வானரர்கள் செய்த ஆரவாரங் கேட்ட படைத்தலைவர் போர் செய்ய இராவணனிடம் விடை கேட்டல்

8433.ஆர்த்து எழும் ஓசை கேட்ட
    அரக்கரும் முரசம் ஆர்ப்ப,
போர்த்தொழில் வேட்கை பூண்டு,
    பொங்கினர், புகுந்து மொய்த்தார்,
தார்த் தட மார்பன் தன்னை,
    ‘தா, விடை ‘என்னச் சார்ந்தார்;
பார்த்தனன், முனிந்து மன்னன்
    இனையன பகர்வது ஆனான்.
1

உரை
   
 
மாபெரும் பக்கனும் புகைக் கண்ணனும் தம்மைப் போர் செய்ய அனுப்புமாறு வேண்டுதல்

8434.மாபெரும் பக்கனோடு
    வான்புகைக் கண்ணன் வந்து, ‘இங்கு
ஏவுதி எம்மை ‘என்பார்
    தம்முகம் இனிதின் நோக்கி,
‘போவது புரிதிர் ‘என்னப்
    புகறலும், பொறாத தூதர்
தேவ, மற்று இவர்கள் செய்கை
    கேள்! ‘எனத் தரெியச் சொன்னார்
2

உரை
   
 
தூதர்கள் மாபெரும் பக்கன் புகைக் கண்ணன் ஆகிய இருவரது செய்கையைச் சொல்லுதல்

8435.‘ஆனையும் பரியும் தேரும்
    அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற
    தலைமகன் தனிமை ஓரார்,
“மானவன் வாளி வாளி! “
    என்கின்ற மழலை வாயார்
போனவர் மீள வந்து
    புகுந்தனர் போலும்! ‘என்றார்.
3

உரை
   
 
இராவணன் படைத்தலைவர் மீது கோபங் கொள்ளுதல்

8436.அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்
‘இற்று இதுவோ இவர் சேவகம்? ‘என்னா
‘பற்றுமின்! ‘என்றனன் வெம்மை பயின்றான்.
4

உரை
   
 
8437.என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்
பின்றலினோரை வலிந்து பிடித்தார்
நின்றனர்; ஆயிடை நீல நிறத்தான்
‘கொன்றிடுவீர் அலீர்; கொண்மின் இது’என்றான்.
5

உரை
   
 
8438.‘ஏற்றம் இனிச்செயல் வேறு இலை; ஈர்வீர்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல்தரு திண் பணை கொட்டினர் கொண்டு ஊர்
சாற்றுமின் “அஞ்சினர் ” என்று உரைதந்தே ‘.
6

உரை
   
 
மாலி அச் செயலைத் தடுத்துரைத்தல் (8439-8447)

8439.அக்கணனே அயில் வாளினர் நேரா;
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்
புக்கனர்; அப்பொழுதில் புகழ் தக்கோய்!
தக்கிலது ‘என்றனன் மாலி தடுத்தான்.
7

உரை
   
 
8440.‘அம்சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்
வெம்சமம் வேறலும் வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார்?
8

உரை
   
 
8441.‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தன நம்வயின் எத்தனை மன்னா!
தந்திரம் வானவர் தானவர் என்னும்
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே;
9

உரை
   
 
8442.‘வருணன் நடுங்கினன் வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்?
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால்.
10

உரை
   
 
8443.‘பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்;
வித்தக யார் இனி வீரம் விளைப்பார்?
11

உரை
   
 
8444.‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா
நீசரை ஈருதியோ நெடு நாசி?
12

உரை
   
 
8445.“வாழி இலக்குவன் ” என்னின் மறுக்குற்று
ஆழி அரக்கர்தம் வாயில் அடைப்பார்;
ஏழு கடல் துணையோ? இனி நாசி
ஊழி அறுத்திடினும் உலவாதால்.
13

