இராமன் தயரதன் கட்டளைக்கு இசைதல்

1382. தாதை, அப் பரிசு உரைசெய,
    தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
    ‘கடன் இது’ என்று உணர்ந்தும்,
‘யாது கொற்றவன் ஏவியது
    அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும்,
    அப் பணி தலைநின்றான்.

     தாதை அப் பரிச உரை செய -தந்தை அவ்வாறு சொல்ல; 
தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் -தாமரை போன்ற கண்களை
யுடைய இராமன் அரசாட்சி கிடைத்தது  என்றுவிரும்பினான் அல்லன்;
இகழ்ந்திலன் -அரசாட்சி துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்;
இது கடன் என்று உணர்ந்தும் -
அரசபதவியை ஏற்கும் இச்செயல்
தனக்குரியகடமை  என்று  உணர்ந்தும்;  கொற்றவன்  யாது  ஏவியது -
அரசன் எதனைச் செய்யுமாறுஆணையிட்டானோ; அது செயல்அன்றோ -
அதனைச் செய்வதல்லவா;  எற்கு நீதி என நினைந்தும்-எனக்கு நியாயம்
என்று எண்ணியும்;  அப் பணி தலைநின்றான் - அரசபதவி ஏற்றலாகிய
அச்செயலை மேற்கொண்டு நின்றான்.

     இதனால் இராமன் ஆட்சியின்மீது விருப்போ வெறுப்போ இன்றி
இருந்த தன்மையும் அவன் தந்தையின்சொற்களை மந்திரமாகக் கருதுபவன்
என்னும் உண்மையும் சுட்டப்பட்டுள்ளன.                         69