடு எறிந்தது
சேண் எறிந்துநிமிர் திசைகேளாடு மலை செவிடு
    எறிந்து உடைய மிடல்வலோன்
நாண் எறிந்து, முறைமுறை தொடர்ந்து
    கடல் உலகம் யாவையும் நடுக்கினான்.
61

உரை
   
 
இந்திரசித்து அம்பு எய்தல்

8194.சிங்க ஏறு கடல்போல் முழங்கி,
    நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச
    வெஞ்சின அனந்தன் மாச்
சங்க பால குளிகாதி வால் எயிறு
    தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங்கண் நாகம் என, வேகமாய்,
    உருமு வெள்க, வெங்கணைகள் சிந்தினான்.
62

உரை
   
 
இந்திரசித்தோடு வானரர் போர் (8195-8200)

8195.சுற்றும் வந்து, கவிவீரர் வீசிய
    சுடர்த் தடங்கல் வரை, தொல்மரம்
இற்று எறிந்து பொடியாய் உதிர்ந்தன;
    எழுந்து சேணிடை இழிந்தபோல்
வெற்றி வெங்கணை படப் படத் தலைகள்
    விண்ணினூடு திசைமீது போய்
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை
    அழுந்து கின்றன அனந்தமால்.
63

உரை
   
 
8196.சிலைத் தடம்பொழி வயக் கடும் பகழி
    செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்று
    தொறு உடல்பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல,
    எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்கெளாடு உரத்தலம்
    கழல, ஊடுசென்ற பல வாளியே.
64

உரை
   
 
8197.முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம்
    முடிந்து மாள்வன, தடிந்துபோய்,
கழுத்த, கைய, நிமிர்கால, வால, பல
    கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய,
    எற்ற, அற்றன எழுந்துமேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள்
    வீசி வீசி, உடன் வீழுமால்
65

உரை
   
 
8198.அற்ற பைந் தலை அரிந்து சென்றன
    அயில் கடுங்கணை வெயில்கள்போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின்
    நெடு நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரிந்து போவது ஒரு
    மேடு பள்ளம் வெளி இன்மையால்
உற்ற செங்குருதி வெள்ளம், உள்ளதிரை
    ஓத வேலையொடும் ஒத்ததால்.
66

உரை
   
 
8199.விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய
    மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய
    கால, வீசின் நிமிர்கைய, வாய்த்
தழெிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின்
    உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரக்கின்மேல், அவன்
    விடும்கொடும் பகழி பாயுமே.
67

உரை
   
 
8200.மொய் எடுத்தகணை மாரியால், இடைமுடிந்தது
    ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது
    யாதும் ஒன்று செவி உற்றிலார்;
‘மெய் எடுத்தகவி வெள்ளம் யாவையும்
    விழுந்துபோன ‘எனும் விம்மலால்
கய் எடுத்தன குரங்கின் ஓடும் முறை
    கண்டு தேவர்கள் கலங்கினார்.
68

உரை
   
 
சுக்கிரீவன் எதிர்த்தல்

8201.கண்ட வானரம் அனந்தகோடி முறை
    கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு,
    கணைமாறினான், விடுதல் இன்மையான்
கண்ட காலையில், விலங்கினான் இரவி
    காதல், காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர்
    மராமரம் சுலவு கையினான்.
69

உரை
   
 
சுக்கிரீவன் மராமரங்கொண்டு அரக்கர் படைக்கடலைக் கலக்குதல்

8202.உடைந்து, தன்படை உலைந்து சிந்தி,
    உயிர் ஒல்க, வெல்செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வண்ணம்
    என மேல்நிமிர்ந்தது ஓர் கடுப்பினான்
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய
    காவல்பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால்தளர
    வீசினான்; நிருதர் கூசினார்.
70

உரை
   
 
சுக்கிரீவன் கையிலிருந்த மரத்தை இந்திரசித்து
பொடியாக்குதல்

8203.சுற்றி நின்றபடை சிந்தி ஓட, ஓர்
    மராமரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, ‘வலிநன்று, நன்று! ‘என
    வியந்து, வெங்கணை தரெிந்து, அவன்
நெற்றியின்தலை இரண்டு, மார்பிடை ஒர் அஞ்சு,
    நஞ்சு என நிறுத்தவன்
பற்றி வந்த மரம் வேறு வேறுற
    நுறுக்கி, நுண்பொடி பரப்பினான்.
71

உரை
   
 
அனுமன் வந்து வீசிய குன்றை இந்திரசித்துப்
புழுதியாக்குதல்

8204.அக் கணத்து, அனுமன் ஆலகாலம்
    எனலாயது ஓர் வெகுளியாய் அவண்
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க
    நிமிர் தோள்புடைத்து உருமு போல் உறா,
‘இக் கணத்து அவன் இறக்கும் ‘என்பது
    ஒரு குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக்கிரி, சொரிந்து வாளிகளின்,
    ஊழ் இலாத சிறு பூழியாய்.
72

உரை
   
 
இந்திரசித்து அனுமனை நோக்கிக் கூறிய வீரமொழி

8205.“நில்லடா! சிறிது நில்லடா! உனை நினைத்து
    வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை, நினது ஆண்மை
    பேசி, உயிரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா; நெடு மரங்கேளா
    இருகரத்தினேன் வலி கடப்ப? நீ
சொல்லடா! ‘‘ என இயம்பினான் இகல்
    அரக்கன்; ஐயன் இவை சொல்லினான்.
73

உரை
   
 
அனுமன் கூறும் மறுமொழி

8206.வில் எடுக்க உரியார்கள் வெய்யசில
    வீரர், இங்குமுளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்;
    அது இன்று நாளையிடை காணலாம்;
எல் எடுத்தபடை இந்திராதியர் உனக்கு
    இடைந்து உயிர்கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறுசில
    போர் எடுத்து, எதிர் புகுந்துளேம்.
74

உரை
   
 
யாரொடு போர் செய்கின்றாய் என இந்திரசித்தை
வினவுதல்

8207.‘என்னோடே பொருதியோ? அது அன்று
    எனின் இலக்குவப் பெயரின் எம்பிரான்
தன்னோடே பொருதியோ? உன் உந்தைதலை
    தள்ள நின்ற தனிவள்ளலாம்
மன்னோடே பொருதியோ? உரைத்தது
    மறுக்கிலோம் ‘என வழங்கினான்
பொன்னோடே பொருவின் அல்லது ஒன்றொடு
    பொருப்படா உயர் புயத்தினான்
75

உரை
   
 
இந்திரசித்தின் தன் மேம்பாட்டுரை (8208-8209)

8208.எங்கு நின்றனன் இலக்குவப் பெயர்
    அவ் ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன்னுயிர்
    எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன்தனை மலைந்து கொன்று,
    முனிவு ஆற வந்தனன்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு
    ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே?
76

உரை
   
 
8209.யாரும் என்படைஞர் எய்தல் இன்றி அயல்
    ஏக, யானும், இகல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும்
    திரள் சிரம் துணிப்பென்; இது திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுேளார்களையும்
    மண்ணுேளாரையும் வரச் சொலும்;
போரும், இன்று ஒரு பகல் கண்ணே பொருது,
    வெல்வென்; வென்று அலது போகலேன்.
77

உரை
   
 
இந்திரசித்தும் அனுமனும் போர்செய்தல்

8210.என்று, வெம்பகழி, ஏழுநூறும், இருநூறும்,
    வெஞ்சிலை கொடு ஏவினான்
குன்று நின்று அனைய வீர மாருதிதன்
    மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள்
    எயிறு தின்று சீறி, ஒரு சேமவன்
குன்று நின்றது பறித்து எடுத்து,
    அவனை எய்தி, நொய்தின் இது கூறினான்.
78

உரை
   
 
அனுமன் இந்திரசித்தின் மேல் மலையை எறிதல்

8211.தும்பி என்று உலகின் உள்ள யாவை
    அவை ஏவையும் தொகுபு, துள்ளு தாள்
வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின்
    வலிதன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான்,
    வருதுணைத் தரிக்கிலை நலித்தியேல்
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும்
    இது; கா, அடா! சிலைவல் ஆண்மையால்
79

உரை
   
 
அனுமன் எறிந்த மலை இந்திரசித்தின் மார்பில் பட்டுத் துகளாதல்

8212.செருப் பயிற்றிய தடக்கை ஆளி செல
    விட்ட குன்று, திசை யானையின்
மருப்பை உற்ற திரள்தோள் இராவணன்
    மகன்தன் மார்பின், உயர் வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக்
    கடிது ஒடிந்து இடிந்து, திசைபோயதால்;
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம்
    உற, நீறுபட்டது நிகர்த்ததால்
80

உரை
   
 
இந்திரசித்து அனுமன்மேல் அம்புகளை எய்தல்

8213.விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய
    விலங்கல் நீறு படு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ்சினம் திருகி,
    வஞ்சன்மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன்
    மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடு உருவ,
    ஆயிரம் சரம் அழுத்தினான்.
81

உரை
   
 
அனுமன் தளர நீலன் இந்திரசித்தை எதிர்த்தல்

8214.ஒன்று போல்வன ஓராயிரம் பகழி
    ஊடுபோய் உருவ, ஆடகக்
குன்று காலெறிய மெய்குலைந்து இடை
    குலுங்க நின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர
    வாரி சோரவரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெம் கண் அடல்
    நீலன் வந்து இடை, நெருக்கினான்.
82

உரை
   
 
நீலன் எறிந்த மலையை இந்திரசித்து அம்பினால்
பொடி செய்தல்

8215.நீலன் நின்றது ஒரு நீலமால்வரை
    நெடுந்தடக்கையின் இடந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது
    ஒரு வெம்மையோடு வர வீசலும்
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது
    துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்புகொடு
    கல்லினான், நெடிய வில்லினான்.
83

உரை
   
 
இந்திரசித்தின் அம்பு துளைக்க நீலன் நடுங்குதல்

8216.ஊகம் எங்கும் உயிரோடு நின்றனவும்
    ஓட, வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உளவாக, மேருவினும்
    மும்மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங்குருதி
    ஆறு பாய, அனல் அஞ்சுவாய்
நாக வெங்கண் நகு, வாளி
    பாய்தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான்.
84

உரை
   
 
அங்கதன் வந்து இந்திரசித்தின்மேல் மலையை எறிதல்

8217.‘மேரு, மேரு ‘என, ‘அல்ல, அல்ல ‘என
    வேரினோடு நெடுவெற்பு எலாம்,
மாரின் மேலும் உயர்தோளின் மேலும் வர,
    வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கைநிற்க? எதிர்
    செல்லுமே? கடிது செல்லினும்
பேருமே? கொடிய வாளியால் முறி
    பெறுக்கலாவகை நுறுக்கினான்.
85

உரை
   
 
அங்கதன் இந்திரசித்தின் அம்பினால் மயங்கி வீழ்தல்

8218.நெற்றி மேலும், உயர் தோளின் மேலும்,
    நெடுமார்பின் மேலும், நிமிர் தாளினும்
புற்றினூடு நுழை நாகம் அன்ன,
    புகை வேக வாளிகள் புகப்புக,
தறெ்றி வாள் எயிறு தின்று, கைத் துணை
    பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற,
    மயங்கினான், நிலம் முயங்கினான்.
86

உரை
   
 
வானரசேனையின் சிதைவு கண்ட இலக்குவன் சினந்து சொல்லத் தொடங்கியது

8219.மற்றை வீரர்கள்தம் மார்பின்மேலும், உயர்
    தோளின்மேலும், மழை மாரிபோல்
கொற்ற வெங்கணை உலக்க, எய்தவை
    குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர்
    உள்ள எங்கணும் இரிந்த; அப்
பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள்
    எரி பிறந்த கண்ணன் இவை பேசினான்.
87

