1333. ‘இறப்பு எனும் மெய்ம்மையை,
    இம்மை யாவர்க்கும்,
மறப்பு எனும் அதனின்மேல் கேடு
    மற்று உண்டோ?
துறப்பு எனும் தெப்பமே
    துணை செய்யாவிடின்,
பிறப்பு எனும் பெருங் கடல்
     பிழைக்கல் ஆகுமோ?

     இம்மை யாவர்க்கும் - இப்பிறப்பிலே எவர்க்கும் ;  இறப்பு எனும்
மெய்ம்மையை
- சாவு உண்டு என்னும் உண்மையை ;  மறப்பு எனும்
அதனின்மேல்
- மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ;  கேடு மற்று
உண்டோ -
கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ;  துறப்பு எனும்
தெப்பமே
- துறத்தல் என்னும்மிதவையே ;  துணை செய்யாவிடின் -
உதவி செய்யாவிட்டால் ;  பிறப்புஎனும் பெருங்கடல் - பிறப்பு என்னும்
பெரிய கடலினின்று ;  பிழைக்கல் ஆகுமோ- தப்புதல் இயலுமேடா?
இயலாது.

     யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால் அது
பிறவியைஒழித்தற்கு இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச்
செய்யும் ; செய்யவே, பிறவிப் பெருங்கடல்கடத்தலாகும் என்பது கருத்து.
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப்
பெருங்கடல் என்றார். “பிறவிப் பெருங்கடல்” (குறள், 10) என்பர்
திருவள்ளுவரும். பிழைக்கல்- தப்புதல், உய்தல்.                    20