வீடணனுக்குத் தேறுதலுரை பகர்ந்த இராமன், இலக்குவனை நோக்கி ‘நீ வீடணனுக்கு முடிசூட்டுவாயாக ‘என ஏவுதல்

10097.‘வருந்தல் நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்! ‘எனா
அருந்தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்.
1

உரை
   
 
10098.‘சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரோடு ஏகி நீ
ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடுமுடி சூட்டுவாய்
2

உரை
   
 
10099.என்று கூறி இளவெளாடு யாரையும்
வென்றிவீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று தம்தம செய்கை புரிந்தனர்.
3

உரை
   
 
முடிசூட்டுதற்கு அமரர்கள் ஆவனசெய்தல்

10100.சூழ் கடல் புனலும் பல தோயமும்
நீள் முடித் தொகையும் பிறநீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும்
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர்.
4

உரை
   
 
10101.வாசநாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மாநிதியும் கொடு கங்கைசூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட
தேசு உலாம் மணிமண்டபம் செய்தனன்.
5

உரை
   
 
இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டுதல்

10102.மெய்கொள் வேத விதிமுறை விண் உேளார்
தயெ்வ நீள்புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ.
6

உரை
   
 
வீடணன் அரியணையில் அமர்ந்திருத்தல்

10103.கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்து என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான் தமர் ஆர்த்து எழ.
7

உரை
   
 
10104.மேவு காதல் விரைமலர் வேறு இலா
மூவரோடு முனிவர் மற்று யாவரும்
நாவில் ஆசி நறைமலர் தூவினார்.
8

உரை
   
 
மூடிசூடிய வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து இராமபிரானை யெய்தி இறைஞ்சுதல்

10105.முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை ஆண்டை அந்
நெடிய காதலினோற்கு உயர் நீர்மை செய்து
இடிகொள் சொல்லன் அவற்கு இது இயம்பினான்.
9

உரை
   
 
10106.‘விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மாநகர் யான்வரும் எல்லைநீ
கலங்கலா நெடுங்காவல் இயற்று ‘எனா
அலங்கல் வீரன் அடியிணை எய்தினான்.
10

உரை
   
 
வணங்கிய வீடணனை இராமன் தழுவிக்கொண்டு அவனுக்கு நீதிகளை எடுத்துரைத்தல்

10107.குரக்கு வீரன் அரசு இளங்கோளரி
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்
பொருக்கெனப் புகல் புக்கவன் புல்லி அத்
திருக்கொள் மார்பன் இனையன செப்பினான்.
11

உரை
   
 
10108.‘உரிமை மூவுலகும் தொழ உம்பர்தம்
பெருமை நீதி அறன்வழிப் பேர்கிலாது
இருமை ஏய் அரசு ஆளுதி ஈறு இலாத்
தருமசீல! ‘என்றான் மறை தந்துளான்.
12

உரை
   
 
10109.பன்னும் நீதிகள் பற்பல கூறி ‘மற்று
உன் அடைந்தவரோடு உயர் கீர்த்தியே
மன்னி வாழ்க ‘என்று உரைத்து அடல்மாருதி
தன்னை நோக்கினன் தாயர்சொல் நோக்கினான்.
13

உரை
   
 
சீதைக்குச் செய்தி சொல்லி வருமாறு, இராமன், அனுமனை அனுப்புதல்

10110.இப்புறத்து இ(ன்)ன எய்துறு காலையில்
அப்புறத்தை உன்னி அனுமனை
‘துப்பு உறு அச் செய்யவாய் மணித்தோகைபால்
செப்புறு இப்படிப் போய் ‘எனச் செப்பினான்.
14

உரை
   
 
அனுமன் அசோகவனம் சென்று, பிராட்டியைத் தொழுது சோபனம் பாடி இராமனால் இராவணன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறுதல்

10111.வணங்கி அந்தமில் மாருதி மாமலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர்வரு நீர் என
சுணங்கு தோய்முலையாட்கு இவை சொல்லுவான்.
15

உரை
   
 
10112.பாடினான் திருநாமங்கள்; பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான்.
16

உரை
   
 
10113.‘ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்!
வாழி சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது சோபனம்!
17

உரை
   
 
10114.‘தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித்தோள் எனும்
அலை கிடத்தன; ஆழி கிடந்தனெ
நிலைகிடந்தது உடல் நிலத்தே ‘என்றான்.
18

உரை
   
 
10115.‘அண்ணல் ஆணையின் வீடணனாம் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்
பெண் அலாது பிழைத்து உளது ஆகும் என்று
எண்ணல் ஆவது ஒர்பேர் இலதால் ‘என்றான்.
19

உரை
   
 
செய்திகேட்டுச் சீதை மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல்

10116.ஒரு கலைத்தனி வெண்மதி நாெளாடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலை குலம் பூத்தது போன்றனள்
பருகல் உற்ற அமுது பயந்த நாள்.
20

உரை
   
 
10117.ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பு நுண் இடை நோவ திரள்முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டிவந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள்.
21

உரை
   
 
10118.புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ
உந்தி ஓங்கும் ஒளிவளைத் தோள்கொலோ
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ
முந்தி ஓங்கின யாவை முலைகொலோ?
22

உரை
   
 
10119..குனித்த, கோலப்
    புருவங்கள்; கொம்மைவேர்
பனித்த, கொங்கை;
    மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று,
    நுவல்வது ஒன்று, ஆயினாள்;
கனித்த இன்களி
    கள்ளினில் காட்டுமோ?
23

உரை
   
 
களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டியிருந்தாளாக, ‘ஒன்றும் பேசாதது ஏன்? ‘என அனுமன் வினவுதல்

10120.அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்.
24

உரை
   
 
10121.‘யாது இதற்கு ஒன்று
    இயம்பலை என்பது,
மீது உயர்ந்த
    உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ? ‘
    எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்;
    நங்கை நிகழ்த்தினாள்.
25

உரை
   
 
பிராட்டியின் மறுமொழி

10122.மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கம் உற்று “ஒன்று இயம்புவது யாது? ” என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ?
26

உரை
   
 
10123.‘முன்னை “நீக்குவென் மொய்சிறை ” என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை;
“என்ன பேற்றினை ஈகுவது? ” என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன்
27

உரை
   
 
10124.‘உலகம் மூன்றும்
    உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும்
    உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை
    நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவுந்
    தகும் தன்மையோய்!
28

உரை
   
 
10125.‘ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
“யாது செய்வது? ” என்று எண்ணி இருந்தனென்
வேத நல்மணி வேகடம் செய்து அன்ன
தூத! என் இனிச் செய்திறம்? சொல் ‘என்றாள்.
29

உரை
   
 
அனுமன் தான் விரும்பிய பணி இதுவெனக் கூறுதல்

10126.‘எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி! நின்
மனக்களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?
புனக் களிக்குல மாமயில் போன்றுளாய்!
30

உரை
   
 
நின்னை வருத்திய கொடிய அரக்கியரை யான் வருத்தும்படி எனக்கு அனுமதி தருக ‘என அனுமன் பிராட்டியை வேண்டுதல்

10127.என உரைத்து ‘திரிசடையாள் எம்மோய்!
மனவினில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து இவ் அரக்கியர் தங்களை
வினையினின் சுட வேண்டுவன் யான் ‘என்றான்.
31

உரை
   
 
10128.‘உரை அலா உரை
    உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, ‘
    விழுங்குவம் ‘என்றுளார்
வரைசெய் மேனியை
    வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு,
    இனி ‘என்னுமால்.
32

உரை
   
 
அனுமன் சொல்லிய சொல்லினைக் கேட்ட அரக்கியர் சீதையைச் சரண்புகுதல்

10129.‘குடல் குறைத்து,
    குருதி குடித்து இவர்
உடல் முருக்கியிட்டு
    உண்குவென் ‘என்றலும்,
அடல் அரக்கியர் ‘
    அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச்சரண் ‘
    என்று விளம்பலும்.
33

உரை
   
 
பிராட்டி அரக்கியர்க்கு அபயம் அளித்து, அனுமனை நோக்கி, ‘அவர்களுக்கு இடர்செய்யற்க ‘என இரந்து வேண்டுதல்

10130.அன்னை ‘அஞ்சல்மின்! அஞ்சல்மின்! நீர் ‘எனா
மன்னும் மாருதி மாமுகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது? தூய்மையோய்!
34

உரை
   
 
10131.‘யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது; தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அ(ல்)லரே இவர்?
போன அப்பொருள் போற்றலை புந்தியோய்!
35

உரை
   
 
10132.‘எனக்கு நீ அருள் இவ் வரம்; தீவினை
தனக்கு வாழ்வு இடமாய சழக்கியர்
மனக்கு நோய்செயல் ‘என்றனள்; மாமதி
தனக்கு மா மறு தந்த முகத்தினாள்.
36

உரை
   
 
பிராட்டியின் அருள் நினைந்து அனுமன் பணிதலும்

10133.என்ற போதின் இறைஞ்சினன் ‘எம்பிரான்
தன்துணைப் பெருந்தேவி தயா ‘எனா
நின்ற காலை நெடியவன் ‘வீடண!
சென்று தா நம தேவியைச் சீரொடும்
37

உரை
   
 
வீடணன் சென்று பிராட்டியின் திருவடிகளை வணங்குதல்

10134.என்னும்காலை இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும்காலைக் கொணர்தி ‘என்று ஓதும் அப்
பொன்னின் கால்தளிர் சூடினன் போந்துளான்.
38

உரை
   
 
வீடணன் பிராட்டியை நோக்கி, ‘பூணத்தக்ககோலம் புனைந்து இராமன்பக்கல் எழுந்தருள்க எனக் கூறுதல்

10135.‘வேண்டிற்று முடிந்தது அன்றே
    வேதியர் வேதன், நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்;
    உம்பரும் காண வந்தார்;
“பூண்தக்க கோலம் வல்லை
    புனைந்தனை வருத்தம் போக்கி,
ஈண்டு, கொண்டணைதி ‘‘ என்றான்;
    எழுந்தருள் இறைவி ‘என்றான்.
39

உரை
   
 
அணி புனைந்துகொள்ளாமல் இங்கிருந்த கோலத்துடன் வருதலே எனக்குத் தகுதி என்று சீதை கூறுதல்

10136.‘யான் இவண் இருந்த தன்மை,
    இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள்
    கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர்
    ஈட்டமும் காண்டல் மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல்
    விழுமியது அன்று; வீர! ‘
40

உரை
   
 
அணி புனைந்து வருதல்வேண்டும் ‘என்பது இராமனது கட்டளை என வீடணன் வற்புறுத்திக் கூறப் பிராட்டி அதற்கிசைந்தநிலையில் தேவமாதர்கள் பிராட்டியை நீராட்டிக் கோலஞ்செய்தல்

10137.என்றனள், இறைவி; கேட்ட
    இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன்
    பணியினின் குறிப்பு அது ‘என்றான்;
‘நன்று ‘என, நங்கை நேர்ந்தாள்,
    நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வானநாட்டுத்
    திலோத்தமை முதலோர், சேர.
41

உரை
   
 


10138.மேனகை, அரம்பை, மற்றை
    உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர்
    யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நானம் நெய் ஊட்டப் பட்ட
    நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல்
    மருங்குற நெருங்கிப் புக்கார்.
42

உரை
   
 


10139.காணியைப் பெண்மைக்கு எல்லாம்,
    கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த
    அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேணுயர் மறையை எல்லாம்
    முறைசெய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல,
    விரல்முறை சுகிர்ந்து விட்டாள்.
43

உரை
   
 


10140..பாகு அடர்ந்து அமுது பில்கும்
    பவளவாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம்
    தீட்டி, மண்சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல்,
    மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாட,
    ஆட்டினர், உம்பர் மாதர்.
44

உரை
   
 


10141.உருவிளை பவள வல்லி
    பால்நுரை உண்ட தனெ்ன
மருவிளை கலவை ஊட்டிக்
    குங்குமம் முலையின் மாட்டி,
கருவிளை மலரின் காட்சிக்
    காசு அறு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு ஏற்ப
    மேகலை தழுவச் சேர்த்தார்
45

உரை
   
 
தேவமாதர் பிராட்டிக்கு மங்கல ஆரத்திசுழற்றிக் காப்பிடுதல்

10142.சந்திரன் தேவிமாரின்
    தகை உறு தரளப் பைம்பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப,
    இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ்வாய்த்
    தேம்பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால்
    வலஞ்செய்து காப்பும் இட்டார்.
46

உரை
   
 
பிராட்டியை விமானத்திலேற்றி இராமனிடம் அழைத்துச் செல்லுதல்

10143.மண்டல மதியின் நாப்பண்
    மான் இருந்து என்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான
    மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள்வாள்
    அரக்கரும் புறஞ்சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல்
    வீடணன் அருளின் சென்றான்.
47

உரை
   
 
தேவர்களும் முனிவர்களும் தேவர்மகளிரும் முனிவர் மனைவியரும் பிராட்டியைக் காணுதற்கு நெருங்குதல்

10144.இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர்
முப்புறத்து உலகினும் எண்ணின் முற்றினார்
ஒப்புறக் குவிந்தனர் ஓகை கூறுவார்.
48

உரை
   
 
மிகப்பலராய் நெருங்கியவர்களை அரக்க வீரர்கள் அடித்து விலக்க அவர்கள் அரற்றுதல்

10145.அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்
கருங்கடல் முழக்கு எனப் பிறந்த கம்பலை.
49

உரை
   
 
அரற்றொலியைக் கேட்ட இராமன், அதற்குக் காரணம் யாது என முனிவர்களை வினவியறிதல்

10146.அவ்வழி, இராமனும்
    அலர்ந்த தாமரைச்
செவ்விவாள் முகம்கொடு
    செயிர்த்து நோக்கு உறா,
‘இவ்வொலி யாவது? ‘என்று
    இயம்ப, ‘இற்று ‘எனா,
கவ்வை இல் முனிவரர்
    கழறினார் அரோ.
50