உரை
   
 
இலக்குவன் சொன்னது (8220-8221)

8220.பிழைத்தது, கொள்கை போத;
    பெரும்படைத் தலைவர் யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து;
    உலந்ததும் உலப்பிற்று அன்றே;
அழைத்து இவன்தன்னை யானே
    ஆருயிர் கொளப்படாதே?
இழைத்தது பழுதே அன்றோ?
    வீடண! என்னச் சொன்னான்.
88

உரை
   
 
8221.‘ஐய! ஈது அன்னதே யால்;
    ஆயிரங் கோடித் தேவர்
எய்தினர்; எய்தினார்கள்
    ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
செய்திலர் இவனை ஒன்றும்; நீ
    இது தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ, வேறு இவ்
    உலகினுக்கு உயிரோடு ‘என்றான்.
89

உரை
   
 
இந்திரசித்து இலக்குவனை ஒற்றனால் துணிதல்

8222.என்பது சொல்லக் கேட்ட,
    இந்திர வில்லினோடும்
பொன் பொரு மேகம் ஒன்று
    வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி,
    ‘இவன் கொலாம், பரதன் முன்னோன்
தன் பெருந் தம்பி? ‘என்றான்
    ஆம் எனச் சாரன் சொன்னான்.
90

உரை
   
 
அரக்க வீரர் இலக்குவனை எதிர்த்தல்

8223.தீயவன் இளவல் தன்மேல்
    செல்வதன்முன்னம், ‘செல்க! ‘என்று
ஏயினர் ஒருவர் இன்றி,
    இராக்கதத் தலைவர், ‘எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்!
    நண்ணினை நாங்கள் காண;
போய் இனி உய்வது எங்கே? ‘
    என்று, எரி விழித்துப் புக்கார்.
91

உரை
   
 
இலக்குவன் எதிர்த்த அரக்கரை அம்பு கொண்டழித்தல்

8224.கோடி நூறு அமைந்த கூட்டத்து
    இராக்கதர், கொடித்திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும்,
    கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார்; மூடினாரை முறை
    முறை துணித்து, வாகை
சூடினான், இராமன் பாதம்
    சூடிய தோன்றல் தம்பி.
92

உரை
   
 
அரக்கர் படை அழிதல்

8225.அதிர்ந்தன உலகம் ஏழும்;
    அனல் பொறி அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும்
    பிளந்தன; பிணத்தின் மேன்மேல்
உதிர்ந்தன, தலைகள்; மண்டி
    ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன, அமரர் கைகள்;
    விளைந்தது கொடிய வெம்போர்.
93

உரை
   
 
இலக்குவன் விட்ட அம்புகளின் வீரச்செயல்கள் (8226-8227)

8226.விட்டனன் விசிகம் வேகம்
    விடாதன வீரன், மார்பில்
பட்டன; உலகம் எங்கும்
    பரந்தன பதாகைக் காட்டைச்
சுட்டன; துரக ராசி
    துணித்தன பனைக் கைம் மாவை
சுட்டன; கூற்றம் என்ன
    அடர்ந்தன; அனந்தம் அம்மா.
94

உரை
   
 
8227.உலக்கின்றார்; உலக்கின்றாரை
    எண்ணுவான் உற்ற விண்ணோர்
கலக்குறு கண்ணர் ஆகி,
    கடையுறக் காணல் ஆற்றார்
விலக்கரும் பகழி மாரி
    விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலையொடே கொல்,
    எழுமழை பயின்றது என்றார்.
95

உரை
   
 
இலக்குவன் அம்பு யானைகளையும் குதிரைகளையும் கொல்லுதல்

8228.ஓளி ஒண் கணைகள் தோறும்
    உந்தின வேழம், ஒற்றை
வாளியின் தலைய பாரின்
    மறிவன, மலையில் சூழ்ந்த;
ஆளியின் துப்பின் வீரர்
    பொருகளத்து, ஆர்த்த வாளித்
தூளியின் தொகைய, வள்ளல்
    சுடுகணைத் தொகையும் அம்மா!
96

உரை
   
 
இலக்குவன் அம்புகளால் காலாள் வீரர் பட்டமை
(8229-8230)

8229.‘பிறவியில் பெரிய தோற்றப்
    பிசிதம் உண்டு, உழலும் பெற்றிச்
சிறையவே ‘என்ன நோக்கித்
    தேவரும் திகைக்கத் தோற்றி
துறைதொறும் தொடர்ந்து, வானம்
    வெளி அறத் துவன்றி, வீழும்
பறவையின் பெரிய, பட்டார்
    பிணத்தின்மேல் பகழி மாதோ.
97

உரை
   
 
8230.திறம்தரு கவியின் சேனை,
    செறிகழல் நிருதன் சீற,
இறந்தன கிடந்த வெள்ளம்
    எழுபதின் பாதி மேலும்
பறந்தலை முழுதும் பட்ட
    வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன; குருதி ஓடி,
    மறிகடல் மடுத்த மாதோ.
98

உரை
   
 
அரக்கர் அழிவு

8231.கை அற்றார்; கால்கள் அற்றார்;
    கழுத்து அற்றார்; கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர,
    விசை அற்றார் விளிவும் அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும்,
    வாசியும் மற்றும் அற்றார்
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார்,
    உயிர் உள்ளார் ஆகி உள்ளார்.
99

உரை
   
 
இந்திரசித்து இலக்குவனெதிர் வருதல்

8232.வற்றிய கடலுள் நின்ற
    மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி, தோன்றும்
    தசமுகன் தோன்றல், துள்ளித்
தறெ்றின புருவத்தோன் தன்
    மனமெனச் செல்லும் தேரான்,
உற்றனன், இளைய கோவை; அனுமனும்
    உடன் வந்து உற்றான்.
100

உரை
   
 
இலக்குவன் அனுமன் தோள்மேல் ஏறி இந்திரசித்தோடு
பொருதல்

8233.‘தோளின்மேல் ஆதி ‘ஐய! ‘
    என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும்
    ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன்
    கொலை அன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார்,
    மழையின்மேல் மழை வந்தன்னார்.
101

உரை
   
 
நாணொலிகளின் விளைவும் அம்புகளின் செயலும்

8234.இடித்தன சிலையின் நாண்கள்;
    இரிந்தன, திசைகள் இற்று;
வெடித்தன, மலைகள் விண்டு;
    பிளந்தது; விசும்பு; மேன்மேல்
பொடித்த, இவ் உலகம் எங்கும்;
    பொழிந்தன பொறிகள் பொங்கி;
கடித்தன, கணைகேளாடு
    கணைகள்தம் அயில்வாய் கவ்வி.
102

உரை
   
 
அம்புகளின் செயலைக்கண்ட உலகநிலை

8235.அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை
    அறுக்க, மற்று அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில்
    வெந்தன, கரிந்து வீழ்ந்த;
உம்பரும் உணர்வு சிந்தி
    ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பம் உற்று உலைந்த; வேலைக்
    கலம் எனக் கலங்கிற்று அண்டம்.
103

உரை
   
 
இருவரூர்திகளும் சாரிதிரிதலால் உண்டாய நிலைமை

8236.அரி இனம் பூண்ட தேரும்,
    அனுமனும், அனந்த சாரி
புரிதலின், இலங்கை ஊரும்
    திரிந்தது; புலவரேயும்,
எரிகணைப் படலம் மூட
    ‘இலர், உளர் ‘என்னும் தன்மை
தரெிகிலர்; செவிடு செல்லக்
    கிழிந்தன திசைகள் எல்லாம்.
104

உரை
   
 
இருவர் பொருஞ் செயலைத் தேவர்களும் காண இயலாமை (8237-8238)

8237.‘நாண் பொரு வரிவில் செங்கை,
    நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று;
    வலிக்கு இலை அவதி; மானம்
சேண் பெரிது ‘என்று சென்ற
    தேவரும், ‘இருவர் செய்கை
காண்பு அரிது ‘என்று, காட்சிக்கு
    ஐயுறவு எய்திற்று அன்னோ!
105

உரை
   
 
8238.‘என் செய்தார்! என் செய்தார்! ‘என்று
    இயம்புவார்; ‘இனைய தன்மை
முன் செய்தார் யாவர்? ‘என்பார்;
    ‘முன் ஏது? பின் ஏது? ‘என்பார்;
கொன்செய் தார் வீரர் இன்ன
    திசையினார் என்றும் கொள்ளார்;
பொன்செய் தார் மவுலி விண்ணோர்
    உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும்.
106

உரை
   
 
இருவரும் விற்போர் வீரங்காட்டுதல் (8239-8246)

8239.ஆயிர கோடி பல்லம், அயில்
    எயிற்று அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து
    அவை துணித்து அறுத்தான் ஐயன்;
ஆயிர கோடி நாகக்
    கணை தொடுத்து அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக்
    கணைகளால் அறுத்தான் அண்ணல்.
107

உரை
   
 
8240.கோட்டியின் தலைய கோடி
    கோடி அம்பு அரக்கன் கோத்தான்
கோட்டியின் தலைய கோடி
    கோடியால் குறைத்தான், கொண்டல்
மீட்டு ஒரு கோடி கோடி
    வெஞ்சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி
    கொண்டு, அவை தடுத்தான், வீரன்.
108

உரை
   
 
8241.கங்க பத்திரம் ஓர் கோடி
    கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி
    கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி,
    இலக்குவன் தரெிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி
    தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
109

உரை
   
 
8242.கோரையின் தலைய கோடி
    கொடுங்கணை அரக்கன் கோத்தான்
கோரையின் தலைய கோடி
    தொடுத்து அவை இளவல் எய்தான்
பாரையின் தலைய கோடி
    பரப்பினான் இளவல் பல்கால்
பாரையின் தலைய கோடி
    அரக்கனும் பதைக்க எய்தான்.
110

உரை
   
 
8243.தாமரைத் தலைய வாளி,
    தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம்வரத் துரந்து, முந்தி,
    தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரைத் தலைய வாளி,
    தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம்வரத் தடுத்து வீழ்த்தான்,
    தாமரைக் கண்ணன் தம்பி.
111

உரை
   
 
8244.வச்சிரப் பகழி கோடி
    வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி
    துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச்சிரப் பகழி கோடி
    இலக்குவன் முடுக விட்டான்;
முச்சிரப் பகழி கோடி
    தொடுத்து அவை தடுத்தான் முன்பன்.
112

உரை
   
 
8245.அஞ்சலி அஞ்சு கோடி
    தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி
    தொடுத்து, அவை அறுத்தான் ஐயன்;
குஞ்சரக் கன்னம் கோடி
    இலக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக் கன்னம் கோடி
    தொடுத்து, அவை அரக்கன் கொய்தான்
113

உரை
   
 
8246.எய்யவும், எய்த வாளி
    விலக்கவும், உலகம் எங்கும்
மொய்கணைக் கானம் ஆகி
    முடிந்தது; முழங்கு வேலை
பெய்கணைப் பொதிகளாலே
    வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம் மிகக் கனன்றது அல்லால்,
    தளர்ந்திலர், காளை வீரர்.
114

உரை
   
 
இந்திரசித்து அனுமன்மேலும் இலக்குவன் கவசத்தின்மேலும் அம்பு சொரிதல்

8247.வீழியின் கனிபோல் மேனி
    கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல்
    ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந்தீ
    உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி
    இலக்குவன் கவசத்து எய்தான்.
115

