1402. | ‘மன் நெடுங் கழல் வந்து வணங்கிட, பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!’ என, நின் நெடும் புதல்வன்தனை, நேமியான், தொல் நெடும் முடி சூட்டுகின்றான்’ என்றார். |
நேமியான் - சக்கரவர்தியாகிய தயரதன்; நின் நெடும் புதல் வன்தனை -உன் பெருமைக்குரிய மகனாகிய இராமனை; மன் நெடுங் கழல் வந்து வணங்கிட - எல்லாஅரசர்களும் உன் பெரிய வீரக்கழல் அணிந்த அடிகளில் வீழ்ந்து வணங்க; பல் நெடும் பகல்- பல நீண்ட நாள்கள்; பார் அளிப்பாய் - இந்நிலவுலகத்தைக் காப்பாயாக; என- என்று கூறி; தொல் நெடும்முடி - பழமையான நீண்ட திருமுடியை; சூட்டுகின்றான்- அணிவிக்கின்றான்; என்றார் - என்று சொன்னார். நின் நெடும் புதல்வன் நின் மூத்த புதல்வன் என்றும் ஆம். நால்வரையும் தன் மக்களாகக்கருதி அன்பு செய்பவள் கோசலை ஆதலின், இராமனைக் குறிக்க ‘மூத்தபுதல்வன்’ என்னும்பொருளில், ‘நெடும்புதல்வன்’ என்றாராம். தொல்முடி - பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கின்றமுடி. ‘மன் நெடுங்கழல் வந்து வணங்கிட’ தயரதன் பொருந்திய தனது நெடிய வீரக்கழல் அணிந்த அடியில்இராமன் வந்து வணங்கிட, அவனுக்கு முடிசூட்டுகின்றான் எனக் கூட்டிப் பொருள் உரைத்தலும் ஒன்று. 4 |