இராவணன், முதற்கண் இராம இலக்குவரைப் பொருதழிக்குமாறு படைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டு அவர்க்குத் துணையாக மூலபலச் சேனையை உடன் அனுப்புதல்

9437.‘வானரப் பெருஞ் சேனையை
    யான் ஒரு வழி சென்று,
ஊன் அறக்குறைத்து உயிர் உண்பன்;
    நீயிர் போய் ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக்
    கோறிர் ‘என்று அறைந்தான்
தானவப் பெருங் கிரிகளை
    வாள்கொண்டு தடிந்தான்
1

உரை
   
 
9438.என உரைத்தலும், எழுந்து,
    தம் ஊர்திமேல் ஏறி,
கனை கடல் பெருஞ் சேனையைக்
    கலந்தது காணா,
‘வினையம் மற்று இலை; மூல மாத்
    தானையை விரைவோடு
இனையர்முன் செல, ஏவுக ‘என்று
    இராவணன் இசைத்தான்.
2

உரை
   
 
இராவணனும் தன் தேர்மேலேறி இராமன் சேனையைக் தாக்க ஒருபுறம் செல்லுதல்

9439.ஏவி அப்பெருஞ் சேனையை,
    தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன்,
    சில்லி அம் தேர்மேல்,
காவல் மூவகை உலகமும்
    முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல்
    ஒருபுறம் போனான்.
3

உரை
   
 
போருக்கு எழுந்த மூலபலச் சேனையின் இயல்பு

9440.‘எழுக, சேனை “ என்று, யானைமேல்
    அணிமுரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும்
    விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால்,
    குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும்
    தடவும் மாத் தானை.
4

உரை
   
 
9441.அடங்கும் வேலைகள், அண்டத்தின்
    அகத்து அகல் மலையும்
அடங்கும், மன் உயிர் அனைத்தும் அவ்
    வரைப்பிடை அவைபோல்
அடங்குமே, மற்று அப் பெரும்படை
    அரக்கர்தம் யாக்கை,
அடங்கும் மாயவன் குறள் உருத்
    தன்மையின் அல்லால்?
5

உரை
   
 
போருக்கு எழுந்தமூலபலச் சேனை வீரர்களின் இயல்பு

9442.அறத்தைத் தின்று, அருங்கருணையைப்
    பருகி, வேறு அமைந்த
மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை
    மணம்புணர் மணாளர்,
நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர்,
    நெருப்புக்கு நெருப்பாப்
புறத்துப் பொங்கிய பங்கியர்,
    காலனும் புகழ்வார்.
6

உரை
   
 
9443.நீண்ட தாள்களால் வேலையைப்
    புறம்செல நீக்கி;
வேண்டும் மீனொடு மகரங்கள்
    வாய் இட்டு விழுங்கி,
தூண்டு வான் உரும் ஏற்றினைச்
    செவிதொறும் தூக்கி,
மூண்ட வான்மழை உரித்து உடுத்து,
    உலாவரும் மூர்க்கர்.
7

உரை
   
 
9444.மால் வரைக்குலம் பரல் என,
    மழைக் குலம் சிலம்பா,
சால் வரைப் பெரும்பாம்பு கொண்டு
    அசைத்த பைங் கழலார்;
மேல் வரைப் படர் கலுழன்
    வன்காற்று எனும் விசையோர்;
நால் வரைக் கொணர்ந்து உடன்
    பிணித்தால் அன்ன நடையார்.
8

உரை
   
 
9445.உண்ணும் தன்மைய ஊன்முறை
    தப்பிடின் உடனே
மண்ணின் நின்ற மால் யானையை
    வாயிடும் பசியார்;
தண்ணின் நீர்முறை தப்பிடின்,
    தடக்கையால் தடவி,
விண்ணின் மேகத்தை வாரி வாய்ப்
    பிழிந்திடும் விடாயர்.
9

உரை
   
 
9446.உறைந்த மந்தரம் முதலிய
    கிரிகளை உருவ
எறிந்து, வேல்நிலை காண்பவர்;
    இந்துவால் யாக்கை
சொறிந்து, தீர்வு உறு தினவினர்;
    மலைகளைச் சுற்றி
அறைந்து, கற்ற மாத்தண்டினர்;
    அசனியின் ஆர்ப்பார்.
10

உரை
   
 
9447.சூலம் வாங்கிடின், சுடர்மழு
    ஏந்திடின், சுடர் வாள்
கோலும் வெஞ்சிலை பிடித்திடின்,
    கொற்றவேல் கொள்ளின்,
சால வன்தண்டு தரித்திடின்,
    சக்கரம் தாங்கின்,
காலன், மால், சிவன், குமரன், என்று
    இவரையும் கடப்பார்.
11

உரை
   
 
9448.ஒருவரே வல்லர், ஓர்
    உலகத்தினை வெல்ல;
இருவர் வேண்டுவர், ஏழ்
    உலகத்தையும் இறுக்க;
திரிவரேல், உடன் திரிதரும்
    நெடுநிலம்; செவ்வே
வருவரேல், உடன்கடல்களும்
    தொடர்ந்து, பின் வருமால்.
12

உரை
   
 
நால்வகைச் சேனைகளின் மிகுதி

9449.மேகம் எத்தனை, அத்தனை
    மால்கரி; விரிந்த
நாகம் எத்தனை, அத்தனை தேர்;
    நனி நாளாப்
போகம் முற்றின எத்தனை,
    அத்தனை புரவி;
ஆகம் உற்றன எத்தனை,
    அத்தனை அனிகம்.
13

உரை
   
 
சேனைகளின் அணி நலம்

9450.இன்ன தன்மைய யானை, தேர்,
    இவுளி, என்று இவற்றின்
பன்னு பல்லணம், பருமம், மற்று
    உறுப்பொடு பலவும்,
பொன்னும் நல்நெடு மணியும் கொண்டு
    அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன,
    மெய்ம் முற்றும் தரெிந்தால்.
14

உரை
   
 
சேனைகள் எழுப்பிய தூளியும் யானையின் மதநீரும்

9451.இப் பெரும்படை எழுந்து
    இரைத்து ஏக, மேல் எழுந்த
துப்பு உதிர்த்து அன்ன தூளியின்
    படலம் மீத் தூர்ப்ப,
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது;
    கரிமதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர்
    வீங்கு அலை உவரி.
15

உரை
   
 
சேனைகள் புறப்பட்ட இலங்கை நகர
வாயில்களின் தோற்றம்

9452.மலையும், வேலையும், மற்று உள
    பொருள்களும், வானோர்
நிலையும், அப்புறத்து உலகங்கள்
    யாவையும், நிரம்ப
உலைவு உறா வகை உண்டு, பண்டு
    உமிழ்ந்த பேர் ஒருமைத்
தலைவன் வாய் ஒத்த இலங்கையின்
    வாயில்கள் தருவ.
16

உரை
   
 
மூல சேனைகளைக் கண்டு வானரம் இரிந்தோடுதல்

9453.கடம் பொறா மதக்களிறு, தேர்,
    பரி, மிடை காலாள்
படம் பொறாமையின் நனந்தலை
    அனந்தனும் பதைத்தான்;
விடம் பொறாது இரி அமரர்போல்
    குரங்கு இனம் மிதிக்கும்
இடம் பொறாமையின் இரிந்து போய்,
    வடதிசை இறுத்த.
17

உரை
   
 
கவிக் கூற்று

9454.ஆழி மால் வரை வேலி சுற்றிட
    வகுத்து அமைத்த
ஏழு வேலையும், இடு வலை;
    அரக்கரே, இன மா
வாழி காலனும் விதியும் வெவ்
    வினையுமே, மள்ளர்;
தோழம், மாமதில் இலங்கை; மால்
    வேட்டம் மேல் தொடர்ந்தான்.
18

உரை
   
 
சேனைகளின் பேராரவாரம்

9455.ஆர்த்த ஓசையோ? அலங்கு
    தேர் ஆழியின் அதிர்ப்போ?
கார்த் திண் மால் கரி முழக்கமோ?
    வாசியின் கலிப்போ?
போர்த்த பல் இயத்து அரவமோ?
    நெருக்கினாற் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திடப்
    பொடித்தது, மேன்மேல்.
19

உரை
   
 
சேனைக் கடலின் தோற்றம்

9456.வழங்கு பல்படை மீனது;
    மதகரி மகரம்
முழங்குகின்றது; முரி திரைப்
    பரியது; முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது;
    தறுகண் மா நிருதப்
புழுங்கு வெஞ்சினச் சுறவது
    நிறை படைப் புணரி.
20

உரை
   
 
அரக்கர் சேனை விசும்பினும் பரவுதல்

9457.தசும்பின் பொங்கிய திரள் புயத்து
    அரக்கர்தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின்,
    கரிபடு மதத்தின்
அசும்பின் சேறுபட்டு, அளறுபட்டு
    அமிழுமால், அடங்க;
விசும்பின் சேறலின் கிடந்தது, அவ்
    விலங்கல்மேல் இலங்கை.
21

உரை
   
 
அரக்கர் சேனையைப் பார்த்து அஞ்சிய வானவர்கள், சிவபெருமானை இறைஞ்சுதலும் இறைவன் அவர்களது அச்சத்தைப் போக்குதலும்

9458.படியைப் பார்த்தனர்; பரவையைப்
    பார்த்தனர்; படர்வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர்;
    நெடுந் திசை முழுதும்;
விடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை
    கண்டிலர்; மிடைந்த
பொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர்,
    வானவர் குலைந்தார்.
22

உரை
   
 
9459.‘உலகில் நாம் அலா உரு எலாம்
    இராக்கத உருவா,
அலகு இல் பல்படை பிடித்து அமர்க்கு
    எழுந்தவோ? அன்றேல்
விலகு இல் நீர் திரை வேலை ஓர்
    ஏழும் போய் விதியால்
புலைகொள் வல் உரு பொடித்தனவோ? ‘
    எனப் புகன்றார்.
23

உரை
   
 
9460.நடுங்கி, நஞ்சு அடை கண்டனை,
    வானவர் ‘நம்ப!
ஒடுங்கி யாம் கரந்து உறைவு இடம்
    அறிகிலம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர்; யார், இவர்
    பெருமைபண்டு அறிந்தார்?
முடிந்தது, எம் வலி ‘என்றனர்,
    ஓடுவான் முயல்வார்.
24

உரை
   
 
9461.‘ஒருவரைக் கொல்ல, ஆயிரம்
    இராமர் வந்து, ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று
    அமர்செய்தால், எனாம்?
நிருதரைக் கொல்வது, இடம்பெற்று ஓர்
    இடையில் நின்று அன்றோ?
பொருவது, இப்படை கண்டு, தம்
    உயிர் பொறுத்து அன்றோ? ‘
25

உரை
   
 
9462.என்று இறைஞ்சலும், இருள் மிடறு
    இறைவனும் ‘இனி, நீர்
ஒன்றும் அஞ்சலீர்; வஞ்சனை
    அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும், அக் கொற்றவன்;
    இக்குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்தது
    ஆம் ‘எனப் புகன்றான்.
26