உரை
   
 
இந்திரசித்தின் வில்லாண்மையை விண்ணவரும்
முனிவரும் வியத்தல்

8248.‘முற்கொண்டான் அரக்கன் ‘, என்னா,
    முளரிவாள் முகங்கள், தேவர்,
பின்கொண்டார்; இளைய கோவைப்
    பியல் கொண்டான் பெருந்தோள் நின்று,
கல்கொண்டு ஆர் கிரியின் நாலும்
    அருவிபோல், குருதி கண்டார்,
‘வில் கொண்டான் இவனே! ‘என்னா,
    வெருக்கொண்டார், முனிவர் மேலோர்.
116

உரை
   
 
இலக்குவன் இந்திரசித்தின் கவசத்தில் அம்பெய்தல்

8249.சீறும் நூல் தரெிந்த சிந்தை
    இலக்குவன், சிலைக்கை வாளி
நூறுநூறு ஏவி, வெய்தின்,
    நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி, வீரக்
    கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம்பொன்
    கவசம் புக்கு அழுந்த எய்தான்.
117

உரை
   
 
இந்திரசித்தின் உடம்பில் இரத்த வெள்ளம் பெருகுதல்

8250.காள மேகத்தைச் சார்ந்த
    கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின் மேலும்,
    சுடர்விடு கவசச் சூழல்
நீளு நீர்ப் பவள வல்லி
    நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளி வாய் தோறும் வந்து
    பொடித்தன, குருதி வாரி.
118

உரை
   
 
இலக்குவனது விரைந்த விற்போரை இந்திரசித்து
அறியகில்லாமை

8251.பொன் உறு தடந்தேர் பூண்ட
    மடங்கல் மா புரண்ட போதும்
மின் உறு பதாகையோடு
    சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி
    தடுப்பு இல சார்ந்த போதும்
இன்னது என்று அறியான், அன்னான்,
    இனையது ஓர் மாற்றம் சொன்னான்.
119

உரை
   
 
இலக்குவன் வில் வீரத்தை இந்திரசித்துப் புகழ்தல்

8252.‘அந் நரன்; அல்லன் ஆகில் நாரணன்; அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்று பேசினும் பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன் தன்னோடு ஒப்பார் யாருளர் ஒருவர்? ‘என்றான்.
120

உரை
   
 
இந்திரசித்து வேறு தேர் ஏறுதல்

8253.வாயிடை நெருப்புக் கால உடல் நெடுங் குருதி வார
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான்.
121

உரை
   
 
இந்திரசித்து அம்பு எய்தல்

8254.ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர்
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலைக் கணை
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான்.
122

உரை
   
 
இலக்குவன் அம்பு எய்தல்

8255.அத் திறத்தில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல்கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான்.
123

உரை
   
 
இந்திரசித்து இலக்குவன்மேல் அம்பு எய்தல்

8256.ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்துறா
தூயவன் சுடர் சூழ் ஒளி நெற்றியில்
தீய வெங்கணை நூறு செலுத்தினான்.
124

உரை
   
 
இலக்குவன் அம்பு எய்தல்

8257.நெற்றி மேல் ஒரு நூறு நெடுங் கணை
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெங்கணை நூறு முடுக்கினான்.
125

உரை
   
 
இந்திரசித்து இளைத்தல்

8258.நூறு வெங் கணை மார்பில் நுழைதலின்
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான்.
126

உரை
   
 
அனுமன் இந்திரசித்தின் தேரை உதைத்துருட்டுதல்

8259.புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய்பரி சிந்திட
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான்.
127

உரை
   
 
இந்திரசித்து பேய்கள் பூண்ட மற்றொரு தேரேறி இலக்குவன் மேல் அம்பு சொரிதல்

8260.பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய்ம் மணி
ஏய தேர் இமைப்பின் இடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள் இணை மேல் சுடர்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான்.
128

உரை
   
 
இந்திரசித்து ஏறிவந்த ஆயிரந்தேர்களையும் இலக்குவன் அழித்தல்

8261.ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல்
வேறு செய்திலன் வெய்யவன்; வீரனும்
ஆறு கோடி பகழியின் ஐ இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான்.
129

உரை
   
 
தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்

8262.ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய்மலர்
வீசி வீசி வணங்கினர்; விண்ணவர்
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்; நல் நெறி துன்னினார்.
130

உரை
   
 
அரக்கர் வீரர் போர்க்கு முந்துதல்

8263.அக்கணத்தின் ஒர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர் அவ் வீரனோடு
ஒக்க இன்ப ஒருவழி ஊணினார்
புக்கு முந்தினர் போரிடைப் பொன்றுவார்.
131

உரை
   
 
எதிர்த்த அரக்கரின் இயல்பு

8264.தேரர் தேரின் இவுளியர் செம் முகம்
காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார்.
132

உரை
   
 
அவர்தம் போரார வாரம்

8265.பார்த்த பார்த்த திசைதொறும் பன்மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓசையும் அம்பொடு வெம்படை
தூர்த்த ஓசையும் விண்ணினைத் தூர்த்தவால்.
133

உரை
   
 
துகள் எழுதற்குரிய தேர்கள் ஓடவும் துகள் எழாமை

8266.ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன
வாளி ஆர்த்தன தேர் இவர் மண் தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால்.
134

உரை
   
 
இந்திரசித்து எய்த அம்புகளை இலக்குவன் விலக்குதல்

8267.வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர்
இந்திரன்தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி திசைதிசை;
அந்தி வண்ணன் ஓர் அம்பின் அகற்றினான்.
135

உரை
   
 
சுற்றியிருந்த அரக்கரை இலக்குவன் அழித்தல்

8268.சுற்றும் வந்து படர்ந்தது தொடர்ந்தவர்
எற்றுகின்றன எய்த எறிந்தன
அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன்தலை
ஒற்றை வெம் கணையோடும் உருண்டவால்.
136

உரை
   
 
போர்க்களக் காட்சி (8269-8271)

8269.குடர் கிடந்தன. பாம்பு என; கோள் மதித்
திடர் கிடந்தன; சிந்தின தேர்த்திரள்;
படர் கிடந்தனர் பல் படைக் கையினர்
கடர் கிடந்தன போன்ற களத்தினே.
137

உரை
   
 
8270.குண்டலங்களும் ஆரமும் கோவையும்
கண்ட நாணும் கழலும் கவசமும்
கண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால்.
138

உரை
   
 
8271.அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால்
கரக்க நூறி எதிர்பொரு கண்டகர்
சிரக் கொடுங்குவைக் குன்று திரட்டினான்
இரக்கம் எய்தி வெங்காலனும் எஞ்சவே.
139

உரை
   
 
அனுமன் விளைத்தபோர் (8272-8775)

8272.சுற்றும் வால்கொடு; தூவும்; துகைக்கும்; விட்டு
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே.
140

உரை
   
 
8273.பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும் வேலையை; தோள்புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர்பிடித்து அம் கையால்
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே.
141

உரை
   
 
8274.மாவும் யானையும் வாளுடைத் தானையும்
பூவும் நீரும் புனைதளிரும் என
தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்
சேவகன் தரெிந்து ஏறிய சீயமே.
142

உரை
   
 
8275.உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம் ‘ஏ ‘எனும் மாத்திரை
சரதம் ஆகத் தரைப்படச் சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே.
143

உரை
   
 
மயங்கி வீழ்ந்த வானரத் தலைவர் தெளிந்தழெுதல்

8276.அவ் இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தவெ் அடக்கும் வலியவர் தேறினார்.
144

உரை
   
 
தெளிந்த வானரர் போர் செய்தல் (8277-8278)

8277.தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார்;
மாறு மாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்.
145

உரை
   
 
8278.விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட உற்ற பொறுத்தன போவன
துகள் தவத் தொழில் செய்துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம்.
146

உரை
   
 
அங்கதன் இந்திரசித்தோடு பொருதல்

8279.வாலி மைந்தன் ஓர் மாமரம் வாங்கினான்
காலின் வந்த அரக்கனை ‘கா; இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு ‘எனா
மேல் இவர்ந்து நெருப்பு உக வீசினான்.
147

உரை
   
 
அங்கதன் வீசிய மரம் இந்திரசித்தின் தேரை அழித்தல்

8280.‘ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம் ‘என தேவர்கள்
ஊர் அழித்த உயர்வலித் தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடைச் சென்றதால்.
148

உரை
   
 
தேவர்கள் மகிழ்தல்

8281.அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள்
‘தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால்.
149

உரை
   
 
வென்ற அங்கதனை இந்திரசித்து நெருங்குதல்

8282.அழிந்த தேரின் நின்று அந்தரத்து அக்கணத்து
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்
‘கழிந்து போகலை நில்! எனக் கைக்கணை
பொழிந்து சென்றனன் தீ எனப் பொங்கினான்.
150

உரை
   
 
இந்திரசித்தினை ஏனைவானரரும் சூழ்ந்து கொள்ளுதல்

8283.இந்திரன் மகன் மைந்தனை ‘இன் உயிர்
தந்து போகெனச் சாரலுற்றான்தனை
வந்து மற்றைய வானர வீரரும்
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார்.
151

உரை
   
 
சூழ்ந்துகொண்ட வானரர் மர முதலியவற்றை வீசுதல்

8284.மரமும் குன்றும் மடிந்த அரக்கர்தம்
சிரமும் தேரும் புரவியும் திண்கரிக்
கரமும் ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாக்கினார்.
152

உரை
   
 
இலக்குவன் அரக்கர் பலரை அழித்தல்

8285.அனைய காலையில் ஆயிரம் ஆயிரம்
வினைய வெங்கண் அரக்கரை விண்ணவர்
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான்.
153

உரை
   
 
தன் சேனை அழியக்கண்ட இந்திரசித்து சீறுதல்

8286.ஆனையும் தடந்தேரும் தன் ஆர் உயிர்த்
தானையும் பரியும் பட்ட தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா
போன வென்றியன் தீ எனப் பொங்கினான்.
154

உரை
   
 
இந்திரசித்தின் தேர் இரத்த வெள்ளத்தால் ஈர்க்கப்படுதல்
(8287-8288)

8287.சீர்த் தடம்பெருஞ் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்
ஆர்த்த தம்பெருஞ் சேனைகொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால்.
155

உரை
   
 
8288.நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடுங்
கார் செலா; இருள் சீறிய கண் அகல்
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது; பிணத்தின் பிறக்கமே.
156

உரை
   
 
அவ்விருவரிடம் இந்திரசித்து இலக்குவன் வில்வீரத்தை வியத்தல்

8289.அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள்முகம் நோக்கி ‘ஒருவிலான்
நன்று நம்படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி! ‘எனக் கூறினான்.
157

உரை
   
 
இந்திரசித்துக்கு அரக்கர் மறுமொழி

8290.ஆய வீரரும் ‘ஐய! அமர்த் தலை
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை
மாய வெங் கணை மாரி வழங்கினை
ஓய்வு இல் வெஞ்செரு ஒக்கும் ‘என்று ஓதினார்.
158

உரை
   
 
இந்திரசித்தும் இலக்குவனும் எதிர் எதிர் பொருதல்

8291.வந்து நேர்ந்தனன் மாருதி மேல்வரும்
அந்தி வண்ணனும் ஆயிரம் ஆயிரம்
சிந்தினான் கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த முறை முறை நூறினான்.
159

உரை
   
 
இந்திரசித்து வானரரை அழித்தல்

8292.ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும்
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்.
160

உரை
   
 
சுக்கிரீவன் முதலியோர் தளர்வதுகண்டு இலக்குவன் கணை தொடுத்தல்

8293.கதிரின் மைந்தன் முதலினர் காவலர்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்
எதிரில் நின்ற இராவணி ஈடுற
வெதிரின் காட்டு எரிபோல் சரம் வித்தினான்.
161

