கலிவிருத்தம்

1389.‘மூ - எழு முறைமை எம் குலங்கள் முற்றுறப்
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு,
ஆவ இவ் உலகம்; ஈது அறன்’ என்றார் அரோ.

     ‘மூ எழு முறைமை - இருபத்தொரு தலைமுறை;  எம் குலங்கள்
முற்றுற -
எங்கள்அரசர் குடியெல்லாம் அழியுமாறு;  பூ எழு மழுவினால்
பொருது போக்கிய சேவகன் சேவகம்
-கூர்மை பொருந்திய
மழுப்படையினால் போர் செய்து இல்லாமற் செய்த வீரனாகிய பரசுராமனது
வீரத்தை; செகுத்த சேவகற்கு - கெடுத்த வீரனாகிய இராமனுக்கு;
உலகம் ஆவ -
இந்த உலகம்உரிமையாவதாக!  ஈது அறன் என்றார் -
இச்செயல் அறத்தொடு பொருந்தியதே’  என்றுசொன்னார்கள்.

     அரோ - அசை. பரசுராமனது  செருக்கை அழித்தபோதே இராமனுக்கு
இவ்வுலகம் தகுதியால் உரிமையாயிற்று;இதனை வெளிப்படுத்தி முடிசூட்டுதல்
மிகறவும் ஏற்புடைத்தே என அரசர் தம் எண்ணத்தை உவமையோடு
தெரிவித்தனர். பூ - கூர்மை.                                 76