1336. ‘உம்மை யான் உடைமையின், உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி, நல் அறமும் செய்தனென் ; 
இம்மையின் உதவி, நல் இசை நடாய நீர்,
அம்மையும் உதவுதற்கு அமையவேண்டுமால்.

     ‘யான் உம்மை உடைமையின் - நான் உங்களை மந்திரக்
கிழவர்களாகப்பெற்றதால் ;  உலகம் யாவையும் - உலகம் முழுவதையும்;
செம்மையின்ஓம்பி - முறையாகப் பேணிக் காத்து ;  நல் அறமும்
செய்தனென்
- சிறந்தஅறச் செயல்களையும் செய்தேன் ;  இம்மையின்
உதவி
- இவ்வாறு இவ்வாழ்வில்எனக்கு உதவி செய்து; நல் இசை நடாய
நீர்
- எனது நல்ல புகழை பரவச் செய்தநீங்கள்; அம்மையும் உதவுதற்கு-
அவ்வுலகப் பேற்றுக்கும் உதவி செய்தவற்கு ; அமைய வேண்டும் -
மனங்கொள்ள வேண்டும்.’

     ஆல் - அசை. நல்லறமாவது தானம், வேள்வி முதலிய புரிதலாகும்.
“ஈந்தேகடந்தான் இரப்போர் கடல்” (172) என அரசியற் படலத்துள்
தயரதன் செய்த அறச்செயல்பேசப்பட்டுள்ளமை காணலாம். அம்மை -
மறுமை.                                                     23