1365. | பணை நிரந்தன ; பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன் சுணை நிரந்தன ; நாண் ஒலி கறங்கின ; நிறைப்பேர் அணை நிரந்தன, அறிவு எனும் பெரும் புனல் ; அனையார், பிணை நிரந்தெனப் பரந்தனர் ; நாணமும் பிரிந்தார். |
பணைநிரந்தன - (இராமன் தெருவில் புக) வாத்தியங்களின் ஒலிகள் நிரம்பின ; பாட்டு ஒலி நிரந்தன - பாடல்களின்ஓசைகள் நிறைந்தன ; அனங்கன் கணை நிரந்தன - மன்மதனின் மலரம்புகள்நிரம்பின ; நாண் ஒலிகறங்கின - வில் நாணின் ஒலிகள் ஒலித்தன; அறிவுஎனும் பெரும் புனல் -இராமனைப் பற்றிய எண்ணம் என்னும் மிக்க வெள்ளம் ; நிறை பேர் அணை நிரந்தன - மனஅடக்கம் என்னும் பெரிய அணையைக் கடந்தன ; அனையார் - அவ்வாறானமகளிர்கள் ; நாணமும்பிரிந்தார்- நாணத்தையும் விட்டவர்களாய் ; பிணை நிரந்து என- பெண்மான்கள் நிரம்பினபோல ; பரந்தனர் -தெருவில் வந்து நிறைந்தார்கள். பணை - வாத்தியங்கள் ; முரசு என்பாரும் உளர் ; பணை - கருவியாற் பிறப்பதற்கும், பாட்டு - கண்டத்தாற் பிறப்பதற்கும் கொள்க. நிரத்தல் -பரத்தல். அனங்கன் - உருவமில்லாதவன். அறிவைப் புனல் என்றதற்கு ஏற்ப நிறையை அணைஎன்றார் ; உருவகம். நாணமும் என்றதில் உம்மை இறந்தது தழுவியது. 52 |