உரை
   
 
இராமன் வீடணனைக் கடிந்துரைத்தல்

10147.முனிவரர் வாசகம் கேட்புறாத முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன்
தனை எழ நோக்கி ‘நீ தகாத செய்தியோ
புனிதநூல் கற்று உணர் புந்தியோய்? ‘என்றான்.
51

உரை
   
 


10148.‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால்
நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்!
52

உரை
   
 


10149.‘பரசுடைக் கடவுள், நேமிப்
    பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தரெிவைமாரை இன்றியே
    அமைவது உண்டோ?
கரைசெயற்கு அரிய தேவர்,
    ஏனையோர், கலந்து காண்பான்
விரசு உறின், விலக்குவாரோ? வேறு
    உளார்க்கு என்கொல்? வீர!
53

உரை
   
 
இராமன் சொல்லைக்கேட்டு வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்

10150.‘ஆதலால், அரக்கர் கோவே!
    அடுப்பது அன்றும் உனக்கும், இன்னே
சாதுவாம் மாந்தர் தம்மைத்
    தடுப்பது ‘என்று அருளி, செங்கண்
வேத நாயகன் தான் நிற்ப,
    வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும்
    குலைந்தனன், குணங்கள் தூயோன்.
54

உரை
   
 
போர்க்களத்தையடைந்த சீதை, இராமபிரானது கோலத்தைக்கண்டு அனுமன் செய்த உதவியை நினைந்து பாராட்டுதல்

10151.அருந்ததி அனைய நங்கை,
    அமர்க்களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும்
    பசிப்பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன்
    விழா அணி விரும்பி நோக்கி,
கருந்தடங் கண்ணும் நெஞ்சும்
    களித்திட, இனைய சொன்னாள்.
55

உரை
   
 


10152.‘சீலமும் காட்டி,
    என்கணவன் சேவகக்
கோலமும் காட்டி,
    என்குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய
    கவிக்கு நாள் அறா
காலமும் காட்டுங்கொல்
    எனது கற்பு? என்றாள்.
56

உரை
   
 
பிராட்டி இராமனது திருமேனியைக் காணுதல்

10153.‘எச்சில் என்னுடல் உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை ‘என்பது ஓர் நவை இலாள் எதிர்
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச்சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள்.
57

உரை
   
 
சீதை விமானத்திலிருந்து இறங்கி, இராமனைத் தொழுது ஏக்கம் நீங்குதல்

10154.மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்
போனபேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தானது கவர்வுறும் தன்மைத்து ஆம் என
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள்.
58

உரை
   
 


10155.பிறப்பினும் துணைவனை பிறவிப் பேரிடர்
துறப்பினும் துணைவனை தொழுது ‘நானினி
மறப்பினும் நன்று; இனிமாறு வேறுவீழ்ந்து
இறப்பினும் நன்று ‘என ஏக்கம் நீங்கினாள்.
59

உரை
   
 
இராமன் சீதையை அமைய நோக்குதல்

10156.கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்.
60

உரை
   
 
இராமன், தன்னை வணங்கிய சீதையைச் சினந்து நோக்கிப் பலவாறு கடிந்துரைத்தல்

10157.சுணங்கு உறுதுணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கண் நீர் ஆறு வார்வுற
வணங்கிய மயிலினை கற்பின் வாழ்வினை
பணம்கிளர் அரவு என எழுந்து பார்ப்பு உறா.
61

உரை
   
 


10158.‘ஊண்திறம் உவந்தனை;
    ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறைதிறம்பு
    அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை;
    அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என்? நினைவு, “எனை
    விரும்பும் “ என்பதோ? ‘
62

உரை
   
 


10159.‘உன்னை மீட்பான்பொருட்டு,
    உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டு உறு படை
    அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறுபகை
    கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான் பொருட்டு,
    இலங்கை எய்தினேன்
63

உரை
   
 


10160.‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான்தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே இனிது? எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை வெறுமை நீங்கினாய்!
63

உரை
   
 


10161.‘கலத்தினின் பிறத்த மாமணியின் காந்துறு
நலத்தினின் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.
64

உரை
   
 


10162.‘பெண்மையும் பெருமையும்,
    பிறப்பும் கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும்,
    தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும்
    ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன்
    புகழின், மாய்ந்தவால்.
65

உரை
   
 


10163.‘அடைப்பர், ஐம்புலன்களை;
    ஒழுக்கம் ஆணியாச்
சடைப்பரம் புனைந்து, ஒளிர்
    தகையின் மாதவம்
படைப்பர்; வந்து இடை
    ஒரு பழிவந்தால், அது
துடைப்பர், தம் உயிரோடும்
    குலத்தின் தோகைமார்.
66

உரை
   
 


10164.‘யாது யான் இயம்புவது?
    உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன்
    ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின்,
    தக்கது ஒர்நெறி
போதியால் ‘என்றனன்
    புலவர் புந்தியான்.
67

உரை
   
 
இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு அங்கு நின்ற முனிவர் முதலியோர் அனைவரும் அரற்றுதல்

10165.முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய்திறந்து அரற்றினார் அரோ.
68

உரை
   
 
இராமன் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட சீதையின் துயர்நிலை

10166.கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினைக் கோலுறுத் தனைய பொம்மலால்
உள்நினைப்பு ஓவிநின்று உயிர்ப்பு வீங்கினாள்.
69

உரை
   
 


10167.பருந்து அடர் சுரத்திடை பருகுநீர் நசை
வருந்து அரும் துயரின் ஆல் மாளலுற்ற மான்
இருந் தடம்கண்டு அதின் எய்துறா வகைப்
பெருந்தடை உற்று என பேதுற்றாள் அரோ.
70

உரை
   
 


10168.உற்றுநின்று உலகினை நோக்கி ஓடு அரி
முற்று உறு நெடுங்கண்நீர் ஆலிமொய்த்து உக
‘இற்றதுபோலும் யான் இருந்துபெற்ற பேறு?
உற்றதால் இன்று அவம் ‘என்று என்று ஓதுவாள்.
71

உரை
   
 


10169.‘மாருதி வந்து எனைக் கண்டு “வள்ளல்நீ
சாருதி ஈண்டு “ எனச் சமையச் சோல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ
சோரும் என்நிலை? அவன் தூதும் அல்லனோ?
72

உரை
   
 


10170.‘எத் தவம் என்நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனலாய் அவம் பிழைத்ததாம் அன்றே
உத்தம! நீமனத்து உணர்ந்திலாமையால்.
73

உரை
   
 


10171.‘பார்க்கு எலாம் பத்தினி;
    பதுமத் தானுக்கும்
பேர்க்கலாம் சிந்தையள்
    அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன்,
    ‘அன்று ‘என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது
    தயெ்வம் தேறுமோ?
74

உரை
   
 


10172.‘பங்கயத்து ஒருவனும்,
    விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய
    தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல்
    அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை
    உணர வல்லரோ?
75

உரை
   
 


10173.‘ஆதலின் புறத்து இனி யாருக்காக என்
கோது அறுதவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே
வேத! நின்பணி; அதுவிதியும் ‘என்றனள்.
76

உரை
   
 
சீதை தனக்குத் தீ அமைக்குமாறு இலக்குவனை வேண்ட அவன் இராமனைத் தொழுது குறிப்பினால் அவனது இசைவை உணர்தல்

10174.இளையவன் தனை அழைத்து ‘இடுதி தீ ‘என
வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான்.
77

உரை
   
 
இலக்குவன் தீ அமைக்க, சீதை அதனருகே செல்லுதல்

10175.ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள்.
78

உரை
   
 
அப்பொழுது உலகில் எல்லாப் பகுதிகளும் எல்லாவுயிர்களும் கலக்கமுற்று நடுங்குதல்

10176.தீ இடை, அருகுறச்
    சென்று, தேவர்க்கும்
தாய் தனிக்குறுகலும்,
    தரிக்கிலாமையால்,
வாய்திறந்து அரற்றின
    மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும், மற்று
    உயிர்கள் யாவையும்.
79

உரை
   
 


10177.வலம்வரும் அளவையின் மறுகி வான்முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலமரல் உற்றன; அலறி ஐய! இச்
சலம் இது தக்கிலது ‘என்னச் சாற்றின.
80

உரை
   
 


10178.இந்திரன் தேவியே முதல ஏழையர்
அந்தர வானின் நின்று அரற்றுகின்றவர்
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார்.
81

உரை
   
 


10179.நடுங்கினர், நான்முகன்
    முதல நாயகர்;
படம் குறைந்தது, படிசுமந்த
    பாம்பு; வாய்
விடம் பரந்து உளது என,
    வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்;
    கடல்கள் ஏங்கின.
82

உரை
   
 
யான் குற்றமுடையேன் தீச்செல்வா என்னைச் சுடுதி ‘என்று அக்கினியை நோக்கிக் கூறி, இராமனுக்கு வணக்கஞ் செலுத்தி, தீயிற் பாய்தல்

10180.கனத்தினால் கடந்த பூண்
    முலைய கைவளை,
மனத்தினால், வாக்கினால்,
    மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால்,
    ‘தீச்செல்வா! ‘என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும்
    வணக்கம் போக்கினாள்.
83

உரை
   
 
சீதையின் கற்புத் தீயினால் அக்கினி வெந்து தீய்தல்

10181.நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும் பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால்.
84

உரை
   
 
தீக்கடவுள் சீதையைக் கையிலேந்தி

10182.அழுந்தின நங்கையை
    அங்கையால் சுமந்து
எழுந்தனன் அங்கி, வெந்து
    எரியும் மேனியான்,
தொழும் துணைக் கரத்தினன்,
    சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு
    அரற்றும் கொள்கையான்.
85

உரை
   
 


10183.ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால்.
86

உரை
   
 
அப்பொழுது உலகம் தடுமாற்றம் ஒழிய யாவரும் மகிழ்தல்

10184.திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார்.
87

உரை
   
 
அங்கியங் கடவுள் இராமனை நோக்கி முறையிடுதல்

10185.‘கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் ‘எனா
அநி்ந்தனை அங்கி ‘நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் ‘என முறையிட்டான் அரோ.
88

உரை
   
 
இராமன் ‘நீ யார்? ‘என வினாதல்

10186.‘இன்னது ஓர் காலையில்,
    இராமன், ‘யாரை நீ?
என்னை நீ இயம்பியது?
    எரியுள் தோன்றி, இப்
புன்மைசால் ஒருத்தியைச்
    சுடாது போற்றினாய்,
அன்னது ஆர் சொல்ல? ஈது
    அறைதியால் ‘என்றான்.
89

உரை
   
 
அக்கினிதேவன் மறுமொழி

10187.‘அங்கி, யான்; என்னை இவ்
    அன்னை கற்பு எனும்
பொங்கு வெந்தீச் சுடப்
    பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும்
    இயற்கை நோக்கியும்,
சங்கியா நிற்றியோ,
    எவர்க்கும் சான்று உளாய்?
90

உரை
   
 


10188.‘வேட்பதும், மங்கையர்
    விலங்கினார் எனின்
கேட்பதும், பல்பொருட்கு
    ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் ‘
    என்னும் மெய்ப் பொருள்
வாள் பெருந் தோளினாய்!
    மறைகள் சொல்லுமால்.
91

உரை
   
 


10189.‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கை உறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய் உறு கட்டுரை கேட்டும் மீட்டியோ?
பொய் அறு மாருதி உரையும் போற்றலாய்!
92

உரை
   
 


10190.‘தேவரும் முனிவரும்,
    திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும்,
    கண்கள் மோதிநின்று,
“ஆ! “ எனல் கேட்கிலை;
    அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒருபொருள்
    யாண்டுக் கொண்டியோ?
93

உரை
   
 


10191.‘பெய்யுமே மழை? புவி
    பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம்
    நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள்
    உணர்வு சீறினால்?
வையுமேல், மலர் மிசை
    அயனும் மாயுமே. ‘
94

உரை
   
 
பிராட்டியை இராமன் அருகில் அக்கினிதேவன் கொண்டுவர இராமன் அவளை ஏற்றுக்கொள்ளுதல்

10192.பாடு உறு பல்மொழி
    இனைய பன்னி நின்று
ஆடு உறு தேவரோடு
    உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனி அ(வ்)
    அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்;
    வள்ளல் கூறுவான்.
95

உரை
   
 


10193.‘அழிப்பு இல சான்றுநீ,
    உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ
    இவளை, “யாதும் ஓர்
பழிப்பு இலள் ‘‘ என்றனை;
    பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் ‘என்றனன்
    கருணை உள்ளத்தான்.
96

உரை
   
 
தேவர்கள் வேண்டியவண்ணம் பிரமதேவன் இராமனது உண்மைநிலையை அவனுக்கு உணர்த்துதல்

10194.‘உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று,
    காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற
    நின்று, அவை புணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு ‘என்று
    இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன்
    உரைசெயச் சமைந்தான்.
97

உரை
   
 


10195.‘மன்னர் தொல்குலத்து அவதரித்தனை;
    ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ;
    இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில்
    துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை; நின் இன் இல் வேறு
    உளது இலை நெடியோய்!
98

உரை
   
 


10196.‘பகுதி என்று உளது, யாதினும்
    பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று
    அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப்
    புருடனும், நீ; இம்
மிகுதி உன்பெரு மாயையினால்
    வந்த வீக்கம்.
99

உரை
   
 


10197.‘முன்பு பின்பு இருபுடை எனும்
    குணிப்பு அரு முறைமைத்
தன்பெருந் தன்மை தான் தரெி
    மறைகளின் தலைகள்,
“மன்பெரும் பரமார்த்தம் “ என்று
    உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு
    யாரையும் அறையா.
100

உரை
   
 


10198.‘எனக்கும், எண் வகை ஒருவற்கும்,
    இமையவர்க்கு இறைவன்
தனக்கும், பல்பெரு முனிவர்க்கும்,
    உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம்
    என்பதை அறிந்தார்,
வினைத் துவக்கு உடை வீட்ட அரும்
    தளைநின்று மீள்வார்.
101

உரை
   
 


