1363. | கண்டு, கைதொழுது, ‘ஐய, இக் கடலிடைக் கிழவோன், “உண்டு ஒர் காரியம் ; வருக !” என, உரைத்தனன்’ எனலும், புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர் கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான். |
கண்டு கைதொழுது - சுமந்திரன் இராமனைப் பார்த்துக் கை கூப்பி வணங்கி ; ஐய - ஐயனே ! இக் கடல்இடைக் கிழவோன் - இந்தக் கடலால் சூழப்பட்ட உலகுக்கு உரியவனான தயரத மன்னன்; ‘ஒர் காரியம் உண்டு -ஒரு காரியம் உள்ளது ; வருக என - (ஆதலால்) இராமனை அழைத்து வருக என்று ; உரைத்தனன்’ எனலும் - சொன்னான் என்ற அளவில் ; புண்டரீகக் கண் புரவலன் - செந்தாமரைக் கண்ணனாகிய இராமன் ; பொருக்கென எழுந்து - விரைவாகப்புறப்பட்டு ; ஓர் கொண்டல்போல் - ஒரு கரிய மேகம் போல ; அவன்கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான் - அந்தச் சுமந்திரனது கொடி பறக்கும் நெடிய தேரில்ஏறிக்கொண்டான். கடலிடை - கடலால் சூழப்பட்ட இடம் ; உலகு. கிழவோன் - உரிமையுடையவன். 50 |