| 9912. | 'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய! |
| மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; |
| மெய்ம்மை; |
| தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய |
| காதல்-தன்மை |
| நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ |
| நுவலற்பாலார்? |
| |
ஐய - ஐயனே! ஆயிரம் தோளினானும்- ஆயிரம் தோள்களையுடைய கார்த்தவீரியனும்; வாலியும்- வாலியாகிய வானர அரசனும்; அரிதின் மேயின வென்றி- அரிதில் பெற்ற வெற்றிகள்; விண்ணோர் சாபத்தின் விளைந்த- (இராவணனுக்கு) தேவர்கள் இட்ட சாபங்களால் விளைந்தவை; மெய்ம்மை- இஃது உண்மை; தாயினும் தொழத்தக்காள் மேல் - (இப்போது) உலகம் தாயினும் போற்றற்குரியவளாய் வணங்கத்தக்க சீதையின் மேல்; தங்கிய காதல் தன்மை நோயும் - கொண்ட ஆசையும்; நின் முனிவும் அல்லால்- உன் சீற்றமும் அல்லால்; நுவலற் பாலார் - வீரர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் யாரேனும்; வெல்வரோ- (இவனை) வெல்ல வல்லார் ஆவாரோ? |
| (209) |