10199.என்னைத்தான் முதலாகிய
    உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு
    மாயையின் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின்
    சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ,
    முத்தி வித்து, ஒழிந்த.
102

உரை
   
 


10200.“‘ஐ அஞ்சு ஆகிய தத்துவம்
    தரெிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற
    நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது ‘‘ என்னும் ஈது
    அருமறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச்
    சான்று இலை, வழக்கால்.
103

உரை
   
 


10201.‘அளவையால் அளந்து, “ஆம் “ , “அன்று “என்று
    அறிவுறும் அமைதி
உ(ள்)ளவை யாவையும் உனக்கு இல்லை;
    உபநிடத்து உறும் நின்
களவை ஆய்ந்து உறத் தெளிந்து இலது
    ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! “உளை
    நீ “ எனத் துணியும்.
104

உரை
   
 


10202.‘கரணம் என்று உள உன்னை வந்து
    அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து
    அறிவு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை
    மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை,
    அன்னவை தவிர்ப்பான்.
105

உரை
   
 


10203.‘தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை;
    நின்கணே தோற்றும்,
ஆற்றல்சால் முதற்பகுதி; மற்று
    அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்;
    அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்;
    நீ என்றும் விளியாய்.
106

உரை
   
 


10204..‘மின்னைக் காட்டுதல்போல் வந்து
    விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை
    நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும்
    காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும்
    இலை, மறை உரையால்.
107

உரை
   
 


10205.‘என் உருக் கொடு இவ் உலகினை
    ஈனுதி; இடையே
உன் உருக் கொடு புகுந்துநின்று
    ஓம்புதி; உமைகோன்
தன் உருக்கொடு துடைத்தி; மற்று
    இது, தனி அருக்கன்
முன் உருக் கொடு பகல் செயும்
    தரத்தது முதலோய்
108

உரை
   
 


10206..‘திருக் குவால்மலி செல்வத்துச்
    செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர்
    அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல்
    யாம்புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி;
    ஈங்கு இது கடனோ?
109

   
 


10207.‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம்
    உன்னை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து
    இருவினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம் “ , “அன்று “என்று,
    ஊழி கண்டாலும்
ஓங்காரப் பொருளே பொருள்
    என்கிலா உரவோர்
110

உரை
   
 
10208.‘இனையது ஆதலின், என்னையும்
    யாரையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம்
    மோயினை வாளா
முனியல் ‘என்று உரை முடித்தனன்
    முந்துநீர் முளைத்த
சினையின் பந்தமும் பகுதிகள்
    அனைத்தையும் செய்தோன்.
111

உரை
   
 
சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்

10209..என்னும் மாத்திரத்து, ஏறு அமர்
    கடவுளும் இசைத்தான்;
‘உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை
    போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்திநீ;
    மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின்
    மார்பின் வந்து அமைந்தாள்.
112

உரை
   
 
10210..‘துறக்கும் தன்மையள் அல்லளால்,
    தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன்வயிற்று அன்னை; இப்
    பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல உயிர்; இராமன் நீ
    இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது ‘என்றனன்,
    வரதர்க்கும் வரதன்.
113

உரை
   
 
இராமனைத் தரெுட்டுமாறு துறக்கத்திலுள்ள தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்

10211..பின்னும் நோக்கினான், பெருந்தகைப்
    புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந்
    துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, நின்
    மைந்தனைத் தரெுட்டி
முன்னை வன்துயர் நீக்குதி
    மொய்ம்பினோய் என்றான்.
114

உரை
   
 
தயரதன் பூதலத்திடைப் புகுதலும், இராமன் அவனை வணங்குதலும்

10212..ஆதியான் பணி அருள் பெற்ற
    அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய
    உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்;
    புகுதலும், பொரு இல்
வேதவேத்தனும் அவன் மலர்த்
    தாள்மிசை வீழ்ந்தான்.
115

உரை
   
 
தயரதன் இராமனை இடர்நீங்க எடுத்துத் தழுவி
மகிழ்ந்துரைத்தல்

10213..வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன்
    விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன்
    கண்ணின் நீர் ஆட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும்
    களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட,
    நின்று இவை புகன்றான்.
116

உரை
   
 


10214.‘அன்று கேகயன் மகள் கொண்ட
    வரமெனும் அயில்வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை
    நின்றது, என்னைக்
கொன்றும் நீங்கலது, இப்பொழுது
    அகன்றது, உன் குலம் பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா
    மணி இன்று வாங்க.
117

உரை
   
 


10215.‘மைந்தரைப் பெற்று வான் உயர்
    தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்!
    என்துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம்
    எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும்
    புகழும்பெற்று உயர்ந்தேன்.
118

உரை
   
 
10216.‘பண்டு நான் தொழும் தேவரும்
    முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம்
    குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன்
    தன்னொடும் பொருந்தி
அண்ட மூலத்து ஒர் ஆசனத்து
    இருத்தினை, அழக! ‘
119

உரை
   
 
தயரதன் சீதையை யணுகித் தன்னை வணங்கிய சீதைக்குத் தேறுதலுரை பகர்தல்

10217..என்று மைந்தனை எடுத்து எடுத்து,
    இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான்,
    சீதையைக் குறுக,
தன் துணைக்கழல் வணங்கலும்,
    கருணையால் தழவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான்,
    நிகழ்த்த அரும்புகழோன்.
120

உரை
   
 


10218.“‘நங்கை! மற்றுநின் கற்பினை
    உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு ‘‘ என்று உணர்த்திய
    அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும்
    உண்டு, அதுசரதம்;
கங்கை நாடுடைக் கணவனை
    முனிவுறக் கருதேல்.
121

உரை
   
 


10219.“‘பொன்னைத் தீயிடைப் பெய்தல்
    அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு ‘‘ என்பது
    மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி ‘
    என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது ‘‘ என்று
    எண்ணி இப்பெரியோன்.
122

உரை
   
 
10220.‘பெண் பிறந்தவர், அருந்ததியே
    முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங்கலம்
    ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ
    வான்நின்றும் வந்தாய்;
எண்பு இறந்த நின்குணங்களுக்கு
    இனி இழுக்கு இலையால்.
123

உரை
   
 
தயரதன் இலக்குவனைக் தழுவிப் பாராட்டுதல்

10221..என்னச் சொல்லி, அவ் ஏந்திழை
    திருமனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர்முனிவு இன்மை
    மனம்கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை,
    உள் அன்பு பிணிப்ப,
தன்னைத்தான் எனத் தழுவினன்,
    கண்கள் நீர்ததும்ப.
124

உரை
   
 


10222..கண்ணின்நீர்ப் பெருந்தாரை மற்று
    அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர,
    தழீஇ நின்று, ‘மைந்த!
எண் இல் நீக்க அரும்பிறவியும்
    என்நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, நுமையனைத்
    தொடர்ந்து உடன் போந்தாய்
125

உரை
   
 


10223.‘புரந்தரன் பெரும் பகைஞனைப்
    போர்வென்ற உன்தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே
    தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது;
    நீஇந்த உலகின்
அரந்தை வெம்பகை துடைத்து, அறம்
    நிறுத்தினை ஐய!
126

உரை
   
 


10224..என்று, பின்னரும், இராமனை,
    ‘யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர்குணத்தோய்! ‘
    என, ‘உனை யான்
சென்று வானிடைக்கண்டு, இடர்
    தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப்பெற்றேன்; இனிப்
    பெறுவது என்? ‘என்றான்.
127

உரை
   
 
10225.‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
    உரை ‘என, அழகன்,
‘தீயள் என்று நீ துறந்த என்
    தயெ்வமும் மகனும்,
தாயும் தம்பியுமாம் வரம்
    தருக ‘எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
    உயிரெலாம் வழுத்தி.
128

உரை
   
 
தயரதன் மறுமொழி

10226.‘வரதகேள்! ‘எனத் தயரதன்
    உரை செய்வான்; ‘மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான்
    முடியினைப் பறித்து இவ்
விரத வேடம் மற்று உதவிய
    பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம் ‘என்றான்,
    தழீஇய கைதளர.
129

உரை
   
 
கைகேயியின்மேல் தயரதன் கொண்ட தணியாக் கோபம் இராமனது உரையால் நீங்குதல்

10227..‘ஊன் பிழைக்கிலா உயிர்நெடிது
    அளிக்கும்நீள் அரசை
வான்பிழைக்கும் இதுமுதல் எனாது,
    ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால், என்னை
    ஈன்ற எம்பிராட்டி
தான்பிழைத்தது உண்டோ? ‘என்றான்;
    அவன் சலம் தவிர்ந்தான்
130

உரை
   
 
10228.எவ் வரங்களும் கடந்தவன்
    அப்பொருள் இசைப்ப,
‘தவெ்வரம்பு அறு கானிடைச்
    செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை
    ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு ‘என்றார்,
    தேவரும் இரங்கி.
131

உரை
   
 
வரமிண்டையும் அளித்த தயரதன் விமானத்திலேறித் துறக்கத்தை யடைதல்

10229..வரம் இரண்டும் அளித்து, அழகனை,
    இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை
    நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம்மீது ஏகினன்
    உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிரளித்து,
    உறுபுகழ் படைத்தோன்.
132

உரை
   
 
தேவர்கள் இராமனை நோக்கி ‘வீர நீ வேண்டும் வரம் கேள் ‘என ‘போரில் மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுமாறும் குரங்குகள் செல்லும் வனம் முதலிய இடங்களிற் காய் கனிகள் மிகுமாறும் அருள்புரிக ‘என இராமன் வேண்டுதல்

10230..கோட்டு வார்சிலைக் குரிசிலை
    அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ‘வீர! நீ
    வேண்டுவ வரங்கள்
கேட்டியால் ‘என, ‘அரக்கர்கள்
    கிளர்பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம்
    எழுக! ‘என விளம்பி,
133

உரை
   
 
10231..பின்னும் ஓர் வரம், ‘வானரப்
    பெருங்கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம், மால்வரைக்
    குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி
    கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என
    விளம்பிடுக ‘என்றான்.
134

உரை
   
 
தேவர்கள் அருளிய வரத்தால், போரில் மாண்ட குரங்குகள் யாவும் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்

10232..வரம் தரும் முதல் மழுவலான்,
    முனிவரர், வானோர்,
புரந்தர் ஆதி, மற்று ஏனையோர்,
    தனித்தனி புகழ்ந்து ஆங்கு
‘அரந்தை வெம்பிறப்பு அறுக்கும்
    நாயக! நினது அருளால்
குரங்கு இனம் பெறுக! ‘என்றனர்,
    உள்ளமும் குளிர்ப்பார்.
135

உரை
   
 


10233..முந்தைநாள் முதல் கடைமுறை
    அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும்
    எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண்களிப்புற,
    செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை
    வணங்கின, மகிழ்ந்து
136

உரை
   
 
10234.கும்ப கன்னனோடு இந்திரசித்து,
    வெங்குலப் போர்
வெம்பு வெஞ்சினத்து இராவணன்
    முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம்
    அங்கு வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப்
    பார்த்து, இவை உரைத்தார்.
137

உரை
   
 
பரினான்கு ஆண்டுகள் முடிந்தன; நீ பரதனிடம் இன்று சென்று சேர்க ‘என்று தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி நீங்குதல்

10235.‘இடை உவாவினில் சுவேலம் வந்து
    இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை
    வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர்தம்
    குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன்
    தன்னையும் கட்டு,
138

உரை
   
 


10236..“வஞ்ச இல்லை இவ் அண்டத்தின் “
    எனும்படி மடித்த
கஞ்ச நாள்மலர்க் கையினாய்!
    அன்னைசொல் கடவாது
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும்
    ஆண்டு போய் முடிந்த
பஞ்சமிப் பெயர் படைத்துள
    திதி இன்று பயந்த.
139

உரை
   
 
10237.‘இன்று சென்று, நீ பரதனை
    எய்தலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை;
    அன்னது போக்க,
வென்றிவீர! நீ போதியால் ‘
    என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்;
    இராகவன் நினைந்தான்.
140

உரை
   
 
இன்றே யான் பரதனைச் சென்றடைதற்குரிய விமானம் உண்டோ? என இராமன் வினவ, ‘உண்டு ‘எனக் கூறி வீடணன் வணங்குதல்

10238.‘ஆண்டு பத்தொடு நாலும்
    இன்றோடு அறும் ஆயின்
மாண்டதாம் இனி என்குலம்,
    பரதனே மாயின்;
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ? ‘
    என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு ‘என்று, அடல்
    வீடணன் தொழுதான்.
141

உரை
   
 
வீடணன், புட்பக விமானத்தின் தன்மையைக் கூறி ‘இவ்விமானத்திற் செல்வாய் ‘என, இராமன் அவ்விமானத்தைக் கொணருமாறு பணித்தல்.

