1332. | ‘ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடைப் பட்டவர் அல்லரேல், பரம ஞானம் போய்த் தெட்டவர் அல்லரேல், “செல்வம் ஈண்டு” என விட்டவர் அல்லரேல், யாவர் வீடு உளார்? |
‘ஒட்டிய பகைஞர் வந்து - வஞ்சினம் கூறிய பகைவர்கள் எதிர்த்து வந்து ; உருத்த போரிடை - சினந்து செய்யும் போர்க்களத்தில் ; பட்டவர் அல்லரேல் - இறந்தவர் அல்லராயின் ; பரம ஞானம் போய்த்தெட்டவர்அல்லரேல் - மேலான ஞானம் கைவரப் பெற்றுத் தெளிந்தோர் அல்லராயின் ; ‘செல்வம் ஈண்டு’ என - ‘பொருள் பயன்படுவது இவ்வுலகில் மட்டுமே’ என்று உணர்ந்து ; விட்டவர் அல்லரேல் - அதனை முற்றுத் துறந்தவர் அல்லராயின் ; யாவர் விடு உளார் - யாவர் வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்? (ஒருவரும் ஆகார்).’ போர்க்களத்தில் வீழ்ந்த மறவரும், ஞானம் மிக்கு மெய்யுணர்வு கூடப் பெற்றவரும், செல்வ நிலையாமை உணர்ந்து துவரத் துறந்தவரும் வீடு பெறுவார் என்பது கருத்து.உருத்தல் - சினத்தல். பரமஞானம் - எல்லாம் இறைவனாகக் காணும் மேலான ஞானம். தெட்டவர் -தெளிந்தவர். தயரதனுக்குப் பகையின்மையால் போரிடை வீழ்தலும், பரம ஞானம் கூடாமையால்தெளிவும் வாய்த்தில. ஆதலால் செல்வ நிலையாமை உணர்ந்து துறவுநெறி சேர்தலே வீடு பெறற்குவழியாய் அமைந்தது என்பது போதரும். 19 |