1337. | ‘இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல், தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல், குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? |
‘இழைத்த தொல் வினையையும் - ஒருவன் செய்த பழமையான வினைகளின்பயன்களையும் ; கடக்க எண்ணுதல் - தாண்டிச்செல்லக் கருதுவது ; தழைத்தபேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் - மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால்உண்டாகுமானால், (அத்தவத் தினைச் செய்யாது) ; குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி- இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி ; வேறுஅழைத்த தீ விடத்தினை - அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட கொடிய நஞ்சினை ; அருந்தல் ஆகுமோ - நுகர்தல் தகுமோ? (தகாது)’ அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது போலத்தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது கருத்து. ‘தவத்தினைச்செய்யாமல் அரசவாழ்வை மேற்கொண்டிருத்தல்’ என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும்கூறியதனால் இது ஒட்டணி ஆகும். கோரம் - வட்டில். 24 |