10239..‘வாங்கினான் இருநிதியொடு
    தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் எழுபஃது
    ஏறினும் ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது;
    இவரின் நீ இனிது
பூங்குலா நகர் புகுதி இஞ்ஞான்று ‘
    எனப் புகன்றான்.
142

உரை
   
 
10240.‘இயக்கர் வேந்தனுக்கு அருமறைக்
    கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனமெனத்
    தூயது, சுரர்கள்
வியக்க வான்செலும் புட்பக
    விமானமுண்டு ‘என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி
    வல்லையின் ‘என்றான்.
143

உரை
   
 
வீடணன் புட்பகவிமானத்தை விரைந்து கொணர்தல்

10241.அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து,
    ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத்
    திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள்
    ஒலிப்புறக் கஞலக்
கொண்டு அணைந்தனன் நொடியினில்,
    அரக்கர்தம் கோமான்.
144

உரை
   
 
புட்கவிமானம் வரத், தேவர்கள் பூமழை சொரிதல்

10242..அனைய புட்பகவிமானம் வந்து
    அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன்
    உவகையோடு, ‘இனிநம்
வினையம் முற்றியது ‘என்று கொண்டு
    ஏறினன்; விண்ணோர்
புனைமலர் சொரிந்து ஆர்த்தனர்,
    ஆசிகள் புகன்றே.
145

உரை
   
 
புட்பகத்தில் இராமனுடன் சீதையும்
இலக்குவனும் அமர்தல்

10243..வணங்கு நுண்ணிடைத் திரிசடை
    வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர்
    இடர் இன்றி இலங்கைக்கு
அணங்கு தான் என இருத்தி ‘என்று,
    ஐயன்மாடு அணைந்தாள்;
மணம்கொள் வேல் இளங் கோள் அரி
    மானம் மீப்படர்ந்தான்.
146

உரை
   
 
விமானத்தில் அமர்ந்த இராமன் வீடணன் சுக்கிரீவன் முதலியோரை நோக்கிக் கூறுதல்

10244.அண்டம் உண்டவன் மணி அணி
    உதரம் ஒத்து, அனிலன்,
சண்ட வேகமும் குறைதர,
    நினைவு எனுந் தகைத்தாய்,
விண்தலம் திகழ் விமானம் ஆம்
    புட்பகம் இதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப்
    பார்த்து, இவை குணித்தான்
147

உரை
   
 


10245.வீடணன் தனை அன்புற
    நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்!
    சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே
    வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட,
    வீற்றிரு நலத்தால்.
148

உரை
   
 


10246..‘நீதி ஆறு எனத் தரெிவுறு
    நிலைமைபெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின்
    குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கைமா
    நகரினுள் இனி நீ
போதியால் ‘எனப் புகன்றனன்
    நான்மறை புகன்றான்.
149

உரை
   
 


10247..‘சுக்கிரீவ! நின் தோளுடை
    வன்மையால் தசம்தொகு
அக்கிரீவனைத் தடிந்து; வெம்
    படையினால் அசைத்த
மிக்க வானரச்சேனையின்
    இளைப்பு அற, மீண்டு, ஊர்ப்
புக்கு வாழ்க ‘எனப் புகன்றனன்
    ஈறு இலாப் புகழோன்.
150

உரை
   
 


10248..வாலி சேயினை, சாம்பனை,
    பனசனை, வயப் போர்
நீலன் ஆதியாம் நெடும் படைத்
    தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி
    மீண்டருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று
    இம்மொழி புகன்றான்.
151

உரை
   
 


10249..ஐயன் இம் மொழி புகன்றிட,
    துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர,
    விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாளிணை
    முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலோம், உனை நீங்கின் ‘என்று
    இனையன உரைத்தார்.
152

உரை
   
 
10250.‘பார மா மதில் அயோத்தியின்
    எய்தி, நின் பைம்பொன்
ஆரமா முடிக் கோலமும்
    செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும்
    அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் ‘என்றனர்
    உள் அன்பு பிணிப்பார்.
153

உரை
   
 
இராமன் அதற்கு இசைய, யாவரும் மகிழ்தல்

10251..அன்பினால் அவர் மொழிந்த
    வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும்
    நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்து இருந்தது
    அப்பரிசு; நும்முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது ‘என்று
    உரைத்தனன் - பெரியோன்.
154

உரை
   
 
10252..ஐயன் வாசகம் கேட்டலும்
    அரிகுலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர்
    வேந்தனும் முதலோர்,
வையம் ஆளுடை நாயகன்
    மலர்ச்சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார்
    என வியந்தார்.
155

உரை
   
 
சுக்கிரீவன் முதலிய எல்லோரையும் விமானத்தில் ஏறுமாறு இராமன் கூற, யாவரும் புட்பகத்தில் ஏறுதல்

10253..அனையது ஆகிய சேனையோடு
    அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப்பெருந்
    தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர்
    மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம் ‘என்று
    இராகவன் இசைத்தான்
156

உரை
   
 


10254.சொன்ன வாசகம் பிற்பட,
    சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது
    வெள்ள வானரரும்,
கன்னி மாமதில் இலங்கை
    மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பக
    மிசை ஒருசூழல்
157

உரை
   
 
10255.பத்து நாலென அடுக்கிய
    உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும்
    வெளியிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன்நிலை
    மொழிகுவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு
    உரியவர் யாரே?
158

உரை
   
 
புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

10256.எழுபது வெள்ளத் தோரும்,
    இரவி கான் முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும்,
    வான் பெரும் படையும் சூழ,
தழுவுசீர் இளைய கோவும்,
    சனகன்மா மயிலும் போற்ற,
விழுமிய குணத்து வீரன்
    விளங்கினன், விமானத்து உம்பர
159

உரை
   
 
10257..அண்டமே போன்றது ஐயன்
    புட்பகம்; அண்டத்து உம்பர்
எண்தரும் குணங்கள் இன்றி,
    முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப்
    பரஞ்சுடர் பொலிவதே போல்,
புண்டரீகக் கண்வென்றிப்
    புரவலன் பொலிந்தான் மன்னோ
160

உரை
   
 
இராமன் கட்டளையினால் யாவரும் மனித வடிவங்கொள்ளுதல்

10258.தேனுடை அலங்கல் மோலிச்
    செங்கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை
    இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப்
    படைப்பெருந் தலைவர்தாமும்
மானுட வடிவங் கொண்டார்,
    வள்ளல்தன் வாய்மைதன்னால்.
161

உரை
   
 
விமானம் வடதிசை நோக்கிச் செல்கையில் இராமன் வழியிலுள்ள காட்சிகளைச் சீதைக்குக் காட்டிச் சொல்லுதல்

10259..குடதிசை மறைந்து, பின்னர்க்
    குணதிசை உதயம் செய்வான்,
வடதிசை அயனம் முன்னி
    வருவதே கடுப்ப, மானம்,
தடை ஒருசிறிது இன்றாகித்
    தாவி வான்படரும் வேலை,
படை அமை விழியாட்கு, ஐயன்
    இவை இவை பகரல் உற்றான்
162

உரை
   
 


10260..இலங்கையை வலஞ் செய்து ஏக
    என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழைவாயில்
    வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது
    இவண் ‘என, நமன்தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய்
    சுபாரிசற் கட்டது ‘என்றான்.
163

உரை
   
 
10261.‘குடதிசை வாயில், வேகக்
    குன்று அரிந்தவனை வென்ற
விடம்நிகர் மேகநாதன் இளவலால்
    வீழ்ந்தது; என்முன்
வடதிசை வாயில்மேல் அவ்
    இராவணன் மவுலி பத்தும்
உடலமும் இழந்தது இங்கு ‘என்று
    உணர்த்தி, வேறு உரைக்கல் உற்றான்
164

உரை
   
 
சேதுவைக் காட்டி அதன் சிறப்பினை எடுத்துரைத்தல்

10262..நன்னுதல் நின்னை நீங்கி
    நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன்
    வான் துணை ஆக நட்ட
பின்னை, மாருதி வந்து உன்னைப்
    பேது அறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர்
    தொகுத்தது இச்சேது கண்டாய்.
165

உரை
   
 


10263.மற்று இதன் தூய்மை எண்ணின்
    மலரயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தரெிவை! யான் என்
    புகலுகேன்? கேட்டி அன்பால்;
பெற்ற தாய் தந்தையோடு
    தேசிகன் பிழைத்துச் சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துேளாரும்
    எதிர்தரின், சுரர்கள் ஆவார்.
166

உரை
   
 


10264.‘இந்திரற்கு அஞ்சி, மேல்நாள்,
    இருங்கடல் புக்கு, நீங்காக்
கந்தர சயிலம், தன்னைக்
    கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும்
    கிரி இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது
    பாவனம் ஆயது ‘என்றான்.
167

உரை
   
 


10265..கங்கையோடு, யமுனை, கோதாவிரியொடு
    களிந்தை சூழ்ந்த
பொங்குநீர் நதிகள் யாவும்,
    படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை
    தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை
    யாவையும் நீங்கும் அன்றே.
168

உரை
   
 


10266..ஆவினைக் குரவரோடும்
    அரு மறை முனிவர் தம்மைப்
பாவையர் குழுவை இன் சொல்
    பாலரைப் பயந்து தம்மின்
மேவின அவரைச் செற்றோர்,
    விரிகடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய்
    சுரர் தொழும் சுரர்கள் ஆவார்.
169

   
 


10267..மரக்கலம் இயங்க வேண்டி
    வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச
    பாதகரேனுஞ் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று
    பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய அமரர்க்கு எல்லாம்
    நீள் நிதி ஆவர் அன்றே.
170

   
 
10268..‘நெற்றியின் அழலும் செங்கண்
    நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையின் மேவும்
    கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம் ‘‘ என்று கொண்டு
    பெருந் தவம் புரிகின்றாளால்;
மற்று இதன்தூய்மை எவ்வாறு
    உரைப்பது? மலர்க்கண் வந்தாய்! ‘
171

உரை
   
 
வருணன் சரணமடைந்த இடத்தை இராமன் சீதைக்குக் காட்டுதல்

10269.தவெ் அடு சிலைக் கை வீரன்
    சேதுவின் பெருமை யாவும்
வெவ் விடம் பொருது நீண்டு
    மிளிர்தரும் கருங் கண் செவ்வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு
    நுவன்று, பின் வருணன் நோனாது,
இவ் இடை வந்து கண்டாய்,
    “சரண் “ என இயம்பிற்று என்றான்.
172

உரை
   
 
பொதியமலை, திருமாலிருஞ்சோலை, திருவேங்கடமலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

10270.‘இது, தமிழ் முனிவன் வைகும்
    இயல்தரு குன்றம்; முன்நாறு
உது, வளர் மணிமால் ஓங்கல்,
    உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது, திகழ் அனந்தவெற்பு ‘என்று
    அருள்தர, ‘அனுமன் தோன்றிற்று
எது? ‘என, அணங்கை நோக்கி,
    இற்று என இராமன் சொன்னான்.
173

உரை
   
 
சுக்கிரீவனது நகரைக் காட்டுதல்

10271.‘வாலி என்று அளவு இல் ஆற்றல்
    வன்மையான், மகரநீர் சூழ்
வேலியைக் கடக்க வாவும்
    விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி
    நுனித்து அறங்குணித்த மேலோர்
போல் இயல் தபனன் மைந்தன்
    உறைதரு புரம் ஈது ‘என்றான்.
174

உரை
   
 
வானரமகளிரையும் உடனழைத்துச் செல்லவேண்டும் எனச் சீதை கூறுதல்

10272.‘கிட்கிந்தை இதுவேல், ஐய!
    கேட்டியால் : எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள
    மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ
    ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை
    ஏற்றுதல் கடன்மைத்து ‘என்றாள்.
175

உரை
   
 
வானரமகளிரைக் கொணரும்படி இராமன் பணிக்கச் சுக்கிரீவன் சொற்படி அனுமன் அவர்களைக் கொணர்தல்

10273..அம்மொழி இரவு மைந்தற்கு
    அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன் தன்னை
    நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம்மலி குழலினாரை
    மரபினாற் கொணர்தி ‘என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல்,
    கொணர்ந்தனன், சென்று மன்னோ.
176

உரை
   
 
வானரமகளிர் சுக்கிரீவனையும் இராமனையும் சீதையையும் வணங்குதல்

10274..வரிசையின் வழாமை நோக்கி,
    மாருதி, மாதர் வெள்ளம்
கரை செயல் அரிய வண்ணம்
    கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரை செறி குழலினார், தம்
    வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும்
    அடி இணை தொழுது நின்றார்.
177

உரை
   
 
விமானம் மீண்டும் எழுந்து செல்லுதல்

10275..மங்கலம் முதலாய் உள்ள
    மரபினின் கலன்கள் யாவும்
அங்கு அவர் கொணர்ந்து, பெண்மைக்கு
    அரசியைத் தொழுதுசூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர்
    நவை இலை இனி மற்று என்றாள்;
பொங்கிய விமானம் தானும்
    மனமென எழுந்து போன.
178

உரை
   
 
கோதாவரியையும் சீதையைப் பிரிந்த இடத்தையும் இராமன் சீதைக்குக் காட்டுதல்

10276..போதா விசும்பில் திகழ் புட்பகம்
    போதலோடும்,
சூது ஆர் முலைத்தோகையை நோக்கி, ‘முன்
    தோன்று சூழல்
கோதாவிரி; மற்று அதன் மாடு உயர்
    குன்று நின்னைப்
பேதாய்! பிரிவித்து உயர் பீழை
    பிணித்தது ‘என்றான்.
179

உரை
   
 
தண்டகவனம், சித்திரகூடபருவதம், பரத்துவாசர் ஆச்சிரமம் ஆகியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

10277..‘சிரத்து வாச வண்டு அலம்பிடு
    தரெிவை! கேள் : இதுநீள்
தரத்து உவாசவர், வேள்வியர்
    தண்டகம்; அது தான்
வரத்து வாசவன் வணங்குறு
    சித்திர கூடம்;
பரத்துவாசனது உறைவிடம்
    இது ‘எனப் பகர்ந்தான்.
180

உரை
   
 
பரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொள்ளுதல்

10278..மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது
    இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன்
    உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன்
    எய்தினன் ‘என்னா,
துன்னு மாதவர் சூழ்தர,
    எதிர் கொள்வான், தொடர்ந்தான்
181

உரை
   
 
இராமன் பரத்துவாச முனிவரைக் காணுதல்

10279..ஆதபத்திரம், குண்டிகை,
    ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு
    கையினில் பொலிய,
மா தவப்பயன் உருவு கொண்டு
    எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை
    நோக்கினன், நெடியோன்.
182

உரை
   
 
பரத்துவாசர் ஆச்சிரமத்தில் புட்பக விமானம் இறங்குமாறு இராமன் நினைதல்

10280..எண்பக, தினை அளவையும்
    கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை
    நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி
    எனப் பொலி வீரன்
புட்பகத்தினை வதிகென
    நினைந்தனன், புவியில்.
183