உரை
   
 
இந்திரசித்து தளர்தலும் இலக்குவன் அரக்கரை அழித்தலும்

8294.உளைவு தோன்ற இராவணி ஒல்கினான்;
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்
அளவு இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடுசரம் ஏவினான்.
162

உரை
   
 
இலக்குவன் அம்பினால் அரக்கர்கள் பட்டபாடு
(8295-8301)

8295.தரெிகணை மாரி பெய்ய,
    தேர்களும், சினைக் கைம் மாவும்,
பரிகளும், அரக்கர் தாமும்,
    பட்டன கிடக்கக் கண்டார்
இருவரும் நின்றார்; மற்று அங்கு
    இராக்கதர் என்னும் பேரார்
ஒருவரும் நின்றார் இல்லை;
    உள்ளவர் ஓடிப் போனார்.
163

உரை
   
 
8296.ஓடினார் அரக்கர் தண்ணீர்
    உண் நசை உலர்ந்த நாவர்,
தேடினார், தரெிந்து கையால்
    முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள் தோறும்
    பசும்புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர்,
    பெற்றிலர், விளிந்து வீழ்ந்தார்.
164

உரை
   
 
8297.வெங்கணை திறந்த மெய்யர்,
    விளிந்திலர், விரைந்து சென்றார்,
செங்குழல் கற்றை சோரத்
    தரெிவையர் அரற்ற, தயெ்வப்
பொங்குபூம் பள்ளி புக்கார்;
    அவருடல் பொருந்தப் புல்லி
அங்கு அவர் ஆவியோடும்
    தம் உயிர் போக்கி அற்றார்.
165

உரை
   
 
8298.பொறிக்கொடும் பகழி மார்பர்
    போயினர், இடங்கள் புக்கார்,
மறிக்கொளும் சிறுவர் தம்மை,
    மற்றுள சுற்றம் தம்மை,
‘குறிக்கொளும் ‘என்று கூறி,
    அவர்முகம் குழைய நோக்கி
நெறிக்கொளும் கூற்றை நோக்கி
    ஆருயிர் நெடிது நீத்தார்.
166

உரை
   
 
8299.தாமரைக் கண்ணன் தம்பி
    தன்மை ஈது ஆகின் மெய்யே
வேம், அரைக் கணத்தின் இவ் ஊர்;
    இராவணி விளிதன் முன்னம்
மாமரக் கானில், குன்றில்,
    மறைந்திரும்; மறைய வல்லே
போம் ‘எனத் தமரைச் சொல்லி,
    சிலர் உடல் துறந்து போனார்.
167

உரை
   
 
8300.வரை உண்ட மதுகை மேனி
    மருமத்து, வள்ளல் வாளி
இரை உண்டு துயில, சென்றார்,
    ‘வாங்கிடின், இறப்பம் ‘என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம்
    பிறிதுற, பிறர்முன் சொல்லா
உரை உண்ட நல்லோர் என்ன,
    உயிர்த்து உயிர்த்து, உழைப்பது ஆனார்.
168

உரை
   
 
8301.தேரிடைச் செல்லார், மானப்
    புரவியில் செல்லார், செங்கண்
காரிடைச் செல்லார், காலின்
    கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால்,
    உயிரின்மேல் உடைய அன்பால்,
போரிடைச் செல்லார், நின்று
    நடுங்கினர், புறத்தும் போகார்.
169

உரை
   
 
இந்திரசித்தின் கவசத்தை இலக்குவன் வீழ்த்துதல்

8302.நொய்தினின் சென்று கூடி,
    இராவணி உளைவை நோக்கி,
வெய்தினில் கொன்று வீழ்ப்பல்
    என்பது ஓர் வெகுளி வீங்கி,
பெய்துழிப் பெய்யும் மாரி
    அனையவன் பிணங்கு கூற்றின்
கையினில் பெரிய அம்பால்,
    கவசத்தைக் கழித்து வீழ்த்தான்.
170

உரை
   
 
துமிராட்சனும் மகாபாரிசுவனும் இலக்குவனோடு பொருதல்

8303.‘கவசத்தைக் கழித்து வீழ்ப்ப
    காப்புறு கடன் இன்று ஆகி,
அவசத்தை அடைந்த வீரன்
    அறிவுறும் துணையின் வீரத்,
துவசத்தின் புரவித் திண்தேர்
    கடிதுற தூண்டி, யாம் இத்
திவசத்தின் முடித்தும், வெம்போர் ‘
    எனச் சினம் திருகிச் சென்றார்.
171

உரை
   
 
இலக்குவன் அவ்விருவரையும் கொல்லுதல்

8304.மாருதி மேலும் ஐயன்
    மார்பினும் தோளின் மேலும்
தேரினர் இருவர் சென்றார்,
    செந்தழல் பகழி சிந்த,
ஆரியன் வாகை வில்லும்
    அச்சு உடைத் தேரும் அத்தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான்;
    புரவியின் உயிரும் உண்டான்.
172

உரை
   
 
அவ்விருவரும் தண்டுகொண்டு அனுமனோடு பொருதல்
(8305-8306)

8305.இருவரும் இழந்த வில்லார்,
    எழுமுனை வயிரத் தண்டார்,
உரும் எனக் கடிதின் ஓடி,
    அனுமனை இமைப்பின் உற்றார்,
பொருகனல் பொறிகள் சிந்தப்
    புடைத்தனர்; புடைத்தலோடும்,
பருவலி கரத்தினால் தண்டு
    இரண்டையும் பறித்துக் கொண்டான்.
173

உரை
   
 
8306.தண்டு அவன் கையது ஆய
    தன்மையைத் தறுகணாளர்,
கண்டனர்; கண்டு, செய்ய
    லாவது ஒன்றானும் காணார்;
‘கொண்டனன் எறிந்து நம்மைக்
    கொல்லும் ‘என்று, அச்சம் கொண்டார்,
உண்ட செஞ் சோறும் நோக்கார்,
    உயிருக்கே உதவி செய்தார்.
174

உரை
   
 
வானர வீரர்கள் மயக்கந் தெளிந்து எழுதல்

8307.காற்று வந்து அசைத்தலாலும்,
    காலம் அல்லாமை யாலும்,
கூற்று வந்து ஆவி கொள்ளும்
    குறி இன்மை குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற
    மயக்கமும் நோவும் தீர்ந்தார்;
ஏற்றமும் வலியும் பெற்றார்;
    எழுந்தனர் வீரர் எல்லாம்.
175

உரை
   
 
எழுந்த வானரவீரர் போராரவாரம் செய்தல்

8308.அங்கதன், குமுதன், நீலன்,
    சாம்பவன், அருக்கன் மைந்தன்,
பங்கம் இல் மயிந்தன் தம்பி,
    சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர்
    யாவரும் சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல,
    மழை என ஆர்த்து வந்தார்.
176

உரை
   
 
வானரர் வீசிய குன்றங்களை இந்திரசித்து
சின்னபின்னமாக்குதல்

8309.அத்தனையோரும், குன்றம்
    அளப்பு இல, அசனி ஏற்றோடு
ஒத்தன, நெருப்பு வீசும்
    உரும் என ஒருங்க உய்த்தார்;
‘இத்தனை போலும் செய்யும்
    இகல் ‘எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும்
    சின்ன பின்னங்கள் செய்தான்.
177

உரை
   
 
சூரியன் மறைதல்

8310.மரங்களும் மலையும் கல்லும்
    மழை என வழங்கி, வந்து
நெருங்கினர்; நெருங்கக் கண்டும்,
    ஒரு தனி நெஞ்சும், வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற
    நிசாசரன் தனிமை நோக்கி,
இரங்கினன் என்ன, மேல்பால்
    குன்றுபுக்கு இரவி நின்றான்.
178

உரை
   
 
இருள் பரவுதல்

8311.‘வாழிய வேதம் நான்கும்
    மனுமுதல் வந்த நூலும்,
வேள்வியும், மெய்யும், தயெ்வ
    வேதியர் விழைவும் ஆகும்,
ஆழி அம் கமலக் கையான்
    ஆதி அம் பரமன் ‘என்னா
ஏழையர் உள்ளம் என்ன,
    இருண்டன திசைகள் எல்லாம்.
179

உரை
   
 
விரைந்து கொல்லாக்கால் இந்திரசித்து விசும்பில் எழுந்து வெல்வான் என வீடணன் சொல்லுதல்

8312.‘நாகமே அனைய நம்ப!
    நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப்
    படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம்
    விளைந்தது; விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன் ‘என்பது,
    இராவணற்கு இளவல் சொன்னான்.
180

உரை
   
 
இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்தல்

8313.அத்தனை வீரர் மேலும்
    ஆண்தகை அனுமன் மேலும்,
எத்தனை கோடி வாளி
    மழை என எய்யா நின்ற
வித்தக வில்லினானைக்
    கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தயெ்வப்
    பகழியால் சிதைத்து வீழ்த்தான்
181

உரை
   
 
இந்திரசித்து விண்மிசை எழுதல்

8314.‘அழித்த தேர் அழுந்தா முன்னம்,
    அம்பொடு கிடந்து வெம்பி
உழைத்து உயிர் விடுவது அல்லால்
    ‘உறுசெரு வென்றோம் ‘என்று
பிழைத்து இவர் போவார் அல்லர்
    பாசத்தால் பிணிப்பின் ‘என்னா
விழித்து இமையாத முன்னம்
    வில்லொடும் விசும்பில் சென்றான்.
182

உரை
   
 
இந்திரசித்து விண்ணிடை விரைந்தமைகண்டு
தேவர் அஞ்சுதல்

8315.‘பொன் குலாம் மேனி மைந்தன்
    தன்னொடும் புகழ்தற்கு ஒத்தான்
வன்கலாம் இயற்றி நின்றான்,
    மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன்
    விண்ணிடை விரைந்த தன்மை
என் கொலாம்! ‘என்ன அஞ்சி
    வானவர் இரியல் போனார்.
183

உரை
   
 
இந்திரசித்து மேகமண்டலத்திற்கப்பால் நிற்றல்

8316.தாங்கு வில் கரத்தன் தூணி
    தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியா நின்ற
    வெகுளியன் உயிர்ப்பன் தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம்
    சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருள் பிழம்பின், உம்பர்
    மேகத்தின் மீதின் ஆனான்.
184

உரை
   
 
இந்திரசித்து நுண்ணுடம்பெடுத்தல்

8317.தணிவு அறப் பண்டு செய்த
    தவத்தினும், தருமத்தானும்,
பிணி அறுப்பவரில் பெற்ற
    வரத்தினும், பிறப்பினானும்,
மணிநிறத்து அரக்கன் செய்த
    மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது ஆங்கு ஓர்
    ஆக்கையும் உடையன் ஆனான்.
185

உரை
   
 
இந்திரசித்து நாகபாசப் படையை எடுத்தல்

8318.வாங்கினான் மலரின் மேலான்,
    வானக மணிநீர்க் கங்கை
தாங்கினான், உலகந் தாங்கும்
    சக்கரத்தவன், என்றாலும்,
வீங்கு வான் தோளை வீக்கி
    வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து
    ஒரு தனிப் படையை உன்னி.
186

உரை
   
 
வானரர் ஆர்த்தலும் இலக்குவன் நகுதலும்

8319.ஆயின காலத்து ஆர்த்தார்,
    ‘அமர்த் தொழில் அஞ்சி, அப்பால்
போயினன் ‘என்பது உன்னி,
    வானர வீரர் போல்வார்;
நாயகற்கு இளைய கோவும்
    அன்னதே நினைந்து, நக்கான்;
மாயையைத் தரெிய உன்னார்,
    போர்த்தொழில் மாற்றி நின்றார்
187

