தொடக்கம்
இராமன் தம்பியருடன் மயிர்வினை முற்றி
ஒப்பனை செய்தல்
10455.
நம்பி அப் பரதனோடு
நந்தியம் பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி,
மயிர்வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும்
தண்புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர,
ஒப்பனை ஒப்பச் செய்தார்.
1
உரை
அயோத்திக்குள் புக இராமன் தேர் ஏறுதல்
10456.
நிருதியின் திசையில் தோன்றும்
நந்தியம் பதியை நீங்கி
குருதி கொப்பளிக்கும் வேலோன்
கொடிமதில் அயோத்தி மேவ
சுருதி ஒத்தனைய வெள்ளைத்
துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண்
பருமணித் தேரன் ஆனான்.
2
உரை
தம்பியர் பணிசெய இராமன் தேர்மேற் செல்லுதல்
10457.
.ஊழியின் இறுதி காணும்
வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன
இலக்குவன் கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி
பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப்
பரதன் கோல் கொள்ளப் போனான்
3
உரை
இராமன் தேரின் நாற்புறத்திலும் வீடணன்
முதலோர் செல்லுதல்
10458.
வீடணன் குருசில் மற்றை
வெங்கதிர்ச் சிறுவன் வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி,
கொண்டல் தேர் மருங்கு போத,
தோடு அணை மவுலிச் செங்கண்
வாலி சேய் தூசு செல்ல,
சேடனைப் பொருவும் வீர
மாருதி பின்பு சென்றான்.
4
உரை
வானரத் தலைவர் போதல்
10459.
.அறுபத்து ஏழ் அமைந்த கோடி
யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி,
மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற வனப்பர் உச்சி
பிறங்கு வெண்குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர்,
வானரத் தலைவர் போனார்.
5
உரை
பதினெட்டுத் தேயத்து வேந்தர் செல்லுதல்
10460.
எட்டு அமை ஈறு பத்தின்
எழுதிரை வளாக வேந்தர்,
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப்
பகட்டினர், பைம்பொன் தேரர்,
வட்டவெண் குடையர் வீசு
சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ்சோதி மோலிச்
சென்னியர், தொழுது சூழ்ந்தார்.
6
உரை
சீதை விமானமூர்ந்து செல்லுதல்
10461.
.வானர மகளிர் எல்லாம்
வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண்தார்ப்
புரவியும் பிறவும் ஊர்ந்து
மீன் இனம் மதியைச் சூழ்ந்த
தன்மையின் விரிந்து சுற்ற,
பூநிற விமானம் தன்மேல்
மிதிலைநாட்டு அன்னம் போனாள்.
7
உரை
கவிக்கூற்று
மலர்மாரியின் மிகுதி
10462.
தேவரும், முனிவர் தாமும்,
திசைதொறும் முறையின் சிந்த,
ஓவல் இல் மாரி ஏய்ப்ப,
எங்கணும் உதிர்ந்து வீங்கி,
கேவலம் மலராய் வேறு ஓர்
இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ்
உலகிற்குப் பொருந்திற்று அன்றே.
8
உரை
யானைகள் மதம் சொரிதல்
10463.
கோடையில் வறந்த மேகக்
குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத
பணைமுகப் பரும யானை,
காடு உறைந்து அண்ணல் எய்தக்
கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ளக்
களிதிறந்து உடைந்ததே போல்.
9
உரை
குதிரைகள் ஆலித்தல்
10464.
துரகத் தார்ப் புரவி எல்லாம்
மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன ஆலித்த;
மரங்கள் ஆன்று,
பருவத்தால் பூத்த என்னப்
பூத்தன; பகைவிற் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம்
பொன்நிறப் பசலை பூத்த.
10
உரை
இராமன் அயோத்தியில் அரண்மனை புகுதல்
10465.
.ஆயது ஓர் அளவில் செல்வத்து
அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கித் தங்கள்
இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி
நானிலக் கிழத்தியோடும்
சேய் ஒளிக் கமலத்தாளும்
திருநடம் செய்யக் கண்டான்.