உரை
   
 
இராமன் விரைந்து எதிர்சென்று பரத்துவாச முனிவரை வணங்குதல்

10281..உன்னும் மாத்திரத்து, உலகினை
    எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தனெப்
    புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன்,
    வல்லையின் எதிர் போய்,
பன்னு மாமறைத் தபோதனன்
    தாள்மிசைப் பணிந்தான்.
184

உரை
   
 
பரத்துவாச முனிவர் நல்வாழ்த்துடன் இராமனைத்தழுவி உவகைக்கண்ணீர் சொரிதல்

10282..அடியின் வீழ்தலும், எடுத்து நல்
    ஆசியோடு அணைத்து
முடியை மோயினன் நின்றுழி,
    முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர,
    தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது
    ஆட்டினன், நெடியோன்
185

உரை
   
 
சீதையும் இலக்குவனும் முனிவரை வணங்க, அவர் பரிவால் உளம் மகிழ்தல்

10283..கருகும் வார்குழல் சனகியோடு
    இளவல் கைதொழுதே,
அருகு சார்தர, அருந்தவன்
    ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு
    கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம்
    களித்தனன், பரிவால்.
186

உரை
   
 
10284..வானரேசனும், வீடணக்
    குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும்
    ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு
    நன்மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும்
    அருமறை புகன்றே.
187

உரை
   
 
பரத்து வாசமுனிவர் இராமனை அருச்சித்து அன்போடு உபசரித்து அவனது சிறப்பினை எடுத்துரைத்தல்

10285..பன்ன சாலையுள் புகுந்து, நீடு
    அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்து, பின்
    சூரியன் புதல்வன்
தன்னை நோக்கினன், பல் முறை
    கண்கள் நீர் ததும்ப,
பின் ஓர் வாசகம் உரைத்தனன்,
    தபோதரின் பெரியோன்.
188

உரை
   
 


10286..‘முனிவர் வானவர் மூவுலகத்து
    உேளார் யாரும்
துனி உழந்திடத் துயர்தரு
    கொடுமனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள்
    நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே!
    என், இனிக் குணிப்பாம்?
189

உரை
   
 
10287..‘விராதனும், கரனும், மானும்,
    விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி
    மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும்,
    கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவு அரும் பகழி ஒன்றால்
    அழித்து, உலகு அளித்தாய் ஐய! ‘
190

உரை
   
 
இன்று எம் விருந்தாக இங்குத்தங்குக ‘எனப்பரத்துவாச முனிவர் இராமனை வேண்டுதல்

10288.‘சித்திர கூடம் தீர்ந்து,
    தனெ்திசைத் தீமை தீர்த்திட்டு
இத்திசை அடைந்து எம் இல்லின்
    இறுத்தமை இறுதி ஆக
வித்தக! மறந்திலேன் யான்
    விருந்தினை ஆகி, எம்மோடு
இத்தினம் இருத்தி ‘என்றான்
    மறைகலின் இறுதி கண்டான்.
191

உரை
   
 
பரதன் இயல்பினை இப்பொழுதே சொல்கின்றேன் ‘என முனிவர் இராமனிடம் பரதன் தன்மையை எடுத்துரைத்தல்

10289..‘கரதலம் அதனின் நீடு
    கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம்
    தணித்து உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண்
    வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே
    பணிக்குவன் கேட்டி ‘என்றான்.
192

உரை
   
 


10290..வியர்த்த மேனியன், விழிபொழி
    மழையன், மூவினையைச்
செயிர்த்த சிந்தையன், தரெுமரல்
    உழந்து உழந்து அழிவான்,
அயர்த்து நோக்கினும் தனெ்திசை
    அன்றி வேறு அறியான்,
பயத்த துன்பமே உருவு கொண்டு
    என்னல் ஆம் படியான்.
193

உரை
   
 
10291..‘இந்தியம் களைந்து, இருங் கனி
    காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்,
    பழம் பதி புகாது,
நந்தியம் பதி இருந்தனன்,
    பரதன், நின் நாமம்
அந்தியும் பகல் அதனினும்
    மறப்பு இலன் ஆகி
194

உரை
   
 
பரத்துவாச முனிவர் இராமனைப் பாராட்டிக்கூற, இராமன் முனிவரைப் போற்றுதல்

10292..என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன்
    இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும்,
    குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித்
    தலை பத்தும் இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே
    யான்? ‘என நிகழ்தினனால்.
195

உரை
   
 
பரத்துவாசர் இராமனை நோக்கி ‘நீ விரும்பிய வரத்தைத் தருவேன் ‘எனக்கூற, இராமன் வானரங்கள் சென்ற விடமெல்லாம் வளம்பெற்று வாழும் வரத்தினை வேண்டிப்பெறுதல்

10293.‘மின்னை ஏய் உழையினானும்
    விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த
    நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி உன்தன்
    அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தர்
    யான் அலாது இல்லை ‘என்றான்.
196

உரை
   
 


10294..அவ் உரை புகலக் கேட்ட
    அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்!
    விளம்புகேன் கேட்டி வேண்டிற்று
எவ் வரம் எனினும் தந்தேன்
    இயம்புதி ‘எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி
    கவிக்குலம் பெற்று வாழ்க ‘.
197

உரை
   
 
10295.‘அரி இனம் சென்ற சென்ற
    அடவிகள் அனைத்தும், வானம்
சொரிதரு பருவம் போன்று,
    கிழங்கொடு கனிகாய் துன்றி,
விரிபுனல் செழுந்தேன் மிக்கு
    விளங்க என விளம்புக ‘என்றான்;
புரியும் மாதவனும், ‘அஃதே
    ஆக ‘எனப் புகன்றிட்டானால்.
198

உரை
   
 
பரத்துவாச முனிவர், அங்கு வந்தோர் அனைவர்க்கும் விருந்தளித்தல்

10296..அருந்தவன், ‘ஐய! நின்னொடு
    அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் ‘என்னா,
    விளங்கும் முத் தீயின் நாப்பண்
புரிந்து ஒர் ஆகுதியை ஈந்து
    புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு
    சேர வந்து இறுத்தது அன்றே.
199

உரை
   
 
அப்பொழுது இராமன் அனுமனை நோக்கி ஒன்று கூறத் தொடங்குதல்

10297..அரைசரே ஆதி ஆக,
    அடியவர் அந்தம் ஆக,
கரை செயல் அரிய போகம்
    துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி
    அறுசுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன்,
    அனுமனை விளித்துச் சொன்னான்.
200

உரை
   
 
10298.‘இன்று நாம்பதி ஏகுமுன்
    மாருதி! ஈண்டச்
சென்று தீது இன்மை செப்பி,
    அத் தீமையும் விலக்கி
நின்ற காலையின் வருதும் ‘என்று
    ஏயினன், நெடியோன்;
‘நன்று ‘எனா, அவன் மோதிரம்
    கைக்கொடு நடந்தான்.
201

உரை
   
 
அனுமன் விரைந்து வான்வழிச் செல்லுதல்

10299..தந்தை வேகமும், தனது
    நாயகன் தனிச்சிலையின்
முந்து சாயகக் கடுமையும்,
    பிற்பட முடுகி,
சிந்தை பின்வரச் செல்பவன்,
    குகற்கும் அச்சேயோன்
வந்த வாசகம் கூறி, மேல்
    வான்வழிப் போனான்.
202

உரை
   
 
கவிக்கூற்று

10300.இன்று இசைக்கு இடமாய இராகவன்
தனெ் திசைக் கருமச் செயல் செப்பினாம்;
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்.
203

உரை
   
 
நந்தியம்பதியில் பரதன் (10300-10304)

10301.நந்தியம் பதியின் தலை நாள் தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம் முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ.
204

உரை
   
 


10302.துன்பு உருக்கவும் சுற்றி உருக்கொணா
என்பு உருக்கும் தகைமையின் ஈட்டத்தான்
முன்பு உருக்கொண்டு ஒருவழி முற்றுறா
அன்பு உருக்கொண்டது ஆம் எனல் ஆகுவான்.
205

உரை
   
 


10303.நினைக்கவும் தடங்கண் இணை நீர்வர
இனத்த தண்டலை நாட்டிருந்தேயும் அக்
கனத்த கந்தமும் காயும் கனிகளும்
வனத்த அல்ல அருந்தலில் வாழ்க்கையான்.
206

உரை
   
 


10304.நோக்கின் தனெ்திசை
    அல்லது நோக்குறான்;
ஏக்குற்று ஏக்குற்று, ‘இரவி
    குலத்து உளான்
வாக்கில் பொய்யான்;
    வரும், வரும் ‘என்று உயிர்
போக்கிப் போக்கி,
    உழக்கும் பொருமலான்;
207

உரை
   
 
10305..உண்ணும் நீர்க்கும்
    உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி
    இராமன், திருமுடி
மண்ணும் நீர்க்கு
    வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஒர்
    கரை எங்கும் காண்கிலான்.
208

உரை
   
 
பரதன் இராமன் வருநாளை நினைத்தல்

10306.அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை நினைத்தனன் ஆம் அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்தநாள்.
209

உரை
   
 
இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்று சோதிடர் பரதனுக்குக் கூறுதல்

10307..யாண்டு வந்து இங்கு
    இறுக்கும் என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட
    வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த்தரு கென்ன,
    வந்து எய்தினார்,
‘ஆண்தகைக்கு இன்று
    அவதி ‘என்றார் அரோ.
210

உரை
   
 
குறித்த நாளில் இராமன் வாராமைக்கு வருந்திச்
சிந்தித்தல் (10307-10311)

10308.என்ற போதத்து இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்
கொன்ற போதத்து உயிர்ப்புக் குறைந்துளான்.
211

உரை
   
 


10309.மீட்டு எழுந்து விரிந்த செந்தாமரைக்
காட்டை வென்று எழுகண் கலுழிப்புனல்
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும் அவலத்து அழிந்தான் அரோ.
212

உரை
   
 


10310.‘எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும்
தனைப் பயந்தவள் துன்பமும் தாங்கி அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும்பகை உண்டு ‘என விம்மினான்.
213

உரை
   
 


10311.மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில்
ஏவர் கிற்பர் எதிர்நிற்க என்னுடைச்
சேவகற்கு? என ஐயமும் தேறினான்.
214

உரை
   
 
10312.‘என்னை “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க “ என்று
உன்னினான்கொல் உறுவது நோக்கினான்?
இன்னதே நலன் ‘என்று இருந்தான் அரோ.
215

உரை
   
 
பரதன் உயிர்துறக்க எண்ணுதல்.

10313.‘அனைத்தும் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க : இவ் வையம் புகுதுக
நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரோடும் வாங்குவேன்.
216

உரை
   
 
சத்துருக்கனை அழைத்தல்

10314.என்னப் பன்னி ‘இளவலை என் உழைத்
துன்னச் சொல்லுதிர் ‘என்னலும் தூதர்போய்
‘உன்னைக் கூயினன் உம்முன் ‘எனா முனம்
முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின் உளான்.
217

உரை
   
 
வந்து சத்துருக்கனிடம் பரதன் வரம் வேண்டுதல்

10315..தொழுது நின்ற தன்
    தம்பியைத் தோய்கணீர்
எழுது மார்பகத்து
    இறுகத் தழுவினான்
அழுது, ‘வேண்டுவது உண்டு
    ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்!
    தரற்பாற்று ‘என்றான்.
218

உரை
   
 
10316.“‘என்னது ஆகும்கொல் அவ் வரம்? ” என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது ‘என்றான்.
219

உரை
   
 
கேட்ட சத்துருக்கன் வருந்திச் சொல்லுதல் (10316-10319)

10317.கேட்ட தோன்றல் கிளர்தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்கா நின்றான்.
220

உரை
   
 


10318.விழுந்து, மேக்கு உயர்
    விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு
    என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்! ‘
    என்று அரற்றினான்
கொழுந்து விட்டு
    நிமிர்கின்ற கோபத்தான்.
221

உரை
   
 


10319.கானாள நிலமகளைக் கைவிட்டுப்
    போனானைக் காத்துப் பின்பு
போனானும் ஒருதம்பி; “போனவன்தான்
    வரும் அவதி போயிற்று “ என்னா
ஆனாத எரிபுக என்று அமைவானும்
    ஒருதம்பி; அயலே நாணாது,
யான் ஆம் இவ் அரசு ஆள்வென்?
    என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா
222

உரை
   
 
10320.“‘மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து
    வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல்நிற்கும் ‘‘ என்று அஞ்சி, புறத்து இருந்தும்
    அருந்தவமே தொடங்கினாயே!
“என்னின்பின் இவன் உளனாம் “ என்றே பின்
    அடிமையுனக்கு இருந்த தேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ்
    இருந்ததுவும் ஒக்கும் என்றான்.
223

உரை
   
 
பரதன் சத்துருக்கனுக்கு அமைதி கூறி எரிவளர்க்கக்
கட்டளையிடுதல்

10321..முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழுவெள்ளிக்
    கொழுநிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, அவன் இங்குத்
    தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின்
    இவ்வுலகை உலைய ஒட்டான்;
அத்திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும்
    அரசு; எரிபோய் அமைக்க ‘என்றான்
224

உரை
   
 
இச்செய்தி யறிந்து கோசலை பரதனை விலக்க விரைந்து வருதல்

10322.அப்பொழுதின் இவ் உரை சென்று, அயோத்தியினில்
    இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள்,
    வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை
    முடித்து ஒழிந்தால், மகனே! ‘என்னா,
வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள்
    கடிது ஓடி, விலக்க வந்தாள்.
225

உரை
   
 
கோசலை பரதனை அடைதல்

10323.மந்திரியர், தந்திரியர், வளநகரத்தவர்,
    மறையோர், மற்றும் சுற்றச்
சுந்தரியர் எனைப்பலரும் கைதலையில்
    பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதலாய இமையவரும்
    முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி,
    பரதனை வந்து அடைந்தார் அன்றே.
226

உரை
   
 
எரிபுகும் பரதனைக் கோசலை பற்றிக் கொள்ளுதல்

10324.விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து
    வீழ்ந்து அசைய மேனி தள்ள,
எரியமைக்கும் மயானத்தை எய்துகின்ற
    காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள்
    தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைந்த திருமனத்தான் அடிதொழுதான்;
    அவள்புகுந்து பற்றிக் கொண்டாள்.
227

