மறைந்து வந்தாய் - (நீ நின் திவ்யமங்கள சொரூபத்தை) மறைத்துக்கொண்டு; (சங்கற்ப மாத்திரையாய் மானிடச் சட்டை தாங்கி) வந்தாய்; பிரிவால் வருந்து - உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல் அயன் தன் முதலோர் தம் - மலரின் மேல் தாங்கி உள்ள அயன் முதலியோருக்குக் காரணன் ஆன; தாதை தாதை - பிதா மகனே; இறைவா - எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்த் தங்கி உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் - (வினை வயத்தால் அன்றிச் சங்கல்பத்தால்) பிறந்து (மனித உருவத்துக்கு ஏற்ப நடித்து விளையாடுகின்ற ஒப்பற்ற தலைவனை! சிந்தா குலங்கள் களைவாய் - சரணாகதி அடைந்தவர்களின் மனத் துன்பங்களைப் போக்குபவனே; தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ - நீயே மனம் தளர்ந்து துன்பம் மிகப்படுதல் என்ன செயலோ? எந்தாய் வருந்தல் - எனது தலைவனே வருந்தாதே; உடையாய் வருந்தல் - எப்பொருளையும் சரீரமாக உடையவனே வருந்தாதே; என இன்ன - என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை; பன்னி மொழிவான் - திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான், |