1352.‘மண்ணினும் நல்லள் ; 
     மலர்மகள், கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள் ; 
     பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன் ; 
     கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும்,
     உயிரினும், அவனையே உவப்பார்.

     ‘பெரும் புகழ்ச் சனகியோ - பெரும் கீர்த்தியையுடைய சானகியோ
என்றால் ;  மண்ணிலும் நல்லள் - பொறுமையில் நிலமகளினும் சிறந்தவள்;
மலர்மகள் கலைமகள் கலைஊர் பெண்ணினும் நல்லள் - அழகில்
திருமகளையும், அறிவில்கலைமகளையும், ஆற்றலில் கலைமானை
வாகனமாகக் கொண்ட துர்க்கையையும்விடச் சிறந்தவள் ; கண்ணினும்
நல்லன்
- அவளுக்குக் கணவனான இராமனோ கண்ணைவிடச் சிறந்தவன்;
அவனையே - அவன் ஒருவனையே ;  கற்றவர் கற்றிலாதவரும் -
படித்தவர்களும்சிறிதும் படிக்காதவரும் ;  உண்ணும் நீரினும் - உயிர்
இருப்பதற்குக் காரணமானபருகும் நீரைவிடவும் ;  உயிரினும் - உடம்பு
இயங்குதற்குக் காரணமானஉயிரைவிடவும் ; உவப்பார் - விரும்புவர்.’  39