11
உரை
நகர மக்களின் மகிழ்ச்சி (10465-10466)
10466.
வாங்குதும் துகில்கள் என்னும்
மனம் இலர் எனினும் பல்கால்
தாங்கினர் என்ற போதும்
மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி
சிறக்கவும் மேல் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்த,
உடையிலாதாரை ஒத்தார்
12
உரை
10467.
.வேசியர் உடுத்த கூறை
வேந்தர்கள் சுற்ற, வேறு
பாசிழை மகளிர் ஆடை
அந்தணர் பரிந்து சுற்ற,
வாச மென் கலவை சாந்து
என்று இனையன, மயக்கம் தன்னால்,
பூசினர்க்கு இரட்டி ஆனார்,
பூசலார் புகுந்துேளாரும்
13
உரை
மகளிர் அணிகலன் பூண்டு அழகொடு தோன்றுதல்
10468.
.இறைப்பெருஞ் செல்வம் நீத்த
ஏழ் இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே,
வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக்கொழுந்து அனைய நெற்றிப்
பெய்வளை மகளிர், மெய்யை
மறைந்தனர் பூணின், மைந்தர்
மனங்களின் மறுக்கம் கொள்ள.
14
உரை
விண்ணவர் மணமும் மண்ணவர் மணமும்
தலை தடுமாறல்
10469.
.விண் உறைவோர்தம் தயெ்வ
வெறியொடு, வேறு உேளார் தம்
தண் நறு நாற்றம் தம்மில்
தலை தடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும்,
வான் உறை மடந்தைமார்க்கும்,
உள்நிறைந்து உயிர்ப்பு வீங்கி
ஊடல் உண்டாயிற்று அன்றே.
15
உரை
அரண்மனை நலங்களை வீடணன் முதலானோர்க்குக் காட்டுமாறு பரதனுக்கு இராமன் கூறுதல்
10470.
.ஆயது ஓர் அளவில் ஐயன்,
பரதனை அருளின் நோக்கி,
தூய வீடணற்கும், மற்றைச்
சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரங்களாய
வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள
நலம் எலாம் தரெித்தி என்றான்
16
உரை
பரதன் அவ்வாறே நாயகக் கோயில் புகுதல்
10471.
.என்றலும் இறைஞ்சி, மற்றைத்
துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம்
பல ஒரீஇ, உலகில் தயெ்வப்
பொன் திணிந்து அமரரோடும்
பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும்
நாயகக் கோயில் புக்கான்.
17
உரை
நாயகக் கோயிலைக் கண்டவர்கள் வியப்புறுதல்
10472.
.வயிரம், மாணிக்கம், நீலம்,
மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற
செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும்
உள்ளமும் ஊசல் ஆட,
மயர்வு அறு மனத்து வீரர்,
இமைப்பிலர், மயங்கி நின்றார
18
உரை
பரதன் அந்த அரண்மனையின் வரலாற்றைக் கூறுதல்
10473.
.விண்டுவின் மார்பில் காந்தும்
மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை
வினவினர் அவர்க்குக் காதல்
புண்டரீகத்து வைகும்
புராதனன், கன்னல் தோளான்,
கொண்டநல் தவம் தன்னாலே உவந்து,
முன் கொடுத்தது என்றான்.
19
உரை
10474.
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு
அளித்த பான்மைத்து
இங்கு இது, மலராள் வைகும் மாடம்
என்று இசைத்த போதில்,
எங்களால் துதிக்கலாகும்
இயல்பதோ என்று கூறி
செங்கைகள் கூப்பி வேறு ஓர்
மண்டபம் அதனில் சேர்ந்தார்.
20
உரை
சுக்கிரீவன் பரதனை வணங்கி இராமனது முடிசூட்டு விழாவைப் பற்றி வினவுதல்
10475.
.இருந்தனர், அனைய மாடத்து
இயல்பு எலாம் எண்ணி எண்ணி;
பரிந்தனன் இரவி மைந்தன்,
பரதனை வணங்கி, தூயோய்!
கருந்தட முகில் அன்னாற்குக்
காப்பு நாண் அணியும் நன்னாள்
தரெிந்திடாது இருத்தல் என்னோ?