உரை
   
 
இலக்குவன் அனுமன் தோளில் நின்று இறங்கி
இளைப்பாறுதல்

8320.அது கணத்து, அனுமன்
    தோள்நின்று ஐயனும் இழிந்து, வெய்ய
கது வலிச் சிலையை வென்றி
    அங்கதன் கையது ஆக்கி,
முதுகு உறச் சென்று நின்ற
    கணை எலாம் முறையின் வாங்கி,
விது விதுப்பு ஆற்றலுற்றான்,
    விளைகின்றது உணர்ந்திலாதான்.
188

உரை
   
 
இந்திரசித்து நாகக்கணையை விடுதலும் அது இலக்குவனைக் கட்டுதலும்

8321.விட்டனன் அரக்கன் வெய்ய
    படையினை; விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும்
    இருள் திரிந்து இரிய ஓடி,
கட்டினது என்ப மன்னோ,
    காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள்
    மலைகளை உளைய வாங்கி.
189

உரை
   
 
இலக்குவன் நாகக்கணையால் கட்டுண்டு களத்தையும் விண்ணையும் நோக்குதல்

8322.இறுகுறப் பிணித்தலோடும்,
    யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக் கடவான் அல்லன்;
    மாயம் என்று உணர்வான் அல்லன்;
உறுகுறைத் துன்பம் இல்லான்;
    ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
அறு குறை களத்தை நோக்கி,
    அந்தரம் அதனை நோக்கும்.
190

உரை
   
 
இந்திரசித்தைப் பிடிக்க எழும் அனுமனையும்
அக்கணை கட்டுதல்

8323.காலுடைச் சிறுவன், ‘மாயக்
    கள்வனைக் கணத்தின் காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப்
    பிடிப்பென் ‘என்று உறுக்கும் வேலை,
ஏல்புடைப் பாசம், மேல் நாள்
    இராவணன் புயத்தை வாலி
வால் பிணித் தனெ்ன, சுற்றிப்
    பிணித்ததும், வயிரத் தோளை.
191

உரை
   
 
நாகக்கணை மற்றவர்களையும் கட்டுதல்

8324.மற்றையோர் தமையும் எல்லாம்
    வாள் எயிற்று அரவம் வந்து,
சுற்றின; வயிரத் தூணின்,
    மலையினின், பெரிய தோள்கள்,
‘இற்றன, இற்ற என்ன,
    இறுக்கின; இளகா உள்ளம்
தறெ்றென உடைய வீரர்
    இருந்தனர், செய்வது ஓரார்.
192

உரை
   
 
கட்டுண்ட வானரர் செயல் (8325-8329)

8325.மலை என எழுவர்; வீழ்வர்;
    மண்ணிடைப் புரள்வர்; வானில்
தலைகளை எடுத்து நோக்கி,
    தழல் எழ விழிப்பர்; தாவி
அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்;
    வாய் மடிப்பர்; ஆண்மைச்
சிலையவற்கு இளைய கோவை
    நோக்குவர்; உள்ளம் தீவர்
193

உரை
   
 
8326.வீடணன் முகத்தை நோக்கி,
    ‘வினை உண்டே இதனுக்கு? என்பர்
மூடின கங்குல் மாலை
    இருளினை முனிவர்; ‘மொய்ம்பில்
ஈடுறத் தக்க போலாம்
    நம் எதிர் ‘என்னா ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி,
    நகை செய்வர்; அழுவர்; அஞ்சார்.
194

உரை
   
 
8327.ஆர், இது தீர்க்க வல்லார்?
    அஞ்சனை பயந்த வள்ளல்,
மாருதி, பிழைத்தான் கொல்லோ?
    என்றனர், மறுகி நோக்கி,
வீரனைக் கண்டு, ‘பட்டது
    இது கொலாம்! ‘என்று விம்மி,
வார்கழல் தம்பி தன்மை
    காணுமோ, வள்ளல்? ‘என்பார்.
195

உரை
   
 
8328.என், சென்ற தன்மை சொல்லின்?
    எறுழ் வலி அரக்கன் எய்தான்,
மின் சென்றது அன்ன; வானத்து
    உரும் இனம் வீழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி,
    புகையொடு பொறியும் சிந்தி,
முன்சென்ற முதுகில் பாய,
    பின் சென்ற மார்பம் உற்ற.
196

உரை
   
 
8329.மலைத் தலை கால மாரி,
    மறித்து எறி வாடை மோத,
தலைத் தலை மயங்கி வீழும்
    தன்மையின், தலைகள் சிந்தும்,
கொலைத் தலை வாளி பாயக்
    குன்று அன குவவுத் தோளார்
நிலைத்தலைக் குலைந்து சார்ந்தார்;
    நிமிர்ந்தது, குருதி நீத்தம்.
197

உரை
   
 
அனுமன் இலக்குவனுக்கு உற்றதுகண்டு நடுங்குதல்

8330.ஆயிர கோடி மேலும்
    அம்பு தன் ஆகத் தூடு
போயின போதும் ஒன்றும்
    துடித்திலன்; பொறுத்து, மானத்
தீ எரி சிதறும் செங்கண்
    அஞ்சனை சிங்கம், தயெ்வ
நாயகன் தம்பிக்கு உற்ற
    துயர் சுட நடுங்குகின்றான்.
198

உரை
   
 
அங்கதன் நிலை

8331.வேறு உள வீரர் எல்லாம்
    வீழ்ந்தனர், உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி
    உடல் இடை நுழைய, சோரி
ஆறுபோல் ஒழுக, அண்ணல்
    அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும்,
    இருந்தனன் இடைந்து இலாதான்.
199

உரை
   
 
சுக்கிரீவன் நிலை

8332.கதிரவன் காதல் மைந்தன்,
    கழல் இளம் பசுங் காய் அன்ன,
எதிர் எதிர் பகழி தைத்த,
    யாக்கையன், எரியுங் கண்ணன்,
வெதிர் நெடுங் கானம் என்ன
    வேகின்ற மனத்தன், மெய்யன்,
உதிர வெங்கடலுள் தாதை
    உதிக்கின்றான் தனையும் ஒத்தான்.
200

உரை
   
 
இலக்குவன் நிலை

8333.வெப்பு ஆரும் பாசம் வீக்கி,
    வெங் கணை துளைக்கும் மெய்யன்,
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி
    உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்,
‘இப்பாசம் மாய்க்கும் மாயம்,
    யான் வல்லென் ‘என்பது ஓர்ந்தும்
அப்பாசம் வீச ஆற்றாது
    அழிந்த நல் அறிவு போன்றான்
201

உரை
   
 
இலக்குவன் சூரியன் போன்று தோன்றுதல்

8334.அம்பு எலாம் கதிர்கள் ஆக,
    அழிந்து அழிந்து இழியும் ஆகச்
செம்புனல் வெயிலில் தோன்ற,
    திசை இருள் இரிய, சீறிப்
பம்பு பேர் ஒளிய, நாகம்,
    பற்றிய படிவத் தோடும்
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த
    ஒளியவனேயும் ஒத்தான்.
202

உரை
   
 
இந்திரசித்தின் நிலை

8335.மயங்கினான் வள்ளல் தம்பி;
    மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார்; மேனி எல்லாம்
    மூடினான் அரக்கன் மூரித்
தயங்கு பேர் ஆற்றலானும்
    தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான், உளைந்தான் வாயால்
    உதிர நீர் உமிழா நின்றான்.
203

உரை
   
 
இந்திரசித்து இராவணன் மனைக்கு ஏகுதல் (8336-8338)

8336.‘சொற்றது முடித்தேன்; நாளை,
    என் உடல் சோர்வை நீக்கி,
மற்றதும் முடிப்பேன் ‘என்னா,
    எண்ணினான், ‘மனிசன் வாழ்க்கை
இற்றது; குரங்கின் தானை
    இறந்தது, என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப
    இராவணன் கோயில் புக்கான்.
204

உரை
   
 
8337.ஈர்க்கு உடைப் பகழி மாரி
    இலக்குவன் என்ன நின்ற
நீர்க்கடை மேகம் தன்னை
    நீங்கியும், செருவின் நீங்கான்,
வார்க்கு இடை மதுகைக் கொங்கை,
    மணிக்குறு முறுவல் மாதர்
போர்க் கடைக் கருங்கண் வாளி
    புயந்தொறும் பொழியப் புக்கான்.
205

உரை
   
 
8338.ஐ இரு கோடி செம்பொன்
    மணி விளக்கு அம்கை ஏந்தி
மை அறு வான நாட்டு
    மாதரும், மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும்
    பலாண்டு இசை பரவ, தங்கள்
தையலர் அறுகு தூவி
    வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான்.
206

உரை
   
 
தந்தைக்குத் தன் வெற்றியைத் தரெிவித்து இந்திரசித்து தன் மனை புகுதல்

8339.தந்தையை எய்தி அன்று ஆங்கு
    உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி,
    ‘தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் யாக்கை; நொய்தின்
    ஆற்றி, மேல் நுவல்வென் ‘என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்ப்பான்,
    தன்னுடைக் கோயில் புக்கான்.
207

உரை
   
 
இலக்குவன் முதலியோர் நிலைமை கண்டு
வீடணன் வருந்துதல்

8340.இத்தலை, இன்னல் உற்ற
    வீடணன் இழைப்பது ஓரான்,
மத்துறு தயிரின் உள்ளம்
    மறுகினன், மயங்கு கின்றான்,
அத்தலைக் கொடியன் என்னை
    அட்டிலன்; அளியத்தேன் நான்;
செத்திலென்; வலியென் நின்றேன் ‘
    என்று போய் வையம் சேர்ந்தான்.
208

உரை
   
 
வீடணன் வாய்திறந்தரற்றல் (8341-8344)

8341.‘பாசத்தால் அனகன் தம்பி
    பிணிப்பு உண்ட படியைக் கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்;
    யான் ஒரு தமியன் நின்றேன்;
தேசத்தார், என்னை என்னென்
    சிந்திப்பார்! ‘என்று, தீயும்
வாசத்தார் மாலை மார்பன்
    வாய்திறந்து அரற்றல் உற்றான்
209

உரை
   
 
8342.“கொல்வித்தான், உடனே நின்று அங்கு “
    என்பரோ? “கொண்டு போனான்
வெல்வித்தான், மகனை ‘‘ என்று
    பகர்வரோ ‘‘விளைவிற்கு எல்லாம்
நல்வித்தாய் நடந்தான் முன்னே ‘‘
    என்பரோ? நயந்தோர் தம் தம்
கல்வித்தாம் வார்த்தை ‘என்று
    கரைவித்தான் உயிரைக் கண்போல்
210

உரை
   
 
8343.‘போர் அவன் புரிந்த போதே
    பொரு அரு வயிரத் தண்டால்,
தேரொடும் புரண்டு வீழச்
    சிந்தி, என் சிந்தை செப்பும்
வீரம் முன் தரெித்தேன் அல்லேன்,
    விளிந்திலேன்; மெலிந்தேன் இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன்?
    அளியத்தேன், அழுந்து கின்றேன்
211

உரை
   
 
8344.ஒத்து அலைத்து, ஒக்க வீடி,
    உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத் தலை நெல்லி போலக்
    காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;
அத்தலைக்கு அல்லேன் யான்,
    இன்று ‘அவயம் ‘என்று அடைந்துநின்ற
இத்தலைக்கு அல்லேன்; நின்றேன்
    இருதலைக் கொள்ளி ஒப்பேன்.
212

உரை
   
 
அனலன் வீடணனைத் தேற்றுதல்

8345.அனையன பலவும் பன்னி,
    ஆகுலித்து அரற்று வானை,
‘வினையுள பலவும் செய்யத்
    தக்கன; வீர! நீயும்
நினைவு இலார் போல நெஞ்சம்
    நெகிழ்தியோ? நீத்தி! ‘என்னா,
இனையன சொல்லித் தேற்றி,
    அனலன் மற்று இனைய செய்தான்
213

