கலிவிருத்தம் 1389. | ‘மூ - எழு முறைமை எம் குலங்கள் முற்றுறப் பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு, ஆவ இவ் உலகம்; ஈது அறன்’ என்றார் அரோ. |
‘மூ எழு முறைமை - இருபத்தொரு தலைமுறை; எம் குலங்கள் முற்றுற - எங்கள்அரசர் குடியெல்லாம் அழியுமாறு; பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் -கூர்மை பொருந்திய மழுப்படையினால் போர் செய்து இல்லாமற் செய்த வீரனாகிய பரசுராமனது வீரத்தை; செகுத்த சேவகற்கு - கெடுத்த வீரனாகிய இராமனுக்கு; இ உலகம் ஆவ - இந்த உலகம்உரிமையாவதாக! ஈது அறன் என்றார் - இச்செயல் அறத்தொடு பொருந்தியதே’ என்றுசொன்னார்கள். அரோ - அசை. பரசுராமனது செருக்கை அழித்தபோதே இராமனுக்கு இவ்வுலகம் தகுதியால் உரிமையாயிற்று;இதனை வெளிப்படுத்தி முடிசூட்டுதல் மிகறவும் ஏற்புடைத்தே என அரசர் தம் எண்ணத்தை உவமையோடு தெரிவித்தனர். பூ - கூர்மை. 76 |