உரை
   
 
மூலபலப் படையைக் கண்டு வானரங்கள்
அஞ்சி ஓடுதல்

9463.புற்றின் நின்று வல் அரவு இனம்
    புறப்பட, பொருமி,
‘இற்றது, எம்வலி ‘என விரைந்து
    இரிதரும் எலிபோல்,
மற்று அ(வ்) வானரப் பெரும் கடல்
    பயம் கொண்டு மறுகி,
கொற்ற வீரரைப் பார்த்திலது;
    இரிந்தது, குலைவால்.
27

உரை
   
 
9464.அணையின்மேல் சென்ற, சிலசில;
    ஆழியை நீந்தப்
புணைகள் தேடின, சில; சில
    நீந்தின போன;
துணைகேளாடு புக்கு, அழுந்தின
    சில; சில தோன்றாப்
பணைகள் ஏறின; மலைமுழை
    புக்கன, பலவால்.
28

உரை
   
 
ஓடிய வானரங்களின் அச்சச் சொல்

9465.‘அடைத்த பேர் அணை அளித்தது
    நமக்கு உயிர்; அடைய
உடைத்துப் போதுமால், அவர்
    தொடராமல் ‘என்று, உரைத்த;
‘புடைத்துச் செல்குவர் விசும்பினும் ‘
    என்றன; போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் ‘
    என்றன, பயத்தால்.
29

உரை
   
 
சுக்கிரீவன், அனுமன், அங்கதன் ஆகியவர்கள் மட்டும் தன்னைப் பிரியாதுடனிருக்க, ஏனைய வானர வீரர்கள் நிலைகெட்டோடினமையை இராமன் நோக்குதல்

9466.அரியின் வேந்தனும், அனுமனும்,
    அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை,
    நின்றனர் பின்றார்;
இரியல் உற்றனர் மற்றையோர்
    யாவரும், எறிநீர்
விரியும் வேலையைக் கடந்தனர்;
    நோக்கினன், வீரன்.
30

உரை
   
 
இப் பெரும்படை எங்கிருந்து வந்துளது? சொல்லுக ‘என இராமன் கேட்க, வீடணன் மூலமாத் தானையைப்பற்றி எடுத்துரைத்தல்

9467.‘இக் கொடும் படை எங்கு உளது?
    இயம்புதி ‘என்றான் :
மெய்க் கடுந் திறல் வீடணன்
    விளம்புவான் : ‘வீர!
திக்கு அனைத்தினும், ஏழு
    மாத்தீவினும், தீயோர்
புக்கு அழைத்திடப் புகுந்துளது,
    இராக்கதப் புணரி.
31

உரை
   
 
9468.‘ஏழ் எனப்படும் கீழ் உள
    தலத்தின் நின்று ஏறி
ஊழி முற்றிய கடல் எனப்
    புகுந்ததும் உளதால்;
வாழி மற்று அவன் மூல மாத்
    தானை முன் வருவ;
ஆழி வேறு இனி அப்புறத்து
    இல்லை, வாள் அரக்கர்.
32

உரை
   
 
9469.‘ஈண்டு இவ் அண்டத்துள் இராக்கதர்
    எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது, தீ வினை
    முன்னின்று முடுக;
மாண்டு வீழும் இன்று என்கின்றது
    என்மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது ‘என்று அடிமலர்
    தொழுது, அவன் சொன்னான்.
33

உரை
   
 
அஞ்சியோடிய வானர சேனையை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல்

9470.கேட்ட அண்ணலும், முறுவலும்
    சீற்றமும் கிளர,
‘காட்டுகின்றனன் என்; காணுதி
    ஒரு கணத்து ‘என்னா,
‘ஓட்டின் மேற்கொண்ட தானையைப்
    பயம் துடைத்து, உரவோய்!
மீட்டிகொல்? ‘என, அங்கதன்
    ஓடினன் விரைந்தான்.
34

உரை
   
 
அங்கதன் சென்று அழைக்கப் படைத்தலைவர் மட்டும் நின்று தாம் அஞ்சியோடியதற்குரிய காரணங் கூறுதல்

9471.சென்று தானையை உற்றனன்,
    ‘சிறை சிறை கெடுவீர்!
நின்று கேட்டபின் நீங்குமின் ‘
    எனச் சொல்லி நேர்வான்;
‘ஒன்றும் கேட்கிலம் ‘என்றது அக்
    குரக்கு இனம், உரையால்
வென்றி வெந்திறல் படைப்பெருந்
    தலைவர்கள் மீண்டார்.
35

உரை
   
 
9472.மீண்டு, வேலையின் வடகரை,
    ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை, ‘என் குறித்து
    இரிவு உற்றது? ‘என்றான்;
‘ஆண்ட நாயக! கண்டிலை,
    போலும், நீ அவரை?
மாண்டு செய்வது என்? ‘என்று உரை
    கூறினர், மறுப்பார்.
36

உரை
   
 
9473.‘ஒருவன் இந்திரசித்து என
    உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை, கொற்றவ!
    மறத்தியோ? தரெியின்,
பொரு இல் மற்றவர் இற்றிலர்,
    யாரொடும் பொருவார்;
இருவர் வில்பிடித்து, யாவரைத்
    தடுத்து நின்று எய்வார்?
37

உரை
   
 
9474.‘புரம் கடந்த அப் புனிதனே
    முதலிய புலவோர்
வரங்கள் தந்து உலகு அளிப்பவர்
    யாவரும், மாட்டார்,
கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ்
    அரக்கரைக் கடப்பார்
குரங்கு கொண்டு வந்து, அமர்செயும்
    மானுடர் கொல்லாம்? ‘
38

உரை
   
 
9475.‘ஊழி ஆயிரம் கோடி நின்று,
    உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு
    புரந்தரன் அவனும்,
சூழ ஓடினர்; ஒருவரைக்
    கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல்,
    வென்றியின் நன்றே!
39

உரை
   
 
9476.‘என் அப்பா! மற்று இவ் எழுபது
    வெள்ளமும், ஒருவன்
தின்னப் போதுமோ? தேவரின்
    வலியமோ, சிறியேம்?
முன் இப் பாரெலாம் படைத்தவன்,
    நாளெலாம் முறைநின்று,
உன்னிப் பார்த்து நின்று, உறையிடப்
    போதுமோ, யூகம்?
40

உரை
   
 
9477.‘நாயகன் தலை பத்து உள; கையும்
    நால் ஐந்து ‘என்று
ஓயும் உள்ளத்தேம்; ஒருவன், மற்று
    அவன்; வந்து, இங்கு உற்றார்
ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக்
    கையர்; ஐயா!
பாயும் வேலையின் கூலத்து
    மணலினும் பலரால்
41

உரை
   
 
9478.‘கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு
    ஒருவன், கைக் கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்;
    அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு
    உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை
    அறிந்திலை; நடந்தாய்.
42

உரை
   
 
9479.‘கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு
    ஒருவன், கைக் கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்;
    அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு
    உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை
    அறிந்திலை; நடந்தாய்.
43

உரை
   
 
9480.‘தாம் உளார் அன்றே, புகழினைத்
    திருவொடும் தரிப்பார்?
யாம் உேளாம் எனின், எம் கிளை
    உள்ளது; எம் பெரும!
“போமின் நீர் “ என்று விடை தரத்
    தக்கனை, புரப்போய்!
“சாமின் நீர் “ என்றல் தருமம் அன்று ‘
    என்றனர், தளர்ந்தார்.
44

உரை
   
 
அங்கதன் சாம்பனை நோக்கி, ‘ஓடுதல் தக்கதன்று ‘என்று காரணங்காட்டி உரைத்தல்

9481.சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய்,
    ‘அறிவு சான்றோய்!
“பாம்பு அணை அமலனே மற்று இராமன் “ என்று,
    எமக்குப் பண்டே
ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய்
    அல்லையோ, நீ?
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்திரம்
    அமைந்தோன் அன்னாய்!
45

உரை
   
 
9482.‘தேற்றுவாய், தரெிந்த சொல்லால் தரெுட்டி
    இத்தெளிவு இல்லோரை
ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை
    போலும்! ஆவி
போற்றுவாய் என்றபோது, புகழ் என் ஆம்?
    புலமை என் ஆம்?
கூற்றின் வாய் உற்றால், வீரம் குறைவரே!
    இறைமை கொண்டார்?
46

உரை
   
 
9483.‘அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம்புவி
    யாண்டும், ஆவி
துஞ்சும் ஆறு அன்றி வாழ ஒண்ணுமோ,
    நாள் மேல் தோன்றின்,
நஞ்சு வாய் இட்டால் அன்னது அமுது அன்றே?
    நம்மை அம்மா,
தஞ்சம் என்று அடைந்த வீரர் தனிமையின்
    சாதல் நன்றே!
47

உரை
   
 
9484.‘தானவரோடும், மற்றைச்
    சக்கரத் தலைவனோடும்,
வானவர் கடைய மாட்டா
    மறிகடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே
    உலந்தமை அயர்த்தது என் நீ
மீன், அலர் வேலை பட்டது
    உணர்ந்திலை போலும்? மேலோய்!
48

உரை
   
 
9485.‘எத்தனை அரக்கரேனும், தருமம்
    ஆண்டு இல்லை அன்றே?
அத்தனை அறத்தை வெல்லும்
    பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும்
    இவரொடும் பெயர்ந்த தன்மை
ஒத்திலது ‘என்னச் சொன்னான்;
    அவன் இவை உரைப்பது ஆனான்
49

உரை
   
 
சாம்பன் மறுமொழி பகர்தல்

9486.நாணத்தால் சிறிதுபோது
    நவில்கிலன் இருந்து, பின்னர்,
‘தூண் ஒத்த திரள்தோள் வீர!
    தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக்
    கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக்
    குரங்கின்மேல் குற்றம் உண்டோ?
50

உரை
   
 
9487.தேவரும் அவுணர்தாமும்
    செருப் பண்டு செய்த காலை,
ஏவரே என்னால் காணப்
    பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார்,
    இவர்துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரே? கூற்றும்
    இவருடன் பகைக்க வற்றோ?
51

உரை
   
 
9488.‘மாலியைக் கண்டேன்; மற்றை
    மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்;
    இரணியன்தனையும் கண்டேன்;
ஆலமா விடமும் கண்டேன்;
    மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்;
    இவர்க்கு உளமிடுக்கும் உண்டோ?
52

உரை
   
 
9489.‘வலி இதன்மேலே, பெற்ற
    வரத்தினர்; மாயம் வல்லார்;
ஒலி கடல் மணலின் மிக்க
    கணக்கினர்; உள்ளம் நோக்கின்,
கலியினும் கொடியர்; கற்ற
    படைக்கலக் கரத்தர்; என்றால்,
மெலிகுவது அன்றி உண்டோ,
    விண்ணவர் வெருவல் கண்டால்?
53

