1350. ‘பொன் உயிர்த்த பூ மடந்தையும்,
     புவி எனும் திருவும்,
“இன் உயிர்த் துணை இவன்” என,
     நினைக்கின்ற இராமன்,
“தன் உயிர்க்கு” என்கை புல்லிது ; 
     தற் பயந்து எடுத்த
உன் உயிர்க்கு என நல்லன், மன்
     உயிர்க்கு எலாம் ; - உரவோய் !

     ‘உரவோய் ! - வலிமை உடையோய் ; பொன் உயிர்த்த பூ
மடந்தையும்
- அழகினைத் தோற்றுவிக்கும் சீதேவியும் ;  புவி எனும்
திருவும் - மண்மடந்தையும் ;  இன் உயிர்த் துணை இவன் என
நினைக்கின்ற இராமன்
- (தமக்கு)இனிய உயிர் போன்ற துணைவன்
இவனே என்று கருதுகின்ற இராமன் ;  தன் உயிர்க்கு(நல்லன்) என்கை
புல்லிது
- தன் உயிர்க்கு இனியான் என்று சொல்லுவது புன்மையானது ;
தன் பயந்து எடுத்த - தன்னைப் பெற்றெடுத்த ;  உன் உயிர்க்கு என -
உன்உயிர்க்கு எவ்வாறு நல்லனாக இருக்கிறானோ அவ்வாறே ;  மன்
உயிர்க்கு எலாம்
-நிலைபெற்ற எல்லா உயிர்களுக்கும் ;  நல்லன் -
நல்லவனாய் இருக்கிறான்.’

    இப்பாட்டு, இராமன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்
என்பதனைக்கூறுகிறது. உயிர்த்துணைவன் உவமத்தொகை.             37