1393. ‘தானமும், தருமமும், தகவும், தன்மை சேர்
ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும் -
மானவ! - வையம், நின் மகற்கு; வைகலும்,
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே.

     ‘மானவ - மனுவின் குலத்தில் தோன்றியவனே!;  நின் மகற்கு - உன்
மகனிடத்தில்;ஈனம் இல் செல்வம் -தாழ்வில்லாத அரசச் செல்வம்; வந்து
இயைக என்ன
- வந்துபொருந்தக் கடவது என்று சொல்வது  போல; 
தானமும் - கொடைத் தன்மையும்;  தருமம் -அறநெறியும்;  தகவும் -
ஒழுக்கமும்; தன்மை சேர் ஞானமும் - மேன்மை பொருந்திய
மெய்யுணர்வும்;  நல்லவர்ப் பேணும் நன்மையும் - பெரியோரைப்
போற்றிக் காக்கும் நற்பண்பும்; நின்மகற்கு வைகலும் வைகும் - உன்
மகனுக்கு என்றும் நிலையாகத் தங்கியுள்ளன.’

     இதனால் இராமனுக்கு அரசனாதற்குரியஅனைத்துத் தகுதிகளும் 
உள்ளன என்றனர் அரசர்கள் . தானம்- அறநெறியால் வந்த பொருளைத்
தக்கார்க்கு.
உவகையொடுங்கொடுத்தல். நல்லவர்ப் பேணும் நன்மை -
இரண்டன் தொகை.                                            80