1374. ‘ஐய ! சாலவும் அலசினென் ; 
     அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது ; வியல் இடப்
     பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு
     சிறை துறந்து, இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக,
     உதவிட வேண்டும்.

     ‘ஐய - ஐயனே !  சாலவும் அலசினென் - மிகவும்தளர்ந்தேன் ;
அரும் பெரு மூப்பும் மெய்யது ஆயது - தாங்குதற்கு அரியதும்
பெரியதுமான வயோதிகமும் என் உடம்பில் தோன்றிவிட்டது ;  வியல்
இடப் பெரும்பரந்த விசித்த -
அகன்ற இடத்தைக் காக்கும் பெரிய
பாரமானது கட்டப்பட்ட ;  தொய்யல் மா நிலச்சுமை - துன்பத்திற்குக்
காரணமாகிய பெரிய அரசாட்சியை நடத்தும்பொறுப்பாகிய ; உறு சிறை
துறந்து
- மிக்க சிறையை விட்டுவிட்டு ; இனி யான் உய்யல் ஆவது -
இனி நான் பிழைக்கலாவதாகிய ;  ஓர் நெறி புக -ஒப்பற்ற வழியில்
செல்ல ;  உதவிட வேண்டும் - உதவி செய்ய வேண்டும்.’

     தொய்யல் - துன்பம் ;  சோர்வும் ஆம். சுமை - பொறுப்பு ; ‘என்
தலையில் இவனைக் காக்கும் சுமை விழுந்தது’ என்னும் பேச்சுவழக்கில்
இதற்கு இப்பொருள் இருத்தலைக் காணலாம்.                      61