உரை
   
 
அனலன் நிகழ்ந்ததுகூற இராமன் துயர்க்கடலுள் ஆழ்தல்

8346.நீ இவண் இருத்தி; யான் போய்
    நெடியவற்கு உரைப்பென் ‘என்னா,
போயினன், அனலன்; போய்,
    அப் புண்ணியன் பொலன்கொள் பாதம்
மேயினன் வணங்கி, உற்ற
    வினை எலாம் இயம்பி நின்றான்;
ஆயிரம் பெயரினானும்
    அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான்.
214

உரை
   
 
இராமன் இலக்குவற்கு நேர்ந்தது கேட்டுத் தேம்புதல்

8347.உரைத்திலன் ஒன்றும் தன்னை
    உணர்ந்திலன் உயிரும் ஓடக்
கரைத்திலன் கண்ணில் நீரை
    கண்டிலன் யாதும் கண்ணால்;
அரைத்திலன் உலகம் எல்லாம்
    அங்கையால் பற்றி; பொங்கி
இரைத்திலன், ‘உளன் ‘என்று எண்ணி
    இருந்தனன் விம்மி ஏங்கி
215

உரை
   
 
ஏங்கியிருந்த இராமன் போர்க்களம் சேர்தல்

8348.விம்மினன் வெதும்பி வெய்துற்று
    ஏங்கினன், இருந்த வீரன்
‘இம்முறை இருந்து செய்வது
    யாவதும் இல் ‘என்று எண்ணி,
பொம் எனும் விம்மலோடும்
    பொருக்கென எழுந்து போனான்
தமெ் முறை துறந்து வென்ற
    செங்கள மருங்கிற் சேர்ந்தான்.
216

உரை
   
 
போர்க்களம் இருள் சூழ்ந்திருத்தல்

8349.இழிந்து எழும் காள மேகம்,
    எறிகடல் அனைய மற்றும்
ஒழிந்தன, நீல வண்ணம்
    உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக்
    காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே
    பொங்கி இருள் கங்குல் போர்வை.
217

உரை
   
 
இராமன் அனலம்பில் இருளை அகற்றல்

8350.ஆர் இருள் அன்னது ஆக,
    ஆயிர நாமத்து அண்ணல்,
சீரிய அனலித் தயெ்வப்
    படைக்கலம் தரெிந்து வாங்கி,
பாரிய விடுத்தலோடும்,
    பகை இருள் இரிந்து பாற,
சூரியன் உச்சி உற்றால்
    ஒத்ததால் உலகின் சூழல்.
218

உரை
   
 
இராமன் போர்க்களத்தைக் காணுதல்

8351.படை உறு பிணத்தின் பம்மல்
    பருப்பதம் துவன்றி, பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து,
    எறிகடல் எழுநீர் பொங்கி,
உடை உறு தலைக்கை அண்ணல்
    உயிர் எலாம் ஒருங்கி உண்ணும்
கடை உறு காலத்து ஆழும்
    உலகு அன்ன களத்தைக் கண்டான்
219

உரை
   
 
இராமன் இலக்குவனைக் காணுதல்

8352.பிணம் பெருங் குன்றினூடும்,
    குருதி நீர்ப் பெருக்கினூடும்,
நிணப்பெருஞ் சேற்றி னூடும்,
    படைக்கல நெருக்கி னூடும்,
மணப் பெருங் களத்தில் மோடி
    மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்திலும் பாதிப் போதில்
    தம்பியைச் சென்று கண்டான்.
220

உரை
   
 
இராமன் இலக்குவன் மேல் வீழ்ந்து அழுது அரற்றல்
(8353-8354)

8353.அய்யவன் ஆக்கை தன்மேல்
    விழுந்து, மார்பு அழுந்தப் புல்லி,
‘உய்யலன் ‘என்ன ஆவி
    உயிர்த்து உயிர்த்து, உருகுகின்றான்,
பெய் இரு தாரைக்கண்ணன்;
    பெருந்துளி பிறங்க, வானின்
வெய்யவன் தன்னைச் சேர்ந்த
    நீல்நிற மேகம் ஒத்தான்.
221

உரை
   
 
8354.உழைக்கும்; வெய்து உயிர்க்கும்;
    ஆவி உருகும்; போய் உணர்வு, சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான்,
    ‘இலக்குவா! இலக்குவா! ‘என்று,
அழைக்கும்; தன் கையை வாயின்,
    மூக்கின் வைத்து, அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ! ‘என்னும்
    மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்.
222

உரை
   
 
இராமனுடைய தாய்மைச் செயல்கள்

8355.தாமரைக் கையால் தாளைத்
    தைவரும்; குறங்கைத் தட்டும்;
தூமலர்க் கண்ணை நோக்கும்;
    ‘மார்பிடைத் துடிப்பு உண்டு ‘என்னா,
ஏமுறும்; விசும்பை நோக்கும்;
    எடுக்கும்; தன் மர்பில் ஏற்றும்;
பூமியில் வளர்த்தும்; ‘கள்வன்
    போய் அகன்றானோ? ‘என்னும்
223

உரை
   
 
இராமனுடைய வீரக்குறிப்புகள் (8356-8357)

8356.வில்லினை நோக்கும்; பாச
    விசிப்பினை நோக்கும்; வீயா
அல்லினை நோக்கும்; வானத்து
    அமரரை நோக்கும்; பாரைக்
கல்லுவன் வேரோடு என்னும்;
    பவள வாய் கறிக்கும் மற்றோர்
சொல்லினை நோக்கும்; தன்பொற்
    புகழினை நோக்கும் தோளான்
224

உரை
   
 
8357.வீரரை எல்லாம் நோக்கும்;
    விதியினை நோக்கும்; வீரப்
பார வெஞ் சிலையை நோக்கும்;
    பகழியை நோக்கும்; ‘பாரில்
யார் இதுபட்டார் ‘என்போல்
    எளிவந்த வண்ணம்? ‘என்னும்;
நேரிது, பெரிது ‘என்று ஓதும்
    அளவையின் நிமிர நின்றான்.
225

உரை
   
 
இராமன் வீடணனோடு நொந்து கொள்ளுதல்

8358.“‘எடுத்தபோர், இலங்கை வேந்தன்
    மைந்தனோடு இளைய கோவுக்கு
அடுத்தது ‘‘ என்று என்னை
    வல்லை அழைத்திலை, அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து
    உயிர் துடைக்க; என்னைக்
கெடுத்தனை; வீடணா! நீ ‘
    என்றனன் கேடு இலாதான்.
226

உரை
   
 
வீடணன் தான் சொல்லாமைக்குக் காரணம் கூறுதல்
(8359-8364)

8359.அவ் உரை அருளக் கேட்டான்,
    அழிகின்ற அரக்கன் தம்பி
‘இவ் வழி, அவன் வந்து ஏற்பது
    அறிந்திலம்; எதிர்ந்த போதும்,
“வெவ்வழியவனே தோற்கும் “
    என்பது விரும்பி நின்றேன்,
தயெ்வ வன் பாசம் செய்த
    செயல், இந்த மாயச் செய்கை.
227

உரை
   
 
8360.‘அற்று அதிகாயன் ஆக்கை,
    தலை இலது ஆக்கி, ஆண்ட
வெற்றியன் ஆய வீரன்
    மீண்டிலன், “இலங்கை மேல் நாள்
பெற்றவன் எய்தும் ‘‘ என்னும்
    பெற்றியை உன்னி; பின் போது,
உற்றனன் மைந்தன்; தானை
    நாற்பது வெள்ளத் தோடும்.
228

உரை
   
 
8361.‘ஈண்டு, நம் சேனை வெள்ளம்
    இருபதிற்று இரட்டி மாள,
தூண்டினன், பகழி மாரி;
    தலைவர்கள் தொலைந்து சோர,
மூண்டு எழு போரில், பாரில்
    முறைமுறை முடித்தான்; பின்னர்,
ஆண்தகையோடும் ஏற்றான்,
    ஆயிரம் மடங்கல் தேரான்.
229

உரை
   
 
8362.‘அனுமன் மேல் நின்ற ஐயன்
    ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை,
    நாற்பது வெள்ளத் தானை
பனி எனப் படுவித்து, அன்னான்
    பலத்தையும் தொலைத்து, “பட்டான்
இனி ‘‘ என வயிர வாளி,
    எண் இல, நிறத்தின் எய்தான்.
230

உரை
   
 
8363.‘ஏ உண்ட பகுவாய் ஊடு
    குருதிநீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும்
    பட, ஒரு தமியன் சோர்வான்;
“போவுண்டது என்னின், ஐய!
    புணர்க்குவன் மாயம் “ என்று,
பாவுண்ட கீர்த்தி யானுக்கு
    உணர்த்தினன்; பரிதி பட்டான்.
231

உரை
   
 
8364.‘மாயத்தால் இருண்டது ஆழி
    உலகு எலாம்; வஞ்சன், வானில்
போய், அத்தானுடைய வஞ்ச
    வரத்தினால் ஒளிந்து, பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி
    அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான் ‘என்னச் சொல்லி,
    வணங்கினான், கலுழும் கண்ணான்.
232

உரை
   
 
வீடணன், யாரும் இறந்திலர் என்று
இராமனைத் தேற்றுதல்

8365.பின்னரும் வணங்கி, ‘ஏதும்,
    பிழைத்திலன் பெரும! யாரும்
இன் உயிர் துறந்தார் அல்லர்,
    இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும்
    தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னல் உற்று அயரல்; வெல்லாது
    அறத்தினைப் பாவம் ‘என்றான்.
233

உரை
   
 
நாகபாசத்தைப்பற்றி நீ உணர்ந்ததை உரை எனல்

8366.‘யார் இது கொடுத்த தேவன்?
    என்னை ஈது? இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது
    கழறிக் காண் ‘என்று,
ஆரியன் வினவ, அண்ணல்
    வீடணன், ‘அமல! சாலச்
சீரிது ‘என்று, அதனை, உள்ள
    பரிசு எலாம், தரெியச் சொன்னான்
234

உரை
   
 
வீடணன் கூறும் பாசத்தின் வரலாறு

8367.‘ஆழி அம் செல்வ! பண்டு இவ்
    அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன்
    வேண்டினன் பெற்று, வெற்றித்
தாழ்வு அறு சிந்தையோற்குத்
    தவத்தினால் அளித்தது; ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து
    உருமினது; ஊற்றம் ஈதால்.
235

உரை
   
 
பாசத்தின் ஆற்றல்

8368.அன்னதன் ஆற்றல் அன்றே
    ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண் தோள்
    பிணித்தது, பெயர்த்து ஒன்று எண்ணி
என், இனி? அனுமன் தோளை
    இறுக்கியது இதனால் ஆண்டும்;
பொன்னுலகு ஆளும் செல்வம்
    துறந்தது, புலவோர் எல்லாம்.
236

உரை
   
 
பாசம் நீக்கும் வகையிலது என்றல்

8369.தான் விடின் விடுதல் அன்றிச்
    சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின் விடாது; மற்று,
    இம்மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க,
    நீங்கும்; வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளபத் தாராய்!
    இது இதன் செய்கை ‘என்றான்.
237

உரை
   
 
இராமன் சினந்து கூறுதல் (8370-8372)

8370.‘ஈந்துள தேவர்மேலே எழுகெனோ?
    உலகம் யாவும்
தீய்ந்து உக நூறி, யானும்
    தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும்
    படுப்பெனோ? இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி ‘என்றான்,
    இமையவர் இடுக்கண் தீர்ப்பான்.
238

