மன்னர்கள் தயரதன் கருத்தை வரவேற்றல் | 1387. | இறைவன் சொல்  எனும்      இன் நறவு அருந்தினர் யாரும்,  முறையில் நின்றிலர்;      முந்துறு களியிடை மூழ்கி,  நிறையும் நெங்சிடை உவகை போய்      மயிர் விழி நிமிர,  உறையும் விண்ணகம்      உடலொடும் எய்தினர் ஒத்தார். |  
      இறைவன் சொல் எனும் இன் நறவு - அரசனாகிய தயரதன்    சொன்ன சொல்லாகிய இனியகள்ளை; அருந்தினர் யாரும் - பருகிய  அரசர்கள் முதலிய அனைவரும்; முறையில் நின்றிலர்- முறையில்  நில்லாதவர்களாய்;  முந்துறு களியிட மூழ்கி - எழுகின்ற களிப்பு என்னும்  வெள்ளத்தில் மூழ்கி;  நெஞ்சிடை நிறையும் உவகை போய் -  தங்கள்  மனத்தில் நிறைந்தமகிழ்ச்சியானது கரைகடந்து  போய்; மயிர் வழி நிமிர -  மயிர்க்கால்களில் வழியேவெளிப்பட;  உறையும் விண்ணகம் - உடல்  நீங்கியபின் நல்வினை புரிந்த உயிர்கள் சென்றுதங்கும் துறக்கத்தை;   உடலொடும் எய்தினர் ஒத்தார் - இவ்வுடம்புடனே அடைந்தவர்  போலாயினர்.      சொல் நறவு - உருவகம், அரசன் சொல்லைக் கேட்டவர் தம்   நிலைமறந்து உவகை வெளிப்படப்பெருமகிழ்ச்சியுற்றனர் என்பதாம்.    ‘உடலொடும் துறக்கம் எய்தினர் ஒத்தார்’ என்னும் உவமைமுன்னும்   ‘உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தாதர்’ (1160) என வருதல்    காணலாம். உறையும்விண்ணகம் - நல்வினை புரிந்த உயிர் சென்று    உறையும் துறக்கம்                                  74  |