என்றலும், அண்ணல் செப்பும்.
21
உரை
தீர்த்தநீர் கொணர அனுமன் விரைதல்
10476.
ஏழ்கடல் அதனில் தோயம்,
இருநதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு
அருமைத்தோர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன்,
அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ்புவி அதனை எல்லாம்
கடந்தனன், காலின் தோன்றல்.
22
உரை
வசிட்டன் வர அனைவரும் அவனை வணங்குதல்
10477.
கோமுனியோடு மற்றைக்
கணிதரைக் கொணர்க! என்னா
ஏவினன்; தேர்வலான் சென்று
இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப்
புனித மாதவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி
இணையடி தொழுது நின்றார
23
உரை
வசிட்டன் : ஆராய்ந்து, இராமன் காப்பு நாண் அணியும் நாள் நாளைக்கு எனல்
10478.
.அரியணை பரதன் ஈய,
அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி,
பெருநிலக் கிழத்தியோடும்
உரியமா மலராேளாடும்
உகந்தனன் ஒருவு இல் செல்வம்
கரியவன் துய்த்தற்கு ஏய்ந்த
காப்பு நாண் நாளை என்றான்.
24
உரை
இராமனது முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு விடுதல்
10479.
இந்திரன் குருவும், அன்னாற்கு
ஏய்ந்தவர் எனவும், நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும்,
வரைந்து விட்டார்,
சந்திர கவிகை ஓங்கும்
தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும்
ஓரையும் நாளும், தூக்கி.
25
உரை
இராமன் முடிசூட்டு விழாவிற்கு மூவுலகத்தோரும் அயோத்தி அடைதல்
10480.
.அடுக்கிய உலகம் மூன்றும்
ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒருபேரும் இன்றி
அயோத்திவந்து இறுத்தது என்றால்,
தொடுக்குறு கவியான் மற்றைத்
துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை
நான்முகத்து ஒருவற்கு உண்டோ?
26
உரை
வசிட்ட முனிவன் முதலியோர் இராமனை அணுகி முடிசூடும் நாள் நாளை என்பதை அறிவித்தல் 10480-10481
10481.
அவ்வயின் முனிவனோடும்
பரதனும், அரியின் வேந்தும்
செவ்வியல் நிருதர் கோனும்,
சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர்
யாவரும், எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை
அண்ணலைத் தொழுது சொன்னார்
27
உரை
10482.
நாளைநீ மவுலி சூடும்
நலம் திகழ் பெரிய நல் நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற
கடன்மை மீது இயற்றுக! என்று,
வேளையே பொடியது ஆக
விழிக்கும் நீள் நுதலின் வெண்பூம்
பூளையே சூடு வானைப்
பொருவும் மாமுனியும் போனான்.
28
உரை
மயன் மண்டபம் அமைத்தல்
10483.
நன்முகத்து ஒருவன் ஏவ,
நயன் அறி மயன் என்று ஓதும்
நூல்முகத்து ஓங்கு கேள்வி
நுணங்கியோன், வணங்கும் நெஞ்சன்,
கோன்முகத்து அளந்து குற்றம்
செற்று உலகு எல்லாம் கொள்ளும்
மான்முகத்து ஒருவன் நல்நாள்
மண்டபம் வயங்கக் கண்டான்.
29
உரை
அனுமன் எழுகடல் நீரைக் கொணர்தல்
10484.
.சூழ்கடல் நான்கின் தோயம்
எழுவகைத்தாகச் சொன்ன
ஆழ்திரை ஆற்றின் நீரோடு
அமைத்தி இன்று என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும்
தாதையின் உலாவி, அன்றே
ஏழ்கடல் நீரும் தந்தான்,
இருந்து உய்ய மருந்து தந்தான்.
30
உரை
வேந்தர்கள் சரயுநதியின் புனலை யானைமேற் கொணர்தல்
10485.
.எரிமணிக் குடங்கள் பல் நூற்று
யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரிமதிக் குடையின் நீழல்,
வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரைமணிக் காளம் ஆர்ப்ப,
பல் இயம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார்,
சங்கு இனம் முரல மன்னோ.