உரை
   
 
8446.‘தூது நடந்தவனைத் தொழுது அந்நாள்
ஓது நெடுஞ்செரு அஞ்சி உடைந்தார்
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர் நாசி படைத்தார்.
14

உரை
   
 
8447.‘விட்டிலை சீதையை ஆமெனின் வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார்?
“வெட்டுதி நாசியை வெந்தொழில் வல்லோர்
பட்டிலர் “ என்றிலை ‘என்று பகர்ந்தான்.
15

உரை
   
 
மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் கூறுதல் (8448-8451)

8448.ஆறின பின்னர் அழிந்தனர் அன்னார்
தேறினர் அன்னது சிந்தை உணர்ந்தார்
சீறிய நெஞ்சினர் செங்கணர் ஒன்றோ
கூறினர் தம்நிலை செய்கை குறித்தார்.
16

உரை
   
 
8449.‘உன்மகன் ஒல்கி ஒதுங்கினன் ஒன்றோ?
மின் நகு வான் இடை ஏக விரைந்தான்
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இந்நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய்!
17

உரை
   
 
8450.‘இப்பகல் ஒன்றினின் நாளையின் அல்லால்
முப்பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்
வெப்பு அகலா எரி வெந்தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தரெிந்தோய்!
18

உரை
   
 
8451.‘விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
கெட்டனர் என்பது கேளலை ‘என்னா
ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார்.
19

உரை
   
 
இராவணன் அப் படைத்தலைவர் இருவருடன் சேனைகளை அனுப்புதல்

8452.அன்னவர் தம்மொடும் ஐ இரு வெள்ளம்
மின்னு படைக்கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமையானை சுடர்த்தேர்
துன்னு வயப் பரியோடு தொகுத்தான்.
20

உரை
   
 
படைத்தலைவர் போருக்குப் புறப்படுதல் (8453-8454)

8453.நெய் அழல் வேள்வி நெடும்பகை நேர் விண்
தைவரு சூரிய சத்துரு என்பான்
பெய்கழல் மாலி பிசாசன் எனும் பேர்
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான்.
21

உரை
   
 
8454.என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்
வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார்;
சென்றன மால்கரி தேர் பரி செல்லக்
குன்று இனம் என்ன நடந்தனர் கோட்பால்.
22

உரை
   
 
சேனைகள் சென்ற காட்சி (8455-8460)

8455.விண்ணை விழுங்கிய தூளிய விண்ணோர்
கண்ணை விழுங்குதலின் கரை காணார்
எண்ணை விழுங்கிய சேனையை யாரும்
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால்.
23

உரை
   
 
8456.கால்கிளர் தேரொடு கால் வரையோடு
மேல்கிளர் பல்கொடி வெண்திரை வீச
மால்கடல் ஆனது மாமழை வானம்
பால்கிளர் மீனிடை ஆடிய பண்பால்.
24

உரை
   
 
8457.பேரி கலித்தன பேர் உலகைச் சூழ்
ஏரி கலித்தன ஆம் என; யானை
கார் இகலிக் கடலோடு கலித்த;
மாரி கலித்து என வாசி கலித்த.
25

உரை
   
 
8458.சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடைக்
குன்று நடந்தன போல் கொலை யானை
26

உரை
   
 
8459.மாக நெடுங்கரம் வானின் வழங்கா
மேக நெடும்புனல் வாரின மேன்மேல்
போக விலங்கின உண்டன போலாம்
காக நெடுங்கனி யானை களிப்பால்.
27

உரை
   
 
8460.எரிந்து எழு பல்படையின் ஒளி வீரர்
அருங்கல மின் ஒளி தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க
இரிந்தது பேரிருள் எண் திசை தோறும்.
28

உரை
   
 
இராமன் வீடணனை வினாவுதல்

8461.எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான்
‘வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி
செய்தவனேகொல்; தரெித்தி இது ‘என்றான்;
ஐயமில் வீடணன் அன்னது உரைத்தான்.
29