உரை
   
 
8371.‘வரம் கொடுத்து இனைய பாசம்
    வழங்கினான் தானே நேர்வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல்,
    இகழ்கிலென்; இல்லை என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும்,
    ஒருவன் ஓர் அம்பிற் சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பேன்
    பொடி ஒரு கடிகைப் போழ்தின்.
239

உரை
   
 
8372.‘எம்பியே இறக்கும் என்னில்
    எனக்கு இனி, இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை?
    பழி என்னை? அறம் தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த
    நண்பரின்; நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள
    உயிர்களும், உதவி பார்த்தால்?
240

உரை
   
 
இராமனது சினம் மாறுதல்

8373.என்று கொண்டு இயம்பி ‘ஈண்டு இங்கு
    ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய
வென்று, அரும் உலகை மாய்த்தல்
    விதி அன்றால் ‘என்றா விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி,
    நெடிது உயிர்த்து அலக்கண் உற்றான்;
தன்துணைத் தம்பி தன்மேல்,
    துணைவர்மேல் தாழ்ந்த, அன்பான்.
241

உரை
   
 
இலக்குவன் வீயின் இராமனும் வீவதாக எண்ணுதல்

8374.மீட்டும் வந்து இளைய வீரன்
    வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம் தன்னைப்
    பல்முறை புரிந்து நோக்கி,
‘வீட்டியது என்னின், பின்னை
    வீவென் ‘என்று எண்ணும் வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும்
    துணைக் கைம் மால் யானை அன்னான்.
242

உரை
   
 
கருடன் வருகை

8375.இத் தன்மை எய்தும் அளவின்கண்,
    நின்ற இமையோர்கள் அஞ்சி, ‘இதுபோய்
எத் தன்மை எய்தி முடியும் கொல்? ‘
    என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடைநின்ற
    அண்ணல் கலுழன்தன் அன்பின் மிகையால்
சித்தம் நடுங்கி, இதுதீர, மெள்ள,
    இருள் ஊடு வந்து தரெிவான்.
243

உரை
   
 
கலுழன் இறகுகளின் சிறப்பு (8376-8377)

8376.அசையாத சிந்தை அரவால் அனுங்க,
    அழியாத உள்ளம் அழிவான்,
இசையான் இலங்கை அரசோடும் அண்ணல்
    அருள்தன்மை கண்டு பெயர்வான்,
விசையால் அனுங்க வடமேரு வையம்,
    ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க
    நிறைகால் வழங்கு சிறையான்.
244

உரை
   
 
8377.காதங்கள் கோடி கடைசென்று
    காணும் நயனங்கள் வாரி கலுழ
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல்
    திருமேனி கண்டு, கிளர்வான்,
சீதம் கொள் வேலை அலை சிந்த,
    ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும்
    வினை சிந்த; நாகம் மெலிய.
245

உரை
   
 
கலுழனுடைய மேனியும் மணிமுடியும் (8378-8379)

8378.அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி,
    அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத்
    தரெுட்டி, விரிகின்ற சோதி மிளிர,
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி,
    இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு
    சுடரோனின் மும்மை சுடர.
246

உரை
   
 
8379.நன்பால் விளங்கு மணி கோடியோடு,
    நளிர்போது, செம்பொன் முதலாத்
தன் பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த
    தழுவாது வந்து தழுவ,
மின் பால் இயன்றது ஒருகுன்றம் வானின்
    மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தனெ்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து
    வருகின்ற செய்கை தரெிய.
247

உரை
   
 
கலுழன் இராமனைக் கண்டு தொழுதல்

8380.பல்நாகர் சென்னி மணி கோடி கோடி
    பலகொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு
    மிளிர்பூண் வயங்க, வெயில்கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க,
    வனமாலை மார்பு புரள,
தொல் நாள் பிரிந்த துயர்தீர அண்ணல்
    திருமேனி கண்டு, தொழுவான்
248

உரை
   
 
கலுழன் தொழும் இயல்பு

8381.முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன்,
    முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற
    நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு
    தொழநின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து,
    பலகால் நினைந்து, பணிவான்;
249

உரை
   
 
கலுழன் விண்ணில் நின்றே இராமனது தயெ்வநிலையை நினைந்து துதிப்பது (8382-8393)

8382.‘வந்தான் மறைந்து பிரிவால் வருந்து
    மலர்மேல் அயன்தன் முதலோர்
தம் தாதை தாதை இறைவா!
    பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
    துயர்கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல், உடையாய்! வருந்தல்,
    என, இன்ன, பன்னி மொழிவான்.
250

உரை
   
 
8383.‘தேவாதி தேவர் பலராலும் முந்து
    திருநாமம் ஓது செயலோய்!
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும்
    அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவைமேவி, மேவ
    நெடு வீடு காட்ட முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்! ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?
251

உரை
   
 
8384.‘எழுவாய், எவர்க்கும் முதலாகி, ஈறு ஒரு
    இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈயவில்லை;
    அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை
    உருவாய் மறைந்து; துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்! ஆர் இவ்
    அதிரேக மாயை அறிவார்
252

உரை
   
 
8385.‘உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி;
    ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி;
    முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது? “ என்னில்
    இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமேகொல்? பிறிதேகொல்? ஆர் இவ்
    அதிரேக மாயை அறிவார்?
253

உரை
   
 
8386.வாழ் நாள் அளித்தி, முடியாமல்; நீதி
    வழுவாமல் நிற்றி மறையாய்;
பேணாய், உனக்கு ஓர்பொருள் வேண்டும் என்று;
    பெறுவான் அருத்தி பிழையாய்,
ஊணாய் உயிர்க்கும் உயிராகி நிற்கும்
    உணர்வு ஆதி; பெண்ணின் உருவாய்
ஆணாகி; மற்றை அலியாதி! ஆர் இவ்
    அதிரேக மாயை அறிவார்?
254

உரை
   
 
8387.“தான் அந்தம் இல்லை; பல “ என்னும்,
    ஒன்று; “தனி “ என்னும், ஒன்று, “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் ‘‘ என்னும், ஒன்று;
    ‘‘நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம் ‘‘ என்னும், ஒன்று;
    மறைநாலும் அந்தம் அறியாது,
“ஆனந்தம்“ என்னும், “அயல்“ என்னும்!
    ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?
255

உரை
   
 
8388.‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
    மெய்யாக மெய்யின் நினையும்
“கேளாக நிற்றி; பிற வேறு, பேசு
    கெடுவார்கள் சொன்ன கடவாய்;
மாளாத நீதி இகழாமை நின் கண்
    அபிமானம் உள்ள வறியோர்
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி! ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?
256

உரை
   
 
8389.சொல் ஒன்று உரைத்தி; பொருளாதி; தூய
    மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
    மிளிர்சங்கம் அம் கை உடையாய்!
‘கொல் ‘என்று உரைத்தி; கொலை உண்டு நிற்றி;
    கொடியாய் உன் மாயை அறியேன்;
அல்லென்று நிற்றி; பகல் ஆதி! ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?
257

உரை
   
 
8390.‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி;
    மயலாரும் யானும் அறியேன்
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி;
    ஒருதன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி,
    பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் ஆரிது ஆக! ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?
258

உரை
   
 
8391.‘வினைவர்க்கு முற்றும் உடனே படைத்தி;
    அவைசெய்தி, ஒன்றும் விழையாய்
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி,
    அறியாமை நிற்றி; நிமிரா;
முனைவர்க்கும் முத்தி, அமரர்க்கும் ஒத்தி,
    முழுமூடர் என்றும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இவ்
    அதிரேக மாயை அறிவார்?
259

உரை
   
 
8392.‘எறிந்தாரும் ஏறு படுவாரும், இன்ன
    பொருள்கண்டு இரங்குபவரும்,
செறிந்து ஆயது உண்மை எனல் ஆய தன்மை
    தரெிகின்றது, உன்தன் இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருேளாடு போதி;
    பிறியாது நிற்றி பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இவ்
    அதிரேக மாயை அறிவார்?
260

உரை
   
 
8393.‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த
    பொருள்தோறும் நிற்றி, பிரியாய்;
தீராய்; பிறந்து திரிவாய், திறம்தொறு;
    அவை தேறும் என்று; சிதையாய்,
கூர் ஆழி அம்கை உடையாய்;
    திரண்டு ஓர் உரு ஆய கோடல் உரி போல்,
ஆராயின், ஏதும் இலை ஆதி ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்? ‘
261

உரை
   
 
கருடன் இராமனை நெருங்குதல்

8394.என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த
    எரிசோதி கீற, இருள்போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற
    பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்? ‘என்று
    நிமிர்கின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும் முன்னம், உடன் ஆயினான்,
    இவ் உலகு ஏழும் மூடு சிறையான்.
262

உரை
   
 
கலுழன் வந்தவுடன் நாகபாசம் அகலுதல் (8395-8396)

8395.வாசம் கலந்த மரைநாள நூலின்
    வகை என்பது என்னை? மழை என்று
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல்
    சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ்சொல்
    அறிவாளர்; என்று இம்முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற
    பதகன் துரந்த உரகம்.
263

உரை
   
 
8396.பல் ஆயிரத்தின் முடியாத பக்கம்
    அவை வீச வந்து படர்கால்
செல்லா நிலத்தின் இருளாதல், செல்ல,
    உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடும் எண்ணி
    அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
    வடு ஆன, மேனி வடுவும்.
264

உரை
   
 
வானரசேனை உயிர்பெற்று எழுதல்

8397.தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை
    தழுவிப் புணர்ந்த தகையால்
உரும் ஒத்த வெங்கண், வினை தீய, வஞ்சர்
    உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவிசேனை வெள்ளம்,
    மலர்மேல் அவ் வள்ளல் கடைநாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து
    நிலைநின்ற, தயெ்வ நெறியால்.
265

உரை
   
 
இலக்குவன் எழக்கண்ட இராமன் மகிழ்ச்சி

8398.இளையான் எழுந்து தொழுவானை, அன்பின்,
    இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தயெ்வம்
    வெளிவந்தது ‘என்ன வியவா,
இளையார்கள் அன்ன துணையோரை,
    ஆவி கெழுவா, எழுந்து தழுவா
முளையான திங்கள் உகிரான்முன் வந்து,
    முறைநின்ற வீரன் மொழிவான்.
266

உரை
   
 
இராமன் கருடனை யாரென வினவி அவன் உதவியைப் பாராட்டுதல் (8399-8401)

8399.‘ஐய! நீ யாரே? எங்கள் அருந்தவப்
    பயத்தினான் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும்
    ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த
    காட்சியை அல்லை; மீட்சி
செய்திறம் இலையால் ‘என்றான்
    தேவர்க்கும் தரெிகிலாதான்.
267

உரை
   
 
8400.‘பொருளினை உணர வேறு புறத்தும்
    ஒன்று உண்டோ, புந்தித்
தரெுளினை உடையர் ஆயின்? செயல்
    அருங் கருணைச் செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை
    ஈது ஆகின், வாயால்
அருளினை என்னின், எய்த அரியன
    உளவோ? ஐய!
268

உரை
   
 
8401.‘கண்டிலை, முன்பு; சொல்லக்
    கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால்,
    குறை இலை; இது நின் கொள்கை;
“உண்டு, இலை “ என்ன நின்ற
    உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள்
    செய்வது என்? பகர்தி! என்றான
269

உரை
   
 
கருடன் விடைபெற்றுச் செல்லுதல்

8402.பறவையின் குலங்கள் காக்கும்
    பாவகன் “பழைய நின்னோடு
உறவு உளதன்மை எல்லாம்
    உணர்த்துவென்; அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென் ‘
    என்று உணர்த்தி, மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை ‘‘
    எனப் பெயர்ந்து போனான்.
270