உரை
   
 


10325.‘மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும்
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும் எண்ணில் அப் பெற்றியால்;
என் இழைத்தனை என்மகனே? ‘என்றாள்.
228

உரை
   
 


10326.‘நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி
பாயும்; மன் அருஞ் சேனையும் பாயுமால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் விழும்; உலகும் திரியுமால்.
229

உரை
   
 


10327.‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம் கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை ஊழி திரியினும் பேருமோ?
230

உரை
   
 


10328.‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?
231

உரை
   
 


10329..‘இன்று வந்திலனே
    எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை;
    உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்;
    பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது
    போய் ‘என்றாள்.
232

உரை
   
 


10330.‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழிவாழ்
பெருநிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ? கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்!
233

உரை
   
 
10331.“‘இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால்
பிறக்கையும் கடன் “ என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே! வலி ஆவதும்
துறக்கை தானும் என்றாள் மனம் தூய்மையாள்.
234

உரை
   
 
கோசலையின் சொல்லைப் பரதன் மறுத்துரைத்தல்
(10331-10333)

10332.“‘மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் ” எனல்;
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செம்மையும்
நைந்து போக உயிர்நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பன் ஆல்.
235

உரை
   
 


10333.‘யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்துபோய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கு இது இழுக்கு இல் வழக்கு அன்றோ?
236

உரை
   
 
10334..தாய் சொல் கேட்டலும்,
    தந்தைசொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப்
    பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்;
    யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன் இது,
    காட்டுவென், மாண்டு என்றான்.
237

உரை
   
 
பரதன் தீயினை நெருங்கி அதற்குப் பூசனை புரியும்போது அனுமன் வந்து தடுத்தல்

10335.என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோர் உடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான்.
238

உரை
   
 
10336.அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்று உரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.
239

உரை
   
 
அனுமன் பரதனுக்குக் கூறுவது (10336-10338)

10337.ஆக்கி மற்று அவன் ஆய்மலர்த் தாள்களைத்
தாக்கத் தன்தலை தாழ்த்து வணங்கி கை
வாக்கின் கூடப் புதைத்து ‘ஒருமாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் ‘எனச் சொல்லினான்.
240

உரை
   
 


10338.‘இன்னம் நாழிகை எண் ஐந்து உளது ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லை எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இவ் எரியில் முடிவெனால்.
241

உரை
   
 
10339.ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்
நின்று தாழ்த்து அருள் நேமிச் சுடர் குணக்
குன்று தோன்றளவும்; இது குன்று மேல்
பொன்று நீ இவ் அனலினில் பொய்யிலாய்.
242

உரை
   
 
பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கநேர்ந்தமை கூறுதல்

10340.‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ?
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்.
243

உரை
   
 
அனுமன் அடையாள மோதிரத்தைக் காட்டுதல்

10341.‘அண்டர் நாதன் அருளின் அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோதறு சிந்தையாய்!
கண்டு கொண்டு அருள்வாய் ‘எனக் காட்டினான்.
244

உரை
   
 
மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

10342.காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
ஊட்டிய வல்விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்ததாம் அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும்.
245

உரை
   
 
10343.அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை.
246

உரை
   
 
மோதிரம் வாங்கிய பரதன் மகிழ்ச்சி (10343-10348)

10344.மோதிரம் வாங்கி தன்முகத்தின்மேல் அணைத்து
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? ‘எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்.
247

உரை
   
 


10345.ஆதி வெந்துயர் அல்லால் அருந்தல் இன்மையால்
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
‘ஏதிலன் ஒருவன்கொல் ‘என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே.
248

உரை
   
 


10346..அழும்; நகும்; அனுமனை
    ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும்; வெங்
    களி துளக்கலால்,
விழும் அழிந்து; ஏங்கும்; போய்
    வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன்
    தடக்கை கொட்டுமால்.
249

உரை
   
 


10347.‘ஆடுமின் ஆடுமின்! ‘என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின் ஓடுமின்! ‘என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின் பாடுமின்! ‘என்னும்; பாவிகாள்!
‘சூடுமின் சூடுமின் தூதன் தாள்! ‘எனும்.
250

உரை
   
 


10348.‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர் இனி ‘எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டலங்கள் கூடுற
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும் பாடுமால்.
251

உரை
   
 
10349..வேதியர்தமைத் தொழும்;
    வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும்;
    தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது
    இருக்கும்; நிற்குமால்;
காதல் என்றதுவும் ஓர்
    கள்ளில் தோற்றிற்றே.
252

உரை
   
 
பரதன் அனுமனைப் பாராட்டி ‘‘நீயார்? ‘என வினவுதல(10349- 10350)

10350.அத்திறத்து ஆண்தகை அனுமன் தன்னை ‘நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன் மூர்த்தியை
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் ‘என்றான்.
253

உரை
   
 
10351..மறையவர் வடிவு கொண்டு
    அணுக வந்தனை;
இறைவரில் ஒருவன் என்று
    எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச்
    சொல்லு, சொல்! “ என்றான்;
அறை கழல் அனுமனும்
    அறியக் கூறுவான்.
254

உரை
   
 
அனுமன் தன் வரலாற்றைக் கூறுதல்(10351-10352)

10352.காற்றினுக்கு அரசன்பால்
    கவிக் குலத்தினுள்
நோற்றுளாள் வயிற்றின் வந்து
    உதித்து, நும்முனாற்கு
ஏற்றிலா அடித்தொழில்
    ஏவலாள் ஆனேன்;
மாற்றினென் உரு, ஒரு
    குரங்கு, மன்ன! யான்.
255

உரை
   
 
அனுமன் தன் பெருவடிவைக் காட்டுதல்

10353.‘அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு ‘எனா
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முந்துவான்.
256

உரை
   
 
அனுமனது பெருவடிவு கண்டோர் அதிசயமும் அச்சமும் அடைதல்

10354.வெஞ்சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும்
‘எஞ்சல் இல் அதிசயம் இது’என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென
அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால்.
257

உரை
   
 
பரதன் அனுமனது பெருவடிவைச் சுருக்கிக் கொள்ள வேண்டுதல்

10355.‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியின் சூழ்வர
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து ‘என மன்னன் வேண்டினான்.
258

உரை
   
 
அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்(10355-10356)

10356.சுருக்கிய உருவனாத் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனுக்கு ஐயன் அன்பினால்
பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின்
வருக்கமும் வரம்பு இல நனி வழங்கினான்.
259

உரை
   
 
10357.கோவொடு தூசு நல் குல மணிக்குலம்
மாவொடு கரிக்குலம் வாவு தேர் இனம்
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
ஏவரும் சிலை வலான் யாவும் நல்கினான்.
260

   
 
இராமனை எதிர்கொள்ள நகர மக்களைப் புறப்படச் செய்யுமாறு பரதன் சத்துருக்கனிடம் சொல்லுதல்

10358.இளவலை, “‘அண்ணலுக்கு
    எதிர் கொள்க “ என்று, நம்
வளைமதில் அயோத்தியில்
    வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு “ எனக்
    கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம்
    அறைவிப்பாய் ‘என்றான்.
261

   
 
நகரை அணிசெய்கென மக்களுக்குச் செப்புமாறு சத்துருக்கனுக்குப் பரதன் கூறுதல் (10358-10359)

10359.“‘தோரணம் நட்டு மேல்துகில் பொதிந்து நல்
பூரணப் பொற்குடம் பொலிய வைத்து நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீரணி அணிக! “ எனச் செப்புவாய் ‘என்றான்.
262

   
 
10360.‘பரத்துவன் உறைவிடத்து
    அளவும், பைம்பொன் நீள்
சிரத்தொகை மதில் புறத்து
    இறுதி சேர்தர,
வரத்தகு தரள மென்
    பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா
    புகறி, போய் ‘என்றான்
263

   
 
சத்துருக்கன் பரதனது கட்டளையைச் சுமந்திரனுக்கு அறிவித்தல்

10361.என்றலும் அவனடி
    இறைஞ்சி ஏகி, அக்
குன்று உறழ் வரிசிலைக்
    குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன்,
    நவை இல் செய்கையன்,
தன்துணைச் சுமந்திரற்கு
    அறியச் சாற்றினான்.
264

   
 
சுமந்திரன் வள்ளுவர்க்குக் கட்டளையிடுதல்

10362.அவ்வுரை கேட்டலும் அறிவின் வேலையான்
கவ்வை இல் அன்பினில் களிக்கும் சிந்தையான்
‘வெவ் வெயில் புரைமணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று அறை பறை எற்றுக ‘என்றிட.
265

   
 
வள்ளுவன் முரசறைதல்

10363.‘வானையும் திசையையும் கடந்த வான்புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மாநகர்த்
தானையும் அரசரும் எழுகதான் ‘என
யானையில் வள்ளுவர் முரசம் எற்றினார்.
266

   
 
முரசொலி கேட்ட நகர மக்கள் ஆரவாரித்துக் கொண்டு புறப்படுதல்

10364.முரைசொலி கேட்டலும் முழங்கு மாநகர்
அரைசரும் மாந்தரும் அந்தணாளரும்
கரைசெயல் அரியதோர் உவகை கைதர
திரை செறி கடல் என எழுந்து சென்றதால்.
267

   
 
அம்முரசொலியின் சிறப்பு

10365.‘அனகனை எதிர்கொள்க ‘என்று,
    அறைந்த பேரி, நல்
கனகம் நல்கூர்ந்தவர்
    கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என
    முன்னம் சாற்றிய
வனைகடிப் பேரியும்,
    ஒத்த ஆம் அரோ.
268

   
 
அறுபதினாயிரம் அக்குரோணி சேனையும் நகரமாந்தரும் இராமனை வரவேற்க மகிழ்ச்சியோடு போதல்

10366.அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும்
செறிநகர் மாந்தரும் தரெிவை மார்களும்
உறுபொருள் எதிர்ந்தனெ உவந்து போயினார்.
269

   
 
தாயர் மூவரும் சிவிகையிற் செல்லப் பரதன் அனுமனது கையைப் பற்றிச் செல்லுதல்

10367.அன்னையர் மூவரும் அமரர் போற்றிட
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்
தன் நிகர் முனிவனும் தமருஞ் சூழ்தர
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா.
270

   
 
பரதன் இராமனது பாதுகைகளையே மகுடமாகச் சூடிக்கொண்டு செல்லுதல்

10368.திருவடி இரண்டுமே செம்பொன் மௌலியா
இருபுறம் சாமரை இரட்ட ஏழ்கடல்
வெருவரும் முழக்கு என வேதம் ஆர்த்து எழ
பொரு அரு வெண்குடை நிழற்றப் போயினான்.
271

   
 
சூரியன் மறைதல்

10369.எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை
வில்லியை எதிர்கொள பரதன் மீச்செல்வான்
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே.
272

   
 
இராமன் காட்டில் தங்கிச் செய்த செயல்களைப் பற்றிக் கூறுமாறு அனுமனைப் பரதன் வேண்டுதல்

10370.அவ்வழி மாருதி அம்கை பற்றிய
செவ்வழி உள்ளத்தான் ‘திருவின் நாயகன்
செவ்வழி உறைந்த அச்செயல் எலாம் விரித்து
இவ்வழி எமக்கு நீ இயம்புவாய் ‘என்றான்.
273

   
 
அனுமன் இராமனது செயல்களைச் சொல்லுதல்
(10370-10397)

10371.என்றலும் மாருதி தொழுது ‘இங்கு எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மாநகர்
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ?
274

   
 
10372.சித்திர கூடத்தைத் தீர்ந்த பின் சிரம்
பத்துடையவனுடன் விளைத்த பண்பெலாம்
இத்தலை அடைந்ததே இறுதியாம் என
வித்தகத் தூதனும் விரிக்குஞ் சிந்தையான்.
275

உரை
   
 
விராதன் வதை

10373.‘குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான்
தனெ்றிசைச் சித்திர கூடம் தீர்ந்தபின்
வன்திறல் விராதனை மடித்து மாதவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான்.
276

உரை
   
 
தண்டக வனத்துத் தங்குதல்

10374.‘ஆங்கு உறை தபோதனர்,
    “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை,
    நீதியோய்! ‘‘ என,
தீங்கு செய்தவர்களைச்
    செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத்துயர்,
    வாய்மையால் ‘என்றான்.
277

உரை
   
 
அகத்திய முனிவர் வரவேற்பு

10375.‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி அப்புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான்
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர.
278

உரை
   
 
அகத்தியன் வில் முதலியன கொடுத்தல்

10376.குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடம் கணான்தனை எதிர் தழுவி சாபமும்
கடுங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று
இடம்படு சுரிகையும் சேர ஈந்தனன்.
279

உரை
   
 
சடாயுவைக் கண்டு பஞ்சவடி யடைதல்

10377.அப்புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன் தானும் போய்
மைப் பொழில் துறு பஞ்சவடியின் வைகினார்.
280

உரை
   
 
சூர்ப்பணகை மூக்கறுபடல்

10378..பல்பகல் இறந்த பின்றை,
    பாதக அரக்கி தோன்றி,
மெல்கிய இடையினாளை
    வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி,
    அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்;
    மறித்து, அவள் கரற்குச் சொன்னாள்.
281

உரை
   
 
கரதூடணர் வதை

10379.‘கரனொடு திரிசிராவும்,
    கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார்,
    எழுந்து, வெஞ்சேனையோடும்
விரவினர்; ஐயன் செங்கை
    வில்லினை நோக்கு முன்பு ஓர்
எரிதவழ் பஞ்சின் உக்கார்;
    அரக்கியும் இலங்கை புக்காள்.
282

உரை
   
 
இராவணன் சீதையைக் கவர்தல்

10380.‘இருபது தடக்கையான்மாட்டு
    இசைத்தலும் எழுந்து, பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக
    உழை ஒன்று ஏவி,
தருபதம் சமைந்த முக்கோல்
    தாபத வடிவங் கொண்டு
திருவினை நிலத்தொடு ஏந்தி,
    தனெ்திசை இலங்கை புக்கான
283