உரை
   
 
வீடணன் இராமனுக்கு வீரர்களைப் பற்றிக் கூறுதல்
(8462-8467)

8462.‘முழைக் குலச் சீயம் வெம்போர்
    வேட்டது முனிந்தது என்ன,
புழைப்பிறை எயிற்றுப் பேழ்வாய்,
    இடிக் குலம் பொடிப்ப, ஆர்த்து,
தழைப்பொறி வாளிப் புட்டில்
    கட்டி, வில் தாங்கி, சார்வான்
மழை குரல் தேரின் மேலான்
    மாபெரும் பக்கன் மன்னோ.
30

உரை
   
 
8463.‘சிகை நிறக் கனல் பொழி தறெுகண் செக்கரான்
பகைநிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்
நகைநிறப் பெருங்கடை வாயை நக்குவான்
புகைநிறக் கண்ணவன் பொலம் பொன்தேரினான்.
31

உரை
   
 
8464.‘பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்
முச்சிரத்து அயிலினான் மூரித் தேரினான்
“இச் சிரம் உம்மதே? ” என வந்து எய்துவான்
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான்.
32

உரை
   
 
8465.‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வால் உளை புரவியன் மடித்த வாயினன்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான்.
33

உரை
   
 
8466.‘சூரியன் பகைஞன் அச்சுடர் பொன் தேரினன்
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான்;
ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம் அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான்.
34

உரை
   
 
8467.‘சாலி வண்கதிர் நிகர் புரவித் தானையான்
மூலவெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்
சூலியும் வெரு கொளத் தேரில் தோன்றுவான்
மாலி’என்று அடிமுறை வணங்கிக் கூறினான்.
35

உரை
   
 
வானரரும் அரக்கரும் பொருதல் (8468-8483)

8468.ஆர்த்து எதிர் நடந்தது அவ் அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி; உற்று இரண்டு சேனையும்
போர்த் தொழில் புரிந்தன; புலவர் போக்கு இலார்
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே.
36

உரை
   
 
8469.கல் எறிந்தன கடை உருமின் கார் என
வில் எறிந்தன கணை; விசும்பின் மேகத்துச்
செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என.
37

உரை
   
 
8470.கடம் படு கரிபட கலின மாப்பட
இடம்படு சில்லியின் ஈர்ந்த தேர்பட
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்
படம்படும் எனப்படும் கவியின் கல்பல.
38

உரை
   
 
8471.கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்
நிலைநெடுங் காலொடும் நிமிர்ந்த வாலொடும்
மலையொடும் மரத்தொடும் கவியின் வல்நெடுந்
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம்.
39

உரை
   
 
8472.ஆண்தகைக் கவிக்குலத் தலைவர் ஆக்கையைக்
கீண்டன புவியினைக் கிழித்த மாக் கரி
தாண்டுவ குலம் பரி மனத்தின் தாவுவ
தூண்டினர் கைவிசைத்து எறிந்த தோமரம்.
40

உரை
   
 
8473.சில்லி அம் தேர்க்கொடி சிதைய சாரதி
பல்லொடு நெடுந்தலை மடிய பாதகர்
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால்
கல்லெனக் கவிக்குலம் வீசும் கல் அரோ.
41

உரை
   
 
8474.கரகம் உந்திய மலை முழையில் கண் செவி
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை
அரகம் முந்தின நெடுங் கவிகள் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் குலமே.
42

உரை
   
 
8475.வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால்கரி;
கால் பிடித்து அடிக்கும் அக் கரியினைக் கவி;
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு;
வேல் பிடித்து எறிவர் அம் முசுவை வெம் கணார்.
43

உரை
   
 
8476.முன் படு கவிக் குலம் முடுக வீசிய
கல்பட களம்படும் அரக்கர் கார்க் கடல்;
பல்படு தலைபடப் படுவ பாதகர்
வில்படு கணைபட குரங்கின் வேலையே.
44