உரை
   
 
9490.‘ஆகினும், ஐய! வேண்டினார்க்கு
    என அமரில் அஞ்சி,
சாகிலம் பெயர்ந்த தன்மை,
    பழிதரும்; நரகில் தள்ளும்;
ஏகுதும், மீள; இன்னும்
    இயம்புவது உளதால்; எய்தி,
மேகமே அனையான் கண்முன்
    எங்ஙனம் விழித்து நிற்றும்?
54

உரை
   
 
சாம்பனை நோக்கி அங்கதன் தேறுதல்மொழி பகர்தல்

9491.என்று எடுத்து எண்கின் தானைக்கு
    இறையவன் இயம்பலோடும்,
வன்திறல் குலிசம் ஓச்சி
    வரைச் சிறகு அரிந்து, வெள்ளிக்
குன்று இடை நீலக் கொண்மூ
    அமர்ந்து என மதத்தின் குன்றின்
நின்றவன் அருளும் மைந்தன்
    மகன், இவை நிகழ்த்தல் உற்றான்
55

   
 
9492.‘எடுத்தலும், சாய்தல்தானும்,
    இறத்தலும், எதிர்த்தோர் தம்மைப்
படுத்தலும், வீர வாழ்க்கை
    பற்றினர்க்கு உற்ற, மேல்நாள்;
அடுத்ததே அஃது; நிற்க,
    அன்றியும் ஒன்று கூறக்
கடுத்தது; கேட்டீர் நீரும்.
    கருத்துளீர், கருதி நோக்கின்.
56

உரை
   
 
9493.‘ஒன்றும் நீ அஞ்சல், ஐய!
    யாம் எலாம் ஒருங்கு சென்று
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்;
    நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின்
    கொள்ளுதும் வென்றி, அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான்
    ‘போதலோ புகழ் அன்று ‘என்றான்.
57

உரை
   
 
வானரத் தலைவரெல்லாம் அங்கதனுடன் மீண்டும் வருதலும் எதிர்த்த அரக்கர் சேனையைக் குறித்து இராமன் தம்பிக்கு உரைத்தலும்

9494.‘ஈண்டிய தானை நீங்க,
    நிற்பது என்? யாமே சென்று
பூண்ட வெம் பழியினோடும்
    போந்தனம்; போதும் ‘என்னா,
மீண்டனர் தலைவர் எல்லாம்,
    அங்கதனோடும்; வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி,
    தம்பிக்கு மொழிவ தானான்.
58

உரை
   
 
9495.‘அத்த! நீ உணர்தி அன்றே
    அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும்,
    யான் சிலை எடுத்தபோது,
தொத்து உறு கனலின் வீழ்ந்த
    பஞ்சு எனத் தொலையும் தன்மை!
ஒத்தது : ஒர் இடையூறு உண்டு என்று
    உணர்வு இடை உதிப்பது உண்டால்.
59

உரை
   
 
வானர சேனை, அரக்கர் சேனையால் நிலைகுலையா வண்ணம் அனுமனோடும் சுக்கிரீவனோடும் சென்று காக்குமாறு இராமன் இலக்குவனுக்கு உரைத்தல்

9496.‘காக்குநர் இன்மை கண்ட
    கலக்கத்தால், கவியின் சேனை
போக்கு அறப் போகித் தம்தம்
    உறைவிடம் புகுதல் உண்டால்;
தாக்கி, இப் படையை முற்றுந்
    தலை துமிப்பு அளவும், தாங்கி,
நீக்குதி, நிருதர் ஆங்கு
    நெருங்குவார் நெருங்கா வண்ணம்.
60

உரை
   
 
9497.‘இப்புறத்து இனைய சேனை
    ஏவி, ஆண்டு இருந்த தீயோன்
அப்புறத்து அமைந்த சூழ்ச்சி
    அறிந்தவன், அயலே வந்து,
தப்பு அறக் கொன்று நீக்கில்,
    அவனை யார் தடுக்கத் தக்கார்,
வெப்பு உறுகின்றது உள்ளம்
    வீர! நீ அன்றி, வில்லோர்?
61

உரை
   
 
9498.‘மாருதியோடு நீயும்,
    வானரக் கோனும், வல்லே,
பேருதிர் சேனை காக்க;
    என்னுடைத் தனிமை பேணிச்
சோருதிர் என்னின், வெம்போர்
    தோற்றும், நாம் ‘என்னச் சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட
    இளையவன் விளம்பலுற்றான்.
62

உரை
   
 
இலக்குவன் அதற்கு இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு அருகே நின்று அடித்தொண்டு புரிய வேண்டுதல்

9499.‘அன்னதே கருமம்; ஐய!
    அன்றியும், அருகே நின்றால்,
என் உனக்கு உதவிசெய்வது
    இதுபடை என்றபோது
சென்னியில் சுமந்த கையர்
    தேவரே போல, யாமும்
பொன் உடை வரிவில் ஆற்றல்
    புறன்நின்று காண்டல் போக்கி?
63

உரை
   
 
9500.என்று அவன் ஏகல் உற்ற
    காலையின், அனுமன், ‘எந்தாய்!
“புன்தொழில் குரங்கு “ எனாது, என்
    தோளின்மேல் ஏறிப் புக்கால்,
நன்று எனக் கருதாநின்றேன்;
    அல்லது, நாயினேன் உன்
பின் தனிநின்ற போதும்,
    அடித்தொழில் பிரியேன் ‘என்றான்.
64

உரை
   
 
இலக்குவனுக்கு உற்ற துணை நீ என்று இராமன் கூற, அனுமன், இலக்குவன் பின்னே செல்லுதல்

9501.‘ஐய! நிற்கு இயலாது உண்டோ?
    இராவணன் அயலே வந்து உற்று,
எய்யும் வில்கரத்து வீரன்
    இலக்குவன்தன்னோடு ஏற்றால்,
மொய் அமர்க்களத்தின் உன்னைத்
    துணைபெறான் என்னின், முன்ப!
செய்யும் மா வெற்றி உண்டோ?
    சேனையும் சிதையும் அன்றே?
65

உரை
   
 
9502.‘ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி
    இந்திரசித்து என்பான் தன்
போரைக் கொண்டு இருந்த முன்நாள்
    இளையவன் தன்னைப் போக்கிற்று
ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே,
    வென்றது அங்கு அவனை? இன்னும்,
வீரர்க்கும் வீர! நின்னைப்
    பிரிகிலன், வெல்லும் என்பேன்.
66

உரை
   
 
9503.‘சேனையைக் காத்து, என் பின்னே
    திருநகர் தீர்ந்து போந்த
யானையைக் காத்து, மற்றை
    இறைவனைக் காத்து, எண் தீர்ந்த
வானை இத்தலத்தினோடும்
    மறையோடும் வளர்த்தி ‘என்றான்.
ஏனை மற்று உரைக்கலாதான்,
    இளவல்பின் எழுந்து சென்றான்.
67

உரை
   
 
இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் உடன் அனுப்புதல்

9504.‘வீடண! நீயும் மற்று உன்
    தம்பியோடு ஏகி, வெம்மை
கூடினர் செய்யும் மாயம்
    தரெிந்தனை கூறி, கொற்றம்
நீடுறு தானைதன்னைத்
    தாங்கினை, நில்லாய் என்னின்,
கேடு உளது ஆகும் என்றான்;
    அவன் அது கேட்பதானான்.
68

உரை
   
 
சுக்கிரீவன் முதலியோரும் இராமன் சொல்லியதை யேற்று இலக்குவனுடன் சென்று வானர சேனையைக் காத்தல்

9505.‘சூரியன் சேயும், ‘செல்வன்
    சொற்றதே ‘என்னும் சொல்லன்,
ஆரியன் பின்பு போனான்;
    அனைவரும், ‘அதுவே நல்ல
காரியம் ‘என்னக் கொண்டார்;
    கடல் படை காத்து நின்றார்;
வீரியன் பின்னர்ச் செய்த
    செயல் எலாம் விரிக்கலுற்றாம்
69

உரை
   
 
இராமன் வில் ஏந்திச் சேனையின் முன்னணியில் வந்து பொருதல்

9506.வில்லினைத் தொழுது வாங்கி,
    ஏற்றினான் வில்நாண்; மேருக்
கல் எனச் சிறந்ததேனும்,
    கருணை அம்கடலே அன்ன
எல் ஒளி மார்பில் தீராக்
    கவசம் இட்டு, இழையா வேதச்
சொல் எனத் தொலையா வாளித்
    தூணியும் புறத்துத் தூக்கி,
70

உரை
   
 
9507.ஓசனை நூற்றின் வட்டம்
    இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல் தன்னைப்
    போக்கு அற வளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும்
    மிடைதலும், விண்ணோர் யாக்கை
கூசின; பொடியால் எங்கும்
    குமிழ்த்தன, வியோம கூடம்.
71

உரை
   
 
தேவர்கள் தம் கருத்து முடிந்திட இராமனை
ஏத்திப் பரவுதல்

9508.‘கண்ணனே! எளியேம் இட்ட
    கவசமே! கடலே அன்ன
வண்ணனே! அறத்தின் வாழ்வே!
    மறையவர் வலியே! மாறாது
ஒண்ணுமே, நீ அலாது, ஓர்
    ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற;
எண்ணமே முடித்தி ‘என்னா,
    ஏத்தினர், இமையோர் எல்லாம்.
72

உரை
   
 
அரக்கர் கூட்டத்தினைக் கண்டு அஞ்சிய, முனிவர்கள் ‘இராமன் வெல்க ‘என வாழ்த்துக் கூறுதல்

9509.முனிவரே முதல்வர் ஆய
    அறத்துறை முற்றினோர்கள்,
தனிமையும், அரக்கர் தானைப்
    பெருமையும், தரிக்கலாதார்,
பனிவரு கண்ணர், விம்மிப்
    பதைக்கின்ற நெஞ்சர், ‘பாவத்து
அனைவரும் தோற்க! அண்ணல்
    வெல்க ‘என்று ஆசி சொன்னார்.
73

உரை
   
 
தேவர்கள் முதலியோர் இராமனை வாழ்த்துதல்

9510.மற்றும் வேறு அறத்துள் நின்ற
    வானம் நாடு அனைத்து உேளார்,
‘கொற்ற வில்லி வெல்க வஞ்ச
    மாயர் வீக! குவலயத்து
உற்ற தீமை தீர்க இன்றோடு ‘
    என்று கூறினார்; நிலம்
துற்ற வெம்படைக் கைநீசர்,
    இன்ன இன்ன சொல்லினார்.
74

   
 
தனிநின்று பொரும் இராமனது ஆற்றல் கண்டு,
அரக்கர் வியத்தல்

9511.‘இரிந்த சேனை சிந்தி, யாரும்
    இன்றி ஏக, நின்று, நம்
விரிந்த சேனை கண்டு, யாதும்
    அஞ்சல் இன்றி, வெஞ்சரம்
தரெிந்து, சேவகம் திறம்பல்
    இன்றி, நின்ற செய்கையான்,
புரிந்த தன்மை வென்றி மேலும்
    நன்று; மா லி பொய்க்குமோ?
75

