1402.‘மன் நெடுங் கழல் வந்து வணங்கிட,
பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!’ என,
நின் நெடும் புதல்வன்தனை, நேமியான்,
தொல் நெடும் முடி சூட்டுகின்றான்’ என்றார்.

     நேமியான் - சக்கரவர்தியாகிய தயரதன்;  நின் நெடும் புதல்
வன்தனை -
உன் பெருமைக்குரிய மகனாகிய இராமனை;  மன் நெடுங்
கழல் வந்து  வணங்கிட -
எல்லாஅரசர்களும்  உன் பெரிய வீரக்கழல்
அணிந்த அடிகளில் வீழ்ந்து வணங்க;  பல் நெடும் பகல்- பல நீண்ட
நாள்கள்;  பார் அளிப்பாய் - இந்நிலவுலகத்தைக் காப்பாயாக; என-
என்று கூறி; தொல் நெடும்முடி - பழமையான நீண்ட திருமுடியை; 
சூட்டுகின்றான்- அணிவிக்கின்றான்;  என்றார் - என்று சொன்னார்.

     நின் நெடும் புதல்வன் நின் மூத்த புதல்வன் என்றும் ஆம்.
நால்வரையும் தன் மக்களாகக்கருதி அன்பு செய்பவள் கோசலை ஆதலின்,
இராமனைக் குறிக்க ‘மூத்தபுதல்வன்’ என்னும்பொருளில், ‘நெடும்புதல்வன்’
என்றாராம். தொல்முடி - பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கின்றமுடி. ‘மன்
நெடுங்கழல் வந்து வணங்கிட’ தயரதன் பொருந்திய தனது நெடிய வீரக்கழல்
அணிந்த அடியில்இராமன் வந்து வணங்கிட, அவனுக்கு முடிசூட்டுகின்றான்
எனக் கூட்டிப் பொருள் உரைத்தலும் ஒன்று.                        4