உரை
   
 
8477.எயிற்றொடு நெடுந்தலை இட்ட கல்லொடும்
வயிற்றிடை புக பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும் தரெிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அந் நலார்.
45

உரை
   
 
8478.கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி
எச்சு உறு துயர் இடை எய்த ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுேளார் என.
46

உரை
   
 
8479.மீயவர் யாவரும் வீய வெம் கரி
சேயிருங் குருதியில் திரிவ சேர்வு இல
நாயகர் ஆெளாடும் அவிய நவ்விதம்
பாயொடு வேலையில் திரியும் பண்பின.
47

உரை
   
 
8480.படையொடு மேலவர் மடிய பல்பரி
இடை இடை தர விழுந்து இழிந்த பண்பன
கடல் நெடுங் குருதிய கனலி காலுறு
வடவையை நிகர்த்தன உதிரம் வாயன.
48

உரை
   
 
8481.தூமக் கண்ணனும் அனுமனும்
    எதிர் எதிர் தொடர்ந்தார்;
தாமத்து அங்கதன் மாபெரும்
    பக்கனைத் தடுத்தான்;
சேமத் திண்சிலை மாலியும்
    நீலனும் செறுத்தார்;
வாம் அப் போர் வயப் பிசாசனும்
    பனசனும் மலைந்தார்.
49

உரை
   
 
8482.சூரியன் பெரும் பகைஞனும்
    சூரியன் மகனும்
நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை
    வேள்வியின் பகையும்
ஆரியன் தனித் தம்பியும்
    எதிரெதிர் அடர்ந்தார்;
வீர வச்சிரத்து எயிற்றனும்
    இடபனும் மிடைந்தார்.
50

உரை
   
 
8483.வெங்கண் வெள் எயிற்று அரக்கரில்,
    கவிக்குல வீரச்
சிங்கம் அன்ன போர்த் தலைவரில்,
    தலைவராய்த் தரெிந்தார்,
அங்கு அமர் களத்து ஒருவரோடு
    ஒருவர் சென்று அடர்ந்தார்;
பொங்கு வெஞ்செருத் தேவரும்
    நடுக்குறப் பொருதார்;
51

உரை
   
 
அரக்கர் சேனையின் அழிவு

8484.இன்ன காலையின், ஈர் ஐந்து
    வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்தம்
    சேனையில், வீரன்
அன்ன வெஞ் சமத்து ஆறு
    வெள்ளத்தையும் அவித்தான்;
சொன்ன நாலையும் இலக்குவன்
    பகழியால் தொலைத்தான்.
52

உரை
   
 
இரத்த வெள்ளம் கடலொடு சேர்ந்த தோற்றம்
(8485-8486)

8485.உப்புடைக் கடல் மடுத்தன
    உதிரநீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில,
    ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தரெிந்தது;
    மீன்குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்து இனம்
    குன்றியின் தோன்ற.
53

உரை
   
 
8486.தத்து நீர்க் கடல் முழுவதும்
    குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற
    மணிகளும் சேந்த;
ஒத்து வேறு உருத் தரெியல,
    உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகுதரளமும்,
    வளை சொரி முத்தும்.
54

உரை
   
 
சூரியன் தோன்றுதல்

8487.அதிரும் வெஞ்செரு அன்னது ஒன்று
    அமைகின்ற அளவில்,
கதிரவன், கொழுஞ் சேயொளிக்
    கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருள் கரி இறுத்து
    எழுமுறை, முழுகி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன்
    ஆமென உதித்தான்.
55

உரை
   
 
வெயில் பரத்தல்

8488.அரக்கர் என்ற பேர் இருளினை
    இராமன் ஆம் இரவி
துரக்க, வெஞ்சுடர்க் கதிரவன்
    புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை
    உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன,
    உலகு எலாம் நிமிர.
56

உரை
   
 
போர்க்களக் காட்சி (8489-8491)