உரை
   
 
9512.‘புரங்கள் எய்த புங்கவற்கும்
    உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை
    வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது
    விண்ணுேளார்கேளாடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன்
    நேரும், வந்து, காலினான்.
76

உரை
   
 
9513.‘தேரும், மாவும், யானையோடு
    சீயம், யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர்நின்ற
    வேலை, ஏழின் மேலவாம்;
“வாரும், வாரும் “ என்று அழைக்கும்
    மானுடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும், நம்முழைப்
    பிழைக்குமாறும் எங்ஙனே?
77

உரை
   
 
அரக்கர் வந்து தன்னைச் சூழ்ந்த நிலையில், இராமன் வில்நாணொலியை எழுப்புதல்

9514.என்று சென்று, இரைத்து எழுந்து, ஓர்
    சீய ஏறு அடர்ந்ததைக்
குன்று வந்து சூழ்வளைத்த போல்,
    தொடர்ந்து கூடலும்,
‘நன்று இது ‘என்று, ஞாலம் ஏழும்
    நாகம் ஏழும் மானும்தன்
வென்றி வில்லை வேதநாதன்
    நாண் எறிந்த வேலைவாய்.
78

உரை
   
 
அரக்கர் சேனையில் தீய நிமித்தங்கள் தோன்றுதல்

9515.கதம் புலர்ந்த, சிந்தைவந்த,
    காவல் யானை, மாலொடு
மதம் புலர்ந்த; நின்ற வீரர்
    வாய்புலர்ந்த; மா எலாம்
பதம், புலர்ந்த வேகம் ஆக,
    வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின், வென்ற
    வென்றி சொல்ல வேண்டுமோ?
79

உரை
   
 
9516.வெறித்து இரிந்த வாசியோடு,
    சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும்
    ஆழிகூடு தேர் எலாம்
முறித்து எறிந்து முந்த, யானை
    வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஒர்
    ஆகுலம் பிறந்ததால்.
80

உரை
   
 
துன்னிமித்தந் தோன்றிய அரக்கர் சேனைமீது
இராமன் அம்பு ஏவுதல்

9517.‘இந் நிமித்தம் இப்படைக்கு இடம்
    துடித்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம் ‘என்று கொண்டு
    வானுேளார்கள் துள்ளினார்;
அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர்
    கண் அரங்க, மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி
    வேதநாதன் வீசினான்.
81

உரை
   
 
9518.ஆளி மேலும், ஆளின் மேலும்,
    ஆனைமேலும், ஆடல்மா
மீளி மேலும், வீரர்மேலும்,
    வீரர் தேரின்மேலும், வெவ்
வாளி மேலும் : வில்லின் மேலும்
    மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற,
    வீரன் வாளி தூவினான்.
82

உரை
   
 
இராமன் எய்த அம்புகளால் அரக்கர் சேனை அழிதல்

9519.மலை விழுந்தவா விழுந்த,
    மான யானை; மள்ளர் செந்
தலை விழுந்தவா விழுந்த,
    தாய வாசி; தாளறும்
சிலை விழுந்தவா விழுந்த
    திண் பதாகை; திங்களின்
கலை விழுந்தவா விழுந்த,
    வெள் எயிற்ற காடு எலாம்.
83

உரை
   
 
9520.வாடை நாலுபாலும் வீச,
    மாக மேக மாலை வெங்
கோடை மாரி போல வாளி
    கூட, ஓடை யானையும்
ஆடல் மாவும் வீரர் தேரும்,
    ஆளும், மாள்வது ஆனவால்;
பாடு பேரும் ஆறு கண்டு,
    கண் செல் பண்பும் இல்லையால்.
84

உரை
   
 
9521.விழித்த கண்கள், கைகள், மெய்கள்,
    விற்கள், வேல்கள், உட்கிடத்
தழெித்த வாய்கள், செல்லல் உற்ற
    தாள்கள், தோள்கள், செல்லினைப்
பழித்த வாளி சிந்த நின்று
    பட்டது அன்றி, விட்டகோல்,
கழித்த ஆயுதங்கள், ஒன்று
    செய்தது இல்லை கண்டதே.
85

உரை
   
 
9522.தொடுத்த வாளியோடு வில்
    துணிந்து வீழும், முன்; துணிந்து
எடுத்த வாள்கேளாடு தோள்கள்
    இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்;
    எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து அ(வ்) வீரர் தாமும் ஒன்று
    செய்யுமா சலத்தினால்?
86

உரை
   
 
9523.குரம் துணிந்து, கண் சிதைந்து,
    பல்லணம் குலைந்து, பேர்
உரம் துணிந்து, வீழ்வது அன்றி,
    ஆவி ஓட ஒண்ணுமே
சரம் துணிந்த ஒன்றை நூறு
    சென்று சென்று தள்ளலால்,
வரம் துணிந்த வீரர் போரின்
    முந்த உந்து வாசியே!
87

உரை
   
 
9524.ஊர உன்னின், முன்பு பட்டு
    உயர்ந்த வெம் பிணங்களால்
பேர ஒல்வது அன்று; பேரின்
    ஆயிரம் பெருஞ் சரம்
தூர, ஒன்று நூறு கூறு
    பட்டு உகும்; துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி
    என்ன செய்கை செய்யுமே?
88

உரை
   
 
9525.எட்டு வன் திசைக்கண் நின்ற
    யாவும் வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள்
    என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங்கண் மான யானை,
    அம்பு உராய, முன்னமே
பட்டு உலந்த போல் விழுந்த;
    என்ன தன்மை பண்ணுமே?
89

உரை
   
 
9526.வாவி கொண்ட புண்டரீகம்
    அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின், உண்டை நூறு கோடி
    கொல்லும் என்ன, எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும், எண்
    மயங்கும்; அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார்
    கடுப்பும் அன்னது ஆகுமே.
90

உரை
   
 
9527.கொடிக் குலங்கள், தேரின் மேல
    யானை மேல, கோடைநாள்
இடிக் குலங்கள் வீழ வெந்த
    காடுபோல் எரிந்தவால்
முடிக் குலங்கள் கோடி கோடி
    சிந்த, வேகம் முற்று உறா
வடிக் குலங்கள் வாளி ஓட
    வாயினூடு தீயினால்!
91

உரை
   
 
9528.அற்ற வேலும் வாளும் ஆதி
    ஆயுதங்கள்மீது எழுந்து,
உற்ற வேகம் உந்த ஓடி,
    ஓத வேலை ஊடு உற,
துற்ற வெம்மை கைம் மிகச்
    சுறுக்கொளச் சுவைத்ததால்,
வற்றி நீர் வறந்து, மீன் மறிந்து,
    மண் செறிந்தவால்.
92

உரை
   
 
9529.போர் அரிந்தமன் துரந்த
    புங்க வாளி, பொங்கினார்
ஊர் எரிந்தநாள் துரந்தது
    என்ன மின்னி ஓடலால்,
நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு
    எரிந்த, நீள்நெடுந்
தேர் எரிந்த, வீரர்தம்
    சிரம் பொடிந்து சிந்தவே.
93

உரை
   
 
9530.பிடித்த வாள்கள், வேல்கேளாடு,
    தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானைமீது இருந்து
    போர்தொடங்கு சூரர்தம்
மடித்த வாய செந்தலைக் குலம்
    புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மாமலைக்
    குலங்கள் என்னவே.
94

உரை
   
 
9531.கோர ஆளி, சீயம், மீளி,
    கூளியோடு, ஞாளியும்,
போர வாளினோடு தேர்கள்
    நூறு கோடி பொன்றுமால்
நார ஆளி, ஞால ஆளி,
    ஞான ஆளி, நாந்தகப்
பார வாளி, வீர ஆளி,
    ஏக வாளி பாயவே.
94

உரை
   
 
9532.ஆழி பேற்ற தேர் அழுந்தும்;
    ஆள் அழுந்தும், ஆேளாடும்
சூழி பெற்ற மா அழுந்தும்;
    வாசியும் சுரிக்குமால்
பூழி பெற்ற வெங்களம்
    குளம்படப் பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி அன்ன
    சோரி நீரினுள் அரோ.
95

உரை
   
 
9533.அற்று மேல் எழுந்தவன்
    சிரங்கள் தம்மை அண்மி, மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும்
    விண்ணுேளார் ஒதுங்குவார்;
‘சுற்றும் வீழ் தலைக் குலங்கள்
    சொல்லு கல்லின் மாரிபோல்
எற்றும் ‘என்றும், பாரின் எங்கும்
    வாழுவார் இரங்குவார்.
96

உரை
   
 
9534.மழைத்த மேகம் வீழ்வது என்ன,
    வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வது என்ன,
    மண்ணின்மீது துன்னுமால்
அழித்து ஒடுங்கு கால மாரி
    அன்ன வாளி ஓளியால்,
விழித்து எழுந்து, வானின் ஊடு
    மொய்த்த பொய்யர் மெய் எலாம்.
97

உரை
   
 
அரக்கர்கள் கடும் போர் புரிதல்

9535.தயெ்வ நெடும் படைக் கலங்கள் விடுவர்சிலர்;
    சுடுகணைகள் சிலையில் கோலி,
எய்வர் சிலர்; எறிவர் சிலர்;
    எற்றுவர், மலைகள் பலவும் ஏந்திப்
பெய்வர் சிலர்; ‘பிடித்தும் ‘எனக் கடுத்து உறுவர்;
    படைக்கலங்கள் பெறாது, வாயால்,
வைவர் சிலர்; தழெிப்பர் சிலர்;
    திரிவர் சிலர் வயவர் மன்னோ.
98

உரை
   
 
9536.ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே
    படைக் கலங்கள் அள்ளி அள்ளித்
தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்;
    கரப்பர் பலர்; சுடுதீத் தோன்றப்
பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்;
    பகலோனைப் பற்றிச் சுற்றும்
கார்ப் பருவ மேகம் என, வேக நெடும்
    படை அரக்கர் கணிப்பு இலாதார்.
99

உரை
   
 
இராமன் அரக்கர் படைகளை வென்று மேம்படுதல்

9537.எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும்,
    பிடித்தனவும், படைகள் எல்லாம்
முறிந்தன, வெம் கணைகள் பட; முற்றின,
    சுற்றின தேரும், மூரிமாவும்;
நெறிந்தன குஞ்சிகேளாடும் நெடுந்தலைகள்
    உருண்டன; பேர் இருளின் நீங்கி,
பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன் மீது
    உயர்ந்த தடம் பெரிய தோளான்.
100