31
உரை
பளிங்கு மாடத்திட்ட மாணிக்க பீடத்தில் இராமன் சீதையோடு அமர்தல்
10486.
.மாணிக்கப் பலகை தைத்து,
வயிரத்தின் கால்கள் சேர்த்தி,
ஆணிப் பொன் சுற்று முற்றி
அழகு உறச் சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து
இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள்தோள் வீரன்
திருவொடும் பொலிந்தான் மன்னோ.
32
உரை
இராமனுக்கு வேந்தர் அபிடேகம் செய்தல்
10487.
மங்கல கீதம் பாட,
மறை ஒலி முழங்க, வல்வாய்ச்
சங்கினம் குமுற, பாண்டில்
தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப,
பூமழை பொழிய விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர்ந்து, அபிடேகம் செய்தார்.
33
உரை
மாதவர் முதலியோர் அபிடேகம் செய்தல்
10488.
.மாதவர், மறைவலாளர்,
மந்திரக் கிழவர் மற்றும்
மூதறிவாளர் உள்ள
சான்றவர் முதல் நீர் ஆட்ட,
சோதியான் மகனும் மற்றைத்
துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும்
பின் அபிடேகம் செய்தார்.
34
உரை
அபிடேக நீரின் சிறப்பு
10489.
.அம்கண் வான் உலகம் தாய
அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான்,
கண்ணுதல் ஒருவன்; இந்நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய
திருமுடி ஆட்டும் நலநீர்
எங்கன் ஏற்று அன்னோன் வாழும்?
என்றனர், புலவர் எல்லாம்.
35
உரை
அபிடேகம் செய்துகொள்ளும் இராமன்
சீதையோடிருந்த தோற்றம்
10490.
.மரகதச் சயிலம் செந்தாமரை
மலர்க் காடு பூத்து,
திரைகெழு கங்கை வீசும்
திவலையான் நனைந்து, செய்ய
இருகுழை தொடரும் வேற்கண்
மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார்,
பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்.
36
உரை
முடிசூட்டுவிழாவிற்கு வேண்டியவை வந்துசேர்தல்
10491.
தயெ்வநீர் ஆடற்கு ஒத்த
செய்வினை வசிட்டன் செய்ய,
அய்யமில் சிந்தையான் அச்
சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின்
மாதவர் நுனித்துக் காட்ட
எய்தின இயன்ற பல்வேறு
இந்திரற்கு இயன்ற என்ன.
37
உரை
இராமனுக்கு வசிட்டமுனிவன் திருமுடி சூட்டுதல்
10492.
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
38
உரை
இராமன் முடிசூடிக் கொள்ளுதல்
10493.
வெள்ளியும் பொன்னும் என்பார்
விதிமுறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல
ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின குனிப்ப, மௌலி
சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும், தயெ்வப்
பூமியும், சேரும் தோளான்.
39
உரை
இராமன் மணிமுடி சூடியதில் மக்களுக்குள்ள மகிழ்ச்சி
10494.
சித்தம் ஒத்துளன் என்று ஓதும்
திருநகர்த் தயெ்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி
மிலைச்சியது எனினும் மேன்மை
ஒத்த மூவுலகத்தோர்க்கும்
உவகையின் உறுதி உன்னின்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தது அத் தாம மௌலி.
40
உரை
பூமி தேவியின் மகிழ்ச்சி
10495.
பல் நெடுங் காலம் நோற்று,
தன்னுடைய பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப்
பெற்று, இடைப்பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத்
தழுவினாள், தளிர்க்கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும்
நங்கை, தன் கொங்கை ஆர.
41
உரை
இராமன் பரதனை இளவரசனாக்கி இன்புற்றிருத்தல்
10496.
விரதநூல் முனிவன் சொன்ன
விதிநெறி வழாமை நோக்கி,
வரதனும் இளைஞற்கு ஆங்கண்
மாமணி மகுடஞ் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல்
நடாவுறப் பணித்து, நாளும்
கரை தரெிவு இலாத போகக்
களிப்பினுள் இருந்தான் மன்னோ.
42
உரை