8489.நிலைகொள் பேர் இருள் நீங்கலும்,
    நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல
    வயின்தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய
    தோன்றுவ போன்றன சோரி
அலைகொள் வேலையும்
    அரும் பிணக் குன்றமும் அணவி
57

உரை
   
 
8490.நிலம் தவாத செந்நீர் இடை,
    நிணக் கொழுஞ் சேற்றில்
புலர்ந்த காலையில், பொறி வரி
    அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெருவனம்,
    கதிரவன் கரத்தால்
மலர்ந்தது ஆம் எனப்
    பொலிந்தன, உலந்தவர் வதனம
58

உரை
   
 
8491.தேரும் யானையும் புரவியும் விரவின தேவர்
ஊரும் மானமும் மேகமும் உடுக்கள் தம் உலகும்
பேரும் ஆன வெம் காலத்துக் கால்பொர பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்த.
59

உரை
   
 
போர்க்களம் எய்திய அரக்கியரின் தன்மையும்
செயலும் (8492-8499)

8492.எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் எரிவீழ்
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார்
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்
வல்லி சுற்றிய மாமரம் நிகர்த்தனர் வயவர்.
60

உரை
   
 
8493.வணங்கு நுண்ணிடை, வனமுலை,
    செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர்
    களத்து வந்து அடைந்தார்
குணம் கொளும் துணைக் கணவர்தம்
    பசுந்தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப்
    பிளந்தனர் பிடித்தார்
61

உரை
   
 
8494.சுடரும் வெள்வளைத் தோளி, தன்
    கொழுநனைத் தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு
    ஒருவழி உய்ப்பாள்,
குடரும் ஈரலும் கண்ணும், ஓர்
    குறுநரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து,
    ஆருயிர் துறந்தாள்
62

உரை
   
 
8495.பெரிய வாள் தடங் கண்ணியர்,
    கணவர்தம் பெருந்தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும்
    இணங்கவும் நல்கா
இரியல் போவன தொடர்ந்து,
    அயல் இனப் படைகிடந்த
அரிய நொந்திலர் அலத்தகச்
    சீறடி, அயர்ந்தார்
63

உரை
   
 
8496.நலம்கொள் நெஞ்சினர், தம் துணைக்
    கணவரை நாடி,
விலங்கல் அன்னவான் பெரும்பிணக்
    குப்பையின் மேலார்
அலங்கல் ஓதியர், அருந்துணை
    பிரிந்து நின்று அயரும்,
பொலம்கொள் மாமயில் வரையின்
    மேல் திரிவன போன்றார்.
64

உரை
   
 
8497.சிலவர் தம் பெருங் கணவர்தம்
    செருத்தொழில் சினத்தால்
பலரும், வாய் மடித்து உயிர்துறந்
    தார்களைப் பார்த்தார்,
‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ்
    மறைத்துளது, அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று
    ஆம்‘ எனக் கனன்றார்.
65

உரை
   
 
8498.நவைசெய், வன்தலை இழந்த தம்
    நண்பரை நணுகி
அவசம் எய்திய மடந்தையர்
    உருத் தரெிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப்
    பெருங்குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டுகண்டு,
    ஆருயிர் கழித்தார்.
66

உரை
   
 
8499.மாரி ஆக்கிய கண்ணியர்,
    கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப்
    பொருகளம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப்பெருங்
    குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர்,
    இன் உயிர் துறந்தார்.
67

உரை
   
 
அனுமனுடன் பொருது புகைக்கண்ணன் மடிதல்
(8500-8504)

8500.வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்
புகையின் பொரு கண்ணவனும் பொருவார்;
மிகை சென்றிலர் பின்றிலர்; வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்.
68

உரை
   
 
8501.ஐ அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்
வை அம் சிலை ஆறு வழங்கினனால்
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான்.
69

உரை
   
 
8502.பாழிப் புயம் அம்பு உருவப் படலும்
வீழிக் கனிபோல் புனல்வீச வெகுண்டு
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண்திறலான்.
70