உரை
   
 
இராமபாணத்தின் செயல்

9538.சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடுகவசம்
    துகள்படுக்கும்; துணிக்கும் யாக்கை;
வில் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்;
    அடல் அறுக்கும்; மேல் மேல் வீசும்
கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்;
    செய்யமள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திருநாடன் நெடுஞ்சரம் என்றால்,
    எவர்க்கும் நிற்கலாமோ?
101

உரை
   
 
கவிக்கூற்று

9539.‘கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,
    கழுத்து இழந்தும், பருமக் கட்டின்
மேல் இழந்தும், மருப்பு இழந்தும் விழுந்தன,
    என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து,
    வலி இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்
    இல்லை நெடுஞ் சுரர்கள் எல்லாம்.
102

உரை
   
 
பலகோடிகளாய் வந்த நால்வகைச் சேனையையும் இராமன் ஒருவனாகவே பொருது வெல்லுதல்

9540.வேல் செல்வன சத கோடிகள்;
    விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன சதகோடிகள்;
    கொலை செய்வன மலைய,
தோல் செல்லன சதகோடிகள் :
    துரகம் தொடர் இரதக்
கால் செல்வன சதகோடிகள்;
    ஒருவன், அவை கடிவான்.
103

உரை
   
 
9541.ஒரு வில்லியை, ஒரு காலையின்,
    உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள், முடிவு இல்லவர்,
    சரமாமழை பெய்வார் :
பொரு வில்லவர் கணை மாரிகள்
    பொடியாம் வகை பொழிய,
திருவில்லிகள் தலைபோய்
    நெடுமலைபோல் உடல் சிதைவார்.
104

உரை
   
 
9542.‘நூறாயிர மதயானையின் வலியோர் ‘
    என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட,
    மலைபோல உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உள ஆகுவ
    அழி செம்புனல்; அவைபுக்கு
ஏறாது எறிகடல் பாய்வன,
    சின மால் கரி இனமால்.
105

உரை
   
 
9543.மழு அற்று உகும்; மலை அற்று உகும்;
    வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும;் இலை அற்று உகும்;
    அயில் அற்று உகும்; எறிவேல்
பழு அற்று உகும்; மத வெங் கரி;
    பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்; ஒரு வெங்கணை
    தொடை பெற்றது ஓர் குறியால்.
106

உரை
   
 
அரக்கர் பலரும் போரில் இறத்தல்

9544.ஒருகாலையின், உலகத்து உறும்
    உயிர் யாவையும் உண்ண
வருகாலனும், அவன் தூதரும்,
    நமன்தானும், அவ் வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும்
    திரிந்தார் இளைத்திருந்தார்;
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம்
    ஆறு ஏகலர் அயர்ந்தார்.
107

உரை
   
 
போர்க்களத்தில் கவந்தங்கள் எழுந்து ஆடுதல்

9545.அடுக்கு உற்றன, மதயானையும்,
    அழிதேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பு ஊடு உறச்
    சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தம் குலம்
    எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன, பிணக் குன்றுகள்,
    உயிர் நண்ணின என்ன.
108

உரை
   
 
பகைவரது உடற்குருதி தன் திருமேனியிற் படியப் பொருதுநின்ற இராமனது தோற்றம்

9546.பட்டார் உடல்படு செம்புனல்
    திருமேனியில் படலால்,
கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு
    புரைவான், கடையுகநாள்,
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அச்
    சுடரோன் எனப் பொலிந்தான்;
ஒட்டார் உடல் குருதி குளித்து
    எழுந்தானையும் ஒத்தான்.
109

உரை
   
 
இறவாது எஞ்சிய அரக்கர்கள் இராமனைச்
சூழ்ந்துகொள்ளுதல்

9547.தீ ஒத்தன உரும் ஒத்தன
    சரம் சிந்திட, சிரம் போய்
மாயம் தமர் மடிகின்றனர்
    எனவும், மறம் குறையார்,
காயத்திடை உயிர் உண்டிட,
    உடன்மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருதக்குலம்;
    நறவு ஒத்தனன் இறைவன்.
110

உரை
   
 
இராமன், தன்னைச் சூழ்ந்து மொய்த்தாரை அழித்தல்

9548.மொய்த்தாரை ஓர் இமைப்பின்தலை,
    முடுகத் தொடு சிலையால்
தைத்தான்; அவர், கழல் திண்
    பசுங்காய் ஒத்தனர், சரத்தால்;
கைத்தார் நெடுந்தேரும், கடுங்
    களிறும், களத்து அழுந்தக்
குத்தான், அழி குழம்பு ஆம் வகை,
    வழுவாச் சரக் குழுவால்.
111

உரை
   
 
9549.பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்;
    பிழைத்தார் பலர்; உழைத்தார்;
புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்;
    புரண்டார் பலர்; உருண்டார்;
எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்;
    எழுந்தார் பலர், விழுந்தார்,
சொரிந்தார் குடல், துமிந்தார் தலை,
    கிடந்தார்; எதிர் தொடர்ந்தார்.
112

உரை
   
 
9550.மணி குண்டலம், வலயம், குழை,
    மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல்
    திலகம் முதல கலம்,
துணிவு உண்டவர் உடல் சிந்தின,
    தொடர்கின்றன, சுடரும்;
திணி கொண்டலினிடை மின்குலம்
    மிளிர்கின்றன சிவண.
113

உரை
   
 
அரக்கர் அஞ்சி வியக்குமாறு இராமன் சாரிகை திரிதல்

9551.முன்னே உளன்; பின்னே உளன்;
    முகத்தே உளன்; அகத்தின்
தன்னே உளன்; மருங்கே உளன்;
    தலைமேல் உளன்; மலைமேல்
கொன்னே உளன்; நிலத்தே உளன்;
    சும்பே உளன்; கொடியோர்,
‘என்னே ஒரு கடுப்பு! ‘என்றிட,
    ஞ் சாரிகை திரிந்தான்.
114

உரை
   
 
9552.நேரினன்; என் நேரினன் ‘
    என்று யாவரும் எண்ண,
பொன் நேர்வரு வரிவில் கரத்து
    ஒரு கோளரி பொருவான்,
ஓன்னார் பெரும் படைப் போர் கடல்
    உள் நின்றனன் எனினும்
அல்நேரவர் உடனே திரி
    நிழலே எனல் ஆனான்.
115

உரை
   
 
9553.பள்ளம் படுகடல் ஏழினும்,
    படி ஏழினும், பகையின்
வெள்ளம் பல உள என்னினும்,
    வினையம் பல தரெியா,
கள்ளம் படர் பெருமாயையின்
    கரந்தார் உருப் பிறந்தார்
உள் அன்றியும் புறத்தேயும் உற்று
    உளனாம் என உற்றான்.
116

உரை
   
 
9554.நானாவிதப் பெருஞ் சாரிகை
    திரிகின்றது நவிலார்,
போனான், இடை புகுந்தான்,
    எனப் புலன் கொள்கிலர்,
‘தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து
    உலகு எங்கணும் தானே
ஆனான்; வினை துறந்தான் ‘என,
    இமையோர்களும் அயிர்த்தார்.
117

உரை
   
 
9555.சண்டக் கடு நெடுங் காற்று
    இடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு
    மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டம் பட, கடுஞ் சாரிகை
    திரிந்தான், சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் எனக்
    கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான்.
118

உரை
   
 
9556.களியானையும், நெடுந் தேர்களும்,
    கடும் பாய் பரிக்கணனும்,
தெளி யாளியும், முரண் சீயமும்,
    சின வீரர்தம் திறமும்,
வெளி வானகம் இலதாம் வகை
    விழுந்து ஓங்கிய பிணம் பேர்
நளிர் மாமலை பல தாவினன்,
    நடந்தான் கடல் கிடந்தான்.
119

உரை
   
 
அரக்கர் சேனைகள் அழிவுற்றுக் கிடக்கும் தோற்றம்

9557.அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்கெளாடும் களி யானையும்
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரங்கம் அருங்கலம் ஆழ்ந்து என.
120

உரை
   
 
9558.தம் மனத்தில் சலத்தர் மலைத்தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ
தமெ்முனைச் செரு மங்கை தன் செங்கையால்
அம் மனைக்குலம் ஆடுவ போன்றவே.
121

உரை
   
 
9559.கேட கங்கண வன்கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன;
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே.
122

உரை
   
 
9560.அங்கதம் களத்து அற்று அழிந்தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவு உற்றவால்
புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய
புங்க வன்கணைப் புற்று அரவம் பொர.
123

உரை
   
 
9561.கயிறு சேர் கழல் கார்நிறக் கண்டகர்
எயிறு வாளி படத் துணிந்து யானையின்
வயிறுதோறும் மறைவன வானிடைப்
புயல்தொறும் புகு வெண்பிறை போன்றவே.
124

உரை
   
 
9562.வென்றி வீரர் எயிறும் விடா மதக்
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன
என்றும் என்றும் எழுந்த இளம்பிறை
ஒன்றி மாநிலத்து உக்கவும் ஒத்தவால்.
125

உரை
   
 
குருதி கடல் போற் பரவியதனால் தீவுகளில் உறைவோர் மலைகளின் மேலேறுதல்

9563.ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்
தீவுதோறும் இனிது உறை செய்கையார்
ஈவு இலாத நெடுமலை ஏறினார்.
126

உரை
   
 
இராமனது விற்றொழில் வன்மையால் அரக்கர் விண்ணில் நிரம்ப அவர்தம் உடல்கள் மண்ணில் நிறைதல்

9564.விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன;
மண் நிறைந்தன பேர் உடல்; வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே.
127

உரை
   
 
குருதி வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட படைக்கலங்கள் கடலிற் புக்கமையால் மீன்கள் முதலியன அறுபட்டு இறத்தல்

9565.செறுத்த வீரர் பெரும்படை சிந்தின
பொறுத்த சோரி புகக் கடல் புக்கன
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும்
அறுத்து மீனம் உலந்த அனந்தமே.
128

உரை
   
 
அரக்கர் படைத்தலைவனாகிய வன்னி என்பவன் இராமனொருவனால் நேர்ந்த அழிவினை எண்ணி வெகுண்டு அரக்கரகளைப் போரில் ஊக்குதல்

9566.‘ஒல்வதே! இவ் ஒருவன் இவ் யூகத்தைக்
கொல்வதே நின்று! குன்று அன்ன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை
மெல்வதே! ‘என வன்னி விளம்பினான்.
129

உரை
   
 
9567.‘கோல் விழுந்து அழுந்தாமுனம் கூடி யாம்
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால்;
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்!
மால் விழுந்துளிர் போலும் மயங்கி நீர்!
130

உரை
   
 
9568.‘ஆயிரம் பெருவெள்ளம் அரைபடத்
தேய நிற்பது; பின்பு இனி என்செய?
பாயும் உற்று உடனே ‘எனப் பன்னினான்
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான்.
131

உரை
   
 
வெண்குண்டெழுந்த அரக்கர்கள் இராமனைச் சூழ்ந்து கொண்டு பல்வகைப் படைக்கலங்களைச் சொரிதல்