உரை
   
 
இறக்கும் நிலையிலுள்ள சடாயுவை இராமன் காண்டல்

10381.‘போகின்ற காலை, ஏற்ற
    சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை
    வெஞ்சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்
    கொன்று, இளவலோடு
பாகின்ற சீர்த்தி அண்ணல்
    தந்தையைப் பரிவின் கண்டான்.
284

உரை
   
 
கவந்தனை வதைத்துச் சவரிபூசனையைக் கொள்ளுதல்

10382.‘அன்னவன் தனக்கு வேண்டும்
    அருங்கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித்
    தனெ்திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை
    உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத
    சவரி பூசனையும் கொண்டான்.
285

உரை
   
 
வாலிவதை

10383..‘ஆங்கு அவள்தனது சொல்லால்,
    அருக்கன்மா மகனை அண்மிப்
பாங்குற நட்டு, “வாலி
    பருவரல் கெடுப்பேன் “ என்னா,
ஓங்கிய மரமும் வாலி
    உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம்
    அரசொடும் அருளின் ஈந்தான்.
286

உரை
   
 
மாரிக்காலத்திற்குப் பின் சுக்கிரீவன் சேனையோடு இராமனை அடைதல்

10384.‘கால மா மாரி நீங்க,
    கவயனோடு இடபன், காந்து
நீலன், மாமயிந்தன், சாம்பன்,
    சதவலி, பனசன், நீடு
வாலி மாமைந்தன், என்றிவ்
    வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ
    அடைந்தனன் எங்கள் கோமான்.
287

உரை
   
 
சுக்கிரீவன் வானர சேனைக்குக் கட்டளையிடுதல்

10385.‘எழுபது வெள்ளத்து உற்ற
    குரங்கினம் எழுந்து பொங்கி,
அழுவநீர் வேலை என்ன
    அடைந்துழி, அருக்கன் மைந்தன்
தழுவிய திசைகள் தோறும்
    தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப்
    போக்கினன் திருவை நாடி.
286

உரை
   
 
சீதையைக்கண்டு சொன்னதும் வானரப்படை தனெ்கடற் கரையில்வந்து தங்குதல்

10386..தனெ்திசை இரண்டு வெள்ளம்
    சேனையும் வாலி சேயும்
வன்திறல் சாம்பனோடு
    வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்குத்
    திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப்
    பெரும்படை இறுத்தது அன்றே
289

உரை
   
 
10387.‘அறிவினுக்கு அறிவு போல்வான்
    வீடணன், அலங்கல் தோளான்,
செறிபுயத்து அரக்கன் தம்பி,
    “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன நின் வாழ்நாள் ‘‘
    என்றுநின்று உரைப்பச் சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து,
    கருணையான் சரணம் பூண்டான்.
290

உரை
   
 
வருணன் அடைக்கலம்

10388..‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி,
    அரசொடு முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை
    அழைத்திட, பரிவு இலாமை
தாங்கினன் சிறிது போது,
    தாமரை நயனம் சேப்ப,
ஓங்குநீர் ஏழும் அன்னான்
    உடலமும் வெந்த அன்றே.
291

உரை
   
 
சேது கட்டி இலங்கை புகுதல்

10389..‘மற்று அவன் அவயம் என்ன
    மலர்ச்சரண் அடைந்த வேலை
வெற்றி வானரர்கள் பொங்கி,
    வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி,
    மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார்,
    வானவர் பயங்கள் தீர்ந்தார்.
292

உரை
   
 
இராவண வதம்

10390.‘மலையினை எடுத்த தோளும்,
    மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒருபத்தும் சிந்தி,
    தம்பிதன் தோளும் தாளும்
கொலைத் தொழில் அரக்கராயோர்
    குலத்தொடும் தலத்து வீழ
சிலையினை வளைவித்து, ஐயன்
    தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.
293

உரை
   
 
இந்திரசித்து வதை

10391..‘இலக்குவன் பகழி ஒன்றால்
    இந்திரசித்து என்று ஓதும்
விலக்கரு வலத்தினானும்
    இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்
அலக்கண் உண்டு உழலும் தேவர்
    அலர்மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும்
    உடற்குறை ஆடல் கண்டார்.
294

உரை
   
 
மாண்ட அரக்கர்க்கு வீடணனை இறுதிக்கடன் செய்யச் செய்தல்

10392.‘தேவரும் முனிவர் தாமும்,
    சித்தரும் தரெிவை மாரும்
மூவகை உலகு உேளாரும்,
    முறைமுறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும்,
    வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோர்க்கு
    இயற்றுதி கடன்கள் “ என்றான்.
295

உரை
   
 
இராமன் சீதையைச் சினந்துபின் தணிதல்

10393.‘நான்முகன், விடையை ஊரும்
    நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள
    வானவர் தொழுது போற்ற
ஊன்முகம் கெழுவு வேலாய்!
    உம்பர் நாயகியைச் சீறித்
தேன்முகம் மலரும் தாரான்
    அரிசொலச் சீற்றம் தீர்ந்தான்.
296

உரை
   
 
தயரதன் வருகையும் வரமருளுதலும்

10394.‘மெய்யினுக்கு உயிரை ஈந்த
    வேந்தர்கோன் விமானத்து எய்த,
அய்யனும் இளைய கோவும்
    அன்னமும் அடியில் வீழ,
கய்யினால் பொருந்தப் புல்லி,
    கண்ணின் நீர்க்கலசம் ஆட்டி,
“செய்வரம் அருளுக “ என்றான்;
    திருவின் நாயகனும் கொண்டான்.
297

உரை
   
 
வரங்கொடுத்துத் தயரதனும் அமரரும் செல்லுதல்

10395.“என்னை, ‘நன் கருணை தன்னால் ஈன்று
    எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல்
    ஆக ‘‘ என அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை,
    வானரம் வரழ்வு கூர,
பொன்நெடு நாட்டில் உள்ளார்
    வரம்பல வழங்கிப் போனார்.
298

உரை
   
 
வீடணன் விமானம் ஈதல்

10396.‘வெள்ளம் ஓர் ஏழுபத்தும்,
    விலக்கரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும்,
    ஒற்றை ஆழி
வள்ளல்தன் மகனும், உள்ளம்
    மகிழ்வுற விமானம் ஈந்தான்
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன்
    இலங்கை வேந்தன்.
299

உரை
   
 
இராமன் துணைவரோடு விமானத்தில் ஏறிப் பரத்துவன் ஆசிரமத்தையடைதல்

10397..‘ஆரியன் பின்னை நின்னை
    அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும் தொல்லைத் துணைவரும்
    இலங்கை வேந்தும்,
பேரியல் படையும் சூழ,
    பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறிப்
    பரத்துவன் இருக்கை சேர்ந்தான
300

உரை
   
 
அனுமன் தன்னை ஆழிகொடுத்து இராமன் அனுப்பியதைக் கூறியது

10398.‘அன்பினால் என்னை, நின்பால்
    ஆழியும் காட்டி “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி ‘‘ என்று
    துரந்தனன், தோன்றல் ‘என்று,
முன்பினால் இயன்ற எல்லாம்
    மொழிந்தனன் முதுநீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும்
    எரிக்கு உணவாக வைத்தோன்.
301

உரை
   
 
பரதன் தன்னிலை நினைந்து இரங்குதல்

10399..காலின்மா மதலை சொல்ல,
    பரதனும் கண்ணீர் சோர,
வேலி மா மதில்கள் சூழும்
    இலங்கையில் வேட்ட கொண்ட
நீல மா முகில்பின் போனான்
    ஒருவன்; நான் நின்று நைவேன்
போலுமால்; இவைகள் கேட்பேன்;
    புகழுடைத்து, அடிமை மன்னோ.
302

உரை
   
 
பரதன் அனுமனது கைபற்றிக்கொண்டு கங்கையைக் சார்தல்

10400..என்று அவன் இரங்கி ஏங்கி,
    இருகணும் அருவி சோர
வன்திறல் அனுமன் செங்கை
    வலக்கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளின் ஊடு,
    செறிபுனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரான்
    குணகடல் தோன்றும் முன்னர்.
303

உரை
   
 
சூரியன் உதித்தல்

10401..இராவணன் வேட்டம்போய் மீண்டு,
    எம்பிரான், அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவின்
    தையலும் மகிழச் சூடும்
அராவுபொன் மௌலிக்கு ஏய்ந்த
    சிகாமணி குணபால் அண்ணல்
விராவுற எடுத்தால் என்ன
    வெய்யவன் உதயம் செய்தான்.
உரை
   
 
இராமன் வருகையில் ஐயங்கொண்டு பரதன் அனுமனை வினவுதல் (10401-10403)

10402..காலைவந்து இறுத்த பின்னர்க்
    கடன்முறை கமலக் கண்ணன்
கோலநீள் கழல்கள் ஏத்தி,
    குரக்கினத்து அரசை நோக்கி
சாலவும் கலைகள் வல்லோய்!
    தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன்தன்
    மொழிக்கு எதிர்மொழியும் உண்டோ?
305

உரை
   
 


10403.‘எழுபது வெள்ளம் சேனை
    வானரர் இலங்கை வேந்தன்
முழுமுதல் சேனை வெள்ளம்,
    கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவநீர் வேலை அன்ன
    அரவம் இன்று ஆக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான் “
    என்று உரைத்தது, வீர! என்றான்.
306

உரை
   
 
10404.‘ஓசனை இரண்டே உள்ள,
    பரத்துவன் உறையுஞ் சோலை;
வீசுதணெ் திரையிற்று ஆய
    வெள்ளமோர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன்
    கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம்கோன்
    எங்குளன், பெரும! ‘என்றான்.
307

உரை
   
 
அனுமான் கூறிய விடை (10404-10405)

10405.பரதன் அஃது உரைத்தலோடும்
    பணிந்து மாருதியும் சீர்சால்
விரத மாதவத்து மிக்கோய்!
    விண்ணுேளார் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளித்த அந்த
    வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித்
    துயின்றது தானை என்றான்
308

உரை
   
 


10406.‘வானவர் கொடுக்க வந்த
    வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும்
    கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே,
    கவிக்குலம் அவற்றை மாந்தி
ஆனனம் மலர்ந்தது இல்லை
    யாகும் : நீ துயரல், எந்தாய்!
309

உரை
   
 
10407.‘இனி ஒரு கணத்தின், எம்கோன்
    எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனிவரும் கண்ணின் நீயே
    பார்த்தி ‘என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த
    முளரி அம் கண்ணன், வண்ணக்
குனிசிலைக் குருசில், செய்தது
    இற்று எனக் குணிக்கல் உற்றாம்.
310

உரை
   
 
குகன் வருதல்

10408..அருந்தவன் சுவைகள் ஆறோடு
    அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந்தடங் கண்ணியோடும்
    களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி நின்ற
    வேலையின், வேலை போலும்
பெருந்தடந் தானையோடும்,
    கிராதர்கோன் பெயர்ந்து வந்தான்.
311

உரை
   
 
இராமன் குகனைத் தழுவிக்கொள்ளுதல்

10409.தொழுதனன்; மனமுங் கண்ணும்
    துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன
    அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில்
    தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழுவிலர், வலியர் அன்றோ,
    மக்களும் மனையும்? ‘என்றான்.
312

உரை
   
 
குகன் கூறும் விடை

10410..‘அருள் உனது உளது, நாயேற்கு;
    அவரெலாம் அரிய ஆய
பொருளலர்; நின்னை நீங்காப்
    புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தரெுள்தரும் இளைய வீரன்
    செய்வன செய்கலாதேன்;
மருள்தரும் மனத்தினேனுக்கு
    இனிது அன்றோ, வாழ்வு மன்னோ? ‘
313

உரை
   
 
குகன் இலக்குவனையும் சீதையையும் வணங்குதல்

10411..ஆயன பிறவும் பன்னி
    அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னோ;
    பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி ‘என்ன,
    புளிஞர்கோன் இளவல் பொன்தாள்
மேயினன் வணங்கி, அன்னை
    விரைமலர்த் தாளின் வீழ்ந்தான்
314

உரை
   
 
குகனை மற்றவர்கட்கு இராமன் அறிமுகப்படுத்தல்

10412.தொழுது நின்றவனை நோக்கி,
    துணைவர்கள் தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன்
    மொழிகுவான் முதுநீர்க் கங்கை
தழுவு இருகரைக்கும் நாதன்;
    தாயினும் உயிர்க்கு நல்லன்
வழுவு இலா எயினர் வேந்தன்;
    குகனெனும் வள்ளல் என்றான்
315

உரை
   
 
சூரியன் மறைதல்

10413..அண்ணல் அஃது உரைத்தலோடும்,
    அரிக்குலது அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும்
    இனிதுறத் தழுவி, நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம்
    கங்குலால் பொதிவான் போல
வண்ணமால் வரைக்கும் அப்பால்
    மறைந்தனன், இரவி என்பான்.
316

உரை
   
 
10414..அலங்கல் அம் தொடையினானும்,
    அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு
    துயிலுற, புணரி போல
இலங்கிய சேனை சூழ,
    இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்;
    கதிரவன் உதயம் செய்தான்.
317

உரை
   
 
இராமன் சீதையோடும் சேனையோடும்
விமானத்தில் செல்லுதல்

10415.கதிரவன் உதிப்ப, காலைக் கடன்
    கழித்து இளவலோடும்
அதிர்பொலன் கழலினான் அவ்
    அருந்தவன் தன்னை ஏத்தி,
விதிதரு விமானம் மேவி,
    விளங்கிழையோடும், கொற்றம்
முதிர்தரு சேனை யோடும்
    முனிமனம் தொடரப் போனான்.
318

உரை
   
 
விமானத்திலுள்ேளார்க்கு அயோத்தி நகரின்
மதில் தோன்றுதல்

10416.தாவி வான் படர்ந்து மானம்
    தடை இலது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச்
    செருக்கிய காமச் செவிவி,
ஓவியம் உயிர் பெற்றென்ன,
    உம்பர் கோன்நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும்
    மதில் புறம் தோன்றிற்று அன்றே.
319

