தயரதன் தன் உளக் கருத்தை வெளியிடுதல் 1325. | அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில், மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான் ; ‘உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது ; என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் ! |
அன்னவர்- அந்த அமைச்சர்கள் எல்லோரும் ; அருள் அமைந்து இருந்த ஆண்டையில் - மன்னன் அருளைப் பெற்று இருக்கையில் அமர்ந்திருந்த அக்காலத்தில் ; மன்னனும் அவர் முகம்- தயரதனும் அவர்களது முகத்தை ; மரபினன் நோக்கினான் -முறையாகப் பார்த்தான் ;“உன்னிய - என்னால் நினைக்கப்பட்ட ; பெறல்அரும் உறுதி ஒன்று உளது - பெறுதற்கு அரிய உறுதிப் பொருள் ஒன்று உள்ளது ; என் உணர்வு அனைய நீர் - (அதனை)என் உணர்வை ஒத்த நீவிர் ; இனிது கேட்டிரால் - நன்றாகக்கேட்பீர்களாக” என்றான். உறுதி - ஈண்டுஉறுதியைப் பயக்கும் பொருளைக் குறித்தது. அஃதாவது இராமனுக்கு முடிசூட்டித் தான் வீடுபேறு அடைதற்குரிய நெறியில் செல்லத் தயரதன் நினைத்ததைக் குறித்தது. யான் உணர்தற்குரியதை நீங்கள் உணர்ந்து கூறும் தன்மையுடையீர் என்னும் கருத்தினால் ‘என் உணர்வு அனைய நீர்’ என்றான். 12 |