9569.உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்று முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்து என பல் படை.
132

உரை
   
 
இராமன் அவற்றைச் சிதைத்து அம்பு மழை பொழிதல்

9570.குறித்து எறிந்தன எய்தன கூறு உறத்
தறித்து தேரும் களிறும் தரைப்பட
மறித்து வாசி துணித்து அவர் மாப்படை
தறெித்துச் சிந்த சர மழை சிந்தினான்.
133

உரை
   
 
தலையறுபட்ட உடல்கள் குருதி பொங்க
ஆடுதலின் தோற்றம்

9571.வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்பு உறும்
தீ விளிப்பு உறு தீபம் நிகர்த்தவால்.
134

உரை
   
 
குருதியும் நிணமும் படிந்த நிலத்தின் தோற்றம்

9572.நெய்கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள்; மங்கலச்
செய்ய கோலம் புனைந்த அன்ன செய்கையாள்.
135

உரை
   
 
எங்கும் குருதி பரந்தமையால் ‘கடல்கள் ஏழு ‘என்னும் அம்மொழி தவறுபடுதல்

9573.உப்பு தேனு நெய் ஒண்தயிர் பால் கரும்பு
அப்பு தான் என்று உரைக்கும் அவ் ஆழிகள்
துப்புப் போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனுவினால்.
136

உரை
   
 
இராமனது வில் வளைந்தேயிருத்தலும் அரக்கர் சேனையின் அளவின்மையும்

9574.ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன; திங்கள் இளம்பிறை
அன்றுபோல் எனல் ஆகியது அச்சிலை;
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்?
137

உரை
   
 
கடும் போர்புரிந்த அரக்கர் இராமன்
அம்பினால் இறத்தல்

9575.எடுத்தவர், இரைத்தவர், எரிந்தவர்,
    செறிந்தவர், மறம் கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர்,
    பிரிந்தவர், தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர்,
    செறுத்தவர், கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர்,
    கிடந்தனர் துரந்த கணையால்.
138

உரை
   
 
9576.தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம்
    நிரைத்தவை துரந்த துறைபோய்ப்
படுப்பது, வயப் படைஞர் ஆயிரரை
    அன்று, பதினாயிரவரை;
கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன்
    மனம் கருதல் கல்வி இல; வேல்
எடுப்பது படப் பொருவது அன்றி,
    இவர் செய்வது ஒரு நன்றி உளதோ?
139

உரை
   
 
9577.தூசியொடு நெற்றி இரு கையினொடு
    பேரணி கடைக்குழை தொகுத்து
ஊசி நுழையா வகை சரத்து அணி
    வகுக்கும்; அவை உண்ணும் உயிரை;
ஆசைகளை உற்று உருவும்; அப்புறமும்
    ஓடும்; அதன் இப்புறமும் உளார்,
ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது,
    இகல் முற்றுவது ஒர் கொற்றம் எவனோ?
137

உரை
   
 
9578.ஊன் நகுவடிக் கணைகள் ஊழி அனல்
    ஒத்தன; உலர்ந்த உலவைக்
கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை
    ஒத்தன களித்த மதமா;
மானவன் வயப் பகழி வீசுவலை
    ஒத்தன; வலைக்குள் வழுவா
மீனகுலம் ஒத்தன, கடற்படை
    இனத்தொடும் விளிந்து அவிதலால்.
138

உரை
   
 
9579.ஊழி இறுதிக் கடுகும் மாருதமும்
    ஒத்தனன், இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள்
    ஒத்தனர், அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும்
    முருக்கி, இறுதிக் கணில் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும்
    ஒத்தனர், அலைக்கும் நிருதர்
139

உரை
   
 
9580.மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய்,
    எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன்; அவ்
    அரக்கர் கடை நாளில் விளியும்
கூலம் இல் சர அசரம் அனைத்தினையும்
    ஒத்தனர்; குரைகடல் எழும்
ஆலம் எனல் ஆயினன் இராமன்;
    அவர் மீனம் எனல் ஆயினர்களால்.
143

உரை
   
 
9581.வஞ்ச வினைசெய்து, நெடுமன்றில் வளன்
    உண்டு, கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர்
    அரக்கர்; அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடுநீரினையும் ஒத்தனன்;
    அடுத்து அதனை நக்குநரையும்,
பஞ்சம் உறுநாளில் வறியோர்களையும்
    ஒத்தனர், அரக்கர், படுவார்.
144

உரை
   
 
அரக்கர் இறந்துபடப் பெருகிய குருதி வெள்ளம் இலங்கை நகரத்தினுள்ளும் சென்று புக்கமை கண்டு அரக்கியர் அலறி ஓடுதல்

9582.வெள்ளம் ஒருநூறுபடும் வேலையில், அவ்
    வேலையும் இலங்கை நகரும்,
பள்ளமொடு மேடு தரெியாத வகை
    சோர் குருதி பம்பி எழலும்,
உள்ளும் மதிளும் புறமும் ஒன்றும்
    அறியாது அலறி ஓடினர்களால்,
கள்ள நெடு மான்விழி அரக்கியர்
    கலக்கமொடு கால்கள் குலைவார்.
145

உரை
   
 
நூறுசதகோடி யளவினராகிய படைத் தலைவர்கள் தமது சேனை பின்னிடாதவாறு தாங்கி நின்று இராமனொடு பொருதல்

9583.நீங்கினர், நெருங்கினர் முருங்கினர்,
    உலைந்து; உலகின் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும்பிணம் விசும்பு உற;
    அசும்புபடுசோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும்பரவை, ஒத்து உயர
    எத்திசையும் உற்று எதிர் உற;
தாங்கினர், படைத்தலைவர், நூறுசத
    கோடியர் தடுத்தல் அரியார்.
146

உரை
   
 
9584.தேரும், மத மாவும், வரை ஆளியொடு
    வாசி, மிகு சீயம், முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர்,
    கடாயினர்கள், உந்தினர்களால்;
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர்
    வெம்படையொடு அம்பு கடிதின்
தூரும் வகை தூவினர்; துரந்தனர்கள்,
    எய்தனர், தொடர்ந்தனர்களால்.
147

உரை
   
 
9585.‘வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது
    ஆர் உயிர் வரங்கள் பிறவும்,
தம்மின் ‘என இன்னன மொழிந்து, எதிர்
    பொழிந்தன, தடுப்ப அரியவாம்
வெம்மின் என, வெம்பகழி வேலை என
    ஏயினன்; வெய்ய வினையோர்
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர்
    தடுத்தனன், தனித் தனி அரோ.
148

உரை
   
 
அரக்கரது கடும் போர் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை யடைந்து வணங்கி நின்று, ‘இப் போரின் நிலை யாதாகும்? ‘என வினவுதல்

9586.அக்கணையை அக்கணம் அறுத்தனர்
    செறுத்து, இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையல் உற்றனர், மறைத்தனர்
    புயற்கு அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல
    நெருங்கினர்; செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி
    இமையோர் இவை மொழிந்தனர்களால்.
149

உரை
   
 
9587.‘படைத் தலைவர் உற்று ஒருவர் மும்மடி
    இராவணன் எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை;
    வளைத்தனர் கிளர்ந்து உலகு எலாம்
அடைத்தனர், தழெித்தனர், அழித்தனர்,
    தனித்து உளன் இராமன், அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர்;
    இனிச் செயல் பணித்தி சுடரோய்!
150

உரை
   
 
9588.‘எய்த கணை எய்துவதன் முன்பு, இடை
    அறுத்து, இவர்கள் ஏழு உலகமும்
பெய்த கணை மாமுகில் எனப்புடை
    வளைத்தனர், பிடித்தனர்கள் போய்;
வைது அகலின் அல்லது மறம் படை,
    கொடிப்படை, கடக்கும் வலிதான்
செய்ய திருமாலினொடு உனக்கும் அரிது ‘
    என்றனர், திகைத்து விழுவார்.
151

உரை
   
 
சிவபெருமான் தேவர்களது அச்சத்தைப் போக்கி, அரக்கரை அழித்து இராமனே வெற்றி பெறுவான் எனத் தெளிவித்தல்

9589.‘அஞ்சி அயரன்மின்! அவர் எத்தனையர்
    ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றது என, வெந்து அழிவர் :
    இந்த உரை பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனிவென்றிடினும்,
    நல் அறம் நடக்கும் அதனை
வஞ்ச வினை பொய்க் கருமம் வெல்லினும்,
    இராமனை அவ் வஞ்சகர் கடவார்.
152

உரை
   
 
9590.‘அரக்கர் உளர் ஆர்சிலர், அவ் வீடணன்
    அலாது, உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகியது; நல் அறம்
    எழுந்து வளர்கின்றது; இனிநீர்
கரக்க, முழைதேடி உழல்கின்றிலிர்கள்;
    இன்று ஒரு கடும்பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய
    கோள் உழுவை கொல்லும், இவரை.
153

உரை
   
 
அம்மொழி கேட்டு அயல் நின்ற பிரமனும் அதுவே நிகழும் என உடன் பட்டுரைக்க அப்பொழுது இராமன் அம்புமழையினால் அரக்கர் தலைகளை மலை போற் குவித்தல்

9591.என்று பரமன் பகர, நான்முகனும்
    அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள் வானவர்கள்;
    மானவனும் நேமி எனலாம்
வென்று நெடு வாளி மழை, மாரியினும்
    மேலன துரந்து, விரைவில்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை
    மாமலை குவித்தனன் அரோ.
154

உரை
   
 
அரக்கர் உயிர் துறக்கம் புக அவர்களுடைய உடல்கள் பூமியிற் சிதைவுற்றுக் கிடக்க, எங்கும் வழியில்லை யாதல்

9592.மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ
நகரம் இடம் அருக நவையர் நலிவுபட.
155

உரை
   
 
9593.உகளும் இவுளி தலை துமிய உறுகழல்கள்
தகளியுற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ.
156

உரை
   
 
9594.மலையும் மறி கடலும் வனமும் வறு நிலமும்
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்கெளாடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ்குருதி
அலையும்; மரியது ஒருதிசையும் இலது அணுக.
157

உரை
   
 
அரக்கர் தலைவர்கள் பலரும் இறந்துபட, அமரர் சொரிந்த மலர்கள் மழைபோல எங்கும் பரவிக் கிடத்தல்

9595.இனைய செருநிகழும் அளவின் எதிர்பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய.
அனைய படை நெளிய வயவர் அழி குருதி
நனைய விசையின் எழுதுவலை மழை நலிய.
158

உரை
   
 
அரக்கர் படைத்தலைவர்கள் பின்னிடும் சேனையைத் தடுத்து இராமன்மீது செலுத்திக் கடும் போர் விளைத்தல்

9596.இரியல் உறுபடையை நிருதர் இடை விலகி
எரிகள் சொரியும் நெடு விழியர் ‘இழுதையர்கள்!
திரிக திரிக! ‘என உரறு தழெுகுரலர்
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ.
159

