2500. | ‘சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய் போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் - தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? |
‘தேன் தரு மலருளான் சிறுவ!- தேனைத் தருகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கும்பிரமதேவனின் புதல்வ!; சான்றவர் ஆக - பெரியோர்களே ஆகுக; தன் குரவர் ஆக- தன் ஆசிரியரே ஆகுக; தாய் போன்றவர் ஆகுக - தாய் முதலியவரே ஆகுக; மெய்ப்புதல்வர் ஆக - சத்தியத்திற் பிறழாத தன் புதல்வர்களே ஆகுக; தான் - ஒருவன்; “செய்வேன்” என்று ஏன்றபின் - (இவர்களிடத்தில்) செய்வேன் என்று சம்மதித்தபின்; அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? - அந்த வார்த்தை முடியாது என்று மறுக்கத்தக்கதன்மை யுடையதோ? (அன்று என்றபடி) தாய் போன்றவர் எனவே தந்தை, தம்முன், அரசன் முதலிய நான்கு குரவர்களைக் குறிப்பிடாராயிற்று, ஒருவரிடம் ஒப்புக்கொண்டால் செய்தே ஆகவேண்டும்; சத்தியம் பிறழ்தல் கூடாது என்றான். 126 |