உரை
   
 
8503.சில்லிப் பொருதேர் சிதைய சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால்;
புல்லித் தரை இட்டனன் நேர் பொருவான்.
71

உரை
   
 
8504.மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
உலையக் கடல் தாவிய கால்கொடு உதைத்து
அலையின் பருகிப் பகுவாய் அனல்கால்
தலை கைக் கொடு எறிந்து தணிந்தனனால்.
72

உரை
   
 
அங்கதனொடு மாபக்கன் பொருது அழிதல்
(8505-8510)

8505.மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபம் அத்து இன் எரிந்து எழு செங்கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்.
73

உரை
   
 
8506.ஐம்பத்தொரு வெங்கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான்
வெம்பி களியோடு விளிந்து எழு திண்
கம்பம் கரி உண்டை கடாய் எனவே.
74

உரை
   
 
8507.ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
காரோடு நிறக் கத நாகம் அனான்
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால்
பாரோடும் அடுத்து எறி பண்பு இடையே.
75

உரை
   
 
8508.வில்லைச் செல வீசி விழுந்து அழியும்
எல்லின் பொலி தேர் இடை நின்று இழியா
சொல்லின் பிழையாதது ஒர் சூலம் அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.
76

உரை
   
 
8509.‘சூலமெனின் அன்று இது; தொல்லை வரும்
காலம் ‘என உன்னு கருத்தினனாய்
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர்
ஆலம் உடை அம்பின் அறுத்தனனால்.
77

உரை
   
 
8510.உளம்தான் நினையாதமுன் உற்று உகவாக்
கிளர்ந்தானை இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான் ‘வலி நன்று ‘என அங்கதனே.
78

உரை
   
 
மாலியும் நீலனும் பொருதல் (8511-8512)

8511.மா மாலியும் நீலனும் வானவர்தம்
கோமானொடு தானவர்கோன் இகலே
ஆமாறு மலைந்தனர் என்று இமையோர்
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால்.
79

உரை
   
 
8512.கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறு விளைத்திடலும்
செல் ஒன்றிய வாள் ஒடு தேரினன் ஆய்
‘நில்! ‘என்று இடை சென்று நெருக்கினனால்.
80

உரை
   
 
இடையே வந்து குமுதன் எறிந்த குன்றால் மாலியின் தேர் பொடியாதல்

8513.அற்று அத்தொழில் எய்தலும் அக் கணனே
மற்றப் புறம் நின்றவன் வந்து அணுகா
கொற்றக் குமுதன் ஒரு குன்று கொளா
எற்ற பொருதேர் பொடி எய்தியதால்.
81

உரை
   
 
மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்

8514.தாளார் மரம் நீலன் எறிந்தன தன்
வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால்
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.
82

உரை
   
 
கையற்ற மாலியுடன் பொருதல் தகாது என இலக்குவன் அப்பால் செல்லுதல்

8515.மின்போல் மிளிர் வாெளாடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை சலியா
‘என்போலியர் போரெனின் அன்று; இது ஓர்
புன்போர் ‘எனநின்று அயல் போயினனால்.
83

உரை
   
 
வானரவீரர் இராமனிடம் இலக்குவனைப்
புகழ்ந்து கூறுதல்

8516.நீர் வீரை அனான் எதிர்நேர் வரலும்
பேர் வீரனை வாசி பிடித்தவனை
‘யார் வீரதை இன்ன செய்தார்கள்? ‘எனா
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால்.
84

உரை
   
 
வேள்விப் பகைஞன் இலக்குவனொடு பொருது மடிதல் (8517-8518)

8517.வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர்க் கணையால்
‘வாழ்வு இத்தனை ‘என்று அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால்.
85

உரை
   
 
8518.மல்லல் தடமார்பன் வடிக் கணையால்
எல் உற்று உயர்வேள்வி இரும்பகைஞன்
வில் அற்றது தேரொடு; மேல் நிமிரும்
கல் அற்ற; கழுத்தொடு கால்கெளாடும்.
86