உரை
   
 
9597.உலகு செவிடுபட மழைகள் உதிர உயர்
அலகு இல் மலை குலைய அமரர் தலை அதிர
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய
விலகியது திமிரம் வளையும்வகை வளைய.
160

உரை
   
 
தன்னை எதிர்த்துப் பொரும் அரக்கர் சேனையை இராமன் உவகையுடன் ஏற்றுக் கடும் போர் புரிதல்

9598.‘அழகிது அழகிது ‘என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசுபட
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய.
161

உரை
   
 
9599.தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு
கனக வரை பொருவ; கதிர்கொள் மணி இரதம்.
162

உரை
   
 
9600.பாறு படு சிறகு கழுகு பகழி பட
நீறுபடும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறுபட உலகின் மலைகள் அளறு பட.
163

உரை
   
 
9601.அருகு கடல் திரிய அலகு இல் மலை குலைய
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இருகை ஒரு களிறு திரிய விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய.
164

உரை
   
 
9602.சிவனும் அயனும் எழு திகிரி அமரர் பதி
அவனும் அமரர்குலம் எவரும் முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்
நமனும் வரிசிலையும் அறனும் நடன் நவில.
165

உரை
   
 
9603.‘தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி? முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் ‘அற முதல்வ!
பூவை நிறவ! ‘என வேதம் முறை புகழ.
166

உரை
   
 
9604.எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரி ஆெளாடு இரதம் விழ
ஒய்யென் ஒருகதியின் ஓட உணர் அமரர்
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ.
167

உரை
   
 
9605.அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல்
பண்ணு புரவி படை வீரர் தொகு பகுதி
புண்ணின் இடுகுறிகள் புள்ளி என விரவி
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ.
168

உரை
   
 
அரக்கர் தப்பிச் செல்லாதவாறு இராமன் சரமதில் அமைத்தல்

9606.‘சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனிக்
கரக்க மற்று ஒரு புறத்து ‘என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செலவு அரியதாம் வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்து இட்டான் அரோ.
169

உரை
   
 
அரக்கர் சரமதிலைக் கடக்க மாட்டாமை

9607.மாலியை மாலியவானை மால் வரை
போல் உயிர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணிப்பு இல் வெஞ்சர
வேலியைக் கடந்திலர் உலகை வென்று உளார்.
170

உரை
   
 
அரக்கரிற் பெரும்பாலார் இறந்துபட அவர்தம் சேனை அளவிற் சுருங்குதல்

9608.மாண்டவர் மாண்டு அற மற்று உேளார் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு உற முருங்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கித் தொக்கபோல்.
171

உரை
   
 
இராமனது அம்பின் கொடுமை கண்டு திகைப்புற்ற அரக்கர்கள் தம்மவர்களை நோக்கிக் கூறுதல்

9609.‘புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர்; ஒருவன் நாமுடை
வரம் சுடும்; வலி சுடும்; வாழும் நாள் சுடும்.
172

உரை
   
 
9610.‘ஆயிர வெள்ளம் உண்டு; ஒருவர் ஆழி சூழ்
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்;
மேயின பெரும்படை இதனை ஓர் விலால்
“ஏ ” எனும் மாத்திரத்து எய்து கொன்றனன்.
173

உரை
   
 
9611.‘இடை படும்; படாதன இமைப்பிலோர் படை
புடைபட வலம்கொடு விலங்கிப் போகுமால்;
படை படும் கோடி; ஓர் பகழியால்; பழிக்
கடை படும் அரக்கர்தம் பிறவி கட்டமால்.
174

உரை
   
 
9612.‘பண்டு உலகு அளித்தவனோடும் பண் அமை
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பின் நின்று ஆர்க்கினார் உழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால்.
175

உரை
   
 
இவ்விராமன் திருமாலே என்று துணிந்து ஆற்றல் குன்றிய அரக்கர்களை நோக்கி வன்னி என்பவன் ‘நாம் பகைவனொடு பொருது உயிர் துறத்தலே இனிச் செய்யத் தகுவது ‘என அறிவுறுத்தல்

9613.‘கொன்றனன் இனி ஒரு கோடி கோடி மேற்று;
அன்று எனின் பதுமம்; அன்றாயின் வெள்ளமா
நின்றது; நின்று இனி நினைவது என் பிற?
ஒன்று என நினைக ‘என வன்னி ஓதினான்.
176

உரை
   
 
9614.‘விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம்
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்?
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறிசென்று அண்ம யாம்
கழித்தும் இவ் ஆக்கையை புகழைக் கண்ணுற.
177

உரை
   
 
9615.‘இடுக்கினில் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
அடுத்த கூர் வாளியின் அரணம் நீங்கலோம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர் ‘என ஒருமை கூறினான்.
178

உரை
   
 
அரக்கர் அனைவரும் இராமனைச் சூழ்ந்து பொருது அடர்த்தல்

9616.இளக்க அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்து என பதங்கம் ஆரழல்
விளக்கினில் வீழ்ந்தனெ விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார்.
179

உரை
   
 
அரக்கர் பல்வகைப் படைகளை இராமன்மேற் சொரிதல்

9617.மழு எழு தண்டு கோல் வலையம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கைப்படை
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார்.
180

உரை
   
 
இராமன் காந்தருப்பம் என்னும் தயெ்வப் படையை அரக்கர்மேற் செலுத்தல்

9618.காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான்
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர்க்கணை.
181

உரை
   
 
காந்தருப்பம் என்னும் அப் படையின் தோற்றமும் திறலும்

9619.மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடின
வான்தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த.
182

உரை
   
 
பத்துக் கோடி யளவினராகிய அரக்க வேந்தர்கள் பொருந்திய இராவணனது மூலச் சேனை முழுதும் அழிதல்

9620.ஐ இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
‘எய் ‘எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே.
183

உரை
   
 
அந் நிலையில் பெரிய தீவுகளிலிருந்தும் பல திசைகளிலிருந்தும் பாதாள உலகத்தினிலிருந்தும் இராவணனது ஆணையாற் காவல் புரியும் படை வீரர்கள் ஒருங்கு குழுமி இராமனொடு பொருதற்கு நண்ணுதல்

9621.மாப் பெருந் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு அரும் பாதலம் அத்து உள்ளும் பல் வகைக்
காப்பு அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர்.
184

உரை
   
 
9622.மாத்தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பு இடை அணியும் கொள்கையார்
பூத் தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நாத் தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார்.
185

உரை
   
 
வந்த அரக்கர்கள் இராமனொடு ஒருவர் ஒருவராகப் பொருவதா அன்றி ஒன்று சேர்ந்து பொருவதா எனத் தமக்குள் வினாவுதல்

9623.‘நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம்முனை இராவணன் தனையும் வெல்லுமால்;
இம்மென உடன் எடுத்து எழுந்து சேருமோ?
செம்மையின் தனித்தனிச் செய்துமோ செரு?
186

உரை
   
 
எல்லோரும் ஒருங்கு சேர்ந்து பொருதலே நன்று என்ற வன்னியின் சொல்லுக்கு எல்லோரும் இசைதல்

9624.‘எல்லோம் எல்லோம் ஒன்றி
    வளைந்து இந் நெடியோனை
வல்லே வல்ல போர்வலி
    கொண்டு மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் ‘
    என்றனன், வன்னி; மிடலோரும்,
‘தொல்லோன் சொல்லே நன்று ‘
    என, அஃதே துணிவுற்றார்.
187

உரை
   
 
அரக்கர்களின் போர் ஆரவாரம்

9625.அன்னார் தாமும், ஆர்கலி
    ஏழும் என ஆர்த்தார்;
‘மின் ஆர் வானம் இற்று
    உறும் ‘என்றே, விளிசங்கம்
கொன்னே ஊதி, தோள் புடை
    கொட்டிக் கொடு சார்ந்தார்,
என் ஆம், வையம்? என்படும்;
    வானம்? திசை ஏதாம்?
188

உரை
   
 
இராமன் தன் வில்நாணைத் தறெித்து ஒலியெழுப்புதல்

9626.ஆர்த்தார் அன்னார்; அன்ன
    களத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும், தன் வெஞ்சிலை
    நாணைத் தறெிப்புற்றான்;
பேர்த்தான் பொன் தோள் முற்றும்
    அளந்தான் பிறழ்சங்கம்
ஆர்த்தால் ஒத்தது அவ் ஒலி
    எல்லா உலகுக்கும்.
189

உரை
   
 
அரக்கர் பல்லாயிர கோடியராய் இராமனை
வளைத்துப் பொருதல்

9627.பல் ஆயிர கோடியர்; பல் படை நூல்
வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்;
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர் அரக்கரின் மேதகையோர்.
190

உரை
   
 
9628.வென்றார் உலகங்களை விண்ணவரோடு;
ஒன்றா உயர்தானவர் யூகம் எலாம்
கொன்றார் நிமிர் கூற்று என எவ் உயிரும்
தின்றார்; எதிர் சென்று செறிந்தனரால்.
191

உரை
   
 
9629.வளைத்தார் மதயானையை வன்தொழுவில்
தளைத்தார் என வந்து தனித்தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அலபோர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால்.
192

உரை
   
 
9630.விண்தீய வழங்கிய வெம் படையில்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்
கண்தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும்.
193

உரை
   
 
அரக்கர் சேனைகளில் தோன்றிய பலவகை ஒலிகள்

9631.தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தழெிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போரால் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும்.
194

உரை
   
 
இராவணனை யொத்த ஆற்றலுடைய பல்லயிரகோடி வீரர்களை இராமன் ஒருவனாகவே வெகுண்டு சென்று எதிர்த்தல்

9632.‘எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
‘தொல்லார் படை வந்து தொடர்ந்தது ‘எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால்.
195

உரை
   
 
இராமன் அம்புமழை பொழிதல்

9633.ஊழிக் கனல் போல்பவர் உந்தினபோர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல
பாழிக் கடை நாள் விடு பல் மழைபோல்
வாழிச் சுடர் வாளி வழங்கினனால்.
196

உரை
   
 
இராமன் ஏவிய அம்புகளாற் சிதைந்தழிந்த அரக்கர் சேனையின் தோற்றம்

9634.சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்
தேரோடு மடிந்தனர் செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர்.
197

உரை
   
 
9635.கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மாமுகில் சிந்தினபோல்
வில்லோடும் விழுந்த; மிடல் கரமே.
198

உரை
   
 
9636.செம்போடு உதிரத் திரை ஆழியின் வாய்
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து
அம்போடும் விழுந்த அடல் கரமே.
199

உரை
   
 
9637.முன் ஓடு உதிரப் புனல் மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங்கடல் வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடுங் கரி புக்கனவால்.
200

உரை
   
 
9638.மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்
நறவக் குருதிக் கடல் வீழ் நகைவாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன வாவும் இனப் பரியே.
201