உரை
   
 
இராமன் கருடனைப் புகழ்தல்

8403.ஆரியன் அவனை நோக்கி,
    ‘ஆயிருர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
    கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை
    ஊதியம் பிடித்தும் “ என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு
    இயற்றுமோ, வையம்? ‘என்றான்.
271

உரை
   
 
அனுமன் ஆரவாரம் செய்யலாம் என்பது

8404.“இறந்தனன், இளவல் “ என்னா,
    இறைவியும் இடுக்கண் எய்தும்;
மறந்தனர் உறங்கு கின்ற
    வஞ்சரும் மறுகி, “மீளப்
பிறந்தனர் ‘‘ என்று கொண்டு, ஓர்
    பெரும்பயம் பிடிப்பர் அன்றே,
அறந்தரும் சிந்தை ஐய!
    ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான்
272

உரை
   
 
அனுமன் கருத்திற்கு இராமன் உடன்படல்

8405.‘அழகிது ‘என்று அண்ணல் கூற,
    ஆர்த்தனர் கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக்
    குன்றின் நின்று அண்ட கோளம்
எழ மிசை, உலகம் மேல்மேல்
    ஏங்கிட, இரிந்து சிந்தி
மழைவிழ, மலைகள் கீற,
    மாதிரம் பிளக்க மாதோ.
273

உரை
   
 
வானரங்களின் ஆரவாரத்தை இராவணன் கேட்டல்

8406.பழிப்பு அருஞ் சிந்தையாள்பால்
    சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனிசால
    வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்பு அரிது ஆய மார்பை
    மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக்
    கிடந்த வாள் அரக்கன் கேட்டான்
274

உரை
   
 
இலங்கையில் துயிலாதார் இருவரே

8407.தாதைசொல் தலைமேல் கொண்ட
    தாபதன், தரும மூர்த்தி,
ஈதைகள் தீர்க்கும் நாமத்து
    இராமனை எண்ணி எங்கும்
சீதையும், அவளை உன்னிச்
    சிந்தனை தீர்ந்து தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர்
    யார் உளர், துயில் பெறாதார்?
275

உரை
   
 
இராவணன் இந்திரசித்தின் சொல்லை
நினைந்து சிரித்தல்

8408.சிங்க ஏறு, அசனை ஏறு
    கேட்டலும், ‘சீற்றம் சேனை
பொங்கியது ‘என்ன மன்னன்
    பொருக்கென வெழுந்து, ‘‘போரில்
மங்கினர் பகைஞர் ‘‘ என்ற
    வார்த்தையே வலியது! என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி
    அலங்கல் தோள் குலுங்க நக்கான்
276

உரை
   
 
ஆரவாரத்தினை இராவணன் பிரித்துணர்வது (8409-8410)

8409.‘இடிக்கின்ற அசனி என்ன
    இரைக்கின்றது, இராமன் போர் வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன,
    படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து
    செவிதொறும் அனுமன் ஆர்ப்புப்
பிடிக்கின்றது உலகம் எங்கும்,
    பரிதி சேய் ஆர்ப்பின் வெற்றி.
277

உரை
   
 
வானரசேனை பாசத்தினின்று விடுபட்டதை
இராவணன் உய்த்துணர்தல்

8410.‘அங்கதன் அவனும் ஆர்த்தான்;
    அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங்கத நீலன்; மற்றை
    வீரரும், வேறு வேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை
    அண்டத்தின் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார்
    பாசத்தை, தருமம் நல்க!
278

உரை
   
 
இராவணன் இந்திரசித்தின் மாளிகைக்குப் போதல்

8411.என்பது சொல்லி, பள்ளிச்
    சேக்கை நின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாள் கை
    அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன்பொதி விளக்கம் கோடிப்
    பூங்குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில் நின்றும்
    மகன் தனிக் கோயில் சார்ந்தான்
279

உரை
   
 
உடன் சென்ற மகளிர் (8412-8415)

8412.தாங்கிய துகிலார், மெள்ளச்
    சரித்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை
    விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித்
    துளங்கிய நடையார், வல்லி
வாங்கிய மருங்கின் மாதர்,
    அனந்தரால் மயங்கி வந்தார்.
280

உரை
   
 
8413.பானமும், துயிலும், கண்ட
    கனவும், பண்கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள,
    களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாள் கண்
    விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார்,
    மழலை அம் சதங்கை மாழ்க.
281

உரை
   
 
8414.மழையிழை நீலம் ஊட்டி,
    வாசமும் புகையும் மாட்டி
உழை உழை சுருட்டி, மென்பூ
    குவித்து இடைக்கு இடையூறு என்னாப்
பிழையுடை நுதலார் செய்த
    பெருங் குழல் கருங் கண் செவ்வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார்,
    அனந்தரால் இடங்கள் தோறும்
282

உரை
   
 
8415.தேனிடை, கரும்பில், பாலில்,
    அமுதினில் கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில்,
    மலரிடை நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும்
    நல்வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த
    மங்கையர் மருங்கு சென்றார்.
283

உரை
   
 
ஆரவாரம் கேட்டு அரக்கரும் அரக்கியரும் நடுங்குதல்

8416.தொடங்கிய ஆர்ப்பின் ஓசை
    செவிப் புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன
    எறுழ்வலி அரக்கர் யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட
    வான்கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும் அசனி கேட்ட
    அளை உறை அரவம் ஒத்தார்.
284

உரை
   
 
இராவணன் படுக்கையில் புண்ணோடு புரளும் இந்திரசித்தினைக் காணுதல்

8417.அரக்கனும் மைந்தன் வைகும்
    ஆடகத்து அமைந்த மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான்,
    புண்ணினிற் குமிழி பொங்கத்
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால்
    தொலைப்பு உண்டு சாய்ந்து போன,
கருக் கிளர் மேகம் அன்ன,
    களிறு அனையானைக் கண்டான்.
285

உரை
   
 
இந்திரசித்தின் துன்ப நிலைக்குக் காரணம் வினவுதல்

8418.எழுந்து அடி வணங்கல் ஆற்றான்,
    இருகையும் அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித்
    துணுக்குற்ற மனத்தன் ஆகி
அழுங்கினை, ‘மைந்த! என்னை
    அடுத்தது? ‘என்று எடுத்துக் கேட்டான்.
புழுங்கின உள்ளத் தானும்
    இனையன புகலல் உற்றான்.
286

உரை
   
 
இந்திரசித்தின் மறுமொழி (8419-8422)

8419.‘உருவின் உரத்தை முற்றும்,
    உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின, அளப்பிலாத
    பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால
    அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும்
    மாயையில் தீர்ந்திலேனேல்?
287

உரை
   
 
8420.இந்திரன், விடையின் பாகன்,
    எறுழ்வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன், என்று இத்
    தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலன்; இனையது ஒன்றும்
    நுவன்றிலன்; மனிதன் நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்!
    வரம்பு உடைத்து அன்று மன்னோ.
288

உரை
   
 
8421.“இளையவன் தன்மை ஈதால்;
    இராமனது ஆற்றல் எண்ணில்,
தளை அவிழ் அலங்கல் மார்ப!
    நம்வயின் தங்கிற்று அன்றால்,
விளைவு கண்டு உணர்வது அல்லால்,
    வென்றிமேல் விளையும் என்ன
உளை; அது அன்று; “ என்னச் சொன்னான்
    உற்றுளது உணர்ந்திலாதான்.
289

உரை
   
 
8422.‘வென்றது பாசத்தாலும்,
    மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்கு வீரர்
    தம்மொடு அக் கொற்றத் தோனை;
நின்றனன், இராமன் இன்னும்;
    நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் ‘
என்றனன்; என்னக் கேட்ட
    இராவணன் இதனைச் சொன்னான்.
290

உரை
   
 
இராவணன் பகைவரின் போரொலி
கேட்டிலையோ எனல்

8423.‘வார்கழல் கால! மற்று அவ்
    இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப்
    பிளந்திடக், குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை
    கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும் ஐய!
    அறிந்திலை போலும்! ‘என்றான
291

உரை
   
 
இந்திரசித்து வியந்து விடை கூறுதல்

8424.‘ஐய! வெம் பாசம் தன்னால்
    ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ்சரத்தால் மேனி
    பிளப்புண்டார்; “உணர்வு பேர்ந்தார்
உய்யுநர் ‘‘ என்று உரைத்தது
    உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?
செய்யும் என்று எண்ணத் தயெ்வம்
    சிறிது அன்றோ? தரெியின் அம்மா!
292

உரை
   
 
அப்போது இராவணன் அனுப்பிய தூதுவர் வந்து களத்தில் கண்டதைக் கூறத் தொடங்குதல்

8425.ஈது உரை நிகழும் வேலை,
    எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார்,
    புகுந்து, அடி தொழுதலோடும்,
‘யாது அவண் நிகழ்ந்தது? ‘என்ன
    இராவணன் இயம்ப, ஈறு இன்று
ஓதிய கல்வியாளர்
    புகுந்துளது உரைக்கலுற்றார்.
293

உரை
   
 
தூதுவர் உரைத்தது (8426-8427)

8426.‘பாசத்தால் பிணிப்புண்டாரை,
    பகழியால் களப் பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன்
    இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத்தான் இரங்கி ஏங்கி,
    “உலகு எலாம் எரிப்பென் “ என்றான் :
வாசத்தார் மாலை மார்ப :
    வான் உறை கலுழன் வந்தான்.
294

உரை
   
 
8427.‘அன்னவன் வரவு காணா
    அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்ன பின்னங்கள் ஆன;
    புண்ணொடும் அயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி,
    மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது ‘என்றார்,
    அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்.
295

உரை
   
 
இராவணன் வீரமொழி (8428-8430)

8428.ஏத்தருந் தடந்தோள் ஆற்றல்
    என்மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான்,
    கலுழன் ஆம்; காண்மின், காண்மின்!
வார்த்தை ஈது ஆயின், நன்றால்,
    இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!
மூத்தது கொள்கை போலாம்?
    என்னுடை முயற்சி எல்லாம்.
296

உரை
   
 
8429.‘உண்டு உலகு ஏழும் ஏழும்
    உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற
    செருவினில், மறுக்கம் கொண்டான்,
மண்டலம் திரிந்த போதும்,
    மறிகடல் மறைந்த போதும்,
கண்டிலன் போலும், சொற்ற
    கலுழன், அன்று, என்னைக் கண்ணால்?
297

உரை
   
 
8430.‘கரங்களில் நேமி சங்கம்
    தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன
    பொழுதில், என் சிலையின் பொங்கி,
உரங்களின், முதுகின், தோளின்,
    உழையுறு சிறையின் உற்ற
சரங்களும் நிற்கவே கொல்,
    வந்தது அவ் அருணன் தம்பி?
298

உரை
   
 
இந்திரசித்தைப் போர்க்குப் போகுமாறு சொல்லுதல்

8431.‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல்
    இயைந்தவாறு இயைக! எஞ்சி
மீண்டவர் தம்மைக் கொல்லும்
    வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும்
    ஆற்றுதி, அரும்போர் அன்னோன்
காண்டலும், நாணும் ‘என்றான்;
    மைந்தனும் கருத்தைச் சொன்னான
299

உரை
   
 
இந்திரசித்து நாளைக்குப் போவேன் எனல்

8432.‘இன்று ஒரு பொழுதும் தாழ்த்து
    என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று ஒரு கணத்தில் நாளை
    நான்முகன் படைத்த தயெ்வ
வென்றி வெம் படையினால் உன்
    மனத்துயர் மீட்பென் ‘என்றான்;
‘நன்று ‘என அரக்கன் போய்,
    தன் நளிமலர்க் கோயில் புக்கான்.
300

உரை