உரை
   
 
சூரியன் பகைவனைச் சுக்கிரீவன் கொல்லுதல்

8519.தன் தாதையை முன்பு தடுத்து ஒருநாள்
வென்றானை விலங்கலின் மேனியனை
பின்றாத வலத்து உயர் பெற்றியனை
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான்.
87

உரை
   
 
இடபனும் வச்சிரத்து எயிற்றனும் பொருதல் (8520-8521)

8520.இடபன் தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங்கண் எயிற்றவன் விண் அதிரக்
கடவும் கதழ் தேர் கடவு ஆளினொடும்
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால்.
88

உரை
   
 
8521.திண்தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய்
‘உண்டோ உயிர்? ‘என்ன உருத்து உருமோடு
எண் தோளனும் உட்கிட எற்றினனால்.
89

உரை
   
 
இடபன் அடியுண்டு அயர, அனுமன் வச்சிரத்தயெிற்றனோடு பொருதல் (8522-8523)

8522.‘அடி உண்டவன் ஆவி குலைந்து அயரா
இடி உண்ட மலைக் குவடு இற்றது போல்
முடியும் ‘எனும் எல்லையில் முந்தினனால்
‘நெடியன் குறியன் ‘எனும் நீர்மையினான்.
90

உரை
   
 
8523.கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான் அவன் மார்பு பொடிச் சிதற.
91

உரை
   
 
அனுமனால் வச்சிரத்தயெிற்றன் மடிதல்

8524.எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி கிளர் தண்டு பறித்து எறியா
வெற்றிக் கிளர் கைக்கொடு மெய் வலி போய்
முற்ற தனி குத்த முடிந்தனனால்.
92

உரை
   
 
பிசாசன் பனசனொடு பொருதல் (8525-8530)

8525.காத்து ஓர்மரம் வீசு உறு கைக் கதழ்வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல் திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால்.
93

உரை
   
 
8526.கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினானோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம்;
போர் மேலினன் வாசி எனும் பொறியான்.
94

உரை
   
 
8527.‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
ஆறு ஆயிரம் வானரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்து உளதால்
பாறாடு களத்து ஒரு பாய் பரியே.
95

உரை
   
 
8528.கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும்; உலாய்
மண்ணில் திரியாத வயப் பரியே.
96

உரை
   
 
8529.மாப் புண்டர வாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால்
பூப் புண்தர ஆவி புறத்து அகல
கோப்புண்டன வானர வெங் குழுவே.
97

உரை
   
 
8530.‘நூறும் இருநூறும் நொடிப்பு அளவின்
ஏறும் நுதிவேலின் இறைப் பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும் ‘எனா
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்.
98

உரை
   
 
இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல் (8531-8532)

8531.தோற்றும் உரு ஒன்று எனவே துணியா
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்.
99

உரை
   
 
8532.குலையப் பொருசூலன் நெடுங் கொலையும்
உலைவு உற்றில உய்த்தலும் ஓய்வு இலன்; ஒண்
தலை அற்று உகவும் தரை உற்றிலனால்;
இலையப் பரிமேல் கொள் இருக்கையினான்.
100

உரை
   
 
சீதைக்கு நன்னிமித்தம் தோன்றுதலும் இயமதூதரும் இராவணன் தூதரும் தம் நகர் சேர்தலும்

8533.‘இன்று ஊதியம் உண்டு’ என இன் நகை பால்
சென்று ஊதின தும்பிகள்; தனெ்திசையான்
வன் தூதரும் ஏகினர்; வஞ்சனையான்
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய்.
101

உரை
   
 
இராவணனிடத்துத் தூதர் நிகழ்ந்த செய்தியை
அறிவித்தல்

8534.ஏகி தனிமன்னன் இருந்துழி புக்கு
‘ஓகை பொருள் இன்று ‘என உள் அழியா
வேகம் அத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால்.
102

உரை