உரை
   
 
10417..பொன்மதில் கிடக்கை சூழப்
    பொலிவுடை நகரம் தோன்ற,
நன்மதிக் கிழவர் தம்மை
    நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல்மதித்து ஒருவராலும்
    சொலப்படா அயோத்தி தோன்றிற்று ‘
என்னலும், கரங்கள் கூப்பி
    எழுந்தனர் இறைஞ்சி நின்றார்.
320

உரை
   
 
புட்பகவிமானம் தரையிலுள்ள அனுமன் முதலியோர்க்குத் தோன்றுதல்

10418.அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினால் என
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினான்.
321

உரை
   
 
அனுமன் பரதனுக்கு இராமனைக் காட்டிக் கூறுதல (10418 - 10419)

10419.‘அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக்
கண்ணனும் வானரக் கடலும் கற்புடைப்
பெண் அருங் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ணவில் குமரனும் வருகின்றார்களை.
322

உரை
   
 
10420.‘ஏழ் இரண்டு ஆகிய
    உலகம் ஏறினும்
பாழ்புறம் கிடக்குறு
    படியது ஆயது ஓர்
சூழ் ஒளி மானத்துத்
    தோன்றுகின்றனன்.
ஊழியோன் ‘என்று கொண்டு
    உணர்த்தும் காலையே.
323

உரை
   
 
இராமனை எதிர்கொள்வோர் ஆர்ப்பு

10421..பொனொளி மேருவின்
    பொதும்பில் புக்கது ஓர்
மினொளி மேகம்போல்
    வீரன் தோன்றலும்,
மன் எதிர் வருநர்கள்
    ஆர்ப்பு, இராவணன்
தனெ்நகர்க்கு அப்புறத்து
    அளவும் சென்றதால்.
324

உரை
   
 
பரதன் இராமனைக் காணுதல்

10422.ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென
கானிடைப் போகிய கமலக் கண்ணனை
தானுடை உயிரினை தம்பி நோக்கினான்.
325

உரை
   
 
10423.கெட்ட வான்பொருள் வந்து
    கிடைப்ப முன்பு தாம்
பட்ட வான்படர் ஒழிந்தவரின்
    பையுள் நோய்
சுட்டவன் மானவன்
    தொழுதல் உன்னியே
விட்டனன் மாருதி
    கரத்தை மேன்மையான்
326

உரை
   
 
அனுமன் விமானத்திலுள்ள இராமன் முன் நிற்றல்

10424..அக்கணத்து அனுமனும்
    அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச்
    செல்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத்
    தாழ்ந்து முன் நின்றான்
உக்குறு கண்ணநீர்
    ஒழுகும் மார்பினான்.
327

உரை
   
 
அனுமன் பரதனுக்குத் தரெிவித்ததை இராமனிடம் சொல்லுதல்

10425..உருப்பு அவிர் கனலிடை
    ஒளிக்கல் உற்ற இப்
பொருப்பு அவிர் தோளனைப்
    பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின்
    வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின
    உலகம் யாவையும்.
328

உரை
   
 
இராமன் அனுமனைப் பாராட்டுதல்

10426.தீவினை யாம் பல செய்யத் தீர்வு இலா
வீ வினை முறை முறை விளைவ மெய்ம்மையால்;
நீ அவை துடைத்து நின்று அளிக்க நேர்ந்ததால்
யாயினும் அன்பினாய்! யாம் செய் மாதவம்.
329

உரை
   
 
இராமன் அனுமனைத் தழுவுதல்

10427..என்று உரைத்து அனுமனை
    இறுகப் புல்லினான்,
‘ஒன்று உரைத்து இறுப்பது என்,
    உனக்கும், எந்தைக்கும்,
இன்துணைத் தம்பிக்கும்
    யாய்க்கும்? ‘என்றனன்
குன்று இணைத்தன உயர்
    குவவுத் தோளினான்.
330

உரை
   
 
பரதன் தோன்றுதல்

10428.ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன்
ஊடு உயிருண்டு என உலர்ந்த யாக்கையன்
பாடு உறு பெரும்புகழ்ப் பரதன் தோன்றினான்.
331

உரை
   
 
அனுமன், விமானத்துள் அமர்ந்திருக்கும் இராமனுக்குப் பரதனைக் காட்டுதல்

10429.தோன்றிய பரதனைத் தொழுது தொல் அறச்
சான்று என நின்ற நின் இளைய தம்பியை
வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனைக் காண்டி ஈண்டு ‘எனா.
332

உரை
   
 
இராமன் பரதனைக் காண்டல்

10430.காட்டினன் மாருதி;
    கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தரெியலான்
    நிலைமை சொல்லுங்கால்
ஓட்டிய மானத்துள்
    உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன
    தன்மை கூடினான்.
333

உரை
   
 
விமானம் நிலத்தைச்சேர்தல்

10431..அவ்வயின், ‘அயோத்தி வைகும்
    சனமொடும் அக்குரோணி
தவ்வல் இல் ஆறுபத்தாயிரமோடும்
    தாயரோடும்,
இவ்வயின் அடைந்து உேளாரைக்
    காண்பென் ‘என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து
    சேர்ந்தது அவ் விமானம் தானும்.
334

   
 
நிலத்தைச் சேர்ந்த விமானத்தைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி

10432.எவ்வயின் உயிர்கட்கும்,
    இராமன் ஏறிய
செவ்விய புட்பகம்
    நிலத்தைச் சேர்தலும்,
அவ் அவர்க்கு அணுகிய
    அமரர்நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று
    இசைக்கல் ஆயதால்.
335

   
 
இராமனைக் கண்ட தாயர் முதலியோர் நிலை (10432-10435)

10433.தாயாருக்கு அன்று சார்ந்த
    கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம்
    மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையர்க்குக் கண்ணுள்
    ஆடு இரும் பாவை ஒத்தான்;
ஓய்வுற உலந்த யாக்கைக்கு
    உயிர்புகுந்தாலும் ஒத்தான்.
336

உரை
   
 


10434..எளிவரும் உயிர்கட்கு எல்லாம்
    ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளிவரும் மனத்தோர்க்கு எல்லாம்
    அரும்பத அமுதம் ஒத்தான்;
ஒளிவு அறப் பிறந்தது ஒத்தான்,
    உலகினுக்கு; ஒண்கணார்க்கு,
தெளிவரு களிப்புச் செய்யும்
    தேம்பிழித் தேறல் ஒத்தான்.
337

உரை
   
 


10435..ஆவி அங்கு அவன் அலால் மற்று
    இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும்,
    நகரமும், கவன்று வாழும்
மா இயல் ஒண்கணாரும்,
    மைந்தரும் வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன
    ஓங்கினர் உணர்வு பெற்றார்.
338

உரை
   
 
10436.சுண்ணமும், சாந்தும், நெய்யும்,
    சுரிவளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலினமா
    விலாழியும், எண் இல் யானை
வண்ணவார் மத முந்நீரும்
    மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக்
    கடலையும் கடந்த அன்றே.
339

உரை
   
 
வசிட்டன் முதலியோர் விமானத்தில் ஏற இராமன் வசிட்டனை வணங்குதல்

10437..அனைவரும் அனையர் ஆகி
    அடைந்துழி அருளின் வேலை
தனை இனிது அளித்த தாயர்
    மூவரும், தம்பி மாரும்,
புனையும் நூல் முனிவன் தானும்,
    பொன் அணி விமானத்து ஏற,
வனைகழல் குரிசில் முந்தி,
    மாதவன் தாளில் வீழ்ந்தான்.
340

உரை
   
 
வசிட்டன் இராம இலக்குவரை வாழ்த்துதல்

10438.எடுத்தனன் முனிவன், மற்று அவ்
    இராமனை ஆசி கூறி,
அடுத்துள துன்பம் நீங்க,
    அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன்
    வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் முன்போல்
    வாழ்த்தினான் ஆசி கூறி.
341

உரை
   
 
இராமன் தாயரை வணங்குதல்

10439.கய்கயன் தனையை முந்தக்
    கால் உறப் பணிந்து, மற்றை
மொய்குழல் இருவர் தாளும்
    முறைமையின் வணங்கும் செங்கண்
அய்யனை, அவர்கள் தாமும்
    அன்புறத் தழுவி, தம்தம்
செய்ய தாமரைக்கண் நீரால்
    மஞ்சனத் தொழிலும் செய்தார்.
342

உரை
   
 
சீதையும் இலக்குவனும் வணங்குதல்

10440.அன்னமும் முன்னர்ச் சொன்ன
    முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன்நிகர் இலாத வென்றித்
    தம்பியும் தாயர் தங்கள்
பொன்னடித் தலத்தில் வீழத்,
    தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே;
    வாழி! ‘என்று ஆசி சொன்னார்.
343

உரை
   
 
தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல் (10440-10441)

10441.சேவடி இரண்டும் அன்பின்
    அடி உறை ஆகச் சேர்த்தி,
பூவடி பணிந்து வீழ்ந்த
    பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும்
    உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத்
    தழுவினன், அழுது சோர்வான்.
344

உரை
   
 


10442.தழுவினன் நின்ற காலை
    தத்திவீழ் அருவி காலும்
விழுமலர்க் கண்ணீர் மூரி
    வெள்ளத்தால் முருகற் செவ்வி
வழுவுற, பின்னி மூசு
    மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து,
    கன்றுகாண் கறவை அன்னான்.
345

உரை
   
 
இலக்குவன் பரதனைப் பணிதல்

10443..அனையது ஒர் காலத்து, அம்பொன்
    சடைமுடி அடியது ஆக,
கனைகழல் அமரர் கோமாற்
    கட்டவன் படுத்த காளை
துனைபரி, கரி தேர், ஊர்தி
    என்றிவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான்
    விரைமலர்த் தாளின் வீழ்ந்தான்.
346

உரை
   
 


10444..ஊடுறு கமலக் கண்ணீர்
    திசைதொறும் சிவிறி ஓட
தாள்தொடு தடக்கை ஆரத்
    தழுவினன் ‘தனிமை நீங்கிக்
காடு உறைந்து உலைந்த மெய்யோ,
    கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ,
    நைந்தது? ‘என்று உலகம் நைய.
347

உரை
   
 
சத்துருக்கன் வணக்கம்

10445.மூவர்க்கும் இளைய வள்ளல்
    முடி மிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும்,
    செறிகழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்;
    எடுத்தனர் பொருந்தப் புல்ல,
வாவிக்குள் அன்னம் அன்னாள்
    மலர் அடித்தலத்து வீழ்ந்தான்.
348

உரை
   
 
இராமன் சத்துருக்கனைத் தழுவிக்கொண்டு தன் தம்பிமார்கட்குச் சுக்கிரீவன் முதலிய நண்பர்களை அறிமுகப்படுத்தல்

10446.பின் இணைக் குரிசில் தன்னைப்
    பெருங்கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத்
    தழுவி, அத்தம்பி மாருக்கு
இன் உயிர்த் துணைவர் தம்மைக்
    காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர
    வந்தவர், வணக்கம் செய்தார்.
349

உரை
   
 
பரதன், சுக்கிரீவன் முதலியோரைப் பாராட்டுதல்

10447..குரக்கினத்து அரசை, சேயை,
    குழுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை,
    மற்றும் அத்திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு
    அடைவினின் முதன்மை கூறி
மருக்கமழ் தொடையல் மாலை
    மார்பினன், பரதன், நின்றான்.
350

உரை
   
 
சுமந்திரன் இராமனை வரவேற்க வருதல்

10448..மந்திரச் சுற்றத்துள்ளார்
    தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும்,
    தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார்
    எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச்
    சுமந்திரன் தோன்றினானால்.
351

உரை
   
 
வந்த சுமந்திரனை இராமன் தழுவுதல்

10449..அழுகையும் உவகைதானும்
    தனித்தனி அமர்செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி,
    சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத்
    தம்பியும் அனைய நீரான்;
‘வழு இனி உளதன்று, இந்த
    மாநிலக் கிழத்திக்கு; என்றான்.
352

உரை
   
 
இராமன் ஏவலின்படி வரவேற்க வந்த சேனையெல்லாம் விமானத்தில் ஏறி இராமனை வணங்குதல்

10450.‘ஏறுக சேனை எல்லாம்
    விமான மீது ‘என்று தன்போல்
மாறு இலா வீரன் கூற,
    வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து
    எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இனைய வீரன்
    இணையடி தொழுதது அன்றே.
353

உரை
   
 
தேவர்கள் புட்பக விமானத்தைப்புகழ்ந்து
பூமாரி பொழிதல்

10451.‘உரைசெயின் உலகம் உண்டான்
    மணி அணி உதரம் ஒவ்வா,
கரைசெயல் அரிய வேதக்
    குறுமுனி கையும் ஒவ்வா,
விரைசெறி அலங்கல் மாலைப்
    புட்பக விமானம் ‘என்று என்று,
உரைசெய்து வான் உேளார்கள்
    ஒண்மலர் தூவி ஆர்த்தார்.
354

உரை
   
 
விமானத்துள் முரசமுதலியவற்றின் முழக்கம்

10452..அசனியின் குழுவும் ஆழி
    ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன,
விசியுறு முரசும், வேதத்து
    ஓதையும், விளிகொள் சங்கும்,
இசையுறு குழலும், ஏத்தின்
    அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர்
    அந்தரத்து ஒலியின் தீர்ந்த.
355

உரை
   
 
விமானம் அயோத்திநோக்கிச் செல்லும் தோற்றம்

10453..அவ்வயின் விமானம் தாவி,
    அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற;
    செகதல மடந்தையோடும்,
இவ்வுலகத்து உேளார்கள்
    இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற
    நீர்மையைக் கடுக்கும் அன்றே.
356

   
 
விமானம் நந்திக்கிராமத்தை யடைதல்

10454.ஆனது ஓர் அளவையின் அமரர் கோனொடும்
வானவர் திருநகர் வருவதாம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால்.
357