அயன் கணையால் பகையழிந்ததாகக் கருதி இராவணன் களியாட்டம் காணுதல்

8952.இன்னது இத் தலையது ஆக,
    இராவணன் எழுந்து பொங்கி,
தன்னையுங் கடந்து நீண்ட
    உவகையன், சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட,
    முகத்திடைக் கிடந்த கெண்டைக்
கன்னி நன் மயில் அன்னாரை
    நெடுங்களி ஆட்டம் கண்டான்.
1

உரை
   
 
அரம்பையர் முதலியோர் வருதல்

8953.அரம்பையர், விஞ்சை மாதர்,
    அரக்கியர், அவுணர் மாதர்
குரும்பை அம் கொங்கை நாகர்
    கோதையர், இயக்கர் கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார்,
    சித்தர்தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு சும்மையோர்கள்,
    மயில் குலம் மருள வந்தார்.
2

உரை
   
 
மேனகை முதலியோர் வருதல் (8954-8955)

8954.மேனகை, விசய வாள் கண்
    திலோத்தமை, அரம்பை, மெல் என்
தேன்நகு மழலை இன்சொல்
    உருப்பசி, முதலாம் தயெ்வ
வானக மகளிர் வந்தார்
    சில்லரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம்,
    முருடொடும் இரட்ட, ஆடி.
3

உரை
   
 
8955.தோடு உண்ட சுருளும், தூங்கும்,
    குழைகளும், சுருளில் தோன்றும்
ஏடு உண்ட பசும்பொன் பூவும்,
    திலகமும், இலவச் செவ்வாய்
மூடுண்ட முறுவல் முத்தும்,
    முள்ளுண்ட முளரிச் செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்னக்
    கலந்தது கறை வெண் திங்கள்
4

உரை
   
 
பெண்டிரின் ஒளியால் இருள் நிலைகெடல்

8956.முளைக் கொழுங் கதிரின் கற்றை
    முறுவல் வெண்நிலவும், மூரி
ஒளிப்பிழம்பு ஒழுகும் பூணின்
    உமிழ் இள வெயிலும், ஒண் பொன்
விளக்கையும் விளக்கும் மேனி
    மிளிர்கதிர்ப் பரப்பும், வீச,
வளைத்த பேர் இருளும் கண்டோர்
    அறிவு என, மருளும் மாதோ.
5

உரை
   
 
கள்ளின் வேகம் பரவுதல்

8957.நல்பெருங் கல்விச் செல்வம்
    நவை அறு நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர்
    மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப்
    பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக்
    கலந்தது, கள்ளின் வேகம்.
6

உரை
   
 
கள்ளுண்டோர் நிலை

8958.பலபட முறுவல் வந்து பரந்தன;
    பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்து; முல்லை
    எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலைபயில் நயன வேலின்
    கொழுங்கடை சிவந்த; கொற்றச்
சிலைநிகர் புருவம் நெற்றிக்
    குனித்தன; விளர்த்த செய்வாய்.
7

உரை
   
 
மகளிர்தம் மயக்கம் (8959-8962)

8959.கூந்தல் அம்பாரக் கற்றைக்
    கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை
    இகந்துபோய் இறங்க, யாணர்ப்
பூந்துகிலோடும் பூசல்
    மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின்
    மயங்கினர் மழலைச் சொல்லார்
8

உரை
   
 
8960.கோத்த மேகலையினோடும்
    துகில்மணிக் குறங்கைக் கூட
காத்தன, கூந்தற் கற்றை,
    அற்றம்; அத் தன்மை கண்டு
வேத்தவை, ‘கீழுேளார்கள்
    கீழ்மையே விளைத்தார்; மேலோர்
சீர்த்தவர் செய்யத் தக்க
    கருமமே செய்தார் ‘என்ன.
9

உரை
   
 
8961.பாணியின் தள்ளி; கால
    மாத்திரைப் படாது பட்ட
நாணியின் முறையிற் கூடாது,
    ஒருவழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல்
    நவின்றனர் அநங்க வேள்தன்
தூணியின் அடைத்த அம்பின்
    கொடுந்தொழில் துறந்த கண்ணார்.
10

உரை
   
 
8962.வங்கியம் வகுத்த கானம்
    வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும்பண் உற்ற
    திறம் துறை திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமிழ்தினோடும் புளி
    அளாம் தேறல் என்ன,
வெங் குரல் எடுத்த பாடல்
    விளித்தனர், மயக்கம் வீங்க.
11

உரை
   
 
நாடக மகளிரின் மயக்கம் (8963-8968)

