1380.‘மன்னர் ஆனவர் அல்லர் ; 
     மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல்
     புரந்தரன் போலியர் அல்லர் ; 
பின்னும், மா தவம் தொடங்கி,
     நோன்பு இழைத்தவர் அல்லர் ; 
சொல் மறா மகப் பெற்றவர்
     அருந்துயர் துறந்தார்.

     ‘அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து
விடுபட்டவர்கள் ;  மன்னர் ஆனவர் அல்லவர் - அரசர்களாக
வாழ்கின்றவர்கள்அல்லர் ;  மேல் - மேலுலகில் உள்ள ;  வானவர்க்கு
அரசு ஆம்
-தேவர்களுக்கு அரசனாகிய ;  பொன்னின் வார்கழல்
புரந்தரன் போலியன் அல்லர்
-பொன்னாலான நீண்ட வீரக்கழல்
அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர் ;  பின்னும்- அன்றியும் ; மா
தவம் தொடங்கி
- பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி ; நோன்பு
இழத்தவர் அல்லர்
- பல விரதங்களைச் செய்தவரும் அல்லர் ;  சொல்
மறா மகப் பெற்றவர்
- (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத்
தட்டாதமக்களைப் பெற்றவரே ஆவர்.’

     நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கியவர் என்பது கருத்து.
“ஏவா மக்கள் மூவா மருந்து” என்பது ஈண்டு நினைத்தற்குரியது.        67