மன்னர்கள் தயரதன் கருத்தை வரவேற்றல்

1387.இறைவன் சொல் எனும்
     இன் நறவு அருந்தினர் யாரும்,
முறையில் நின்றிலர்;
     முந்துறு களியிடை மூழ்கி,
நிறையும் நெங்சிடை உவகை போய்
     மயிர் விழி நிமிர,
உறையும் விண்ணகம்
     உடலொடும் எய்தினர் ஒத்தார்.

     இறைவன் சொல் எனும் இன் நறவு - அரசனாகிய தயரதன்
சொன்ன சொல்லாகிய இனியகள்ளை; அருந்தினர் யாரும் - பருகிய
அரசர்கள் முதலிய அனைவரும்; முறையில் நின்றிலர்- முறையில்
நில்லாதவர்களாய்;  முந்துறு களியிட மூழ்கி - எழுகின்ற களிப்பு என்னும்
வெள்ளத்தில் மூழ்கி;  நெஞ்சிடை நிறையும் உவகை போய் -  தங்கள்
மனத்தில் நிறைந்தமகிழ்ச்சியானது கரைகடந்து  போய்; மயிர் வழி நிமிர -
மயிர்க்கால்களில் வழியேவெளிப்பட;  உறையும் விண்ணகம் - உடல்
நீங்கியபின் நல்வினை புரிந்த உயிர்கள் சென்றுதங்கும் துறக்கத்தை; 
உடலொடும் எய்தினர் ஒத்தார் - இவ்வுடம்புடனே அடைந்தவர்
போலாயினர்.

     சொல் நறவு - உருவகம், அரசன் சொல்லைக் கேட்டவர் தம்
நிலைமறந்து உவகை வெளிப்படப்பெருமகிழ்ச்சியுற்றனர் என்பதாம். 
‘உடலொடும் துறக்கம் எய்தினர் ஒத்தார்’ என்னும் உவமைமுன்னும்
‘உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தாதர்’ (1160) என வருதல்
காணலாம். உறையும்விண்ணகம் - நல்வினை புரிந்த உயிர் சென்று
உறையும் துறக்கம்                                  74