8963.ஏனைய பிறவும் கண்டார்க்கு
    இந்திர சாலம் என்ன,
தான் அவை உருவில் தோன்றும்
    பாவனைத் தகைமை சான்ற
மான் அமர் நோக்கின் நல்லார்,
    மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி தேரை
    அபிநயத்து இயற்றி உற்றார்.
12

உரை
   
 
8964.அழுகுவர்; நகுவர்; பாடி
    ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவர்; துயில்வர்; துள்ளித்
    தூங்குவர்; துவர்வாய் இன் தேன்
ஒழுகுவர்; ஒல்கி, ஒல்கி,
    ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட்கண்
    முகிழ்த்து, இடை, மூரிபோவர்.
13

உரை
   
 
8965.உயிர்ப் புறத்து உற்ற தன்மை
    உணர்த்தினார் ‘உள்ளத்து உள்ளது
அயிர்ப்பு இலது அறிதிர்,
    என்றே, அது களி ஆட்டம் ஆக,
செயிர்ப்பு அறு சிந்தைத் தயெ்வத்
    திருமறை முனிவர்க் கேயும்
மயிர்ப்புறம் தோறும் வந்து
    பொடித்தது காமம் வாரி.
14

உரை
   
 
8966.மாப் பிறழ் நோக்கினார்தம்
    மணிநெடுங் குவளை வாட்கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச்
    செங் குழை வெண்மை சேர,
காப்புறு படைக்கைக் கள்ள
    நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி,
பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப்
    பொலிந்தது ஓர்தன்மை போன்ற.
15

உரை
   
 
8967.கயல், வரு காலன் கைவேல்,
    காமவேள் கணை, என்றாலும்,
இயல்வரு கிற்கிலாத
    நெடுங்கணார், இணைமென் கொங்கைத்
துயல்வரு கனக நாணும்,
    காஞ்சியும், துகிலும், வாங்கி,
புயல்வரு கூந்தல் பாரக்
    கற்றையின் புனையலுற்றார்.
16

உரை
   
 
8968.முத்து அன்மை மொழியல் ஆகா
    முகிழ் இளம் முறுவல் நல்லார்,
இத்தன்மை எய்த நோக்கி,
    அரசு வீற்றிருந்த எல்லை,
அத்தன்மெய் அரியின் சேனை
    ஆர்கலி ஆர்த்த ஒதை
மத்தன்மெய் மயங்க வந்து
    செவிதொறும் மடுத்தது அன்றே
17

உரை
   
 
வானர சேனையின் ஆரவாரத்தினால்
களியாட்டம் மங்குதல்

8969.ஆடலும், களியின் வந்த
    அமலையும், அமுதின் ஆன்ற
பாடலும், முழவின் தயெ்வப்
    பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும்,
    மழலை வெவ் உரையும், எல்லாம்
வாடல் மென்மலரே ஒத்த
    ஆர்ப்பு ஒலி வருதலோடும்.
18

உரை
   
 
இராம இலக்குவரின் வில்நாணொலி

8970.தறிபொரு களிநல் யானை
    சேவகம் தள்ளி ஏங்க,
துறுசுவல் புரவி தூங்கித்
    துணுக்குற, அரக்கர் உட்க,
செறிகழல் இருவர் தயெ்வச்
    சிலை ஒலி பிறந்தது அன்றே
எறிகல் கடைந்த மேல்நாள்,
    எழுந்தபேர் ஓசை என்ன.
19

உரை
   
 
இராவணன் முகம் மழுங்கல்

8971.முத்துவாள் நகையின் மூரல்
    முகத்தியர் முழுக்கண் வேலால்
குத்துவார் கூட்டம் எல்லாம்
    வானரக் குழுவின் தோன்ற,
மத்துவாழ் கடலின் உள்ளம்
    மறுகுற, வதனம் என்னும்
பத்துவாள் மதிக்கும் அந்நாள்
    பகல் ஒத்தது இரவு பண்பால்.
20

உரை
   
 
ஒற்றர்களால் நிகழ்ந்ததறிந்த இராவணன் ஆலோசனை மண்டபம் அடைதல்

8972.ஈது இடை ஆக வந்தார்,
    அலங்கல் மீது ஏறினார்போய்
ஊதினார், வேய்கள், வண்டின்
    உருவினார், உற்ற எல்லாம்,
‘தீது இலர், பகைஞர் ‘என்ன,
    திக்கென்ற மனத்தன், தயெ்வப்
போது உரு பந்தர் நின்று,
    மந்திரத் திருக்கை புக்கான்.
21

உரை