உரை
   
 
9639.தாமச் சுடர் வாளி தடிந்து அகலப்
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படர் கேடகம் மால்கடல் சேர்
ஆமைக் குலம் ஒத்தன அத்தனையால்.
202

உரை
   
 
9640.காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால்
வாம் போர் நெடு வாடை மலைந்த கலம்
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல்.
203

உரை
   
 
9641.மண்டப் படு சோரியின் வாரியின்வீழ்
கண்டத்த சரத் தொகை கவ்வியதாள்
முண்டக் கிளர்தண்டின முள்தொகுவன்
துண்டச் சுறவு ஒத்த துடித்தனவால்.
204

உரை
   
 
9642.தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள்தேர்
விளிவு உற்று உக வேறு உற வீழ்வனதாம்
அளிமுற்றிய சோரியின் ஆழியின் ஆழ்
ஒளிமுற்றிய திங்களை ஒத்துளவால்.
205

உரை
   
 
9643.நிலைகோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலைகோடல் நமன் குறி கோளுறுமே?
சிலைகோடிய தோறும் சிரத்திரள் வன்
மலை கோடியின்மேலும் மறிந்திடுமால்.
206

உரை
   
 
9644.திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின்
கண் வாளி கடைச் சிறை கானம் நுழைந்து
எண் வாய் அற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு இனம் ஒத்தனவால்.
207

உரை
   
 
அரக்கர் சேனைகளைக் கொன்று குவித்து இராமர் பலர் என அரக்கர் திகைப்புற இராமன் சாரிதிரிதல்

9645.பாறு ஆடு களத்து ஒருவன் பகலின்
கூறு ஆகிய நாலில் ஒர் கூறு இடையே
நூறாயிர யோசனை நூழில்களால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால்.
208

உரை
   
 
9646.நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று சிதைத்திடலால்
‘தன் தாதையை ஓர்வுறு தன்மகன்நேர்
கொன்றான் அவனே இவன் ‘என்று கொள்வார்.
209

உரை
   
 
9647.‘இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன் ‘என்று
அங்கே உணர்கின்ற அலந்தலையால்
வெங்கோப நெடும்படை வெஞ்சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர்; ஏகுவரால்.
210

உரை
   
 
9648.‘ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலீர்!
இரவு அன்று இதுவோ பகல் ‘என்பர்களால்;
‘கரவு அன்று இது இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர் ‘என்பர்களால்.
211

உரை
   
 
இராமன் விரைந்து சாரிகை திரியும் நிலையில் அவன்மீது அரக்கர் வீசிய படைக்கலம் தம்மினத்தவர்மீது பட அரக்கர் தம்மைத் தாமே அடித்துக்கொண்டு மாய்தல்

9649.ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன் :
ஒருவன் படை வெள்ளம் ஒர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ?
212

உரை
   
 
அரக்கர் பலர் முன்னும் விரைந்து தோன்றிப் பொரும் நிலையில் இராமர் பலராகத் தோன்றுதல்

9650.தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மாகடல்மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால்
போர்மேலர் இராமர் புகுந்து அடர்வார்.
213

உரை
   
 
9651.என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும் அருகும் எதிரும் பிரியான்
மன்னன்மகன்! வீரர் மயங்கினரால்.
215

உரை
   
 
9652.படு மத கரி, பரி, சிந்தின;
    பனி வரை இரதம் அவிந்தன;
விடுதிசை செவிடு பிளந்தன;
    விரிகடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர்
    அலர்விழி அருவிகள் சிந்தின
கடு மணி நெடியவன் வெஞ்சிலை,
    ‘கண கண, கண கண ‘எனும் தொறும்.
216

உரை
   
 
9653.ஊன் ஏறு படைக்கை வீரர்
    எதிர் எதிர் ஊரும் தோறும்
கூன் ஏறு சிலையும் தானும்
    குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்,
வான் ஏறினார்கள் தேரும்,
    மலைகின்ற வயவர் தேரும்,
தான் ஏறிவந்த தேரே
    ஆக்கினான் தனி ஏறு அன்னான்.
217

உரை
   
 
9654.காய் இருஞ் சிலை ஒன்றேனும்,
    கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூயெழும் பகழி மாரி
    மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த
    செய்தன, அமலன் செங்கை;
ஆயிரம் கையும் கூடி,
    இரண்டு கை ஆய அன்றே.
218

உரை
   
 
9655.பொய், ஒருமுகத்தன் ஆகி
    மனிதன் ஆம்புணர்ப்பு இது என்றல்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம்
    ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம்
    ஒருமுகம் தரெிவது உண்டே?
ஐ இரு நூறும் அல்ல;
    அனந்தம் ஆம் முகங்கள் அம்மா!
219

உரை
   
 
9656.கண்ணுதல் பரமன்தானும்,
    நான்முகக் கடவுள்தானும்
‘எண்ணுதும் தொடர எய்த
    கோல் ‘என எண்ணலுற்றார்,
பண்ணையாய்ப் பகுக்க மாட்டார்,
    தனித்தனிப் பார்க்கலாற்றார்,
‘ஒண்ணுமோ, கணிக்க? ‘என்றார்,
    உவகையின் உயர்ந்த தோளார்.
220

உரை
   
 
9657.‘வெள்ளம் ஈர் ஐந்து நூறே;
    விடுகணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் ‘என்று ஓர்
    உரைகணக்கு உரைத்துமேனும்,
‘கொள்ளை ஓர் உருவை நூறு
    கொண்டன பலவால்; கொற்ற
வள்ளலே வழங்கினானோ ‘
    என்றனர், மற்றை வானோர்
221

உரை
   
 
9658.‘குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம்,
    கொண்டன குவிந்த கொற்றப்
படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம்,
    யானை, தேர், பரிமா, ஆதி
கடைக்கு எலாம், துரந்த வாளி
    கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே? ‘
    என்றனர் முனிவர் அப்பால்.
222

உரை
   
 
9659.கண்டத்தும், கீழும், மேலும்,
    கபாலத்தும், கடக்கல் உற்ற
சண்டப் போர் அரக்கர் தம்மைத்
    தொடர்ந்து கோல் புணருந் தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர்
    உருக்களைப் பிரமன் தந்த
அண்டத்தை நிறையப் பெய்து
    குலுக்கியது அனையது அம்மா!
223

உரை
   
 
9660.கோடி ஐ இரண்டு தொக்க
    படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக,
    உயிர் இழந்து, உலத்தலோடும்,
‘வீடிநின்று அழிவது என்னே!
    விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை ‘என்னா,
    யாவரும் மூண்டு மொய்த்தார்.
224

உரை
   
 
9661.விண்டுவின் படையே ஆதி
    வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்;
    குலுங்கியது அமரர் கூட்டம்;
அண்டமும் கீழ்மேலாக ஆகியது;
    அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி,
    அவற்றினை அவற்றால் காத்தான்.
225

உரை
   
 
9662.‘தான் அவை தொடுத்தபோது,
    தடுப்ப அரிது; உலகம் தானே
பூநனி வடவைத் தீயின்
    புக்கு எனப் பொரிந்துபோம் ‘என்று,
ஆனது தரெிந்த வள்ளல்
    அளப்ப அருங் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம்
    இடி உண்ட மலையின் இட்டான்.
226

உரை
   
 
9663.ஆயிர வெள்ளத் தோரும்
    அடுகளத்து அவிந்து வீழ்ந்தார்;
மா இரு ஞாலத்தாள் தன்
    வன்பொறைப் பாரம் நீங்கி,
மீஉயர்ந்து எழுந்தாள் அன்றே,
    வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும்
    கோடி யோசனைகள் பொங்கி!
227

உரை
   
 
9664.ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம்,
    அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின்,
    கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின்,
    கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை
    ஆடியது இனிது அன்றே.
228

   
 
தேவர் முதலியோர் துயர் தீர்ந்து இராமனை வாழ்த்துதல்

9665.‘நினைந்தன முடித்தேம் ‘என்னா,
    வானவர் துயரம் நீத்தார்;
‘புனைந்தனென் வாகை ‘என்னா,
    இந்திரன் உவகை பூத்தான்;
வனைந்தன அல்லா வேதம்
    வாழ்வு பெற்று உயர்ந்த மாதோ;
அனந்தனும் தலைகள் ஏந்தி,
    அயாவுயிர்த்து, அவலம் தீர்ந்தான்.
229

உரை
   
 
9666.தாய், ‘படைத்து உடைய செல்வம்
    ஈக ‘என, தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம்
    விண்ணவர் தவத்தின் மேவி,
தோய் படைத்தொழிலால் யார்க்கும்
    துயர் துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம்
    வாழ்த்தினார், வணக்கம் செய்தார்
230

உரை
   
 
9667.தீ மொய்த்த அனைய செங்கண்
    அரக்கரை முழுதும் சிந்தி,
பூமொய்த்த கரத்தர் ஆகி
    விண்ணவர் போற்ற, நின்றான்
பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி,
    பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற
    கறைமிடற்று இறைவன் ஒத்தான்.
231

உரை
   
 
9668.அண்டம் மாக் களமும், வீந்த
    அரக்கரே உயிரும் ஆக,
கொண்டது ஓர் உருவம் தன்னால்,
    இறுதிநாள் வந்துகூட,
மண்டு நாள், மறித்தும் காட்ட,
    மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன
    தன் ஒருமூர்த்தி ஒத்தான்.
232

உரை
   
 
இலக்குவன் இராவணனுடன் பொருது நிற்கும் இடத்திற்கு இராமன் செல்லுதல்

9669.ஆகுலம் துறந்த தேவர்
    அள்ளினர் சொரிந்த வெள்ளச்
சேகு அறு மலரும் சாந்தும்
    செருத் தொழில் வருத்தம் தீர்க்க,
மாகொலை செய்த வள்ளல்
    வாள் அமர்க் களத்தைக் கைவிட்டு
ஏகினன், இளவலோடும்
    இராவணன் ஏற்ற கைம்மேல்.
233

உரை
   
 
9670.இவ்வழி இயன்ற எல்லாம்
    இயம்பினாம்; இரிந்து போன
தவெ் அழி ஆற்றல் வெற்றிச்
    சேனையின் செலவும், சென்ற
வெவ்வழி அரக்கர் கோமான்
    செய்கையும், இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும்,
    முற்றும் நாம் இயம்பல் உற்றாம்.
234

உரை
   
 
அஞ்சி நிலைகெட்டோடிய வானர சேனை மீளுதல்

9671.‘பெரும் படைத் தலைவர் யாரும்
    பெயர்ந்திலர், பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால்,
    யார் இடை விலக்கற்பாலார்?
வரும்பழி துடைத்தும், வானின்
    வைகுதும் யாமும் ‘என்னா,
இரும்கடல் பெயர்ந்தது என்ன,
    தானையும் மீண்டது, இப்பால்.
235

உரை